- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
இப்புராணம் பற்றி….
அக்னியால் வசிட்ட முனிவருக்கு உபதேசிக்கப் பட்டது இப்புராணம். ஆனால் புராணத்தினுள் சுதா முனிவர் சௌனகர் மற்றும் ரிஷிகளுக்கும் சொல்லியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யாகம், அக்னியின் பெருமை, விஷ்ணு அவதாரங்கள், சிவபெருமானை நோக்கிச் செய்யும் ஞானபூஜை, பிரபஞ்ச லட்சணம், தர்மசாஸ்திரம், அரசியல், பொருளாதாரம், வானியல், சாமுத்ரிகா லட்சணம், ராஜநீதி, ஆயுர்வேதம், வாஸ்துவித்யா, தாந்திரீக வித்தைகள், மந்திர சாஸ்திரங்கள், தனுர்வேதம், நாட்டிய சாஸ்திரம், காவிய சாஸ்திரம், புராண சாஸ்திரம் முதலானவை பேசப் பட்டுள்ளன. 8000 கிரந்தங்களை உடையது.
நைமிசாரண்ய வனத்தில் செளனகர் முதலிய ரிஷிகள் கூடியிருந்தனர். தீர்த்த யாத்திரைக்குச் சென்றிருந்த சுதா அங்கு வந்து சேர்ந்தார். மற்ற முனிவர்கள் சுதாவைப் பார்த்து, 'மனிதர்களுக்குப் பிரம்மஞானத்தைத் தருவது எது? மிகச் சிறந்த பொருள் எது?’ என்று வினவினார்.
சுதா சொல்லத் தொடங்கினார்: “நான் ஒருமுறை சுகர், பைலா மற்றும் பல முனிவர்களோடு சேர்ந்து வத்ரிகா ஆசிரமத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு வியாச முனிவரைச் சந்தித்தேன். நீங்கள் கேட்கும் இதே கேள்விகளை வியாச முனிவரிடம் கேட்டேன். அக்னி பகவானிடமிருந்து வசிட்டர் தாம் கேட்டதை வியாச முனிவருக்குச் சொல்ல, வியாச முனிவர் எங்களுக்குச் சொன்னதை இப்பொழுது உங்களுக்குச் சொல்லப் போகிறேன். மிகச் சிறந்தது என்பது விஷ்ணுவே ஆகும். அக்னி புராணம் மிகச் சிறந்தது என்பதற்குக் காரணம், பரப் பிரம்மத்தின் சாரத்தை நன்கு எடுத்துக் கூறுகிறது. ஆகவே, வியாசர் மூலம் நான் அறிந்த அக்னி புராணத்தை இப்பொழுது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.
அவதாரங்கள்
அவதாரம் என்றால் என்ன? உங்களுக்குத் தெரியுமா? விஷ்ணு பல சமயங்களில் இந்த பூலோகத்திற்கு வந்து மனிதர்களாகவும், பிறவாகவும் தோன்றுகிறார். இதைத்தான் அவதாரங்கள் என்று சொல்லுகிறோம். ஏன் இப்படி விஷ்ணு அவதாரங்கள் எடுக்க வேண்டும்? உலகத்தில் துன்பம் விளைவிப்பவர்கள், கொடியவர்கள் ஆகியவர்களை அழித்து, நல்லவர்களையும், தர்மத்தையும் நிலைநாட்டவே அவதாரங்கள் தோன்றுகின்றன.
விஷ்ணு இதுவரை எடுத்தவை ஒன்பது அவதாரங்கள் ஆகும். பத்தாவது அவதாரம் எதிர்காலத்தில் தோன்றப் போவதாகும். விஷ்ணு இதுவரை மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், கிருஷ்ணன், புத்தன் ஆகிய அவதாரங்கள் எடுத்துள்ளார். இனி வரப் போவது கல்கி அவதாரம் ஆகும்.
1. மச்ச அவதாரம்
அக்னி, வசிட்டரிடம் அவதாரங்கள் பற்றிச் சொல்லிய தாவது: வைவஸ்வத மனு வத்ரிகா ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தார். கிருத்தமாலா என்ற நதிக்குச் சென்று, தூய்மைப் படுத்திக்கொண்டு அர்க்கியம் செய்வதற்காக இரண்டு கைகளிலும் நீரை எடுத்துக் கொண்டார். கைக்குள் இருந்த தண்ணிரில் ஒரு சிறிய மீன் இருந்தது. ஆற்றுக்குள் போட வேண்டும் என்று மனு நினைத்தவுடன், அந்த மீன் பேசத் தொடங்கியது: “சிறிய மீனாகிய என்னை மறுபடியும் ஆற்றில் விட்டு விடாதே! பெரிய மீன்களும், முதலைகளும் என்னை விழுங்கிவிடும். என்னை ஒரு தனி இடத்தில் வைத்து வளர்ப்பாயாக’ என்று கூறியது. இதைக் கேட்ட மனு, அந்த மீனை ஒரு பாத்திரத்தில் வைக்க உடனே அந்த மீன் பெரிதாக வளர்ந்து கொண்டே போனது. வேறு எதிலும் அதனை வைக்க முடியாது என்று கருதிய மனு, ஒரு குளத்தில் சென்று மீனை விட்டார். உடனே மீன் மேலும் பெரிதாக வளர்ந்து குளத்தை விடப் பெரிதானது. இறுதியாகக் கடலில் கொண்டு விட்ட பொழுது அது மேலும் பெரிதாக வளர்ந்து மிகப் பெரிய அளவாக இருந்தது.
இதைக் கண்ட மனு, “நீ யார்? நீ விஷ்ணுவாகத்தான் இருக்க முடியும். எதற்காக இவ்வுருவில் வந்திருக்கிறாய்?" என்று கேட்டான். “இவ்வுலகில் கெட்டவற்றை அழித்து நல்லவற்றை நிலைநிறுத்தவே நான் வந்திருக்கிறேன். இன்னும் ஏழு நாட்களில், கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு இவ்வுலகம் முழுவதும் நீரால் நிரம்பி விடும். உயிர்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். நீ என்னைக் காப்பாற்றியதால், உனக்கு உதவி புரிகிறேன். உலகம் முழுவதும் நீரில் மூழ்கும் சமயத்தில் ஒரு படகு இங்கு வரும். நீ உன்னுடன் ஏழு ரிஷிகளையும் அழைத்துக் கொண்டு பயங்கரமான அந்த இரவைப் படகிலேயே கழிப்பாயாக! அத்துடன் உணவு தானியங்களை எடுத்துக் கொள். பாம்பினைக் கொண்டு அப்படகை என் கொம்பில் கட்டிக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டு மீன் மறைந்து விட்டது. அந்த மீன் கூறியவாறே அனைத்தும் நடந்தது. படகில் ஏறிக்கொண்டே மனு அந்த மீனை வேண்டிக் கொண்டதற்கு இணங்க, மீன் மச்சபுராணத்தை அவனுக்குக் கூறிற்று. இறுதியில் அந்தப் படகு இமயத்தின் உச்சியை அடைந்தது. உயிர்கள் அனைத்தும் மறுபடியும் பட்ைக்கப் பட்டன.
