• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode அத்தியாயம் 10 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yaazhini Madhumitha

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
5,860
Reaction score
11,883
Location
Gobichettipalayam
அத்தியாயம்-10

நாட்கள் செல்லச் செல்ல அனைவரும்
எதிர்ப்பார்த்த திருமண நாள்
நெருங்கியது. மது திருமணத்திற்கு
முன்பு ஒரு வாரம் அதற்குப் பிறகு ஒரு
வாரம் என மொத்தமாகப் பதினைந்து
நாட்கள் விடுமுறை எடுத்திருந்தாள்.
திருமணத்திற்கு முதல் நாள் ரிசப்ஷன்
அடுத்த நாள் காலையில் பிரம்ம
முகூர்த்தத்தில் முகூர்த்தம் என்று இரு
குடும்பமும் முடிவு செய்து வைத்து
இருந்தனர். மதுவிற்கு ஏனோ
திருமண நாள் நெருங்க நெருங்க
படபட என்று தான் இருந்தது. எதனால் இப்படி என்று யோசித்தவளுக்கு
விடை தான் கிடைக்கவில்லை.
கார்த்திக்கைக் கல்யாண வேலையாக
அவ்வப்போது வீட்டில் சந்தித்த போது
தன்னிடம் இயல்பாக பேசியவனிடம்
பேசினாளேத் தவிர ஏதோ ஒதுங்கியே
இருந்தாள். அவனும் அதைக் கண்டும்
காணாதது போலத் தன்னியல்பில்
அவளை விட்டு இருந்தான்.

திருமணத்திற்கு முந்தைய நாள்
சிறுமுகையில் இருந்து
திருமணத்திற்கு வந்த கார்த்திக்குடைய தாத்தாவும் பாட்டியும்
மதுவிடம் ப்ரியமாகப் பழகினர்.
மிதுனாவும் ஸ்வேதாவும் தன்
குடும்பத்துடன் வந்திருந்தனர்.

முகூர்த்தம் அன்று காலையில் மது
ரெடி ஆகிவிட்டாளா என்று ராதா
பார்க்கச் சொல்ல ஸ்வேதாவும்
மிதுனாவும் மணப்பெண் அறைக்கு
விரைந்தனர்.

ஸ்வேதா கதவைத் திறந்து உள்ளே
முதலில் உள்ளே செல்ல மிதுனா
ஸ்வேதாவின் பின்னால் சென்றாள்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிய மதுவின் முகத்தை
ஸ்வேதாவும் மிதுனாவும் பார்க்க மது
பதட்டமாக இருப்பது தெரிந்தது.
ஆனால் முகூர்த்தச் சேலையிலும்
பார்லரில் இருந்து வந்தப் பெண்கள்
செய்த ஒப்பனையிலும் அழகாகத்
தெரிந்தவளைக் கண்டு இருவரும்
கையைத் தூக்கி சூப்பர் என்று
காண்பித்தபடி அருகில் சென்றனர்.

"ஹே... செம டி.. ஆனா ஏன்டி இப்படி
எக்ஸாம் ஹாலிற்கு போற மாதிரி
நிக்கற" என்றபடி ஸ்வேதா
வினவியபடி மதுவின் அருகில்
வர ஸ்வேதாவின் கையைப் பிடித்தாள்
மதுமிதா. வழக்கம் போல சில்லென்று
இருந்த அவளது கையை ஸ்வேதா
உணர்ந்தாள்.

"டிடி ஸ்வேதா.. இவ எக்ஸாம்
ஹாலிற்கு கூட இப்படி பதட்டமாகப்
போய் பார்த்திருக்கிறாயா" என்று
ஸ்வேதா தோளில் கையை மடக்கி
வைத்தபடிக் கேட்க, ஸ்வேதா க்ளுக்
எனச் சிரித்து "ஏன்டி இப்படி நிக்கற"
என்று மறுபடியும் மதுவிடம்
வினவினாள்.

"ஏய் எனக்கு பதட்டமாவே இருக்கு டி..
என்னன்னே தெரியல... ஏதோ
வயிறுலாம் கலக்கற மாதிரி ஒரு
ஃபீலிங்கா இருக்கு" என்று என்று
வயிற்றில் கையை வைத்து
டென்ஷனாகக் கூறினாள் அந்த 25
வயதுப் பாவை.

மிதுனா கேலியாகச் சிரிக்க ஸ்வேதா
அவளை முறைத்துவிட்டு மதுவிடம்
திரும்பினாள். "அது ஒன்னு இல்ல டி...
இது எல்லாருக்குமே இருக்க கல்யாண டென்ஷன்.. எனக்குக் கூட இப்படித்
தான் இருந்துச்சு.. ரிலாக்ஸா இருடி"
என்று மதுவைச் சமாதானம் செய்ய
ஆரம்பித்தாள்.

