• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode அத்தியாயம் 16 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Enna mudiva irukum athu????....

Yenda dei ava enna solla varanu kekka mattiya
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
பின் வேலுமணி எங்கோ சென்று
விட்டு வர மூவரும் டி.வி யைப் போட்டு
உட்கார்ந்தனர். மது
உட்கார்ந்திருந்தாளே தவிர சிந்தனை
எல்லாம் எங்கெங்கோ இருந்தது.

"மதுக்குட்டி" என்ற அழைப்பில் மது..
வேலுமணி.. ஜானகி.. மூவரும்
வாயிலை நோக்கித் திரும்பினர்.
மதுவின் தாத்தா-பாட்டி மற்றும்
வருணும் நின்று இருந்தனர். 'தாத்தா'
என்று எழுந்தவளுக்கு கண் கலங்கி
அவரிடம் சென்று அவரைக் கட்டிப்
பிடித்துக் கொண்டாள் மது.

வேலுமணி ஜானகியிடம் முன்னேயே
சொல்லி இருந்தனர் வருவதாக.
ஆனால் அவர்கள் இருவருமே
இருந்தக் குழப்பத்தில் மருமகளிடம்
சொல்ல மறந்துவிட்டனர்.

பின் வேலுமணி-ஜானகி தம்பதியர்
அவர்களை வரவேற்று உபசரிக்க
தாத்தவின் கைகளைப் பிடித்தபடியே
அமர்ந்திருந்தாள் மதுமிதா.

"அக்கா இந்தா... அம்மா இதைக்
கொடுக்கச் சொன்னார்கள்" என்று
வெளியே சென்று காரில் இருந்த ஒரு
சம்படத்தை எடுத்து வந்து தந்தான்
வருண்.

"என்னடா இது" என்று மது வினவ
"லட்டு தான்.. மேடத்திற்கு பிடிக்கும்
என்றே செய்து என்னிடம் தந்து
அனுப்பி வைத்தார்கள்.. ஈவ்னிங் தான்
வரலாம்-னு இருந்தேன்.. மாமாவிற்கு
போன் பண்ணி என்ன டைம்-க்கு
வருவீங்கன்னு கேட்டேன்.. நீ
இன்னிக்கு ஹாஸ்பிடல் போலன்னு
சொன்னார். தாத்தாவும் உன்னைப்
பாக்கனும் போல இருக்குன்னு
சொல்ல இரண்டு பேரும் கிளம்பி
என்னுடன் வந்து விட்டார்கள்" என்று
சொன்னான்.

கணவனைப் பற்றி சிந்தனை
செய்தவள் தம்பி தந்த லட்டு
சம்படத்தைக் கொண்டு போய் சமையல் அறையில் வைத்து விட்டு
வந்தவள் தாத்தா உடனேயே அமர்ந்து
விட்டாள். ஏனோ நேற்றிலிருந்து
மனச்சோர்வில் இருந்தவளுக்கு
அவளை சின்னக் குழந்தையில்
இருந்து வளர்த்தவரைக் கண்டதில்
சற்று அமைதியாகத் தெரிந்தது.

தாத்தாவிடம் வந்து உட்கார்ந்த
மதுவை ஈஸ்வரி பாட்டி உற்று
நோக்கினார். "ஏன் மது டயர்டா
இருக்க.." என்று பாட்டி கேட்க "அது
நேற்று வேலை அதிகம் பாட்டி அதான்"
என்ற பொய்யைச் சொன்னாள்.

பிறகு வேலுமணியும் சண்முகம்
தாத்தாவும் ஏதோ பேச ஆரம்பிக்க...
மது வருணிடமும் பாட்டியிடமும் பேசிக்
கொண்டு இருந்தாள்.. வருண் மதுவை
ஏதோ கிண்டல் செய்ய "இவன் இப்படி
பேசுறான்ல.. நீ வந்த அப்புறம் 'அக்கா'
'அக்கா' 'என் அக்கா இருந்திருந்தா
இப்போ இப்படிச் செய்வாள்' என்று
அக்கா புராணம் பாடுகிறான்" என்று
வருணை கிண்டலடித்தார் பாட்டி.

தமையனைப் பார்த்து "அப்படியாடா"
என்று கேட்டுச் சிரித்தாள் மது..
"அதெல்லாம் இல்லை.. சண்டைப்
போட ஆளில்லை... அதான் உன்
பெயரை வைத்து இவர்களை
வம்பிழுத்தேன் " என்று
வேண்டுமென்றே தன் அக்காவை
சீண்டினான். "சரிதான் போடா" என்று
வருணின் தலையைத் தட்டிய மதுவின் புன்னகை அப்படியே நின்றது..
கார்த்திக் தான் நின்றிருந்தான்.
எல்லோரையும் இன்முகத்துடன்
வரவேற்றவன் மதுவைப் பார்த்து ஒரு
பார்வையை மட்டும் வீசிவிட்டு மேலே
சென்றுவிட்டான்.

உடையை மாற்றிவிட்டுக் கீழே
வந்தவன் அனைவரிடமும் நன்றாகப்
பேசிக் கொண்டு இருந்தான். நேற்று
நடந்த நிகழ்வின் சுவடு ஒன்று கூட
அவனிடம் தென்படவில்லை. "எப்படி
ஒன்னும் நடக்காத மாதிரி இவனால்
உட்கார முடியுது" என்று மது மனதில்
புகைந்து கொண்டு இருந்தாள்.

வெளியே வந்த ஜானகி "சாப்பிட்டு
விட்டுத் தான் போக வேண்டும்" என்று
கட்டளையிட மதுவும் மாமியாருக்குச்
சென்று உதவினாள்.. உள்ளே வந்தப்
பாட்டியை எதுவும் செய்யக் கூடாது என்று மாமியாரும் மருமகளும்
ஒருசேர மிரட்டி அமர வைத்து விட்டனர்.
வெளியே வருணும் கார்த்திக்கும்
சிரித்தது நன்றாகவே மதுவின்
காதுகளில் விழுந்தது. பின் மது
எதற்கோ வெளியில் வர "மது.. உங்கள்
கல்யாண ஆல்பத்தை எடுத்து வா...
எல்லோரும் பார்க்கட்டும்" என்றார்
வேலுமணி.

மது மேலே சென்று எடுத்து வந்து
வருணின் கைகளில் வைத்து விட்டுப்
போனாள். கார்த்திக் அவளை ஒரு
பார்வை பார்த்ததையும் கவனிக்காமல் உள்ளே சென்று விட்டாள். பின்பு
பாட்டியும் அவர்களுடன் சென்று
பார்க்க ஆரம்பித்தார். சமையல்
வேலை எல்லாம் முடித்துக் கொண்டு
ஜானகி அழைக்க அனைவரும் வந்து
அமர்ந்தனர்... மதுவும் ஜானகியும்
பரிமாறினர். வருணும் கார்த்திக்கும்
சீக்கிரம் சாப்பிட்டு முடித்து எழுந்து
கைகழுவி விட்டு நகர்ந்தனர்.

பிறகு "நீங்கள் உட்காருங்கள் அத்தை.."
என்று மது சொல்ல "நீயும் உட்கார்"
என்றார் ஜானகி.. தலையை மறுப்பாக
அசைத்தவள் "மதியம் லேட்டாகத்
தானே அத்தை சாப்பிட்டேன்..
எனக்குப் பசி இல்லை.. இன்னும்
கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடுகிறேன்" என்று விட்டாள் மது..

பின் அனைவரும் சாப்பிட்டு முடிக்க
வருணை எங்கே எனத் தேடி வெளியே
வர கார்த்திக்கும் அவனும் பேசிக்
கொண்டு இருந்ததைக் கண்டாள்.. மது
திரும்ப எத்தனிக்க "அக்கா இங்க வா"
என்றான் அவளின் அருமை
சகோதரன்.

அமைதியாக அவன் அருகில் சென்று
நின்றவளின் தோளில் கை போட்ட
வருண் "என் அக்கா இங்கேயும்
சேட்டை செய்கிறாளா மாமா.. அங்கே
வீட்டில் அதிகமாக இருக்கும்.. சின்ன
வயதில் சீக்கிரம் என்னை ஏமாற்றி
விடுவாள் ஏதாவது விசயங்களில்"
என்று கார்த்திக்கிடம் கேட்டுக்
கொண்டு இருந்தான் வருண்.

ஒரு நிமிடம் மதுவைப் பார்த்த
கார்த்திக் "ஆமாம்.. அப்படித்தான்..
உங்கள் வீட்டில் மாதிரியே இங்கேயும்
எல்லோரின் சப்போர்ட்டும்
இவளுக்கே.. ஆனால் உன்
அக்காவால் என்னை அவ்வளவு
எளிதில் ஏமாற்ற முடிவதில்லை" என்று மதுவைக் குத்திப் பேசினான்.
மதுவிற்கு சுரீரென்றது.. கோபமும்
எட்டிப் பார்த்தது.. அவன் சொன்ன
அர்த்தம் அவளுக்குப் புரியாமல்
இல்லை.

"ஆனால் வருண்.. நீ நான் ஏதாவது
பொய் சொன்னால் கூட
நம்பிவிடுவாய். உன் மாமா நான்
உன்மையைச் சொன்னால் கூட நம்ப
மாட்டார்" என்று கூறி தன் கணவனை
ஒரு வெற்றுப் பார்வை பார்த்தாள்..

