Sarva Magizhavan
நாட்டாமை
அகராதி 10
அவள் சென்ற பின்பும் எதிரொலித்தது அவளின் வார்த்தைகள்
சுதன் என் பையன் இல்லை?!!!!
அந்த எண்ணமே அவனை என்னவோ செய்தது அதன் விளைவாகவோ என்னவோ அவனின் விரல்கள் தானாக தன தோளில் தொங்கி கொண்டு உறங்கிய மகனின் தலைமுடியைக் கோதியது
லேசாகச் சாய்ந்து உறங்கும் அவனை மெத்தையில் கடத்தி அவன் முகம் கண்டான்.... அப்படியே அவள் தான் அகம் முகம் அனைத்தும்.... சுதனின் மொழி இல்லா செய்கைகள் மொழி வடிவில் அவனின் சிறு வயது அதியினைக் கொண்டு வந்து நிறுத்த அவனால் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை
அவனின் இயல்பினை ஒரு ஒரு முறையும் இலக்கணம் இல்லா வரம்புமீறலுக்கு உட்படுத்தும் அவளை இந்நொடி வெறுத்தான் அவன்... அகராதியின் எழிலன்....
I hate you அதி....
புதிராகவே வாழ்வு முடிந்து போகுமோ என்ற பயமும் அவனை ஆட்கொண்டது... அவளும் என்ன செய்வாள் என்றொரு மனம் வக்காலத்து வாங்கினாலும் என்கிட்டே சொல்றதுக்கு அவளுக்கு என்ன?
இன்னும் கூட என்னைப் புரியலையா என் மனைவிக்கு? மனைவி என நினைத்தவன் ஒரு ஏக்கப் பெருமூச்சொன்றை வெளியிட்டுச் சிரித்தான்
ஒரு நொடி அவன் கண் முன்னே தன்னை வரவேற்க சிறு பிள்ளைத்தனமாய் பிரயத்தனம் செய்த அதி வந்து சிரித்தாள்!!!
அவள் கண்கள் சுருக்கிக் கொஞ்சும் பொழுது அவள் கன்னம் கிள்ளி அனைத்துக் கொள்ளத் தோன்றும் மனதினை என்ன செய்ய அவனும்?
நினைவிலே கழிந்த நிமிடங்கள் நகர நிமிர்ந்தால் நிலைக்கதவில் சாய்ந்தவாறே திவா!!!
என்ன தோன்றிற்றோ இவன் நிமிர்ந்து பார்க்கும் பொழுதே அவனை ஆரத் தழுவிக் கொண்டான் அவனுக்கும் அப்பொழுது அது தேவையாய் இருந்தது...
என்னடா? "என்ன செஞ்சா அந்தக் கேடி?"
"அவ என்ன செய்யலன்னு கேளுடா"...
"நாளுக்கு நாள் மாறிட்டான்னு... நான் நம்பிட்டு இருக்கறப்ப சரியா வந்து சொல்றா! பொட்டில அடிச்ச மாதிரி நான் அகராதி தான்... நீங்க தொலைச்ச அஞ்சலி நான் இல்லைன்னு?!!
இது எல்லாமே உனக்கு புதுசு இல்லையேடா சொல்லப் போனா அவகிட்ட இருந்து இப்படியான சில விஷயங்களைக் கேட்க வேண்டிய சூழல் உனக்கு வரும்னு உன்னைய முன்னமே எச்சரிச்சேனே அப்புறம் என்னடா?
எனக்குப் புரியுது திவா... நான் அதை உணர ஆரம்பிச்சதும் இன்னைக்குத் தான்...
மனசளவுல அவகிட்ட ரொம்ப நெருங்கிப் போனதனால தான் எனக்கு இப்படித் தோணுது போலடா...
எழிலு!... நான் சொல்றத நீ முன்னாடியே கேட்ருந்தா உனக்கு இது தேவையா?
என்னடா நீயே இப்படிப் பேசுற?
வேற என்னடா செய்யச் சொல்ற என்னை?
ஆதியை உனக்குன்னு பார்க்கும் போதே சொன்னேன் உன்கிட்ட....
