நெஞ்சம் மறப்பதில்லை!3.
"என்னம்மா? என்ன சொல்றா உன் மகன்?"
"என்ன மாமா இது? புதுசா உன் மகன். எப்ப இருந்து இந்த மாதிரி பேச்சு?"
"அப்புறம் என்னம்மா? நான் அந்த கம்பெனியை வாங்க போறேன்னு சொன்னதில் இருந்து,மூஞ்சியைத் தூக்கி வச்சுட்டு திரியறான்!"
"அதுக்காக வாங்காம விட்டீங்களா?"
மாமனாரும் மருமகளும் டைனிங் ஹாலில் விவாதித்து கொண்டிருக்க,
தாத்தா சத்யபிரகாஷ்க்கும், தாய் மங்கையர்க்கரசிக்குமான சம்பாசனையைக் கேட்டவாறே இறங்கி வந்து கொண்டிருந்தான்,
சூர்யப்பிரகாஷ்.
"என்னம்மா? என்ன சொல்றாரு உங்க மாமனாரு?"
"என்னடா தம்பி பேச்செல்லாம் புதுசா இருக்கு?"மகனைக் கண்டிக்க,
"இப்ப அவர் மட்டும் என்ன சொன்னாராம்? உன் மகன் எங்கேனு தானே கேட்டாரு?"
"ஒத்த புள்ளையா போயிட்டானே. கூடப் பிறந்ததுகளோட சண்டை போட்டு வழக்கு தீக்குற பிரச்சினை நமக்கு இல்லையேனு நினைச்சா, தாத்தாக்கும் பேரனுக்குமே வழக்கு தீக்க முடியல,"என மங்கையர்க்கரசி அலுத்துக் கொள்ள,
"ரொம்ப நன்றிம்மா"
"எதுக்கு மாமா "
"அவனோட சேத்து என்னைய சின்ன புள்ளையாக்குனதுக்கு"என்று சத்யபிரகாஷ் குதூகளிக்க,
அம்மாவைப் பார்த்தவன் புருவத்தால் "பாத்தீங்களா" என்று சைகை செய்ய
இருவர் முகததிலும் புன்னகை.
"சின்னப்பையன்கற நினைப்பிலே தான் அந்த கம்பெனியை வாங்கி நடத்தலாம்னு முடிவு பண்ணியாச்சுலே,"எனக் கேட்ட பேரனிடம்,
"என்னடா சொல்றே? எனக்கு என்ன அவ்ளோ வயசா ஆயிருச்சு?"எனக் கேட்க,
"உங்களுக்கும் உங்க நண்பருக்கும் ஒரே வயசு தானே!அவரை டாக்டர் ஓய்வு
எடுக்க சொல்லவும் தானே பிசினஸை கை மாத்தி விடுராரு. நீங்க மட்டும் எப்படி எடுத்து நடத்துவீங்க?"
"ஏன்டா? நீ உதவி பண்ண மாட்டியா?"
தாத்தா ஒரு விசயத்தை பொறுப்பெடுத்துக் கொண்டார் என்றால் அதில் பேரனின் பங்கு இல்லாமல் இருக்காது தான். ஆனால் இதற்கு மேல் ஏன் அவரை வருத்திக் கொள்ள வேண்டும் என்பதினாலயே அவன் எதிர்ப்பு தெரிவிப்பது.
"தாத்தா! நான் பொறுப்பு எடுப்பது இருக்கட்டும். நம்ம தொழில்களையே
கவனிக்க நேரமில்லாம ஓடிட்டிருகோம். இதில இந்த கம்பெனி வாங்கித்தான் ஆகப்போறது என்ன?"
"இப்ப நீ சொன்னியே. நிக்க நேரமில்லாமல் ஓடிட்டு இருக்கோமேனு.
அதுக்கு மூலாதாரமே அந்த கம்பெனி தான்டா. அது தான் எங்களோட முதல் விதை. இன்னைக்கு கோயம்புததூர்ல, RS புரத்துல, ஹைசொசைட்டி வாழ்க்கை வாழறோம்னா அதுக்கு மூல காரணமே அந்த கம்பெனி தான். எனக்கும் அவனுக்கும் அது தலச்சன் பிள்ளை மாதிரி. அதுல லாபம் வருதோ இல்லையோ, இன்னொருத்தர் கிட்டே விட முடியாது! உனக்கும் உன் அம்மாவுக்கும் வேணா அதைப் பத்தி தெரியாமல் இருக்கலாம். ஆனா உன் அப்பாவுக்கு நல்லா தெரியும். அவன் இருந்திருந்தா நான் இவ்வளவு விளக்கம் சொல்ல தேவை இருந்திருக்காது,"
என குரல் கமர கூறியவரை சூர்யா எழுந்து சென்று தோளோடு அணைத்துக்
கொண்டான்.