அந்த நேரத்தில் உள்ளே வந்த நிலா
மூவரின் மனதின் திசையையும்
திருப்பினாள். "வாவ் அண்ணி..
செமையா இருக்கீங்க" என்றுத்
தன் அண்ணிக்கு புகழாரம் செய்தவள்
"முகூர்த்த நேரம் வந்துவிட்டது
அண்ணி.. உங்களை அழைத்து வரச்
சொல்கிறார்கள்" என்று மதுவைத்
தன்னுடன் அழைத்துச் சென்றாள்
நிலா.

"மாங்கல்யம் தந்துனானேனா.." என்று
ஐயர் சொல்ல மங்கல
வாத்தியங்கள்யாவும் அந்த
அதிகாலை நேரத்தில் சத்தமாக
முழங்க மதுவின் கழுத்தில் தாலியை
மூன்று முடிச்சிட்டு அணிவித்தான்
கார்த்திக். தாலியைக் கட்டியவன்
மதுவைக் காண மதுவும் அவனைத்
தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
ஏனோ மதுவிற்கு கனவா நினைவா
என்று புரியாத் தருணமாக இருந்தது.
ஆனால் மதுவின் கண்கள் பதட்டம்
கலந்தப் புன்னகையைச் சிந்தியது
அவனிற்காக.. கார்த்திக்கிற்கு
மதுவை எதற்காகவும் கலங்க
வைக்கக் கூடாது என்ற எண்ணம்
எழுந்தது. அவளின் இறந்த காலத்தை
மறக்க வைத்து நிகழ்காலத்தில்
வாழ்க்கையைத் தொடங்கி
எதிர்காலத்தில் சிறக்கும்படி
ஒருவருக்கொருவர் புரிந்து வாழ
வேண்டும் என்று எண்ணம் மனதில்
விருட்சம் கொண்டது'. 'தைரியமாக
இரு' என்று வாயில் சொல்லாமல்,
கைகளைப் பற்றி மதுவிற்கு செயலில்
உணர்த்தினான்.

மதுவிற்கோ ஏதோ இனம் புரியாத
உணர்வு தான். நேரம் சீக்கிரமாகச்
சென்று அந்த மங்கல நாளில்
கார்த்திக்கின் மனைவியாய் அவன்
அருகில் அவன் கட்டிய தாலியோடு
நிற்பதை ஆச்சரியத்தோடு
உணர்ந்தாள் மது. அவன் கட்டிய
தாலியைத் தொட்டுப் பார்த்துவிட்டு
அவனைப் பார்க்க, அவன் பட்டு
வேஷ்டி சட்டையில் அவளது
செய்கையைத் தான்
கவனித்துக்கொண்டு இருந்தான்.


"ஏன் மது கரெக்டா தானே
கட்டியிருக்கேன்?" என்று கேலியாக
ஒற்றை புருவத்தைத் தூக்கி அவள்
காதின் அருகில் சென்று வினவினான்.

பட்டு வேஷ்டியில் தன் அருகில்
கம்பிரமாக நின்று காதில்
கிசுகிசுத்தவனைக் கண்டு மனம்
ரசிக்கத் தான் செய்தது மதுவிற்கு. "ம்
பரவாயில்லை.. காலங்காத்தால
தூங்கி விழாமல் கரெக்ட்டா கட்டீடிங்க"
என்று புன்னகைத்தவளிடம் நிலா
ஏதோ கேட்க வர அவளிடம்
திரும்பினாள் மதுமிதா.

அன்று வரை சுடிதாரிலும் ஜீன்ஸிலும்
வலம் வந்தவள் இன்று மாம்பழ
நிறத்தில்...ரோஸ் ரெட் பார்டர் வைத்த
சேலையில் அவன் கட்டிய தாலியோடு
பார்த்தவனுக்கு அவள் அன்று
பெண்மையின் முழு உருவமாக காட்சி
தர, அன்று வரை செய்தக் கேலிகள்
மறந்து வேறு விதமான எண்ணங்கள்
மனதில் எழ ஆரம்பித்தன.

மதுவின் நண்பர்கள் கார்த்திக்கின்
நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
என்று அனைவரும் திருமணத்திற்கு
வந்து சென்றனர்.

எல்லா சம்பிரதாயமும் முடிந்து மாலை
ஆனதும் இருவரையும் நல்ல நேரம்
பார்த்து மாப்பிள்ளை வீட்டிற்கு
அழைத்துச் சென்றனர். கார்த்திக்கின்
வீட்டில் வலது காலை எடுத்து
வைக்கும் போது ஒருநாள் நிலாவுடன்
பெயிண்டிங் க்ளாஸ் முடித்து வந்தது
நினைவு வந்தது மதுவிற்கு.

