• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அக்னி புராணம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இப்புராணம் பற்றி….

அக்னியால் வசிட்ட முனிவருக்கு உபதேசிக்கப் பட்டது இப்புராணம். ஆனால் புராணத்தினுள் சுதா முனிவர் சௌனகர் மற்றும் ரிஷிகளுக்கும் சொல்லியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யாகம், அக்னியின் பெருமை, விஷ்ணு அவதாரங்கள், சிவபெருமானை நோக்கிச் செய்யும் ஞானபூஜை, பிரபஞ்ச லட்சணம், தர்மசாஸ்திரம், அரசியல், பொருளாதாரம், வானியல், சாமுத்ரிகா லட்சணம், ராஜநீதி, ஆயுர்வேதம், வாஸ்துவித்யா, தாந்திரீக வித்தைகள், மந்திர சாஸ்திரங்கள், தனுர்வேதம், நாட்டிய சாஸ்திரம், காவிய சாஸ்திரம், புராண சாஸ்திரம் முதலானவை பேசப் பட்டுள்ளன. 8000 கிரந்தங்களை உடையது.

நைமிசாரண்ய வனத்தில் செளனகர் முதலிய ரிஷிகள் கூடியிருந்தனர். தீர்த்த யாத்திரைக்குச் சென்றிருந்த சுதா அங்கு வந்து சேர்ந்தார். மற்ற முனிவர்கள் சுதாவைப் பார்த்து, 'மனிதர்களுக்குப் பிரம்மஞானத்தைத் தருவது எது? மிகச் சிறந்த பொருள் எது?’ என்று வினவினார்.

சுதா சொல்லத் தொடங்கினார்: “நான் ஒருமுறை சுகர், பைலா மற்றும் பல முனிவர்களோடு சேர்ந்து வத்ரிகா ஆசிரமத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு வியாச முனிவரைச் சந்தித்தேன். நீங்கள் கேட்கும் இதே கேள்விகளை வியாச முனிவரிடம் கேட்டேன். அக்னி பகவானிடமிருந்து வசிட்டர் தாம் கேட்டதை வியாச முனிவருக்குச் சொல்ல, வியாச முனிவர் எங்களுக்குச் சொன்னதை இப்பொழுது உங்களுக்குச் சொல்லப் போகிறேன். மிகச் சிறந்தது என்பது விஷ்ணுவே ஆகும். அக்னி புராணம் மிகச் சிறந்தது என்பதற்குக் காரணம், பரப் பிரம்மத்தின் சாரத்தை நன்கு எடுத்துக் கூறுகிறது. ஆகவே, வியாசர் மூலம் நான் அறிந்த அக்னி புராணத்தை இப்பொழுது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.

அவதாரங்கள்

அவதாரம் என்றால் என்ன? உங்களுக்குத் தெரியுமா? விஷ்ணு பல சமயங்களில் இந்த பூலோகத்திற்கு வந்து மனிதர்களாகவும், பிறவாகவும் தோன்றுகிறார். இதைத்தான் அவதாரங்கள் என்று சொல்லுகிறோம். ஏன் இப்படி விஷ்ணு அவதாரங்கள் எடுக்க வேண்டும்? உலகத்தில் துன்பம் விளைவிப்பவர்கள், கொடியவர்கள் ஆகியவர்களை அழித்து, நல்லவர்களையும், தர்மத்தையும் நிலைநாட்டவே அவதாரங்கள் தோன்றுகின்றன.

விஷ்ணு இதுவரை எடுத்தவை ஒன்பது அவதாரங்கள் ஆகும். பத்தாவது அவதாரம் எதிர்காலத்தில் தோன்றப் போவதாகும். விஷ்ணு இதுவரை மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், கிருஷ்ணன், புத்தன் ஆகிய அவதாரங்கள் எடுத்துள்ளார். இனி வரப் போவது கல்கி அவதாரம் ஆகும்.

1. மச்ச அவதாரம்

அக்னி, வசிட்டரிடம் அவதாரங்கள் பற்றிச் சொல்லிய தாவது: வைவஸ்வத மனு வத்ரிகா ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தார். கிருத்தமாலா என்ற நதிக்குச் சென்று, தூய்மைப் படுத்திக்கொண்டு அர்க்கியம் செய்வதற்காக இரண்டு கைகளிலும் நீரை எடுத்துக் கொண்டார். கைக்குள் இருந்த தண்ணிரில் ஒரு சிறிய மீன் இருந்தது. ஆற்றுக்குள் போட வேண்டும் என்று மனு நினைத்தவுடன், அந்த மீன் பேசத் தொடங்கியது: “சிறிய மீனாகிய என்னை மறுபடியும் ஆற்றில் விட்டு விடாதே! பெரிய மீன்களும், முதலைகளும் என்னை விழுங்கிவிடும். என்னை ஒரு தனி இடத்தில் வைத்து வளர்ப்பாயாக’ என்று கூறியது. இதைக் கேட்ட மனு, அந்த மீனை ஒரு பாத்திரத்தில் வைக்க உடனே அந்த மீன் பெரிதாக வளர்ந்து கொண்டே போனது. வேறு எதிலும் அதனை வைக்க முடியாது என்று கருதிய மனு, ஒரு குளத்தில் சென்று மீனை விட்டார். உடனே மீன் மேலும் பெரிதாக வளர்ந்து குளத்தை விடப் பெரிதானது. இறுதியாகக் கடலில் கொண்டு விட்ட பொழுது அது மேலும் பெரிதாக வளர்ந்து மிகப் பெரிய அளவாக இருந்தது.

இதைக் கண்ட மனு, “நீ யார்? நீ விஷ்ணுவாகத்தான் இருக்க முடியும். எதற்காக இவ்வுருவில் வந்திருக்கிறாய்?" என்று கேட்டான். “இவ்வுலகில் கெட்டவற்றை அழித்து நல்லவற்றை நிலைநிறுத்தவே நான் வந்திருக்கிறேன். இன்னும் ஏழு நாட்களில், கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு இவ்வுலகம் முழுவதும் நீரால் நிரம்பி விடும். உயிர்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். நீ என்னைக் காப்பாற்றியதால், உனக்கு உதவி புரிகிறேன். உலகம் முழுவதும் நீரில் மூழ்கும் சமயத்தில் ஒரு படகு இங்கு வரும். நீ உன்னுடன் ஏழு ரிஷிகளையும் அழைத்துக் கொண்டு பயங்கரமான அந்த இரவைப் படகிலேயே கழிப்பாயாக! அத்துடன் உணவு தானியங்களை எடுத்துக் கொள். பாம்பினைக் கொண்டு அப்படகை என் கொம்பில் கட்டிக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டு மீன் மறைந்து விட்டது. அந்த மீன் கூறியவாறே அனைத்தும் நடந்தது. படகில் ஏறிக்கொண்டே மனு அந்த மீனை வேண்டிக் கொண்டதற்கு இணங்க, மீன் மச்சபுராணத்தை அவனுக்குக் கூறிற்று. இறுதியில் அந்தப் படகு இமயத்தின் உச்சியை அடைந்தது. உயிர்கள் அனைத்தும் மறுபடியும் பட்ைக்கப் பட்டன.

ஹயக்கிரீவன் என்னும் தானவன் வேதங்களையும் பிரம்ம ஞானத்தையும் திருடிச் சென்றான். மீன் அவதாரத்தில் இருந்த விஷ்ணு, ஹயக்கிரீவனைக் கொன்று வேதங்களை மீட்டார்.

2. கூர்ம அவதாரம்

நீண்ட காலத்திற்கு முன்னர், தேவாசுரப் போர் நடை பெற்றது. போரில் தோற்ற தேவர்கள் விஷ்ணுவை வேண்டினர். விஷ்ணு, பிரம்மன், மற்றும் தேவர்களிடம், "நீங்கள் அனைவரும் அசுரர்களுடன் ஒரு தற்காலிக உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்படி தேவ, அசுரர்கள் சேர்ந்து பாற்கடலைக் கடைய வேண்டும். தேவர்களுக்கு இதனால் லாபம் ஏற்படும்படி நான் பார்த்துக் கொள்வேன்” என்று கூறினார்.

இவ்வுடன்படிக்கையை இரு சாராரும் ஏற்றுக் கொண்டு பாற்கடலைக் கடையத் தயாராயினர். மந்தர மலையினை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடைய ஆரம்பித்தனர். சில மணி நேரத்தில் மந்தர மலை மிகுந்த கனத்தின் காரணமாகக் கடலில் மூழ்க ஆரம்பித்தது. உடனே விஷ்ணு ஆமையாக உருவெடுத்து, அம்மலையினைத் சிறிது நேரத்தில் காலகுதா என்ற விஷம் கடலினின்று வரவும் சிவபெருமான் அவ்விஷத்தை விழுங்கினார். இதனால் அவருடைய கழுத்துப் பகுதி நீலநிறமாக மாறியதால், சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் வந்தது. பிறகு வருணி என்ற தேவதை வெளியே வந்தாள். தேவர்கள் அவளை ஏற்றுக் கொண்டதால், 'சுரர்கள் என்றும் ராட்சசர்கள் அவளை ஏற்றுக் கொள்ள மறுத்ததால் அசுரர்கள் என்றும் பெயர் பெற்றனர். அந்த தேவதைக்குப் பின் பாரிஜாதம் என்னும் மரம் வந்தது. இந்திரனுடைய தோட்டத்தில் இடம்பெற்று, தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது. இதைத் தொடர்ந்து வந்த கெளஸ்துப மணி மாலை, விஷ்ணுவால் ஆபரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகு கபிலா என்னும் பசுவும், உச்சைஸ்ரவம் என்னும் குதிரையும், ஐராவதம் என்னும் யானையும் வந்தன. பிறகு அப்ஸரஸ்கள் வந்தனர். தொடர்ந்து இலட்சுமி தோன்றி விஷ்ணுவுடன் இரண்டறக் கலந்தாள்.

கடைசியாக தன்வந்தரி என்னும் தேவதை அமிர்தத்தை உடைய பாத்திரத்தைக் கையில் ஏந்தி வந்தாள். ஜம்பா என்னும் தைத்தியர் பாதி அமிர்தத்தை தேவர்களுக்குக் கொடுத்துவிட்டு மீதியை எடுத்துக் கொண்டு சென்றார். தைத்தியர்களைத் திசை திருப்புவதற்காக விஷ்ணு பெண் வடிவு எடுத்து, அவர் முன்னே சென்று நின்றார். அழகிய பெண்ணைக் கண்ட அசுரர்கள் அப்பெண்ணிடம், “நீ மிக அழகாக இருக்கிறாய்! இந்த அமிர்தத்தை எடுத்து எங்களுக்குக் கொடு!" என்றனர். பெண் வடிவிலிருந்த விஷ்ணு அதனை ஏற்றுக்கொள்வது போல் தலையசைத்து, அமிர்தத்தை தேவர்களுக்கு வழங்கி னார். அதற்குள் ராகு என்ற அசுரன், சந்திரனைப் போன்று வடிவெடுத்து தேவர்களுடன் அமர்ந்து அமிர்தத்தைச் சிறிது உண்டான். இதைப் பார்த்துச் சூரியனும் சந்திரனும் விஷ்ணுவிடம் முறையிட்டனர். உடனே விஷ்ணு, ராகுவின் தலையை வெட்டி விட்டார். ஆனால் ராகு சிறிது அமிர்தம் சாப்பிட்டிருந்த காரணத்தினால் அவன் சாகவில்லை. விஷ்ணுவை வேண்டி, "சூரியனையும், சந்திரனையும் தான் விழுங்கி விட வேண்டும்" என்ற வரத்தினைப் பெற்றான். சூரியன், சந்திரன் ஆகியோரை ராகு விழுங்குவதை முறையே சூரிய, சந்திர கிரகணங்களின் போது காணலாம்.

3. வராக அவதாரம்

விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமாக வருவது வராக அவதாரமாகும். காசிப முனிவனுக்கும், திதிக்கும் மகனாகப் பிறந்தான் ஹிரண்யாக்ஷா, இவன் அசுரர்களின் தலைவனாக இருந்தான். தவம் செய்து தன்னை யாரும் போரில் வெல்லக் கூடாது' என்ற வரத்தினை பிரம்மாவிடம் பெற்றான். இதனால் தேவர்களுடன் போர் தொடுத்து தேவருலகையும், வருணன், கடல் அரசன் ஆகியோரையும் வென்று நிலவுலகம், பாதாள உலகம் ஆகிய மூன்று உலகங்களுக்கும் தானே அரசனாக இருந்தான். ஹிரண்யாக்ஷா கடலுக்கடியில் உள்ள வருணனின் அரண்மனையில் இருந்து வந்தான். அதனால் பூமியைக் கடலுக்குக் கீழே கொண்டு சென்று ஆட்சி செய்து வந்தான். இதனால் கோபம் அடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டு, "தாங்கள் தேவருலகத்திலேயே இருக்க வேண்டும் என்றும் பூமியைக் கடலுக்கு மேலே கொண்டு வர வேண்டும்" என்றும் வேண்டினர். இதைக் கேட்ட விஷ்ணு வராக அவதாரம் எடுத்துக் கடலுக்கடியில் சென்றார்.

விஷ்ணு என்பதை அறியாத ஹிரண்யாக்ஷா, வராகத்துடன் போர் செய்தான். பல ஆயிரம் ஆண்டுகள் நடந்த போரின் முடிவில் வராகம் தன்னுடைய கொம்பினால் அசுரனைக் கொன்றது. தன்னுடைய கொம்புகளுக்கிடையே பூமியைக் கடலுக்கு மேலே தூக்கி வந்து வைத்தது. .

4. நரசிம்ம அவதாரம்

ஹிரண்யாக்ஷா என்ற அசுரனுக்கு, ஹிரண்யகசிபு என்ற சகோதரன் இருந்தான். தன்னுடைய அண்ணன் கொல்லப்பட்ட விஷயம் அறிந்து, விஷ்ணுவைக் கொல்ல வேண்டும் என்று சபதம் கொண்டிருந்தான். அதற்காகப் பிரம்மனை வேண்டிக் கடுந்தவம் புரிந்தான். அவனுடைய தவத்தைக் கண்டு மகிழ்ந்த பிரம்மன், “என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார். அதுகேட்ட ஹிரண்யகசிபு, ‘ஐயனே! யாராலும் வெல்ல முடியாத அரசனாக நான் இருக்க வேண்டும். இரவிலோ, பகலிலோ என்னை யாரும் கொல்லக் கூடாது. மனிதனாலோ, விலங்கினாலோ எனக்கு இறப்பு ஏற்படக் கூடாது. ஆகாயத்திலோ, நீரிலோ, பூமியிலோ நான் கொல்லப்படக் கூடாது" என்ற வரத்தைக் கொடுக்குமாறு வேண்ட, பிரம்மனும் அப்படியே கொடுத்தார். பிரமனின் வரம் பெற்ற ஹிரண்யகசிபு, தேவர்களை விரட்டி விட்டு, மூன்று உலகங்களையும் தானே ஆண்டு வந்தான்.

ஹிரண்யகசிபுவிற்கு பிரகலாதன் என்ற மகன் இருந்தான். விஷ்ணுவின் மீது பெரிதும் பக்தி கொண்டவன். விஷ்ணுவைக் கொல்ல வேண்டும் என்று உறுதி கொண்டிருந்த அசுரன், தன் மகன் விஷ்ணு பக்தனாக இருப்பதை அறவே வெறுத்தான். எவ்வளவோ சொல்லியும், பிரகலாதனை மாற்ற முடியவில்லை. கோபம் கொண்ட ஹிரண்யகசிபுதன் மகனைக் கொல்வதற்காகப் பல வழிகளில் முயன்றும், ஒவ்வொரு முறையும் விஷ்ணுவால் காப்பாற்றப்பட்டான் பிரகலாதன். தேவருகிலிருந்து விரட்டப்பட்ட தேவர்கள் விஷ்ணுவை வேண்டினர். விஷ்ணுவும், இதற்கு ஒரு ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.