ஹயக்கிரீவன் என்னும் தானவன் வேதங்களையும் பிரம்ம ஞானத்தையும் திருடிச் சென்றான். மீன் அவதாரத்தில் இருந்த விஷ்ணு, ஹயக்கிரீவனைக் கொன்று வேதங்களை மீட்டார்.
2. கூர்ம அவதாரம்
நீண்ட காலத்திற்கு முன்னர், தேவாசுரப் போர் நடை பெற்றது. போரில் தோற்ற தேவர்கள் விஷ்ணுவை வேண்டினர். விஷ்ணு, பிரம்மன், மற்றும் தேவர்களிடம், "நீங்கள் அனைவரும் அசுரர்களுடன் ஒரு தற்காலிக உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்படி தேவ, அசுரர்கள் சேர்ந்து பாற்கடலைக் கடைய வேண்டும். தேவர்களுக்கு இதனால் லாபம் ஏற்படும்படி நான் பார்த்துக் கொள்வேன்” என்று கூறினார்.
இவ்வுடன்படிக்கையை இரு சாராரும் ஏற்றுக் கொண்டு பாற்கடலைக் கடையத் தயாராயினர். மந்தர மலையினை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடைய ஆரம்பித்தனர். சில மணி நேரத்தில் மந்தர மலை மிகுந்த கனத்தின் காரணமாகக் கடலில் மூழ்க ஆரம்பித்தது. உடனே விஷ்ணு ஆமையாக உருவெடுத்து, அம்மலையினைத் சிறிது நேரத்தில் காலகுதா என்ற விஷம் கடலினின்று வரவும் சிவபெருமான் அவ்விஷத்தை விழுங்கினார். இதனால் அவருடைய கழுத்துப் பகுதி நீலநிறமாக மாறியதால், சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் வந்தது. பிறகு வருணி என்ற தேவதை வெளியே வந்தாள். தேவர்கள் அவளை ஏற்றுக் கொண்டதால், 'சுரர்கள் என்றும் ராட்சசர்கள் அவளை ஏற்றுக் கொள்ள மறுத்ததால் அசுரர்கள் என்றும் பெயர் பெற்றனர். அந்த தேவதைக்குப் பின் பாரிஜாதம் என்னும் மரம் வந்தது. இந்திரனுடைய தோட்டத்தில் இடம்பெற்று, தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது. இதைத் தொடர்ந்து வந்த கெளஸ்துப மணி மாலை, விஷ்ணுவால் ஆபரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகு கபிலா என்னும் பசுவும், உச்சைஸ்ரவம் என்னும் குதிரையும், ஐராவதம் என்னும் யானையும் வந்தன. பிறகு அப்ஸரஸ்கள் வந்தனர். தொடர்ந்து இலட்சுமி தோன்றி விஷ்ணுவுடன் இரண்டறக் கலந்தாள்.
கடைசியாக தன்வந்தரி என்னும் தேவதை அமிர்தத்தை உடைய பாத்திரத்தைக் கையில் ஏந்தி வந்தாள். ஜம்பா என்னும் தைத்தியர் பாதி அமிர்தத்தை தேவர்களுக்குக் கொடுத்துவிட்டு மீதியை எடுத்துக் கொண்டு சென்றார். தைத்தியர்களைத் திசை திருப்புவதற்காக விஷ்ணு பெண் வடிவு எடுத்து, அவர் முன்னே சென்று நின்றார். அழகிய பெண்ணைக் கண்ட அசுரர்கள் அப்பெண்ணிடம், “நீ மிக அழகாக இருக்கிறாய்! இந்த அமிர்தத்தை எடுத்து எங்களுக்குக் கொடு!" என்றனர். பெண் வடிவிலிருந்த விஷ்ணு அதனை ஏற்றுக்கொள்வது போல் தலையசைத்து, அமிர்தத்தை தேவர்களுக்கு வழங்கி னார். அதற்குள் ராகு என்ற அசுரன், சந்திரனைப் போன்று வடிவெடுத்து தேவர்களுடன் அமர்ந்து அமிர்தத்தைச் சிறிது உண்டான். இதைப் பார்த்துச் சூரியனும் சந்திரனும் விஷ்ணுவிடம் முறையிட்டனர். உடனே விஷ்ணு, ராகுவின் தலையை வெட்டி விட்டார். ஆனால் ராகு சிறிது அமிர்தம் சாப்பிட்டிருந்த காரணத்தினால் அவன் சாகவில்லை. விஷ்ணுவை வேண்டி, "சூரியனையும், சந்திரனையும் தான் விழுங்கி விட வேண்டும்" என்ற வரத்தினைப் பெற்றான். சூரியன், சந்திரன் ஆகியோரை ராகு விழுங்குவதை முறையே சூரிய, சந்திர கிரகணங்களின் போது காணலாம்.
3. வராக அவதாரம்
விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமாக வருவது வராக அவதாரமாகும். காசிப முனிவனுக்கும், திதிக்கும் மகனாகப் பிறந்தான் ஹிரண்யாக்ஷா, இவன் அசுரர்களின் தலைவனாக இருந்தான். தவம் செய்து தன்னை யாரும் போரில் வெல்லக் கூடாது' என்ற வரத்தினை பிரம்மாவிடம் பெற்றான். இதனால் தேவர்களுடன் போர் தொடுத்து தேவருலகையும், வருணன், கடல் அரசன் ஆகியோரையும் வென்று நிலவுலகம், பாதாள உலகம் ஆகிய மூன்று உலகங்களுக்கும் தானே அரசனாக இருந்தான். ஹிரண்யாக்ஷா கடலுக்கடியில் உள்ள வருணனின் அரண்மனையில் இருந்து வந்தான். அதனால் பூமியைக் கடலுக்குக் கீழே கொண்டு சென்று ஆட்சி செய்து வந்தான். இதனால் கோபம் அடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டு, "தாங்கள் தேவருலகத்திலேயே இருக்க வேண்டும் என்றும் பூமியைக் கடலுக்கு மேலே கொண்டு வர வேண்டும்" என்றும் வேண்டினர். இதைக் கேட்ட விஷ்ணு வராக அவதாரம் எடுத்துக் கடலுக்கடியில் சென்றார்.
விஷ்ணு என்பதை அறியாத ஹிரண்யாக்ஷா, வராகத்துடன் போர் செய்தான். பல ஆயிரம் ஆண்டுகள் நடந்த போரின் முடிவில் வராகம் தன்னுடைய கொம்பினால் அசுரனைக் கொன்றது. தன்னுடைய கொம்புகளுக்கிடையே பூமியைக் கடலுக்கு மேலே தூக்கி வந்து வைத்தது. .
4. நரசிம்ம அவதாரம்
ஹிரண்யாக்ஷா என்ற அசுரனுக்கு, ஹிரண்யகசிபு என்ற சகோதரன் இருந்தான். தன்னுடைய அண்ணன் கொல்லப்பட்ட விஷயம் அறிந்து, விஷ்ணுவைக் கொல்ல வேண்டும் என்று சபதம் கொண்டிருந்தான். அதற்காகப் பிரம்மனை வேண்டிக் கடுந்தவம் புரிந்தான். அவனுடைய தவத்தைக் கண்டு மகிழ்ந்த பிரம்மன், “என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார். அதுகேட்ட ஹிரண்யகசிபு, ‘ஐயனே! யாராலும் வெல்ல முடியாத அரசனாக நான் இருக்க வேண்டும். இரவிலோ, பகலிலோ என்னை யாரும் கொல்லக் கூடாது. மனிதனாலோ, விலங்கினாலோ எனக்கு இறப்பு ஏற்படக் கூடாது. ஆகாயத்திலோ, நீரிலோ, பூமியிலோ நான் கொல்லப்படக் கூடாது" என்ற வரத்தைக் கொடுக்குமாறு வேண்ட, பிரம்மனும் அப்படியே கொடுத்தார். பிரமனின் வரம் பெற்ற ஹிரண்யகசிபு, தேவர்களை விரட்டி விட்டு, மூன்று உலகங்களையும் தானே ஆண்டு வந்தான்.
ஹிரண்யகசிபுவிற்கு பிரகலாதன் என்ற மகன் இருந்தான். விஷ்ணுவின் மீது பெரிதும் பக்தி கொண்டவன். விஷ்ணுவைக் கொல்ல வேண்டும் என்று உறுதி கொண்டிருந்த அசுரன், தன் மகன் விஷ்ணு பக்தனாக இருப்பதை அறவே வெறுத்தான். எவ்வளவோ சொல்லியும், பிரகலாதனை மாற்ற முடியவில்லை. கோபம் கொண்ட ஹிரண்யகசிபுதன் மகனைக் கொல்வதற்காகப் பல வழிகளில் முயன்றும், ஒவ்வொரு முறையும் விஷ்ணுவால் காப்பாற்றப்பட்டான் பிரகலாதன். தேவருகிலிருந்து விரட்டப்பட்ட தேவர்கள் விஷ்ணுவை வேண்டினர். விஷ்ணுவும், இதற்கு ஒரு ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.
ஒருநாள், தன் மகன் பிரகலாதனை அழைத்த ஹிரண்யகசிபு, "மகனே! ஒவ்வொரு முறை நான் உன்னைக் கொல்லுவதற்கு முயற்சித்தும், நீ அதிலிருந்து தப்பிவிட்டாய். இது எவ்வாறு நிகழ்ந்தது?” என்று வினவ, உடனே பிரகலாதன், "தந்தையே! ஒவ்வொரு முறையும் விஷ்ணு என்னைக் காப்பாற்றுகிறார். விஷ்ணு எங்கும் நிறைந்திருக்கிறார்” என்று கூறினான்.
இதனால் கடுங்கோபம் கொண்ட ஹிரண்யகசிபு ஒரு தூணினைக் காட்டி மகனிடம், "இதனுள்ளும் உன்னுடைய விஷ்ணு இருக்கின்றாரா?” என்று வினவ, மகனும், ஆம் என்று சொன்னான். "அப்படியானால் நான் இந்தத் துணினை எட்டி உதைக்கிறேன். உன்னுடைய விஷ்ணு வருகின்றாரா என்று பார்க்கலாம்” என்று துணினை எட்டி உதைத்தான். இரண்டாகப் பிளந்த அத் தூணிலிருந்து மனித உடலுடனும், சிங்கத்தின் தலையுடனும் நரசிம்ம அவதாரமாக வெளிவந்த விஷ்ணு, அசுரனைத் தன்னுடைய தொடையின் குறுக்கே படுக்க வைத்து, தன்னுடைய கூரிய நகங்களால் ஹிரண்யகசிபு நெஞ்சினைக் கிழித்துக் கொன்றார். இறுதியில் பிரகலாதனை அரசனாக நியமித்து விட்டு தேவர்களைத் தேவருலகத்திற்கு அனுப்பி வைத்தார் விஷ்ணு.
5. வாமன அவதாரம்
பிரகலாதனின் பேரனாகப் பிறந்தவன் பலி. மிகுந்த பலசாலியாகவும் வீரமுள்ளவனாகவும் திகழ்ந்த பலி அசுரர்களின் தலைவனாக இருந்தான். அப்பொழுது, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில், தேவர்கள் தோல்வி அடைந்தனர். உடனே விஷ்ணுவிடம் சென்று வேண்டினர். விஷ்ணுவும் அவர்களுக்கு உதவுவதாக உறுதி கூறினார்.
காசிப முனிவருக்கும், அதிதிக்கும் மகனாக அவதரித்தார் விஷ்ணு. குள்ளமான உருவத்தை உடையவராக இருந்தார். பலிச் சக்கரவர்த்தி மிகப் பெரிய யாகம் ஒன்றினுக்கு ஏற்பாடு செய்தான். அந்த யாகத்தின் பொழுது, யார் வரம் கேட்டாலும் வழங்கப்படும் என்று அறிவித்தான். யாகத்தில் கலந்து கொண்ட குள்ளன், வேதங்களை மிக அழகாக எடுத்துக் கூறினான். இதனால் மனம் மகிழ்ந்த பலிச் சக்கரவர்த்தி, அச் சிறுவனுக்கு ஏதேனும் வரம் அளிக்க விரும்பினான். பலிச் சக்கரவர்த்தியின் குருவாகிய சுக்ராச்சாரியார் இதில் சந்தேகம் கொண்டு, பலிச் சக்கரவர்த்தியைத் தடுத்தார். தான் வாக்குக் கொடுத்தபடியே நடந்து கொள்ள வேண்டும் என்றும், அதனின்று பின்வாங்க மாட்டேன் என்றும் கூறிய அரசன், குள்ளனை நோக்கி, “சிறுவனே! உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்” என்று கூறினான். வரத்தினைக் கொடுப்பதற்கு முன் புனித நீரைக் கொண்டு சிறிய சடங்கு செய்யப்பட வேண்டி இருந்தது. வரம் கொடுப்பதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று நினைத்த சுக்ராச்சாரியார், நீர் வைத்திருந்த பாத்திரத்தின் உள்ளே சென்று, யாரும் அதிலிருக்கும் நீரை எடுக்க முடியாதபடி, அந்தப் பாத்திரத்தை இறுக்க மூடிக் கொண்டார். அப் பாத்திரத்தில் உள்ள நீரை எடுக்க அதனை ஒரு குச்சியால் துளைத்தான், குள்ளன். அக்குச்சியானது. பாத்திரத்தின் உள்ளே அமர்ந்திருந்த சுக்ராச்சாரியாரின் கண்ணைக் குத்தியதால் அவருக்கு அன்று முதல் ஒரு கண்ணே இருந்தது.