கேலிகளுக்கும், கோட்டாக்களுக்கம்
நடுவில் மதுவை அன்றைய
இரவிற்குத் தயார் செய்தனர். மது தன்
இதயத் துடிப்பு நிமிடத்திற்கு நிமிடம்
அதிகம் ஆவதை உணர்ந்தாள்.
கார்த்திக்கின் அறையைத் தயார் செய்து விட்டு வந்த நிலாவின்
கணவன் அரவிந்த் நிலாவைப் பார்த்து மௌனமாகச் சிரித்தான். நிலாவும்
கணவனின் சிரிப்பைப் புரிந்து
கொண்டு உதட்டை மடக்கிச் சிரித்தாள்.

இதை கவனித்த மதுவிற்குத் தான்
'ஐய்யோ முருகா..இதுக வேற
சம்பந்தமே இல்லாம நடுவுல கலாட்டா
பண்றாங்களே" என்று இருந்தது. நிலா மதுவைத் தயார் செய்து விட்டு
எதற்கோ வெளியே சென்றாள்.

ரெடி ஆகி நின்ற மதுவிடம் உமாவும்
ராதாவும் ஏதோ பேச வந்தார். தன்
அம்மா என்ன சொல்ல வருகிறார்
என்று மதுவிற்கு புரிந்தது. "பாரு
மது..." என்று உமா ஆரம்பிக்க.. "ஐயோ
அம்மா சித்தி எதுவும் சொல்லதீங்க..
எனக்கு என்ன சொல்ல வரீங்கன்னு
புரியுது.. எல்லாம் நான் பாத்துக்கறேன்" என்று இரு
காதுகளையும் கையால் வைத்துப்
பொத்தியபடி சொன்னாள். உமாவும்
ராதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துச்
சிரித்துக் கொள்ள நிலா வந்து
மதுவை கார்த்திக் அறைக்கு
அழைத்துச் சென்றாள். மதுவின்
குடும்பத்தார் நாளை வருகிறோம்
என்று கார்த்திக்கின் குடும்பத்திடம்
விடைப்பெற்றுச் சென்றது.

மதுவை கார்த்திக் அறைக்கு அனுப்பி
வைத்துவிட்டு நிலா சிரித்தபடியே கீழே திரும்பி விட்டாள். உள்ளே வந்து நின்ற மதுவிற்கு தான் வயிற்றிக்குள் ஏதோ
எலி ஓடுவதைப் போல உணர்ந்தாள்.

பால்கனி கதவைச் சாத்திவிட்டு வந்த
கார்த்திக், பாலிகாட்டனில் ராயல் ப்ளூ
நிறப் புடவையில் மது நிற்பதைக்
கண்டதும் ஸ்தம்பித்து மூச்சடைத்து
தான் போனான். கையில்
பால்செம்பை வைத்துக் கொண்டு
ஏற்ற உடையிலும் எடையிலும்
நின்றவளைக் கண்டு அவனது
ஆண்மை விழிக்கத் தான் செய்தது.
திருதிருவென்று விழித்துக் கொண்டு
நின்றவளைக் கண்டவனுக்கு சிரிப்பும்
எழுந்தது.

உடனே சுயநினைவிற்கு வந்தவன்
"ஏன் மது அங்கேயே நின்னுட்ட? வந்து
உட்கார்" என்றபடி அவள் அருகில்
வந்தவன் அவள் கையில் இருந்த பால்
செம்பை வாங்கி டேபிளில் வைத்து
விட்டுக் கட்டிலில் அமர்ந்தான். அவன்
அமர்ந்ததும் சற்று தள்ளி அமர்ந்தாள்
மது. மதுவிற்கு என்ன செய்வது என்று
புரியாமல் இரு கைகளையும் இறுக
கோர்த்துக் கொண்டு உட்கார்ந்து
இருந்தாள்.

"இப்போது என்ன செய்வது.. இவன்
என்ன நினைக்கிறான்.. எப்படி
ஆரம்பிப்பது.. ஐய்யோ இவன்
மூஞ்சிய வேற பாத்தா பேச வேற
வராதே" என்று அவள் நினைத்துக்
கொண்டு இருந்தாள்.

"வந்து எனக்கு ரொம்ப
நெர்வஸா(nervous) இருக்கு. இது
எல்லாம் புதுசா இருக்கு. வந்து"
என்று கார்த்திக் சொல்ல, என்ன நாம
சொல்ல வேண்டியதை இவர்
சொல்றார் என்று நினைத்த மது
நிமிர்ந்து கார்த்திக்கைப் பார்த்தாள்.

அவள் நிமிர்ந்து குழப்பமாக பார்க்க
கார்த்திக் வாய்விட்டுச் சிரித்து
விட்டான். "என்ன இதைத்தானே
சொல்ல வந்த மது" என்று கிண்டலாக
கேட்டான்.

