• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode அத்தியாயம் 15 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yaazhini Madhumitha

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
5,859
Reaction score
11,876
Location
Gobichettipalayam
அத்தியாயம்-15

ஒரு நிமிடம் வாயிலிலேயே நின்ற மது
எல்லோரையும் வாங்க என்று
இன்முகத்துடன் வரவேற்று விட்டுத்
தன் மாமியாரின் பக்கத்தில் சென்று
நின்று விட்டாள். கார்த்திக்கின் இடது
கரம் சிவாவின் வலது கரத்தை
தைரியமாக இரு என்பது போலப்
பிடித்து இருக்க கார்த்திக்கின் வலது
கைப் பெருவிரல் கூட இருந்த மற்ற
விரல்களை நெட்டி எடுத்துக்
கொண்டிருந்ததை மது கவனித்தாள்.

மது ஜானகி அருகில் குனிந்து
"அத்தை என்ன ஆச்சு.. ஏன் எல்லாரும்
ஒரு மாதிரி இருக்காங்க?" என்று அவருக்கு மட்டும் கேட்கும் குரலில்
வினவினாள். அவர் ஏதோ ரகசியமாக
சொல்ல வர அதற்குள் கார்த்திக்
ஆரம்பித்தான்.

கார்த்திக் மதுவைப் பார்த்து "மிதுனா
வீட்டை விட்டுத் தான் காதலித்தப்
பையனுடன் வெளியே சென்று
விட்டாள் மது.. அவள் எங்கே என்று
உனக்குத் தெரியுமா? " என்று
கேட்டு மதுவின் தலையில் அதிர்வை
இறக்கினான்.

மிதுனா காதலித்து இருக்கிறாள்
என்பதே மதுவிற்கு அதிர்ச்சி தான்.
இதில் எங்கிருந்து எங்கே சென்றால்
என்று சொல்லுவாள்?

ஏனென்றால் மதுவிடம் ஒரு தடவை
கூடச் சொல்லவில்லையே.
ஸ்வேதாவிற்கு தெரிந்திருந்தாலும்
நம்மிடம் சொல்லி இருப்பாளே.. ஏன்
இவள் யாருக்கும் சொல்லாமல்
மறைத்தாள். இவ்வளவு நெருக்கமான
நட்புடன் இருந்தவள் இப்படி
மறைத்தது மதுவிற்கு கோபத்துடன்
வருத்தத்தையும் தந்தது. நமக்கே
இப்படி என்றால் அவளின்
குடும்பத்தினர் என்று எண்ணி
கவலைக் கொண்டாள் மது. மேலும்
வீட்டை விட்டு போய்விட்டாள் என்பது
இன்னும் கஷ்டமாக இருந்தது
மதுவிற்கு. இது எல்லாம் மதுவின்
மனதில் ஐந்து நொடிகளில் தோன்றி
மறைந்தது.

"மிதுனா காதலிப்பதே நீங்கள்
சொல்லித்தான் இப்போது எனக்குத்
தெரியும்.. என்னிடம் அப்படி
இருப்பதாக ஒரு நாள் கூட மிது
சொல்லவில்லை" என்றவள் "எனக்கு
மிதுனா எங்கே என்று தெரியாது
அண்ணா" என்று சிவாவைப் பார்த்து
சொன்னாள். சிவா அப்படித் தொய்ந்து
உட்கார்ந்து இருந்தது அவளுக்கே
மிகவும் கஷ்டமாக இருந்தது.

மிதுனாவின் அம்மா எழுந்து வந்து
மதுவின் இரு கைகளையும் பிடித்துக்
கொண்டார். "மது... நீயும் எங்களுக்கு
மிதுனா போலத் தான். தயவு செய்து
அவள் இருக்கும் இடம் தெரிய வந்தால்
எனக்குச் சொல்லுமா" என்றவர்
பொருக்காமல் அழுதுவிட்டார்.

மது என்ன செய்வது என்று
தெரியாமல் நின்றாள்.. இப்படி அழ
வைத்துவிட்டு சென்று விட்டாயே
மிது என்று மதுவின் மனம்
மிதுனாவிடம் குற்றம் சாட்டி கேள்வி
எழுப்பியது. ஜானகி மிதுனாவின்
அம்மாவைத் தேற்ற அவரோ "என்
மகள் எங்கு இருக்கிறாளோ.. திடீரென
ஒருவரிடமும் சொல்லாமல் கிளம்பி
விட்டாள்.. என்னிடம் அல்லது
சிவாவிடம் சொல்லி இருக்களாமே..
நாங்கள் என்ன அவள் விருப்பத்தைத்
தடுக்கவா போகிறோம்" என்று
தனக்குள்ளேயே கேட்டு அழுதவரைப்
பார்க்க மதுவிற்குப் பாவமாக
இருந்தது. சிவா ஒரு நிமிடம்
தலையைப் பிடித்து உட்கார கார்த்திக்
அவனை எழுப்பி ஏதோ பேச வெளியே
அழைத்துக் கொண்டு சென்றான்.
பின்பு இருவரும் ஏதோ பேசிவிட்டு
உள்ளே வர மிதுனாவின் அம்மா
அழுகையும் சற்று அடங்கி இருந்தது.
ஆனாலும் அவரின் முகம் செல்ல
மகளை நினைத்து வேதனையை
வெளிப்படுத்தியது.