பலிச் சக்கரவர்த்தியைப் பார்த்த குள்ளன், “அரசே! என்னுடைய குருவிற்கு தட்சணை கொடுப்பதற்காக என்னுடைய மூன்று அடியில் அடங்கியிருக்கும் மண்ணைத் தரவேண்டும்” என்று கேட்க அரசனும் ஒப்புக் கொண்டான். குள்ளன் உடனே மிகப் பெரிய உருவெடுத்து ஒர் அடியினைக் கீழே வைக்க, அது பூலோகம் முழுவதையும் அடைத்துக் கொண்டது. பலியிடம் இருந்து பெற்றுக் கொண்ட இம் மூன்று உலகங்களையும் இந்திரனுக்கு வழங்கினார். குள்ளனாக அவதாரம் எடுத்திருந்த விஷ்ணு, வேறு எங்கும் செல்ல முடியாத பலி அரசன் பாதாள லோகம் செல்ல முற்படுகையில் அவனைத் தடுத்து, அவன் பெருந்தன்மையைப் பாராட்டி, “பிற்காலத்தில் இந்திரன் என்ற பதவியை வகிப்பாய்!” என்று பலி அரசனுக்கு வரம் கொடுத்தார்.
6. பரசுராம அவதாரம்
வர்ணங்களில் இரண்டாவது இடத்தைப் பெறும் சத்ரியர்கள் ஆயுதம் ஏந்தி உலகைக் காக்க வேண்டியவர்கள். பிராமணர்கள் வேத, சாஸ்திரங்களைப் படிப்பது, யக்ஞம் முதலியவற்றைச் செய்வது போன்ற கடமைகளை ஆற்ற வேண்டும். ஒரு சமயம் சத்ரியர்கள் மிகவும் ஆணவமுற்று, பல கொடுமைகளைச் செய்தனர். அச்சமயத்தில் விஷ்ணு, ஜமதக்கினி முனிவருக்கும் ரேணுகாவிற்கும் மகனாக அவதரித்தார். பிருகு முனிவரின் பரம்பரையில் வந்ததால், பரசுராமனுக்கு பார்கவா என்ற பெயரும் வழங்கப்பட்டது. பிராமணர்களைக் காப்பாற்றுவதும், சத்ரியர்களின் ஆணவத்தை அடக்குவதும் பரசுராமனின் வேலையாக இருந்தது.
தத்தாத்ரேய முனிவரிடம் எல்லா வரங்களும் பெற்ற கார்த்தவீரியன், ஆயிரம் கைகளை உடையவனாகவும், மூவுலகை ஆள்பவனாகவும் இருந்தான். ஒரு நாள் கார்த்த வீரியன் வேட்டைக்குச் சென்று திரும்பும் வழியில் களைப்பின் காரணமாக ஜமதக்கினி முன்ரிவரின் ஆசிரமத்தில் அழைக்கப் பட்டான். ஜமதக்கினி முனிவரிடம் காமதேனு என்ற பசு இருந்தது. முனிவர் கேட்ட அனைத்தையும் அப்பசு வழங்கியது. ஆதலால் களைப்பாக இருந்த கார்த்த வீரியனுக்கும், அவனுடைய சேனைகளுக்கும் அறுசுவை விருந்து படைத்தார் முனிவர். காமதேனுவைக் கண்டு மிகவும் விருப்பம் கொண்ட கார்த்தவீரியன், அதனைக் கொடுக்குமாறு முனிவரிடம் கேட்க, அவர் மறுத்து விட்டார். கோபம் கொண்ட கார்த்தவீரியன் அப்பசுவைத் திருடிச் சென்றான். இதனால் கார்த்தவீரியனுக்கும் பரசுராமனுக்கும் போர் நடந்தது. கார்த்தவீரியன் தலையினை வெட்டி, காமதேனுப் பசுவை மீட்டான் பரசுராமன்.
சில காலத்திற்குப் பின்பு, கார்த்தவீரியனின் புதல்வர்கள், பரசுராமன் இல்லாத பொழுது ஜமதக்கினி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து அவரைக் கொன்றனர். இதனால் கடுங் கோபம் கொண்ட பரசுராமன் இருபத்தியோரு தலைமுறை சத்ரியர்கள் அனைவரையும் கொன்று குவித்தான். இறுதியில் காசிப முனிவரிடம் உலகை ஒப்படைத்து விட்டு, மகேந்திர மலைக்குச் சென்று வாழ்ந்தான்.
7. இராமாவதாரம்
விஷ்ணுவின் கொப்பூழில் இருந்து தோன்றியவர் பிரம்மன். இவருடைய புதல்வன் மாரீச்சி. இவரது பரம்பரையில் தோன்றிய அஜா என்பவனின் மகனே தசரதன் ஆவான். தசரதனுக்கு இராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் என்ற நான்கு மகன்கள் இருந்தனர். இஷ்வாகுவின் மகனாகிய ககுத்தன் பரம்பரையில் தோன்றியதாலும், ரகுவின் பரம்பரையில் தோன்றியதாலும் இராமனுக்குக் காகுத்தன் என்றும், ராகவன் என்றும் பெயர்கள் இருந்தன.
விஷ்ணு, இராவணன் என்னும் அரக்கனையும், மற் எல்லா அரக்கர்களையும் அழிக்க நினைத்தார். ஆகையால் தன்னை நான்கு பாகங்களாகப் பிரித்து, ராமன், பரதன், லட்சுமணன், சத்ருக்கனனாகப் பிறந்தார். ஒரு சமயம், விசுவாமித்திரர் தசரதனிடம் இருந்து ராட்சசர்களைக் கொல்ல இராமனுடைய உதவி வேண்டும் என்று கேட்டார். இராமன் ராட்சசர்களைப் போரில் வென்றதால், தெய்வீக அஸ்திரங்களை உபயோகிப்பது பற்றிச் சொல்லிக் கொடுத்தார். மிதிலை மன்னனாகிய ஜனகரிடமிருந்த சிவனுடைய வில்லை உடைத்து, ஜனகன் மகள் சீதையை மணந்தான் இராமன். தன்னுடைய மூத்த மகனாகிய இராமனுக்குப் பட்டம் கட்டவேண்டும் என ஏற்பாடுகள் செய்து வந்தான் தசரதன். அவனுடைய மனைவியாகிய கைகேயி தன் வேலைக்காரியாகிய மந்தரை என்ற கூனியின் பேச்சைக் கேட்டு இராமனுக்குப் பட்டம் கட்ட விடாமல் செய்தாள்.
இராமன் சிறிய பையனாக இருக்கும் பொழுது மந்தரையைக் காலை வாரி விட்டுத் தள்ளிக் கீழே விழச் செய்தான். அதிலிருந்து இராமன் மேல் வெறுப்புக் கொண்ட மந்தரை இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தசரதனிடம் அவள் பெற்றுள்ள முதல் வரத்தால் இராமனைப் பதினான்கு ஆண்டுகள் காட்டிற்கு அனுப்பவும், இரண்டாவது வரத்தால் பரதனுக்குப் பட்டம் சூட்டவும் ஏற்பாடு செய்தாள். முன்னொரு காலத்தில் சம்பராசுரனுடன் போர் தொடுத்த தேவர்கள், தசரதனைத் தங்கட்குத் துணையாக வருமாறு அழைத்தனர். அப்போரில் காயம்பட்ட தசரதனுக்குக் கைகேயி சிறப்பாகப் பணிவிடை புரிந்தாள். மகிழ்ந்த தசரதன், அவள் எப்பொழுது வேண்டுமானாலும் இரண்டு வரங்களைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி இருந்தான்.