ஒருநாள், தன் மகன் பிரகலாதனை அழைத்த ஹிரண்யகசிபு, "மகனே! ஒவ்வொரு முறை நான் உன்னைக் கொல்லுவதற்கு முயற்சித்தும், நீ அதிலிருந்து தப்பிவிட்டாய். இது எவ்வாறு நிகழ்ந்தது?” என்று வினவ, உடனே பிரகலாதன், "தந்தையே! ஒவ்வொரு முறையும் விஷ்ணு என்னைக் காப்பாற்றுகிறார். விஷ்ணு எங்கும் நிறைந்திருக்கிறார்” என்று கூறினான்.

இதனால் கடுங்கோபம் கொண்ட ஹிரண்யகசிபு ஒரு தூணினைக் காட்டி மகனிடம், "இதனுள்ளும் உன்னுடைய விஷ்ணு இருக்கின்றாரா?” என்று வினவ, மகனும், ஆம் என்று சொன்னான். "அப்படியானால் நான் இந்தத் துணினை எட்டி உதைக்கிறேன். உன்னுடைய விஷ்ணு வருகின்றாரா என்று பார்க்கலாம்” என்று துணினை எட்டி உதைத்தான். இரண்டாகப் பிளந்த அத் தூணிலிருந்து மனித உடலுடனும், சிங்கத்தின் தலையுடனும் நரசிம்ம அவதாரமாக வெளிவந்த விஷ்ணு, அசுரனைத் தன்னுடைய தொடையின் குறுக்கே படுக்க வைத்து, தன்னுடைய கூரிய நகங்களால் ஹிரண்யகசிபு நெஞ்சினைக் கிழித்துக் கொன்றார். இறுதியில் பிரகலாதனை அரசனாக நியமித்து விட்டு தேவர்களைத் தேவருலகத்திற்கு அனுப்பி வைத்தார் விஷ்ணு.

5. வாமன அவதாரம்

பிரகலாதனின் பேரனாகப் பிறந்தவன் பலி. மிகுந்த பலசாலியாகவும் வீரமுள்ளவனாகவும் திகழ்ந்த பலி அசுரர்களின் தலைவனாக இருந்தான். அப்பொழுது, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில், தேவர்கள் தோல்வி அடைந்தனர். உடனே விஷ்ணுவிடம் சென்று வேண்டினர். விஷ்ணுவும் அவர்களுக்கு உதவுவதாக உறுதி கூறினார்.

காசிப முனிவருக்கும், அதிதிக்கும் மகனாக அவதரித்தார் விஷ்ணு. குள்ளமான உருவத்தை உடையவராக இருந்தார். பலிச் சக்கரவர்த்தி மிகப் பெரிய யாகம் ஒன்றினுக்கு ஏற்பாடு செய்தான். அந்த யாகத்தின் பொழுது, யார் வரம் கேட்டாலும் வழங்கப்படும் என்று அறிவித்தான். யாகத்தில் கலந்து கொண்ட குள்ளன், வேதங்களை மிக அழகாக எடுத்துக் கூறினான். இதனால் மனம் மகிழ்ந்த பலிச் சக்கரவர்த்தி, அச் சிறுவனுக்கு ஏதேனும் வரம் அளிக்க விரும்பினான். பலிச் சக்கரவர்த்தியின் குருவாகிய சுக்ராச்சாரியார் இதில் சந்தேகம் கொண்டு, பலிச் சக்கரவர்த்தியைத் தடுத்தார். தான் வாக்குக் கொடுத்தபடியே நடந்து கொள்ள வேண்டும் என்றும், அதனின்று பின்வாங்க மாட்டேன் என்றும் கூறிய அரசன், குள்ளனை நோக்கி, “சிறுவனே! உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்” என்று கூறினான். வரத்தினைக் கொடுப்பதற்கு முன் புனித நீரைக் கொண்டு சிறிய சடங்கு செய்யப்பட வேண்டி இருந்தது. வரம் கொடுப்பதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று நினைத்த சுக்ராச்சாரியார், நீர் வைத்திருந்த பாத்திரத்தின் உள்ளே சென்று, யாரும் அதிலிருக்கும் நீரை எடுக்க முடியாதபடி, அந்தப் பாத்திரத்தை இறுக்க மூடிக் கொண்டார். அப் பாத்திரத்தில் உள்ள நீரை எடுக்க அதனை ஒரு குச்சியால் துளைத்தான், குள்ளன். அக்குச்சியானது. பாத்திரத்தின் உள்ளே அமர்ந்திருந்த சுக்ராச்சாரியாரின் கண்ணைக் குத்தியதால் அவருக்கு அன்று முதல் ஒரு கண்ணே இருந்தது.

பலிச் சக்கரவர்த்தியைப் பார்த்த குள்ளன், “அரசே! என்னுடைய குருவிற்கு தட்சணை கொடுப்பதற்காக என்னுடைய மூன்று அடியில் அடங்கியிருக்கும் மண்ணைத் தரவேண்டும்” என்று கேட்க அரசனும் ஒப்புக் கொண்டான். குள்ளன் உடனே மிகப் பெரிய உருவெடுத்து ஒர் அடியினைக் கீழே வைக்க, அது பூலோகம் முழுவதையும் அடைத்துக் கொண்டது. பலியிடம் இருந்து பெற்றுக் கொண்ட இம் மூன்று உலகங்களையும் இந்திரனுக்கு வழங்கினார். குள்ளனாக அவதாரம் எடுத்திருந்த விஷ்ணு, வேறு எங்கும் செல்ல முடியாத பலி அரசன் பாதாள லோகம் செல்ல முற்படுகையில் அவனைத் தடுத்து, அவன் பெருந்தன்மையைப் பாராட்டி, “பிற்காலத்தில் இந்திரன் என்ற பதவியை வகிப்பாய்!” என்று பலி அரசனுக்கு வரம் கொடுத்தார்.

6. பரசுராம அவதாரம்

வர்ணங்களில் இரண்டாவது இடத்தைப் பெறும் சத்ரியர்கள் ஆயுதம் ஏந்தி உலகைக் காக்க வேண்டியவர்கள். பிராமணர்கள் வேத, சாஸ்திரங்களைப் படிப்பது, யக்ஞம் முதலியவற்றைச் செய்வது போன்ற கடமைகளை ஆற்ற வேண்டும். ஒரு சமயம் சத்ரியர்கள் மிகவும் ஆணவமுற்று, பல கொடுமைகளைச் செய்தனர். அச்சமயத்தில் விஷ்ணு, ஜமதக்கினி முனிவருக்கும் ரேணுகாவிற்கும் மகனாக அவதரித்தார். பிருகு முனிவரின் பரம்பரையில் வந்ததால், பரசுராமனுக்கு பார்கவா என்ற பெயரும் வழங்கப்பட்டது. பிராமணர்களைக் காப்பாற்றுவதும், சத்ரியர்களின் ஆணவத்தை அடக்குவதும் பரசுராமனின் வேலையாக இருந்தது.

தத்தாத்ரேய முனிவரிடம் எல்லா வரங்களும் பெற்ற கார்த்தவீரியன், ஆயிரம் கைகளை உடையவனாகவும், மூவுலகை ஆள்பவனாகவும் இருந்தான். ஒரு நாள் கார்த்த வீரியன் வேட்டைக்குச் சென்று திரும்பும் வழியில் களைப்பின் காரணமாக ஜமதக்கினி முன்ரிவரின் ஆசிரமத்தில் அழைக்கப் பட்டான். ஜமதக்கினி முனிவரிடம் காமதேனு என்ற பசு இருந்தது. முனிவர் கேட்ட அனைத்தையும் அப்பசு வழங்கியது. ஆதலால் களைப்பாக இருந்த கார்த்த வீரியனுக்கும், அவனுடைய சேனைகளுக்கும் அறுசுவை விருந்து படைத்தார் முனிவர். காமதேனுவைக் கண்டு மிகவும் விருப்பம் கொண்ட கார்த்தவீரியன், அதனைக் கொடுக்குமாறு முனிவரிடம் கேட்க, அவர் மறுத்து விட்டார். கோபம் கொண்ட கார்த்தவீரியன் அப்பசுவைத் திருடிச் சென்றான். இதனால் கார்த்தவீரியனுக்கும் பரசுராமனுக்கும் போர் நடந்தது. கார்த்தவீரியன் தலையினை வெட்டி, காமதேனுப் பசுவை மீட்டான் பரசுராமன்.

சில காலத்திற்குப் பின்பு, கார்த்தவீரியனின் புதல்வர்கள், பரசுராமன் இல்லாத பொழுது ஜமதக்கினி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து அவரைக் கொன்றனர். இதனால் கடுங் கோபம் கொண்ட பரசுராமன் இருபத்தியோரு தலைமுறை சத்ரியர்கள் அனைவரையும் கொன்று குவித்தான். இறுதியில் காசிப முனிவரிடம் உலகை ஒப்படைத்து விட்டு, மகேந்திர மலைக்குச் சென்று வாழ்ந்தான்.

7. இராமாவதாரம்

விஷ்ணுவின் கொப்பூழில் இருந்து தோன்றியவர் பிரம்மன். இவருடைய புதல்வன் மாரீச்சி. இவரது பரம்பரையில் தோன்றிய அஜா என்பவனின் மகனே தசரதன் ஆவான். தசரதனுக்கு இராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் என்ற நான்கு மகன்கள் இருந்தனர். இஷ்வாகுவின் மகனாகிய ககுத்தன் பரம்பரையில் தோன்றியதாலும், ரகுவின் பரம்பரையில் தோன்றியதாலும் இராமனுக்குக் காகுத்தன் என்றும், ராகவன் என்றும் பெயர்கள் இருந்தன.

விஷ்ணு, இராவணன் என்னும் அரக்கனையும், மற் எல்லா அரக்கர்களையும் அழிக்க நினைத்தார். ஆகையால் தன்னை நான்கு பாகங்களாகப் பிரித்து, ராமன், பரதன், லட்சுமணன், சத்ருக்கனனாகப் பிறந்தார். ஒரு சமயம், விசுவாமித்திரர் தசரதனிடம் இருந்து ராட்சசர்களைக் கொல்ல இராமனுடைய உதவி வேண்டும் என்று கேட்டார். இராமன் ராட்சசர்களைப் போரில் வென்றதால், தெய்வீக அஸ்திரங்களை உபயோகிப்பது பற்றிச் சொல்லிக் கொடுத்தார். மிதிலை மன்னனாகிய ஜனகரிடமிருந்த சிவனுடைய வில்லை உடைத்து, ஜனகன் மகள் சீதையை மணந்தான் இராமன். தன்னுடைய மூத்த மகனாகிய இராமனுக்குப் பட்டம் கட்டவேண்டும் என ஏற்பாடுகள் செய்து வந்தான் தசரதன். அவனுடைய மனைவியாகிய கைகேயி தன் வேலைக்காரியாகிய மந்தரை என்ற கூனியின் பேச்சைக் கேட்டு இராமனுக்குப் பட்டம் கட்ட விடாமல் செய்தாள்.

இராமன் சிறிய பையனாக இருக்கும் பொழுது மந்தரையைக் காலை வாரி விட்டுத் தள்ளிக் கீழே விழச் செய்தான். அதிலிருந்து இராமன் மேல் வெறுப்புக் கொண்ட மந்தரை இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தசரதனிடம் அவள் பெற்றுள்ள முதல் வரத்தால் இராமனைப் பதினான்கு ஆண்டுகள் காட்டிற்கு அனுப்பவும், இரண்டாவது வரத்தால் பரதனுக்குப் பட்டம் சூட்டவும் ஏற்பாடு செய்தாள். முன்னொரு காலத்தில் சம்பராசுரனுடன் போர் தொடுத்த தேவர்கள், தசரதனைத் தங்கட்குத் துணையாக வருமாறு அழைத்தனர். அப்போரில் காயம்பட்ட தசரதனுக்குக் கைகேயி சிறப்பாகப் பணிவிடை புரிந்தாள். மகிழ்ந்த தசரதன், அவள் எப்பொழுது வேண்டுமானாலும் இரண்டு வரங்களைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி இருந்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இப்பொழுது தசரதனைக் கண்ட கைகேயி இந்த இரண்டு வரங்களையும் கேட்டுப் பெற்றாள்.

இராமனைக் காட்டுக்கு அனுப்ப தசரதன் மறுத்து விட்டான். இதனை அறிந்த இராமன் தானே முன்வந்து காட்டுக்குப் போவதாகச் சொல்லி விட்டு, இலக்குவனுடனும் சீதையுடனும் காட்டுக்குப் புறப்பட்டான். அந்த நேரத்தில் பரதனும் சத்ருக்கனனும் மாமன் வீட்டிற்குச் சென்று இருந்தார்கள். இராமன் பிரிவைத் தாங்காத தசரதன் இறந்து விட்டான். பரதனுக்கு இச்செய்தியைச் சொல்லி அனுப்பி அயோத்திக்கு வரவழைத்தார்கள். நடந்ததை அறிந்த பரதன் பட்டத்தை ஏற்க மறுத்து, காட்டிற்குச் சென்று இராமனை மீண்டும் வருமாறு அழைத்தான். இராமன் மறுத்து விடவே, அவனுடைய பாதுகைகளைக் கொண்டு வந்து அயோத்திக்கு வெளியே நந்திக் கிராமத்தில் தங்கி, சிம்மாசனத்தில் பாதுகைகளை வைத்துவிட்டு இராமனின் பிரதிநிதியாக இருந்து அரசாட்சி செய்தான்.

காடு சென்ற இராமன், குகன் என்ற அரசனுடைய எல்லைக்குள் சென்று அவனோடு நட்புக் கொண்டு, ஜானவி நதியைக் கடந்து, பிரயாகை வந்து, பரத்துவாசர் ஆசிரமத்தில் தங்கி, பிறகு சித்திரக்கூட மலைக்குச் சென்று, அங்குள்ள பஞ்சவடி என்ற அழகிய இடத்தில் பர்ணசாலை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தான். அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த சூர்ப்பணகை என்ற அரக்கி இவர்களைக் கண்டு, இராமன் மேல் ஆசை கொண்டு பேச இலக்குவன் அவள் மூக்கையும் காதுகளையும் வெட்டி விட்டான். மூக்கை இழந்த சூர்ப்பனகை தன் தமையன் கரன் என்பவனிடம் முறையிட்டாள். பதினாயிரம் படையுடன் வந்த கரன் இராமனிடம் படைகளை இழந்து தானும் கொல்லப்பட்டான். இதை அறிந்த சூர்ப்பணகை மற்றொரு தமையனாகிய இராவணனிடம் சென்று முறையிட்டாள். இராவணன் மாரீசனைப் பொன் மான் வடிவுடன் பர்ணசாலை எதிரே உலவுமாறு கட்டளை இட்டான். சீதையின் விருப்பப்படி பொன் மானை விரட்டிக் கொண்டு இராம இலக்குவர் போய்விட்டனர். சீதை தனியே இருப்பதை அறிந்த இராவணன் அவளைக் கவர்ந்து செல்லும் பொழுது, ஜடாயு என்ற கழுகின் வேந்தன் அதைத் தடுக்க முயல, இராவணனால் கொல்லப்பட்டான். சீதையை எடுத்துச் சென்று அசோக வனத்தில் சிறை வைத்தான் இராவணன். மீண்டு வந்த இராம இலட்சுமணர் சீதையைக் காணாததால் பல இடங்களில் தேடிச் சென்று சுக்ரீவனை துணைக்குக் கொண்டு, அவன் தமயன் வாலியைக் கொன்று, குரங்குப் படையுடன் கடற்கரை அடைந்த இராமன், சேதுவுக்கும் இலங்கைக்கும் ஒரு கல் பாலம் அமைத்து இலங்கைக்குச் சென்று இராவணன் தம்பி கும்பகர்ணன், அவன் மகன் இந்திரஜித்தன். இராவணன் அனைவரையும் கொன்று சீதையை மீட்டு வந்து முடி சூடிக்கொண்டான். தம்பி சத்ருக்கனனைக் கொண்டு லவணன் என்ற அசுரனைக் கொன்று வருமாறு கட்டளை இட்டான். சத்ருக்கனன் அப்படியே செய்து அந்த நாட்டில் மத்ரா என்ற நகரை ஸ்தாபித்தான். ஜைனுசா என்ற கந்தர்வன் மக்களைக் கொடுமைப்படுத்தியதால் இராமன் உத்தரவின்படி பரதன் ஜைனுசாவுடன் போர் தொடுத்து அவனை வென்று அவன் நாட்டை இரு கூறுகளாகப் பிரித்து தக்ஜா என்ற மூத்த மகனுக்குத் தக்புசீலா என்ற பகுதியையும், புஷ்கரன் என்ற இரண்டாவது மகனுக்குப் புஷ்கரவதி என்ற பகுதியையும் பிரித்துக் கொடுத்து ஆளுமாறு செய்தான். இராமன் பிள்ளைகளாகிய லவ, குசர்களோடு பதினோராயிரம் ஆண்டுகள் நாட்டைச் சிறந்த முறையில் ஆட்சி செய்து உயிர் துறந்தான்.

