ஏற்றுக் கொள்ளாத அன்பை
கையில் வைத்துக் கொண்டு
பெற்றுக் கொள்ளேன் என்று
இரைஞ்சிக் கொண்டு இருப்பதில்
எந்த பலனும் இல்லை...
கனம் கூடி வலிக்குமே தவிர
அன்பின் கனம் ஒரு போதும்
கூடப் போவதில்லை...
அந்த அன்பை அவர்கள்
கண்படும்படி தூரத்தில்
வைத்துவிட்டு மறைந்துவிடு...
எப்போதாவது அந்த அன்பைக்
கண்டு அதன் ஆழம் புரிந்து
அந்த அன்பை அவர்கள்
கையில் எடுத்தால் அவர்களை
உன் நேசத்தால் குளிர்வி...
அந்த அன்பு அவர்களின்
கவனத்தைக் கலைக்கவில்லை எனில் குப்பைக் குவியலில் போட்டதாய் நினைத்து நகர்ந்துவிடு...
அன்பை கொடுப்பது நம்
உரிமை என்றால்
அதைப் பெற்றுக் கொள்வதும்
பெறாமல் தவிக்க விடுவதும்
தூக்கி எறிவதும் அவர்கள் உரிமை...
வாங்காத இடங்களில்
கொடுக்கப்படும் அன்பு
குப்பைத் தொட்டியில் போடப்பட்ட
கைக்குழந்தையைப் போல...
அழும்... அரற்றும்...
ஆனால் தேற்ற அரவணைக்க யாரும் இல்லாத அனாதை...
கையில் வைத்துக் கொண்டு
பெற்றுக் கொள்ளேன் என்று
இரைஞ்சிக் கொண்டு இருப்பதில்
எந்த பலனும் இல்லை...
கனம் கூடி வலிக்குமே தவிர
அன்பின் கனம் ஒரு போதும்
கூடப் போவதில்லை...
அந்த அன்பை அவர்கள்
கண்படும்படி தூரத்தில்
வைத்துவிட்டு மறைந்துவிடு...
எப்போதாவது அந்த அன்பைக்
கண்டு அதன் ஆழம் புரிந்து
அந்த அன்பை அவர்கள்
கையில் எடுத்தால் அவர்களை
உன் நேசத்தால் குளிர்வி...
அந்த அன்பு அவர்களின்
கவனத்தைக் கலைக்கவில்லை எனில் குப்பைக் குவியலில் போட்டதாய் நினைத்து நகர்ந்துவிடு...
அன்பை கொடுப்பது நம்
உரிமை என்றால்
அதைப் பெற்றுக் கொள்வதும்
பெறாமல் தவிக்க விடுவதும்
தூக்கி எறிவதும் அவர்கள் உரிமை...
வாங்காத இடங்களில்
கொடுக்கப்படும் அன்பு
குப்பைத் தொட்டியில் போடப்பட்ட
கைக்குழந்தையைப் போல...
அழும்... அரற்றும்...
ஆனால் தேற்ற அரவணைக்க யாரும் இல்லாத அனாதை...
Last edited: