Sarva Magizhavan
நாட்டாமை
சரியான டிக்க்ஷணரி.. வெய்ட்டான டிக்க்ஷணரிடி நீ... எங்கத்தை உனக்கு சரியாத் தாண்டி பேரு வச்சுருக்கு... ஆத்தாடி என்ன கணம்... என்றவாறே தரையில் கை ஒரு புறமும் கால் ஒரு புறமுமாகக் கிடைந்தவளைக் கட்டிலில் கிடத்தி விட எண்ணித் தூக்கியவன் தான் இத்தனை விதமாக அவளை அர்ச்சனை செய்தான்... அவளானால் அவனையே முறைத்த வண்ணம்(ஆனாலும் மேடம் கண்ணைத் திறக்கலை) நானா டிக்ஷணரி போடா ஏலியன் என்று வாய்க்கு வந்ததைத் திட்டி விட்டு தனது பணியைச் (அதாங்க தூங்குறது)செவ்வனே செய்தாள் என்றால் மிகையாகாது??!! அவளை என்ன தான் முறைக்க எண்ணினாலும் தோற்றுப் போய் புன்னகைக்கும் இதழ்களைக் கோவிக்கவே முடியவில்லை அவனால்... என்னது கோவம் ஆத்திரம் எல்லாம் வராத ஒருத்தன் இருக்கானான்னு இருக்குல்ல?? இனி பார்ப்பீங்க இவனை.... அதான் இவனுக்கும் சேத்து இவுக வூட்டம்மா கோவத்துலயே எந்திரிச்சு பல்லு விளக்கி பந்தியே வைக்குறாளே... அவளையும் பாக்க தான போறீங்க... அய்யோ அவன் பேரை சொல்ல மறந்துட்டேன் பாருங்க... எந்த எடுபட்டவடி எம் புருஷன் பேரை ஏலம் போடுறவனு அவ எகிறது இங்க வரை அனல் அடிக்கிது மக்களே... அவர் பேரு அதான் நம்ம அகராதி புருஷன்... அவரு பேரு எழிலன்... அட அகராதின்னு அவளை நான் கிண்டல் பண்ணல மக்கா... அந்த ராங்கிக்காரி பேரே அது தாங்க... அகராதி...
_ புரிய வைப்பாள் அடுத்த பக்கம் திருப்பவும்
_ புரிய வைப்பாள் அடுத்த பக்கம் திருப்பவும்