• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode அத்தியாயம் 17 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yaazhini Madhumitha

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
5,860
Reaction score
11,883
Location
Gobichettipalayam
அத்தியாயம்-17

அடுத்த நாள் தனது ட்யூட்டியை
முடித்துக் கொண்டு மது கார்த்திக்
அலுவலகம் புறப்பட்டாள். வழக்கமாக
அலுவலகம் சென்றால் அவனைப்
பார்த்து விட்டுத் தான் போய் அவனது
தனி அறையில் உட்காருவாள்..
அல்லது அவன் கொஞ்சம் ப்ரியாக
இருந்தால் அவன் ஆபிஸ் அறையில்
உள்ள நாற்காலியிலேயே
உட்கார்ந்தபடி பேசிச் சிரித்தபடி
அவனுடன் நேரத்தைப் போக்குவாள்.

ஆனால் மனஸ்தாபம் வந்ததில்
இருந்து அலுவலகம் நுழைந்தவுடன்
நேராக தனி அறைக்குள் சென்று
நேரத்தை கடத்த ஆரம்பித்தாள்.
அன்றும் அப்படி உட்கார்ந்தபடி ஏதோ
புத்தகத்தைக் கன்னத்தில் கை
வைத்தபடி திருப்பிக் கொண்டு
இருந்தாள். ஆனால் நினைப்பு
எல்லாம் தன்னவனைச் சுற்றியே
திரிந்தது அவளுக்கு.

உள்ளே வந்தவன் ஏதோ அறிவிப்புப்
போல "கிளம்பலாம்" என்று மட்டும்
சென்று விட்டான்.. இதுவும் கடந்த
நான்கு நாட்களாக நடந்து வர ஒன்று
தான். இந்த மாதிரி விஷயங்களுக்கு
மட்டும் பேசும் அவன் மத்ததுக்கு வாய்
திறப்பதில்லை.

மது வந்து காரில் அமர கார்த்திக்
காரை எடுத்தான். மதுவும் சோர்வால்
கண்களை மூடி சீட்டின் மேல்
தலையைச் சாய்த்தாள். அவளின்
முகம் ஒளி இழந்துக் காணப்பட்டதைக்
கார்த்திக்கும் கண்டான். ஏனோ அன்று கோபத்தில் சற்று அதிகமாகப்
பேசிவிட்டோமோ என்று மனம்
அவனுக்கும் உறுத்தியது.

அன்று அவன் அவளைத் திட்டிவிட்டு
பால்கனிக்குச் செல்ல அவன் மனமோ
"ஏன் நீ அவளிடம் குழைந்தது
இல்லையா? அவளிடம் மயங்கிக்
கிடந்தது நினைவு இல்லையா?" என்று
அவனையும் மீறி கேட்க தன் மேலேயே
அவனிற்கு கோபம் வந்தது
உண்மைதான். அவனிற்கும் தெரியும்
அவள் வேறு எதற்கோ அழைத்தாள்
என்று.

"ஆமாம் இவள் நடந்து கொண்டது
மட்டும் நியாயமா.. கல்யாண
ஆல்பத்தை எடுத்து வந்து ஏன்டா
இந்தக் கல்யாணம் நடந்தது என்பது
போல 'நொங்' என்று அவள் தம்பி
கையில் வைத்து விட்டுப் போகிறாள்..
அப்புறம் நியாயமாகப் பேசிகிறோம்
என்று எதிர்ப் பேச்சு வேறு" என்று
எண்ணினான். ஆனால் மது உடல்
சோர்வில் வேதனையிலும்
இருந்ததால் கல்யாண ஆல்பத்தை
வைத்தது அப்படி அவன்
கண்களுக்குத் தெரிந்தது என்பது
அவன் அறிவுக்கு எட்டவில்லை.

கணவன் காரை நிறுத்த அதற்குள்
பொள்ளாச்சி வந்து விட்டதா என்று
மது தன் கண்களைப் பிரித்தாள்.
கண்களை மீண்டும் மூடித் திறந்தவள்
அது ஏதோ கார் பார்க்கிங் என்று
அறிந்து கொண்டாள். அன்று அவன்
கூட்டி வந்த அதே ஷாப்பிங் மால்.
கார்த்திக் இறங்க அவளும் இறங்கிக்
கொண்டாள்.. ஏன் என்ன என்று கூட
அவளிற்குக் கேட்க இஷ்டமில்லை..
அவனுடனேயே சற்று இரண்டு மீட்டர்
தள்ளி நடந்து வந்தாள்.

எதற்கு வீண் வம்பு? தெரியாமல்
பக்கத்தில் போனால் கூட அன்று
போல எதாவது சொல்லி விடுவான்
என்று மதுவின் மூளை சொன்னது
உண்மை தான்.

மேலே சென்று மதுவை ஃபுட்
கோர்ட்டில் அமரச் சொல்லிவிட்டு
எதிரே இருந்த ஒரு கடையின் உள்ளே
சென்றான். அவன் போன பின்பு மது
கண்களைச் சுழலவிட்டாள்.. தனியாக
உட்கார்ந்து இருந்தது வேறு போர்
அடித்தது.

அந்தக் கடையையே பார்த்துக்
கொண்டு இருந்தாள். அங்கு கார்த்திக்
யாருடனோ பேசிக் கொண்டு
இருந்தது மதுவிற்குத் தெரிந்தது.
அங்கு அவர்கள் ஏதோ சொல்வதும்
கார்த்திக் விடாப்பிடியாக ஏதோ
மறுத்துச் சொல்லிக் கொண்டு
இருப்பதும் மதுவிற்கு பார்க்கும்
போதே ஏதோ தொழில் விஷயம் என்று புரிந்தது.