அக்னியால் வசிட்ட முனிவருக்கு உபதேசிக்கப் பட்டது இப்புராணம். ஆனால் புராணத்தினுள் சுதா முனிவர் சௌனகர் மற்றும் ரிஷிகளுக்கும் சொல்லியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யாகம், அக்னியின் பெருமை, விஷ்ணு அவதாரங்கள், சிவபெருமானை நோக்கிச் செய்யும் ஞானபூஜை, பிரபஞ்ச லட்சணம், தர்மசாஸ்திரம், அரசியல், பொருளாதாரம், வானியல், சாமுத்ரிகா லட்சணம், ராஜநீதி, ஆயுர்வேதம், வாஸ்துவித்யா, தாந்திரீக வித்தைகள், மந்திர சாஸ்திரங்கள், தனுர்வேதம், நாட்டிய சாஸ்திரம், காவிய சாஸ்திரம், புராண சாஸ்திரம் முதலானவை பேசப் பட்டுள்ளன. 8000 கிரந்தங்களை உடையது.
நைமிசாரண்ய வனத்தில் செளனகர் முதலிய ரிஷிகள் கூடியிருந்தனர். தீர்த்த யாத்திரைக்குச் சென்றிருந்த சுதா அங்கு வந்து சேர்ந்தார். மற்ற முனிவர்கள் சுதாவைப் பார்த்து, 'மனிதர்களுக்குப் பிரம்மஞானத்தைத் தருவது எது? மிகச் சிறந்த பொருள் எது?’ என்று வினவினார்.
சுதா சொல்லத் தொடங்கினார்: “நான் ஒருமுறை சுகர், பைலா மற்றும் பல முனிவர்களோடு சேர்ந்து வத்ரிகா ஆசிரமத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு வியாச முனிவரைச் சந்தித்தேன். நீங்கள் கேட்கும் இதே கேள்விகளை வியாச முனிவரிடம் கேட்டேன். அக்னி பகவானிடமிருந்து வசிட்டர் தாம் கேட்டதை வியாச முனிவருக்குச் சொல்ல, வியாச முனிவர் எங்களுக்குச் சொன்னதை இப்பொழுது உங்களுக்குச் சொல்லப் போகிறேன். மிகச் சிறந்தது என்பது விஷ்ணுவே ஆகும். அக்னி புராணம் மிகச் சிறந்தது என்பதற்குக் காரணம், பரப் பிரம்மத்தின் சாரத்தை நன்கு எடுத்துக் கூறுகிறது. ஆகவே, வியாசர் மூலம் நான் அறிந்த அக்னி புராணத்தை இப்பொழுது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.
அவதாரங்கள்
அவதாரம் என்றால் என்ன? உங்களுக்குத் தெரியுமா? விஷ்ணு பல சமயங்களில் இந்த பூலோகத்திற்கு வந்து மனிதர்களாகவும், பிறவாகவும் தோன்றுகிறார். இதைத்தான் அவதாரங்கள் என்று சொல்லுகிறோம். ஏன் இப்படி விஷ்ணு அவதாரங்கள் எடுக்க வேண்டும்? உலகத்தில் துன்பம் விளைவிப்பவர்கள், கொடியவர்கள் ஆகியவர்களை அழித்து, நல்லவர்களையும், தர்மத்தையும் நிலைநாட்டவே அவதாரங்கள் தோன்றுகின்றன.
விஷ்ணு இதுவரை எடுத்தவை ஒன்பது அவதாரங்கள் ஆகும். பத்தாவது அவதாரம் எதிர்காலத்தில் தோன்றப் போவதாகும். விஷ்ணு இதுவரை மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், கிருஷ்ணன், புத்தன் ஆகிய அவதாரங்கள் எடுத்துள்ளார். இனி வரப் போவது கல்கி அவதாரம் ஆகும்.
1. மச்ச அவதாரம்
அக்னி, வசிட்டரிடம் அவதாரங்கள் பற்றிச் சொல்லிய தாவது: வைவஸ்வத மனு வத்ரிகா ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தார். கிருத்தமாலா என்ற நதிக்குச் சென்று, தூய்மைப் படுத்திக்கொண்டு அர்க்கியம் செய்வதற்காக இரண்டு கைகளிலும் நீரை எடுத்துக் கொண்டார். கைக்குள் இருந்த தண்ணிரில் ஒரு சிறிய மீன் இருந்தது. ஆற்றுக்குள் போட வேண்டும் என்று மனு நினைத்தவுடன், அந்த மீன் பேசத் தொடங்கியது: “சிறிய மீனாகிய என்னை மறுபடியும் ஆற்றில் விட்டு விடாதே! பெரிய மீன்களும், முதலைகளும் என்னை விழுங்கிவிடும். என்னை ஒரு தனி இடத்தில் வைத்து வளர்ப்பாயாக’ என்று கூறியது. இதைக் கேட்ட மனு, அந்த மீனை ஒரு பாத்திரத்தில் வைக்க உடனே அந்த மீன் பெரிதாக வளர்ந்து கொண்டே போனது. வேறு எதிலும் அதனை வைக்க முடியாது என்று கருதிய மனு, ஒரு குளத்தில் சென்று மீனை விட்டார். உடனே மீன் மேலும் பெரிதாக வளர்ந்து குளத்தை விடப் பெரிதானது. இறுதியாகக் கடலில் கொண்டு விட்ட பொழுது அது மேலும் பெரிதாக வளர்ந்து மிகப் பெரிய அளவாக இருந்தது.
இதைக் கண்ட மனு, “நீ யார்? நீ விஷ்ணுவாகத்தான் இருக்க முடியும். எதற்காக இவ்வுருவில் வந்திருக்கிறாய்?" என்று கேட்டான். “இவ்வுலகில் கெட்டவற்றை அழித்து நல்லவற்றை நிலைநிறுத்தவே நான் வந்திருக்கிறேன். இன்னும் ஏழு நாட்களில், கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு இவ்வுலகம் முழுவதும் நீரால் நிரம்பி விடும். உயிர்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். நீ என்னைக் காப்பாற்றியதால், உனக்கு உதவி புரிகிறேன். உலகம் முழுவதும் நீரில் மூழ்கும் சமயத்தில் ஒரு படகு இங்கு வரும். நீ உன்னுடன் ஏழு ரிஷிகளையும் அழைத்துக் கொண்டு பயங்கரமான அந்த இரவைப் படகிலேயே கழிப்பாயாக! அத்துடன் உணவு தானியங்களை எடுத்துக் கொள். பாம்பினைக் கொண்டு அப்படகை என் கொம்பில் கட்டிக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டு மீன் மறைந்து விட்டது. அந்த மீன் கூறியவாறே அனைத்தும் நடந்தது. படகில் ஏறிக்கொண்டே மனு அந்த மீனை வேண்டிக் கொண்டதற்கு இணங்க, மீன் மச்சபுராணத்தை அவனுக்குக் கூறிற்று. இறுதியில் அந்தப் படகு இமயத்தின் உச்சியை அடைந்தது. உயிர்கள் அனைத்தும் மறுபடியும் பட்ைக்கப் பட்டன.