அவன் அப்படி இயல்பாகக் கேட்கவும்
மதுவும் கொஞ்சம் இயல்பிற்கு
வந்தாள். "நான் முன்னால் சொன்னது
தான் மது. நமக்கு எப்போ நம்ம
வாழ்க்கைய ஸ்டார்ட் பண்ணனும்னு
தோனுதோ அப்ப ஸ்டார்ட் பண்ணலாம். அதுவரைக்கும் நல்ல ப்ரண்ட்ஸா இருப்போம். ஆனா இது நமக்குள்ளயே இருக்கட்டும் வெளில சாதரணத் தம்பதி மாதிரியே இருந்துப்போம்" என்று தெளிவானக் குரலில் கார்த்திக் கூறி முடித்தான். பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் உறங்கினர்.

அடுத்த நாள் காலை எழுந்து குளித்து
விட்டு தலையைத் துடைத்தபடியே
ட்ரெஸிங் டேபிள் கண்ணாடி முன்
வந்து நின்ற மதுவிற்கு,
கண்ணாடியில் தன்னையும் தாண்டி
கட்டிலில் அமைதியாக உறங்கிக்
கொண்டு இருந்த கார்த்திக்கின் முகம்
தென்பட்டது. திரும்பி நின்று
அவனைப் பார்த்தாள். அடர்த்தியான
புருவத்தையும், நேரான
நெற்றியையும், செதுக்கினாற்
போன்ற முக அமைப்பையும் கண்டு
சைட் அடித்தவள் அந்த தாடையில்
இருந்த அழுத்தத்தைக் கண்டு பிடிவாதக்காரன் என்று நினைத்து
சிரித்தாள். முதலில் இருந்த மன
அழுத்தம் எல்லாம் குறைந்தது போல
உணர்ந்தாள் மது. எல்லாத்திற்கும்
என்ன காரணம் என்று யோசித்த
போது கார்த்திக்கையே மதுவின்
மனம் கை காட்டியது. ஏனோ சற்று
முன் கண்ணாடியில் கண்ட தன் முகம்
மிகவும் சற்றுத் தெளிவாக இருந்தது
போல உணர்ந்தாள்.

'இமை அசைவால் என்
எண்ணத்தை மாற்றி
இதழ் அசைவால் என்
பிடிவாதத்தை வீழ்த்தி
குறுஞ்சிரிப்பில் முன்பை விட
மனம் பறித்த என்னவனே..
எதார்த்தமான உன் பார்வையில் கூட
எனக்குள் பட்டாம்பூச்சி பறக்கின்றன..
என் கண்களுக்குள் உயிர்
என் இதயத்திற்குள் துடிப்பு
என் உயிருக்குள் வெளிச்சம்
என் வார்த்தைகளுக்குள் இனிமை
என் வாழ்க்கைக்கு அர்த்தம்
இவை அனைத்தும் நீயே!


என்று எண்ணி அவனைப்
பார்த்தபடியே நின்று கொண்டு
இருந்தாள் மது. பின் அவனிடம் சிறிது
அசைவு தெரிய கீழே சென்றுவிட்டாள்.

மது கீழே வந்து நேராக சமையல்
அறைக்குச் சென்றாள். அவள்
வந்ததைக் கவனித்த ஜானகி "வா மது.. இந்த காஃபியைக் குடித்துவிட்டு
கார்த்திக்கிற்கும் எடுத்துச் செல்"
என்ற ஜானகியிடம் "ஏதாவது ஹெல்ப்
வேணுமா அத்தை" என்று கேட்டாள்.

"என்ன மருமகளே.. வீட்டுக்கு வந்த
அடுத்த நாளே வேலை செய்யனுமா?
அதெல்லாம் நிறைய இந்த மாமியார் உனக்காக வைத்திருக்கிறேன்..
ஆனால் ஒரு வாரம் கழித்து.. இப்போ
கொஞ்சம் எல்லாம் ரிலாக்ஸ்
ஆகிக்கோங்க" என்று கண்களை
உருட்டி பொய்யாய் மிரட்ட மது
சிரித்துவிட்டாள்.

காஃபியைக் குடித்துவிட்டு தன்
கணவனுக்கு மது காஃபியை எடுத்துக்
கொண்டு செல்ல அவனும் பல்
துலக்கி முகத்தை துடைத்துக்
கொண்டு பாத்ரூமிலிருந்து வெளியே
வர சிரியாக இருந்தது.

"குட் மார்னிங் மது" என்றவன் அவள்
கையில் இருந்த காஃபியைப் பார்த்து
"ஓ பார்ரா... எனக்காக
வேலையெல்லாம் செய்யற மது, வீட்ல
எல்லாரையும் வேலை வாங்குவாய்
என்றல்லவா கேள்விப்பட்டேன்" என்று
யோசிக்கும் பாவனையில் மதுவிடம்
கேட்டுக் கொண்டே மதுவின் கையில்
இருந்த காஃபியை வாங்கிக்
கொண்டான்.

"அப்படி என்று யார் சொன்னது?"
என்று உதட்டைச் சுழித்தபடிக் கேட்டாள் மது.

"யார் சொன்னால் என்ன?...
உண்மையைத்தானே சொல்லி
இருக்காங்க" என்று மேலும் மதுவை
சீண்டினான்.

"ஓ அப்படியா... அப்போ இனிமேல்
இங்கேயும் செய்யலை.. நீங்களே
எனக்கு டெய்லி மார்னிங் காஃபி
கொண்டு வாங்க" என்றாள் மது
மிடுக்காக.

"செய்து விட்டால் போகிறது" என்று
மதுவிடம் காலியான காஃபி கப்பை
வைத்து விட்டு, துணியை எடுத்துக்
கொண்டு குளியல் அறைக்குள்
புகுந்துவிட்டான்.

வெருப்பேறுவான் அல்லது
கோபப்படுவான் என்று நினைத்துத்
தான், மது இனிமேல் நீங்க காஃபி
எடுத்து வாங்க என்றது. ஆனால்
கூலாகப் பேசிவிட்டுப் போகிறானே
என்று நினைத்தாள். இவனைப்
புரிந்து கொள்வது கஷ்டம் தான் என்று
நினைத்தவள் ஒரு பெருமூச்சை
விட்டுவிட்டுக் கீழே வந்துவிட்டாள்.
 




Yaazhini Madhumitha

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
5,860
Reaction score
11,883
Location
Gobichettipalayam
ரெடியாகி கீழே வந்த கார்த்திக்கிற்கு
மதுவும் நிலாவும் டைனிங் ஹாலில்
பேசிக்கொண்டு இருந்தது காதில்
விழுந்தது.

"அண்ணா கல்யாணத்தைத் தள்ளிப்
போட்டுக் கொண்டு இருந்தது எங்கள்
எல்லாருக்கும் ரொம்ப வருத்தமாக
இருந்தது அண்ணி. பிடியே
கொடுத்துப் பேசமால் இருந்தது
எங்களுக்கு பயமாகக் கூட இருந்தது.
ஆனால் உங்களைப் பற்றி அம்மா
சொன்ன போது தான் அண்ணா
இரண்டு நாளில் சொல்கிறேன் என்று
சொல்லி சம்மதம் சொன்னார்.
அண்ணன் உங்களை கல்யாணம்
செய்யக் குடுத்து வைத்திருக்க
வேண்டும்" என்றாள் நிலா.

ஆனால் மதுவின் மனம் இல்லவே
இல்லை என்று மதுவிடம் சொல்லியது. இத்தனை பேரின் சந்தோஷத்திற்குக்
காரணம் அவன் தானே.. என்ன தான்
அவனைக் காதலிப்பதாகச்
சொன்னாலும் அவனிடம் கல்யாணம்
வேண்டாம் என்று தானே சொன்னேன்
நான். அப்படி இருந்தவளின்
எண்ணத்தை மாற்றி இப்படி
எல்லோரின் முகத்திலும்
மகிழ்ச்சியைத் தவழச் செய்த
கணவனை நினைத்துப் பெருமையாகத் தான் இருந்தது
மதுவிற்கு.


"அதெல்லாம் இல்லை. உன்
அண்ணன் மாதிரி ஒருத்தரை மணக்க
நான்தான் குடுத்து வைத்திருக்க
வேண்டும் நிலா" என்று மனதில்
நினைத்தை சொன்னாள் மது.
மனைவியின் பதிலைக் கேட்டக்
கார்த்திக்கின் முகத்தில் அவனை
அறியாமல் புன்னகை இழையோடியது.

"ஆஹா.... கணவரை விட்டுக்
கொடுக்காம பேசறீங்கலே" என்று
கண்ணடித்து கேலி செய்தாள் நிலா.

"ஏய் என்ன? என் பொண்டாட்டியை
வம்பிழுக்கற" என்றபடி டைனிங்
ஹாலிற்கு வந்தான் கார்த்திக்.

"என்ன அண்ணா நீயும் அண்ணியை
விட்டுக் கொடுக்காமல் பேசுகிறாய்"
என்று நிலா சிரிக்க "என்ன மச்சான்..
ஒரே நாள்ல தங்கச்சி கிட்ட சரண்டர்
ஆகிட்டிங்க போல" என்று நகைத்தபடி
அவர்களோடு அங்கு வந்த அரவிந்த்
சேர்ந்துகொண்டான்.

"ஆமாம் என் தங்கையிடம் நீங்க
சரண்டர் ஆன மாதிரி" என்று
அரவிந்தின் காலை வாரினான்
கார்த்திக்.

"ஓஹோ.. அண்ணா நடக்கட்டும்"
என்று பொய்யாய் முறைத்தாள் நிலா.

பிறகு மது வீட்டார் வந்து சேர்ந்தனர்.
அனைவரும் அமர்ந்து காலை
உணவை முடித்தனர். ஆண்கள்
எல்லோரும் அமர்ந்து அரசியல்,
விளையாட்டு என்று பேச பெண்கள்
எல்லாரும் வேறொரு அறைக்கு வந்து
அமர்ந்து பல கதைகளைப் பேசினர்.
ஆனால் கார்த்திக்கிற்கும் மதுவிற்கும்
மனம் உடன் இருந்தவர்களின் பேச்சில் இல்லை.. ஏனோ இருவரும்
அவரவரோடு இருக்க விரும்பினர்.

பிறகு கிளம்ப அனைவரும் எழுந்து
ஹாலிற்கு வந்தனர். தன்
குடும்பத்தினர் அனைவரும் கிளம்பிச்
செல்ல நின்றபோது தான் மதுவிற்கு
முகம் வாடிவிட்டது. ஏனோ மொத்தக்
குடும்பத்தையும் ஒன்றாகக்
கிளம்புகிறோம் என்று நின்ற போது
கஷ்டமாக இருந்தது.

அவளது முகவாட்டத்தைக் கண்ட
சுந்தரமூர்த்தி "என்னமா ஊருக்குள்ளே தானே இருக்கிறோம். வாரந்தோறும்
அத்தையோடு கோவிலுக்கு வந்தால்
எங்களைப் பார்க்க போகிறாய்" என்று
அருகில் வந்து மகளின் தலையை
வருடிச் சமாதானம் செய்தார்.

"இனி மது உங்கள் பொறுப்பு" என்று
மருமகனையும் சம்பந்தியையும்
பார்த்துச் சொன்னார்.

பிறகு நிலா-அரவிந்த் மற்றும்
கார்த்திக்கின் தாத்தா பாட்டி என
அனைவரும் கிளம்பிச் சென்றனர்.

கல்யாணம் முடிந்து ஒரு வாரம் முடிய
மது வேலைக்குச் செல்ல
ஆரம்பித்தாள். அந்த ஒரு வாரத்தில்
தாலி பிரித்துக் கோர்ப்பது.. மறுவீடு
என்று அனைத்தையும் முடித்து
விட்டனர். காலையில் கார்த்திக்குடனே சென்று விட்டுவாள். 'தனியாகத்
திரும்ப வேண்டாம்..ஆபிஸ் வந்துவிடு
நாம அங்க இருந்து ஒன்றாக சென்று
விடுவோம்' என்று கார்த்திக்
சொன்னதால் அவளது ட்யூட்டி
முடிந்தவுடன் கார்த்திக்கின்
ஆபிஸிற்கு சென்று அவன் தனி
அறையில் பொழுதைக் கழிப்பாள்.

அப்புறம் இருவருமாக அரட்டை அடித்த
படியே வீட்டிற்கு வந்து சேர்வர். வீடு
வந்தவுடன் குளித்து முடித்து கீழே
வந்து ஜானகி அம்மாவிற்கு ஏதாவது
உதவி செய்வாள் மது. மதுவிற்கு
ஏதாவது தெரியவில்லை என்று
கேட்டால் முகம் சுளிக்காமல் கற்றுத்
தந்தார் ஜானகி. வீட்டில் வேலைக்கு
ஆள் எதில் வைத்தாலும் சமையலிற்கு
வைக்கக் கூடாது என்று ஜானகி
மதுவிடம் அறிவுறுத்தி இருக்கிறார்.
அவரது மாமியார் அவருக்கு சொன்ன
அறிவுரை என்றும் கூறுவார். பிறகு
சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம்
உட்கார்ந்து பேசிவிட்டு நான்கு பேரும்
அவரவர் அறைக்குள் புகுந்துவிடுவர்.
கார்த்திக் உடன் ஏதாவது பழைய
கதையை பேசுவாள். அவனும்
ஏதாவது சொல்ல சிரிப்பும்
அரட்டையுமாக இருந்து விட்டு
உறங்கிவிடுவர்.

இப்பொழுதெல்லாம் மது எந்த
தயக்கமும் இல்லாமல் கார்த்திக்கிடம்
பேசினாள். அவனும் அவளை
அப்பப்போ வம்பிற்கு இழுத்தான்.

ஒரு நாள் சாப்பிடும் போது "என்ன
இது.. சட்னி இப்படி இருக்கு..
நல்லாவே இல்லை.. மிக்சியில்
அரைத்ததா? அம்மா நாளையில்
இருந்து மதுவை வீட்டின் பின் உள்ள
ஆட்டுக்கல்லில் சட்னி ஆட்டச்
சொல்லுங்கள்" என்று தன் எதிரில்
உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு
இருந்த மதுவை வம்பிற்கு இழுத்தான்.

அவன் பேசும் போதே சமையல்
அறையில் இருந்து வெளியே வந்த
ஜானகி, தன் கையில் தோசைத்
திருப்பியோடு கொண்டு வந்த
தோசையை 'டொக்' என்று தன்
மகனின் தட்டில் வைத்தார்.

கார்த்திக் யோசனையாக தன்
அன்னையைப் பார்க்க "சட்னி நான்
அரைத்தது" என்று சொல்ல, மதுவோ
தண்ணீர் எடுத்துப் பருகியபடியே
நக்கலாக உதட்டைச் சுழித்துச்
சிரித்தாள்.

'அடிப்பாவி நான் பேசும்போது அம்மா
செய்தது என்று சொல்வதற்கு என்ன"
என்று கார்த்திக் நினைக்க, அதற்குள்
மகனின் பேச்சை மட்டும்
அரைகுறையாகக் கேட்டு அங்கு வந்த
வேலுமணி "ஆமாம் ஆட்டுக்கல்லில்
ஆட்டுங்கள்.. அந்தக் காலத்தில்
எல்லாம் என் அம்மா பாட்டி எல்லாம்
அப்படி தான் செய்வார்கள்.. நன்றாக
இருக்கும்" என்று பழைய நினைவில்
அவர் சொல்ல.. கார்த்திக் நெற்றியில்
கை வைத்தபடி 'அய்யோ இந்த அப்பா
வேற நேரம் காலம் தெரியாமல் வந்து
பேசறாரே' என்று மூச்சை விட்டான்.

அவர் சொன்னதில் கோபமான
ஜானகி "வேண்டும் என்றால் அப்பனும் மகனும் உட்கார்ந்து ஆட்டுங்கள்..
நாங்கள் எல்லாம் செய்ய முடியாது"
என்று இடுப்பில் கை வைத்தபடி
சொல்லிவிட்டு அடுத்த தோசையை
எடுக்கச் சென்று விட்டார்.

மேலே தங்கள் அறைக்கு வந்தவன்
"நான் மாட்டுவது அவ்வளவு சிரிப்பாய்
இருக்கா.. அம்மா செஞ்சதுனு சொல்ல
மாட்டியா" என்று ஸ்டெத்தை எடுத்துக்
கொண்டு இருத்தவளிடம் கேட்டான்.

"என் வாயில் தான் தோசை இருந்ததே.. அப்புறம் எப்படிப் பேசுவது.. சாப்பிடும்
போது பேசக் கூடாது என்று என் பாட்டி
சொல்லுவார்கள்" என்று முகத்தை
அப்பாவித் தனமாக வைத்துச்
சொன்னாள் மது.

"ஏய் ப்ராடு... உன்ன பத்தித்
தெரியாதா" என்று கையில் இருந்த
பைலை வைத்து அவளை அடித்தான்.
அன்றிலிருந்து மது முன்பை விட
கார்த்திக்கிடம் நன்கு பழக ஆரம்பித்து
விட்டாள். இப்படியே நாட்கள் சென்றது.

வழக்கம் போல ஒரு நாள் மாலை மது
கார்த்திக்கின் ஆபிஸ் அறையில்
அமர்ந்து விகடனைப் புரட்டிக்
கொண்டு இருந்தாள். அப்போது
யாரோ கதவை திறக்க மது கார்த்திக்
என்று நினைத்துப் புன்னகையோடு
நிமிர்ந்தாள். ஆனால் யாரோ ஒரு
பெண் மாடல் போன்று வந்து
நின்றதைப் பார்த்த மதுவிற்கு
யோசனையில் புருவங்கள்
முடிச்சிட்டன.

"கார்த்திக் இல்லை?" எனக் கேட்டபடி
வந்து சேரில் அமர்ந்தாள்.

மதுவிற்கு முதல் பார்வையிலேயே
அவளைப் பிடிக்கவில்லை. முதலில்
கதவைத் தட்டாமல் மேனர்ஸ்
இல்லாமல் உள்ளே நுழைந்தது.
இரண்டு மது முன்னாடியே கார்த்திக்
என்று உரிமை உள்ளவள் போல
சொன்னது.

வந்த கோவத்தை அடக்கிக் கொண்டு
"நீங்கள் யார்?" என்று முடிந்த அளவு
புன்னகையுடன் வினவினாள் மது.

"நீ யார்? நான் கார்த்திக் எங்கே என்று
கேட்டால் என்னையே கேள்வி
கேட்கிறாய்" என்று ஒருமையில் கேட்டு, குரலை உயர்த்தினாள்.

"நான் மிஸஸ்.கார்த்திக்" என்று
முன்னால் கைகளைக் கட்டியபடி
அவளை நேராகப் பார்த்து
தெளிவானக் குரலில் சொன்னாள்.

"வாட்" என்று எழுந்து விட்டாள் அவள்.
அவள் அடைந்த அதிர்ச்சிக்கு
மறுபடியும் அவ்வாறு சொல்ல
வேண்டும் என்று மதுவிற்கு
தோன்றியது.

"யெஸ்.. மிஸஸ்.கார்த்திக்.." என்றாள்
மது தோளைக் குலுக்கியபடி.

அதேநேரம் வெளியே சென்றிருந்த
கார்த்திக் மதுவை கூட்டிச் செல்ல
ஆபிஸ் வர "ஹே..மாயா எப்ப வந்த?"
என்றபடி உள்ளே வர பெண்கள்
இருவரும் திரும்பினர்.

"ஹாய் கார்த்திக்..இப்போ தான்
வந்தான்" என்று பதில் அளித்தாள்
அவள். கார்த்திக்கிடம் அவள் குரல்
தாழ்ந்திருந்தது. அதை மதுவும்
கவனித்தாள்.

"ஓ ஸாரி... உனக்கு சொல்ல
மறந்துவிட்டேன் பார். இதான் என்
மனைவி மதுமிதா" என்று மாயாவிற்கு
மதுவை அறிமுகம் செய்து வைத்தான்.

"ம் தெரியும்..இப்போது தான்
சொன்னார்கள்" என்று மாயா சொல்ல
மது வெளியில் சென்று விட்டாள்.

மாயாவிடம் பேசி அவளை அனுப்பி
விட்டு வந்தக் கார்த்திக் மது
தன்னுடையத் தனி அறையில் தான்
இருப்பாள் என்று அங்கு சென்றான்.

அறைக்குள் நுழைந்தவன்
"கிளம்பலாம்" என்று மட்டும்
சொல்லிவிட்டுச் சென்று காரை எடுக்க மதுவும் காரில் அமர்ந்தாள்.

காரில் சற்று தூரம் சென்ற பிறகு
"இந்த பிகேவியர் சரி இல்லை மது"
என்று கோபமானக் குரலில்
கூறினான்.

மாயாவை மதுவிற்கு சுத்தமாகப்
பிடிக்கவில்லை. அந்தக் கடுப்பில்
இருந்தவள் அவன் இப்படி
சொன்னவுடனே "எந்த பிகேவியர்?"
என்று வெடுக்கெனக் கேட்டாள்.

"எதற்கு அப்படி மூஞ்சியைத் திருப்பிக்
கொண்டு போனாய்?" என
எரிச்சலுடன் வினவினான்.

மது நடந்ததைச் சொல்லி முடித்தவுடன்
"திஸ் இஸ் ஸில்லி மது" என்றவன்
"பார் மது.. அவள் அப்பாவுடைய
நண்பருடைய மகள். சிறுவயதில்
இருந்தே என்னுடைய ப்ரண்ட். சின்ன
வயதில் இருந்தே அம்மா இல்லை..
எங்க வீட்டில் தான் கிடப்பாள்..
அவளும் எனக்கு நிலா போலத்தான்..
அதான் அப்படி உள்ளே வந்திருப்பாள்.
அங்கிளும் அவளும் யூ.எஸ் சென்ற
பின் ஐந்து வருடங்களுக்குப் பிறகு
இப்போது தான் வருகிறாள். நம்
கல்யாணத்திற்கு ஒரு மாதமே
இருந்ததால் அங்கிளால் வர
முடியவில்லை.. மாயாவிற்குத்
தெரிந்தால் வருத்தப்படுவாள்
என்பதால் அங்கிள் அவளிடம் சொல்ல
வேண்டாம் என்று செல்லி விட்டார்.
அதனால் தான் அவள் அப்படி ஷாக்
ஆயிருக்கா.. எதுவும் தெரியாமல்
இப்படி மூஞ்சியை காட்டி விட்டு
வந்துட்ட. அவ பீல் பண்ணா மது.
உன்கிட்ட ஸாரியும் சொல்லச்
சொன்னாள்" என்று மதுவின் மீது
கோபத்தைக் காட்டினான். அவன்
கோபமாகப் பேச மதுவிற்கு முகம்
சுருங்கிவிட்டது.

அதன் பிறகு வீடு வரும் வரை
இருவரும் பேசவில்லை. வீடு வந்த
பின் "கார்த்திக் நாளை மது வீட்டில்
விருந்து இருக்கிறது. நியாபகம்
இருக்கிறதல்லவா?" என்று வேலுமணி கேட்டார்.

"ம்ம்" என்று ஷூவைக் கழட்டியபடி
தலையை மட்டும் ஆட்டினான்.

"நைட்டிற்கு என்ன செய்ய?" என்றபடி
வந்த ஜானகியிடம் "எனக்கு எதுவும்
வேண்டாம்" என்று விட்டு மேலே
சென்றுவிட்டான்.

யோசனையாய் ஜானகி மதுவைப்
பார்க்க, "வரும்போதே இருவரும்
வழியில் சாப்பிட்டோம் அத்தை.
அதான் வேண்டாம் என்கிறார்.
எனக்கும் வேண்டாம் அத்தை" என்று
ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு
அவருக்கு சமையலில் உதவி செய்து
விட்டுத், தன் அன்னைக்கு போன்
போட்டவள் அனைவரிடமும் பேசிவிட்டு ஒன்பது மணிக்கே போனை
வைத்தாள். மாடிப்படி ஏறும்போதே
என்ன சொல்லுவானோ இந்தக்
கட்டபொம்மன் என்று யோசித்தபடி
படி ஏறினாள் மது.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
யாழினி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top