மது அங்கு பார்த்துக் கொண்டு இருக்க ஏதோ வந்து மதுவின் கால்களைத்
தொட மது விருட்டெனத் திரும்பினாள்.
அங்கு ஒரு குழந்தை அவள்
கால்களைப் பிடித்து அழுது கொண்டு
இருந்தது. யார் இந்தக் குழந்தை? என்று யோசித்தவள் இரண்டு வயது
தான் இருக்கும் என்று கணித்தாள்.
அக்குழந்தையை அள்ளிக் கையில்
எடுத்து தன் மடியில் அமர வைத்தவள்
சுற்றி முற்றிப் பார்க்க மதுவிற்கு யார்
குழந்தை என்றுத் தெரியவில்லை.
அப்படி யாரும் குழந்தையைத்
தேடுவது போல மதுவின்
கண்களுக்குச் சிக்கவில்லை..
குழந்தை அழ எழுந்து நின்றவள்
குழந்தைக்குத் தட்டிக் கொடுத்து
சமாதானம் செய்தாள்.

"பாப்பா யார் நீங்க? எங்க போகனும்?"
என்று குழந்தையிடம் மெதுவாக
வினவினாள். குழந்தை அழுது
கொண்டே "ம்மா.... காணா..." என்று
மழலையில் இரு கைகளையும் விரித்த படிச் சொன்னது.

"குழந்தையை விட்டுவிட்டு எங்கே
போய்த் தொலைந்தாள்" என்று
அக்குழந்தையின் தாயைத் மனதில்
திட்டிக் கொண்டே குழந்தையை
வைத்தபடி மது நின்றாள்.

அதற்குள் கார்த்திக் அந்தக் கடையில்
இருந்து வெளியே வந்தான். முகம்
எண்ணையில் விழுந்த எள்ளைப்
போன்று வெடித்துக் கொண்டு
இருந்தது மதுவின் கண்களிலும்
பட்டது. மதுவைத் தேடி வந்தவன்
மதுவின் கையில் குழந்தை
இருப்பதைப் பார்த்து புருவத்தை
நெறித்தப்படி வந்தான். அருகில்
வந்தவன் "யார் குழந்தை?" என்று
மதுவிடம் வினவினான்.

"தெரியவில்லை" என்ற மது
குழந்தையைப் பற்றி கார்த்திக்கிடம்
சொன்னாள். குழந்தை மீண்டும் அழ
ஆரம்பிக்க குழந்தையை மதுவிடம்
இருந்து வாங்கியவன் தன் பங்கிற்கு
அவனும் சமாதானம் செய்தான்.
அவனும் சுற்றி முற்றிப் பார்த்தான்.
அவன் கண்களுக்கும் எவரும்
குழந்தையைத் தேடுவது போலத்
தட்டுப்படவில்லை.

கண்களைச் சழலவிட்ட படி
குழந்தையின் தாயைத் தேடிய மது
வலது பக்கம் ஒரு ஆளுயரக்
கண்ணாடியைப் பார்த்து ஒரு நிமிடம்
அப்படியே கண்களை அகற்றாமல்
நின்று விட்டாள். அவளும்
கார்த்திக்கும் அவன் கையில் ஒரு
குழந்தையுடன் நின்றதைக்
கண்டவளுக்கு தன் வயிற்றில்
வளரும் குழந்தையை கார்த்திக்
இப்படித்தானே தூக்கி
வைத்திருப்பான் என்ற எண்ணம்
தோன்றித் தன்னை அறியாமல்
புன்னகை பூத்தது. கண்ணாடியை ஒரு
நிமிடம் பார்த்து தன்னை மறந்து
ரசித்தவள் அவன் கண்ணாடிப் பக்கம்
திரும்ப சட்டென்று முகத்தை மாற்றி
விட்டாள் மது.

"தாரா..." என்று எங்கிருந்ததோ வந்தக்
குரலில் இருவரும் திரும்பினர். ஒரு
பெண்மணி இவர்களை நோக்கி
அரக்கப் பரக்க ஓடி வந்தார். அந்தப்
பெண்மணியை நோக்கி மது முன்னே
சென்றவள் கார்த்திக் நகராததைக்
கவனித்தாள்.

கார்த்திக் வராததைக் கவனித்தவள்
திரும்பிப் பார்க்க அவன் முகத்தில்
அதிர்ச்சி... தயக்கம் என எல்லாம்
தெரிந்தது. அந்தப் பெண்ணும்
எதையும் கவனிக்காமல் மது அருகில்
வந்தவள், கார்த்திக்கின் முகம் கண்டு
அப்படியே நின்று விட்டாள்.

இருவரையும் மாறி மாறிப் பார்த்த
மதுவிற்கு ஏதோ புரிந்தது போல்
இருந்தது. "கார்த்திக் எப்படி
இருக்கீங்க" என்று கேட்டவளின் குரல்
காற்றோடு கலந்தது. சுமார் நான்கு
வருடங்களுக்குப் பிறகு அவளைப்
பார்க்கிறான் கார்த்திக்.

"நல்லா இருக்கேன் சுஜி" என்று
குழந்தையை அவள் கையில் தந்தான்.
மதுவிற்கு உறுதியாகி விட்டது.
மதுவிற்கு அவ்விடத்தில் இருந்து
நகர்ந்து விடலாம் என்று இருந்தது.
ஆனால் ஏதோ ஒன்று அவளைத்
தடுத்து அவளை அங்கேயே நிற்க
வைத்தது. மதுவைப் பார்த்த சுஜி
"இது உங்கள் மனைவியா?" என்று
கேட்க கார்த்திக் ஆம் என்று தலை
அசைத்தான்.

"ஹாய் ஐம் சுஜி.. கார்த்திக்கோட
காலேஜ் மேட்" என்று கையை
நீட்டினாள் மதுவிடம். மதுவிற்கு தான்
மனதில் "ஓஓ... பிரண்டா?" என்று
நக்கலானக் கேள்வி எழுந்தது.

"ஹாய் ஐம் மது" என்று சிறிதாய் ஒரு
புன்னகை மட்டும் சிந்தினாள் மது.
பிறகு குழந்தையைப் பற்றிப் பேசினர்.

"நான் தாராவைக் கீழே இறக்கி
விட்டுவிட்டு.. சேல்ஸ்மேன் தந்த
இரண்டு பைகளையும் வாங்கிவிட்டு
திருப்புவதற்குள் காணாமல் போய்
விட்டாள். ஒரு நிமிடம் உயிரே போய்
விட்டது. ரொம்ப தாங்க்ஸ்" என்றாள்
இருவரையும் பார்த்து.