ஹயக்கிரீவன் என்னும் தானவன் வேதங்களையும் பிரம்ம ஞானத்தையும் திருடிச் சென்றான். மீன் அவதாரத்தில் இருந்த விஷ்ணு, ஹயக்கிரீவனைக் கொன்று வேதங்களை மீட்டார்.
2. கூர்ம அவதாரம்
நீண்ட காலத்திற்கு முன்னர், தேவாசுரப் போர் நடை பெற்றது. போரில் தோற்ற தேவர்கள் விஷ்ணுவை வேண்டினர். விஷ்ணு, பிரம்மன், மற்றும் தேவர்களிடம், "நீங்கள் அனைவரும் அசுரர்களுடன் ஒரு தற்காலிக உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்படி தேவ, அசுரர்கள் சேர்ந்து பாற்கடலைக் கடைய வேண்டும். தேவர்களுக்கு இதனால் லாபம் ஏற்படும்படி நான் பார்த்துக் கொள்வேன்” என்று கூறினார்.
இவ்வுடன்படிக்கையை இரு சாராரும் ஏற்றுக் கொண்டு பாற்கடலைக் கடையத் தயாராயினர். மந்தர மலையினை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடைய ஆரம்பித்தனர். சில மணி நேரத்தில் மந்தர மலை மிகுந்த கனத்தின் காரணமாகக் கடலில் மூழ்க ஆரம்பித்தது. உடனே விஷ்ணு ஆமையாக உருவெடுத்து, அம்மலையினைத் சிறிது நேரத்தில் காலகுதா என்ற விஷம் கடலினின்று வரவும் சிவபெருமான் அவ்விஷத்தை விழுங்கினார். இதனால் அவருடைய கழுத்துப் பகுதி நீலநிறமாக மாறியதால், சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் வந்தது. பிறகு வருணி என்ற தேவதை வெளியே வந்தாள். தேவர்கள் அவளை ஏற்றுக் கொண்டதால், 'சுரர்கள் என்றும் ராட்சசர்கள் அவளை ஏற்றுக் கொள்ள மறுத்ததால் அசுரர்கள் என்றும் பெயர் பெற்றனர். அந்த தேவதைக்குப் பின் பாரிஜாதம் என்னும் மரம் வந்தது. இந்திரனுடைய தோட்டத்தில் இடம்பெற்று, தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது. இதைத் தொடர்ந்து வந்த கெளஸ்துப மணி மாலை, விஷ்ணுவால் ஆபரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகு கபிலா என்னும் பசுவும், உச்சைஸ்ரவம் என்னும் குதிரையும், ஐராவதம் என்னும் யானையும் வந்தன. பிறகு அப்ஸரஸ்கள் வந்தனர். தொடர்ந்து இலட்சுமி தோன்றி விஷ்ணுவுடன் இரண்டறக் கலந்தாள்.
கடைசியாக தன்வந்தரி என்னும் தேவதை அமிர்தத்தை உடைய பாத்திரத்தைக் கையில் ஏந்தி வந்தாள். ஜம்பா என்னும் தைத்தியர் பாதி அமிர்தத்தை தேவர்களுக்குக் கொடுத்துவிட்டு மீதியை எடுத்துக் கொண்டு சென்றார். தைத்தியர்களைத் திசை திருப்புவதற்காக விஷ்ணு பெண் வடிவு எடுத்து, அவர் முன்னே சென்று நின்றார். அழகிய பெண்ணைக் கண்ட அசுரர்கள் அப்பெண்ணிடம், “நீ மிக அழகாக இருக்கிறாய்! இந்த அமிர்தத்தை எடுத்து எங்களுக்குக் கொடு!" என்றனர். பெண் வடிவிலிருந்த விஷ்ணு அதனை ஏற்றுக்கொள்வது போல் தலையசைத்து, அமிர்தத்தை தேவர்களுக்கு வழங்கி னார். அதற்குள் ராகு என்ற அசுரன், சந்திரனைப் போன்று வடிவெடுத்து தேவர்களுடன் அமர்ந்து அமிர்தத்தைச் சிறிது உண்டான். இதைப் பார்த்துச் சூரியனும் சந்திரனும் விஷ்ணுவிடம் முறையிட்டனர். உடனே விஷ்ணு, ராகுவின் தலையை வெட்டி விட்டார். ஆனால் ராகு சிறிது அமிர்தம் சாப்பிட்டிருந்த காரணத்தினால் அவன் சாகவில்லை. விஷ்ணுவை வேண்டி, "சூரியனையும், சந்திரனையும் தான் விழுங்கி விட வேண்டும்" என்ற வரத்தினைப் பெற்றான். சூரியன், சந்திரன் ஆகியோரை ராகு விழுங்குவதை முறையே சூரிய, சந்திர கிரகணங்களின் போது காணலாம்.
3. வராக அவதாரம்
விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமாக வருவது வராக அவதாரமாகும். காசிப முனிவனுக்கும், திதிக்கும் மகனாகப் பிறந்தான் ஹிரண்யாக்ஷா, இவன் அசுரர்களின் தலைவனாக இருந்தான். தவம் செய்து தன்னை யாரும் போரில் வெல்லக் கூடாது' என்ற வரத்தினை பிரம்மாவிடம் பெற்றான். இதனால் தேவர்களுடன் போர் தொடுத்து தேவருலகையும், வருணன், கடல் அரசன் ஆகியோரையும் வென்று நிலவுலகம், பாதாள உலகம் ஆகிய மூன்று உலகங்களுக்கும் தானே அரசனாக இருந்தான். ஹிரண்யாக்ஷா கடலுக்கடியில் உள்ள வருணனின் அரண்மனையில் இருந்து வந்தான். அதனால் பூமியைக் கடலுக்குக் கீழே கொண்டு சென்று ஆட்சி செய்து வந்தான். இதனால் கோபம் அடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டு, "தாங்கள் தேவருலகத்திலேயே இருக்க வேண்டும் என்றும் பூமியைக் கடலுக்கு மேலே கொண்டு வர வேண்டும்" என்றும் வேண்டினர். இதைக் கேட்ட விஷ்ணு வராக அவதாரம் எடுத்துக் கடலுக்கடியில் சென்றார்.
விஷ்ணு என்பதை அறியாத ஹிரண்யாக்ஷா, வராகத்துடன் போர் செய்தான். பல ஆயிரம் ஆண்டுகள் நடந்த போரின் முடிவில் வராகம் தன்னுடைய கொம்பினால் அசுரனைக் கொன்றது. தன்னுடைய கொம்புகளுக்கிடையே பூமியைக் கடலுக்கு மேலே தூக்கி வந்து வைத்தது. .
