என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ
அத்தியாயம் 16
தகிக்கும் தீ...
காதல் திருவிழாவில்...
தணிக்கும் தீ..
காதல் திருவிளையாட்டில்...
தன் காதில் விழுந்த செய்தி கேட்டதும் ஆராதனாவிற்கு படப்படப்பாய் வந்தது. தேகம் நடுங்கியபடி பெண்ணவள் தரையை அழுத்தமாய் முத்தமிட்டாள் .
ஏற்கனவே அதிர்ந்து போய் செய்தி சொல்ல வந்த தூதுவச்சி கீதாவின் நிலையோ அதை விட மோசம்.
அப்படியே நிலைகுலைந்து பேசா மடைந்தையாய்... அசையாமல் நின்றிருந்தாள். எங்கோ கேட்ட குயிலோசையில் லேசாக அசைவு வந்தது பெண்ணிடம். மேலும் சில நொடிகள் கடந்த பிறகே முழுதாக நினைவிற்கு திரும்பினாள்.
கீழே மயங்கிய நிலையில் கிடந்த தன் ஆருயிர் தோழி ஆருவை பார்த்ததும் பதறி போனாள் கீதா. அவளை மடி தாங்கிய படி கன்னங்களில் மாறி மாறி தட்டி சுயத்திற்கு வர போராடினாள். ஆருவிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை. அப்படியே அசையாமல் கிடக்கவும் கீது மேலும் பதறினாள். சட்டென எழுந்து அருகிலிருந்த பாட்டிலிலிருந்து தண்ணீரை எடுத்து ஆருவின் முகத்தில் தெளித்தபடி "ஆ..ரு ஆ..ரு... ஹே.. ஆரு.. கண்ணை திறந்து பாருடி.." பதற்றத்துடன் அவளை எழுப்ப முற்பட்டாள். சில நிமிடங்கள் கடந்து பல வேண்டுதலுக்கு பிறகே கண் விழித்தாள் ஆரு.
"நான் ரொம்ப பயந்துட்டேன் ஆரு. இப்போ உனக்கு ஒன்றும் இல்லையே...?!"
முகத்தினை கைகளால் அழுந்த தேய்த்து கொண்டாள். ஒரு முறை கண் மூடி நடந்ததை நினைத்து பார்த்தாள். மனம் கலங்கியது. தன் முகத்தினை மறைத்தபடி விழுந்த முடி கற்றைகளை காதோரமாய் ஒதுக்கியபடி கீதுவை நிமிர்ந்து பார்த்தாள்.
"ஹ்ம்ம்.... மேலே சொல்லு. உனக்கு யாரு சொன்னா... என்ன ஆச்சு அந்த கு..குர்க்கா..க்கு..?"
"ஷ்... நீ நினைக்கிற மாதிரி அவனோட சாவுக்கு நீ காரணம் இல்லை. அவனுக்கு யாரோ மயக்கமருந்து கொடுத்துருக்காங்க. அது ஓவர் டோஸ் ஆகி அவன் எதிரில் வந்த வண்டி மேலே மோதி இறந்திருக்கான். அவ்ளோ தான். சோ உனக்கும் இவனோட டெத்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை. புரியுதா உனக்கு?" தோழியை ஆறுதலாய் அணைத்தபடி கூறினாள்.
"இது ஏதாவது திருடனுங்க வேலையா இருக்கும் . சோ நீ தேவையில்லாம பயப்படாத.."
இப்போது கொஞ்சம் உடலும் மனமும் சமன்பட்டது போல இருந்தது ஆருவிற்கு.
"அது சரி. உனக்கு எப்படி இவ்ளோ விஷயம் தெரிஞ்சி?" புருவம் உயர்த்தியபடி கேட்டாள் பெண்ணவள் ஆரு.
"அ...து..
அ...து...
அது வ...ந்...து....து....து.."
"என்னடி இழுக்குற... என்ன விஷயம்...?"
ராஜே...ஷ் தான் சொன்னான். சொல்லியபடி குனிந்து கொண்டாள் கீது.
"எ..ன்..ன..து...?!!! இப்போ என்ன சொன்ன நீ...? கம் அகெய்ன்". வியப்பில் கத்திய படி கீதுவின் முகைத்தை நிமிர்த்தினாள் அவள், அவ்விழிகளோ நாணக் கவிதை பாடியது.
"ஹேய்... என்னடி இது.. நிஜமாவா...!! எப்படிடி...??
உனக்கும் ராஜேஷ்கும் எப்படிடி செட் ஆச்சு... கள்ளி இது எத்தனை நாளா நடக்குது? சொல்லவே இல்லை பார்த்தியா..??!"
நாணத்தால் சிவந்த முகத்தை மறைத்தபடி திக்கி திணறி பேசினாள் அவள்.
"விளக்குமாத்து கையோட அவனை அடிக்க அன்றைக்கு கை ஓங்குனேன்லா அ..ப்..போ..."
"அப்போ இருந்தேவா.. அடி எமகள்ளி.. ஒரு வார்த்தை சொன்னீயா நீ..?!"
"அய்யோ. அப்படிலாம் ஒன்னும் இல்லை. முதல நான் சொல்லி முடிச்சிருதேன். அதுக்கு அப்புறம் பேசு". என்றவள் தொடர்ந்து
"அவனோட மல்லுகட்டுனதுக்கு அப்புறமா எனக்குள்ள ஒரு பீலிங். அது எப்படி வந்துச்சி ஏன் வந்துச்சின்னு கேட்டா சத்தியமா எனக்கு சொல்ல தெரியலடி..."
சொல்லியபடி ஜன்னலருகே சென்று ஆகாய மன்னனின் நீல வண்ணத்தை ஆழ்ந்து பார்த்தாள். தனக்குள்ளே நினைவுகளை அசைப்போட்டபடி சில நொடி அமைதிக்கு பின் மெதுவாக பேச ஆரம்பித்தாள்.
"அந்த சம்பவத்துக்கு பிறகு அவனை அடிக்கடி எதேச்சையா சந்திக்கிற வாய்ப்பு அமைஞ்சுது. கொஞ்சம் கூர்ந்து கவனிச்ச அப்புறம் தான் தெரிஞ்சி.. இதெல்லாம் எதேச்சையா நடக்கல, எல்லாம் அவனோட வேலைன்னு. அவனோட செயல் பார்வை பேச்சு எல்லாம் எனக்கு அப்படி தான் சொல்லிச்சு. எனக்கு ஏற்பட்ட அந்த பீலிங் அவனுக்கும் வந்துருக்கும்ன்னு நினைக்கிறேன். இருந்தும் இந்த காதல் சாத்தியமா? அப்படின்னு எனக்குள்ள ஒரு சின்ன பயம். அவனோட காதல் உண்மையான்னு எனக்கு சந்தேகம். சோ அவனை தவிர்க்க நினைத்தேன். ஆனால்.. என்னால முடியல ஆரு... அவனை பார்க்காம இருந்த ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு எதை..யோ.. இழந்தது போல இருந்தது. என்னோட காதல் கூடிச்சே தவிர குறையல.
இன்றைக்கு காலைல உன்னை பார்க்க வரும் போது தான் மீண்டும் அவனை பார்க்கிற வாய்ப்பு கிடைச்சுது. அவன்கிட்ட சொல்லிடலாம்னு நினைக்கிறதுக்கு முன்ன உங்க அம்மா வந்துட்டாங்க".
"ஹே.. என்னடி சொல்லுற.. அப்புறம் எப்போ...டி.. நீங்க ரெண்டு பேரும் லவ்வை சொன்னீங்க?"
"இதோ இப்போ உன்னை பார்க்க வரதுக்கு முன்ன தான்". சொல்லியபடி கண்ணடித்தாள் தோழி.
"அடா... இவ்ளோ பாஸ்ட்டா நடந்துருக்கா... அது சரி.. ஹ்ம்ம்... அப்புறம்..." இடுப்பில் கை வைத்தபடி கேட்டாள் ஆரு.
"ஈவ்னிங் நம்ம தெரு பிள்ளையார் கோயிலுக்கு போயிருந்தேன். அப்போ தான் அவன் சொன்னான். அவனும் என்ன லவ் பண்ணுறானாம். நீ சொன்னது போல சும்மா விளையாட்டுக்கு தான் நம்ம பின்னாடி வந்திருக்கான். அப்புறம் அந்த சம்பவத்துக்கு பிறகு தான் அவனுக்கு புரிஞ்சிச்சாம். இப்போ சுயமா சம்பாதிக்கிறான். ஒழுங்கா வேலைக்கும் போகிறான். வேற எந்த பிரச்சனைக்கும் போறது இல்லை.. அப்படின்னு சொன்னான். என்னோட விருப்பத்தை கேட்டான். இவ்ளோ தூரம் அவனே எனக்காக மாறி இறங்கி வந்துருக்கான அதுல இருந்தே அவனோட காதல் உண்மைன்னு எனக்கு புரிஞ்சிது. சோ நானும் அக்ஸப்ட் பண்ணிட்டேன். அவனோட வீட்ல சொல்லி சீக்கிரம் பொண்ணு கேட்டு வராதா சொல்லியிருக்கான்".
"வாவ்.... கீது... சூப்பர்டி... சான்சே இல்லை... அடிச்சி தூள் கிளப்பிட்டான் உன் ஆளு... அப்போ கூடிய சீக்கிரமே அம்மணிக்கு கல்யாணம்ன்னு சொல்லு..." மகிழ்ச்சியாய் கட்டி அணைத்து கொண்டாள் தோழியை.
########################
அத்தியாயம் 16
தகிக்கும் தீ...
காதல் திருவிழாவில்...
தணிக்கும் தீ..
காதல் திருவிளையாட்டில்...
தன் காதில் விழுந்த செய்தி கேட்டதும் ஆராதனாவிற்கு படப்படப்பாய் வந்தது. தேகம் நடுங்கியபடி பெண்ணவள் தரையை அழுத்தமாய் முத்தமிட்டாள் .
ஏற்கனவே அதிர்ந்து போய் செய்தி சொல்ல வந்த தூதுவச்சி கீதாவின் நிலையோ அதை விட மோசம்.
அப்படியே நிலைகுலைந்து பேசா மடைந்தையாய்... அசையாமல் நின்றிருந்தாள். எங்கோ கேட்ட குயிலோசையில் லேசாக அசைவு வந்தது பெண்ணிடம். மேலும் சில நொடிகள் கடந்த பிறகே முழுதாக நினைவிற்கு திரும்பினாள்.
கீழே மயங்கிய நிலையில் கிடந்த தன் ஆருயிர் தோழி ஆருவை பார்த்ததும் பதறி போனாள் கீதா. அவளை மடி தாங்கிய படி கன்னங்களில் மாறி மாறி தட்டி சுயத்திற்கு வர போராடினாள். ஆருவிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை. அப்படியே அசையாமல் கிடக்கவும் கீது மேலும் பதறினாள். சட்டென எழுந்து அருகிலிருந்த பாட்டிலிலிருந்து தண்ணீரை எடுத்து ஆருவின் முகத்தில் தெளித்தபடி "ஆ..ரு ஆ..ரு... ஹே.. ஆரு.. கண்ணை திறந்து பாருடி.." பதற்றத்துடன் அவளை எழுப்ப முற்பட்டாள். சில நிமிடங்கள் கடந்து பல வேண்டுதலுக்கு பிறகே கண் விழித்தாள் ஆரு.