"ஓகே... நாங்க கிளம்பறோம்.. டைம்
ஆச்சு" என்று மதுவின் கரங்களைக்
கார்த்திக் பற்றி அவளை பிடித்துக்
கொண்டு நகர மதுவும் கால் போன
போக்கில் அவனுடன் நடந்தாள்.

மதுவிற்கு என்னவோ போல
இருந்தது. "பொறாமையா?" என்று
தனக்குத்தானே கேட்டாள்.

இன்னொருவனின் மனைவி
என்றாலும் அவள் கார்த்திக்கின்
முன்னால் காதலி என்று
நினைக்கையிலேயே மதுவிற்கு
கொஞ்சம் வயிறு எரிந்தது
உண்மைதான். பேசாமல் வந்து
அவனுடன் லிப்டிற்குள் நின்றாள்.
அவன் கை அப்போதும் தன் கையை
பிடித்து இருப்பதை உணர்ந்தவள்
எரிச்சலுடன் சட்டென்று தன் கையை
உருவிக் கொண்டாள். ஏதோ
யோசனையில் இருந்தவன் மது
கையை உருவியதை உணர்ந்து
அவளை நோக்க மதுவின் முகத்தில்
எள்ளும் கொள்ளும் வெடிப்பதை
உணர்ந்தான். ஏனோ தன்னை
அறியாமல் அவளின் செய்கையில்
சிரிப்பு வந்தது அவனுக்கு.

லிப்ட் நின்றுதும் காரை நோக்கி
நடந்தார்கள் இருவரும். காரில்
அமர்ந்தவன் "அது யார் என்று
விளக்கம் வேண்டுமா ?" என்று
நக்கலாக வினவினான்.

"எனக்கு கண்டவர்களைப் பற்றித்
தெரிந்து கொள்ள எந்த அவசியமும்
இல்லை" என்றவள் "மேலும் அதைக்
கேட்டு எனக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச நிம்மதியையும் கெடுக்க விருப்பம்
இல்லை" என்று தன் நகத்தைப்
பார்த்தபடியே கூறினாள் மது.

"இப்போது உன் நிம்மதிக்கு என்ன
குறைவு வந்தது" என்று கேட்க வந்த
நாவை அடக்கினான் கார்த்திக்.
அவனுக்கே தெரியும் அவன் அவளை
காயப்படுத்தியது. அதனால் எதுவும்
பேசாமல் மதுவை முறைத்துவிட்டுக்
காரை எடுத்தான்.

கொஞ்ச நேரம் கழித்து
தொண்டையை செறுமியவன்
"மிதுனாவிடம் பேசினாயா? எப்படி
இருக்காளாம்? என்று கார்த்திக் கேட்க
மது 'உச்' கொட்டிவிட்டு வெளியே
பார்த்தபடியே வந்தாள்.

ஏற்கனவே மூட் அவுட்டில்
இருந்தவளுக்கு மிதுனாவைப் பற்றிக் கேட்டது பற்றிக் கொண்டு வந்தது..
"இவன் வேறு தெரியாத விஷயத்தைக் கேட்டு வெறுப்பேற்றுகிறான்" என்று
மனதுக்குள் புகைந்தாள்.

"சரி அதைவிடு.. இப்போதெல்லாம்
சரியாக சாப்பிடுவதில்லை போல..
சற்று மெலிந்தும் தெரிகிறாய்.
சென்னையில் இருந்து வந்த போதே
அப்படித் தான் தெரிந்தாய்.. ஏன்
சரியாகப் சாப்பிடுவதில்லை?" என்று
குறையாகக் கேட்டான்.

"........"

பொறுமை இழந்த கார்த்திக் காரை
ஓட்டியபடியே அவளைத் தன் புறம்
திருப்பினான். "நான் கேட்டால்
எனக்கு பதில் வர வேண்டும் மது"
என்றான் சற்றுக் கோபமாக.

மதுவிற்கு அழுகை வந்துவிடும் போல
இருந்தது. எப்போ பார்த்தாலும்
காய்கிறானே என்று நினைத்தாள்.
"சுஜியைப் பார்த்து கார்த்திக்
கொடுத்த ரியாக்ஷனையே
நினைத்துக் கொண்டு வந்தாள்..
ஒருவேளை அந்தப் பழைய காதல் இன்னும் அவனுள் இருக்கிறதோ"
என்று தன்னைத்தானே போட்டுக்
குழப்பியபடி இருந்தவளைத் தான்,
கார்த்திக் மிதுனாவைப் பற்றிக்
கேட்டது.

ஏற்கனவே இந்த சிந்தனையில்
மனதை அலக்கடித்துக் கொண்டு
இருந்தவள், அவன் கேட்ட
கேள்விகளைக் காதில் சரியாக
வாங்கக் கூட இல்லை.. அதனால்தான்
அமைதியாகவே இருந்தாள் மது..
அவன் இப்போது அதட்டவும் எல்லாம்
சேர்ந்து அவளை வாட்டி எடுத்தது.

மது அவனை நிமிர்ந்து பார்க்காமல்
அப்படியே உட்கார்ந்து இருந்தாள்.
காரை நிறுத்தியவன் "இப்படி வாயை
மூடிக் கொண்டு இருந்தாள் என்ன
அர்த்தம்" என்று அதட்ட
"ஒன்றுமில்லை" என்று மட்டும்
அவளிடம் இருந்து பதில் வர அவளை
விட்டுவிட்டு காரை வெடுக்கென்று
எடுத்தான்.

மதுதான் அழுகையை அடக்கியபடி
மறுபடியும் வெளியே பார்த்துக்
கொண்டே வந்தாள். எப்போது நீ
அப்பா ஆகிவிட்டாய் என்று சொல்லப்
போகிறேனோ என்று மதுவின் மனம்
மிகவும் ஏங்கியது.

இருவரும் மௌனமாகவே வீடு வந்து
சேர்ந்தனர். வீட்டின் உள்ளே நுழைந்த
இருவரும் தங்கள் அறைக்குச் சென்று
உடையை மாற்றி கீழே வந்தனர்.
அவர்கள் கீழே வரவும் ஜானகி
இருவருக்கும் காஃபி எடுத்து வரவும்
சரியாக இருந்தது.