அக்னி புராணத்தில் கண்டுள்ளபடி இராமாயணக் கதை இதுவாகும். இக்கதையை நாரதரிடம் கேட்டு வால்மீகி எழுதினார். இராமனாக விஷ்ணு அவதரித்தது ஏழாவது அவதாரம் ஆகும்.

8. கிருஷ்ண அவதாரம்

பிரம்மனின் மகனாகிய அத்ரி முனிவரின் வழியில் தோன்றியவன் யயாதி மன்னன். அவனது இரு மனைவியருள் தேவயானியின் மகனாகிய யாதுவின் பரம்பரையில் வந்தவர்களே யாதவர்கள். யாதவ குலத்தில் தோன்றிய வசுதேவருக்கும், தேவகிக்கும் எட்டாவது மகனாக விஷ்ணு அவதரித்தார். கிருஷ்ணன் என்ற பெயர் சூட்டப்பெற்ற அவர் தேவகியின் சகோதரனாகிய கம்சனின் கொடுமைகளுக்குப் பயந்து நந்தகோபர்- யசோதையிடம் வளர்ந்தார்.

நந்தனிடம் வளர்ந்து வந்த பலதேவனையும், கிருஷ்ண னையும் கொல்வதற்காகக் கம்ச மன்னன் பூதனை என்ற அரக்கியையும் அனுப்பினார். அவளைக் கிருஷ்ணன் கொன்றான். யமுனை நதியில் இருந்த காளிங்கன் என்ற பாம்பையும், அரிஷ்டா, விரிஷபா, கேசி, தேனுகா என்ற பல அரக்கர்களையும் கிருஷ்ணன் கொன்றார். இந்திரனை வழிபடுவதை நிறுத்திய கிருஷ்ணன், இந்திரன் கோபம் கொண்டு கோகுல மக்களைக் கொல்வதற்காக அனுப்பிய கொடிய மழையினின்றும் காப்பாற்றினார். கோவர்த்தன மலையினைத் தூக்கி, அதன் கீழே மக்கள் மழைக்கு ஒதுங்கி நிற்கும்படி செய்து அவர்களைக் காப்பாற்றியதால் கோவர்த்தன் என்ற பெயர் பெற்றார்.

தன் சகோதரி தேவகியின் எட்டாவது மைந்தனால் தனக்குச் சாவு நேரிடும் என்பதை அறிந்த கம்ச மன்னன் கிருஷ்ணனைக் கொல்லப் பல வழிகளில் முயன்றான். மதுராவிற்குக் கிருஷ்ண பலராமரை வரவழைத்து, குவலயா பீடம் என்ற மதம் பிடித்த யானை மூலமும், சானுரன், முஷ்டிகன் என்ற மல்யுத்த வீரர்களை அனுப்பியும் கொல்ல ஏற்பாடு செய்தான். அம்முயற்சியில் கம்சனால் வெற்றிபெற முடியவில்லை. இறுதியில் கிருஷ்ணன் கம்சனைக் கொன்றார்.

கம்சனின் மனைவியின் தந்தையாகிய ஜராசந்தன், கம்சன் இறந்த செய்தி கேட்டு யாதவர்களைக் கொடுமைப்படுத்தினான். கிருஷ்ணனுடன் நீண்டகாலம் யுத்தம் செய்து முடிவில் இறந்து போனான். பிறகு யாதவர்கள் கிருஷ்ணன் கூறியபடி துவாரகை என்ற நகரத்தைத் தோற்றுவித்து அங்கு குடியேறினர்.

நரகாசுரன் என்ற அசுரன் தேவர்கள், கந்தர்வர்களின் மகளிர் பதினாயிரம் பேரைச் சிறை வைத்திருந்தான். இவர்கள் அனைவரையும் மீட்டு கிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டார். பஞ்சஜன என்ற தைத்திரியனையும், காலயவன னையும் கொன்றது கிருஷ்ணனின் வீரத்தின் எடுத்துக்காட்டுகள்.

கிருஷ்ணனுக்குச் சம்பா, பிரத்யும்னன் என்ற பிள்ளைகளும் இருந்தனர். இவர்களில் பிரத்யும்னனை சம்பரா என்ற அசுரன் கவர்ந்து சென்று கடலில் வீசிவிட்டான். அக் குழந்தையை ஒரு மீன் விழுங்கி விட்டது. அம்மீனை ஒரு மீனவன் சம்பராவின் வீட்டிற்குக் கொண்டு வந்தான். அந்த மீனை வெட்டிய மாயாவதி என்ற பெண், மீனின் வயிற்றில் உள்ள குழந்தையைப் பார்த்து அக்குழந்தையைத் தானே வளர்த்து வந்தாள். பெரியவனாக வளர்ந்த பிரத்யும்னன் சம்பராசுரனைக் கொன்று, மாயாவதியைத் திருமணம் செய்து கொண்டான். இவர்களுக்கு மகனாகப் பிறந்தான் அனிருத்தன். வலியின் மகனாகிய வாணாவின் மகள் உஷாவை, கந்தர்வ மணம் செய்து கொண்டான் அனிருத்தன். தன் மகள் அனிருத்தனை மணம் செய்து கொண்டதை அறிந்த வாணா, கடுங்கோபம் கொண்டு அனிருத்தாவுடன் போர் தொடுத்தான். கிருஷ்ணன், பலராமன், பிரத்யும்னன் ஆகியோர் அனிருத்தன் பக்கமும், சிவபெருமான், நந்திதேவர், கார்த்திகேயன் ஆகியோர் வாணாவின் பக்கமும் இருந்து போர் புரிந்தனர். முடிவில் கிருஷ்ணன் வாணாவின் ஆயிரம் கைகளை வெட்டி எறியும் பொழுது, சிவபெருமான் இடையிட்டு இரண்டு கைகளை விட்டு விடும்படி கூறவே, கிருஷ்ணனும் அதனை ஒப்புக் கொண்டார்.

மேலே கூறப்பட்ட கதைகள் அனைத்தும் அக்னி புராணத்தில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. ஆயினும், எட்டாவது அவதாரமாகிய கிருஷ்ணன் பற்றிய கதைகள் மகாபாரதத்திலும் கூறப்பட்டு இருப்பதால், அக்னி புராணம் இனி பாரதக் கதையினைக் கூறுகிறது.

மகாபாரதம்

யயாதி மன்னன் பரம்பரையில் வந்தவனாகிய குரு வம்சத்தைச் சேர்ந்தவன் சந்தனு அரசன். சந்தனுவும் கங்கையும் மணம் புரிந்து, அவர்களுக்கு பீஷ்மர் மகனாகப் பிறந்தார். சந்தனு அரசன், சத்யவதி என்பவளையும் மணந்து சித்ரங்கதா, விசித்ரவீரியன் என்ற இரு மகன்களைப் பெற்றான். சித்ரங்கதா இளமையிலேயே இறந்து போனதால், காசி அரசனை வென்று அவனுடைய மகள்களாகிய அம்பிகா, அம்பாலிகா இருவரையும் தன் சகோதரன் விசித்ரவீரியனுக்கு மணம் செய்து வைத்தார் பீஷ்மர். விசித்ரவீரியனுக்குப் பிள்ளைகள் இல்லாமலே இறந்து போனவுடன், வியாசதேவர் அஸ்தினா புரத்திற்கு அழைக்கப்பட்டார். வியாசதேவருக்கும் அம்பிகா விற்கும் பிறந்த பிள்ளை திருதராஷ்டிரன் என்றும், வியாச தேவருக்கும் அம்பாலிகாவிற்கும் பிறந்த பிள்ளை பாண்டு என்றும் அழைக்கப்பட்டனர். திருதராஷ்டிரன் காந்தாரியை மணந்து, துரியோதனன் முதலிய நூறு பிள்ளைகளைப் பெற்றான். பாண்டு, குந்தியை மணந்து யுதிஷ்டிரன், பீமன், அருச்சுனன் என்ற மக்களையும், மாத்ரியை மணந்து நகுலன், சகாதேவன் என்ற மக்களையும் பெற்றான். பாண்டுவின் மகன்களாகிய பஞ்ச பாண்டவர்களை அழிக்க துரியோதனன் பல வழிகளில் முயன்றான். அரக்கு மாளிகைகளில் அவர்களைக் கொல்ல ஏற்பாடு செய்தான், துரியோதனன். அங்கிருந்து தப்பிய பாண்டவர்கள், ஏகசக்ரா என்ற இடத்தில் பிராமணர்களைப் போன்று மாறு வேடத்தில் உலவினர். பாஞ்சால நாட்டு மன்னனைத் தோற்கடித்து அவன் மகளாகிய பாஞ்சாலியை ஐவரும் மணந்து கொண்டனர்.

பாண்டவர்கள் உயிருடன் இருப்பதை அறிந்த துரியோதனன், வேறு வழியின்றி அவர்களுக்குப் பாதி ராஜ்ஜியத்தை விட்டுக்கொடுத்தான். அக்னி தேவன் மூலம் தெய்வீக ஆயுதங்களைப் பெற்றான் அருச்சுனன். குருவாகிய துரோணர் அவனுக்குப் பல வித்தைகளைக் கற்றுக் கொடுத்தார்.

ஒரு சமயம், பாண்டவர்கள் ராஜசூய வேள்வி நடத்தி, பல அரசுகளையும், பெரும் பொருட்களையும் பெற்றனர். இதனால் பொறாமை அடைந்த துரியோதனன் தன் மாமனாகிய சகுனியின் துணையுடன், சூதாட்டத்தில் பாண்டவர்களை வெற்றி கொண்டான். தோல்வியின் காரணமாகப் பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும், ஒராண்டு அஞ்ஞாத வாசமும் ஏற்க வேண்டி வந்தது. திரெளபதியுடன் பன்னிரண்டு ஆண்டு காலம் வனவாசம் முடித்த பஞ்ச பாண்டவர்கள், ஒராண்டுக் காலம் மாறுவேடத்தில் வாழ, விராட மன்னன் அவைக்கு வந்தனர். கெளரவர்களுக்கும், விராட மன்னனுக்கும் நடந்த போரில், பாண்டவர்கள் விராட மன்னனுக்கு உறுதுணையாக நின்று வெற்றி பெற்றனர். ஒராண்டுக் காலம் முடிந்த பின்னர், விராட அரசன் மகளாகிய உத்தரையை, அருச்சுனன் மகனாகிய அபிமன்யுவிற்கு மணம் முடித்தனர்.

மீண்டும் அஸ்தினாபுரம் திரும்பிய பாண்டவர்கள் தங்களுக்குச் சேரவேண்டிய அரசாட்சியைக் கேட்க, துரியோதனன் மறுத்தான். கிருஷ்ணனே இவர்களுக்குத் தூதாகச் சென்று, ஐந்து கிராமங்களையேனும் பாண்டவர் களுக்குக் கொடுக்கும்படி சொல்ல, துரியோதனன் அதற்கும் மறுத்து விட்டான். குருக்ஷேத்திரம் என்ற இடத்தில் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் போர் துவங்கியது. வயதில் மூத்தவர்களாகிய பீஷ்மர், குருவாகிய துரோணர் முதலியோர் கெளரவர்கள் பக்கம் இருந்து போர் புரிவதைக் கண்ட அருச்சுனன், போர் செய்தவற்குச் சற்றுத் தயங்கினான். அருச்சுனனுக்குக் கிருஷ்ணன் கூறிய உபதேசங்களே 'பகவத் கீதை' எனப்படும். இதில் கிருஷ்ணன் அருச்சுனனைப் பார்த்து, “அருச்சுனா பீஷ்மர், துரோணர் இப்போரில் இறந்து விடுவார்களோ என்று கலங்க வேண்டாம். இறப்பு என்பது அவர்களின் உடலுக்கு மட்டுமே. ஆன்மாவிற்கு என்றுமே இறப்பு இல்லை. மனிதன் இறந்தவுடன் அவனது ஸ்தூல சரீரத்தை விட்டு வெளியே வரும் ஆன்மா, வேறோர் உடம்பிற்குள் புகுந்து விடுகிறது. ஆகையால் ஆன்மா என்றும் அழியாதது. ஆன்மாவும் பரமாத்மாவும் இரண்டறக் கலக்கும் பொழுது ஏற்படுவதே உண்மையான விடுதலை” என்றார்.

கிருஷ்ணனின் உபதேசத்தைக் கேட்ட அருச்சுனன், போர் செய்ய ஆரம்பித்தான். சிகண்டியின் உதவியுடன் பீஷ்மரை வென்றான். இருப்பினும், பீஷ்மர் உடனே சாகவில்லை. “நான் எப்பொழுது உயிரை விட வேண்டும் என்று விரும்புகிறேனோ, அப்பொழுதுதான் என் உயிர் பிரிய வேண்டும்” என்று ஒரு வரத்தைப் பெற்றிருந்தார் பீஷ்மர். அருச்சுனனால் தோற்கடிக்கப்பட்ட பீஷ்மர், பல நாட்கள் அம்புப் படுக்கையில் படுத்திருந்தார். விராட மன்னன், துருபதன் முதலிய மன்னர்கள் பலர் துரோணரால் கொல்லப்பட்டனர். போர் தொடங்கிய பதினைந்தாவது நாள், துரோணர் மகன் அசுவத்தாமன் கொல்லப்பட்டதாக ஒரு வதந்தி கிளம்பியது. மகன் இறந்த செய்தி கேட்ட துரோணர் தன் ஆயுதங்களை எல்லாம் கீழே போட்டுவிட்டு, மனம் கலங்கி நின்ற சமயத்தில், திருஷ்டத் தூய்மனால் கொல்லப்பட்டார். கர்ணன், அருச்சுனனால் கொல்லப்பட்டான்.

இறுதியில் பீமனுக்கும் துரியோதனனுக்கும், கதாயுதப் போர் நடந்தது. துரியோதனனின் தொடையினைக் கிழித்து, அவனைக் கொன்றான் பீமன். துரோணர் கொல்லப்பட்ட செய்தி அறிந்த அசுவத்தாமன் கடுங்கோபம் கொண்டான். நடுநிசியில், பாண்டவர்களின் பாசறையில் புகுந்த அசுவத் தாமன், திருஷ்டத்தூய்மனையும், திரெளபதியின் ஐந்து புதல்வர்களையும் கொன்றான். அசுவத்தாமனைப் பழிவாங்க வேண்டும் என்று கூறிய திரெளபதி அருச்சுனனை அசுவத்தாம னுடன் போர் புரியும்படிக் கூற இருவரும் தெய்வீக அஸ்திரங் களை ஏவினர். அவை பூமியை அழித்து விடும் என்பதனால் அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கூறப்பட்டது. அர்ச்சுனன் தன் அஸ்திரத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டான். ஆனால் அசுவத்தாமனால் திரும்பப் பெற முடியவில்லை. அது நேராக, அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கருவில் இருந்த குழந்தையைக் கொன்றது. இறந்த குழந்தைக்கு உயிர் கொடுத்துக் காத்தான் கிருஷ்ணன். அக் குழந்தையே பரிட்சித்து என்ற பெயர் பெற்றது.