வருண் அவர்கள் இயல்பாக
பேசுவதாக எண்ணினான்.
கார்த்திக்கிற்கு தான் கோபம்
தலைக்கேறியது.. அச்சமயம் ஜானகியும் மதுவை அழைக்க மது
உள்ளே சென்று விட்டாள். பின்பு
மூவரும் கிளம்ப நின்ற போது தான்..
மதுவிற்கு மறுபடியும் சோர்ந்து போல
ஆனது. கஷ்டப்பட்டு முகத்தை சிரித்த
படி வைத்து இருந்தாள். அவர்களை
அனுப்பி விட்டு உள்ளே நுழைய
கார்த்திக் மேலே சென்று விட்டான்.
பிறகு மாமியாரிடம் பேசியபடியே
உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு
இருக்க அவரும் சமையல் அறையை
துடைத்துவிட்ட படியே பேசிக் கொண்டு இருந்தார் மதுவிடம்.

பிறகு சாப்பிட்டு விட்டு மேலே
சென்றவளுக்கு குமட்டல் எடுக்க
பாத்ரூமை நோக்கி ஓடினாள். ஏதோ
சாப்பிட்டது எல்லாம் வெளியே
வந்ததைப் போல இருந்தது மதுவிற்கு.
இந்த மசக்கை தன்னை இப்படி
பாடாய்ப்படுத்துகிறதே என்று
எண்ணினாள் மது. மேலும் இந்த
நேரத்தில் தாங்கிப் பிடிக்க நினைத்தக்
கைகள் நேற்று கன்னத்தை அல்லவா
பதம் பார்த்தது என்று
நினைத்தவளுக்கு துக்கம்
தொண்டையை அடைத்தது.

வெளியே வந்தவள் அப்போது தான்
கார்த்திக் அங்கு இல்லை என்பதை
உணர்ந்தாள்.. பால்கனியில்
பார்த்தால் அங்கும் அவன் இல்லை..
யோசித்துக் கொண்டு இருக்கும்
போதே அறைக்குள் நுழைந்தான்
கார்த்திக்.. "எங்கே போய் இருந்தீங்க"
என்று கேட்க வந்த மது எதுவும்
கேட்கவில்லை காரணம் அவன் முகம்
தாடை எல்லாம் இறுகி இருந்தது.

ஆனால் அவனிடம் இருந்து வீசிய
சிகரெட் நெடியே அவன் மொட்டை
மாடியில் இருந்து வந்து இருக்கிறான்
என்று சொன்னது.

கதவைச் சாத்தி விட்டு வந்தவன்,
மதுவிற்கு முதுகைக் காட்டி
படுத்துவிட்டான். என்ன எப்போது
பார்த்தாலும் காய்கிறான் நம் மேல்..
வருணிடம் நான் சொல்லியதற்குக்
கோபம் என்றால் இவன் பேசியது
மட்டும் நியாயமா என்று மது
நினைத்தாள். பெட்டின் இன்னொரு
பக்கம் உட்கார்ந்து இருந்தவள்
இவனது கோபம் இப்போதைக்கு
குறையாது, பேசாமல் தான்
கருவுற்றிருப்பதைச் சொல்லி
விடலாம் என்று முடிவெடுத்து
"கார்த்திக்" என்று அவன் தோளின்
மீது கை வைத்து அழைத்தாள்.

அவள் அழைத்தவுடன் கோபத்துடன்
பெட்டில் இருந்து இறங்கி எழுந்து
நின்றவன் "என்ன...டெம்ப்ட் பண்ண
ட்ரைப் பண்றையா? இந்த
பொண்ணுங்களுக்கு எல்லாம் இது
ஒரு பழக்கமாப் போச்சு. ஆனால் நான்
அந்த அளவுக்கு மடையன் இல்லை"
என்று கோபத்துடன் அழுத்தமாக
உரைத்து விட்டு பால்கனிக்குச் சென்று விட்டான்.

