என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ
அத்தியாயம் 15
[attachment=0]eiFT5I172257.jpg[/attachment]
"இதழ் தீண்டாமல்...
விரல் தொடாமல்...
பார்வை வீழ்த்தியது!
கதை பேசாமல்..
லயம் தேடாமல்...
இதயம் சரிந்தது..!
உன்னால்.. எல்லாம் உன்னால்.. !"
தன் காதருகே கேட்ட அந்த வரிகளின் வீரியத்தில் ஆருவின் உடல் சிலிர்த்தது. உண்மையில் இவன் யார்.? என்னை ஏன் பாடாய் படுத்துகிறான்...?? இவனை சந்தித்து வாரங்கள் கூட ஆகி இருக்காது.. அதற்குள் என் உணர்வுகள் அடங்காமல் ஆர்ப்பரிப்பது ஏனோ...?! நிழலை தேடவா.. நிஜத்தை ஏற்கவா... ? மனம் இவனிடத்தில் ஏன் இத்தனை விருப்பமாய் சரணாகதி ஆக விரும்புகிறது... ?! மனதில் ஆயிரம் கேள்விகள் துளைக்க பெண்ணவள் தன் எதிரே அமர்ந்திருந்த அந்த ஆண்மகனின் நெருக்கத்தை விரும்பியே ஏற்றது.
கண்கள் பேச பாஷையில்லை... மூக்கின் நுனி இடைவெளி தூரமில்லை... இதழ்கள் தீண்ட இடமில்லை... ஈருடலும் மோதவில்லை..
ஆனால் எல்லாம் நடந்தது போல ஒரு பிரம்மை மனதில் எழாமல் இல்லை.
இரு உள்ளங்களும் அந்த இடைவெளி கலந்த நெருக்கத்தை விரும்பியது. ஆண் மகன் தன் உள்ளத்தை பெண்ணவளுக்கு ஒரு துளி மிச்சமின்றி கண்களில் காட்டினான். பெண்ணவள் உள்ளம் குழம்பியது. இது சாத்தியமா... இவனிடம் எனக்கு அந்த தேஜாவூவிடம் எழுந்த அதே பாதுகாப்பு உணர்வு எழுகிறதே...?!
அன்று வந்த அந்த நிழல் இங்கே கண்ணெதிரே இருக்கும் நிஜத்திடம் உணர்கிறதே...??!
நிழலும் நிஜமும் நின்று என் உணர்வுகளை இப்படி பந்தாடுகிறதே...?!
அவன் சட்டை துணி உடலில் மோதி காதல் ஹார்மோன்களை நரம்பெங்கும் கடத்தியது. பெண்ணவள் மெதுவாக இமைகளை தாழ்த்த முற்பட்டாள். அதே நேரம் ஆண்மகன் அவனது முகத்தை உயர்த்தினான். இது போதாதா.. சங்கமிக்க...?! அவள் நாசியின் நுனியில் அவனது இதழ் மொட்டுக்கள் பட்டு சிதறியது. முதல் முத்தம். ஆம்.. இதை முத்தம் என்றால் தகும் தானே...??!
இந்த ஜாதி மல்லி பூக்களை விட அழகு நீ என்பதை உணர்த்த கொடுத்தானோ இந்த மூக்கு நுனி முத்தம்?!
கன்ன கதுப்புக்கள் செந்தாமரையாய் மலர்ந்தது அவளுக்கு. அவன் மூச்சு காற்றின் வெட்பம் மூச்சடைக்க செய்தது.
தாக்குப்பிடிக்க முடியாமல் கீழிதழை மேலிதழால் கடித்துக் கொண்டாள். ஆண்மகன் யோக்கியம் காணாமல் போக வழி வகு..த்..த..தோ..??! பெண்ணவளின் இச்செய்கை.! மெதுவாக அவள் நாடியை பிடித்து உயர்த்தினான். சிப்பியாய் இமைகள் மூடியிருக்க.. அதன் அழகில் கவரப்பட்டவனாய் அடக்கமாட்டாமல் இதழ் பதித்தான் அம்முத்துக்களை அள்ள.
உன்னுடன் என்றும் எப்போதும் நான் பயணிக்க விரும்புகிறேன் என்று உள்ளம் காதல் மொழி பேசி..ய..து பெண்ணவளுக்கும் புரிந்ததோ..?!
எந்தவித தங்கு தடையின்றி காதல் வெள்ளம் கரை புரண்டோட வழி செய்தது இம்முத்தம்.
முத்தத்தின் சுவை எதையென்பேன்..?!
மழலையின் முதல் உணவா...
மங்கையின் இதழ் மணமா...
இதயம் வரை துளைக்கிறதே!
ஹப்பப்பா...
இப்படி ஆர்பரிக்கிறதே நெஞ்சம்...
உன்னில் கலந்திட..!