"நான் ரொம்ப பயந்துட்டேன் ஆரு. இப்போ உனக்கு ஒன்றும் இல்லையே...?!"
முகத்தினை கைகளால் அழுந்த தேய்த்து கொண்டாள். ஒரு முறை கண் மூடி நடந்ததை நினைத்து பார்த்தாள். மனம் கலங்கியது. தன் முகத்தினை மறைத்தபடி விழுந்த முடி கற்றைகளை காதோரமாய் ஒதுக்கியபடி கீதுவை நிமிர்ந்து பார்த்தாள்.
"ஹ்ம்ம்.... மேலே சொல்லு. உனக்கு யாரு சொன்னா... என்ன ஆச்சு அந்த கு..குர்க்கா..க்கு..?"
"ஷ்... நீ நினைக்கிற மாதிரி அவனோட சாவுக்கு நீ காரணம் இல்லை. அவனுக்கு யாரோ மயக்கமருந்து கொடுத்துருக்காங்க. அது ஓவர் டோஸ் ஆகி அவன் எதிரில் வந்த வண்டி மேலே மோதி இறந்திருக்கான். அவ்ளோ தான். சோ உனக்கும் இவனோட டெத்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை. புரியுதா உனக்கு?" தோழியை ஆறுதலாய் அணைத்தபடி கூறினாள்.
"இது ஏதாவது திருடனுங்க வேலையா இருக்கும் . சோ நீ தேவையில்லாம பயப்படாத.."
இப்போது கொஞ்சம் உடலும் மனமும் சமன்பட்டது போல இருந்தது ஆருவிற்கு.
"அது சரி. உனக்கு எப்படி இவ்ளோ விஷயம் தெரிஞ்சி?" புருவம் உயர்த்தியபடி கேட்டாள் பெண்ணவள் ஆரு.
"அ...து..
அ...து...
அது வ...ந்...து....து....து.."
"என்னடி இழுக்குற... என்ன விஷயம்...?"
ராஜே...ஷ் தான் சொன்னான். சொல்லியபடி குனிந்து கொண்டாள் கீது.
"எ..ன்..ன..து...?!!! இப்போ என்ன சொன்ன நீ...? கம் அகெய்ன்". வியப்பில் கத்திய படி கீதுவின் முகைத்தை நிமிர்த்தினாள் அவள், அவ்விழிகளோ நாணக் கவிதை பாடியது.
"ஹேய்... என்னடி இது.. நிஜமாவா...!! எப்படிடி...??
உனக்கும் ராஜேஷ்கும் எப்படிடி செட் ஆச்சு... கள்ளி இது எத்தனை நாளா நடக்குது? சொல்லவே இல்லை பார்த்தியா..??!"
நாணத்தால் சிவந்த முகத்தை மறைத்தபடி திக்கி திணறி பேசினாள் அவள்.
"விளக்குமாத்து கையோட அவனை அடிக்க அன்றைக்கு கை ஓங்குனேன்லா அ..ப்..போ..."
"அப்போ இருந்தேவா.. அடி எமகள்ளி.. ஒரு வார்த்தை சொன்னீயா நீ..?!"
"அய்யோ. அப்படிலாம் ஒன்னும் இல்லை. முதல நான் சொல்லி முடிச்சிருதேன். அதுக்கு அப்புறம் பேசு". என்றவள் தொடர்ந்து
"அவனோட மல்லுகட்டுனதுக்கு அப்புறமா எனக்குள்ள ஒரு பீலிங். அது எப்படி வந்துச்சி ஏன் வந்துச்சின்னு கேட்டா சத்தியமா எனக்கு சொல்ல தெரியலடி..."
சொல்லியபடி ஜன்னலருகே சென்று ஆகாய மன்னனின் நீல வண்ணத்தை ஆழ்ந்து பார்த்தாள். தனக்குள்ளே நினைவுகளை அசைப்போட்டபடி சில நொடி அமைதிக்கு பின் மெதுவாக பேச ஆரம்பித்தாள்.
"அந்த சம்பவத்துக்கு பிறகு அவனை அடிக்கடி எதேச்சையா சந்திக்கிற வாய்ப்பு அமைஞ்சுது. கொஞ்சம் கூர்ந்து கவனிச்ச அப்புறம் தான் தெரிஞ்சி.. இதெல்லாம் எதேச்சையா நடக்கல, எல்லாம் அவனோட வேலைன்னு. அவனோட செயல் பார்வை பேச்சு எல்லாம் எனக்கு அப்படி தான் சொல்லிச்சு. எனக்கு ஏற்பட்ட அந்த பீலிங் அவனுக்கும் வந்துருக்கும்ன்னு நினைக்கிறேன். இருந்தும் இந்த காதல் சாத்தியமா? அப்படின்னு எனக்குள்ள ஒரு சின்ன பயம். அவனோட காதல் உண்மையான்னு எனக்கு சந்தேகம். சோ அவனை தவிர்க்க நினைத்தேன். ஆனால்.. என்னால முடியல ஆரு... அவனை பார்க்காம இருந்த ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு எதை..யோ.. இழந்தது போல இருந்தது. என்னோட காதல் கூடிச்சே தவிர குறையல.
இன்றைக்கு காலைல உன்னை பார்க்க வரும் போது தான் மீண்டும் அவனை பார்க்கிற வாய்ப்பு கிடைச்சுது. அவன்கிட்ட சொல்லிடலாம்னு நினைக்கிறதுக்கு முன்ன உங்க அம்மா வந்துட்டாங்க".
"ஹே.. என்னடி சொல்லுற.. அப்புறம் எப்போ...டி.. நீங்க ரெண்டு பேரும் லவ்வை சொன்னீங்க?"
"இதோ இப்போ உன்னை பார்க்க வரதுக்கு முன்ன தான்". சொல்லியபடி கண்ணடித்தாள் தோழி.
"அடா... இவ்ளோ பாஸ்ட்டா நடந்துருக்கா... அது சரி.. ஹ்ம்ம்... அப்புறம்..." இடுப்பில் கை வைத்தபடி கேட்டாள் ஆரு.
"ஈவ்னிங் நம்ம தெரு பிள்ளையார் கோயிலுக்கு போயிருந்தேன். அப்போ தான் அவன் சொன்னான். அவனும் என்ன லவ் பண்ணுறானாம். நீ சொன்னது போல சும்மா விளையாட்டுக்கு தான் நம்ம பின்னாடி வந்திருக்கான். அப்புறம் அந்த சம்பவத்துக்கு பிறகு தான் அவனுக்கு புரிஞ்சிச்சாம். இப்போ சுயமா சம்பாதிக்கிறான். ஒழுங்கா வேலைக்கும் போகிறான். வேற எந்த பிரச்சனைக்கும் போறது இல்லை.. அப்படின்னு சொன்னான். என்னோட விருப்பத்தை கேட்டான். இவ்ளோ தூரம் அவனே எனக்காக மாறி இறங்கி வந்துருக்கான அதுல இருந்தே அவனோட காதல் உண்மைன்னு எனக்கு புரிஞ்சிது. சோ நானும் அக்ஸப்ட் பண்ணிட்டேன். அவனோட வீட்ல சொல்லி சீக்கிரம் பொண்ணு கேட்டு வராதா சொல்லியிருக்கான்".
"வாவ்.... கீது... சூப்பர்டி... சான்சே இல்லை... அடிச்சி தூள் கிளப்பிட்டான் உன் ஆளு... அப்போ கூடிய சீக்கிரமே அம்மணிக்கு கல்யாணம்ன்னு சொல்லு..." மகிழ்ச்சியாய் கட்டி அணைத்து கொண்டாள் தோழியை.
########################