தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - இரண்டு டம்ளர்
பச்சரிசி - ஒரு டம்ளர்
து.பருப்பு - ஒரு டம்ளர்
க.பருப்பு - ஒரு டம்ளர்
பாசிபருப்பு - அரை டம்ளர்
உளுந்து - ஒரு டம்ளர்
மிளகாய் - 7
வரமல்லி - இரண்டு டீஸ்பூன்
மிளகு & சீரகம் - ஒன்றரை ஸ்பூன்
கருவேப்பிலை -ஒரு கொத்து
வெந்தயம் - கால் ஸ்பூன்
பெருங்காய தூள் - இரண்டு சிட்டிகை
சிறிய வெங்காயம் - பதினைந்து
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
அரிசி மற்றும் பருப்புகளை ஒன்றாக போட்டு நன்றாக கழுவி பின்பு நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்....
பின்பு ஒரு பௌலில் மல்லி, வரமிளகாய், மிளகு, சீரகம், கருவேப்பிலை இவைகளை போட்டு ஊற வைக்கவும்...
பிறகு ஐந்து மணி நேரத்திற்கு பிறகு ஊற வைத்த அனைத்தையும் கொர கொரப்பாக (நற நறவென) அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்... மாவு எடுப்பதற்கு முன்பு சிறிய வெங்காயத்தை தோல் உரித்து மாவுடன் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்....
எடுத்த பிறகு உப்பு சேர்த்து கலந்து தோசை வார்த்தால் சுவையான அடை தயார்.....
ஒரு சிலருக்கு அரைத்ததும் தோசை வார்த்து சாப்பிட பிடிக்கும்... ஒரு சிலருக்கு மாவை ஊற வைத்து தோசை வார்த்து சாப்பிட பிடிக்கும் அப்படி விரும்புபவர்கள் ஒரு இரண்டு மணி நேரம் ஊறவைத்து பிறகு தோசை வார்த்துக் கொள்ளுங்கள்....
இட்லி அரிசி - இரண்டு டம்ளர்
பச்சரிசி - ஒரு டம்ளர்
து.பருப்பு - ஒரு டம்ளர்
க.பருப்பு - ஒரு டம்ளர்
பாசிபருப்பு - அரை டம்ளர்
உளுந்து - ஒரு டம்ளர்
மிளகாய் - 7
வரமல்லி - இரண்டு டீஸ்பூன்
மிளகு & சீரகம் - ஒன்றரை ஸ்பூன்
கருவேப்பிலை -ஒரு கொத்து
வெந்தயம் - கால் ஸ்பூன்
பெருங்காய தூள் - இரண்டு சிட்டிகை
சிறிய வெங்காயம் - பதினைந்து
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
அரிசி மற்றும் பருப்புகளை ஒன்றாக போட்டு நன்றாக கழுவி பின்பு நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்....
பின்பு ஒரு பௌலில் மல்லி, வரமிளகாய், மிளகு, சீரகம், கருவேப்பிலை இவைகளை போட்டு ஊற வைக்கவும்...
பிறகு ஐந்து மணி நேரத்திற்கு பிறகு ஊற வைத்த அனைத்தையும் கொர கொரப்பாக (நற நறவென) அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்... மாவு எடுப்பதற்கு முன்பு சிறிய வெங்காயத்தை தோல் உரித்து மாவுடன் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்....
எடுத்த பிறகு உப்பு சேர்த்து கலந்து தோசை வார்த்தால் சுவையான அடை தயார்.....
ஒரு சிலருக்கு அரைத்ததும் தோசை வார்த்து சாப்பிட பிடிக்கும்... ஒரு சிலருக்கு மாவை ஊற வைத்து தோசை வார்த்து சாப்பிட பிடிக்கும் அப்படி விரும்புபவர்கள் ஒரு இரண்டு மணி நேரம் ஊறவைத்து பிறகு தோசை வார்த்துக் கொள்ளுங்கள்....