"சரி நாங்க கிளம்பறோம்" என்று
யோசித்தபடியே உட்கார்ந்து இருந்த
மிதுனாவின் தந்தை எழுந்துவிட்டார் .
சிவாவையும் சிவாவின்
பெற்றோரையும் அனுப்பி வைத்து
விட்டு வந்த கார்த்திக் மது அங்கு
இல்லாததைக் கண்டு அறைக்குத்
தான் சென்றிருப்பாள் என்று தங்கள்
அறைக்கு விரைந்தான். அறைக்கு
வந்தவன் மதுவைத் தேட பாத்ரூமில்
இருப்பதை உணர்ந்து சட்டையை
கழற்றி வைத்துவிட்டு பால்கனியில்
வந்து நின்றான். அவளிற்கு வாங்கிக்
கொண்டு வந்ததை எடுத்துப்
பார்த்தவன் மறுபடியும் அதைப் பாண்ட் பாக்கெட்டில் வைத்து அவளிற்கு
அதைத் தரும் ஆசையுடன் நின்றான்.
கொஞ்சம் மிதுனாவின்
பிரச்சினையில் இருந்து வெளியே
வந்தவன் முகத்தில் சிரிப்பைப்
பூசிக் கொண்டு தன் மதுவிற்காகக்
காத்திருக்க விதியோ வேறு விதமாக
செயல்பட ஆரம்பித்தது.

மதுவின் போன் அடிக்கும் சத்தம்
கேட்டு உள்ளே வந்து பெட்டின் மேல்
இருந்த போனை எடுத்துப் பார்த்தான்.
மிதுனாவிடம் இருந்து தான் அழைப்பு.
புருவ முடிச்சுடன் போனை எடுத்து
கார்த்திக் காதில் வைக்க "மது நீ
சொன்ன மாதிரியே நாங்க இங்க வந்துட்டோம். உன் ப்ரண்டையும்
பார்த்துட்டோம். ரொம்ப தேங்க்ஸ் மது..
வந்து.." என்று பேசிக்கொண்டு
இருக்க கார்த்திக் கட் செய்து போனை
படுக்கையில் வீசி விட்டான்.

"என்னிடம் பொய் சொன்னாயா மது"
என்று நொடிக்கு ஒரு முறை கேட்ட
கார்த்திக்கின் இதயம் கோபத்தில்
கொப்பளித்தது. எவ்வளவு
சந்தோஷமாக மனைவிக்காகக்
காத்திருந்தானோ அந்தளவுக்கு
அவனின் முகம் கோபத்தைத்
தத்தெடுத்து இருந்தது.

ஆனால் இதை எதையும் அறியாத மது
பாத்ரூமில் குளித்து முடித்துவிட்டு
எப்படி கார்த்திக்கிடம் சொல்வது
என்று பாத்ரூம் கண்ணாடி முன் நின்று மது ஒத்திகைப் பார்த்துக் கொண்டு
இருந்தாள். ஏதேதோ யோசித்தவள்
பிறகு "ஸ்ஸ்ப்பா எப்படி வருதோ
அப்படியே சொல்லுவோம்" என்று
தனக்குத்தானே பேசிக்கொண்டு
வெளியே வந்தவள் கார்த்திக்
நிற்பதைக் கண்டு முகம் சிவந்தாள்.

அவனிடம் சொல்லும் ஆவலுடன்
முகத்தைத் துடைத்துக் கொண்டே
வெளியே வந்தவள் கார்த்திக்
நிற்பதைப் பார்த்து முகச் சிவப்பை
மறைக்க எண்ணி அவனின்
முகத்தைக் காணாமல்
திரும்பிவிட்டாள். ஆனால் உண்மை
அறியாத கார்த்திக்கின் புத்தியோ
அவள் முகத்தைத் திருப்புவதை வேறு
மாதிரி எண்ணியது.

கார்த்திக்கிற்கோ "நம்மிடம் மிதுனா
விஷயத்தை மறைக்க எண்ணி
முகத்தைத் திருப்புகிறாள்" என்று
அவனின் மூளை சொன்னது. பிறகு
சிரித்தபடியே திரும்பிய மது
கார்த்திக்கின் அருகில் ஒரு அடி முன்
எடுத்து வைத்து அவனை அணைக்க
வர, கார்த்திக் இரண்டடி பின்னால்
நகர்ந்து நின்றான்.

அவனின் செயலில் மது அவன் முகம்
நோக்க, "மிதுனா எங்கே மது?" என்று
கேட்ட கார்த்திக்கின் முகமும் குரலும்
இறுகி இருந்தது. அவன் அப்படிக்
கேட்க மதுவிற்குப் புரியவில்லை.
அதான் கீழேயே சொல்லிவிட்டோமே
என்று எண்ணியவள் தன்
கணவனுக்குப் பதிலை அளிக்க
வாயைத் திறந்தாள்.

"அதான் எனக்குத் தெரி...." என்று
முடிப்பதற்குள் கார்த்திக்கின் கரம்
மதுவின் கன்னத்தை பதம் பார்த்தது.

கார்த்திக் தன்னை அடித்தான்
என்பதை புரிந்து கொள்ளவே
மதுவிற்கு சில நொடிகள் பிடித்தன.
கையை கன்னத்தில் வைத்தபடி
கண்களில் கண்ணீருடன் அவன்
அடித்ததில் ஏற்பட்ட வலியுடன்
அவனை ஏறிட்டாள். எதற்கு இந்த அடி
என்று மதுவிற்கு சுத்தமாகப் புரியவில்லை.