நொடிகள் கடக்க மனமே இல்லாமல் விலகினான் அவன்.
அழகான கனவு ஒன்று கலைந்தது போல இருந்தது இருவருக்கும்.
அவன் முகம் நோக்க சங்கடப்பட்டு பெண்ணவள் நிலம் பார்த்தாள். அவனுக்கு புரிந்தது அவளது தவிப்பு.
அவளை அவனை நோக்கி அமருமாறு செய்துவிட்டு பேச தொடங்கினான்.
"உன்கிட்ட கொஞ்சம் பேசணும். எல்லாத்தையும்...என் மனசுல உள்ள எல்லாத்தையும். ஒன்றுவிடாம எதையும் மறைக்காமல்... நான் சொல்லுறதை பொறுமையா கேட்பியா...?!"
அவன் கண்களை இப்போது நேருக்கு நேர் சந்தித்தாள் அவள். அவன் சொல்வது போல் இப்போது பேசி தான் ஆக வேண்டும். இந்த உணர்விலிருந்து விடுபட இது தான் வழி.
ஹ்ம்ம்... சொல். நான் கேட்கிறேன். எனபது போல் விழியோடு விழி பார்த்தாள்.
"உனக்கு ஏதாவது தோணுதா என்னை பார்க்கும் போது? ஏதாவது நியாபகம் இருக்குதா...?!"
இவன் எதை கேட்கிறான்..?! இவனை பற்றி எனக்கென்ன தெரியும்?! இவனை இதற்கு முன் நான் எங்கே பார்த்தேன்... நியாபக படுத்த என்ன இருக்கிறது...? பேந்த பேந்த முழித்தபடி வினவினாள்...
"எ..ன்..ன நியா..பக..ம்..?"
"ஹ்ம்ம்..
அப்படின்னா உனக்கு எதுவும் நியாபகத்துக்கு வரல...
சரி விடு...
நீ என்ன நினைக்கிறாய் என்னை பற்றி.."
என்னடா இது.. இவன் இப்படி பட்டென கேட்கிறான்..?
"ஹாங்....
உங்களை ப..ற்..றி நினைக்க எ..ன்..ன இருக்கு...?" புரியாதது போல கேட்டாள்.
சட்டென அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவள் தோளில் முகம் பதித்து.. கூந்தல் மணத்தை ருசித்தபடியே... சொன்னான்.
"இப்போ சொல்லு...
உனக்கு இப்போ எப்படி பீல் ஆகுது..."
இதயம் லப்-டப்....லப்-டப்... என்பதற்கு பதில்... ல...வ் மீ.... கி...ஸ் மீ... என்று பாடியது..
"ஏன் அமைதியா இருக்குற.. சொல்லு.. உனக்கு என்னோட அணைப்பு கஷ்டமா இருக்கா... ??! ஹ்ம்ம்... சொல்லு... மறைக்காத... எதுவா இருந்தாலும் சொல்லு...!"
இப்படி சொல்லு சொல்லுன்னு சொன்னா நான் என்னத்தைடா சொல்லுவேன். என்னோட இதயகீதத்தை சொன்னா காரி துப்பமாட்ட... அட..போடா...
அவளுக்கு பதில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதை அவளால் இப்போது சரியாக கையாள முடியும் என்று தோன்றவில்லை. எனவே மௌனம் சந்தித்தாள்.
"என்னால இதுக்கு மேல தாக்கு பிடிக்க முடியும்..ன்..னு தோணல பேபி.. உன்னை இப்படி ப..க்..க..த்துல வ..ச்..சி..க்..கிட்டு.. ம்ஹும்... ஒரு நிமிஷம் கூட தள்ளி நின்னு வேடிக்கை பார்க்க முடியலடா. இப்படி என்னோட கையணைப்பிலேயே வச்சிருக்கணும்னு தோணுது. பிளீஸ் பேபி புரிஞ்சிக்கோ."
அவள் ஒன்றும் பேசவில்லை. நடப்பதை அதன் போக்கில் போகவிட்டாள். அவன் தொடர்ந்து பேசலானான்.
"நான் செஞ்சு முடிக்க வேண்டிய கடமை ஒன்று பாக்கி இருக்கு. அதை செட்டில் பண்ணிட்டு தான் உன்கிட்ட இதைப்பற்றி பேசணும்ன்னு நினைச்சிருந்தேன். ஆ..னா..ல் உன்னை நேரில் பார்த்ததற்கு அப்புறமா... சத்தியமா முடியலடி...!
உனக்கு இதை நம்புவதற்கு கஷ்டமா தான் இருக்கும். பட் அது தான் உண்மை."
சொல்லியபடி அவள் நெற்றியில் இவன் நெற்றி கொண்டு முத்தமிட்டான். இதழ் தீண்டினால் தான் முத்தமா..?!
