ஆனந்த இசைமழை
**********************
ஒரு நல்ல பாடல் அதன் தொடக்க இசையிலேயே கேட்பவர் மனதை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடும். அப்படியான ஒரு பாடலாக தான் "பொல்லாதவன்" படத்திற்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைத்தளித்த "அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன்" என்ற பாடல்! சந்தோஷத்தை பகிர்வதற்கு கொண்டாட்டத்தை இசைப்பது ஒருவகை. அதே சந்தோஷத்தை பரவசம் மூலம் பகிர்வது இன்னொரு இசைவல்லமை! உருகச்செய்யும் ஆனந்த இழைதலை மைய இசையாக எடுத்துக் கொண்டு வர்ணஜாலம் செய்தார் எம்.எஸ்.வி.
யூகிக்க முடியாத நகர்திசையில் முழுப் பாடலும் பயணித்தது தான் இதன் வித்யாசம். மெல்லக் கனியும் லேசாய் வேகமெடுக்கும் அங்கே இங்கே திரும்புகிறாற் போல தோன்றிக் குறுகும்.. மீண்டும் வேகம் மீண்டும் மென்மை என மொத்த பாடலையுமே, அமைந்த ஆட்டத்தில் அசரடிக்கிற சுழல்பந்து வீச்சாளனின் மெய்டன் விக்கெட் போலவே தன் வித்தகத்தை காட்டினார் எம்.எஸ்.வி.
எஸ்.பி பாலசுப்ரமணியம் இந்த பாடலை மாலை கோர்ப்பதற்காக பூவை பறிக்கிற கரங்களின் அதே மென்மையை கொண்டு பாடியிருப்பார். முழுப்பாடலையுமே சற்று அடக்கி வாசித்திருப்பார். சேட்டைக்கார ரஜினிக்கு அப்படியான குரலை தருவது தான் சரியான அளவீடு என்பதை யார் தீர்மானித்திருந்தாலும் ஒரு சில சபாஷ்களை தரலாம்.
ஸ்ரீப்ரியாவுக்கு வாணிஜெயராமின் குரல் அப்படி பொருந்தும். அதுவும் வாணி ஜெயராம் இந்தப் பாடலை முதல் சொல்லிலிருந்தே தன் வசப்படுத்திக் கொண்டார் என்பதே சரி. அந்த வாராண்டி என்ற சொல்லில் வருகிற ரா என்ற எழுத்தை றா என்பதன் அருகே சென்று உச்சரித்திருப்பார். அது பிழையாவதற்கு முந்திய புள்ளியில் கலையாகியிருக்கும். சர்வ நிச்சயமாக இந்தப் பாடல் வாணியின் கையெழுத்திட்ட ஓலை தான். அதிலும் பாடலின் ஆரம்பத்தில் பல்லவியை எஸ்.பி.பாலசுப்ரமணியம் மட்டுமே எடுத்தாண்டிருப்பார். முதல் சரணத்தை முடித்த பின்னர் தான் அப்படியே பல்லவியை அடைவார் வாணிஜெயராம். இன்று வரை இந்தப் பாடலின் மீதான நிழல்மையல் குறையாமல் இருக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.
கவியரசர் கண்ணதாசன்...
ஒரு பாடலின் தொடக்க வரி தான் அதன் முழு நகர்தலுக்கு உண்டான மனோநிலையை தயாரித்து தரும். அதில் நன்கு தேர்ந்தவர் கண்ணதாசன். அதோ பார் வில்லேந்தி ஒருவன் வருகிறான் என்பதை கவிதையாக மாற்ற சொற்களை முன்பின்னாய் கலைத்து, சற்றே அதன் மீது தேன் தெளித்து மறுபடி தருவதை தவிர பெரிய மாற்ற மாறுதல்கள் எதையும் செய்யாமலேயே பெரும் ஜாலத்தை நிகழ்த்த தெரிந்தவர் கண்ணதாசன். அவருடைய பேனா உண்மையாகவே சித்தும் பித்தும் நிறைந்த ஊற்று. அதற்கு சிறந்த சான்று இந்தப் பாட்டு!
மேகங்கள் இல்லாத வானில்லையே நீயின்றி எப்போதும் நானில்லையே என்ற வரிகள்... அதில் "நீயின்றி நானில்லை" என்பதை சவுகரியவாக்கியமாக தான் பயன்படுத்த முடியும் என்பதை மாற்றிக் காட்ட மாபெரும் பொய்மை ததும்பும் வார்த்தைப்பாட்டை நம்பாமல் எளிய நேரான ஒன்றே ஒன்றை முன்வைத்தால் போதும் என்பதை தீர்மானித்த வகையில் தான் அவரது கவித்துவ மேதமை வெளிப்படுகிறது.
எத்தனை முறை கேட்டால் என்ன..? சலிக்கவே சலிக்காது.. இந்த பாடல்!
ஆத்மார்த்தி??