ஞாபகம் இருக்கு பிரபா...
அவனின் பிரபா என்ற விளிப்பே சொல்லியது அவன் எத்தனை தீவிரமாய் இருக்கிறான் என....
அவனின் அந்த வசந்த காலம் வரிசை கட்டி நின்றது கண்களுக்குள் கண்ணீராய்!!!
தாளாதவனாய் தன்னெதிரே நிற்கும் திவ்யபிரபந்தனை அனைத்துக் கொண்டு கதறித் தீர்த்தான்.... அவளை இப்படிக் கொண்டு வந்து நிறுத்திட்டேனே டா
அவளை எனக்குன்னு எப்பவோ எடுத்துக்கிட்டு இருந்தா இதெல்லாம் நடந்துருக்குமா பிரபா??? என் கண் முன்னாடியே நின்ன அவளைத் தாண்டிப் போய் அஞ்சலி கிட்ட என் மனசு தடுமாறுனது என் தப்பா???
அஞ்சலி!!!! பெயரைக் கேட்டதும் பிரபாவிற்குள் ஒரு மினி பூகம்பம் இருக்காதா பின்னே?
அவளுக்கும் அதிக்கும் ஏழாம் பொருத்தமாய் இருக்குமே பள்ளிக்கூடத்தில்....
அவன் மனதிலும் அந்த பழைய நினைவுகளின் சாரல்
சாரல் மெல்ல இடி மின்னல் மழையென அவனுள் கொட்டித் தீர்க்க அவனும் நனைந்தான் தொப்பலாக....
அஞ்சு!!! ஏண்டி போன எங்களை விட்டு? நினைக்க மட்டும் தான் முடிந்தது இருவர் மட்டும் அல்ல... மூவருக்குமே!
ஆம்! அதியையும் சேர்த்தே தான் அவள் வாய் விட்டே அழுதாலும் கேட்கா தூரம் சென்றல்லவா பிதற்றிக் கொண்டிருந்தாள்...
யாரவள்?
அகராதியைத் தேடினால் விடை கிடைக்கும் என்ற எண்ணத்துடன் நாமும் எழிலுமாக!!!
அவள் சென்ற பின்பும் எதிரொலித்தது அவளின் வார்த்தைகள்
சுதன் என் பையன் இல்லை?!!!!
அந்த எண்ணமே அவனை என்னவோ செய்தது அதன் விளைவாகவோ என்னவோ அவனின் விரல்கள் தானாக தன தோளில் தொங்கி கொண்டு உறங்கிய மகனின் தலைமுடியைக் கோதியது
லேசாகச் சாய்ந்து உறங்கும் அவனை மெத்தையில் கடத்தி அவன் முகம் கண்டான்.... அப்படியே அவள் தான் அகம் முகம் அனைத்தும்.... சுதனின் மொழி இல்லா செய்கைகள் மொழி வடிவில் அவனின் சிறு வயது அதியினைக் கொண்டு வந்து நிறுத்த அவனால் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை
அவனின் இயல்பினை ஒரு ஒரு முறையும் இலக்கணம் இல்லா வரம்புமீறலுக்கு உட்படுத்தும் அவளை இந்நொடி வெறுத்தான் அவன்... அகராதியின் எழிலன்....
I hate you அதி....
புதிராகவே வாழ்வு முடிந்து போகுமோ என்ற பயமும் அவனை ஆட்கொண்டது... அவளும் என்ன செய்வாள் என்றொரு மனம் வக்காலத்து வாங்கினாலும் என்கிட்டே சொல்றதுக்கு அவளுக்கு என்ன?
இன்னும் கூட என்னைப் புரியலையா என் மனைவிக்கு? மனைவி என நினைத்தவன் ஒரு ஏக்கப் பெருமூச்சொன்றை வெளியிட்டுச் சிரித்தான்
ஒரு நொடி அவன் கண் முன்னே தன்னை வரவேற்க சிறு பிள்ளைத்தனமாய் பிரயத்தனம் செய்த அதி வந்து சிரித்தாள்!!!
அவள் கண்கள் சுருக்கிக் கொஞ்சும் பொழுது அவள் கன்னம் கிள்ளி அனைத்துக் கொள்ளத் தோன்றும் மனதினை என்ன செய்ய அவனும்?