அவளின் தோளைப் அழுந்தப் பற்றி
அருகில் இழுத்தவன் "பொய்
சொல்லாத மது. அப்புறம் நான்
பொல்லாதவன் ஆகி விடுவேன்.
உண்மையைச் சொல் மிதுனா
எங்கே?" என்று கோபத்தில் கேட்கத்
தானாக அவனின் பிடி மதுவின்
தோளில் அழுந்தியது.

அவன் பற்றிய இடம் வேறு வழியைக்
கொடுக்க அவன் கையில் இருந்து
விடுபட முயன்றபடி "எனக்குத்
தெரியாது கார்த்திக்.. நீங்க
சொல்றதும் எனக்குப் புரியவில்லை..
மிதுனா எங்கு இருக்கிறாள் என்று
எனக்கு எப்படித் தெரியும்" என்று
மது வலி தாங்காமல் முகத்தை
சுழித்தபடிச் கேட்டாள்.

"மறுபடியும் பொய். மது மிதுனா
இப்போது தான் உனக்கு போன்
பண்ணா" என்று அவளை விட்டவன்
ஏளனமான முகத்தை வைத்துக்
கொண்டு நடந்ததைக் கூறினான்
கார்த்திக்.

"எனக்கு ஒன்றும் புரியவில்லை.
எங்கே அவளுக்கு திருப்பி கூப்பிட்டுக்
கேட்கிறேன்.. இருங்கள்" என்று
போனை எடுத்து மிதுனாவிற்கு கால்
செய்தாள். மதுவின் விதி 'ஸ்விட்ச்டு
ஆப்' என வந்தது. ஒரு நிமிடம்
வயிற்றில் குளிர் பரவத் திரும்பிக்
கார்த்திக்கைப் போனைக் காதில்
வைத்தபடியே பார்த்தாள்.

திரும்பி அவனைப் பார்க்க கார்த்திக்
ஏளனமாக உதட்டை வளைத்தான்.
"என்ன மது.. என்ன சொல்லு.. அடுத்து
என்ன பொய்" என்று அவளின்
கையில் இருந்த போனை வாங்கி
பெட்டில் வீசியபடிக் கேட்டான்.

கோபம் வந்த மது "நான் ஒன்றும்
பொய் சொல்லவில்லை" என்று அவன் நம்ப மறுக்கிரானே என்ற
ஆதங்கத்தில் கத்த "ஷட் அப்.. நாம்
பேசுவது நமக்கு மட்டும் தான் கேட்க
வேண்டும்" என்று கோபமாக
உறுமினான்.

அவன் உறும மது விக்கித்து நின்றாள்.
கண்களில் வேறு கண்ணீர்
பெருகியது. "மிதுனா அம்மா உன்
கையைப் பிடித்து அழுகிறார்கள்
அப்போது கூடவா உனக்கு சொல்லத்
தோன்றவில்லை" என்று ஜன்னல்
கம்பியைப் பிடித்தபடி கோபத்தில்
கண்கள் பளபளக்கக் கேட்டான்.
அவனின் கோபத்தை மதுவால் ஏற்க
முடியவில்லை.

மதுவால் எதுவும் பதில் பேச
முடியவில்லை.. தான் ஒன்று
நினைத்து வர அது ஒன்று நடக்கிறதே
என்று வேதனையாக இருந்தது
மதுவிற்கு. "எங்கே என்ன தப்பு
நடந்தது?" என்று மதுவின் மனம்
யோசித்து சோர்ந்தது.

திடீரென நியாபகம் வந்தவனாய்
"ஆமாம் இன்று நீ ஏன் லேட்டாக
வந்தாய்?" என்று வினவினான்
சந்தேகப் பார்வையோடு. "அப்படி
பார்க்காதீங்க கார்த்திக்" என்று மது
கண்களால் கெஞ்சினாள்.

மது கோவிலிற்குச் சென்றேன் என்று
சொல்ல வர... கார்த்திக் தன் கையை
உயர்த்தி மதுவின் பேச்சை
நிறுத்தினான். "வேண்டாம்... நீ
அதற்கும் ஏதாவது பொய் சொல்லி
என்னைக் கஷ்டப்படுத்தாதே"
என்றவன் "உன் சித்தப்பாவிற்கு
மதுவை பிக் பண்ணிட்டீங்களா என்று
கேட்பதற்கு கூப்பிட்டு இருந்தேன்... நீ
ஏதோ வேலை இருப்பதாக அவரை
ஒரு மணி நேரம் தாமதமாக வரச்
சொல்லி இருக்கிறாய்" என்று கட்டை
விரலால் நெற்றியைத் தேய்த்தபடி
மதுவைப் பார்த்தவன் "அவர்களை
நல்ல படியாக அனுப்பி வைத்து விட்டு
வந்து இருக்கிறாய் இல்லை.." என்று
இளக்காரம் கலந்த குரலில் கோபமாக
வினவினான்.

"நீங்களே முடிவு செய்து விட்டீர்களா...
என்ன ஏது என்று கூட என்னிடம் ஒரு
முறை விசாரிக்க மாட்டீர்களா?" என்று
பாரமாகக் கணத்தத் தலைவலியுடன்
வினவினாள் மது. கண்களில்
அவனிடம் பேசும் போது குளம் கட்டிக்
கொண்டே இருந்தது அவளிற்கு.