இருவரும் நான் யாரோ நீ யாரோ
என்பது போல உட்கார்ந்திருந்தனர்.
வேலுமணி வர அவருக்கும்
காஃபியைக் கலந்து வந்து
கொடுத்தார் ஜானகி.

"கார்த்திக் அந்த ப்ராஜெக்ட்
வேலையை ஆரம்பித்து விட்டாயா?"
என்று ஆரம்பித்தார். "இல்லை அப்பா
வர திங்கள் அன்று தான்
ஆரம்பிப்பேன்" என்று காஃபியைப்
பருகியபடிச் சொன்னான்.

"அப்படியாப்பா.. சரி அப்போது இந்த
சனி ஞாயிறு நம் வால்பாறை
எஸ்டேட்டிற்குச் சென்று
கணக்குகளைப் பார்த்துவிட்டு வா"
என்றார் வேலுமணி.

மதுவும் காதில் கேட்டுக் கொண்டு
தான் இருந்தாள். அவர்
சொன்னவுடனே கணவனைத்
திரும்பிப் பார்த்தவளுக்கு அவனும்
அவளைத் தான் தன் தந்தை
சொன்னவுடனே பார்த்தான் என்பது
தெரிந்தது. இருவருக்குமே அவன்
சென்னை செல்லும் முன் இருவரும்
பால்கனியில் நின்று பேசியதும்
அதற்குப் பின் அரங்கேறிய காதல்
ஆட்டங்களும் என எல்லாம் நினைவு
வந்தது. என்னதான் ஊடல் என்றாலும்
இரண்டு நாள் விட்டு இருக்க
வேண்டுமா என்று இருவருக்குமே
மனதில் எழுந்து இம்சித்தது
உண்மைதான்.

இதைக் கவனித்த வேலுமணி
"என்னப்பா பதிலையே காணோம்"
என்று மகனைப் பார்த்துக் கேட்டார்.

"ஒன்னும் இல்லை அப்பா.. வேறு ஒரு
யோசனை.. போய்விட்டு வருகிறேன்
அப்பா.. அங்கு ராசு அண்ணாவிடம்
மட்டும் தகவலைத்
தெரிவித்துவிடுங்கள்" என்று
காஃபியைக் குடித்து முடித்து
காலியானக் கப்பை தன் அன்னையிடம் தந்தான்.

"சரி கார்த்திக்... அப்படியே நம்
மதுவையும் கூட்டிப் போ.. மதுவும்
இன்னும் நம் எஸ்டேட் எல்லாம்
பார்த்தது இல்லை.. இரண்டு நாள்
இருந்து எல்லாவற்றையும் சுற்றிக்
காண்பித்து விடுப்பா" என்றார்
வேலுமணி தன் கண்ணாடியை அவர்
சட்டைத் துணியில் துடைத்தபடி.

மதுவிற்கும் கார்த்திக்கிற்கும் புரிந்து
விட்டது அவர் ஏதோ ப்ளான்
போடுகிறார் என்று.. கார்த்திக் சரி
என்று சொல்ல வாயெடுக்க "இல்லை
மாமா.. சனி எனக்கு ஹாஸ்பிடல்
இருக்கு.. அவரே இந்த தடவை சென்று
விட்டு வரட்டும்.. நான் அடுத்த தடவை
சென்று வருகிறேன்" என்று
அவசரமாகச் சொன்னாள்.

கார்த்திக்கின் கண்கள் இடுங்கியது.
மதுவை ஒரு வெற்றுப் பார்வை
பார்த்தவன் எதுவும் பேசாமல்
தோளைக் குலுக்கினான்.

"ஏன் மது.. லீவ் போட்டுக்கலாம்ல..
முடியாது என்றால்.. சனி மதியத்திற்கு
மேல் அவ்வளவு patients வர
மாட்டார்கள் என்று சொல்லி
இருக்கிறாயே.. அறை நாள் விடுப்பு
எடுத்துக் கிளம்பி விடு" என்று எதுவும்
தெரியாதது போல் தக்க சமயம்
பார்த்து மருமகளை மேலே பேச
முடியாதபடி செய்தார் ஜானகி. "சரி"
என்று மதுவும் தலை ஆட்டினாள்.

சாப்பிட்டு விட்டு மேலே வந்தவளிடம்
"அவ்வளவு கஷ்டப்பட்டு நீ என்னுடன்
வர வேண்டாம்.. வேண்டுமானால்
நான் அம்மா அப்பாவிடம் சொல்லிக்
கொள்கிறேன்" என்றான் அவன்
விட்டேற்றியாக.

"இந்த மாதிரிக் குத்தல் பேச்சுகளை
எண்ணித் தான் நான் வரவில்லை"
என்று சொல்லத் துடித்த நாவை
அடக்கிய மது, "தானும் போகவில்லை
என்று அவர்களின் முன்னால் சொல்லி இருக்கக் கூடாது. இவனை
சங்கடத்திற்கு உள்ளாக்குவது
போலத்தானே அது" என்று அவளின்
மனதும் மூளையும் மாறி மாறிப்
பேசி அவனிற்காக வாதடியது.

"என்ன வருகிறாயா.. இல்லையா..
பதிலைச் சொன்னாய் என்றால் நான்
அப்பாவிடம் சொல்லுவதற்கு
வசதியாக இருக்கும்" என்றான்
கார்த்திக்.

"வருகிறேன்" என்று மது சின்னக்
குரலில் சொல்ல தலையை மட்டும்
ஆட்டிப் படுத்துவிட்டான். மதுவும்
பெட்டின் இன்னொரு பக்கத்தில்
சென்று படுத்துவிட்டாள். எப்போது
பார்த்தாலும் சூடான அடுப்பைப் போல காய்கிறானே. இவனிடம் எப்போது
சொல்லுவது என்று யோசித்தபடியே
படுத்திருந்தாள்.. இந்நேரம்
சொல்லியிருந்தால் இந்த நாட்கள்
எப்படி இருந்திருக்கும் என்று
எண்ணினாள் மது..