நினைவிலே கழிந்த நிமிடங்கள் நகர நிமிர்ந்தால் நிலைக்கதவில் சாய்ந்தவாறே திவா!!!
என்ன தோன்றிற்றோ இவன் நிமிர்ந்து பார்க்கும் பொழுதே அவனை ஆரத் தழுவிக் கொண்டான் அவனுக்கும் அப்பொழுது அது தேவையாய் இருந்தது...
என்னடா? "என்ன செஞ்சா அந்தக் கேடி?"
"அவ என்ன செய்யலன்னு கேளுடா"...
"நாளுக்கு நாள் மாறிட்டான்னு... நான் நம்பிட்டு இருக்கறப்ப சரியா வந்து சொல்றா! பொட்டில அடிச்ச மாதிரி நான் அகராதி தான்... நீங்க தொலைச்ச அஞ்சலி நான் இல்லைன்னு?!!
இது எல்லாமே உனக்கு புதுசு இல்லையேடா சொல்லப் போனா அவகிட்ட இருந்து இப்படியான சில விஷயங்களைக் கேட்க வேண்டிய சூழல் உனக்கு வரும்னு உன்னைய முன்னமே எச்சரிச்சேனே அப்புறம் என்னடா?
எனக்குப் புரியுது திவா... நான் அதை உணர ஆரம்பிச்சதும் இன்னைக்குத் தான்...
மனசளவுல அவகிட்ட ரொம்ப நெருங்கிப் போனதனால தான் எனக்கு இப்படித் தோணுது போலடா...
எழிலு!... நான் சொல்றத நீ முன்னாடியே கேட்ருந்தா உனக்கு இது தேவையா?
என்னடா நீயே இப்படிப் பேசுற?
வேற என்னடா செய்யச் சொல்ற என்னை?
ஆதியை உனக்குன்னு பார்க்கும் போதே சொன்னேன் உன்கிட்ட....
ஞாபகம் இருக்கு பிரபா...
அவனின் பிரபா என்ற விளிப்பே சொல்லியது அவன் எத்தனை தீவிரமாய் இருக்கிறான் என....
அவனின் அந்த வசந்த காலம் வரிசை கட்டி நின்றது கண்களுக்குள் கண்ணீராய்!!!
தாளாதவனாய் தன்னெதிரே நிற்கும் திவ்யபிரபந்தனை அனைத்துக் கொண்டு கதறித் தீர்த்தான்.... அவளை இப்படிக் கொண்டு வந்து நிறுத்திட்டேனே டா
அவளை எனக்குன்னு எப்பவோ எடுத்துக்கிட்டு இருந்தா இதெல்லாம் நடந்துருக்குமா பிரபா??? என் கண் முன்னாடியே நின்ன அவளைத் தாண்டிப் போய் அஞ்சலி கிட்ட என் மனசு தடுமாறுனது என் தப்பா???
அஞ்சலி!!!! பெயரைக் கேட்டதும் பிரபாவிற்குள் ஒரு மினி பூகம்பம் இருக்காதா பின்னே?
அவளுக்கும் அதிக்கும் ஏழாம் பொருத்தமாய் இருக்குமே பள்ளிக்கூடத்தில்....
அவன் மனதிலும் அந்த பழைய நினைவுகளின் சாரல்
சாரல் மெல்ல இடி மின்னல் மழையென அவனுள் கொட்டித் தீர்க்க அவனும் நனைந்தான் தொப்பலாக....
அஞ்சு!!! ஏண்டி போன எங்களை விட்டு? நினைக்க மட்டும் தான் முடிந்தது இருவர் மட்டும் அல்ல... மூவருக்குமே!
ஆம்! அதியையும் சேர்த்தே தான் அவள் வாய் விட்டே அழுதாலும் கேட்கா தூரம் சென்றல்லவா பிதற்றிக் கொண்டிருந்தாள்...
யாரவள்?
அகராதியைத் தேடினால் விடை கிடைக்கும் என்ற எண்ணத்துடன் நாமும் எழிலுமாக!!!