"என்ன கேட்கச் சொல்கிறாய்.. அவள்
தெளிவாக மது நன்றி என்றெல்லாம்
பலமாகக் கூறுகிறாள்.. ஏன் மது
இப்படி என்னிடம் பொய் சொல்கிறாய்.. அவர்களிடம் சொல்லவில்லை
என்றாலும் மேலே வந்து என்னிடம்
தனியாகச் சொல்லி இருக்கலாமே..
அல்லது நான் மறுபடியும் கேட்கும்
போது ஆவது உண்மையைச் சொல்லி
இருக்களாமே.." என்று எரிச்சலும்
கோபமுமாகக் கார்த்திக் வினவ
மதுவின கண்கள் கண்ணீரோடு
வெறித்தபடி எங்கோ பார்த்து.. அவள்
கண்ணீரை அலட்சியப் படுத்தியவன்..
அழுது நின்றவளைப் பார்த்து
"இப்போது மிதுனா எங்கே என்று
சொல்லப் போகிறாயா இல்லையா"
என்று அழுத்தமான குரலில் கேட்டான்.

"எனக்குத் தெரியாது" என்று மது சொல்ல துச்சமாக அவளைப் பார்த்து
விட்டு டி சர்ட்டை எடுத்து மாட்டிக்
கொண்டு கார் சாவியை எடுத்து
விறுவிறுவென வெளியில் சென்று
விட்டான்.

அவன் போனதையே பார்த்துக்
கொண்டு இருந்தவள் படுக்கையில்
அப்படியே உட்கார்ந்து விட்டாள்.
இவ்வளவு சொல்லியும் நம்பாமல்
போகிறானே என்று இருந்தது
மதுவிற்கு. எவ்வளவு சந்தோஷமான
விஷயம் சொல்ல வந்தேன் என்று
வயிற்றின் மேல் கையை வைத்து தடவினாள். அவன் அடித்த இடம் வேறு
எரிய கீழ் உதட்டைக் கடித்து வலியைத்
தாங்கியவள்... தன் இயலாமையை
எண்ணி அப்படியே அழுக ஆரம்பிக்க
"மது அவன் எங்கே இவ்வளவு
அவசரமாகப் போறான்" என்றபடி
ஜானகி அறைக்குள் வந்தார்.

தன் யோசனைகளிலேயே மூழ்கி
இருந்த மது அவரின் குரலைக் கேட்டு
கண்களை அவசரமாகத் துடைத்துக்
கொண்டு திரும்பி "என்ன அத்தை...
என்ன கேட்டீங்க" என்றாள் மது.
மெய்யாகவே தன் யோசனையில் இருந்தவளுக்கு தன் மாமியார் கேட்டது சரியாகக் காதில் விழவில்லை.

"அதான் மது அவன் எங்கேயோ
வெளியே..." என்று பேசிக் கொண்டே
போனவர் மதுவின் முகத்தை
அப்போது தான் கவனித்தார். ஜானகி
அம்மாள் அருகில் வர வேறுபக்கம்
திரும்பிய மது தங்களின் விஷயம்
அவர்களுக்குத் தெரிய வேண்டாம்
என்று எண்ணி ஜன்னலின்
திரைச்சீலையை விலக்கியபடி
பாவனை செய்து முகத்தை
மறைத்தாள்.

அவளின் பின் வந்து நின்ற ஜானகி
"மது திரும்பு" என்று அவளின்
தோளின் மேல் கை வைத்துத்
திருப்பினார்.

மது திரும்ப அவள் கன்னத்தில்
இருந்த கை தடத்தையும் சிவந்த
விழிகளையும் பார்த்தவருக்கு
புரிந்துவிட்டது. "என்ன ஆச்சு மது?"
என்று அவளை உட்கார வைத்து
தானும் உடன் அமர்ந்து கேட்டவரிடம்
முதலில் "ஒன்றும் இல்லை அத்தை"
சொல்ல மறுத்தாள்.

"வெறும் வாய்த் தகராறாக இருந்தால்
நான் கேட்க மாட்டேன் மது.. உன்
கண்களையும் கன்னத்தையும்
பார்த்தாலே தெரியுது என்ன
நடந்திருக்குன்னு.. நீயும் எனக்கு நீலா
மாதிரி தான்டா" என்று சொல்லி
அவளின் தலையை வருடியவர் "இங்க
பார் மது.. இந்த அத்தையிடம்
சொல்லக் கூடாத விஷயமாக
இருந்தால் வேண்டாம்.. ஆனால்
அழுது உடம்பைக் கெடுத்துக்
கொள்ளாதே" என்று அவர் பாசமாய்ப்
பேச மீண்டும் அழுகை வெடித்தது மதுவிற்கு. நடந்த அனைத்தையும்
கூறியவள் "எனக்கு எதுவும் தெரியாது
அத்தை.. என்னைச் சுற்றி என்ன
நடக்கிறது என்றே எனக்குப்
புரியவில்லை அத்தை" என்று அவர் மடியில் தலை சாய்த்து அழுதாள்.
"அவர் என்னை நம்ப மாட்டிங்கிறார்
அத்தை... எவ்வளவு சொல்லியும் நான்
பொய் சொல்கிறேன் என்று
எண்ணுகிறார்.. அவருக்கு எப்படிச்
சொல்லிப் புரிய வைப்பது என்று
எனக்குத் தெரியவில்லை அத்தை"
என்று அழுத மருமகளைப் பார்க்க
ஜானகிக்கு பாவமாக இருந்தது. மது அப்படித்தான் தன் மனதில் இருப்பதை யாராவதிடம் இறக்கி வைத்துவிடுவான்.. ஆனால் கார்த்திக் அப்படி இல்லை.. மிகவும் பெர்சனல் ஸ்பேஸ் பார்ப்பவன்.

