JeyaBharathi
மண்டலாதிபதி
சுயநல சூறாவளியால்
பொழிகரியமில காட்டாறு,
வானாழி கலக்காது
தடையிடும் தருவின அணையாய்
சாலையோர சிறு "முல்லை"...
பாலையாகும் பார் காக்க
முன்னேற்பாடாய் முளைவிட்டு,
நீராவியாய் மேலேறிய
நீர்மேகமதை நிலம்சேர்த்து,
வானதில் "கார்"வரையும்
இப் பசுந்தூரிகைகள்..
கிளைகளில் சிசுவமர்த்தி,
இரைதேட விரைந்த புள்ளினம்
இருட்டுகையில் வரும்வரை
இருப்பேனோவெனும் அச்சத்துடன்..