சங்கீதா ராஜா
புதிய முகம்
வணக்கம் வாசக நண்பர்களே....
? அன்பின் மொழியாள் அவனவள் ?
தொடர்கிறேன்.. என் கதையை படித்து , குறை , நிறைகளை பொறுத்துக் கொண்டு ஆதரவு அளிக்கும் அனைத்து நண்பர்களும் இத்தொடர்கதைக்கு தங்களின் ஆதரவையும் , விமர்சனங்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்..
அன்புடன் ..
சங்கீதா ராஜா..
தன் அறையை ஒட்டிய பால்கனி
பக்கம் உள்ள உடற்பயிற்சி அறையில் , உடற்பயிற்சி முடித்து , உடையை அணிந்து , சட்டை கைகளின் இறுதி பட்டனை போட்டுவிட்டு இன்னிங்கை சரிச் செய்து, கண்ணாடியில் தன் கோர முடியை சீப்பால் சீவி பின் தன் கைகளால் ஒரு தடவை நீவும் போது தான் முகத்தை கவனித்தான் , அதில் சிரிப்பு என்பதன் அறிகுறியே இல்லாமல் இருக்க,
அதை பற்றி அவனுக்கு யோசிக்க நேரமில்லை..
சட்டென்று தன் அறையில் இருந்து கிளம்பி , தன் கூலிங் கிளாஸை மாட்டிக் கொண்டு மாடிப் படிகளில் விறு விறு வென , இறங்கி வர அவன் உயரத்திற்கு
அந்த வேகம் ஆளுமையின் திறமையை எடுத்துரைத்தது..
ஆம் அவன் ஆளுயரத்தை விட , தான்
எதையும் செய்யும் துணிவுள்ளவன் என்ற கர்வம் கலந்த திறமை அதிகமாக இருக்க,
காலை உணவு உண்ண டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான் ,
" அணன் மித்ரன் "
நம் கதையின் நாயகன் அன்பு, காதல் , உறவு , என்றால் என்ன என்று அறிய கூட விரும்பாதவன். முகம் ஒரே பாவனையில் இருக்கும் கோபக்காரன்.. பின் ஒரு நாள் இதே அன்பில் திளைத்து காதலில் மூழ்கி
உறவிற்காக ஏங்கப் போகிறான் அணன்மித்ரன்.
" அண்ணி , அண்ணா சாப்பிட வந்தாச்சு"
என்று குரல் கொடுத்தாள் அகல்யா..
" இதோ வந்துட்டேன் என்று கூறிக் கொண்டே காலை உணவை எடுத்து வந்தாள் " நறுமுகை...
நறுமுகை உணவை எடுத்து வைக்க ,
அதை சாப்பிட்டு , கட கட வென கையை
கழுவிக் கொண்டு , போனை பார்த்தவாறு காரை எடுப்பதற்கு அணன் சென்று விட்டான்.. அதுவரை அவன் நறுமுகையை பார்த்தானா என்று கூட தெரியாது..
நறுமுகை சிரித்தப்படி " அணன் ஒரு நாள் நீங்களும் மாறி என்னிடம் வந்து தான் ஆக வேண்டும் " என்று மனதில் நினைக்க..
நறுமுகை அப்பா விசுவநாதன் "என்னம்மா , மாப்பிள்ளை என்ன சொல்றார் " என்று கேட்டுக் கொண்டே டேபிளில் அமர , " என்ன , வழக்கம் போல் தான் " என்றாள்..
விசு ஏதோ சொல்ல வந்து , அகல்யாவைப்
பார்த்து விட்டு " என்னம்மா காலேஜ் கிளம்பிட்டியா " என்றார்.. " ம்ம்ம் ஆமா மாமா , லேட் ஆகிட்டு இதோ கிளம்பனும் " என்று அவசரமாக சாப்பிட்டாள்..
விசு " மாப்பிள்ளை உன் காலேஜ் தானே போறார் , நீயும் சேர்ந்து போக வேண்டியது தானே " என்க.. " அய்யோ வேணாம் மாமா அண்ணா கூடவா , நான் எப்போதும் போல் போறேன் ,அண்ணி வரேன் " என்று கிளம்பி விட்டாள்..
விசு " நறுமுகை , மாப்பிள்ளை இன்னும்
அப்பிடியே தான் இருக்காரா " என்று கேட்க. " விடுங்கப்பா , எங்கே போக போறார் " என்றாள் மெதுவாக..
" நறுமுகை இங்க வாம்மா " என்று அணன் அம்மா நாயகிம்மா அழைக்க , " இதோ வரேன் அத்தை " என்று அவர் அறைக்குச் சென்றார்..
காலையில் இது என்ன கொடுமை என போனை பிடித்தவாறு சோபாவில்
அமர்ந்து இருந்தார் இளங்கோ..
" ஒரு காலை பின்புறம் நீட்டி , மற்றொரு காலை தரையில் ஊன்றி , இரு கைகளையும் முன்புறம் நீட்டியவாறு ஒரு பெண் செய்ய , அந்த போனில் ஓடிய வீடியோவை பார்த்தப் படி செய்துக் கொண்டு இருந்த தன் பெண்ணை பார்த்த வண்ணம் " அமர்ந்து இருந்தார்..