"ஒன்னும் இல்லை மது.. எல்லாம்
சரியாகிவிடும்... நாளையே உன்னிடம்
பேசிவிடுவான்.. உன்னிடம் பேசாமல்
எப்படி இருப்பான்" என்று தன் வாயில்
வந்த வார்த்தைகளை, மதுவைச்
சமாதானம் செய்யக் கூறினார்..
ஆனால் தன் மகனின் பிடிவாதத்தை
நன்கு அறிந்த ஜானகிக்கு
கலக்கமாகத் தான் இருந்தது. மகன்
மேலும் எதாவது மருமகள் மனம்
நோகும்படி நடந்து விடுவானோ என்று.
அவளைச் சிறிது சமாதானம் செய்தவர் "சரி மதுமா அழாதே... வா.. வந்து சாப்பிடு" என்று அழைக்க மது "எனக்கு வேண்டாம் அத்தை" மறுத்தாள். அவனுடன் ஆன சண்டையில் வயிற்றைக் காயப்போட்டவள் தன் வயிற்றில் இருக்கக் குழந்தையையும் மறந்தாள்.
 




Yaazhini Madhumitha

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
5,859
Reaction score
11,876
Location
Gobichettipalayam
எவ்வளவு சொல்லியும் கேட்காததால்
ஒரு டம்ளர் பாலைக் கொண்டு வந்து
பருக வைத்துவிட்டு "எதையும்
யோசிக்காமல் தூங்கு மது" என்று
படுக்க வைத்துவிட்டு சென்றார்.
ஆனால் மதுவிற்கு தான் உறக்கம்
வரவில்லை. மொபைலை எடுத்து
அவனுக்கு கால் செய்து பார்த்தாள். கட்
செய்து கொண்டே இருந்தான்.
அவளின் இந்த நிலையை நினைத்து
அழுவதா இல்லை தான் சொல்ல வந்த
விஷயத்தை சொல்ல முடியவில்லை
என்று அழுவதா என்றும் அவளுக்கே
விளங்கவில்லை.

காரை எடுத்துக் கொண்டு சென்ற
கார்த்திக்கிற்கு வேதனையாக
இருந்தது. பொய் சொல்லிவிட்டாயே
என்று ஒருபக்கம் கோபமுமாக, கை
நீட்டி அடித்து விட்டோமே என்று
ஒருபக்கம் பாவமுமாக இருந்தது. ஒரு
நிமிடம் காரை நிறுத்தியவன்
பாக்கெட்டில் இருந்த கிப்ட்டை எடுத்துப் பார்த்தான். ஒரு வெறுமையுடன் அதை டாஷ் போர்ட்டில் வைத்து மூடியவன்
கண்களை மூடி சிறிது நேரம்
யோசிக்கலாம் என்று கண்ணை
மூடினான். மதுவின் முகமே வந்தது.
தன்னையே கடிந்து கொண்டு காரில்
இருந்து இறங்கியவன் ஒரு
சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

மது சென்னை கிளம்பும் முன் இந்தப்
பழக்கத்தைக் குறைக்கச் சொன்னது
நினைவு வந்தது. ஆனால் இருக்கிற
டென்ஷனிற்கு முடியாது என்று
நினைத்தவன் காரின் கதவு மேல்
சாய்ந்து யோசித்தபடியே வரிசையாக
மூன்றைப் புகைத்து முடித்தான்.

பின்பு போனை எடுத்தவன்
சிவாவிற்குக் கூப்பிட்டான். ஒரே
ரிங்கில் சிவா எடுக்க அவன் இன்னும்
உறங்கவில்லை என்பதைத் தெரிந்து
கொண்டான். பாவி இப்படி எல்லார்
உறக்கத்தையும் நிம்மதியையும்
கெடுத்து விட்டுச் சென்று விட்டாளே
என்று மிதுனாவை மனதிற்குள்
திட்டினான் கார்த்திக்.

"ஹலோ" என்று இரண்டாவது
முறையாகச் சிவா அழைக்கச்
சுயநினைவிற்கு வந்தவன் "அ..
ஹலோ சிவா.. எங்க இருக்க" என்று
கேட்டான் கார்த்திக்.

"நான் சும்மாதான் டா.. காரில் நம்ம
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் வரை
வந்தேன்" என்று சோர்வானக் குரலில்
சொன்னான்.

"சரி அங்கேயே இரு.. நான்
வருகிறேன்" என்று சிவாவின்
பதிலிற்குக் கூடக் காத்திராமல்
போனை அணைத்து காரில் ஏறி
அமர்ந்து காரை எடுத்தான் கார்த்திக்.

பஸ் ஸ்டாண்ட் அடைந்தக் கார்த்திக்
சிவா அங்கு நிற்பதைக் கவனித்து
காரை நிறுத்தி விட்டு இறங்கினான்.
அவனின் அருகில் வந்த சிவா "என்ன
டா இந்த டைம்ல பாக்க வந்திருக்க?"
என்று வினவ கார்த்திக்கிற்கு கோவம்
வந்து விட்டது.

"ஏய்... என்ன கேசுவலாப் பேச ட்ரைப்
பண்றியா.. உன்னை இங்க இப்படி
விட்டுவிட்டு எப்படி இருப்பேன். ஒரு
க்ளூ சிக்கியது அதான் வந்தேன்"
என்று நண்பனிடம் சொன்னான். சிவா
யோசித்தபடி கார்த்திக்கைப் பார்க்க
கார்த்திக்கே தொடர்ந்தான்
"மிதுனாவிடம் இருந்து மதுவிற்கு கால் வந்தது சிவா.. மதுவைத் தான் எடுக்க
சொன்னேன்.. அப்புறம் நான் அருகில்
இருப்பதைக் கண்டு கொண்டவள்
போனை வைத்து விட்டாள்" என்று
சிவாவிடம் அடித்து விட்டான் கார்த்திக்.
கார்த்திக்கிற்கு மதுவை மற்றவர்
தவறாக எண்ணும் படி ஆகக் கூடாது
என்று மனது துடித்தது உண்மை தான்.
அதுதான் அவனை சிவாவிடம்
அப்படிச் சொல்ல வைத்தது.

"சரி அதை வைத்து என்ன செய்ய டா"
என்று சலித்தபடி காரின் மேல் ஒரு
கையை மடக்கி வைத்து தலைக்குக்
குடுத்து படி சலித்தான் சிவா.

"டேய்... புரியவில்லையா உனக்கு"
என்ற கார்த்திக் "மிதுனாவிடம் இருந்து மதுவிற்கு எங்கு இருந்து கால் வந்தது
என்று ட்ராக் பண்ணலாம்ல" என்று
நண்பனின் தோளில் கை வைத்துச்
சொன்னான் கார்த்திக்.

"டேய் விளையாடாதே.. இதெல்லாம்
போலீஸ் அது இதுன்னு போகும்..
அப்பா அதெல்லாம் வேண்டாம்
என்கிறார்" என்று சிவா கூறினான்.
அவனைப் ஒரு நிமிடம் எரிச்சலாகப்
பார்த்த கார்த்திக் "டேய் இது கூட
யோசிக்காமல் வந்திருப்பேனாடா...
நம்ம மாப்பிள்ளை அரவிந்திடம்
சொல்லி அன்அபிஸியலா மூவ்
பண்ணலாம்" என்று கார்த்திக் கூற
அப்போது தான் சிவாவின் கண்களில்
ஒரு சுறுசுறுப்புக் கூடியது. "அதுவும்
இல்லாமல் மிதுனா எங்கு
இருக்கிறாள் என்று தெரிந்து
கொண்டால் ஏதாவது அந்த ஊரில்
தெரிந்த ஆட்களை வைத்து நாம்
போகும் வரை கல்யாணத்தை நிறுத்தி வைக்கலாம்" என்ற கார்த்திக்... ஒரு
நிமிடம் சிவாவைப் பார்த்து "மச்சி
அந்தப் பையன் நல்லவனாக
இருந்தால் கல்யாணம் செய்து
வைக்கும் ஐடியா இருக்கிறது தானே"
என்று வினவினான்.

"அப்பா தான்டா பிரச்சினை செய்வார்..
எனக்கும் அம்மாவிற்கும் மிதுனாவின்
சந்தோஷம் தான் முக்கியம்" என்றவன் "ஆனால் ஏன் என்னிடம்
சொல்லவில்லை என்று தெரியவில்லை" என்றான்
உணர்ச்சியற்ற குரலில். ஒரு நிமிடம்
நண்பனின் நிலையை எண்ணி
வருந்திய கார்த்திக்கிற்கு
மிதுனாவின் மேல் கோபம் வந்தது..
மேலும் அவள் செல்ல உதவிய தன்
மனைவியின் மேல் அதை விடக்
கோபம் பொங்கியது.

அரவிந்திற்கு இந்த நேரத்தில்
கூப்பிடலாமா என்று யோசித்த
கார்த்திக்கும் சிவாவும் பின் வேறு வழி இல்லை என்று எண்ணி அரவிந்திற்கு
கூப்பிட்டனர். மணி பதினொன்று ஆகி
இருந்தது.

போன் அடிக்க எடுத்த அரவிந்த்
"ஹலோ மச்சான்" என்றான்.

"அரவிந்த் டிஸ்டர்ப் பண்ணிவிட்டேனா? ஒரு முக்கியமான விஷயம் அதான்
போன் போட்டேன்" என்று டிஸ்டர்ப்
செய்கிறோமே என்று உறுத்தலுடனே
கேட்டான் கார்த்திக்.

"இல்லை இல்லை.. நான் இப்போது
தான் வீட்டிற்கு வந்தேன் கார்த்திக்.
என்ன விஷயம் சொல்லுங்க" என
விஷயத்தைக் கேட்டான்.

விஷயத்தைக் கார்த்திக் சொல்ல "சரி
நீங்கள் மிதுனா மதுவின் நம்பரை
அனுப்பி வையுங்கள்.. நான்
என்னவென்று பார்த்துவிட்டு
உங்களுக்கு கூப்பிடுகிறேன்" என்று
சொன்னான். நம்பரை அனுப்பி விட்டு
இருவரும் ஒரே காரில் ஏறி
அமர்ந்தனர். இருவரின் மனதிலும்
வெவ்வேறு சிந்தனைகள்.

சிவாவிற்கு மிதுனா கல்யாணம்
மட்டும் செய்து கொள்ளக் கூடாது
என்று வேண்டிக் கொண்டு இருந்தது..
'மிதுனாவைக் கூட்டிக் கொண்டு வந்து
அப்பாவை சமாதானம் செய்து
கல்யாணம் செய்து வைத்து விட
வேண்டும்..' என்று நினைத்துக்
கொண்டு இருந்தான்.