"ஐயோ! தாத்தா! இந்த அழுகாச்சி மூஞ்சி நமக்கு செட்டாகாது. ஃபார்முக்கு வாங்க!"என்றான்.
மங்கையர்க்கரசியும் கண் கலங்க...
"உங்களை வெளியேத்தின கம்பெனியாச்சேனு தான் நாங்க யோசனை பண்ணினோம். ஆனா நீங்க அது மேல இவ்ளோ ஈடுபாட்டோட இருக்கும் போது நாங்க எப்படி மறுத்து
பேச முடியும் சொல்லுங்க!"
சற்று தளர்ந்த நிலையில் கூட அவர்களால், அவரைப் பார்க்க முடியாது. எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் அசராமல் தூணாக குடும்பத்தைத் தாங்கியவர்.
"எங்க அப்பா என் கூட இருந்தாலே யானை பலம்!"என்று தன் கணவன் அடிக்கடி சொல்ல கேட்டவர்.
இதையே தான் தன் மகனைப் பார்த்து சத்யபிரகாஷூம் சொல்வார்.
அப்படிப்பட்ட மகனையே திடீரென இழந்த நிலையில், தொழில் எதிரிகள் அவரின் இந்த பலவீனமான நிலையைப் பயன்படுத்தி வீழ்த்த நினைத்த வேளையிலும்,
தசரதனை வீழ்த்திய புத்திர சோகம் தன்னை வீழ்த்தும் முன், மருமகளையும், பேரனையும் மனதில் கொண்டு நிமிர்ந்தவர். தன் தொழில் வட்டாரத்தில் சிங்கமாய் திகழ்ந்தவர். தன் பேரணையும் அதே போல் உருவாக்கியவர்.
சத்யபிரகாஷின் குடும்பமும் சாதாரண குடும்பம் அல்ல. அவினாசியில் தோப்பு, வயல், அரிசி மில் என்று வாழ்ந்த குடும்பம் தான்.
சத்யபிரகாஷும் கமிஷன் மண்டி வைத்து நல்ல வருமானம்.
அந்தப் பக்கம் அடிக்கடி சினிமா படப்பிடிப்பு நடைபெறும். சினிமாத்துறையைச் சேர்ந்தவர் இவரின் அப்பாவிற்கு பழக்கமாக அவர் காட்டிய சினிமா ஆசையில், சத்யப்ரகாஷின் எதிர்ப்பையும் மீறி, ஆழம் தெரியாமல் காலை விட்டார்.
ஆணானப்பட்டவர்களே இத்துறையில்
திணறும் பொழுது, எவ்வித முன் அனுபவமும் இல்லாத சத்யபிரகாஷின் தந்தையை, அம்மாயச் சுழல் எளிதாக சுழற்றிகொண்டது.
சத்தியபிரகாஷின் குடும்பமும் வாழ்ந்து கெட்ட குடும்பம் லிஸ்ட்டில் சேர்ந்தது.
சொத்து முழுதும் இழந்த நிலையில் அவரின் அப்பாவும் உயிரை விட்டார்.
இத்தனை வயதிற்கு பிறகு யாரிடமும்
வேலை கேட்கவும் ,உதவி கேட்கவும் கவுரவம் இடம் கொடுக்கவில்லை.
அப்பொழுது தான் ,மகன் ரவிபிரகாஷும்
கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம்.
அத்தகைய கையறு நிலையில் தான், உடுக்கை இழந்தவன் கையாக வந்தார் குடும்ப நண்பரும், பள்ளி தோழருமான
ராமநாதன்.
பணமாக உதவி செய்தால் பெற்றுக் கொள்ள மாட்டார் எனத் தெரியும்.
எனவேதான் சத்யபிரகாஷை ஒர்க்கிங் பார்ட்னராக கொண்டு இருவரும் தொழில் தொடங்கினர்.
என்றுமே சத்திய பிரகாஷ் உழைக்க தயங்கியது இல்லை. ஏற்கனவே கமிஷன் மண்டி நடத்திய அனுபவம் கைகொடுத்தது.