மதுதான் அவன் பேசிய
வார்த்தைகளால் உடைந்து விட்டாள்.
"இவனை யார் இப்போது
முந்தானையில் முடிந்து வைக்க
முயற்சி செய்தார்களாம். இவன் சொல்
கேட்கும் படி அனைவரையும் வைத்து
விட்டு... இவனை நான் டெம்ப்ட்
பண்ண ட்ரை பண்றேனாம். எப்படி
எல்லாம் பேசுகிறான் என்று
இதயத்தில் ரத்தம் வழியாத குறையாக இருந்தது. பால்கனியில் இருந்து
சிகரெட் நெடி வேறு வந்தது. அவள்
இங்கு வந்த தினத்திலிருந்து அவன்
பால்கனியில் சிகரெட் பிடித்ததே
இல்லை.. எப்பாவது
கோவையிலிருந்து பொள்ளாச்சி
வரும் வழியில் பிடிப்பான் அல்லது
வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று
விடுவான். அதுவும் அந்த நெடி
அவளுக்கு எட்டாதவாறு கொஞ்சம்
தள்ளி நின்று பிடிப்பான். ஆனால்
இன்று... விம்மி வெடித்துக் கொண்டு
அழுகை வந்தது மதுவிற்கு. அழும்
சத்தம் கேட்டால் அதற்கும் திட்டுவான்
என்று கண்ணையும் வாயையும் இறுக மூடினாள். அவன் சிறிது நேரம் கழித்து உள்ளே வருவது தெரிந்தவுடன்
போர்வையால் காலில் இருந்து தலை
வரை தூங்குவதைப் போல மூடிக்
கொண்டாள்.

அடுத்த நாளிலிருந்து வழக்கம் போல
ஹாஸ்பிடல் சென்று வர
ஆரம்பித்தாள். ஆனால் இருவருக்கும்
இடையே இருக்கும் பேச்சு அடியோடு
நின்றுவிட்டது. அவன் அப்படிக் கேட்டதில் இருந்து மதுவிற்கும் அவனுடன் பேசவே பயமாக இருந்தது. ஏதோ பேச இஷ்டமும் இல்லாமல் இருந்தது.காதலையும் காமத்தையும் அவனால் மட்டுமே உணர்ந்தவளால் அவன் அப்படிக் கேட்டதில் அவளின்
உள்ளத்தில் வெறுமை பரவியிருந்தது.

இறுகியபடியே இருக்க ஆரம்பித்தாள்
மதுவும்.. காரில் வரும் போது கூட
தலையை வெளியே திருப்பிப்
பார்த்தபடியே வர ஆரம்பித்தாள்.
சரியாகி விடும் என்று நினைத்த ஜானகிக்கு மகன் மருமகள் இப்படி
இருப்பது சரியாகப்படவில்லை.

சில் வண்டாய் மருமகள் அவனையே
வீட்டிற்குள் சுற்றி வந்ததும்.. மகனும்
மாலை வந்தவுடன் ஏதாவது ஒரு
சாக்கு சொல்லி சமையல் மேடையில்
உட்கார்ந்து கொண்டு சமையல்
செய்பவளிடம் வம்பு இழுத்துக்
கொண்டிருந்ததும்.. ஆனால் இப்போது ஆளுக்கு ஒரு திசையில் முகத்தைத்
திருப்பி வைத்திருப்பதும் அவருக்குக்
கஷ்டமாக இருந்தது. இந்த
விஷயத்தில் கணவன் சொன்னதைப்
போல மூக்கை நுழைக்கவும்
அவருக்கு ஜானகிக்குப்
பிடிக்கவில்லை.. ஆனால் அப்படியே
விடவும் மனது வரவில்லை.

மேலும் சிரித்து சிரித்து பேசும்
மருமகள் கூட இப்போது முகம் இறுகி
இருப்பதைக் கண்டவருக்கு
வேதனையாகவும் பயமாகவும்
இருந்தது. ஏதாவது செய்ய வேண்டும்
என்று முடிவு எடுத்தவர் கணவரிடம்
அன்று இரவு உறங்கச் செல்லும் முன்
தன் மனதில் ஓடிக் கொண்டு
இருந்ததைச் சொன்னார்.

"நானும் கவனித்தேன் ஜானகி..
உன்னிடம் பேச வேண்டும் என்று கூட
நினைத்தேன். நம் கார்த்திக் தான்
பிடிவாதம் என்றால் மதுவும் அவனுக்கு மேல் பிடிவாதமாகத் தெரிகிறாள்.."
என்றார் தன் மூக்குக் கண்ணாடியைக்
கழட்டி வைத்தபடி பேசினார்.

வேலுமணி சொன்னதையும்
ஜானகியால் மறுக்க முடியவில்லை.
மதுவும் பிடிவாதம் பிடிக்கும் பெண்
தான்.. "இப்போது என்னங்க
பண்ணலாம்.." என்று யோசனையுடன் கேட்டார் ஜானகி.

"நாளை மாலை நியாபகப் படுத்து..
சொல்லுகிறேன்" என்று
படுத்துவிட்டார். ஜானகியும் 'காமாட்சி
அம்மா நீதான் துணை இருக்கனும்'
என்று கடவுளின் மீது பாரத்தைப்
போட்டு படுத்து விட்டார்.

வேலுமணியும் ஒரு முடிவை எடுத்தார்.

அது இருவருக்கும் சாதகமாக
அமையுமா?
Avangaluke kovam vandhuduchu.....😔
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top