அத்தியாயம் 15
[attachment=0]eiFT5I172257.jpg[/attachment]
"இதழ் தீண்டாமல்...
விரல் தொடாமல்...
பார்வை வீழ்த்தியது!
கதை பேசாமல்..
லயம் தேடாமல்...
இதயம் சரிந்தது..!
உன்னால்.. எல்லாம் உன்னால்.. !"
தன் காதருகே கேட்ட அந்த வரிகளின் வீரியத்தில் ஆருவின் உடல் சிலிர்த்தது. உண்மையில் இவன் யார்.? என்னை ஏன் பாடாய் படுத்துகிறான்...?? இவனை சந்தித்து வாரங்கள் கூட ஆகி இருக்காது.. அதற்குள் என் உணர்வுகள் அடங்காமல் ஆர்ப்பரிப்பது ஏனோ...?! நிழலை தேடவா.. நிஜத்தை ஏற்கவா... ? மனம் இவனிடத்தில் ஏன் இத்தனை விருப்பமாய் சரணாகதி ஆக விரும்புகிறது... ?! மனதில் ஆயிரம் கேள்விகள் துளைக்க பெண்ணவள் தன் எதிரே அமர்ந்திருந்த அந்த ஆண்மகனின் நெருக்கத்தை விரும்பியே ஏற்றது.
கண்கள் பேச பாஷையில்லை... மூக்கின் நுனி இடைவெளி தூரமில்லை... இதழ்கள் தீண்ட இடமில்லை... ஈருடலும் மோதவில்லை..
ஆனால் எல்லாம் நடந்தது போல ஒரு பிரம்மை மனதில் எழாமல் இல்லை.
இரு உள்ளங்களும் அந்த இடைவெளி கலந்த நெருக்கத்தை விரும்பியது. ஆண் மகன் தன் உள்ளத்தை பெண்ணவளுக்கு ஒரு துளி மிச்சமின்றி கண்களில் காட்டினான். பெண்ணவள் உள்ளம் குழம்பியது. இது சாத்தியமா... இவனிடம் எனக்கு அந்த தேஜாவூவிடம் எழுந்த அதே பாதுகாப்பு உணர்வு எழுகிறதே...?!
அன்று வந்த அந்த நிழல் இங்கே கண்ணெதிரே இருக்கும் நிஜத்திடம் உணர்கிறதே...??!
நிழலும் நிஜமும் நின்று என் உணர்வுகளை இப்படி பந்தாடுகிறதே...?!
அவன் சட்டை துணி உடலில் மோதி காதல் ஹார்மோன்களை நரம்பெங்கும் கடத்தியது. பெண்ணவள் மெதுவாக இமைகளை தாழ்த்த முற்பட்டாள். அதே நேரம் ஆண்மகன் அவனது முகத்தை உயர்த்தினான். இது போதாதா.. சங்கமிக்க...?! அவள் நாசியின் நுனியில் அவனது இதழ் மொட்டுக்கள் பட்டு சிதறியது. முதல் முத்தம். ஆம்.. இதை முத்தம் என்றால் தகும் தானே...??!
இந்த ஜாதி மல்லி பூக்களை விட அழகு நீ என்பதை உணர்த்த கொடுத்தானோ இந்த மூக்கு நுனி முத்தம்?!
கன்ன கதுப்புக்கள் செந்தாமரையாய் மலர்ந்தது அவளுக்கு. அவன் மூச்சு காற்றின் வெட்பம் மூச்சடைக்க செய்தது.
தாக்குப்பிடிக்க முடியாமல் கீழிதழை மேலிதழால் கடித்துக் கொண்டாள். ஆண்மகன் யோக்கியம் காணாமல் போக வழி வகு..த்..த..தோ..??! பெண்ணவளின் இச்செய்கை.! மெதுவாக அவள் நாடியை பிடித்து உயர்த்தினான். சிப்பியாய் இமைகள் மூடியிருக்க.. அதன் அழகில் கவரப்பட்டவனாய் அடக்கமாட்டாமல் இதழ் பதித்தான் அம்முத்துக்களை அள்ள.
உன்னுடன் என்றும் எப்போதும் நான் பயணிக்க விரும்புகிறேன் என்று உள்ளம் காதல் மொழி பேசி..ய..து பெண்ணவளுக்கும் புரிந்ததோ..?!
எந்தவித தங்கு தடையின்றி காதல் வெள்ளம் கரை புரண்டோட வழி செய்தது இம்முத்தம்.
முத்தத்தின் சுவை எதையென்பேன்..?!
மழலையின் முதல் உணவா...
மங்கையின் இதழ் மணமா...
இதயம் வரை துளைக்கிறதே!
ஹப்பப்பா...
இப்படி ஆர்பரிக்கிறதே நெஞ்சம்...
உன்னில் கலந்திட..!