"ஏய் மிதுனா.. எங்கே டி போய்த்
தொலைந்தாய்" என்று மிதுனாவையும் திட்ட மது மறக்கவில்லை. என்னதான்
கோபம் வந்தாலும் அவனை மதுவால்
வெறுக்க முடியவில்லை.. பேசாமல்
தான் இருக்கிறாளே தவிர அவனின்
அருகாமையை மதுவின் மனம்
நினைத்து ஏங்கியது உண்மைதான்.
அவனின் சொற்கள் வேறு மனதை
ஆழமாக மதுவைக் காயப்படுத்தி
இருந்தது. அதனாலேயே அவளை
அவனிடம் இருந்து விலகி இருக்க
வைத்திருந்தது. இரண்டு நாட்கள்
செல்ல வால்பாறை செல்லும் தினம்
வந்தது.

அன்று காலையில் எழுந்தவன் மது
தயார் ஆகிக் கொண்டு இருந்ததைக்
கவனித்தான். "எல்லாம் பாக் பண்ணி
வைத்திரு. நாம் மதியம் இங்கு வர
மாட்டோம். அப்படியே வால்பாறை
சென்று விடுவோம்" என்றுவிட்டுக்
கார்த்திக்கும் தயாரானான்.

மதுவும் தேவையானவற்றை ஒரு பிக்
ஷாப்பர் பாக்கில் எடுத்து வைத்தாள்.
அவனுடைய உடைகளை அவன் வந்த
பிறகு அவன் எடுத்துத் தர அதையும்
எடுத்து அடுக்கினாள் மது.. பின்
இருவரும் கீழே வந்து சாப்பிட்டு விட்டு
வேலுமணியிடமும் ஜானகியிடமும்
சொல்லி விட்டுக் கிளம்பினர்.

"மாலை நீ ஆபிஸ் வர வேண்டாம்..
நானே ஹாஸ்பிடல் வந்து
விடுகிறேன்.. வரும் போது போன்
செய்கிறேன்.. கீழே வந்து விடு" என்று
காலையில் வரும் போது கார்த்திக்
சொன்னதால் அவனிற்காக மது
காத்திருந்தாள்.
 




Yaazhini Madhumitha

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
5,860
Reaction score
11,883
Location
Gobichettipalayam
பொள்ளாச்சி.. ஆழியாறு என கார்
கடந்து சென்றது. பெண்ணின் இடை
போன்று வளைவுகளோடு இருந்த
அந்த 40 ஹேர்ப்பின் பென்டை
கொண்ட மலைப் பாதை வெகுவாக
மதுவை ஈர்த்தது.. சில வாலிபர்கள்
ரேஸ் பந்தயம் வைத்துக் கொண்டு
போவதும் சில காதலர்கள் பைக்கில்
அணைத்துக் கொஞ்சிக் கொண்டு
போவதும் மதுவின் கண்களில் பட்டது.
வழிஎங்கும் அடர்த்தியான மரங்களும்
எஸ்டேட்களும் பசுமை போர்த்திய
கம்பளமாய் இருக்க குளிர் காற்று
அலையலையாய் வீசியது. மது
முகத்தை மட்டும் வெளியே நீட்டி ஒரு
மூச்சை வெளியிட்டாள். எப்போதோ
சின்ன வயதில் குடும்பத்தோடு வந்த
நியாபகம், ஆனால் ஒன்று கூட
நினைவில்லை மதுவிற்கு.

வால்பாறையில் உள்ள நல்லமுடி வ்யூ
பாயின்ட் பக்கத்தில் தான் எஸ்டேட்டும்
அவர்களது பழைய வீடும் இருந்தது..
காரை நிறுத்தி விட்டு இறங்க அங்கு
வந்த ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க
ஒருவர் இருவரையும் வரவேற்றார்.

"வாங்க தம்பி.. வாங்கமா.." என்றவர்
"நீங்க வரீங்கன்னு அப்பா சொன்னார்.
எல்லாம் க்ளீன் பண்ணிட்டோம்..
சாப்பாடும் நம் வீட்டில் இருந்து
வேளைக்கு வந்து விடும்" என்று
சாவியைக் கார்த்திக் கையில்
கொடுக்க அவரின் குடும்பத்தைப்
பற்றி நலம் விசாரித்தான் கார்த்திக்.

"தம்பி நைட்டிற்கு என்ன வேண்டும்
சாப்பிடுவதற்கு?" என்று வினவினார்
அவர்.

"டிபன் ஏதாவதே கொண்டு
வந்துவிடுங்கள் ராசு அண்ணா"
என்றுவிட்டுத் தன் பைகளை
எடுத்தான் கார்த்திக்.. நான் கொண்டு
வருகிறேன் என்று சொன்ன ராசு
அண்ணாவையும் தடுத்துவிட்டான்.

கார்த்திக்கின் அப்பா வழித் தாத்தா
இருந்த போதே ராசுவின் அப்பா
இவர்களிடம் வேலையில் இருந்தார்..
அதனால் ஒருவருக்கொருவர்
நன்றாகத் தெரியும். மதுவிற்கும்
அவர்கள் கல்யாணத்தன்று வந்த
போது தன் அத்தை சொன்ன விவரம்
நியாபகம் வந்தது. ராசு அண்ணா
நைட் டிபன் கொண்டு வருகிறேன்
என்று கிளம்பி விட்டார்.

கதவைத் திறந்து உள்ளே
சென்றவர்கள் தங்கள் பைகளை
வைத்துவிட்டு வந்தார்கள். வெளியே
மது வர "இந்த ப்ளாஸ்கில் டீ இருக்கு..
சில பிஸ்கட்களும் இருக்கு.. பசித்தால்
எடுத்து சாப்பிடு, நான் எஸ்டேட் வரை
செல்கிறேன்.. கதவைப் பூட்டிக்கொள்..
என்னிடம் இன்னொரு சாவி இருக்கு..
நான் வந்தால் நானே கதவைத்
திறந்து கொள்வேன். காட்டெருமை..
பாம்பு எல்லாம் அதிகம்.. இருட்டிய பின்
வெளியே வாராதே.. " என்றான்
கார்த்திக். மது தலையை மட்டும் ஆட்ட
'வாயைத் திறக்கிறாளா பார்' என்று
பல்லைக் கடித்தவன் எதுவும் பேசாமல்
சென்றுவிட்டான்.

