JeyaBharathi
மண்டலாதிபதி
அசுர ஆழ்துளை
வயிறு நிறைக்கும்
வளமண் ஆழதோண்டி
வாழ்வதை சிதைத்து
எதிர்ப்பையும் கருத்தையும்
அதிலேயே சமாதியாக்கும்
செவிதொலைத்த அரசு...
பாழ்பூமியாய்.. பாலையாய்
எண்ணங்களில் காட்சியாகி
நிதர்சனபயம் விதைக்கும்,
மீத்தேன் உறிஞ்சிட
துளையிட்ட விளைநிலத்தின்
நாளைய மிச்சம்..
கனங்கூடிய மனத்தின்
கையாளாகா பொருமல்கள்
கணினியுதிர் வார்த்தைகளாய்...