ஹாய் டியர்ஸ்,
எல்லாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இந்த நல்ல நாளில் எல்லார் வாழ்க்கையிலும் தீமைகள் அழிந்து சந்தோஷம் பெருக இறைவன் அருள் புரியட்டும்.
அனலில் மூழ்கிய புனல்!
அது என்ன தலைப்பு? நெருப்புக்குள் மூழ்கிப்போன நீர்.
நீருக்குள் தானே நெருப்பும் மூழ்கிப் போகும்.. எப்படி நெருப்புக்குள் நீர் மூழ்கும்.. தண்ணீர் பட்டால் நெருப்பு அணைந்து விடும் தானே? அதுதான் இல்லை.. எப்படி நெருப்புக்குள் நீர் மூழ்கி போவது என்பது தான் கதை..
ஓகே கதைக்கான டீசர் நேரம் இது. கதையின் போக்கில் மாற்றம் ஏற்படலாம்.
டீஸர்:
"அபிராமி கடவுள் கிட்ட நல்லா வேண்டிக்கிட்டு வா நாளைக்கு கல்யாணம்.. கடவுள் கிட்ட உன் வாழ்க்கை நல்ல படியா அமையணும்ன்னு வேண்டுக்கோ.."என்று துளசி சொல்ல, அவள் சொன்னது போலவே கண்களை மூடி தன் மண வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள் அபிராமி.
தோழிகள் இருவரும் கடவுள்களை வணங்கி பிரகாரத்தை மூன்றுமுறை சுற்றி விட்டு, பெருமாளை தரிசிக்கும் இடத்தில் அமர பதட்டத்துடன் இருந்த அபிராமிக்கு தைரியம் சொல்லிக்கொண்டிருந்தாள் துளசி.
அவள் சொல்வதை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அபிராமி, பார்வை முழுவதும் அந்த பெருமானிடம் மட்டுமே.
"நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன் பதில் சொல்லு.." என்று துளசி அவளை அதட்ட,அவளைப் புன்னகையுடன் பார்த்த அபிராமியை தலையை மட்டும் அசைத்தாள்.
நெஞ்சில் கை வைத்தபடி இறைவனை மீண்டும் ஒருமுறை கும்பிட்டுவிட்டு அபிராமி வெளியில் வர, துளசி "ஒரு ரெண்டு நிமிஷம் வெளியில் நில்லு அபிராமி.. பக்கத்து கடையில் போன் கொடுத்திருக்கேன் வாங்கிட்டு வந்துடறேன்.."என்றவள் பக்கத்து கடைக்கு செல்ல, கோவிலை விட்டு சற்று தள்ளி வந்து நின்ற அபிராமியை இடிப்பது போல் வந்து நின்றது அந்தக் கார்.
அந்தக் கார் தன்னை இடிப்பது போல் வருவதைக் கண்டதும் அவள் தேகம் தூக்கிவாரிப் போட கண்களை இறுக மூடிக் கொள்ள, அவளுக்கு முன்பாக சொடக்கு சத்தம் கேட்டது.
சொடக்கு சத்தத்தில் இமைகளுக்குள் சிக்கியிருந்த விழிகளை மலர்த்தி பார்க்க, எதிரில் ரவுடி போல் நின்று கொண்டிருந்தான் அனந்தசயனன்.
"நாளைக்கு உனக்கும் எனக்கும் தான் கல்யாணம் நடக்கும் உன்னோட கல்யாணம் நடக்காது.."என்றவன் வந்த வேகத்திலேயே அந்தக் காரை எடுத்துக்கொண்டு மீண்டும் சென்று விட, அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள் பெண்ணவள்.
யாரென்றே தெரியாத ஒருவன் தனக்கு நாளை திருமணம் என்ற பொழுதில், அவன் ஒன்றை சொல்லிவிட்டு செல்லவும் பயத்தில் அவள் தேகம் நடுங்க ஆரம்பித்தது.
*******
திருமண மண்டபத்தில் தோழிகள் புடைசூழ,மணமகன் பக்கத்தில் அமர்ந்த அபிராமி அவனைப் பார்க்க முடியாது நானம் தடுக்க தலையை குனிந்துகொள்ள, மனதில் அவன் சொன்னது போல் இந்த திருமணம் நின்று விடுமோ என்று பயந்து கொண்டிருந்தவள் பயத்தை மறைத்து அமர்ந்திருந்தாள்.
இருவரும் மாறி மாறி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருக்க அங்கிருந்த அனைவரும், தங்கள் ஒரே செல்ல பெண்ணின் திருமணம் வெகு விமர்சையாக நடப்பதை கண்டு கண்கள் குளிர பார்த்து மகிழ்ந்தார்கள்.
"கெட்டி மேளம் கெட்டி மேளம்"என்று அய்யர் குரல் கொடுத்தபடி தாலியை எடுத்து நீட்ட, அதுவரை பயந்து கொண்டிருந்த அமிராமி மனம் சமநிலையடைந்தது.
எவனோ ஒருவன் தன்னை ஏமாற்ற அப்படி சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான் என்று தன் மனம் கவர்ந்தவன் கைகளில் தாலி வாங்கிக் கொள்வதற்காக கண்களை இறுக மூடிக் கொள்ள, அதை நக்கலுடன் பார்த்த அந்த ஐயர் தாலியை மணமகனிடம் கொடுப்பதற்காக எடுத்தவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் அபிராமி கழுத்தில் அவர் தாலி கட்ட, அந்த மொத்த இடமும் ஸ்தம்பித்துப் போனது.
********
"ஏய் யார் நீ? இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க.. ஹவ் டேர் ஆர் யூ? என்னோட பர்மிஷன் இல்லாம எப்படி என் வீட்டுக்குள்ள வந்த.."என்று கோபத்தில் அனந்தசயனன் மேஜையை எட்டி உதைக்க, அதில் தேகம் பதைபதைக்க நின்று கொண்டிருந்த அபிராமி "நேற்று ஐயர் வேடத்தில் வந்து என்னை கல்யாணம் பண்ணி நீங்க தான் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க.. உங்க வீட்டுல விட்டுட்டு அப்படியே போயிட்டீங்க.."என்று ஒவ்வொரு வார்த்தைகளையும் கோர்வையாக சொல்ல முடியாமல் தடுமாறியபடி சொல்ல,அவள் சொன்னதைக் கேட்ட பிறகே அவனுக்கு நேற்றுதான் திருமணம் செய்து கொண்டது நினைவு வந்தது.
*******
"நீ என்னோட பேண்ட் ஷர்ட் தான் இன்னைக்கு போட்டாகணும்.."என்று அமைதியான குரலில் அனந்தசயனன் சொல்ல, அவனை மறுப்பாக பார்த்த அபிராமி "என்னால எப்பவும் என்னை மாத்திக்க முடியாது உங்களால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க.."என்றவள் குளிப்பதற்காக உள்ளே செல்ல, அவன் இதழ்களில் சின்ன புன்னகை.
அவன் வெளியில் சென்றிருப்பான் என்று அபிராமி குளித்துவிட்டு டவலுடன் வெளியில் வர, அந்த அறை முழுவதும் அவள் புடவையைப் பற்றி எரிந்து கொண்டிருக்க, அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
அவளுடைய புடவை மட்டுமன்றி மற்ற பொருட்களிலும் தீ பரவ ஆரம்பிக்க, அப்படியே நின்று கொண்டிருந்தவள் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு முதலில் அந்த அறையை விட்டு தப்பித்து வெளியில் வர தீ கொஞ்சம் கொஞ்சமாக வீடு முழுவதும் பரவ ஆரம்பித்தது.அப்படியே வெளியில் செல்ல முடியாது என்ன செய்வது என்று பார்க்க அங்கிருந்த மேஜையில் அனந்தசயனன் அணியும் பேண்ட் சர்ட் இருக்க, ஆபத்துக்கு பாவமில்லை என்று அதை எடுத்து வேகமாக அணிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியில் வர, அங்கு வாசலில் ஒரு கால் மீது ஒரு காலை போட்டுக்கொண்டு தலைக்கு மேல் இரு கரங்களையும் கோர்த்தபடி நக்கலுடன் அவளைப் பார்த்தான் அனந்தசயனன்.
டீஸர் எப்படி இருக்கிறது மக்களே உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.