எங்கெங்கு நேரடியாக சென்றால் குறைந்து விலைக்கு பொருள்களை கொள் முதல் செய்யலாம் என நன்கு
அறிந்தவர்.
ராமநாதன் அலுவலக உள் வேலைகளைப் பார்த்துக்கொள்ள, இவர் வெளியே சுற்றி திரிந்தார். நெல், மஞ்சள், வேர்கடலை முதலியவற்றை விவசாயிகளிடம் சென்று நேரடியாக வாங்கினார். இடைத்தரகர் இல்லாததால் விவசாயிகளுக்கும் நியாயமானதை கொடுத்தார். இரு பாலருக்கும் லாபமே. உள் நாட்டில் மட்டுமே செய்து கொண்டிருந்த மொத்த வியாபாரம் வெளி நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்தது.
எப்பொழுதும் லாபத்தில் இருவருக்குமே சரி பங்கு தான் .
ராமநாதன் பிள்ளைகளுக்கு இது உருத்த ஆரம்பித்தது.
முதல் போட்டவருக்கும், சும்மா வெளியே சுற்றி , எங்கெங்கு பொருள் கிடைக்கும் என்று தரகு வேலை பார்ப்பவர்க்கும் சம பங்கு லாபமா என கேள்வி கேட்கத் தொடங்கினர்.
பரம்பரை சொத்தில் சொகுசாக வளர்ந்தவர்களுக்கு ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு பண முதலீடு மட்டுமே போதாது. உழைப்பும் அவசியமென்பது தெரியவில்லை.
அப்பொழுது தான் வெளி மாநிலங்களில் இருந்தும் மிளகு, ஏலம் போன்றவற்றை கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தனர்.
அலுவலகத்திற்கு அவ்வப்பொழுது வந்து சென்ற
ராமநாதன் மகன்களும்,"வெறும் பயலுக்கு வந்த வாழ்வைப்பார்,"என்று சாடை பேச ஆரம்பித்தனர்.
நண்பனுக்காக சத்தியபிரகாஷும்
கொஞ்சம் பொறுமை காத்தார்.
நண்பனின் நிலை அறிந்த ராமநாதன், அவர் சுயமரியாதை, மற்றும் சுய கட்டுப்பாட்டை இழக்கும் முன் தாமே அனுப்பி விடுவது உத்தமம் என அவரது பங்கை பிரித்துக் கொடுத்து அனுப்பினார்.
நல்லோர்க்கு அழகு சொல்லாமல் செல்வது. தனக்கு உதவிய நன்பணுக்கும், அவன் பிள்ளைகளுக்கும் இடையில் தன்னால் பிரச்சினை வர வேண்டாம் என்று வெளியேறி விட்டார்.
அப்பொழுதுதான் ரவிப்பிரகாஷும் கல்லூரி முடித்திருந்தார்.
தந்தையின் அனுபவமும் மகனின் உழைப்பும், இவர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகியது.
இருவரும் ஒருவருக்கொருவர் யானை பலம்!
காட்டன் மில், பில்டிங் கட்டமைப்பு என தொழில் பெருகியது.
மகனுக்கும் திருமணம் செய்து அழகு பார்த்தார். மிகவும் மன உறுதி படைத்தவர்.
"எங்க அப்பா தைரியம் யாருக்கும் வராது "
என்று ரவிப்பிரகாஷ் தன் மனைவியிடம் பெருமை பேசுவார்.
அப்படிப்பட்டவர் கண் கலங்க மருமகளாலும், பேரனாலும் அதை தாங்க முடியாத நிலை.
"இப்ப என்ன தாத்தா? நாம போய் அடுத்த வாரம் என் பெரியப்பாவை பாக்குறோம். நலம் விசாரிக்கிறோம்.
பிரகாஷ் அன்ட் குரூப்ல அவரையும்
சேக்குறோம்."
"அது யாருடா! எனக்குத் தெரியாம உனக்கு பெரியப்பா?"
"நீங்க தானே தாத்தா சொன்னீங்க. அந்தக் கம்பெனி தான் உங்க தலச்சன் பிள்ளைனு. அப்படினா எனக்கு பெரியப்பா தானே."எனக் கேட்டு சிரித்த பேரிடம்,
"அட படவா! என்னையே கலாய்க்கிறியா நீ?"
எனக் கேட்க அங்கு சற்று முன் நிலவிய இறுக்கம் தளர்ந்து மகிழ்ச்சி திரும்பியது.