4. நரசிம்ம அவதாரம்
ஹிரண்யாக்ஷா என்ற அசுரனுக்கு, ஹிரண்யகசிபு என்ற சகோதரன் இருந்தான். தன்னுடைய அண்ணன் கொல்லப்பட்ட விஷயம் அறிந்து, விஷ்ணுவைக் கொல்ல வேண்டும் என்று சபதம் கொண்டிருந்தான். அதற்காகப் பிரம்மனை வேண்டிக் கடுந்தவம் புரிந்தான். அவனுடைய தவத்தைக் கண்டு மகிழ்ந்த பிரம்மன், “என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார். அதுகேட்ட ஹிரண்யகசிபு, ‘ஐயனே! யாராலும் வெல்ல முடியாத அரசனாக நான் இருக்க வேண்டும். இரவிலோ, பகலிலோ என்னை யாரும் கொல்லக் கூடாது. மனிதனாலோ, விலங்கினாலோ எனக்கு இறப்பு ஏற்படக் கூடாது. ஆகாயத்திலோ, நீரிலோ, பூமியிலோ நான் கொல்லப்படக் கூடாது" என்ற வரத்தைக் கொடுக்குமாறு வேண்ட, பிரம்மனும் அப்படியே கொடுத்தார். பிரமனின் வரம் பெற்ற ஹிரண்யகசிபு, தேவர்களை விரட்டி விட்டு, மூன்று உலகங்களையும் தானே ஆண்டு வந்தான்.
ஹிரண்யகசிபுவிற்கு பிரகலாதன் என்ற மகன் இருந்தான். விஷ்ணுவின் மீது பெரிதும் பக்தி கொண்டவன். விஷ்ணுவைக் கொல்ல வேண்டும் என்று உறுதி கொண்டிருந்த அசுரன், தன் மகன் விஷ்ணு பக்தனாக இருப்பதை அறவே வெறுத்தான். எவ்வளவோ சொல்லியும், பிரகலாதனை மாற்ற முடியவில்லை. கோபம் கொண்ட ஹிரண்யகசிபுதன் மகனைக் கொல்வதற்காகப் பல வழிகளில் முயன்றும், ஒவ்வொரு முறையும் விஷ்ணுவால் காப்பாற்றப்பட்டான் பிரகலாதன். தேவருகிலிருந்து விரட்டப்பட்ட தேவர்கள் விஷ்ணுவை வேண்டினர். விஷ்ணுவும், இதற்கு ஒரு ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.
ஒருநாள், தன் மகன் பிரகலாதனை அழைத்த ஹிரண்யகசிபு, "மகனே! ஒவ்வொரு முறை நான் உன்னைக் கொல்லுவதற்கு முயற்சித்தும், நீ அதிலிருந்து தப்பிவிட்டாய். இது எவ்வாறு நிகழ்ந்தது?” என்று வினவ, உடனே பிரகலாதன், "தந்தையே! ஒவ்வொரு முறையும் விஷ்ணு என்னைக் காப்பாற்றுகிறார். விஷ்ணு எங்கும் நிறைந்திருக்கிறார்” என்று கூறினான்.
இதனால் கடுங்கோபம் கொண்ட ஹிரண்யகசிபு ஒரு தூணினைக் காட்டி மகனிடம், "இதனுள்ளும் உன்னுடைய விஷ்ணு இருக்கின்றாரா?” என்று வினவ, மகனும், ஆம் என்று சொன்னான். "அப்படியானால் நான் இந்தத் துணினை எட்டி உதைக்கிறேன். உன்னுடைய விஷ்ணு வருகின்றாரா என்று பார்க்கலாம்” என்று துணினை எட்டி உதைத்தான். இரண்டாகப் பிளந்த அத் தூணிலிருந்து மனித உடலுடனும், சிங்கத்தின் தலையுடனும் நரசிம்ம அவதாரமாக வெளிவந்த விஷ்ணு, அசுரனைத் தன்னுடைய தொடையின் குறுக்கே படுக்க வைத்து, தன்னுடைய கூரிய நகங்களால் ஹிரண்யகசிபு நெஞ்சினைக் கிழித்துக் கொன்றார். இறுதியில் பிரகலாதனை அரசனாக நியமித்து விட்டு தேவர்களைத் தேவருலகத்திற்கு அனுப்பி வைத்தார் விஷ்ணு.
5. வாமன அவதாரம்
பிரகலாதனின் பேரனாகப் பிறந்தவன் பலி. மிகுந்த பலசாலியாகவும் வீரமுள்ளவனாகவும் திகழ்ந்த பலி அசுரர்களின் தலைவனாக இருந்தான். அப்பொழுது, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில், தேவர்கள் தோல்வி அடைந்தனர். உடனே விஷ்ணுவிடம் சென்று வேண்டினர். விஷ்ணுவும் அவர்களுக்கு உதவுவதாக உறுதி கூறினார்.
காசிப முனிவருக்கும், அதிதிக்கும் மகனாக அவதரித்தார் விஷ்ணு. குள்ளமான உருவத்தை உடையவராக இருந்தார். பலிச் சக்கரவர்த்தி மிகப் பெரிய யாகம் ஒன்றினுக்கு ஏற்பாடு செய்தான். அந்த யாகத்தின் பொழுது, யார் வரம் கேட்டாலும் வழங்கப்படும் என்று அறிவித்தான். யாகத்தில் கலந்து கொண்ட குள்ளன், வேதங்களை மிக அழகாக எடுத்துக் கூறினான். இதனால் மனம் மகிழ்ந்த பலிச் சக்கரவர்த்தி, அச் சிறுவனுக்கு ஏதேனும் வரம் அளிக்க விரும்பினான். பலிச் சக்கரவர்த்தியின் குருவாகிய சுக்ராச்சாரியார் இதில் சந்தேகம் கொண்டு, பலிச் சக்கரவர்த்தியைத் தடுத்தார். தான் வாக்குக் கொடுத்தபடியே நடந்து கொள்ள வேண்டும் என்றும், அதனின்று பின்வாங்க மாட்டேன் என்றும் கூறிய அரசன், குள்ளனை நோக்கி, “சிறுவனே! உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்” என்று கூறினான். வரத்தினைக் கொடுப்பதற்கு முன் புனித நீரைக் கொண்டு சிறிய சடங்கு செய்யப்பட வேண்டி இருந்தது. வரம் கொடுப்பதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று நினைத்த சுக்ராச்சாரியார், நீர் வைத்திருந்த பாத்திரத்தின் உள்ளே சென்று, யாரும் அதிலிருக்கும் நீரை எடுக்க முடியாதபடி, அந்தப் பாத்திரத்தை இறுக்க மூடிக் கொண்டார். அப் பாத்திரத்தில் உள்ள நீரை எடுக்க அதனை ஒரு குச்சியால் துளைத்தான், குள்ளன். அக்குச்சியானது. பாத்திரத்தின் உள்ளே அமர்ந்திருந்த சுக்ராச்சாரியாரின் கண்ணைக் குத்தியதால் அவருக்கு அன்று முதல் ஒரு கண்ணே இருந்தது.