கார்த்திக் சென்ற பின் டீயையும்
பிஸ்கட்களையும் காலி செய்தவள்
வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். மதுவிற்கு
அந்த வீடு மிகவும் பிடித்து இருந்தது. ரொம்ப பெரிதும் இல்லாமல் சிறிதும்
இல்லாமல் தேவையான
அறைகளோடு இருந்தது.

படுக்கை அறையில் இருந்த
ஜன்னலின் வெளியே பார்த்தவளால்
கண்களை எடுக்க முடியவில்லை..
"இயற்கையின் அழகு பரந்து
விரிந்திருக்க.. அழகிய எழிலில்
மதுவின் மனம் சொக்கி நின்றது"

மணி ஆறைத் தொட மதுவிற்கும்
தூக்கம் கண்ணைத் தொட்டது..
கதவைச் சாத்திவிட்டு போய்ப்
படுக்கையில் விழுந்தவள் ஏனோ மது
அரைத் தூக்கத்திலலேயே இருந்தாள்..
ஒரு மணி நேரம் தான் தூங்கி
இருப்பாள் ஏதோ சத்தம் கேட்க
தலையைத் தூக்கிப் பார்த்தவள்
கார்த்திக் அறையில் நடந்து கொண்டு
இருந்தது தெரிந்தது.

பிறகு எழுந்து உட்கார்ந்தவளுக்கு
காலை கீழே வைக்க முடியவில்லை..
நவம்பர் மாதம் என்பதால் குளிர்
ரொம்பவே ஏறி இருந்தது. தரையில்
கார்ப்பெட் மீது காலை வைத்து
எழுந்தவள், தன் பையை எடுத்தாள்..
அப்போது தான் ஸ்வெட்டர் எடுத்து
வரவில்லை என்பது மதுவிற்கு
நினைவு வந்தது.. இப்போ என்ன
செய்வது என்று நின்றவள்.. தன்னைக் கார்த்திக் கவனிப்பதை உணர்ந்தாள்.
அவனிற்கு இது பழக்கமே என்பதால்
அவன் டி சர்ட்டை மட்டும் மாட்டி
நின்றிருந்தான்.

மணியைப் பார்த்த மது.. 'இந்நேரம்
எல்லாக் கடையும் மூடி இருப்பார்கள்,
அதுவும் இல்லாமல் இங்கு இருந்து
பதினைந்து கிலோ மீட்டர் செல்ல
வேண்டுமே என்று நினைத்தவள்' எதுவும் பேசாமல் பையை மூடி வைத்து விட்டாள்.

"ஏதையாவது மறந்து விட்டாயா" என்று
கார்த்திக் வினவ, மறுப்பாகத்
தலையை மட்டுமே அசைத்தாள்.
அவள் வாயைத் திறக்காமல் இருப்பது
கார்த்திக்கிற்கு கடுங்கோபத்தை வர
வைத்தாலும்.. அதற்காக அவளை ஏன்
என்று கேட்கவும் அவனிற்கு
விருப்பமில்லை.

தன் மேல் தப்பை வைத்திருக்கும்
உனக்கே இவ்வளவு என்றால்
எனக்கும் அதே அளவு திமிர் எனக்கும்
இருக்கும் என்று மனதில்
நினைத்தவன் பேசாமல் போய்
வெளியில் நின்றான்.. வெளியில்
போர்ட்டிக்கோவின் மரஊஞ்சலில்
சென்று உட்கார்ந்தான்.. மது தான்
தூங்கி இருந்த போது போர்த்திய
பெட்ஷீட்டை சுற்றிய படி வெளியே
வந்து நின்றாள்.

வெளியே வந்து நின்றவள்
கார்த்திக்கைப் பார்த்து விட்டு ஒரு
தூணில் சாய்ந்த படி நின்றாள். ஏனோ
அருகில் சென்று அமர்ந்து அவன்
தோளில் தலை சாய்க்க மதுவின்
மனம் விரும்பியது. ஆனால் அவன்
அன்று சொன்னது நினைவு வர தன்
மனதைக் கடிந்துவிட்டு நின்றாள்.

கார்த்திக்கும் அவள் நிற்பதைப்
பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
அவனுக்கு அவளை அருகில்
அமர்த்திக் கொள்ள வேண்டும் என்பது போல இருந்தது. ஆனால் வாய்
திறந்து அவளைக் கூப்பிட
அவனிற்கும் இஷ்டமில்லை.
வேண்டும் என்றால் வந்து அமரட்டும்
என்று இருந்துவிட்டான்.

மதுவிற்கு குளிரில் கால்கள்
குடைச்சல் எடுப்பதைப் போல
இருந்தது.. அவன் அருகில் சென்று
உட்கார் என்று உந்திய மனதை அடக்கி உள்ளே ஹாலிற்குத் திரும்பிவிட்டாள்.

பிறகு ராசு அண்ணா வந்து
அவர்களுக்கு ஆவி பறக்கும் சூட்டில்
டிபனைத் தந்து விட்டுப் போனார்.
உள்ளே கார்த்திக் டிபனோடு
வருவதைக் கண்ட மதுவின் கைகள்
தானாகச் சென்று அந்தக் கூடையை
வாங்கியது.. பிறகு அவன் அமர
அவனிற்கு வைத்துவிட்டு தானும்
தட்டில் போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.இருவருமே ஒரு வார்த்தைக் கூட பேசிக் கொள்ளவில்லை.. சாப்பிட்டு முடித்த மது மெதுவாக உள்ளே வந்து வாமிட் எடுக்காமல் இருக்கவும் சோர்விற்கும் ரம்யா தந்த ஒரு மாத்திரையைப் போட்டாள். ரம்யாவிடம் ஹில் ஸ்டேஷன் போகிறோம் என்று இந்தத்
தொந்திரவுக்கு ஒரு மாத்திரையை
வாங்கி வந்திருந்தாள்.

பிறகு மது ஒன்பதறைக்கே படுத்து
விட... கார்த்திக் தனது லாப்டாப்பை
எடுத்துக் கொண்டு பெட்டில் அவள்
அருகில் அமர்ந்து விட்டான். மதுவிற்கு
மாத்திரையினால் கண்கள்
சொக்கினாலும் குளிர் அதிகமாகவே
தெரிந்தது.

போர்வையை கழுத்து வரை இழுத்துப்
போர்த்தியவள் தூக்கத்தில் திரும்பித்
திரும்பிப் படுத்தாள். அவள் திரும்பித்
திரும்பிப் படுத்ததைப் உணர்ந்தவன்
அவள் நடுங்குவதை பார்த்தான்.

லாப்டாப்பை மூடி அருகில் உள்ள
டேபிளில் வைத்தவன் எழுந்து சென்று
ரூம் ஹீட்டரைப் போட்டு விட்டான்.. பின் ராசு அண்ணா எதற்கும் இருக்கட்டும்
என்று கொடுத்துச் சென்ற
கம்பிளையையும் மதுவின் மேல்
போர்த்தி விட்டான். பின் வந்து
படுத்தவன் அவளைப் பார்த்தபடியே
படுத்திருந்தான். நிலவின் ஒளி
ஜன்னலின் வழியாக அவள் மேல்
விழுந்திருக்கத் தன்னை மறந்து
மதுவைப் பார்த்துக் கொண்டு
இருந்தான்.

மேலும் முகம் சுழித்து மது தூக்கத்தில்
நெளிவதைக் கண்டவனிற்கு, தன்னை அறியாமல் கைகள் சென்று
போர்வைக்குள் கை நுழைந்து
அவளை அணைத்தது. மதுவும்
தன்னை இளம் சூடாக ஏதோ ஒன்று
அணைக்க, தூக்கத்தில் கணவனின்
மார்பில் தன்னை அறியாமல் தஞ்சம்
அடைந்தாள். தன்னால் கார்த்திக்கின்
கைகள் மதுவின் கூந்தலில் கை
நுழைத்து அவளின் பட்டுப் போன்ற
முடிகளை வருடியது. ஏனோ இத்தனை
நாள் வரை இருந்த கோபம் எல்லாம்
அப்போது மறைந்து அவளை
தன்னுடன் இன்னமும் இறுக்கியவன்
அவளின் நெற்றியில் முத்தத்தைத்
தந்தான். கார்த்திக்கும் அவளின்
அருகாமை தந்த இதத்தில் கண்களை
மூடினான். தன்னவளின் அருகாமை
தரும் நிம்மதியானத் தூக்கத்தை
அவனும் பல நாள் பின்
அனுபவித்தான்.

காலையில் கண் முழித்த மது தன்
கணவனின் மார்பில் சாய்ந்து
இருந்ததை உணர்ந்து டக்கென்று
எழுந்து விட்டாள். டக்கென்று
எழுந்ததில் தலை வேறு சுற்ற
ஆரம்பித்து விட்டது.. தன்னிரக்கத்தில்
மதுவின் கண்கள் கண்ணீர் சிந்தியது.
"அன்று உன்னை அப்படித்
திட்டியவனின் மேல் சாய்ந்து உறங்கிக் கொண்டு இருக்கிறாய்.." என்று
மதுவின் மனம் அவளை சரமாரியாகத்
திட்டியது. எழுந்து சென்று அந்தக்
குளிரிலும் ஹீட்டரை ஆன் செய்து
தலைக்குக் குளித்து வந்து ஜன்னலின் வெளியே வெறித்தபடி நின்றாள்.
மனம் ஒரு இடத்தில் நிற்காமல்
எதையோ நினைத்து அழுது கொண்டு
இருந்தது.

கண் விழித்த கார்த்திக் மது ஜன்னல்
அருகில் நின்று வெளியே பார்த்தபடி
தனக்கு முதுகைக் காட்டி
நின்றிருந்ததைக் கண்டான். பீட்ரூட்
கலரில் இருந்த ஒரு குர்தா டாப்பும்
வெள்ளை நிற பட்டியாலா பான்டும்
அணிந்து தன் ஈரக் கூந்தலைக் காய
வைப்பதற்காக முழுதாக
விரித்துவிட்டபடி நின்று இருந்தவளைக் கண்டவனுக்கு அவன்
மனம் அவளை அணைக்கச் சொல்லிக் கெஞ்சியது.

"எதற்கு இந்தக் குளிரில் தலைக்குக்
குளித்தாய்" என்று கேட்டபடி அவன்
அருகில் செல்ல, அவனது காலடிச்
சத்தத்தை உணர்ந்தவள் அந்த
இடத்தில் இருந்து நகர்ந்து சென்று
விட்டாள். ஒரு நிமிடம் கரை புரண்டு
வந்த கோபத்தைக் கட்டுப்படுத்தியவன் எதுவும் பேசாமல்
குளிக்கச் சென்று விட்டான். அதற்குள்
வந்த ராசு அண்ணா காலைச்
சிற்றுண்டியை மதுவிடம் தந்துவிட்டுச்
சென்றார். கார்த்திக் குளித்துவிட்டு
வர இருவரும் உணவைக் காலி
செய்தனர்..

"இங்குச் சின்னக் கல்லர் அருவி
இருக்கு... 14 கிலோ மீட்டர் தான்.. வா
பார்த்து விட்டு வருவோம்" என்று
அழைத்தான். "இல்லை நீங்கள்
எஸ்டேட் வேலையைப் போய்
பாருங்கள்.." என்ற மதுவை உற்று
நோக்கினான் கார்த்திக்.