"என்னம்மா? என்ன சொல்றா உன் மகன்?"
"என்ன மாமா இது? புதுசா உன் மகன். எப்ப இருந்து இந்த மாதிரி பேச்சு?"
"அப்புறம் என்னம்மா? நான் அந்த கம்பெனியை வாங்க போறேன்னு சொன்னதில் இருந்து,மூஞ்சியைத் தூக்கி வச்சுட்டு திரியறான்!"
"அதுக்காக வாங்காம விட்டீங்களா?"
மாமனாரும் மருமகளும் டைனிங் ஹாலில் விவாதித்து கொண்டிருக்க,
தாத்தா சத்யபிரகாஷ்க்கும், தாய் மங்கையர்க்கரசிக்குமான சம்பாசனையைக் கேட்டவாறே இறங்கி வந்து கொண்டிருந்தான்,
சூர்யப்பிரகாஷ்.
"என்னம்மா? என்ன சொல்றாரு உங்க மாமனாரு?"
"என்னடா தம்பி பேச்செல்லாம் புதுசா இருக்கு?"மகனைக் கண்டிக்க,
"இப்ப அவர் மட்டும் என்ன சொன்னாராம்? உன் மகன் எங்கேனு தானே கேட்டாரு?"
"ஒத்த புள்ளையா போயிட்டானே. கூடப் பிறந்ததுகளோட சண்டை போட்டு வழக்கு தீக்குற பிரச்சினை நமக்கு இல்லையேனு நினைச்சா, தாத்தாக்கும் பேரனுக்குமே வழக்கு தீக்க முடியல,"என மங்கையர்க்கரசி அலுத்துக் கொள்ள,
"ரொம்ப நன்றிம்மா"
"எதுக்கு மாமா "
"அவனோட சேத்து என்னைய சின்ன புள்ளையாக்குனதுக்கு"என்று சத்யபிரகாஷ் குதூகளிக்க,
அம்மாவைப் பார்த்தவன் புருவத்தால் "பாத்தீங்களா" என்று சைகை செய்ய
இருவர் முகததிலும் புன்னகை.
"சின்னப்பையன்கற நினைப்பிலே தான் அந்த கம்பெனியை வாங்கி நடத்தலாம்னு முடிவு பண்ணியாச்சுலே,"எனக் கேட்ட பேரனிடம்,
"என்னடா சொல்றே? எனக்கு என்ன அவ்ளோ வயசா ஆயிருச்சு?"எனக் கேட்க,
"உங்களுக்கும் உங்க நண்பருக்கும் ஒரே வயசு தானே!அவரை டாக்டர் ஓய்வு
எடுக்க சொல்லவும் தானே பிசினஸை கை மாத்தி விடுராரு. நீங்க மட்டும் எப்படி எடுத்து நடத்துவீங்க?"
"ஏன்டா? நீ உதவி பண்ண மாட்டியா?"
தாத்தா ஒரு விசயத்தை பொறுப்பெடுத்துக் கொண்டார் என்றால் அதில் பேரனின் பங்கு இல்லாமல் இருக்காது தான். ஆனால் இதற்கு மேல் ஏன் அவரை வருத்திக் கொள்ள வேண்டும் என்பதினாலயே அவன் எதிர்ப்பு தெரிவிப்பது.
"தாத்தா! நான் பொறுப்பு எடுப்பது இருக்கட்டும். நம்ம தொழில்களையே
கவனிக்க நேரமில்லாம ஓடிட்டிருகோம். இதில இந்த கம்பெனி வாங்கித்தான் ஆகப்போறது என்ன?"
"இப்ப நீ சொன்னியே. நிக்க நேரமில்லாமல் ஓடிட்டு இருக்கோமேனு.
அதுக்கு மூலாதாரமே அந்த கம்பெனி தான்டா. அது தான் எங்களோட முதல் விதை. இன்னைக்கு கோயம்புததூர்ல, RS புரத்துல, ஹைசொசைட்டி வாழ்க்கை வாழறோம்னா அதுக்கு மூல காரணமே அந்த கம்பெனி தான். எனக்கும் அவனுக்கும் அது தலச்சன் பிள்ளை மாதிரி. அதுல லாபம் வருதோ இல்லையோ, இன்னொருத்தர் கிட்டே விட முடியாது! உனக்கும் உன் அம்மாவுக்கும் வேணா அதைப் பத்தி தெரியாமல் இருக்கலாம். ஆனா உன் அப்பாவுக்கு நல்லா தெரியும். அவன் இருந்திருந்தா நான் இவ்வளவு விளக்கம் சொல்ல தேவை இருந்திருக்காது,"
என குரல் கமர கூறியவரை சூர்யா எழுந்து சென்று தோளோடு அணைத்துக்
கொண்டான்.
"ஐயோ! தாத்தா! இந்த அழுகாச்சி மூஞ்சி நமக்கு செட்டாகாது. ஃபார்முக்கு வாங்க!"என்றான்.
மங்கையர்க்கரசியும் கண் கலங்க...
"உங்களை வெளியேத்தின கம்பெனியாச்சேனு தான் நாங்க யோசனை பண்ணினோம். ஆனா நீங்க அது மேல இவ்ளோ ஈடுபாட்டோட இருக்கும் போது நாங்க எப்படி மறுத்து
பேச முடியும் சொல்லுங்க!"
சற்று தளர்ந்த நிலையில் கூட அவர்களால், அவரைப் பார்க்க முடியாது. எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் அசராமல் தூணாக குடும்பத்தைத் தாங்கியவர்.
"எங்க அப்பா என் கூட இருந்தாலே யானை பலம்!"என்று தன் கணவன் அடிக்கடி சொல்ல கேட்டவர்.
இதையே தான் தன் மகனைப் பார்த்து சத்யபிரகாஷூம் சொல்வார்.
அப்படிப்பட்ட மகனையே திடீரென இழந்த நிலையில், தொழில் எதிரிகள் அவரின் இந்த பலவீனமான நிலையைப் பயன்படுத்தி வீழ்த்த நினைத்த வேளையிலும்,
தசரதனை வீழ்த்திய புத்திர சோகம் தன்னை வீழ்த்தும் முன், மருமகளையும், பேரனையும் மனதில் கொண்டு நிமிர்ந்தவர். தன் தொழில் வட்டாரத்தில் சிங்கமாய் திகழ்ந்தவர். தன் பேரணையும் அதே போல் உருவாக்கியவர்.
சத்யபிரகாஷின் குடும்பமும் சாதாரண குடும்பம் அல்ல. அவினாசியில் தோப்பு, வயல், அரிசி மில் என்று வாழ்ந்த குடும்பம் தான்.
சத்யபிரகாஷும் கமிஷன் மண்டி வைத்து நல்ல வருமானம்.
அந்தப் பக்கம் அடிக்கடி சினிமா படப்பிடிப்பு நடைபெறும். சினிமாத்துறையைச் சேர்ந்தவர் இவரின் அப்பாவிற்கு பழக்கமாக அவர் காட்டிய சினிமா ஆசையில், சத்யப்ரகாஷின் எதிர்ப்பையும் மீறி, ஆழம் தெரியாமல் காலை விட்டார்.
ஆணானப்பட்டவர்களே இத்துறையில்
திணறும் பொழுது, எவ்வித முன் அனுபவமும் இல்லாத சத்யபிரகாஷின் தந்தையை, அம்மாயச் சுழல் எளிதாக சுழற்றிகொண்டது.
சத்தியபிரகாஷின் குடும்பமும் வாழ்ந்து கெட்ட குடும்பம் லிஸ்ட்டில் சேர்ந்தது.
சொத்து முழுதும் இழந்த நிலையில் அவரின் அப்பாவும் உயிரை விட்டார்.
இத்தனை வயதிற்கு பிறகு யாரிடமும்
வேலை கேட்கவும் ,உதவி கேட்கவும் கவுரவம் இடம் கொடுக்கவில்லை.
அப்பொழுது தான் ,மகன் ரவிபிரகாஷும்
கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம்.
அத்தகைய கையறு நிலையில் தான், உடுக்கை இழந்தவன் கையாக வந்தார் குடும்ப நண்பரும், பள்ளி தோழருமான
ராமநாதன்.
பணமாக உதவி செய்தால் பெற்றுக் கொள்ள மாட்டார் எனத் தெரியும்.
எனவேதான் சத்யபிரகாஷை ஒர்க்கிங் பார்ட்னராக கொண்டு இருவரும் தொழில் தொடங்கினர்.
என்றுமே சத்திய பிரகாஷ் உழைக்க தயங்கியது இல்லை. ஏற்கனவே கமிஷன் மண்டி நடத்திய அனுபவம் கைகொடுத்தது.
எங்கெங்கு நேரடியாக சென்றால் குறைந்து விலைக்கு பொருள்களை கொள் முதல் செய்யலாம் என நன்கு
அறிந்தவர்.
ராமநாதன் அலுவலக உள் வேலைகளைப் பார்த்துக்கொள்ள, இவர் வெளியே சுற்றி திரிந்தார். நெல், மஞ்சள், வேர்கடலை முதலியவற்றை விவசாயிகளிடம் சென்று நேரடியாக வாங்கினார். இடைத்தரகர் இல்லாததால் விவசாயிகளுக்கும் நியாயமானதை கொடுத்தார். இரு பாலருக்கும் லாபமே. உள் நாட்டில் மட்டுமே செய்து கொண்டிருந்த மொத்த வியாபாரம் வெளி நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்தது.
எப்பொழுதும் லாபத்தில் இருவருக்குமே சரி பங்கு தான் .
ராமநாதன் பிள்ளைகளுக்கு இது உருத்த ஆரம்பித்தது.
முதல் போட்டவருக்கும், சும்மா வெளியே சுற்றி , எங்கெங்கு பொருள் கிடைக்கும் என்று தரகு வேலை பார்ப்பவர்க்கும் சம பங்கு லாபமா என கேள்வி கேட்கத் தொடங்கினர்.
பரம்பரை சொத்தில் சொகுசாக வளர்ந்தவர்களுக்கு ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு பண முதலீடு மட்டுமே போதாது. உழைப்பும் அவசியமென்பது தெரியவில்லை.
அப்பொழுது தான் வெளி மாநிலங்களில் இருந்தும் மிளகு, ஏலம் போன்றவற்றை கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தனர்.
அலுவலகத்திற்கு அவ்வப்பொழுது வந்து சென்ற
ராமநாதன் மகன்களும்,"வெறும் பயலுக்கு வந்த வாழ்வைப்பார்,"என்று சாடை பேச ஆரம்பித்தனர்.
நண்பனுக்காக சத்தியபிரகாஷும்
கொஞ்சம் பொறுமை காத்தார்.
நண்பனின் நிலை அறிந்த ராமநாதன், அவர் சுயமரியாதை, மற்றும் சுய கட்டுப்பாட்டை இழக்கும் முன் தாமே அனுப்பி விடுவது உத்தமம் என அவரது பங்கை பிரித்துக் கொடுத்து அனுப்பினார்.
நல்லோர்க்கு அழகு சொல்லாமல் செல்வது. தனக்கு உதவிய நன்பணுக்கும், அவன் பிள்ளைகளுக்கும் இடையில் தன்னால் பிரச்சினை வர வேண்டாம் என்று வெளியேறி விட்டார்.
அப்பொழுதுதான் ரவிப்பிரகாஷும் கல்லூரி முடித்திருந்தார்.
தந்தையின் அனுபவமும் மகனின் உழைப்பும், இவர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகியது.
இருவரும் ஒருவருக்கொருவர் யானை பலம்!
காட்டன் மில், பில்டிங் கட்டமைப்பு என தொழில் பெருகியது.
மகனுக்கும் திருமணம் செய்து அழகு பார்த்தார். மிகவும் மன உறுதி படைத்தவர்.
"எங்க அப்பா தைரியம் யாருக்கும் வராது "
என்று ரவிப்பிரகாஷ் தன் மனைவியிடம் பெருமை பேசுவார்.
அப்படிப்பட்டவர் கண் கலங்க மருமகளாலும், பேரனாலும் அதை தாங்க முடியாத நிலை.
"இப்ப என்ன தாத்தா? நாம போய் அடுத்த வாரம் என் பெரியப்பாவை பாக்குறோம். நலம் விசாரிக்கிறோம்.
பிரகாஷ் அன்ட் குரூப்ல அவரையும்
சேக்குறோம்."
"அது யாருடா! எனக்குத் தெரியாம உனக்கு பெரியப்பா?"
"நீங்க தானே தாத்தா சொன்னீங்க. அந்தக் கம்பெனி தான் உங்க தலச்சன் பிள்ளைனு. அப்படினா எனக்கு பெரியப்பா தானே."எனக் கேட்டு சிரித்த பேரிடம்,
"அட படவா! என்னையே கலாய்க்கிறியா நீ?"
எனக் கேட்க அங்கு சற்று முன் நிலவிய இறுக்கம் தளர்ந்து மகிழ்ச்சி திரும்பியது.
Last edited: