- Joined
- Nov 16, 2021
- Messages
- 14
- Reaction score
- 58
அத்தியாயம் - ஏழு
அதிகாலை நான்கு மணி. ஈ சி. ஆர் கடற்கரை ரோட்டில் உள்ள பீச் ரிசார்ட் ஒன்றில் ஒருவன் அரை குறை ஆடையுடன் நின்று இருக்க, அவன் எதிரில் வர்மா, கருணா இருவரும் நின்று இருந்தனர்.
அவர்களைப் பார்த்தப் பீதியில் எதிரில் இருந்தவன்,
“வர்மா சர் , பிளீஸ் ஒண்ணும் செஞ்சிடாதீங்க. உங்களுக்கு எதிரா நான் எதுவும் பேசலை. அவங்கப் பேசும்போதுக் கூட இது எல்லாம் வேண்டாம். இப்போ இருக்கிற மாதிரியேத் தொடர்ந்து நடந்துட்டு இருக்கலாம்ன்னு தான் சொன்னேன் “
“இல்லையே. எங்களுக்கு வந்தத் தகவல் படி , அந்த வர்மா என்ன பெரிய இவனா? அவன் செய்யற வேலைக்கு ஏதோ ஐஞ்சு பத்துன்னு வீசி எறிஞ்சிட்டுப் போறதா விட்டுட்டு , சரக்கு மதிப்பில் இத்தனை பர்சண்ட்ன்னு கொடுக்கணுமா? இது அவன் அப்பன் சம்பாதிச்சதான்னுப் பேசின மாதிரி எங்களுக்கு நியூஸ் வந்துதே?”
அவன் பேசியதை அப்படியேக் கூறி இருக்க, எதிரில் நின்றவன் தலை சுழல ஆரம்பித்தது. அவன் பேசியது எல்லாம் உண்மைதான். இத்தனைக்கும் அங்கே இவர்களை எதிர்ப்பவர்கள் மட்டும் தான் கூடி இருந்தார்கள். வெளி மனிதர் என ஒரு ஈ , காக்காக் கூட இல்லை. அப்படியும் எப்படி நியூஸ் வெளியில் சென்றது என்று புரியாமல் நின்றான்.
இப்போது அது முக்கியம் இல்லை. உயிர் தப்பிப்பது தான் முக்கியம் என்று உணர்ந்தவனாக
“ஐயோ, அப்படி எல்லாம் சொல்லிருக்க மாட்டேன் கொஞ்சம் போதை அதிமானா உளறுவேன் அவ்வளவு தான். இவ்ளோ தூரம் எல்லாம் அதுவும் வர்மா சர்ரை எதிர்த்துப் பேசியிருக்க மாட்டேன்.” என அலறினான்.
“ஆக மொத்தம், போதை ஏறினால் என்னப் பேசுவேன்னுத் தெரியாதுன்னு சொல்ற?
“இல்லை சர். இல்லை சர். “ என்று பதற,
“நீ பேசி இருந்தாலும், பேசி இருக்காட்டாலும் இன்னிக்கு உனக்கு சங்கு தான். நாங்க நாள் குறிச்சுத் தான் உன்னை இங்கே வரவழைச்சு இருக்கோம். “ என்று கருணா கூறினான்.
“அடக் கடவுளே, நானே வந்து மாட்டிக்கிட்டேனா?” என்று புலம்ப,
“கடவுள் எல்லாம் நல்லக் காரியத்திற்கு தான் துணைக்கு இருப்பார். நீ ஜல்சா பண்ண வந்த இடத்தில் எல்லாம் துணை இருப்பாரா என்ன? “ என கருணா கூற, அவன் கண்ணில் மரண பயம் தெரிந்தது.
“கருணா, டோன்ட் டேக் மச் டைம். லெட் வீ ஃபினிஷ்ட் & வில் மூவ் “ என்று வர்மா கூறவும்
“சரி சரி. கடவுள் உன்னைக் கூப்பிடறாராம் . போ” என்று அவனைச் சுட்டு விட்டு அங்கிருந்துக் கிளம்பினார்கள்.
அபர்ணா மணி டிரஸ்ட்டின் அந்தக் கிளைக்குச் சென்ற போது , அங்கே நிர்வாகி முதலில் சாதாரணமாகவேப் பேசிக் கொண்டு இருந்தார்.
“வாங்க மேடம். “ என்று வரவேற்றார்.
“உங்க டிரஸ்ட் ஹோம் சோதனை போடணும்”
“எதுக்கு மேடம்?”
“உங்க டிரஸ்ட்லே சில சந்தேகத்துக்கிடமான விஷயங்கள் நடக்கிறதா எங்களுக்குத் தகவல் வந்துருக்கு. அதனால் தான் சோதனை போடணும்”
“அப்படி எல்லாம் எதுவும் நடக்கலை மேடம். உங்களுக்கு யாரோத் தவறா தகவல் கொடுத்து இருக்காங்க. “
“எங்களுக்குக் கிடைச்சத் தகவல் நம்பகமான இடத்தில் இருந்து வந்தது தான். அதனால் எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுங்க” என அழுத்ததுடன் அபர்ணா கூறவும், அதற்கு மேல் எதுவும் வாதம் செய்யமால் அபர்ணாவை அழைத்துச் சென்றார்.
அவள் டிரஸ்ட் ஆபீசில் இருந்து வெளியே வந்து ஹோம் இருக்கும் பகுதிக்குச் செல்லும் போது , துப்புரவு தொழிலாளி உடையணிந்த ஒருவன் வேகமாக அவள் எதிரில் வந்து நின்று சல்யூட் அடித்தான்.
அவனைக் கண்டதும் ஹோம் நிர்வாகி,
“மேடம் , நீங்கள் முதலில் சொன்ன போது கூட டிரஸ்ட் பவுன்டர் மாணிக்கவேல் இறந்த விஷயத்தில் உங்களுக்கு ஏதாவது அநானிமாஸ் கால் வந்துருக்கும்ன்னு நினைச்சேன். ஆனால் மப்டி போலீஸ் வந்துக் கண்காணிக்கிற அளவிற்கு இங்கே எந்தத் தப்பும் நடக்கலை. “ என்று அதிருப்தியுடன் தலையசைத்தார்.
“நான் நம்பகமான இடத்தில் இருந்து வந்தத் தகவல் தான் என்று சொன்னேனே சர் “ என்றவள்,
“சொல்லுங்க மிஸ்டர்.” என எதிரில் இருந்தவனைப் பார்த்துக் கூறினாள்.
“மேடம், தொடர்ந்து கண்காணிச்சதில், இந்தப் பெண்ணுக்கு இரண்டு நாளாக உடம்பு சரியில்லாமல் இருந்தது. நேற்றைக்கு ஹாஸ்பிடல் அழைச்சுட்டு போன போது நடந்து சென்ற பெண், மாலை வரும்போது ஸ்ட்ரக்சர்லே கூட்டிட்டு வந்தாங்க. மெதுவாக விசாரித்ததில், டீஹைடிரெட் ஆனதால் ட்ரிப்ஸ் போட்டதா சொன்னாங்க. அதுக்கு நடக்க முடியாட்டால் கூட வீல் சேர் போதுமே. அது இங்கே அவைலபிளாவும் இருக்கேன்னு பார்த்தேன். ஆனால் இரவு முழுதும் அந்தப் பெண் ஏதோ கத்திக் கொண்டிருந்த சத்தம் கேட்டது. பெண்களுக்குத் தனிப் பகுதி. அதைக் கண்காணிப்பதும் பெண்களே என்பதால் என்னால் உள்ளே செல்ல முடியவில்லை. அப்போதும் அந்த மேடம் கிட்டே கேட்டேன். அவங்க அந்தப் பொண்ணு வலியில் கத்துறதா சொன்னாங்க. அதை என்னால் நம்பாமலும் இருக்க முடியலை. ஏன் என்றால் இது மனநிலை பாதிப்பு உள்ளானவங்களுக்கு நடத்துற ஹோம். இங்கே உள்ளவங்க எப்போதும் ஒரே மாதிரி இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. அதனால் வேறு எதுவும் கேட்காமல் , விட்டுவிட்டேன். காலையில் இந்தப் பெண் இறந்துக் கிடந்தாள்” என்று முடிக்க, இப்போது நிர்வாகியின் முகத்தைப் பார்த்தாள் அபர்ணா.
அவர் முகத்தில் கலவரம் மிகுந்துக் காணப்பட்டது.
“மேடம், எனக்கே இந்த நியூஸ் இன்னும் வரலை. அத்தோட உங்க ஸ்டாஃப் சொன்ன அத்தனையும் உண்மை தான். அந்தப் பெண்ணுக்கு உடம்பு முடியாமல், ட்ரிப்ஸ் போட்டது எல்லாம் உண்மையே. அவளை ஹாஸ்பிடல் அழைச்சுட்டுப் போய் வந்ததற்கு பில் எல்லாம் கூட இருக்கு. அதேப் போல ஒரு சில நாட்களில் இந்த மாதிரி நிலையில் உள்ளவர்கள் தன்னை அறியாமல் கத்துவார்கள். நாங்கள் அதைப் பொருட்படுத்துவது கிடையாது. மற்றவர்களைப் பார்த்தால் இன்னுமே அலறல் அதிகமாகும். அதனால் தான் அவர்களே கத்தி அடங்கட்டும் என்று விட்டுவிடுவோம். அப்படித்தான் எங்கள் டாக்டரும் கூறியிருக்கிறார். நேற்றைக்குக் கூட அந்தப் பெண்ணை செக் செய்த டாக்டர் ஊசி, மருந்து எல்லாம் கொடுத்து இருப்பதால் வலி அதிகம் இருக்கும். அதைத் தாங்க முடியாமல் கத்த வாய்ப்பு உண்டு. அதனால் பயப்பட வேண்டாம் என்று கூறி தான் அனுப்பினார். இவர் கூறிய எல்லா விஷயங்களும் உண்மை. ஆனால் அவள் எப்படி இறந்தாள் என்பது எனக்கும் தெரியவில்லை” என்றார்.
“எல்லாம் சரி. அறையில் இருந்தப் பெண் எப்படி தோட்டத்தில் விழுந்துக் கிடக்கிறாள்?” என்று அபர்ணா கேட்க,
“அந்தப் பெண் தூக்கம் கலைந்து எழுந்து வந்திருக்கலாம் மேடம்”
“இந்த மாதிரி உள்ளவர்களைத் தனியா விடுவீங்களா?”
“இல்லை மேடம். அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவில் டைபர் போட்டுப் படுக்க வைத்து விடுவோம். அவர்கள் எல்லோருமே மருந்து எடுத்துக் கொள்பவர்கள் என்பதால் இரவில் கண் விழிப்பதில்லை. காலையில் ஆறு மணிக்கு அவர்களின் கேர் டேக்கர் வந்து கவனித்துக் கொள்வார்கள். இந்தப் பெண்ணுக்கும் அதே தான் செய்து இருப்பார்கள். ஆனால் இன்றைக்கு இடையில் எப்படி விழித்தாள் என்பது தான் தெரியவில்லை. “
“சரி. நீங்க எல்லோரும் இங்கேயே இருங்க. நான் போய் முதலில் பாடியைப் பார்த்துட்டு வர்றேன்” என்றவள், இன்ஸ்பெக்டரிடம் ஆம்புலன்ஸ், பாரான்சிக் எல்லோருக்கும் தகவல் கொடுக்கச் சொன்னாள்.
“இன்ஸ்பெக்டர், இப்போதைக்கு பிரஸ்க்குத் தெரிய வேண்டாம்” என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே, டிரஸ்ட் வாசலில் பிரஸ் வந்திருப்பதாக வாட்ச்மேன் வந்து கூற, இன்ஸ்பெக்டரை கோபத்துடன் பார்த்துவிட்டு அங்கே சென்றாள்.
அங்கே முதல் ஆளாக இளமாறன் நிற்க, அவனைப் பின்பற்றி மற்ற மீடியா ரிப்போர்ட்டர்ஸ் நின்று இருந்தனர்.
இளமாறனே முதலில் கேள்விகளை ஆரம்பித்தான்.
“மேடம், நான்கு நாட்கள் முன் மிஸ்டர் மாணிக்கவேல் கொலைச் செய்யப்பட்டது இருந்த நிலையில், இன்றைக்கு அவரின் டிரஸ்ட்டில் போலீஸ் சோதனை நடப்பதன் காரணம் தெரிஞ்சுகக்கலாமா?” எனவும், அபர்ணாவின் பார்வை இளமாறனை எரித்தது.
மனதிற்குள் மாமா சொன்ன மாதிரி இவனுக்கு மட்டும் எங்கேருந்து நியூஸ் கிடைக்குது. எனக்கு எதுவும் ஜி. பி. எஸ் செட் பண்ணிருக்கானோ என்று தன்னையே ஒரு முறைக் குனிந்துப் பார்த்தாள். பின் இது என்ன நினைப்பு எனத் தலையை உதறியவள்,
“மிஸ்டர் மாணிக்கக்வேல் கொலை செய்யப்பட்டதால் , அது சம்பந்தமானத் தகவல் சேகரிக்க நடக்கிற வழக்கமான விசாரணை தான் “ என்று கூறும் போதே, இன்ஸ்பெக்டர் கூறி ஆம்பூலன்ஸ் வந்து நிற்க, இப்போது இன்ஸ்பெக்டரை நன்றாக முறைத்தாள் .
“நீங்க விசாரணைக்குத் தானே வந்து இருப்பதாக சொன்னீங்க. ஆனால் ஆம்புலன்ஸ் வந்து இருக்கே? என்ன மேடம் நடக்குது?” என இளமாறன் எடுத்துக் கொடுக்க, மற்ற ரிப்போர்ட்டர்களும் அதைப் பிடித்துக் கொண்டனர்.
“வெயிட், வெயிட், நாங்க விசாரணைக்கு வந்த இடத்தில் ஒரு பெண் இறந்து இருப்பதாகத் தெரிந்தது. அதைப் பற்றி விசாரிச்சுட்டு இருக்கும்போது தான் நீங்க வந்துட்டீங்க. இன்னும் விசாரணை முடியலை. ஓரளவு ஐடியா கிடைச்சதும் உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணறேன்” என்று விட்டு உள்ளேத் திரும்பும்போது
இளமாறன் “மேடம் , இது இயற்கை மரணமா ? இல்லை வேறு எதுவும் நடந்து இருக்கா?” எனக் கேட்க, இப்போது நெற்றிக்கண் திறந்த சிவனாக இளமாறனை முறைத்தாள்.
பின் பொது இடம் என்பதைக் கருத்தில் கொண்டு
“அந்தப் பெண் இரண்டு நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாகத் தான் ஹோம்லே சொல்றாங்க. மேற்கொண்டு எதனால் மரணம்ன்னு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் பார்த்தாத் தான் தெரியும் “ எனக் கூறிவிட்டு அதற்கு மேல் எதற்கும் பதில் கூறாமல் மீண்டும் ஹோமின் உள்ளேச் சென்று விட்டாள்.
அதற்குள் இன்ஸ்பெக்டரிடம் கூறி ஃபோர்ஸ் வரவழைத்து , ஹோமின் உள்ளே யாரும் வராதவாறு தடுத்தாள்.
மீண்டும் அந்தப் பெண்ணின் உடல் அருகே சென்று பார்த்தவளுக்கு உடல் ரீதியான எந்தக் காயங்களும் வெளியில் தெரியவில்லை. இரவு முழுதும் தொடர்ந்து அலறியதில் தொண்டைப் பகுதியில் மட்டும் சிறிது சிவந்துக் காணப்பட்டது. கன்னங்களில் கண்ணீர் கரைத் தென்பட்டது. வேறு எதுவும் தெரியவில்லை.
கைகளில் ட்ரிப்ஸ் செலுத்தியதற்கான வென்பிளான் பிரிக்காமல் இருந்தது. அதற்கு மேல் ஆக வேண்டியதைப் பார்த்துக் கொள்ள இன்ஸ்பெக்டரிடம் சொல்லிவிட்டு , சிறிது நேரம் அந்த ஹோம் சுற்றி நடந்தாள்.
அபர்ணாவிற்கு மூளையேக் குழம்பிக் கிடக்க, சற்று நேரம் என்ன நடந்து இருக்கும் என்று யோசித்தாள்.
பின் நிர்வாகியிடம் மேலும் விசாரணையைத் தொடர்ந்தாள் .
“நீங்க இந்த இல்லத்தை எத்தனை நாளா நிர்வாகம் செய்யறீங்க?”
“கிட்டத்தட்ட பத்து வருடமா நிர்வாகத்தில் இருக்கேன் மேடம் “
“இதுக்கு முன்னாடி இந்த இல்லத்தில் இறப்பு எப்போ நடந்து இருக்கு?”
“ஒரு மூன்று மாதம் முன்னாடி இருக்கும் மேடம். “
“யார்? எப்படி இறந்தாங்க? ‘
“அப்போது பதினெட்டு வயசுப் பையன் இறந்து இருந்தான். பிறக்கும் போதே ஆட்டிசம் ப்ராப்ளம் இருந்தவனுக்கு, கொஞ்சம் கொஞ்சமா ஆர்கன்ஸ் செயல்படாமல் போய் விட்டது. இறக்கும் முன் இதயம் செயல்படாமல் ஹார்ட் அட்டாக் வந்து இறந்தான். “
“உங்களுக்கு எந்த சந்தேகமும் வரலையா?”
“இல்லை மேடம். நான் இந்தப் பத்து வருஷத்தில் இது மாதிரி நிறையப் பார்த்து இருக்கேன். அன்று காலை வரை நன்றாக இருந்தவர்கள் கூட மாலையில் இறப்பதைப் பார்த்து இருக்கேன். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாக இருப்பதால், சட்டென்று முடிவு வந்து விடுவதாக ஹாஸ்பிடலில் கூறுவார்கள்”
“எந்த ஹாஸ்பிடலில் நேற்றைக்கு அந்தப் பெண்ணை அட்மிட் செய்தீர்கள்?”
“ஆர். கே. என் ஹாஸ்பிடல் தான் மேடம்”
“அந்த ஹாஸ்பிடல் யாரோடாது?’
“அந்த ஹாஸ்பிடல் சேர்மன் ஒரு சோசியல் வொர்கெர் . அடிக்கடி மெடிக்கல் காம்ப் நடத்தி இந்த மாதிரி ஹோமில் உள்ளவர்களுக்கு இலவச ட்ரீட்மெண்ட் கொடுப்பார். விட்டமின் மாத்திரைகள் எல்லாம் இலவசமா கொடுத்து இருக்கார். “
“இறந்த பெண்ணின் உறவினர்களுக்குத் தகவல் சொல்லியாகி விட்டதா?
“இவளுக்கு யாரும் கிடையாது மேடம். “
“பின் எப்படி இங்கே வந்து சேர்ந்தாள்?
“தெருவில் சுற்றிக் கொண்டு இருந்தாகக் கூறி இங்கேக் கொண்டு வந்து சேர்த்தார்கள்”
“எத்தனை நாட்களாக இந்தப் பெண் இங்கு இருக்கிறாள்?”
“சுமார் ஐந்து வருடம் ஆகியிருக்கும் மேடம்.”
“சரி. கொண்டு வந்து சேர்த்தவர்களைப் பற்றி எதுவும் விவரம் இருக்கிறதா?”
“இல்லை மேடம். இதேப் போல தெருவில் சுற்றுபவர்களை இல்லத்தில் சேர்க்க ஹெல்ப்லைன் சர்வீஸ் ஒன்று டிரஸ்ட்டின் சார்பில் இருக்கிறது. அதற்கு ஃபோன் செய்து இடம் மட்டும் சொல்லி விட்டால் அவர்களேச் சென்று அழைத்து வருவார்கள். ஃபோன் செய்தவர் விவரம் கூறத் தேவையில்லை என்று சொல்லித் தான் அந்த ஹெல்ப்லைன் நடக்கிறது “
“இங்கே சி. சி. டிவி கண்ட்ரோல் எங்கே இருக்கு?” என்று வினவ, தன் அறைக்கு அழைத்துச் சென்று காண்பித்தார்.
அதைச் செக் செய்ததில் சந்தேகப்படும்படியான எந்த விஷயங்களும் நடக்கவில்லை. அந்தப் பெண் இருந்த வராந்தா பக்கமும் யாரும் செல்லவில்லை. மற்ற இடத்தில் உள்ள காமிரா செக் செய்துப் பார்த்ததிலும் எந்த வெளி ஆட்கள் நடமாட்டமும் இல்லை.
அதிகாலை நான்கு மணிக்கு அந்தப் பெண் தானே எழுந்து வராந்தாவில் வருவதும் சிசிடிவியில் தெரிந்தது. ஆனால் தோட்டத்திற்குள் இறங்கிய பின் எங்கே செல்கிறாள் எனத் தெரியவில்லை. காமிரா இருக்கும் பக்கம் அவள் செல்லவில்லை போல என எண்ணிக் கொண்டாள் அபர்ணா.
அந்தப் பெண்ணைத் தொடர்ந்தும் யாரும் செல்லவில்லை. ஆனால் அவளின் நடையில் தள்ளாட்டம் தெரிய, பொதுவாகவே அவள் அப்படித் தான் நடப்பதாக நிர்வாகி கூறினார்.
அதற்கு மேல் அவரிடம் வேறு எதுவும் கேட்க முடியாமல், நிர்வாகி இல்லாமல் திணறி விடும் என்பதால் ஸ்டேஷன்க்கு அழைத்துச் செல்லவில்லை என்றும், வெளியில் எங்கும் செல்வதாக இருந்தால் அவளுக்குத் தகவல் கொடுக்க வேண்டும் என்றும் கூறினாள். இரண்டு கான்ஸ்டபிளை அங்கே நிறுத்தி விட்டு வேறு எதுவும் தகவல் இருந்தால் தனக்குக் கூறுமாறு சொல்லிவிட்டுச் சென்றாள்.
அவள் அலுவலகம் செல்லும் போதே டி. ஜி. பி அழைக்க, பெருமூச்சு விட்டாள்.
அவளிடம் ஹோமில் நடந்ததைப் பற்றி விசாரிக்க அவள் யூகத்தைக் கூறினாள். இன்னும் விசாரணையை முடுக்கி விட்டு, நடந்த விஷயங்களுக்கான காரணங்களைக் கண்டுப் பிடிக்குமாறு கொஞ்சம் கடுமையாகவேக் கூறினார்.
அபர்ணாவும் முடிந்தவரை விரைவில் கண்டுபிடிப்பதாகக் கூறிவிட்டு வெளியில் வரும்போதே இன்ஸ்பெக்டர் வேகமாக வந்து நின்றார்.
என்ன என்பதுப் போல ஏறெடுத்துப் பார்க்க,
“மேடம், இன்றைக்குக் காலையில் ஈ.சி.ஆர் கடற்கரை ரோட்டில் ஒருவனின் சடலம் கிடைத்து இருக்கிறது மேடம். அவரும் சுடப்பட்டுத் தான் இறந்து இருக்கிறார்” என்றார்.
“காட். அவர் யாரு என்னன்னு தெரிஞ்சுதா ?
“இவரும் சமூக சேவகர்ன்னு தான் சொல்றாங்க . ஆனால் பெரிய அளவில் இல்லை. ஏதோ ஹெல்ப்லைன் சர்வீஸ் நடத்துறார்ன்னு சொல்றாங்க”
“ஹெல்ப்லைன் சர்வீஸ்சா ? இவருக்கும் மாணிக்கக்வேலுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கான்னு கேட்டீங்களா ?
“எஸ் மேடம். அவர் ஹோம்லே கொடுத்து இருக்கிற ஹெல்ப் லைன் சர்வீஸ் நம்பர் இவரோடாது தான். இவர் ஆபீஸ் வருகிற கால் அட்டென்ட் பண்ணி, மாணிக்கவேல் டிரஸ்ட்க்கு மெசேஜ் பாஸ் பண்ணிடுவார். இவங்க ஜாயிண்ட்டா நடத்தற ஆம்புலன்ஸ் சர்வீஸ் மூலமா ஹோம்லே மனநலம் பாதிக்கப்பட்டவங்களை சேர்த்துக் கொள்கிறாங்க.”
“ஓ. அப்போ இந்தக் கொலைகளுக்கான மோடிவ் பொதுவான விஷயமா தான் இருக்கும்” என்றவள், அங்கே இறந்துக் கிடந்தவனின் புகைப்படத்தை போனில் பார்த்தாள்.
“இந்தக் கேஸ் நம்ம டிவிஷன்குள்ளே வராதே. தென் எப்படி நமக்குத் தகவல் சொன்னாங்க?”
“மாணிக்கக்வேல் கேஸ் பற்றி இளமாறன் தொடர்ந்து எழுதிட்டு இருக்கிறதை அந்த டிவிஷன் அசிஸ்டண்ட் கமிஷன்ர் படிச்சு இருக்கார். ரெண்டு கொலைகளுக்கும் ஒற்றுமை நிறைய இருக்கு. அதனால் நமக்குத் தகவல் சொல்லிருகக்கார் . “
“சரி. அந்த ரிசார்ட் ஃபுடேஜ் எல்லாம் வாங்கிட்டு வாங்க. “ என்று அனுப்பியவளுக்கு கேஸ் இன்னும் சிக்களுக்குள் போவதாக உணர்ந்தாள். இதைப் பற்றி இன்று மாலை மாமா, மற்றும் மாறனிடம் டிஸ்கஸ் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
அப்போது சைபர் க்ரைம் ஆபீஸ்சில் இருந்து ஃபோன் வர , எடுத்துப் பேசியவள் அவர்கள் கூறிய விஷயத்தில் இன்னும் சிந்தனையில் ஆழந்தாள்.
மணி டிரஸ்ட் ஹோமில் இறந்தப் பெண்ணை ட்ரீட்மெண்ட் செய்த டாக்டரைப் பார்க்கலாம் என்று எண்ணியிருக்க , முதல் நாள் இரவில் அவர் டெல்லி சென்று விட்டதாகக் கூறினார்கள். மற்ற டாக்டர்களிடம் விசாரித்த அளவில் பெரிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
எங்கு சென்றாலும் முட்டிக் கொள்வதைப் போல இருக்க, அதற்கு மேல் யோசித்தால் உள்ள மூளையும் மழுங்கி விடும் என்று எண்ணி வீட்டிற்குப் புறப்பட்டாள்.
அங்கே வீட்டில் அன்றைக்கு இளமாறன், அஷோக் இருவரோடு சஞ்சய்யும் அமர்ந்து இருக்க, தன் தந்தையின் தோளில் சாய்ந்துக கொண்டாள்.
அஷோக் “சபாபதி , அபிம்மாவிற்கு காபி எடுத்துட்டு வா” என்றார்.
“இங்கே மட்டும் அபிம்மா சொல்லுங்க. அங்கே ஆபீஸ்லே என்னக் கடி கடிக்கிறீங்க ?” எனக் கூற,
“அது வேலைடா அபி. “ என்று சமாதானம் செய்தார் அஷோக்.
“ஊராயா இது? ஒரு கொலைக் கேஸ் கண்டுப் பிடிக்கிறதுக்குள்ளே அடுத்தக் கொலை நடக்குது. சே “ என்று சலித்துக் கொண்டாள்.
“என்ன ஆச்சு அபி?” என்று சஞ்சய் விசாரிக்க, அன்று முழுதும் நடந்ததைக் கூறினாள்.
மூவரும் யோசனையில் இருக்க, அபர்ணா
“மாறா, அந்த மாணிக்கவேல் எக்ஸ்போர்ட் பிசினஸ் பற்றித் தெரிஞ்சுதா,?’ என்று வினவினாள் .
“இல்லை அபி. ஆனால் அவங்க கண்டெய்னர போட் சர்வீஸ்லே தூத்துக்குடி ஹார்பர்லர்ந்து இங்கே ஈ.சி. ஆர் குடோன் வரைக் கொண்டு வர்றது பேப்பிலியோன்னு ஒரு ஏஜென்ஸி பண்ணிட்டு இருக்காங்க. அவங்க பில் வேல்யூலே இத்தனை பர்சண்ட் கமிஷன் என்ற பேசிஸ்லே பிசினஸ் டீல் போட்டு இருக்காங்க. “
அசோக் “அந்த ஏஜென்ஸி பற்றி விசாரிச்சியா மாறா?” என்றார்.
அபர்ணா “அது எதுக்கு மாமா ? பில்லில் கமிஷன் என்றால் லீகலா தானே இருக்கு “ என்று கேட்டாள்.
“எந்தப் போர்ட்லே வந்தாலும், இன்னிக்கு இருக்கிற இன்ஃப்ராஸ்ட்ரக்சர்லே ஒரே நாளில் டெஸ்டினேஷன் போயிடலாம். மாணிக்கவேல் ரோட் டிரான்ஸ்போர்ட் யூஸ் பண்ணாமல், சீ டிரான்ஸ்போர்ட் ஏன் யூஸ் பண்ணனும்? அப்படி பில் வேல்யூலே பர்சென்டேஜ் கேக்கறவங்களுக்கு கண்டெய்னர்லே என்ன இருக்குன்னும் தெரிஞ்சு இருக்கும் இல்லையா?” எனக் கேட்க,
அபர்ணா “இவங்க யாரு புதுசா? “ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
-தொடரும் -
அதிகாலை நான்கு மணி. ஈ சி. ஆர் கடற்கரை ரோட்டில் உள்ள பீச் ரிசார்ட் ஒன்றில் ஒருவன் அரை குறை ஆடையுடன் நின்று இருக்க, அவன் எதிரில் வர்மா, கருணா இருவரும் நின்று இருந்தனர்.
அவர்களைப் பார்த்தப் பீதியில் எதிரில் இருந்தவன்,
“வர்மா சர் , பிளீஸ் ஒண்ணும் செஞ்சிடாதீங்க. உங்களுக்கு எதிரா நான் எதுவும் பேசலை. அவங்கப் பேசும்போதுக் கூட இது எல்லாம் வேண்டாம். இப்போ இருக்கிற மாதிரியேத் தொடர்ந்து நடந்துட்டு இருக்கலாம்ன்னு தான் சொன்னேன் “
“இல்லையே. எங்களுக்கு வந்தத் தகவல் படி , அந்த வர்மா என்ன பெரிய இவனா? அவன் செய்யற வேலைக்கு ஏதோ ஐஞ்சு பத்துன்னு வீசி எறிஞ்சிட்டுப் போறதா விட்டுட்டு , சரக்கு மதிப்பில் இத்தனை பர்சண்ட்ன்னு கொடுக்கணுமா? இது அவன் அப்பன் சம்பாதிச்சதான்னுப் பேசின மாதிரி எங்களுக்கு நியூஸ் வந்துதே?”
அவன் பேசியதை அப்படியேக் கூறி இருக்க, எதிரில் நின்றவன் தலை சுழல ஆரம்பித்தது. அவன் பேசியது எல்லாம் உண்மைதான். இத்தனைக்கும் அங்கே இவர்களை எதிர்ப்பவர்கள் மட்டும் தான் கூடி இருந்தார்கள். வெளி மனிதர் என ஒரு ஈ , காக்காக் கூட இல்லை. அப்படியும் எப்படி நியூஸ் வெளியில் சென்றது என்று புரியாமல் நின்றான்.
இப்போது அது முக்கியம் இல்லை. உயிர் தப்பிப்பது தான் முக்கியம் என்று உணர்ந்தவனாக
“ஐயோ, அப்படி எல்லாம் சொல்லிருக்க மாட்டேன் கொஞ்சம் போதை அதிமானா உளறுவேன் அவ்வளவு தான். இவ்ளோ தூரம் எல்லாம் அதுவும் வர்மா சர்ரை எதிர்த்துப் பேசியிருக்க மாட்டேன்.” என அலறினான்.
“ஆக மொத்தம், போதை ஏறினால் என்னப் பேசுவேன்னுத் தெரியாதுன்னு சொல்ற?
“இல்லை சர். இல்லை சர். “ என்று பதற,
“நீ பேசி இருந்தாலும், பேசி இருக்காட்டாலும் இன்னிக்கு உனக்கு சங்கு தான். நாங்க நாள் குறிச்சுத் தான் உன்னை இங்கே வரவழைச்சு இருக்கோம். “ என்று கருணா கூறினான்.
“அடக் கடவுளே, நானே வந்து மாட்டிக்கிட்டேனா?” என்று புலம்ப,
“கடவுள் எல்லாம் நல்லக் காரியத்திற்கு தான் துணைக்கு இருப்பார். நீ ஜல்சா பண்ண வந்த இடத்தில் எல்லாம் துணை இருப்பாரா என்ன? “ என கருணா கூற, அவன் கண்ணில் மரண பயம் தெரிந்தது.
“கருணா, டோன்ட் டேக் மச் டைம். லெட் வீ ஃபினிஷ்ட் & வில் மூவ் “ என்று வர்மா கூறவும்
“சரி சரி. கடவுள் உன்னைக் கூப்பிடறாராம் . போ” என்று அவனைச் சுட்டு விட்டு அங்கிருந்துக் கிளம்பினார்கள்.
அபர்ணா மணி டிரஸ்ட்டின் அந்தக் கிளைக்குச் சென்ற போது , அங்கே நிர்வாகி முதலில் சாதாரணமாகவேப் பேசிக் கொண்டு இருந்தார்.
“வாங்க மேடம். “ என்று வரவேற்றார்.
“உங்க டிரஸ்ட் ஹோம் சோதனை போடணும்”
“எதுக்கு மேடம்?”
“உங்க டிரஸ்ட்லே சில சந்தேகத்துக்கிடமான விஷயங்கள் நடக்கிறதா எங்களுக்குத் தகவல் வந்துருக்கு. அதனால் தான் சோதனை போடணும்”
“அப்படி எல்லாம் எதுவும் நடக்கலை மேடம். உங்களுக்கு யாரோத் தவறா தகவல் கொடுத்து இருக்காங்க. “
“எங்களுக்குக் கிடைச்சத் தகவல் நம்பகமான இடத்தில் இருந்து வந்தது தான். அதனால் எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுங்க” என அழுத்ததுடன் அபர்ணா கூறவும், அதற்கு மேல் எதுவும் வாதம் செய்யமால் அபர்ணாவை அழைத்துச் சென்றார்.
அவள் டிரஸ்ட் ஆபீசில் இருந்து வெளியே வந்து ஹோம் இருக்கும் பகுதிக்குச் செல்லும் போது , துப்புரவு தொழிலாளி உடையணிந்த ஒருவன் வேகமாக அவள் எதிரில் வந்து நின்று சல்யூட் அடித்தான்.
அவனைக் கண்டதும் ஹோம் நிர்வாகி,
“மேடம் , நீங்கள் முதலில் சொன்ன போது கூட டிரஸ்ட் பவுன்டர் மாணிக்கவேல் இறந்த விஷயத்தில் உங்களுக்கு ஏதாவது அநானிமாஸ் கால் வந்துருக்கும்ன்னு நினைச்சேன். ஆனால் மப்டி போலீஸ் வந்துக் கண்காணிக்கிற அளவிற்கு இங்கே எந்தத் தப்பும் நடக்கலை. “ என்று அதிருப்தியுடன் தலையசைத்தார்.
“நான் நம்பகமான இடத்தில் இருந்து வந்தத் தகவல் தான் என்று சொன்னேனே சர் “ என்றவள்,
“சொல்லுங்க மிஸ்டர்.” என எதிரில் இருந்தவனைப் பார்த்துக் கூறினாள்.
“மேடம், தொடர்ந்து கண்காணிச்சதில், இந்தப் பெண்ணுக்கு இரண்டு நாளாக உடம்பு சரியில்லாமல் இருந்தது. நேற்றைக்கு ஹாஸ்பிடல் அழைச்சுட்டு போன போது நடந்து சென்ற பெண், மாலை வரும்போது ஸ்ட்ரக்சர்லே கூட்டிட்டு வந்தாங்க. மெதுவாக விசாரித்ததில், டீஹைடிரெட் ஆனதால் ட்ரிப்ஸ் போட்டதா சொன்னாங்க. அதுக்கு நடக்க முடியாட்டால் கூட வீல் சேர் போதுமே. அது இங்கே அவைலபிளாவும் இருக்கேன்னு பார்த்தேன். ஆனால் இரவு முழுதும் அந்தப் பெண் ஏதோ கத்திக் கொண்டிருந்த சத்தம் கேட்டது. பெண்களுக்குத் தனிப் பகுதி. அதைக் கண்காணிப்பதும் பெண்களே என்பதால் என்னால் உள்ளே செல்ல முடியவில்லை. அப்போதும் அந்த மேடம் கிட்டே கேட்டேன். அவங்க அந்தப் பொண்ணு வலியில் கத்துறதா சொன்னாங்க. அதை என்னால் நம்பாமலும் இருக்க முடியலை. ஏன் என்றால் இது மனநிலை பாதிப்பு உள்ளானவங்களுக்கு நடத்துற ஹோம். இங்கே உள்ளவங்க எப்போதும் ஒரே மாதிரி இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. அதனால் வேறு எதுவும் கேட்காமல் , விட்டுவிட்டேன். காலையில் இந்தப் பெண் இறந்துக் கிடந்தாள்” என்று முடிக்க, இப்போது நிர்வாகியின் முகத்தைப் பார்த்தாள் அபர்ணா.
அவர் முகத்தில் கலவரம் மிகுந்துக் காணப்பட்டது.
“மேடம், எனக்கே இந்த நியூஸ் இன்னும் வரலை. அத்தோட உங்க ஸ்டாஃப் சொன்ன அத்தனையும் உண்மை தான். அந்தப் பெண்ணுக்கு உடம்பு முடியாமல், ட்ரிப்ஸ் போட்டது எல்லாம் உண்மையே. அவளை ஹாஸ்பிடல் அழைச்சுட்டுப் போய் வந்ததற்கு பில் எல்லாம் கூட இருக்கு. அதேப் போல ஒரு சில நாட்களில் இந்த மாதிரி நிலையில் உள்ளவர்கள் தன்னை அறியாமல் கத்துவார்கள். நாங்கள் அதைப் பொருட்படுத்துவது கிடையாது. மற்றவர்களைப் பார்த்தால் இன்னுமே அலறல் அதிகமாகும். அதனால் தான் அவர்களே கத்தி அடங்கட்டும் என்று விட்டுவிடுவோம். அப்படித்தான் எங்கள் டாக்டரும் கூறியிருக்கிறார். நேற்றைக்குக் கூட அந்தப் பெண்ணை செக் செய்த டாக்டர் ஊசி, மருந்து எல்லாம் கொடுத்து இருப்பதால் வலி அதிகம் இருக்கும். அதைத் தாங்க முடியாமல் கத்த வாய்ப்பு உண்டு. அதனால் பயப்பட வேண்டாம் என்று கூறி தான் அனுப்பினார். இவர் கூறிய எல்லா விஷயங்களும் உண்மை. ஆனால் அவள் எப்படி இறந்தாள் என்பது எனக்கும் தெரியவில்லை” என்றார்.
“எல்லாம் சரி. அறையில் இருந்தப் பெண் எப்படி தோட்டத்தில் விழுந்துக் கிடக்கிறாள்?” என்று அபர்ணா கேட்க,
“அந்தப் பெண் தூக்கம் கலைந்து எழுந்து வந்திருக்கலாம் மேடம்”
“இந்த மாதிரி உள்ளவர்களைத் தனியா விடுவீங்களா?”
“இல்லை மேடம். அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவில் டைபர் போட்டுப் படுக்க வைத்து விடுவோம். அவர்கள் எல்லோருமே மருந்து எடுத்துக் கொள்பவர்கள் என்பதால் இரவில் கண் விழிப்பதில்லை. காலையில் ஆறு மணிக்கு அவர்களின் கேர் டேக்கர் வந்து கவனித்துக் கொள்வார்கள். இந்தப் பெண்ணுக்கும் அதே தான் செய்து இருப்பார்கள். ஆனால் இன்றைக்கு இடையில் எப்படி விழித்தாள் என்பது தான் தெரியவில்லை. “
“சரி. நீங்க எல்லோரும் இங்கேயே இருங்க. நான் போய் முதலில் பாடியைப் பார்த்துட்டு வர்றேன்” என்றவள், இன்ஸ்பெக்டரிடம் ஆம்புலன்ஸ், பாரான்சிக் எல்லோருக்கும் தகவல் கொடுக்கச் சொன்னாள்.
“இன்ஸ்பெக்டர், இப்போதைக்கு பிரஸ்க்குத் தெரிய வேண்டாம்” என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே, டிரஸ்ட் வாசலில் பிரஸ் வந்திருப்பதாக வாட்ச்மேன் வந்து கூற, இன்ஸ்பெக்டரை கோபத்துடன் பார்த்துவிட்டு அங்கே சென்றாள்.
அங்கே முதல் ஆளாக இளமாறன் நிற்க, அவனைப் பின்பற்றி மற்ற மீடியா ரிப்போர்ட்டர்ஸ் நின்று இருந்தனர்.
இளமாறனே முதலில் கேள்விகளை ஆரம்பித்தான்.
“மேடம், நான்கு நாட்கள் முன் மிஸ்டர் மாணிக்கவேல் கொலைச் செய்யப்பட்டது இருந்த நிலையில், இன்றைக்கு அவரின் டிரஸ்ட்டில் போலீஸ் சோதனை நடப்பதன் காரணம் தெரிஞ்சுகக்கலாமா?” எனவும், அபர்ணாவின் பார்வை இளமாறனை எரித்தது.
மனதிற்குள் மாமா சொன்ன மாதிரி இவனுக்கு மட்டும் எங்கேருந்து நியூஸ் கிடைக்குது. எனக்கு எதுவும் ஜி. பி. எஸ் செட் பண்ணிருக்கானோ என்று தன்னையே ஒரு முறைக் குனிந்துப் பார்த்தாள். பின் இது என்ன நினைப்பு எனத் தலையை உதறியவள்,
“மிஸ்டர் மாணிக்கக்வேல் கொலை செய்யப்பட்டதால் , அது சம்பந்தமானத் தகவல் சேகரிக்க நடக்கிற வழக்கமான விசாரணை தான் “ என்று கூறும் போதே, இன்ஸ்பெக்டர் கூறி ஆம்பூலன்ஸ் வந்து நிற்க, இப்போது இன்ஸ்பெக்டரை நன்றாக முறைத்தாள் .
“நீங்க விசாரணைக்குத் தானே வந்து இருப்பதாக சொன்னீங்க. ஆனால் ஆம்புலன்ஸ் வந்து இருக்கே? என்ன மேடம் நடக்குது?” என இளமாறன் எடுத்துக் கொடுக்க, மற்ற ரிப்போர்ட்டர்களும் அதைப் பிடித்துக் கொண்டனர்.
“வெயிட், வெயிட், நாங்க விசாரணைக்கு வந்த இடத்தில் ஒரு பெண் இறந்து இருப்பதாகத் தெரிந்தது. அதைப் பற்றி விசாரிச்சுட்டு இருக்கும்போது தான் நீங்க வந்துட்டீங்க. இன்னும் விசாரணை முடியலை. ஓரளவு ஐடியா கிடைச்சதும் உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணறேன்” என்று விட்டு உள்ளேத் திரும்பும்போது
இளமாறன் “மேடம் , இது இயற்கை மரணமா ? இல்லை வேறு எதுவும் நடந்து இருக்கா?” எனக் கேட்க, இப்போது நெற்றிக்கண் திறந்த சிவனாக இளமாறனை முறைத்தாள்.
பின் பொது இடம் என்பதைக் கருத்தில் கொண்டு
“அந்தப் பெண் இரண்டு நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாகத் தான் ஹோம்லே சொல்றாங்க. மேற்கொண்டு எதனால் மரணம்ன்னு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் பார்த்தாத் தான் தெரியும் “ எனக் கூறிவிட்டு அதற்கு மேல் எதற்கும் பதில் கூறாமல் மீண்டும் ஹோமின் உள்ளேச் சென்று விட்டாள்.
அதற்குள் இன்ஸ்பெக்டரிடம் கூறி ஃபோர்ஸ் வரவழைத்து , ஹோமின் உள்ளே யாரும் வராதவாறு தடுத்தாள்.
மீண்டும் அந்தப் பெண்ணின் உடல் அருகே சென்று பார்த்தவளுக்கு உடல் ரீதியான எந்தக் காயங்களும் வெளியில் தெரியவில்லை. இரவு முழுதும் தொடர்ந்து அலறியதில் தொண்டைப் பகுதியில் மட்டும் சிறிது சிவந்துக் காணப்பட்டது. கன்னங்களில் கண்ணீர் கரைத் தென்பட்டது. வேறு எதுவும் தெரியவில்லை.
கைகளில் ட்ரிப்ஸ் செலுத்தியதற்கான வென்பிளான் பிரிக்காமல் இருந்தது. அதற்கு மேல் ஆக வேண்டியதைப் பார்த்துக் கொள்ள இன்ஸ்பெக்டரிடம் சொல்லிவிட்டு , சிறிது நேரம் அந்த ஹோம் சுற்றி நடந்தாள்.
அபர்ணாவிற்கு மூளையேக் குழம்பிக் கிடக்க, சற்று நேரம் என்ன நடந்து இருக்கும் என்று யோசித்தாள்.
பின் நிர்வாகியிடம் மேலும் விசாரணையைத் தொடர்ந்தாள் .
“நீங்க இந்த இல்லத்தை எத்தனை நாளா நிர்வாகம் செய்யறீங்க?”
“கிட்டத்தட்ட பத்து வருடமா நிர்வாகத்தில் இருக்கேன் மேடம் “
“இதுக்கு முன்னாடி இந்த இல்லத்தில் இறப்பு எப்போ நடந்து இருக்கு?”
“ஒரு மூன்று மாதம் முன்னாடி இருக்கும் மேடம். “
“யார்? எப்படி இறந்தாங்க? ‘
“அப்போது பதினெட்டு வயசுப் பையன் இறந்து இருந்தான். பிறக்கும் போதே ஆட்டிசம் ப்ராப்ளம் இருந்தவனுக்கு, கொஞ்சம் கொஞ்சமா ஆர்கன்ஸ் செயல்படாமல் போய் விட்டது. இறக்கும் முன் இதயம் செயல்படாமல் ஹார்ட் அட்டாக் வந்து இறந்தான். “
“உங்களுக்கு எந்த சந்தேகமும் வரலையா?”
“இல்லை மேடம். நான் இந்தப் பத்து வருஷத்தில் இது மாதிரி நிறையப் பார்த்து இருக்கேன். அன்று காலை வரை நன்றாக இருந்தவர்கள் கூட மாலையில் இறப்பதைப் பார்த்து இருக்கேன். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாக இருப்பதால், சட்டென்று முடிவு வந்து விடுவதாக ஹாஸ்பிடலில் கூறுவார்கள்”
“எந்த ஹாஸ்பிடலில் நேற்றைக்கு அந்தப் பெண்ணை அட்மிட் செய்தீர்கள்?”
“ஆர். கே. என் ஹாஸ்பிடல் தான் மேடம்”
“அந்த ஹாஸ்பிடல் யாரோடாது?’
“அந்த ஹாஸ்பிடல் சேர்மன் ஒரு சோசியல் வொர்கெர் . அடிக்கடி மெடிக்கல் காம்ப் நடத்தி இந்த மாதிரி ஹோமில் உள்ளவர்களுக்கு இலவச ட்ரீட்மெண்ட் கொடுப்பார். விட்டமின் மாத்திரைகள் எல்லாம் இலவசமா கொடுத்து இருக்கார். “
“இறந்த பெண்ணின் உறவினர்களுக்குத் தகவல் சொல்லியாகி விட்டதா?
“இவளுக்கு யாரும் கிடையாது மேடம். “
“பின் எப்படி இங்கே வந்து சேர்ந்தாள்?
“தெருவில் சுற்றிக் கொண்டு இருந்தாகக் கூறி இங்கேக் கொண்டு வந்து சேர்த்தார்கள்”
“எத்தனை நாட்களாக இந்தப் பெண் இங்கு இருக்கிறாள்?”
“சுமார் ஐந்து வருடம் ஆகியிருக்கும் மேடம்.”
“சரி. கொண்டு வந்து சேர்த்தவர்களைப் பற்றி எதுவும் விவரம் இருக்கிறதா?”
“இல்லை மேடம். இதேப் போல தெருவில் சுற்றுபவர்களை இல்லத்தில் சேர்க்க ஹெல்ப்லைன் சர்வீஸ் ஒன்று டிரஸ்ட்டின் சார்பில் இருக்கிறது. அதற்கு ஃபோன் செய்து இடம் மட்டும் சொல்லி விட்டால் அவர்களேச் சென்று அழைத்து வருவார்கள். ஃபோன் செய்தவர் விவரம் கூறத் தேவையில்லை என்று சொல்லித் தான் அந்த ஹெல்ப்லைன் நடக்கிறது “
“இங்கே சி. சி. டிவி கண்ட்ரோல் எங்கே இருக்கு?” என்று வினவ, தன் அறைக்கு அழைத்துச் சென்று காண்பித்தார்.
அதைச் செக் செய்ததில் சந்தேகப்படும்படியான எந்த விஷயங்களும் நடக்கவில்லை. அந்தப் பெண் இருந்த வராந்தா பக்கமும் யாரும் செல்லவில்லை. மற்ற இடத்தில் உள்ள காமிரா செக் செய்துப் பார்த்ததிலும் எந்த வெளி ஆட்கள் நடமாட்டமும் இல்லை.
அதிகாலை நான்கு மணிக்கு அந்தப் பெண் தானே எழுந்து வராந்தாவில் வருவதும் சிசிடிவியில் தெரிந்தது. ஆனால் தோட்டத்திற்குள் இறங்கிய பின் எங்கே செல்கிறாள் எனத் தெரியவில்லை. காமிரா இருக்கும் பக்கம் அவள் செல்லவில்லை போல என எண்ணிக் கொண்டாள் அபர்ணா.
அந்தப் பெண்ணைத் தொடர்ந்தும் யாரும் செல்லவில்லை. ஆனால் அவளின் நடையில் தள்ளாட்டம் தெரிய, பொதுவாகவே அவள் அப்படித் தான் நடப்பதாக நிர்வாகி கூறினார்.
அதற்கு மேல் அவரிடம் வேறு எதுவும் கேட்க முடியாமல், நிர்வாகி இல்லாமல் திணறி விடும் என்பதால் ஸ்டேஷன்க்கு அழைத்துச் செல்லவில்லை என்றும், வெளியில் எங்கும் செல்வதாக இருந்தால் அவளுக்குத் தகவல் கொடுக்க வேண்டும் என்றும் கூறினாள். இரண்டு கான்ஸ்டபிளை அங்கே நிறுத்தி விட்டு வேறு எதுவும் தகவல் இருந்தால் தனக்குக் கூறுமாறு சொல்லிவிட்டுச் சென்றாள்.
அவள் அலுவலகம் செல்லும் போதே டி. ஜி. பி அழைக்க, பெருமூச்சு விட்டாள்.
அவளிடம் ஹோமில் நடந்ததைப் பற்றி விசாரிக்க அவள் யூகத்தைக் கூறினாள். இன்னும் விசாரணையை முடுக்கி விட்டு, நடந்த விஷயங்களுக்கான காரணங்களைக் கண்டுப் பிடிக்குமாறு கொஞ்சம் கடுமையாகவேக் கூறினார்.
அபர்ணாவும் முடிந்தவரை விரைவில் கண்டுபிடிப்பதாகக் கூறிவிட்டு வெளியில் வரும்போதே இன்ஸ்பெக்டர் வேகமாக வந்து நின்றார்.
என்ன என்பதுப் போல ஏறெடுத்துப் பார்க்க,
“மேடம், இன்றைக்குக் காலையில் ஈ.சி.ஆர் கடற்கரை ரோட்டில் ஒருவனின் சடலம் கிடைத்து இருக்கிறது மேடம். அவரும் சுடப்பட்டுத் தான் இறந்து இருக்கிறார்” என்றார்.
“காட். அவர் யாரு என்னன்னு தெரிஞ்சுதா ?
“இவரும் சமூக சேவகர்ன்னு தான் சொல்றாங்க . ஆனால் பெரிய அளவில் இல்லை. ஏதோ ஹெல்ப்லைன் சர்வீஸ் நடத்துறார்ன்னு சொல்றாங்க”
“ஹெல்ப்லைன் சர்வீஸ்சா ? இவருக்கும் மாணிக்கக்வேலுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கான்னு கேட்டீங்களா ?
“எஸ் மேடம். அவர் ஹோம்லே கொடுத்து இருக்கிற ஹெல்ப் லைன் சர்வீஸ் நம்பர் இவரோடாது தான். இவர் ஆபீஸ் வருகிற கால் அட்டென்ட் பண்ணி, மாணிக்கவேல் டிரஸ்ட்க்கு மெசேஜ் பாஸ் பண்ணிடுவார். இவங்க ஜாயிண்ட்டா நடத்தற ஆம்புலன்ஸ் சர்வீஸ் மூலமா ஹோம்லே மனநலம் பாதிக்கப்பட்டவங்களை சேர்த்துக் கொள்கிறாங்க.”
“ஓ. அப்போ இந்தக் கொலைகளுக்கான மோடிவ் பொதுவான விஷயமா தான் இருக்கும்” என்றவள், அங்கே இறந்துக் கிடந்தவனின் புகைப்படத்தை போனில் பார்த்தாள்.
“இந்தக் கேஸ் நம்ம டிவிஷன்குள்ளே வராதே. தென் எப்படி நமக்குத் தகவல் சொன்னாங்க?”
“மாணிக்கக்வேல் கேஸ் பற்றி இளமாறன் தொடர்ந்து எழுதிட்டு இருக்கிறதை அந்த டிவிஷன் அசிஸ்டண்ட் கமிஷன்ர் படிச்சு இருக்கார். ரெண்டு கொலைகளுக்கும் ஒற்றுமை நிறைய இருக்கு. அதனால் நமக்குத் தகவல் சொல்லிருகக்கார் . “
“சரி. அந்த ரிசார்ட் ஃபுடேஜ் எல்லாம் வாங்கிட்டு வாங்க. “ என்று அனுப்பியவளுக்கு கேஸ் இன்னும் சிக்களுக்குள் போவதாக உணர்ந்தாள். இதைப் பற்றி இன்று மாலை மாமா, மற்றும் மாறனிடம் டிஸ்கஸ் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
அப்போது சைபர் க்ரைம் ஆபீஸ்சில் இருந்து ஃபோன் வர , எடுத்துப் பேசியவள் அவர்கள் கூறிய விஷயத்தில் இன்னும் சிந்தனையில் ஆழந்தாள்.
மணி டிரஸ்ட் ஹோமில் இறந்தப் பெண்ணை ட்ரீட்மெண்ட் செய்த டாக்டரைப் பார்க்கலாம் என்று எண்ணியிருக்க , முதல் நாள் இரவில் அவர் டெல்லி சென்று விட்டதாகக் கூறினார்கள். மற்ற டாக்டர்களிடம் விசாரித்த அளவில் பெரிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
எங்கு சென்றாலும் முட்டிக் கொள்வதைப் போல இருக்க, அதற்கு மேல் யோசித்தால் உள்ள மூளையும் மழுங்கி விடும் என்று எண்ணி வீட்டிற்குப் புறப்பட்டாள்.
அங்கே வீட்டில் அன்றைக்கு இளமாறன், அஷோக் இருவரோடு சஞ்சய்யும் அமர்ந்து இருக்க, தன் தந்தையின் தோளில் சாய்ந்துக கொண்டாள்.
அஷோக் “சபாபதி , அபிம்மாவிற்கு காபி எடுத்துட்டு வா” என்றார்.
“இங்கே மட்டும் அபிம்மா சொல்லுங்க. அங்கே ஆபீஸ்லே என்னக் கடி கடிக்கிறீங்க ?” எனக் கூற,
“அது வேலைடா அபி. “ என்று சமாதானம் செய்தார் அஷோக்.
“ஊராயா இது? ஒரு கொலைக் கேஸ் கண்டுப் பிடிக்கிறதுக்குள்ளே அடுத்தக் கொலை நடக்குது. சே “ என்று சலித்துக் கொண்டாள்.
“என்ன ஆச்சு அபி?” என்று சஞ்சய் விசாரிக்க, அன்று முழுதும் நடந்ததைக் கூறினாள்.
மூவரும் யோசனையில் இருக்க, அபர்ணா
“மாறா, அந்த மாணிக்கவேல் எக்ஸ்போர்ட் பிசினஸ் பற்றித் தெரிஞ்சுதா,?’ என்று வினவினாள் .
“இல்லை அபி. ஆனால் அவங்க கண்டெய்னர போட் சர்வீஸ்லே தூத்துக்குடி ஹார்பர்லர்ந்து இங்கே ஈ.சி. ஆர் குடோன் வரைக் கொண்டு வர்றது பேப்பிலியோன்னு ஒரு ஏஜென்ஸி பண்ணிட்டு இருக்காங்க. அவங்க பில் வேல்யூலே இத்தனை பர்சண்ட் கமிஷன் என்ற பேசிஸ்லே பிசினஸ் டீல் போட்டு இருக்காங்க. “
அசோக் “அந்த ஏஜென்ஸி பற்றி விசாரிச்சியா மாறா?” என்றார்.
அபர்ணா “அது எதுக்கு மாமா ? பில்லில் கமிஷன் என்றால் லீகலா தானே இருக்கு “ என்று கேட்டாள்.
“எந்தப் போர்ட்லே வந்தாலும், இன்னிக்கு இருக்கிற இன்ஃப்ராஸ்ட்ரக்சர்லே ஒரே நாளில் டெஸ்டினேஷன் போயிடலாம். மாணிக்கவேல் ரோட் டிரான்ஸ்போர்ட் யூஸ் பண்ணாமல், சீ டிரான்ஸ்போர்ட் ஏன் யூஸ் பண்ணனும்? அப்படி பில் வேல்யூலே பர்சென்டேஜ் கேக்கறவங்களுக்கு கண்டெய்னர்லே என்ன இருக்குன்னும் தெரிஞ்சு இருக்கும் இல்லையா?” எனக் கேட்க,
அபர்ணா “இவங்க யாரு புதுசா? “ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
-தொடரும் -