நொடிகள் கடக்க மனமே இல்லாமல் விலகினான் அவன்.
அழகான கனவு ஒன்று கலைந்தது போல இருந்தது இருவருக்கும்.
அவன் முகம் நோக்க சங்கடப்பட்டு பெண்ணவள் நிலம் பார்த்தாள். அவனுக்கு புரிந்தது அவளது தவிப்பு.
அவளை அவனை நோக்கி அமருமாறு செய்துவிட்டு பேச தொடங்கினான்.
"உன்கிட்ட கொஞ்சம் பேசணும். எல்லாத்தையும்...என் மனசுல உள்ள எல்லாத்தையும். ஒன்றுவிடாம எதையும் மறைக்காமல்... நான் சொல்லுறதை பொறுமையா கேட்பியா...?!"
அவன் கண்களை இப்போது நேருக்கு நேர் சந்தித்தாள் அவள். அவன் சொல்வது போல் இப்போது பேசி தான் ஆக வேண்டும். இந்த உணர்விலிருந்து விடுபட இது தான் வழி.
ஹ்ம்ம்... சொல். நான் கேட்கிறேன். எனபது போல் விழியோடு விழி பார்த்தாள்.
"உனக்கு ஏதாவது தோணுதா என்னை பார்க்கும் போது? ஏதாவது நியாபகம் இருக்குதா...?!"
இவன் எதை கேட்கிறான்..?! இவனை பற்றி எனக்கென்ன தெரியும்?! இவனை இதற்கு முன் நான் எங்கே பார்த்தேன்... நியாபக படுத்த என்ன இருக்கிறது...? பேந்த பேந்த முழித்தபடி வினவினாள்...
"எ..ன்..ன நியா..பக..ம்..?"
"ஹ்ம்ம்..
அப்படின்னா உனக்கு எதுவும் நியாபகத்துக்கு வரல...
சரி விடு...
நீ என்ன நினைக்கிறாய் என்னை பற்றி.."
என்னடா இது.. இவன் இப்படி பட்டென கேட்கிறான்..?
"ஹாங்....
உங்களை ப..ற்..றி நினைக்க எ..ன்..ன இருக்கு...?" புரியாதது போல கேட்டாள்.
சட்டென அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவள் தோளில் முகம் பதித்து.. கூந்தல் மணத்தை ருசித்தபடியே... சொன்னான்.
"இப்போ சொல்லு...
உனக்கு இப்போ எப்படி பீல் ஆகுது..."
இதயம் லப்-டப்....லப்-டப்... என்பதற்கு பதில்... ல...வ் மீ.... கி...ஸ் மீ... என்று பாடியது..
"ஏன் அமைதியா இருக்குற.. சொல்லு.. உனக்கு என்னோட அணைப்பு கஷ்டமா இருக்கா... ??! ஹ்ம்ம்... சொல்லு... மறைக்காத... எதுவா இருந்தாலும் சொல்லு...!"
இப்படி சொல்லு சொல்லுன்னு சொன்னா நான் என்னத்தைடா சொல்லுவேன். என்னோட இதயகீதத்தை சொன்னா காரி துப்பமாட்ட... அட..போடா...
அவளுக்கு பதில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதை அவளால் இப்போது சரியாக கையாள முடியும் என்று தோன்றவில்லை. எனவே மௌனம் சந்தித்தாள்.
"என்னால இதுக்கு மேல தாக்கு பிடிக்க முடியும்..ன்..னு தோணல பேபி.. உன்னை இப்படி ப..க்..க..த்துல வ..ச்..சி..க்..கிட்டு.. ம்ஹும்... ஒரு நிமிஷம் கூட தள்ளி நின்னு வேடிக்கை பார்க்க முடியலடா. இப்படி என்னோட கையணைப்பிலேயே வச்சிருக்கணும்னு தோணுது. பிளீஸ் பேபி புரிஞ்சிக்கோ."
அவள் ஒன்றும் பேசவில்லை. நடப்பதை அதன் போக்கில் போகவிட்டாள். அவன் தொடர்ந்து பேசலானான்.
"நான் செஞ்சு முடிக்க வேண்டிய கடமை ஒன்று பாக்கி இருக்கு. அதை செட்டில் பண்ணிட்டு தான் உன்கிட்ட இதைப்பற்றி பேசணும்ன்னு நினைச்சிருந்தேன். ஆ..னா..ல் உன்னை நேரில் பார்த்ததற்கு அப்புறமா... சத்தியமா முடியலடி...!
உனக்கு இதை நம்புவதற்கு கஷ்டமா தான் இருக்கும். பட் அது தான் உண்மை."
சொல்லியபடி அவள் நெற்றியில் இவன் நெற்றி கொண்டு முத்தமிட்டான். இதழ் தீண்டினால் தான் முத்தமா..?!