பலிச் சக்கரவர்த்தியைப் பார்த்த குள்ளன், “அரசே! என்னுடைய குருவிற்கு தட்சணை கொடுப்பதற்காக என்னுடைய மூன்று அடியில் அடங்கியிருக்கும் மண்ணைத் தரவேண்டும்” என்று கேட்க அரசனும் ஒப்புக் கொண்டான். குள்ளன் உடனே மிகப் பெரிய உருவெடுத்து ஒர் அடியினைக் கீழே வைக்க, அது பூலோகம் முழுவதையும் அடைத்துக் கொண்டது. பலியிடம் இருந்து பெற்றுக் கொண்ட இம் மூன்று உலகங்களையும் இந்திரனுக்கு வழங்கினார். குள்ளனாக அவதாரம் எடுத்திருந்த விஷ்ணு, வேறு எங்கும் செல்ல முடியாத பலி அரசன் பாதாள லோகம் செல்ல முற்படுகையில் அவனைத் தடுத்து, அவன் பெருந்தன்மையைப் பாராட்டி, “பிற்காலத்தில் இந்திரன் என்ற பதவியை வகிப்பாய்!” என்று பலி அரசனுக்கு வரம் கொடுத்தார்.
6. பரசுராம அவதாரம்
வர்ணங்களில் இரண்டாவது இடத்தைப் பெறும் சத்ரியர்கள் ஆயுதம் ஏந்தி உலகைக் காக்க வேண்டியவர்கள். பிராமணர்கள் வேத, சாஸ்திரங்களைப் படிப்பது, யக்ஞம் முதலியவற்றைச் செய்வது போன்ற கடமைகளை ஆற்ற வேண்டும். ஒரு சமயம் சத்ரியர்கள் மிகவும் ஆணவமுற்று, பல கொடுமைகளைச் செய்தனர். அச்சமயத்தில் விஷ்ணு, ஜமதக்கினி முனிவருக்கும் ரேணுகாவிற்கும் மகனாக அவதரித்தார். பிருகு முனிவரின் பரம்பரையில் வந்ததால், பரசுராமனுக்கு பார்கவா என்ற பெயரும் வழங்கப்பட்டது. பிராமணர்களைக் காப்பாற்றுவதும், சத்ரியர்களின் ஆணவத்தை அடக்குவதும் பரசுராமனின் வேலையாக இருந்தது.
தத்தாத்ரேய முனிவரிடம் எல்லா வரங்களும் பெற்ற கார்த்தவீரியன், ஆயிரம் கைகளை உடையவனாகவும், மூவுலகை ஆள்பவனாகவும் இருந்தான். ஒரு நாள் கார்த்த வீரியன் வேட்டைக்குச் சென்று திரும்பும் வழியில் களைப்பின் காரணமாக ஜமதக்கினி முன்ரிவரின் ஆசிரமத்தில் அழைக்கப் பட்டான். ஜமதக்கினி முனிவரிடம் காமதேனு என்ற பசு இருந்தது. முனிவர் கேட்ட அனைத்தையும் அப்பசு வழங்கியது. ஆதலால் களைப்பாக இருந்த கார்த்த வீரியனுக்கும், அவனுடைய சேனைகளுக்கும் அறுசுவை விருந்து படைத்தார் முனிவர். காமதேனுவைக் கண்டு மிகவும் விருப்பம் கொண்ட கார்த்தவீரியன், அதனைக் கொடுக்குமாறு முனிவரிடம் கேட்க, அவர் மறுத்து விட்டார். கோபம் கொண்ட கார்த்தவீரியன் அப்பசுவைத் திருடிச் சென்றான். இதனால் கார்த்தவீரியனுக்கும் பரசுராமனுக்கும் போர் நடந்தது. கார்த்தவீரியன் தலையினை வெட்டி, காமதேனுப் பசுவை மீட்டான் பரசுராமன்.
சில காலத்திற்குப் பின்பு, கார்த்தவீரியனின் புதல்வர்கள், பரசுராமன் இல்லாத பொழுது ஜமதக்கினி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து அவரைக் கொன்றனர். இதனால் கடுங் கோபம் கொண்ட பரசுராமன் இருபத்தியோரு தலைமுறை சத்ரியர்கள் அனைவரையும் கொன்று குவித்தான். இறுதியில் காசிப முனிவரிடம் உலகை ஒப்படைத்து விட்டு, மகேந்திர மலைக்குச் சென்று வாழ்ந்தான்.
7. இராமாவதாரம்
விஷ்ணுவின் கொப்பூழில் இருந்து தோன்றியவர் பிரம்மன். இவருடைய புதல்வன் மாரீச்சி. இவரது பரம்பரையில் தோன்றிய அஜா என்பவனின் மகனே தசரதன் ஆவான். தசரதனுக்கு இராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் என்ற நான்கு மகன்கள் இருந்தனர். இஷ்வாகுவின் மகனாகிய ககுத்தன் பரம்பரையில் தோன்றியதாலும், ரகுவின் பரம்பரையில் தோன்றியதாலும் இராமனுக்குக் காகுத்தன் என்றும், ராகவன் என்றும் பெயர்கள் இருந்தன.
விஷ்ணு, இராவணன் என்னும் அரக்கனையும், மற் எல்லா அரக்கர்களையும் அழிக்க நினைத்தார். ஆகையால் தன்னை நான்கு பாகங்களாகப் பிரித்து, ராமன், பரதன், லட்சுமணன், சத்ருக்கனனாகப் பிறந்தார். ஒரு சமயம், விசுவாமித்திரர் தசரதனிடம் இருந்து ராட்சசர்களைக் கொல்ல இராமனுடைய உதவி வேண்டும் என்று கேட்டார். இராமன் ராட்சசர்களைப் போரில் வென்றதால், தெய்வீக அஸ்திரங்களை உபயோகிப்பது பற்றிச் சொல்லிக் கொடுத்தார். மிதிலை மன்னனாகிய ஜனகரிடமிருந்த சிவனுடைய வில்லை உடைத்து, ஜனகன் மகள் சீதையை மணந்தான் இராமன். தன்னுடைய மூத்த மகனாகிய இராமனுக்குப் பட்டம் கட்டவேண்டும் என ஏற்பாடுகள் செய்து வந்தான் தசரதன். அவனுடைய மனைவியாகிய கைகேயி தன் வேலைக்காரியாகிய மந்தரை என்ற கூனியின் பேச்சைக் கேட்டு இராமனுக்குப் பட்டம் கட்ட விடாமல் செய்தாள்.
இராமன் சிறிய பையனாக இருக்கும் பொழுது மந்தரையைக் காலை வாரி விட்டுத் தள்ளிக் கீழே விழச் செய்தான். அதிலிருந்து இராமன் மேல் வெறுப்புக் கொண்ட மந்தரை இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தசரதனிடம் அவள் பெற்றுள்ள முதல் வரத்தால் இராமனைப் பதினான்கு ஆண்டுகள் காட்டிற்கு அனுப்பவும், இரண்டாவது வரத்தால் பரதனுக்குப் பட்டம் சூட்டவும் ஏற்பாடு செய்தாள். முன்னொரு காலத்தில் சம்பராசுரனுடன் போர் தொடுத்த தேவர்கள், தசரதனைத் தங்கட்குத் துணையாக வருமாறு அழைத்தனர். அப்போரில் காயம்பட்ட தசரதனுக்குக் கைகேயி சிறப்பாகப் பணிவிடை புரிந்தாள். மகிழ்ந்த தசரதன், அவள் எப்பொழுது வேண்டுமானாலும் இரண்டு வரங்களைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி இருந்தான்.