கார்த்திக்கிற்கோ மதுவைச் சுற்றியே
சிந்தனைகள் ஓடிக் கொண்டு
இருந்தது.. கோபமாக இருந்தாலும்
என்ன செய்து கொண்டு
இருக்கிறாளோ என்று எண்ணினான்.
அவள் நடுவில் இரண்டு மூன்று முறை
போன் செய்தது நினைவு வந்தது.
வேண்டுமென்றே கட் செய்தவன்
இப்போது போன் செய்யலாமா என்று
எண்ணியவனிற்கு 'கேட்டும் என்னிடம் சொல்லாமல் தன் ப்ரண்டிற்கே
சாதகமாக இருந்தாளே' என்று எண்ணி மீண்டும் கோபம் வந்து
மென்மேலும் அவளின் மேல்
கோபத்தை வளர்த்தான்.

'என்னை அவ்வளவு சுலபமாக
ஏமாற்றி விடலாம் என்று
நினைத்தாயா மது" என்று கண்ணை
மூடி ஸ்டியரீங்கை இறுக்கினான். பின்
தலையைப் பின்னால் சாய்த்துக்
கண்களை மூடி அமர்ந்தான். கொஞ்ச
நேரத்தில் போன் அடிக்க எடுத்துப்
பார்த்தான்... அரவிந்த் தான்.. போனை
எடுத்துக் காதில் வைத்தவன் அவன்
சொன்ன தகவலில் புருவத்தை
நெருக்கி சிவாவைப் பார்த்தான்..
"ஓகே அரவிந்த் தாங்க்ஸ்" என்று
போனை வைத்தான்.

"சிவா.. மிதுனா திருச்சில இருக்கா.."
என்றான் கார்த்திக். "திருச்சியா"
என்று யோசித்தவன் "கார்த்திக் என்ன
பண்ணலாம் டா.. வயதுப் பெண்
தெரியாத ஊருக்கு எவனென்றே
தெரியாதவனோடு சென்று
இருக்கிறாளே.. அவள் வரும் போது
என் தங்கையாகவே வந்தால் போதும்
டா" என்ற சிவாவின் கண்கள் கலங்கி
விட்டது. அவன் என்ன நினைத்துக்
கலங்குகிறான் என்று கார்த்திக்கிற்கு
புரியாமல் இல்லை.. அவன்
நிலைமையும் கார்த்திக்கிற்கு புரிந்தது. "அரவிந்த் ப்ரண்ட் அங்கு தான் சிவா வேலையில் இருக்கிறார். அவரை வைத்து தேடச் சொல்லி இருக்கிறேன் என்றான் அரவிந்த்" என்றவனைப் பார்த்த சிவா "சரிடா.. நான் இப்போதே கிளம்புகிறேன்" என்று பரபரப்பாகக் கூறினேன்.

"சிவா.. அவசரப்படாதே.. அவர்கள்
எப்படியும் இன்னும் அரை மணி
நேரத்தில் கண்டுபிடித்து விடுவார்கள்.. பிடித்து இருவரையும் பாதுகாப்பாக
வைத்திருப்பார்கள்.. நானும் நாளை
உன்னுடன் வருகிறேன்.. காலை
கிளம்பிவிடலாம். ஏன் என்றால்
பிடிப்பட்ட உடனே நாம் போய் நின்றால் மிதுனா கோபத்தில் வரவில்லை
என்று சொன்னாலும் சொல்லி
விடுவாள்.. அவள் மேஜர் வேறு..
பொறுமையாகப் போய் அவளை
சமாதானம் செய்து கூட்டி வரலாம்"
என்று அவனுக்கு பக்குவமாக
எடுத்துக் கூறினான்..

கார்த்திக் வர ஒரு மணி ஆகிவிட்டது.
கார் சத்தம் கேட்டு மது கீழே வர
அதற்குள் ஜானகி அம்மாள் சென்று
கதவைத் திறந்து விட்டார். உள்ளே
நுழைந்தவன் "ஏன்மா தூங்கலையா?"
என்று கேட்டபடியே நடந்தான்.

"எங்கே கார்த்திக் போனாய்?" என்று
கேட்டவரிடம் சட்டையில் மேல் இரண்டு பட்டனை கழற்றியபடி விவரம்
கூறினான். மது என்று ஒருத்தி
நின்றிருந்ததை அவன் சட்டை
செய்யவே இல்லை.

"சரி வந்து சாப்பிடு" என்று மகனை
அழைத்தவர்... "மது வா நீயும் வந்து
சாப்பிடு" என்று மதுவை அழைத்தார்.

அவளைத் திரும்பி ஒரு பார்வை
பார்த்தவன் "அவள் ஏன் இன்னும்
சாப்பிடவில்லை" என்று அன்னையிடம் வினவினான்.. "உன் பொண்டாட்டி
சாப்பிடவில்லை என்று என்னிடம்
கேட்கிறாய்" என்று வெடுக்கென்று
பதில் வந்தது அவரிடம் இருந்து. பின்
மகனையும் மருமகளையும் அமர
வைத்து இருவருக்கும் பரிமாறினார்
ஜானகி. இருவருமே பேருக்காகச்
சாப்பிட்டுவிட்டு எழுந்தனர்.

சாப்பிட்டு விட்டு மதுவை கண்டு
கொள்ளாது படி ஏறப் போனான்
கார்த்திக்.