"அதை எல்லாம் நேற்றே முடித்து
விட்டேன்.." என்றவன் "அம்மா போன்
பண்ணியிருந்தார்கள்.. உன்னை
அங்கே கூட்டிப் போய் காட்டச்
சொன்னார்கள்" என்று கார்த்திக்
சட்டையில் எதையோ துடைத்தபடியேச் சொன்னான். தானாகக் கூப்பிட்டது
போல இருக்கக் கூடாது என்று ஜானகி அம்மாவின் பெயரை அவன் யூஸ்
செய்தது மதுவிற்குத் தெரியவில்லை. அம்மா பெயரைச் சொன்னால்
எப்படியும் வருவாள் என்று நினைத்தே
அவன் சொன்னது. மதுவிற்குத் தான்
எரிகிற நெருப்பில் எண்ணெய்
ஊற்றுவது போல இருந்தது.

"நான் எங்கேயும் வரவில்லை"
என்றாள் எங்கோ பார்த்தபடி..
"உள்ளேயே அடைந்து கிடக்கவா
பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி
என்னோடு வந்தாய்?" என்று சினம்
மிகுந்த குரலில் கேட்டான்.

அவன் அம்மா கூட்டிப் போகச்
சொன்னார்கள் என்ற வரி நியாபகம்
வர "நான் அத்தை மாமாவிற்காகத்
தான் வந்தேன்" என்று வேண்மென்றே
அவனிற்கும் தன் நிலைமை புரிய
வேண்டும் என்று கூறினாள். ஆனால்
அவனோடு இருக்க வேண்டும் என்று
எண்ணித் தான் மது வால்பாறை
கிளம்பியது.

மது சொன்ன பதிலில் "மது..." என்று
கார்த்திக் சத்தமாக அதட்ட மது
அப்படியே வாயை மூடி நின்றாள்.
"நான் ஒன்றும் உன்னைக்
கட்டாயப்படுத்திக் கூட்டி வரவில்லை..
அன்றே வர இஷ்டமில்லை என்றால்
சொல்லிவிடு என்று சொன்னேன்"
என்றான் மதுவை முறைத்தபடி.

"ஆமாம் கட்டாயப்படுத்தவில்லை
தான்.. அதற்காக அத்தை மாமாவை
என்னால் சங்கடப்படுத்த முடியாது..
அதனால் தான் வந்தேன் போதுமா"
என்று மது குரலை உயர்த்திவிட்டு
வெளியே நடக்க முயல, அவளின்
கையைப் பற்றி இழுத்தவன் "அப்படிக்
சகித்துக் கொண்டு என்னோடு நீ
இருக்க வேண்டும் என்று
அவசியமில்லை.. போ இப்போதே
போய் பேக் பண்ணு.. கிளம்பலாம்"
என்று ஆத்திரமாகச் சொன்னான்.

மதுவிற்கு மிகவும் வேதனையாக
இருந்தது. கோபமாகாவும் இருந்தது
அவனிடம் கையை உருவிக்கொண்டு
அறைக்குள் நுழைத்தவள்
எல்லாவற்றையும் எடுத்து பேக் செய்ய
ஆரம்பித்துவிட்டாள். பேக் செய்யச்
செய்ய தலை வேறு விண்ணென்று
வலிக்க ஆரம்பித்தது.

உள்ளே வந்தவன் அவள் எரிச்சலுடன்
எல்லாவற்றையும் அவள் பேக்
செய்வதைக் கண்டு இன்னும்
ஆத்திரம் பொங்கியது. 'எப்போடா
கிளம்பலாம் என்று இருந்திருக்கிறாள்'
என்று மனதில் நினைத்தான்.
பேக் செய்து முடித்தவள் "கிளம்பலாம்"
என்றாள் அங்கு இருந்தவனைப்
பார்த்து.. கொஞ்சம் திமிராகத் தான்
மது சொன்னாள்.

"இந்தத் திமிரெல்லாம் என்னிடம்
காட்டாதே.. அது உன்னைக் காதலித்து
உன் காலடியில் விழத் தயாராக
இருந்த எவனிடமாவது காட்டியிருக்க
வேண்டும்.. என்னிடம் இல்லை"
என்று வெளியே செல்ல
எத்தனித்தவன் தலையை மட்டும்
திருப்பி "நீ தான் என் பின்னாடி
வந்தாய்.. நான் ஒன்றும் உன்
பின்னால் வரவில்லை.. நினைவு
இருக்கட்டும்" என்று மதுவை
வார்த்தைகளால் குத்திக்குதறி விட்டுச் சென்று விட்டான்.

அவ்வளவு தான் மதுவிற்கு அழுகை
வெடித்தது.. பாத்ரூமிற்குள் புகுந்து
அழுது தீர்த்துவிட்டாள்..
என்னவெல்லாம் சொல்கிறான் பார்..
இவனிடம் முதலில் காதலைச்
சொன்னதால் வந்த வினை தானே
இது என்று நினைத்துக் கதறினாள்
மது. ஏனோ தன்னுள் இருக்க எல்லாம்
வடிவதை மது உணர்ந்தாள். எட்டு வருடங்களாக நினைப்பிலும்
கல்யாணத்திற்குப் பிறகு நான்கு
மாதமாக அவனின் அருகாமையையே
சொர்க்கமாகக் கழித்தவளுக்கு இன்று
அவன் பேச்சு நரகத்தைக் காட்டுவது
போல இருந்தது.

சிறிது நேரம் அப்படியே நின்று
அழுதவள் கண்களைத் துடைத்துக்
கொண்டு வெளியே வர எல்லாப்
பைகளும் காரிற்கு எடுத்துச்
செல்லப்பட்டிருந்தது. முகத்தைக்
கழுவிக் கொண்டு கண்ணீரின்
சுவடுகளை மறைத்தவள், வெளியே
வரக் கார்த்திக் ராசு அண்ணாவிடம்
பேசிக் கொண்டு இருந்தான். அவரிடம்
கார்த்திக் சாவியைக் கொடுக்க
இருவரும் காரில் ஏறி அமர்ந்து
பொள்ளாச்சி புறப்பட்டனர்.

மனிதர்கள் ஒன்று நினைக்க விதி
வேறு அல்லவா நினைக்கிறது?
 




kalaivanisendhil

இணை அமைச்சர்
Joined
Sep 3, 2018
Messages
737
Reaction score
774
Location
mumbai
இரண்டு பேரும் மனசு விட்டு பேசுனாளே எல்லா கஷீடமும் இல்லாம போயிடும்
அருமை?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top