யுத்தம் முடிந்தவுடன், யுதிஷ்டிரனுக்கு அரசனுடைய கடமைகள் அனைத்தையும் கற்பித்தார் பீஷ்மர். அதன் பிறகே அவர் இறந்து போனார். அரச பதவி பெற்ற யுதிஷ்டிரன் பல யாகங்கள் செய்து திறம்பட ஆட்சி செய்து வந்தான். சில காலங்களில் யாதவர்கள் அழிக்கப்பட்டு விட்டனர் என்று கேள்வியுற்று, தன் அரச பதவியைப் பரிட்சித்துவிடம் ஒப்படைத்து விட்டு, பல க்ஷேத்திரங்கள் சென்று இறுதியில் இறந்து போயினர். கிருஷ்ணன், பாண்டவர்களைத் தனது கருவியாக உபயோகித்து, கெட்டவைகளை அழித்து, நல்லவைகளை நிலை நிறுத்தினார். யாதவர்களும் அழியப் போவதை அறிந்த கிருஷ்ணன், பிரபாச என்ற க்ஷேத்திரத்தில் இறந்து போனான். கிருஷ்ணன் இறந்த பிறகு, அவரால் நிர்மாணிக்கப்பட்ட துவாரகை கடலில் மூழ்கியது.

9. புத்தரும் கல்கியும்

விஷ்ணு தன்னுடைய ஒன்பதாவது அவதாரமாக புத்த அவதாரம் எடுத்தார். இனி வரப் போவது பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம்.

பல வருடங்களுக்கு முன், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடுமையான போர் நடந்தது. அசுரர்கள் தேவர்களை வென்றனர். உடனே தேவர்கள் விஷ்ணுவிடம் பாதுகாப்புத் தேடி ஓடினர். விஷ்ணுவும் அவர்களிடம், “தேவர்களே! வீணாகக் கவலைப்பட வேண்டாம். மாய மோகா என்பவன் சுத்தோதனரின் மகன் புத்தனாகப் பிறப்பான்” என்று கூறினார்.

பல காலங்களுக்குப் பிறகு விஷ்ணுயாஷா என்பவனின் மகனாக, விஷ்ணு கல்கி அவதாரம் எடுப்பார். கல்கியின் குருவாக யக்ஞவல்கியர் இருப்பார். நான்கு வர்ணங்களும், நான்கு ஆசிரமங்களும் மீண்டும் நிர்மாணிக்கப்படும். மக்கள் புனிதமான வேதங்கள், சாத்திரங்களை மதித்துப் போற்றுவார்கள். புதிய சத்திய யுகம் தோன்றும். ஒவ்வொரு கல்பத்திலும், ஒவ்வொரு மன்வந்திரத்திலும் விஷ்ணு வெவ்வேறு வடிவங்களில் அவதரிப்பார். விஷ்ணுவின் பத்து அவதாரங்களைப் பற்றிக் கேட்டும், படித்தும் பயன் பெறுபவர்கள் சுவர்க்கத்தினை அடைவர்.

பிரபஞ்சம்

அக்னி, பிரபஞ்சம் தோன்றிய வரலாற்றை வசிட்டருக்குக் ஆகிய மூன்று தொழில்களையும் செய்தார். பிரபஞ்ச உற்பத்திக்கு முன்னர், எங்கும் பரப் பிரம்மமே நிறைந்திருந்தது. தொடக்கத்தில் பிரம்மாண்டத்தின் விதைகளை விஷ்ணு தூவ, அது மிகப் பெரிய பொன் முட்டை வடிவுடன் தோன்றிற்று. பிரம்மன் தன்னைத் தானே தோற்றுவித்துக் கொண்டு, அதனுள்ளேயே ஓராண்டு இருந்தார். பிறகு அந்த முட்டையை இரண்டாகப் பிளந்தார். மேல்பகுதி சொர்க்கமாகவும், கீழ்ப்பகுதி பூலோகமாகவும் ஆக்கப்பட்டது.

(இதன்பிறகு சொல்லப்பட்ட அக்னி புராணம் சொல்லும், பிரபஞ்ச உற்பத்திக் கதை ஏற்கெனவே பல புராணங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.)

பிரார்த்தனை செய்வது, கோயில் கட்டுவது, சிலை வடிப்பது எவ்வாறு ?

(அக்னி புராணம் பிரார்த்தனை செய்வது எப்படி, கோயில் கட்டுவது எப்படி, தெய்வ வடிவங்கள் செய்வது எப்படி என்பன பற்றியெல்லாம் விரிவாகப் பல அத்தியாயங்களில் கூறிச் செல்கிறது. அவை, பிரார்த்தனை பற்றிக் கூறும் பொழுது, மிக துணுக்கமான பல விஷயங்களைக் கூறுவதால் நூலின் சுருக்கம் கருதி மிகச் சுருக்கியேஇங்கு ததுள்ளோம்)

சிவன், விஷ்ணு, சூரியன் ஆகிய தெய்வங்களைப் பிரார்த்திக்கும் பொழுது, பொதுவாக எவ்வாறு பிரார்த்திக்க வேண்டும் என்று கூறுவதுடன், குறிப்பிட்ட தெய்வங்களைப் பிரார்த்தனை செய்யும் பொழுது அந்தத் தெய்வத்திற்குரிய சிறப்பான மந்திரங்களையும், அக்னி புராணம் கூறிச் செல்கிறது. பிரார்த்தனை தொடங்குவதற்கு முன் குளிக்க வேண்டும் என்று கூறுவதுடன், குளிக்கக் கூடப் பல முறைகளைக் கூறுகிறது அக்னி புராணம்.

கோயில் கட்டுதல்

ஒருவன் பொருள்களைக் கொண்டு கோயில் கட்ட வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்பினால் நூறு ஜென்மங்களில் செய்த பாவம் போகும். கோயில் கட்டுபவரின் மூதாதையர்கள் நரகத்திலிருந்து விடுபடுவர். ஒரு கோயில் கட்டுபவர் சுவர்க்கத்திற்குச் செல்வார். இரு கோயில்கள் கட்டுபவர் பிரம்ம லோகத்திற்கும், ஐந்து கோயில்கள் கட்டுபவர் சிவலோகத்திற்கும், பதினாறு கோயில் கட்டுபவர் பிறப்பினின்றும் விடுபடுவர். தானம் செய்வதினால் ஏற்படும் புண்ணியத்தைவிட, கோயில் கட்டுவதால் ஏற்படும் புண்ணியம் அதிகம்.

சிலை வடித்தல்

கோயில் கட்டுவதைவிட, ஒரு சிலை வடிப்பது அதிக புண்ணியம். தெய்வங்களின் சிலைகளை, நகரத்தை நோக்கிப் பார்க்கும்படியாக நிர்மாணிக்க வேண்டும். நகரத்துக்கு வெளியே பார்க்கும்படியாக அமைக்கக் கூடாது. இந்திரன் சிலை நகருக்குக் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்க வேண்டும். சண்டியின் சிலை நகருக்குத் தென்புறத்திலும், பிரம்மன் சிலை நகர் நடுவிலும் இருக்கவேண்டும். விஷ்ணுவின் சிலையை எங்கு வேண்டுமானாலும் அமைக்கலாம்.

விஷ்ணுவின் விதவிதமான சிலைகள், வேறுபட்ட வடிவங்களைக் கொண்டவை. உதாரணமாக, விஷ்ணுவின் பத்து அவதாரங்களைச் சிலையாக வடிக்கும்பொழுது, மச்ச அவதாரத்தில், மச்சம்
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஒரு மீனைப் போலவே இருக்க வேண்டும். கூர்ம அவதாரத்தில் கூர்மம் ஒர் ஆமை போலவும் இருக்க வேண்டும். ஆனால் வராக அவதாரத்தில், வராகத்திற்கு நான்கு கைகளும், அவற்றில் முறையே கதாயுதம், தாமரை, சங்கு, சக்கரம் ஆகியவை இருக்க வேண்டும். நரசிம்ம அவதாரத்தில் இரண்டு கைகளும், அவற்றில் சக்கரமும் கதாயுதமும் இருக்க வேண்டும். அவர் கழுத்தில் ஒரு மாலை அணிந்திருக்க வேண்டும். வாமன அவதாரத்தில் இரண்டு கைகளிலும் முறையே குடையும், குச்சியும் இருக்க வேண்டும். பரசுராம அவதாரத்தில் நான்கு கைகளும், அவற்றில் வில், அம்பு, வாள். கோடரி ஆகியவை இருக்க வேண்டும். இராமன் சிலைக்கு இரண்டு அல்லது நான்கு கைகளுடன் வடிக்கப் படலாம். நான்கு கைகளுடன் வடித்தால், முறையே அம்பு, வில், சங்கு, சக்கரம் இருக்க வேண்டும். பலராமன் சிலை நான்கு அல்லது இரண்டு கைகளுடன் இருக்க வேண்டும். நான்கு கைகளானால் கலப்பை, கதாயுதம், சங்கு, சக்கரம் ஆகிவற்றுடன் வடிக்க வேண்டும். கல்கி அவதாரமாயின், ஒரு பிராமணன் குதிரைமேல் அமர்ந்திருப்பது போலவும், கையில் வில், அம்பு, சங்கு வாள், சக்கரம் ஆகியவற்றை வைத்திருப்பது போலவும் வடிக்க வேண்டும். கிருஷ்ணனின் சிலை இரண்டு அல்லது நான்கு கைகளுடன் இருக்க வேண்டும். அவற்றில் முறையே கதாயுதம், சக்கரம், சங்கு ஆகியவை மூன்று கைகளிலும், நான்காவது கை வரத முத்திரையுடன் கீழ்நோக்கித் திறந்திருக்க வேண்டும். கிருஷ்ணனின் இருபுறங்களிலும் பிரம்மன், சிவன் ஆகியோரின் சிலை வடிக்கப்பட வேண்டும். பிரம்மனுக்கு நான்கு முகமும், நான்கு கைகளும், முன்பக்கம் முட்டிய வயிறுடன், தாடி, மற்றும் சடையுடன் கூடிய முடியுடனும் இருக்க வேண்டும். பிரம்மன் அன்னத்தின் மீது அமர்ந்திருப்பது போல் இருக்க வேண்டும். பிரம்மனின் இருபுறத்திலும் சரஸ்வதி, சாவித்ரி ஆகியோரின் சிலை அமைக்கப்பட வேண்டும்.

விஷ்ணுவின் சிலை எட்டுக் கைகள் உடையதாய் இருக்க வேண்டும். ஏழு கைகளில் முறையே வாள், கதாயுதம், அம்பு, வில், கேடயம், சக்கரம், சங்கு ஆகியவை இருக்க வேண்டும். எட்டாவது கை விரிந்து பரமளிப்பது போல் இருக்க வேண்டும். கருட வாகனத்தில் அமர்ந்திருப்பது போலவும், கருடனுக்கு எட்டுக் கைகளும் இருக்க வேண்டும். விஷ்ணுவின் வலப் புறத்தில் லட்சுமி, சரஸ்வதியின் சிலைகள் நிர்மாணிக்கப்பட வேண்டும். இலட்சுமியின் கைகளில் தாமரை மலரும், சரஸ்வதி வீணையை வைத்திருப்பது போலவும் வடிக்க வேண்டும். விஷ்ணுவின் விஸ்வரூப வடிவம் வடிக்கப்பட வேண்டும். இச்சிலைக்கு நான்கு தலைகளும், இருபது கைகளும் அமைக்கப்பட வேண்டும்.

சண்டியின் உருவம் இருபது கைகள் கொண்டதாக இருக்க வேண்டும். வலப்புறத்தில் உள்ள பத்துக் கைகளில் முறையே ஈட்டி, வாள், சிறிய சட்டி, சக்கரம், பாசக்கயிறு, கேடயம், டமாரம் மற்றும் ஏதேனும் இரண்டு ஆயுதங்கள் இருக்க வேண்டும். பத்தாவது கை வரமளிப்பது போல் அமைக்கப்பட வேண்டும். இடப்புறத்தில் உள்ள பத்துக் கைகளில் முறையே பாம்பு, நீண்ட தடி, கோடரி, அங்குசம், வில், மணி, கொடி, கதாயுதம், கண்ணாடி மற்றும் தடி இருக்கவேண்டும் சண்டியின் உருவத்திற்கு முன் கழுத்து அறுபட்ட எருமையின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். அசுரன் எருமையின் உடலில் இருந்து வெளிவருவது போல் அமைக்கப்பட வேண்டும். அரக்கர்களின் முடி, கண்கள், மாலை, ஆகியவை சிவப்பு வர்ணத்தில் இருக்கவேண்டும். அரக்கன் வாயிலிருந்து இரத்தம் வருவது போலவும், கைகளில் ஆயுதங்களுடனும் இருக்க வேண்டும். அரக்கனின் கழுத்தில் பாசக்கயிறு மாட்டப்பட்டு, சண்டி தேவியின் சிங்கம் எதிர்ப்பது போல் இருக்கவேண்டும். தேவியின் வலது கால் சிங்கத்தின் மீதும், இடது கால் அரக்கனின் முதுகின் மேலும் இருக்கும். சண்டிக்குச் சிலசமயம் பத்து, பதினாறு அல்லது பதினெட்டு கைகளும் வடிக்கப்படும்.

சிவலிங்கம் களிமண், மரம், இரும்பு, நவரத்தினங்கள், தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை, பாதரசம் ஆகியவற்றில் செய்யப்படலாம்.

தீர்த்த யாத்திரை இடங்கள்

ஒரு யாகம் செய்து ஏற்படும் புண்ணியத்திற்கு ஈடாக ஒர் இடத்திற்குத் தீர்த்த யாத்திரை செல்வது அமையும்.

புஷ்கரா என்னும் இடம் மிகச் சிறந்த தீர்த்தமாகக் கருதப்படுகிறது. இந்த இடத்திற்குச் செல்ல கார்த்திகை மாதம் சிறந்ததாகும். புஷ்கராவில் இன்னும் இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. அவை ஜம்புமார்க்கம், தண்டுலகாசிரமம் ஆகியவை. குருக்ஷேத்திரம் சிறந்த தீர்த்த யாத்திரை இடமாகும். சரஸ்வதி நதி, குருக்ஷேத்திரத்திற்கு அருகில் ஒடுகிறது. இந்நதியில் நீராடினால் ஒருவர் பிரம்மலோகம் அடைய முடியும்.

கங்கை நதி பாய்ந்து செல்லும் இடங்கள் அனைத்தும் புண்ணிய தீர்த்தங்களாகக் கருதப்படுகின்றன. கங்கை நதியில் மண்ணை எடுத்துத் தலைமீது வைத்துக் கொள்பவன் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். பிரயாகை என்பது மற்றொரு சிறப்பான இடம். பிரம்மன், விஷ்ணு. இந்திரன், மற்றும் தேவர்கள், கந்தர்வர்கள். அப்ஸரஸ்கள் எப்பொழுதும் இங்கு இருக்கிறார்கள். இதற்குக் காரணம் இரண்டு புண்ணிய நதிகளாகிய கங்கையும் யமுனையும் இணைந்து பிரயாகையில் ஒடுகின்றன. முனிவர்களின் கூற்றுப்படி, மாசி மாதத்தில் ஒருவன் மூன்று நாட்கள் பிரயாகையில் நீராடுவது, கோடிக்கணக்கான பசுக்களை தானம் கொடுப்பதைக் காட்டிலும் சிறந்தது என்கின்றனர்.

சிவபெருமான், பார்வதியிடம் வாரணாசியின் சிறப்பைக் கூறியுள்ளார். சிவன் எப்பொழுதும் வாரணாசியை விட்டு நீங்குவதில்லை. வாரணா, அசி என்ற இரு நதிகளும் சேரும் இடத்தில் இந்நகரம் இருப்பதால் இதற்கு வாரணாசி என்று பெயர். காசி என்ற மற்றொரு பெயரும் உண்டு. நர்மதை நதியும் புனிதம் வாய்ந்தது.

அனைத்துத் தீர்த்தங்களிலும் சிறப்புப் புண்ணியம் வாய்ந்தது கயா. கயாசுரன் என்ற அசுரன் கடுமையான தவம் செய்து வந்தான். அத்தவத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர். கயாசுரன் முன்பு தோன்றிய விஷ்ணு, வரத்தினைப் பெற்றுக் கொள் என்று கூறினார். கயாசுரன் உடனே, "ஐயனே! எல்லாத் தீர்த்தங்களிலும் மிகப் புண்ணியம் வாய்ந்த தீர்த்தமாக நான் இருக்க வேண்டும்" என்று வேண்டினான். வரத்தினைப் பெற்றுக் கொண்ட கயாசுரன் மறைந்தான். தேவர்கள் சுவர்க்கலோகம் திரும்பினர். கயாசுரன் மறைந்த காரணத்தினால், பூமி வெறிச்சோடிக் கிடந்தது. உடனே விஷ்ணு, தேவர்களை அழைத்து யாகம் நடத்துமாறு கூறினார். கயாசுரனை சந்தித்து, அவன் உடம்பின் மீது யாகம் செய்ய வேண்டும் என்று கூறி, அவனுடைய உடம்பினைக் கேட்குமாறு கூறி அனுப்பினார். கயாசுரன் இதற்கு சம்மதித்த உடன் அவனுடைய தலை உடம்பினின்று கீழே விழுந்தது. உடனே பிரம்மன், கயாசுரனின் தலையற்ற உடல் மீது யாகம் நிகழ்த்தினார். ஆனால், யாகம் தொடங்கிய சில நேரத்தில், உடம்பு அசைய ஆரம்பித்தது. இதற்கு ஒரு தீர்வு காணவேண்டி இருந்தது. தேவர்கள் அனைவரும் ஒரு கல்லில் புகுந்து, அக்கல்லினை கயாசுரன் உடலின் மீது வைத்தால், அவ்வுடம்பு அசையாமல் நிற்கும்; இதன் பின்பு யாகத்தைத் தொடர்ந்து நடத்தலாம் என்றும் எண்ணினர். முடிவில் விஷ்ணுவே அக்கல்லினுள் புகுந்து கொண்டார். இதற்குக் காரணம், விஷ்ணுவும் தேவர்களும் எப்பொழுதும் கயாவில் தங்கி இருப்பவராவர்.

இக்கல்லினைப் பற்றி வேறொரு கதையும் வழங்கப் படுகிறது. பிரம்மனின் மகனாகிய மாரீச்சி காட்டிற்குச் சென்று மரம், மலர்களைக் கொண்டு வந்ததால் மிகவும் களைப்புற்று இருந்தான். தன்

மனைவி தர்ம விரதாவை நோக்கி, நான் மிகவும் களைப்புடன் இருக்கிறேன். இன்று என்னுடைய கால்களை நீ கழுவிவிட வேண்டும் என்று கூறினான். தர்ம விரதாவும் சம்மதித்துத் தன் கணவனின் கால்களைக் கழுவி விடும் பொழுது, திடீரென்று பிரம்மா அங்கு வந்தார். தன் கணவனின் கால்களைக் கழுவுவதா அல்லது கணவனின் தந்தையாகிய பிரம்மனை உபசரிப்பதா என்று கலக்கமுற்ற தர்ம விரதா, உடனே பிரம்மனை வரவேற்றாள். இதனால் கோபம் கொண்ட மாரீச்சி அவள் கல்லாக மாற வேண்டும் என்று சாபமிட்டான். தான் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று நினைத்த தர்ம விரதா, நீண்ட காலம் தவம் புரிந்தாள். அவள் தவத்தில் மனம் மகிழ்ந்த விஷ்ணு அவளுக்கு வரமளிக்க நினைத்தார்.

தர்ம விரதாவும், தன் கணவன் தனக்கு இட்ட சாபத்தி னின்று விடுதலை வேண்டும் என்று கேட்டாள். ஆனால், தேவர்களோ, “மாரீச்சி மிகவும் சக்தி வாய்ந்த முனிவர் என்றும், அவர் இட்ட சாபத்தைத் திரும்பப் பெற முடியாது” என்றும் கூறி, தர்ம விரதாவை ஒரு புனிதமான கல்லாக மாற்றி விடுவது என்றும், தேவர்கள் அக்கல்லில் எப்பொழுதும் தங்கி இருப்பதாகவும் உறுதி அளித்தனர். அந்தக் கல்லானது கயாசுரனின் உடல் மேல் வைக்கப்பட்டது.

யாகம் முடிந்த பின்பு, விஷ்ணு கயாசுரனிடம் எல்லாத் தீர்த்தங்களிலும் மிகச் சிறந்த தீர்த்தமாக கயா கருதப்படும்’ என்று வரமளித்தார். இந்த கயா தீர்த்தத்தில்தான் பாண்டவர்கள் விஷ்ணுவை வேண்டித் தவம் செய்தனர்.

ஜோசியம்

அடுத்து அக்னி புராணம் ஜோசியம் என்ற தலைப்பில் பல விஷயங்களை விரிவாகக் கூறுகிறது. உதாரணமாக, திருமணங்கள் சைத்ர, பெளஷ மாதங்களில் நடைபெறக் கூடாது என்றும், மிதுனம், துலாம் என்ற ராசிக்குரிய நாட்களில் திருமணம் நடைபெறக் கூடாது என்றும் யாத்திரை போவதற்கு வெள்ளிக்கிழமை சிறந்த நாள் என்றும், பூசம், அஸ்வினி, ஹஸ்தம், திருவோணம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் இல்லாத நாட்களில் மருந்துண்ணக் கூடாது என்றும் சொல்கிறது. நோயில் கிடந்தவர்கள், குளிப்பதற்குச் சனிக் கிழமை சிறந்ததாகும். முதன்முதலில் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் பொழுது அது செவ்வாய்க் கிழமையாகவோ, சனிக் கிழமையாகவோ இருக்கக் கூடாது. காது குத்தல், புதன் அல்லது வியாழக் கிழமைகளில் நடைபெற வேண்டும். புதிய உடைளை புதன் கிழமை, வியாழக் கிழமை, வெள்ளிக் கிழமைகளில் அணியக் கூடாது.

(இதைத் தொடர்ந்து, மன்வந்திரங்கள் பற்றியும் வர்ணாசிரமங்கள் பற்றியும் பிராயச்சித்தங்கள் செய்வது பற்றியும் அக்னி புராணம் பேசுகிறது.)

விரதங்கள்

ஒரு வாரத்தில் குறிப்பிட்ட திதி, கிழமை, குறிப்பிட்ட நட்சத்திரம், குறிப்பிட்ட மாதம், பருவங்கள், சூரியன் இருக்கும் உத்தராயண, தட்சணாயன காலங்கள் என்பவற்றை அடுத்துக் குறிப்பிட்ட சமயத்திற்குரிய விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. கார்த்திகை, சித்திரை அஸ்வினி மாதங்களிலும் வரும் சுக்கிலபட்சம் முதல் நாள் பிரதமை, பிரம்மனுக்குரிய நாளாகும். அன்று பிரம்மனை வழிபடுவது நன்று.

இரண்டாவது நாளன்று (துவிதியை) பூக்களைத் தின்று, இரண்டு அஸ்வினிகளையும் வணங்க வேண்டும். இவ் விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அழகிய உடலையும் அதிர்ஷ்டத்தையும் பெறுவர். கார்த்திகை மாதம், சுக்கிலபட்சம் துவிதியை திதியில் யமனை வழிபட வேண்டும். இந்த நாளில் விரதம் இருப்போர் நரகலோகம் செல்லமாட்டார். இந்நாளில் பலராமனையும் கிருஷ்ணனையும் துதிக்கலாம்.

சித்திரை மாதம் சுக்கிலபட்சம் திருதியை திதியில் விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும். சிவன் பார்வதியை மணந்த நாள் இதுவாகலின் இவ்விரதத்திற்கு கெளரி விரதம் என்று பெயர். பழங்களை வைத்துச் சிவன், பார்வதியை வழிபட வேண்டும். பார்வதி தேவியைக் கீழ்க்கண்ட நாமங்கள் கூறிப் பிரார்த்திக்க வேண்டும். அவை, லலிதா, விஜயா, பத்ரா, பவானி, குமுதா, சிவா, வசுதேவி மற்றும் கெளரி.

சுக்கிலபட்சம் நான்காம் நாள் சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படும். கண தேவதைகளை வழிபடுவதற்கும் சிறந்த நாள். வாசனையுள்ள மலர்களை வைத்து வழிபட வேண்டும்.

சுக்கிலபட்சம் ஐந்தாம் நாள் இருப்பது பஞ்சமி விரதம். இவ்விரதத்தினால் நோயற்ற வாழ்வும், கெட்ட சகுனங்களைப் பார்த்ததில் இருந்து விடுதலையும் கிடைக்கும். கார்த்திகை மாதத்தில் வரும் பஞ்சமி திதி சிறப்பானதாகும்.

சுக்கிலபட்சம் ஆறாவது நாள் அனுஷ்டிக்க வேண்டியது. சஷ்டி விரதம். இந்த விரதம் இருப்பவர்கள் வெறும் பழங்களை மட்டுமே உண்ணவேண்டும். இந்த விரதம் மேற்கொள்வதால் ஏற்படும் பலன்கள் என்றென்றும் நிற்பவை ஆகும். இவ்விரதம் கார்த்திகை மாதத்தில் அனுஷ்டிப்பது சிறப்புடையதாகும்.

சுக்கிலபட்சம் ஏழாவது நாள் சூரியனுக்கு உகந்தது. இன்று எடுக்கப்படும் சப்தமி விரதம் மனத்தின் கவலைகள் அனைத்தையும் போக்க வல்லது. பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. நினைப்பவை நடந்தேறும் குழந்தை பாக்கியமற்ற வர்களுக்குக் குழந்தைச் செல்வம் கிடைக்கும்.

எட்டாவது நாள், கிருஷ்ணபட்சம், அஷ்டமி திதி, மிக முக்கியமானது. கிருஷ்ணன் ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். ஆதலால் ஆவணி மாதத்தில் வரும் அஷ்டமி திதி மிக முக்கியமானதும், சிறப்பு வாய்ந்ததும் ஆகும். அந்நாளில் விரதம் இருந்து கிருஷ்ணனை வேண்டினால், ஏழு ஜென்மத்தில் செய்த பாவம் விலகி விடும். கிருஷ்ணனின் ஜெயந்தி அன்று ரோகிணி, சந்திரன், தேவகி, வசுதேவர், யசோதை நந்தன், பலராமன் ஆகிய அனைவரையும் வணங்க வேண்டும். கிருஷ்ணன் குறிப்பிட்ட இந்த அஷ்டமி திதியில் பிறந்ததால், அந்த நாளுக்கு ஜன்மாஷ்டமி என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

சுக்கிலபட்சம், கிருஷ்ணபட்சம் இரண்டிற்கும் எட்டாவது நாள் அஷ்டமி திதி இருந்து அது எந்த மாதமாக இருப்பினும் அது சிறப்பு வாய்ந்த நாள் எனப்படும். உதாரணத்திற்கு அந்த நாள் புதன்கிழமை என்று எடுத்துக் கொண்டால், புதாஷ்டமி என்று பெயர். இவ்வாறு வரும் அஷ்டமியில் ஒருவர் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். ஒரு காலத்தில் திரா என்ற பிராமணன், ரம்பா என்ற தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவர்களுக்கு கெளசிகா என்ற மகனும், விஜயா என்ற மகளும் இருந்தனர். திராவிடம் தனடா என்று ஒர் எருமை இருந்தது. அந்த எருமையைப் புல்வெளிக்குக் கூட்டிச் சென்று உண்ண வைப்பது கெளசிகாவின் வேலை. ஒரு சமயம் கெளசிகா பாகீரதி நதியில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, எருமை புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்பொழுது சில திருடர்கள் வந்து, அந்த எருமையைத் திருடிச் சென்றனர். கெளசிகாவும், அவன் சகோதரியும் எருதினைத் தேடிக் கொண்டு, ஒர் ஆற்றின் அருகில் வந்தனர். அந்த ஆற்றில் சில பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். கெளசிகாவும் அவன் சகோதரியும் தங்களுக்கு மிகவும் பசியாக இருக்கிற தென்றும், உண்ணுவதற்குச் சிறிது உணவு கொடுக்கும்படியும் கேட்டனர். அப்பெண்களும், அவர்கள் இருவரும் தங்களைப் போல் புதாஷ்டமி விரதம் இருந்தால் கொடுப்பதாகக் கூறினர். கெளசிகா, அவ்விரதத்திற்குரிய சடங்குகளைச் செய்தவுடன், அவனுடைய எருமை தெய்வாதீனமாகத் திரும்ப வந்து சேர்ந்தது. பிறகு கெளசிகா தன் சகோதரி விஜயாவை யமனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, தான் அயோத்தியின் அரசனாக ஆட்சி செய்தான்.

சில காலங்களில் கெளசிகாவின் தாய் தந்தையர் இறந்து போயினர். விஜயா யமன் மூலமாக அவர்கள் நரகத்தில் இருப்பதாகவும், கெளசிகாவும் தானும் புதாஷ்டமி விரதம் அனுஷ்டித்தால் தன் பெற்றோரை நரகத்தினின்று விடுவிக்கலாம் என அறிந்து, அவ்வாறே செய்ய, அவர்களும் நரகத்தினின்று சொர்க்கம் போயினர்.

சுக்கிலபட்சம், ஒன்பதாம் நாள் வருவது நவமி திதி. அது அஸ்வினி மாதத்தில் வரும்பொழுது, கெளரி தேவியை வணங்கி விரதம் இருப்பதற்கு மிகச் சிறந்த நாளாகும்.

பத்தாம் நாள், சுக்கிலபட்சம் தசமி திதியில் விரதம் இருந்தால் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகத் திகழ முடியும். பதினோராம் நாள் ஏகாதசி திதி. விஷ்ணுவிற்கு மிகவும் உகந்த நாளாகும். ஏகாதசி விரதம் இருப்போருக்குக் குழந்தைப் பேறும், பொருட்களும் கிடைக்கும்.

பன்னிரண்டாம் நாள், சுக்கிலபட்சம் துவாதசி திதி எனப்படும். ஆவணி மாதத்தில் வரும் துவாதசி மாடு, கன்றுகளை வழிபடுவதற்கும், சித்திரையில் வரும் துவாதசி மன்மதனை வணங்கவும் சிறந்த நாளாகும். வருடம் முழுதும் துவாதசி விரதம் இருந்தால் ஒருவர் நரகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. அதிலும், ஆவணி மாதம், சுக்கிலபட்சம் துவாதசி அன்று திருவோண நட்சத்திரத்தில் விரதம் இருந்தால், புண்ணிய நதிகளில் நீராடினால் கிடைக்கும் புண்ணியத்தை விட அதிகமாகக் கிடைக்கும். புதன் கோளும் அச்சமயத்தில் இருந்தால், கிடைக்கும் புண்ணியம் இரட்டிப்பாகும்.

பதின்மூன்றாம் நாள், சுக்கிலபட்சம் அனுஷ்டிக்கப்படுவது திரயோதசி விரதம். மன்மதன், இவ்விரதம் இருந்து சிவபெருமானை வேண்டியதாகக் கூறப்படுகிறது. இத்திதியில் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் மிக்க சிறப்புகளைப் பெற்று வாழ முடியும். இந்திரனும், இத்திதியில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

கார்த்திகை மாதத்தில், சுக்கிலபட்சம் பதினான்காம் நாள் கடைப்பிடிப்பது சதுர்த்தசி விரதம். இச்சமயத்தில் விரதம் இருந்து, தான, தருமங்கள் செய்து சுவர்க்கத்தை அடைய முடியும். மகா, பால்குண மாதங்களில், கிருஷ்ணபட்சம் பதினான்காம் நாள் வரும் சதுர்த்தசி சிவராத்திரி எனப்படும். இவ்விரதம் இருப்போர், உண்ணாநோன்பு இருந்து, இரவு முழுவதும் விழித்துக் கொண்டே இருக்க வேண்டும். சிவராத்திரி அன்று உறங்காமல் விரதம் இருப்போரின் பாவங்கள் அனைத்தும் தொலைக்கப்படும்.

காயத்ரி மந்திரம்

ஒவ்வொரு மனிதனுடைய உடம்பிலும், ஆணாயினும், பெண்ணாயினும் பல நூறு நரம்புகள் உள்ளன. அவற்றுள் 10 நரம்புகள் மிக மிக முக்கியமானவை. அவையாவன: இட, பிங்கல, சுஷீமுனா, காந்தாரி, ஹஸ்திஜிஷவா, பிரித, யஷ, அலம்புஷா, ஹீஹீ, சங்கினி என்பனவாம். இந்த நரம்புகளே உயிர் உடம்பிலிருக்க உதவுகின்றன. இழுத்து விடும் மூச்சுக் காற்று பிராணவாயு எனப்படும். இந்தப் பிராணவாயு அல்லாமல், அபான, சமான, உதான, வியான, நாக, கூர்ம, கிரிகர, தேவதத்தா, தனஞ்செயா என்ற ஒன்பது வகை வாயுக்களும் உடலில் இயங்குகின்றன. சிவனாலும் விஷ்ணுவாலும் கூட வணங்கப்படுபவள் காயத்ரி. இந்த தேவி எங்கும் நிறைந் திருக்கிறாள். ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் அன்ன வடிவாக இருக்கிறாள். ஒருவர் இந்த மந்திரத்தை ஏழு தடவை கூறினால், அவர்கள் பாவம் தொலைந்துவிடும். பத்து முறை கூறினால், சுவர்க்கம் செல்லலாம். நூற்றி எட்டு முறை கூறினால், பிறப்பினின்று விடுபடலாம். 'ஓம்' என்ற பிரணவத்துடன் இம்மந்திரத்தைத் தொடங்க வேண்டும்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அரசனின் கடமைகள்

அரசனின் தலையாய கடமை, நாட்டின் பகைவர்களை வெல்லுதலும், தன் நாட்டு மக்களை நன்கு காப்பாற்றுவதும், நாட்டிற்கு வளம் சேர்த்தலும் ஆகும். அவனுடைய எல்லைக்குள் இருக்கும் தவசிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல், அவர்கள் தவம் நன்கு நடைபெறப் பாதுகாப்பும் உதவியும் செய்யவேண்டும். அரசனுடைய அமைச்சர்கள் அறிவுக்கூர்மை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். அவன் மனைவி அறநெறி பிறழாதவளாக இருத்தல் வேண்டும். ஒர் அரசன் இறந்தால், அமைச்சர்களும் புரோகிதர்களும் காலத்தை விரயம் செய்யாமல் அடுத்த அரசனுக்கு முடிசூட்ட வேண்டும். ஒரு நாடு அரசனில்லாமல் இருப்பது நினைக்க முடியாத ஒன்றாகும்.

முடி சூட்டப்பட வேண்டிய மன்னன், அந்நிகழ்ச்சிக்கு முன்னர் மண் குளியல் செய்யவேண்டும். ஒவ்வொரு உறுப்புக்கும் குறிக்கப்பட்ட முறையில், குறிக்கப்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை, குறிக்கப்பட்ட உறுப்பிற்குப் பூசுதல் வேண்டும்.

மலை உச்சியிலிருந்து எடுத்த மண்ணைக் காதுகளுக்கும், கிருஷ்ணன் கோயிலின் மண்ணை முகத்திற்கும், இந்திரன் கோயில் மண்ணை முதுகுக்கும், அரண்மனை மண்ணை நெஞ்சிற்கும், யானை தந்தத்தால் தோண்டிய மண்ணை வலக் கைக்கும், காளை மாட்டின் கொம்பு கிளறிய மண்ணை இடக் கரத்திற்கும், ஆற்றில் இருந்து எடுத்த மண்ணைப் பக்கங்களிலும், யாக குண்டத்தின் மண்ணைத் தொடைக்கும், மாட்டுக் கொட்டடியின் மண்ணைப் பாதத்திற்கும் பூசவேண்டும். மன்னன் இம்முறையில் மண் குளியல் செய்த பிறகு, பட்டாபிஷேகம் செய்து கொள்ளத் தகுதியுடையவனாகிறான். நான்கு வகைப்பட்ட அமைச்சர்கள் அபிஷேகம் செய்து வைப்பர். பிராமண அமைச்சர்கள் தங்கப் பாத்திரத்தில் காய்ச்சிய நெய்யினை ஏந்திக் கிழக்குத் திசையிலும், சத்திரிய அமைச்சர்கள் இனிப்புக் கலந்த தயிரை வெள்ளிப் பாத்திரத்தில் வைத்துக் கொண்டு தெற்குத் திசையிலும், மேற்குப் புறத்தில் வைசிய அமைச்சர்கள் தாமிரப் பாத்திரத்தில் தயிரை வைத்துக் கொண்டு நிற்பார்கள். வடக்குப் புறத்தில் சூத்திர அமைச்சர்கள் எல்லா ஜீவநதிகளில் இருந்தும் கொண்டு வந்த நீரை அரசர் முடியில் ஊற்றுவார்கள். இந்தச் சடங்குகள் முடிந்த பிறகே அவன் உண்மையாகவே அரசனாவான். தீயினை வலம் வந்து, தன் குருவின் பாதத்தினைத் தொட்டு வணங்கித் தன்னுடைய படைகளுடன் யானை அல்லது குதிரை மீது அமர்ந்து வீதியில் வலம் வரவேண்டும்.

அரச பதவி ஏற்றுக் கொண்டபின், பல பதவிகளில் தக்கவர்களை நியமிக்க வேண்டும். ஒரு சத்ரியனோ பிராமணனோ படைத்தலைவனாக நியமிக்கப்பட வேண்டும். கடிதம் எடுத்துச் செல்பவன் வலுவான உடம்புடையவனாகவும், ரத சாரதிகள் குதிரைகளின் இயல்பைத் தெரிந்த வனாகவும், கருவூல அதிகாரி வைரம் முதலிய கற்களின் தன்மையை நன்கு அறிந்திருக்க வேண்டும். மருத்துவன், யானைகளின் கண்காணிப்பாளன் ஒருவன், குதிரைகளின் கண்காணிப்பாளன் ஒருவன், அரண்மனை அதிகாரி ஒருவன், அரண்மனைப் பெண்களைக் கவனித்துக் கொள்ள ஒர் அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் அதற்குரிய தகுதியும், அதில் விருப்பமும் உள்ளவனையே நியமிக்க வேண்டும்.

இவ்வாறு நியமிக்கப்படும் அதிகாரிகள், அரசனுக்கு விசுவாசம் உடையவர்களாய் இருப்பதுடன் அவன் கட்டளைகளை மீறாமல் செயல்படுபவர்களாக இருத்தல் வேண்டும். இந்த அதிகாரிகள் பொது இடங்களில் மகிழ்ச்சி தரும் விஷயங்களையே அரசனுக்குச் சொல்ல வேண்டும். விரும்பத் தகாத கசப்பான விஷயங்களைச் சொல்ல வேண்டுமானால், அரசனைத் தனியே சந்தித்துக் கூறவேண்டும். அரசப் பணியில் ஈடுபட்டவர்கள் திருடர்களாகவோ, அரசனை அவமதிப்பவர் களாகவோ இருக்கக் கூடாது. அரசனைப் போல் உடை அணியவும் கூடாது. அரசனிடம் அதிகமாக நெருங்கவும் கூடாது. தாங்கள் அறிந்த ரகசியங்களை வெளியிடக் கூடாது.

ஒவ்வொரு பத்துக் கிராமங்களுக்கும் கவனிப்பாளனாக ஒர் அதிகாரியும், நூறு கிராமங்களுக்கு ஒரு மேலதிகாரியும் இருக்க வேண்டும். நாட்டில் நடக்கின்றவற்றை ஒருவருக்கும் தெரியாமல் அறிந்து அரசனிடம் நேரே சொல்லக் கூடிய ஒற்றர்களை நியமிக்க வேண்டும். அரசனுடைய ஆட்சி எல்லையில் உள்ளவர்கள் செய்யும் புண்ணியத்தில், ஆறில் ஒரு பங்கு அரசனைச் சென்றடையும். அதே போன்று குடிமக்கள் செய்யும் பாவங்களிலும் ஆறில் ஒரு பங்கு மன்னனைச் சென்றடையும். பொய் கூறுபவனுடைய சொத்தில் எட்டில் ஒரு பங்கு தண்டனையாக விதிக்கப்பட்டு அரசுடைமை ஆக்கப்படும். காணாமல் போன ஒருவருடைய சொத்தை மூன்று வருடங்கள் வரை பாதுகாக்க வேண்டியது அரசனுடைய கடமை. மூன்று வருடம் முடிவதற்குள் சொத்தின் உரிமையாளர் வந்து கேட்டால் அரசன் அதனை ஒப்படைத்து விட வேண்டும். மூன்று ஆண்டுகள் முடிய சொத்துக்காரர் வரவில்லை என்றால், அந்தச் சொத்து, அரசனைச் சேர்ந்து விடும். மைனர்கள் என்று அழைக்கப்படும் இளம் குழந்தை களின் சொத்தைப் பாதுகாத்து, அவர்களுக்கு வயது வந்தவுடன் அவர்களிடம் ஒப்படைப்பது அரசன் கடமையாகும். ஒர் அரசனுடைய ஆட்சி எல்லைக்குள் ஒரு பொருள் களவு போய்விட்டால், களவைக் கண்டு பிடிப்பதற்கு முன், அதே மதிப்புள்ள வேறு பொருளை, இழந்தவர்க்குக் கொடுத்துவிட வேண்டும். கள்வன் பிடிப்பட்டுக் களவாடப்பட்ட பொருளும் கிடைத்தால், அது அரசனின் கஜானாவில் சேர்க்கப்படும். ஐந்தில் ஒரு பங்கு தானியங்கள் வரியாகச் செலுத்தப்பட வேண்டும் கைவினைஞர்கள் இலவசமாக அரசனுக்கு வேலை செய்வார்கள். அரண்மனையிலிருந்து அவனுக்கு உணவு வழங்கப்படும்.

அரசன், இளவரசனை அதிக கவனத்துடன் வளர்க்க வேண்டும். நான்குவிதமான சாத்திரங்கள் அவனுக்கு போதிக்கப்பட வேண்டும். முதலாவது தர்மசாத்திரம். எது சரி. எது தவறு என்பதை இச்சாத்திரம் சொல்கிறது; இரண்டாவது அர்த்த சாத்திரம். இது பொருளாதாரத்தைப் பற்றிக் கூறுகிறது; மூன்றாவது தனுர்வேதம். போர் செய்யும் முறையினைக் கூறுகிறது. இறுதியாக வருவது சிற்ப சாத்திரம். இது கைவினை பற்றிக் கூறுகிறது. இளவரசனைப் பாதுகாக்க பாதுகாவலர் நியமிக்கப்பட வேண்டும். இளவரசனை எப்பொழுதும் படித்தவர்கள், மதிப்புக்குரியவர்களுடன் பழகுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். இளவரசன் நல்ல பண்புகளுடன் வளரவில்லையெனில், அவனை சிறைக்கு அனுப்ப வேண்டியது அரசன் கடமை. சிறையில் அவன் செளகரியமாக இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அரசன் வேட்டையாடுதல், மது அருந்துதல், சூதாட்டம் முதலியவற்றை அறவே விட்டுவிட வேண்டும். பிரயாணம் செய்வதிலேயே பொழுதைக் கழிக்கக் கூடாது. முதலில் தன்னிடம் வேலை செய்பவர்களிடம் நல்ல பெயரெடுத்து, பின்பு தன் நாட்டு மக்களிடம் அதேபோல் இருக்க வேண்டும். இதன்பிறகே அவன் பகைவர்களை வெல்லும் வலிமை பெறுகிறான். அரசாட்சிக்குக் கெடுதல் செய்பவர்கள் உடனடி யாகக் கொல்லப்பட வேண்டும். செய்ய வேண்டியவற்றை உடனே செய்யாமல் காலம் தாழ்த்தினால், செய்யப்படுவதின் நோக்கம் வீணாகி விடும். அரசன் செய்ய நினைப்பதை யாரும் அறிந்து கொள்ளக் கூடாது. ஒன்றைச் செய்து முடித்தவுடன் அதன் பயனை அனுபவிக்கின்றவர்கள் இது அரசன் செயல் என்று புரிந்து கொள்வார்கள். மந்திரிகளை ஆலோசித்தே அரசன் எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும். உண்பதற்கு முன்னும், உறங்குவதற்கு முன்னும் உணவும், படுக்கையும் ஆபத்தில்லாதவையா என்று பார்க்க வேண்டும்.

அரசன் தன்னுடைய ராஜ்ஜியத்தை நடத்துவதற்கு ஏழு வழிமுறைகள் உள்ளன. அவை சாம, தான, பேத தண்டம், மாயை, உபேக்ஷா, இந்திரஜாலம் என்பன. இவற்றுள் முதல் நான்கும் மிக முக்கியமானவை. சாம என்றால் மென்மையான முறையில் தன் வழிக்குக் கொண்டு வருதல்; தான என்றால் ஒரு காரியத்தைச் சாதிப்பதற்காகத் தேவையான பொருளைக் கொடுத்தல்; பேத என்றால் அவர்களுக்குள் இருக்கும் பிளவுகளைப் பெரிதாக்கி ஒருவரைத் தன்வசம் இழுத்தல்; தண்டம் என்றால் தண்டனை கொடுத்தல்; மாயம் என்றால் வஞ்சகம் செய்தல்; உபேக்ஷா என்றால் வேண்டுமென்றே ஒருவரை உதாசீனப்படுத்தித் தன் காரியத்தை முடித்தல்; இந்திர ஜாலம் என்றால் செப்பிடு வித்தை மூலம் காரியம் சாதித்தல்.

அரசன் ஒருவர் செய்யும் தவற்றுக்கு ஏற்ப தண்டனை வழங்க வேண்டும். ஒருவன் தன்னுடைய பொருள் ஒன்றினைக் காணவில்லை என்று பொய் கூறினால், அரசவையினின்று விலக்கப்பட வேண்டும். பசு, யானை, குதிரை, ஒட்டகம் ஆகியவற்றைக் கொல்பவனின் கை அல்லது கால் வெட்டப்பட வேண்டும். தங்கம், வெள்ளி, பெண்ணைக் கடத்திச் செல்பவன் ஆகியோர் தூக்கிலிடப்பட வேண்டும். விஷம் கொடுப்பவன், தீ வைப்பவன் ஆகியோருக்கு மரணதண்டனை வழங்கப்படும். கணவனை மதிக்காத மனைவி, நாய்கள் ஏவப்பட்டுக் கொல்லப்படுவாள்.

கனவுகள்

பின்வரும் கனவுகள் தீக்கனவுகள் என்று கூறப்படும். மனிதர்கள் மேல் மரம் முளைப்பது போலவும், புல் முளைப்பது போலவும் கனவு காணுதல்; கனவு காண்பவர் தான் மொட்டை அடித்துக் கொண்டிருப்பது போலவும், அழுக்கான உடை அணிந்திருப்பது போலவும் கனவு காணுதல்; திருமணம், பாடல் பாடுவது. பாம்பினை அடிப்பது, மிருகங்களைக் கொல்லுவதுபோல் கனவு காணல் ஆகியவையும் தீய கனவுகளாகும். எண்ணெய் குடிப்பது போலவும், பறவைகளின் மாமிசம் சாப்பிடுவது, வீடு இடிந்து விழுவதுபோல், குரங்கு களுடன் விளையாடுவது போல் கனவு காண்பது தீக் கனவாகும். தீய கனவு காண்பவர் விஷ்ணு, சிவன், கணேசன், சூரியன் ஆகியோரை வணங்க வேண்டும். முதல் ஜாமத்தில் காணும் கனவு, ஒரு வருடத்தில் பலிக்கும். இரண்டாம் ஜாமத்தில் காணும் கனவு ஆறுமாத காலத்திலும், மூன்றாம் ஜாமத்தில் காணும் கனவு மூன்று மாதத்திலும் பலிக்கும். நான்காம் ஜாமத்தில் காணும் கனவு பதினைந்து நாட்களிலும், விடியற்காலையில் காணும் கனவு பத்து நாட்களுக்குள்ளும் பலிக்கும். ஒருவர் முதலில் நல்ல கனவும், அடுத்துத் தீய கனவும் கண்டால், தீய கனவே பலிக்கும். ஆகையால் ஒருவர் நல்ல கனவு கண்டால் அதன் பிறகு தூங்குதல் கூடாது. உடனே எழுந்துவிட வேண்டும். பின் வருவனபற்றிக் காணும் கனவுகள் நல்ல கனவுகள் என்று கூறப்படும். மலைகள், குதிரை அல்லது எருதின் மேல் சவாரி செய்தல், வெண்ணிறப் பூக்கள், மரங்கள் ஆகியவை. ஒருவர் தனக்கு நிறைய கைகள், தலைகள் இருப்பது போலவும், புல், புதர், தன்னுடைய கொப்பூழிலிருந்து வளர்வது போலவும் கனவு காணுதல், வெண்ணிற மாலை அணிந் திருப்பது போல, சூரியகிரகணம், பகைவனின் கொடியைப் பற்றுதல் ஆகியவை நல்ல கனவுகளாகும். ஒருவர் பாயசம் உண்ணுவது போல் காணுதல், கனவு காண்பவர் தானே இறந்து விடுவது போல் கனவு காணுதல், வீடு தீப்பற்றி எரிவதுபோல் காணுதல் நல்ல கனவுகள் என்று கூறப்படும். ஈரமான துணிகள், பழங்கள் நிறைந்த மரங்கள், நீலமான மேகம் கனவில் வந்தால் மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும்.

சகுனங்களும், அவை தரும் குறிப்புகளும்

தீய சகுனங்கள் என்பவை ஒருவன் வீட்டைவிட்டுப் புறப்படும் பொழுது, எதிர்ப்படவோ, காணவோ கூடாதவை. பஞ்சு, காய்ந்த புல், சாணி, தோல்பொருள், முடி, விதவை, உடைந்த பாத்திரம் ஆகியவைகளைப் பார்த்துவிட்டு வெளியே புறப்படக்கூடாது. புறப்படும் பொழுது இவற்றைப் பார்க்க நேர்ந்தால் சிறிது நேரம் தங்கி, விஷ்ணுவை தியானித்து விட்டுச் செல்ல வேண்டும். பிரயாணம் புறப்படும் பொழுது வாத்தியங்களின் ஒலி ஒலிக்கக்கூடாது. ஒரு காரியத்திற்கெனப் புறப்பட்டவர்களை மீண்டும் அழைக்கக் கூடாது.

பின்வருவனவற்றைப் பார்த்துப் புறப்பட்டால் நல்ல சகுனம் என்று கூறப்படும். அவை: வெண்மையான பூக்கள், நீர் நிரம்பிய பாத்திரம், இறைச்சி, வயதான ஆடு, பசு, குதிரை, யானை, தீ, தங்கம், வெள்ளி, வாள், குடை, பழம், சங்கு, தயிர் இடியோசை பிணம் ஆகியவை ஆகும். கழுதை எதிரில் வந்தால் நல்லது நடக்கப் போகிறதென்று பொருள். பன்றி அல்லது எருது இடமிருந்து வலம் சென்றால் நல்ல சகுனம். வலமிருந்து இடம் சென்றால் கெட்ட சகுனம். குதிரை, புலி, நினைத்தது கைகூடும்.

நரி, பல்லி, பன்றி ஆகியவை இடப்புறம் இருந்தாலும், குரங்குகள் வலப்புறம் இருந்தாலும் நல்ல சகுனம். நரி ஏழுமுறை ஊளையிட்டால் நல்ல சகுனம். காகம் வீட்டின் வாசலில் வந்து குரல் கொடுத்தால் விருந்தினர் வருவர். ஒரு கண்ணினால் சூரியனைக் காகம் பார்த்தால் ஆபத்து வரப் போவதாக அர்த்தம். காகம் மண்ணை மேலே பூசியிருந்தால் நினைத்தது கைகூடும். நாய் வீட்டின் உள்ளே தொடர்ந்து குரைக்குமானால், வீட்டில் ஒரு மரணம் சம்பவிக்கும். ஒருவருடைய வழியை மறித்துக் கொண்டு நாய் நின்றால், திருடு போகும். நாயின் வாயில் இறைச்சியுடன் பார்த்தால் நல்ல சகுனம்.



மாடு இடைவிடாமல் குரல் கொடுத்தால், வீட்டுத் தலைவனுக்கு ஆபத்து. இது இரவு நேரத்தில் நடந்தால், திருட்டு அல்லது வீட்டிலுள்ளோர்க்கு மரணம் சம்பவிக்கும். பசு புறாவுடன் விளையாடினால் பசுவிற்கு மரணம் ஏற்படும். யானை தன் வலக் காலை, இடக்காலால் தேய்த்தால் நல்ல சகுனமாகும். யானை தன் காலினால் வலப் பக்க தந்தத்தைத் தேய்க்குமானால், வளமை பெருகும். ஒருவர் பிரயாணம் புறப்படும் பொழுது குடை கீழே விழுமானால், பிரயாணத் தைத் தவிர்ப்பது நல்லது. நல்ல நட்சத்திரங்கள் இருக்கும் நாளிலேயே பிரயாணம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நட்சத்திரங்கள் இருக்கும் நாளில் பிரயாணத்தைத் தவிர்ப்பது நல்லது.

போர்

ஒர் அரசன் போருக்குப் புறப்படுவதானால், புறப்படு வதற்கு ஏழு நாட்கள் முன்னர் தொடங்கி பின்வரும் முறையில் ஒவ்வொரு நாளும் சொல்லப்பட்ட தேவதைகளைப் பூசிக்க வேண்டும். முதல் நாள்- சிவன், விஷ்ணு, கணேசன், இரண்டாம் நாள்- திக்பாலர்கள் மூன்றாம் நாள்- ஏகாதச ருத்ரர்கள். நான்காம் நாள்- கோள்களும், விண்மீன்களும்; ஐந்தாம் நாள்- அஸ்வினி தேவதைகள், புண்ணிய நதிகள்; ஆறாம் நாள்- எதிர்பார்க்கப்படும் வெற்றியை மனத்துள் கொண்டு, சடங்குகளுடன் கூடிய அபிஷேகம் அரசனுக்குச் செய்யப்பட வேண்டும்; ஏழாம் நாள்- போருக்குப் புறப்படுதல்.

போருக்குப் புறப்படும் படைகள், தலைநகரத்துக்குக் கிழக்குத் திசையில் கூட வேண்டும். படைகள் புறப்படும்போது அப்படைகளுக்கு முன்னர் இசை முழக்குவோர் செல்ல ண்டும். புறப்பட்ட படை முன்னோக்கிச் செல்ல வேண்டுமே தவிர, பின்னர் திரும்பிப் பார்க்கவே கூடாது. புறப்பட்ட படைகள் இரண்டு மைல் தூரம் சென்ற பிறகு தங்கி ஒய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். விஷ்ணு முதலானவர்களைத் துதிக்க வேண்டும். அரசன் நேரடியாகப் போர் செய்யக் கூடாது. அவ்வாறு செய்து அரசன் இறக்க நேரிட்டால் போரில் தோற்க வேண்டிவரும். ஒரு யானையைப் பாதுகாக்க நான்கு ரதமும், ஒவ்வொரு ரதத்திற்கும் நான்கு குதிரைப் படைகளும், ஒவ்வொரு குதிரைக்கும் நான்கு காலாட்படை என்ற முறையில் அணிவகுப்பு இருக்கவேண்டும். படையில் முதலில் செல்வது காலாட்படை அடுத்து வில் வீரர். அடுத்து, குதிரைப்படை இவற்றின் பின்னே ரதப்படையும், அதன் பின்னர் யானைப் படையும் செல்ல வேண்டும். படையின் முற்பகுதியில் கோழைகள் இடம் பெறக்கூடாது. அவர்கள் பின்னணியில் நிற்க வேண்டும். தைரியம், வீரம் உடையவர்களே தூசிப் படையில் இருக்க வேண்டும். சூரியன் எதிர்ப்புறமாக இல்லாமல் படைக்குப் பின்புறம் இருக்கின்ற முறையில் போர் புரிய வேண்டும்.

போரில் உயிர் துறப்பவர் நேரே வீர சுவர்க்கம் போவர். உண்மை வீரர்கள் சிந்தும் இரத்தம், எல்லாக் குற்றங்களையும் கழுவி விடுகிறது. பல யாகங்கள் செய்வதைக் காட்டிலும் போர்க்களத்தில் ஆயுதங்கள் தன்மேல் படுமாறு ஏற்றுக் கொள்வது சிறப்புடையதாகும். போர்க்களத்தில் இருந்து புறமுதுகிட்டு ஒடுதல் ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தை விட அதிகமாகும். போர் என்பது சம பலம் உடைய இருவரிடையே நடைபெற வேண்டும். புறமுதுகிட்டு ஒடுபவர்கள், வேடிக்கை பார்ப்பவர்கள், ஆயுதம் ஏந்தாமல் போர்க்களத்தில் நிற்போர் என்பவர் மேல் ஆயுதப் பிரயோகம் செய்யக் கூடாது. போரில் பிடிபட்டவர்களைச் சிறையில் வைக்காமல் தன் மக்களைப் போல் நடத்த வேண்டும்.

இராமன், இலக்குவனுக்குச் சொல்லிய அரச நீதிகள்

இராமன், இலக்குவனுக்குக் கூறியதாகப் பல அரச நீதிகளை அக்னி புராணம் கூறுகிறது. அவையாவன: அரசனுடைய கடமைகள் நான்கு ஆகும். முதலாவது, செல்வத்தைச் சேகரிக்க வேண்டும். இரண்டாவது, சேகரித்த தைப் பெருக்க வேண்டும். மூன்றாவது, அதனைக் காக்க வேண்டும். நான்காவது, அதனை வழங்க வேண்டும். அரசன் பொறுமை உடையவனாக இருத்தல் வேண்டும். பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். பணிவும் பொறுமையும் புலன்களை வெல்வதால் கிடைக்கின்றது. பொறி புலன்கள் மதம் பிடித்த யானை போன்றவை. அவற்றைக் கட்டுப்படுத்தா விட்டால் பொறுமை, பணிவு என்ற பண்புகளை இந்த யானைகள் கீழே போட்டு மிதித்து விடும்.

அரசன், அஹிம்சை மேற்கொள்பவனாய், சத்தியத்தைக் காப்பவனாய், தூய்மை உடையவனாய் இருத்தல் வேண்டும். அரசன் எல்லாச் சடங்குகளையும் தவறாமல் செய்வதுடன் ஏழைகட்கு உணவிடுவதையும், பாதுகாப்பு வேண்டி வருபவர்களைப் பாதுகாக்கவும் வேண்டும். இனிய வார்த்தைகளையே பேச வேண்டும். இன்றிருக்கும் உடம்பு நாளை இல்லாமல் போகும்.

உடம்புக்குத் தேவைப்படும் இன்ப வேட்டையில் இறங்கி அரச கடமைகளிலிருந்து தவறுபவன் அடிமுட்டாளாவான். துயரப்பட்ட மக்கள் கண்ணிர்விட்டுக் கொடுக்கும் சாபம் எத்தனை பெரிய அரசனையும் கீழே தள்ளிவிடும். தேவர்களுக்கும் விலங்குகளுக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான் உண்டு. தேவர்கள் இனிய வார்த்தை பேசுகின்றனர். விலங்குகள் கடுமையான சொற்களையே பேசுகின்ரன. தெய்வங்கள் இனிய வார்த்தை பேசுவதுபோல மன்னனும், தனக்கு நன்மை செய்யும் நண்பர்களிடம் மட்டும் அல்லாமல், தீமை செய்யும் பகைவர்களிடம் கூட இனிய சொற்களையே பேச வேண்டும். அரசன் தன் குருவிடம் வணக்கத்தையும், நேர்மையானவர்களிடம் நேர்மைப் பண்பையும், கடமை மூலம் தெய்வங்களையும், அன்பு செய்வதன் மூலம் பணியாளர்களையும், தானம் செய்வதன் மூலம் ஏழைகளையும் திருப்திப்படுத்த வேண்டும்.

அரசனுக்கு ஏழு அங்கங்கள் உள்ளன. 1. அரசன், 2. அமைச்சர்கள், 3. நண்பர்கள், 4. கருவூலம், 5. படை, 6. கோட்டை, 7. நாடு. இவற்றுள் மிக முக்கியமானது நாடாகும். எப்படியும் அதனைக் காத்தே தீரவேண்டும். அரசன் அமைச்சர் களையும், அரசியல் புரோகிதனையும் தேர்ந்தெடுப்பதில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். அறிவில்லாத முட்டாள்களாகிய அமைச்சர்களை அரசன் கலந்தாலோசிக்கக் கூடாது.

அரசனுக்குரிய அடையாளங்கள், அவனுடைய செங்கோல், பொன்னாலாகிய தடி, வெண்கொற்றக்குடை ஆகியவையாம். அரசனுடைய குடை அன்னத்தின் தூவி, மயிலிறகு, கொக்குகளின் இறகு ஆகியவற்றால் செய்யப் படலாம். எதனால் செய்யப்பட்டாலும், முழுவதும் ஒன்றாகவே இருக்க வேண்டுமே தவிர, தூவி, மயிலிறகு, இறகு ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று கலக்கக் கூடாது. சிம்மாசனம் மரத்தால் செய்யப்பட்டுப் பொன் தகட்டால் மூடப்பட வேண்டும். வில் என்பது இரும்பு, கொம்புகள், மரம் ஆகியவற்றில் எதனாலும் செய்யப்படலாம். சிறந்த வில் என்பது நான்கு கையளவு நீளம் உடையதாய் இருக்க வேண்டும். அரசன் ஒராண்டு வரிப்பணத்தைப் படைக்கலங்கள் செய்யச் செலவழிக்கலாம்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஸ்தாவர, ஜங்கம சொத்துக்கள்

ஆண்வாரிசு இல்லாமல் ஒருவன் இறந்தால், அவனுக்குக் கடன்கள் இருந்தால் அவன் சொத்துக்களுக்கு யார் உரிமை ஆகிறார்களோ, அவனே அக்கடன்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வாரிசாக உள்ள ஆண்மகன் சொத்தை ஏற்கும் பொழுது, கடனையும் ஏற்க வேண்டும். ஆனால் கணவனோ, மகனோ கொண்ட கடனுக்கு மனைவி பொறுப்பாளி ஆகமாட்டாள். ஆனால் கணவனும் மனைவியும் சேர்ந்து கடன் வாங்கி இருந்தால், அப்பொழுது கணவனுக்குப் பிறகு மனைவி பொறுப்பாளி ஆவாள். சாட்சி இல்லாமல் கடன் கொடுக்கப் பட்டிருந்தாலும், அக்கடன் உண்மையாகவே கொடுக்கப்பட்டது என்று அரசன் நம்பினால் 64 நாட்களுக்குள் அக்கடனைத் திருப்பித் தர உத்தரவிடலாம். பொய் வழக்குக் கொண்டு வந்தான் எனத் தெரிந்தால், அவ்வழக்கைக் கொண்டு வந்தவனுக்கும், அதற்குச் சாட்சி கூறியவனுக்கும் தக்க தண்டனை வழங்கப்படும். பொய் சாட்சி கூறும் பிராமணன் நாடு கடத்தப்படுவான். ஒருவன் சாட்சி கூறுகிறேன் என்று ஒத்துக்கொண்டு, பிறகு பின்வாங்கினால், பொய் வழக்குப் போட்டவனுக்குக் கிடைக்கும் தண்டனையைப்போல் எட்டு மடங்கு அதிக தண்டனை கிடைக்கும். கடன் கொடுக்கும் பொழுது, கொடுப்பவன், பெறுபவன், சாட்சிகள் ஆகிய அனைவர் பற்றியும் முழு விபரங்கள் எழுத்தில் எழுதப்பட வேண்டும். கடன் பெற்றவர் தவணைமுறையில் கடனைத் திருப்பித் தந்தால், அத்தவணைகள் அனைத்தும் மூலக் கடிதத்தில் வரையப்பட வேண்டும். கடன் கொடுக்கும் பொழுது, சாட்சிகளின் எதிரே கொடுக்கப்படுவது போல, கடனைத் திருப்பி அடைக்கும் பொழுதும் சாட்சிகளை வைத்துக் கொண்டே திருப்பிக் கொடுக்க வேண்டும். சாட்சி கூற முன்வருபவர் தலையில் பஞ்சு, நெருப்பு, நீர், விஷம் இவற்றுள் ஏதாவதொன்றை வைத்துக் கொண்டுதான் சாட்சி சொல்ல வேண்டும்.

பொய்சாட்சி கூறுபவர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு வழி உண்டு. ஏழு ஆல இலைகளை அடுக்கி அதன் மேல் ஒரு நெருப்புத் துண்டை வைத்துக் கொண்டு அக்னியை ஏழு முறை வலம் வரவேண்டும். அவர் கை வேகவில்லையானால் உண்மை கூறுகிறார் என்றும், இவைகளைத் தாண்டி நெருப்பு கையைச் சுட்டால் பொய் சாட்சி கூறுகிறார் என்றும் தெரிந்து கொள்ளலாம். சாட்சி கூறுபவனைத் தண்ணீருக்குள் அமுக்கி வைத்து அவன் சாகவில்லையானால் உண்மை சொல்கிறான் என்றும், செத்துவிட்டால் பொய்சாட்சி கூறினான் என்றும் அறியலாம்.

இறக்கும் ஒரு தந்தை, உயில் எழுதி வைத்திருந்தால் அதன்படி அவன் சொத்துப் பிரிக்கப்படும். அப்படி இல்லாமல் பிள்ளைகள் அனைவருக்கும் சமமான பங்கு கிடைப்பதானால் அவன் மனைவிக்கும் சமமான பங்கு ஒன்று உண்டு. இவ்வாறில்லாமல் தந்தை தன் சொத்து முழுவதையும் மூத்த மகனிடம் விட்டுச் செல்வதும் உண்டு. பாட்டனின் சொத்து தந்தைக்கும், மூத்த மகனுக்கும் சமமாகக் கிடைக்கும். பாட்டனார் சம்பாதிக்காமல் தந்தையால் மட்டும் சம்பாதிக்கப் பட்ட பொருள் மகனுக்குக் கிடைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மகன் பிறப்பதற்கு முன்னேயே பாட்டனுக்கும், தந்தைக்கும் ஏற்கெனவே சொத்து பிரிக்கப்பட்டிருந்தால் மகன் பிறந்த பிறகு தந்தைக்குக் கிடைத்த சொத்தில் சம பங்கு பிள்ளைக்கு வரும். பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை. ஆனால் சொத்தைப் பெற்றுக்கொண்ட ஆண் வாரிசுகள், தங்கைமார்களுக்குத் திருமணம் செய்ய, தங்களுக்குக் கிடைத்த சொத்தில் நான்கில் ஒரு பங்கு செலவிட வேண்டும்.

புரான தானம்

இனி அக்னி புராணம் புராணங்களை தானமாகக் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிப் பேசுகிறது. புராணங்களை தானமாகக் கொடுக்கும் பொழுது, பசுவையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு புராணத்திலும் உள்ள சுலோகங்கள் எத்தனை என்று அக்னி புராணம் கூறுகிறது. பிரம்ம புராணம்-25000; பத்ம புராணம்-12000; விஷ்ணு புராணம்-13000; வாயு புராணம்-14000;

பாகவத புராணம்-18000: நாரத புராணம்-25000: மார்க்கண்டேய புராணம்-9000: அக்னி புராணம்-12000; பிரம்ம வைவர்த புராணம்-18000; லிங்க புராணம்-11000 வராக புராணம்14000; ஸ்கந்த புராணம்-84000; வாமன புராணம்-10000; கூர்ம புராணம்-8000 மச்ச புராணம்-13000; கருட புராணம்-8000, பிரம்மாண்ட புராணம்-12000; இங்கே கூறப்பட்டவற்றுள் பவிஷ்ய புராணம் மட்டும் கொடுக்கப்படவில்லை. பிரம்ம புராணம் தானமாகக் கொடுக்கப்பட வேண்டிய மாதம் வைகாசி. பத்ம புராணம்- ஜேஷ்டா விஷ்ணு புராணம்ஆஷாட வாயு புராணம்- சரவண பாகவத புராணம்பாத்ரா; நாரத புராணம்- அஸ்வினா; மார்க்கண்டேய புராணம்- கார்த்திகை, அக்னி புராணம்- மார்கசீரிஷா, பவிஷ்ய புராணம்- பெளச பிரம்மவைவர்த புராணம்- மகா: லிங்க புராணம்- பால்குண வராக புராணம்- சித்திரை.

புராணங்களைப் படிப்பதாலும், கேட்பதாலும் நினைத்த காரியங்கள் கைகூடும். புராணங்கள் பற்றிச் சொற்பொழி வினுக்கு ஏற்பாடு செய்பவர்கள், நீண்ட ஆயுளுடன், உடல் நலத்துடன், மனமகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்று அக்னி புராணம் பேசுகிறது. சொற்பொழிவாற்றுபவருக்குத் தகுந்த சன்மானம் கொடுக்க வேண்டும் என்றும் அக்னி புராணம் மேலும் கூறுகிறது.

மருத்துவம்

தன்வந்தரி, தேவர்களுக்கு வைத்தியனாக இருந்தான். அவன் சுஷ்ருதா முனிவனுக்கு ஆயுர்வேத மருத்துவத்தைக் கற்றுக் கொடுத்தான். அக்னிபுராணம், சுஷ்ருதா முனிவர் கற்றுக் கொண்ட மருத்துவம் பற்றியும், என்ன நோய்க்கு என்ன மருந்து தரப்பட வேண்டும் என்பது பற்றியும் கூறுகிறது. இதில் விருக்ஷ ஆயுர்வேதம் என்ற தனிப்பகுதி இருக்கிறது. எந்தெந்த மரங்களை எங்கெங்கு நட வேண்டும் என்று கூறுகிறது. இவற்றோடு, விலங்குகளுக்கு அளிக்கப்படும் மருத்துவம் பற்றியும், விஷமுறிவுகள் பற்றியும் விரிவாகக் குறிப்பிடுகிறது.

இலக்கியமும் இலக்கணமும்

கவிதைக்கு நான்கு வகையான சந்தங்கள் உண்டு. நெடுங்கணக்கில் மொத்தம் 64 எழுத்துக்கள் உள்ளன. அவற்றுள் 21 உயிர் எழுத்துக்கள் என்று சொல்லப்படும். எழுத்துக்களை மூன்று வகையாக உச்சரிக்கலாம். அவை முறையே உதத்தா, அனுதத்தா ஸ்வரிதா ஆகும். எழுத்துக்கள் தோன்றுமிடம் எட்டாகும். அவையாவன: மார்பு, தொண்டை, தலை, அடிநாக்கு, பற்கள், மூக்கு, உதடு, மேலண்ணம் ஆகியவை ஆகும். உச்சரிப்புகள் சுத்தமாகவும், பிறர் கேட்கும் படியாகவும் இருக்க வேண்டும். மூக்கால் பேசுவதோ, முணுமுணுப்பதோ கூடாது.

கவிதைகளில் பயன்படும் அணிகள் பற்றி அக்னி புராணம் விரிவாகப் பேசுகிறது. கவிதை என்பது சாத்திரங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றினின்று வேறாகும். சாத்திரங்கள் என்பவை உரைநடையில் எழுதப்பட்ட சொற்களால் நிறைந்தவை. இதிகாசங்கள் நிகழ்ச்சிகளின் தொகுப்பு. ஆனால் இவை கவிதை அல்ல. தூய்மையான உண்மையான மனிதர்களை இவ்வுலகில் காண்பது கடினம். தூய்மையான மனிதர்களைக் கண்டாலும், அவருள் கற்றவர்களைக் காண்பது அரிது. தூய்மையும் கல்வியும் உள்ளவர்களிடையேயும் கவிதை உணர்ச்சி உடையவர்களைக் காண்பது கடினம். கவிதை உணர்ச்சி இருந்தாலும் கவிதை இயற்றும் ஆற்றல் உடையவர்களைக் காண்பது அரிது. கவிதை இலக்கணம் தெரியாமல் கவிதை இயற்றுவது கடினம். கவிதை இலக்கணத்தைவிட கவிஞனுக்கு அதிகம் தேவைப்படுவது உணர்ச்சிப் பெருக்கு.

சமஸ்கிருதம் தேவபாஷை, பிராகிருதமே மக்கள் பேசும் பாஷை, கவிதை கத்யம், பத்யம், மிஸ்ரை என்று மூன்று வகைப்படும். இதிகாசம் என்பது சமஸ்கிருதத்தில் எழுதப்பட வேண்டும். ஒரளவு பிராகிருத சொற்கள் கலப்பதால் தவறில்லை. அவை காண்டம் அல்லது சர்க்கங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். ரசங்களில்லாத இலக்கியம் பயனற்றது. அவை ஒன்பது வகைப்படும். அவையாவன: ஹாஸ்யம், கருணா, ரெளத்ரம், வீரம், பயனகா, பீபத்ளலா, அற்புதம், சிருங்காரம் என்பவை ஆகும். ரசங்கள் பயன்படுத்தப்படும் பொழுது அவை உணர்ச்சியோடு கலந்திருக்க வேண்டும். உணர்ச்சியோடு கலந்த ரசபாவம் இல்லாத இலக்கியம் இரண்டாம் தரம் ஆகும். சில இடங்களில் கவிஞனுடைய சாதுரியத்தால் ரசபாவத்தில் கூடப் பல நுணுக்கங்களைக் காட்டலாம். அறுபத்து நான்கு கலைகள் என்று சொல்லப்படுபவை பெரும்பாலும் பெண்களோடு சம்பந்தப்பட்டவை. ஆடல், பாடல், இசைக்கருவிகள் இயக்குதல் முதலியவை இக்கலைகளுக்குள் அடங்கும்.

யம கீதை

முன்னொரு காலத்தில் வஜ்ஜிரவா என்றொரு மன்னன் இருந்தான். அவனுக்கு நச்சிகேதா என்றொரு மகன் இருந்தான். வஜ்ஜிரவா ஒரு பெரிய யாகம் செய்து தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் கொடுத்து விட்டான். நச்சிகேதா தன்னை யாருக்குத் தன் தந்தை கொடுத்திருக்கிறான் என்று திரும்பத் திரும்பக் கேட்டான். இதனால் கோபம் கொண்ட வஜ்ஜிரவா, உன்னை யமனுக்குக் கொடுத்து விட்டேன்' என்று கூறினான். தந்தையின் பதிலைக் கேட்ட மகன் யமனுடைய உலகிற்குச் சென்றான். அங்கு மூன்று நாட்கள் தங்கி யமனைப் பார்த்தான். அங்கு சென்ற யாரும் மீண்டும் பூலோகம் திரும்பியதில்லை. ஆனால் நச்சிகேதாவைக் கண்ட யமன், மனமகிழ்ந்து அவன் மீண்டும் பூலோகம் செல்ல வரம் கொடுத்தான். ஆனால் அதை விரும்பாத நச்சிகேதா, யமனிடம் ஆத்மாவைப் பற்றிய உண்மை இயல்பைத் தெரிந்து கொள்ள அவனை வேண்டினான். யமன் நச்சிகேதாவிற்கு ஆத்மாவைப் பற்றிக் கூறியவையே யம கீதை' என்று வழங்கப்படுகிறது. யமன் கூறியதாவது: உலகத்தில் உள்ள மக்கள் நிலையில்லாத பொருள்களாகிய பதவி, பணம், வீடு என்பவற்றில் மயங்குவது வினோதமாக உள்ளது. ஞானிகள் இவற்றில் ஈடுபடக் கூடாது. இவற்றை நெருங்கவிடக் கூடாது. பழகிவிட முடியாத நிலையை அடையக் கூடாது என்று சொல்லியிருந்தும் மக்கள் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை.

பரப் பிரம்மம் இவையனைத்தையும் பெற்றிருக்கிறது. ஆனால் இவற்றோடு ஒவ்வொருவரும் இதனைக் காண முடியாது. ஆனால் எல்லாவற்றிலும் அது ஊடுருவி நிற்கின்றது. ஆத்மா என்பது இவ்வுடம்பினுள் உறைகின்றது என்றாலும், இவ்வுடம்பே ஒரு ரதமாகவும், அறிவு ரதத்தைச் செலுத்துபவனாகவும், மனம் என்பது கடிவாளமாகவும் உள்ளது. ஐந்து பொறிபுலன்களும் குதிரைகளாக உள்ளன. இதனை ஏறிச் செலுத்தும் ஆத்மா ஐந்து குதிரைகளையும் அடக்கி, போர் வீரனைப் போல் தன்னுடைய மெய்யறிவை அம்பைப் போல பரப் பிரம்மத்திடம் செலுத்த வேண்டும். உண்மையான ஞானிகள் ஆத்மாவிற்கும், பரப் பிரம்மத்திற்கும் உள்ள ஒருமைப்பாட்டை நன்கறிவர். சமாதி என்பது இந்த ஒருமைப்பாட்டை அறிகின்ற முறையே தவிர வேறொன்று இல்லை. பரு உடம்பு மறைந்ததும், ஆத்மா அடைந்து பரப்பிரம்மத்துடன் ஐக்கியமாகிறது.

(இங்கு சொல்லப்பட்ட நச்சிகேதாவின் கதை கதோப நிஷத்தில் இடம் பெற்ற ஒன்றாகும். வஜ்ஜிரவா என்பவன் ஒரு சாதாரண பிராமணன் அரசனல்ல. அவன் யாகம் செய்துவிட்டுப் பல பசுக்களை தானமாகக் கொடுப்பதற்குத் தயாராக வைத்திருந்தான். ஆனால் அவற்றில் ஒரு பசுகூடப் பால் தரும் திலையில் இல்லை.இனி சினைபிடித்து பால் கறக்கலாம் என்ற நிலையும் இல்லை. எல்லாம் கடந்து மரத்துப்போன பசுக்கள் அவை பிராமணன் மகனாகிய நச்சிகேதா இத்தகைய மாடுகளை தானம் செய்வது பெரும் தவறு என்று எடுத்துச் சொல்வியும், அவன்தந்தை அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே, இந்தப், பயனற்ற பசுக்களைதானம் செய்ய முற்பட்டடார் மனம் தொந்து போன நச்சிதோஇவற்றையெல்லாம் தானமாகக் கொடுக்கின்ற நீ என்னை யாருக்குக் கொடுக்கப் போகின்றாய் என்றான். பலமுறை கேட்டும் தந்தை விடை கூறவில்லை என்றாலும், நச்சிகேதா விடாமல் அதே கேள்வியைக் கேட்டு நச்சரித்த பொழுது கோப மிகுதியால் அவன்தந்தை உன்னை யமனுக்குத் தரப் போகிறேன் என்றான். அதை ஏற்றுக் கொண்ட தக்சிதோ, மனிடம் சென்று ஆத்மாவின் சொரூபத்தை விளக்குமாறு கேட்கிறான். யமன் கூறிய விடைகளுக்கு யம கீதை' என்ற கதைகள்கூடப் புராணங்களில் இவ்வாறு வடிவெடுத்தன. என்பதற்கு இது ஒர் உதாரணம்)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top