"நில்லு கார்த்திக்..உன்னிடம்
கொஞ்சம் பேச வேண்டும்" என்ற தன்
அன்னையின் குரல் கார்த்திக்கை
நிற்க வைத்தது. அவன் திரும்ப
"மதுவை அடித்தாயா?" என்று ஜானகி
அம்மாள் கேட்க மதுவைத் திரும்பிப்
பார்த்தவன்.

"ஏன் உங்களிடம் வந்து சொன்னாளா?" என்று நடந்ததை ஏளனமான குரலில்
வினவ "அவள் சொல்ல வேண்டும்
என்று இல்லை.. உன் கை தடத்தை
அவள் கன்னமே காட்டிக் கொடுத்து
விட்டது" என்று மகனிற்கு அவனின்
ஏளனத்தை மிஞ்சியக் குரலில் பதில்
அளித்தார். பின் அவனின் தாய்
அல்லவா?

"அம்மா என்ன நடந்தது என்று
உங்களுக்குத் தெரியுமா?" என்று
அவரிடம் நடந்ததைக் கூறினான்.

"சரி அப்படியே இருக்கட்டும்.. அதற்கு
கையை நீட்டுவாயா?" என்று கேட்க
கார்த்திக் எதுவும் பேசாமல் நின்றான்.
பேச முடியாமல் இல்லை. தன்
அன்னையை எதிர்த்துப் பேச
விரும்பவில்லை அவன்.

அவன் பேசாமல் நிற்பதைக் கண்டவர்
"இங்க பாரு கார்த்திக் மதுவும் நம்ம
நிலா போலத் தான் அவர்கள் வீட்டில்
செல்லமாக வளர்ந்த பெண்.. உனக்கு
கல்யாணம் செய்து கொடுத்து
விட்டால் நீ என்ன வேண்டுமானாலும்
செய்யலாம் என்று இல்லை..
உன்னையே நம்பி வந்தவளை கை
நீட்டி அடிக்கவா நாங்கள் கற்றுக்
கொடுத்தோம்" என்று கேட்டவர்
"கோபத்தை அடக்கப் பழகிக் கொள்
கார்த்திக்" என்று தன்னால் முடிந்த
வரை மகனிற்கு எடுத்துரைத்து விட்டு
அறைக்குச் சென்றுவிட்டார் ஜானகி.

அவர் சென்ற பின் மதுவை
முறைத்தவன்.. படி ஏறி அறைக்குள்
புகுந்து கொண்டான். மதுவும் அவன்
பின்னே சென்று ரூம் கதவைச் சாத்தி
விட்டுத் திரும்ப "உன் ப்ரண்ட்
திருச்சில தான் இருக்கா...கல்யாணம்
பண்ணிக்க போயிருக்கா.. ஏதோ
கலேஜில் கூடப் படித்த பையனாம்.. நீ
சொல்லவில்லை என்றாலும் அவளது
போனை ட்ராக் பண்ணிவிட்டோம்...
எப்படியும் விடியற்காலை பிடித்து
விடுவார்கள். ஆமாம் உனக்கு
திருச்சில யார் இருக்காங்கனு அங்க
அனுப்பி வச்ச" என்று எகத்தாளமாகக்
கார்த்திக் கேட்க மது "நான் எவ்வளவு
தடவை கார்த்திக் சொல்லுவது..
எனக்கு தெரியாது என்று.. அவள்
எனக்கு ஏன் அப்படி கால் பண்ணி
சொன்னாள் என்று புரியவில்லை"
என்று மன்றாடிப் பார்த்தாள். அவள்
ஏற்கனவே அழுது இருந்தக் கோலம்
அவனை உறுத்தியது.. பேச்சை
வளர்க்கவும் அவன் விரும்பவில்லை.

"நீ எதுவும் சொல்ல வேண்டாம்" என்று
படுக்கைக்குச் சென்றவன்... "அப்புறம் என் பெயரை சொல்லி இனி
என்னைக் கூப்பிடாதே" என்று படுத்து
விட்டான். கோபத்தை எப்படி எல்லாம்
காட்ட முடியுமோ அப்படி எல்லாம்
தன்னையே அறியாமல் அவளிடம்
காட்டிக் கொண்டு இருந்தான்.

மதுவிற்கு வேதனையாக இருந்தது.
தான் புடித்த முயலுக்கு மூன்று
கால்கள் என்றே நிற்கிறானே...
அவளும் வந்து படுத்து விட்டாள்..
மதியம் சீக்கிரம் வந்துவிடு என்று
மெசேஜ் அனுப்பியவன் இவன்தானா
என்று இருந்தது மதுவிற்கு.. இந்த
நேரத்தில் எப்படி நீ அப்பா
ஆகிவிட்டாய் என்று சொல்லுவது..
எப்படி எடுத்துச் சொல்லுவது என்று
யோசித்தபடியே படுத்திருந்தாள்.
தினமும் அவனை அணைத்த படியே
படுத்து இருந்தவளுக்கு இன்று
அதுவும் தான் தாய் ஆகி இருக்கின்ற
நிலைமையில் அவன் அருகாமைக்கு
மதுவின் மனம் ஏங்கியது.

திரும்பிப் படுத்து இருந்த கார்த்திக்கும் தூங்கவில்லை.. "ஒரு ஸாரி
கேட்கிறாளா பார்.." என்று நினைத்தபடி படுத்திருந்தான்.
அவர்கள் அப்போதே பேசி இருந்தால்
இருவருக்கும் அப்படி ஒரு இடைவெளி
விழுந்து இருந்திருக்காது.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
அடேய் கார்த்தி ????? சொதப்பிட்டியே ராசா... அடுத்த ud eppo authorji ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top