படித்ததில் பிடித்தது
**********************
ஒரு நல்ல பாடல் அதன் தொடக்க இசையிலேயே கேட்பவர் மனதை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடும். அப்படியான ஒரு பாடலாக தான் "பொல்லாதவன்" படத்திற்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைத்தளித்த "அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன்" என்ற பாடல்! சந்தோஷத்தை பகிர்வதற்கு கொண்டாட்டத்தை இசைப்பது ஒருவகை. அதே சந்தோஷத்தை பரவசம் மூலம் பகிர்வது இன்னொரு இசைவல்லமை! உருகச்செய்யும் ஆனந்த இழைதலை மைய இசையாக எடுத்துக் கொண்டு வர்ணஜாலம் செய்தார் எம்.எஸ்.வி.
யூகிக்க முடியாத நகர்திசையில் முழுப் பாடலும் பயணித்தது தான் இதன் வித்யாசம். மெல்லக் கனியும் லேசாய் வேகமெடுக்கும் அங்கே இங்கே திரும்புகிறாற் போல தோன்றிக் குறுகும்.. மீண்டும் வேகம் மீண்டும் மென்மை என மொத்த பாடலையுமே, அமைந்த ஆட்டத்தில் அசரடிக்கிற சுழல்பந்து வீச்சாளனின் மெய்டன் விக்கெட் போலவே தன் வித்தகத்தை காட்டினார் எம்.எஸ்.வி.
எஸ்.பி பாலசுப்ரமணியம் இந்த பாடலை மாலை கோர்ப்பதற்காக பூவை பறிக்கிற கரங்களின் அதே மென்மையை கொண்டு பாடியிருப்பார். முழுப்பாடலையுமே சற்று அடக்கி வாசித்திருப்பார். சேட்டைக்கார ரஜினிக்கு அப்படியான குரலை தருவது தான் சரியான அளவீடு என்பதை யார் தீர்மானித்திருந்தாலும் ஒரு சில சபாஷ்களை தரலாம்.
ஸ்ரீப்ரியாவுக்கு வாணிஜெயராமின் குரல் அப்படி பொருந்தும். அதுவும் வாணி ஜெயராம் இந்தப் பாடலை முதல் சொல்லிலிருந்தே தன் வசப்படுத்திக் கொண்டார் என்பதே சரி. அந்த வாராண்டி என்ற சொல்லில் வருகிற ரா என்ற எழுத்தை றா என்பதன் அருகே சென்று உச்சரித்திருப்பார். அது பிழையாவதற்கு முந்திய புள்ளியில் கலையாகியிருக்கும். சர்வ நிச்சயமாக இந்தப் பாடல் வாணியின் கையெழுத்திட்ட ஓலை தான். அதிலும் பாடலின் ஆரம்பத்தில் பல்லவியை எஸ்.பி.பாலசுப்ரமணியம் மட்டுமே எடுத்தாண்டிருப்பார். முதல் சரணத்தை முடித்த பின்னர் தான் அப்படியே பல்லவியை அடைவார் வாணிஜெயராம். இன்று வரை இந்தப் பாடலின் மீதான நிழல்மையல் குறையாமல் இருக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.
கவியரசர் கண்ணதாசன்...
ஒரு பாடலின் தொடக்க வரி தான் அதன் முழு நகர்தலுக்கு உண்டான மனோநிலையை தயாரித்து தரும். அதில் நன்கு தேர்ந்தவர் கண்ணதாசன். அதோ பார் வில்லேந்தி ஒருவன் வருகிறான் என்பதை கவிதையாக மாற்ற சொற்களை முன்பின்னாய் கலைத்து, சற்றே அதன் மீது தேன் தெளித்து மறுபடி தருவதை தவிர பெரிய மாற்ற மாறுதல்கள் எதையும் செய்யாமலேயே பெரும் ஜாலத்தை நிகழ்த்த தெரிந்தவர் கண்ணதாசன். அவருடைய பேனா உண்மையாகவே சித்தும் பித்தும் நிறைந்த ஊற்று. அதற்கு சிறந்த சான்று இந்தப் பாட்டு!
மேகங்கள் இல்லாத வானில்லையே நீயின்றி எப்போதும் நானில்லையே என்ற வரிகள்... அதில் "நீயின்றி நானில்லை" என்பதை சவுகரியவாக்கியமாக தான் பயன்படுத்த முடியும் என்பதை மாற்றிக் காட்ட மாபெரும் பொய்மை ததும்பும் வார்த்தைப்பாட்டை நம்பாமல் எளிய நேரான ஒன்றே ஒன்றை முன்வைத்தால் போதும் என்பதை தீர்மானித்த வகையில் தான் அவரது கவித்துவ மேதமை வெளிப்படுகிறது.
எத்தனை முறை கேட்டால் என்ன..? சலிக்கவே சலிக்காது.. இந்த பாடல்!
ஆத்மார்த்தி??
படித்ததில் பிடித்தது