அவளோ கால்களை மாற்றி மாற்றி ஊன்றுவதும் , கைகளை மடக்கி நீட்டுவதுமாய் நடனம் ஆடிக் கொண்டு இருக்க. " நான் பாலை ப்ரிஜில் இருந்து
எடுத்து தர சொன்னத்துக்கு வேலை இருக்குனு வந்தீங்க , ஒரு மணி நேரமாக இதை தான் பன்றீங்களா " என்று நக்கல் அடித்தப்படி வந்தார் அவளின் அம்மா செல்வி ..
இளங்கோ செல்வியைப் பாத்து முறைக்க
போன் ஆடியது , " அய்யோ அப்பா ஒழுங்கா பிடிங்க " என்றாள்.. செல்வி சிரிக்க , " இன்னும் முடியலயாம்மா" என்றார்..
" இருங்க அப்பா " என்று அவள் நடனத்தை தொடர , அய்யோ அது யோகா ??????மாத்தி சொல்லிட்டேன்.. " ஏய்
என்ன பன்ற காலேஜ்கு கிளம்பாம "
என்றப்படி யோக நந்தன் வர ..
" குட் மார்னிங் ப்ரோ " அவள் ஆரம்பிக்க ,
அவனோ " உன் கிட்ட எத்தனை தடவை சொல்றது ஒழுங்கா அண்ணானு கூப்பிடு , ப்ரோ பீரோ சொல்லிகிட்டு "
என்று நிறுத்த.
" சரி சாரி ப்ரோ ஸ்ஸ்ஸ்ஸ் ????? யோகன் அண்ணா , நேற்று இந்த வீடியோவை பார்த்தேன் , இதில் உள்ள யோகா வகைகளை காலையில் எழுந்து செய்தால் புத்துணர்ச்சி , ஆரோக்கியம் , அப்புறம் கொஞ்சுண்டு உடல் அழகும் கிடைக்குமாம் அண்ணா அதான் ட்ரை பன்னினேன்???" என்று ஈஈஈஈ என்று சிரித்தாள்.
யோகன் " நீ சொல்வதும் எல்லாம் சரிதான் , ஆனா அதை காலையில் ஐந்து அல்லது ஆறு மணிக்கு எழுந்து செய்யனும் , இப்பிடி எட்டு மணிக்கு எழுந்து ஒன்பது மணி வரை செய்ய கூடாது, ஒன்பதரை மணிக்கு காலேஜ் நினைவு இருக்கா " என்றான்.
" ஓ மை காட் , இவங்க ரெண்டு பேரும் சரி இல்லண்ணா , பாருங்க ஒன்பது மணி ஆச்சுனு சொல்லனும்ல " என்று பெற்றோரை வாரி விட்டு , அண்ணா நின்னுங்க நானும் வரேன் என்க..
" நீ வரப்படி வா , இன்று நம்ம காலேஜ்
கரஸ்பாண்டன்ட் வராரு , நீ ஸ்டுடென்ட் நான் புரொப்ஸர்மா தாயே , லேட் ஆகிடும் கிளம்புறேன் " என்று நகர..
" அண்ணா அண்ணி எப்பிடி இருக்காங்க " என்றாள். " அண்ணியா " என்று பெற்றோர் முழிக்க, யோகன் ஷாக் ஆக ,
" இன்னும் அண்ணி தேடி முடிக்கலயா , சோ பேட் எதும் மாட்டிகிட்டானு டெஸ்ட் பன்னினேன்" என்று சொல்ல , யோகன் அடிக்க துறத்த ஓடிவிட்டாள் காலேஜ் கிளம்ப ,
" இயலினியா "
நம் கதையின் நாயகி , அன்பு , காதல் , உறவு இவற்றின் மொழியானவள் இவளே..
அவனவள் மொழிகள் அடுத்து..
( ஹாய் பிரண்ட்ஸ், ஏதோ உங்கள நம்பி ஆரம்பிச்சுட்டென் , நீங்க தான் படிச்சுட்டு எப்பிடி இருக்குனு சொல்லனும் ..
விமர்சனத்தை பொறுத்து இக்கதை நகர ஆரம்பிக்கும் நண்பர்களே ???????)..
? அன்பின் மொழியாள் அவனவள் ?
தொடர்கிறேன்.. என் கதையை படித்து , குறை , நிறைகளை பொறுத்துக் கொண்டு ஆதரவு அளிக்கும் அனைத்து நண்பர்களும் இத்தொடர்கதைக்கு தங்களின் ஆதரவையும் , விமர்சனங்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்..
அன்புடன் ..
சங்கீதா ராஜா..
தன் அறையை ஒட்டிய பால்கனி
பக்கம் உள்ள உடற்பயிற்சி அறையில் , உடற்பயிற்சி முடித்து , உடையை அணிந்து , சட்டை கைகளின் இறுதி பட்டனை போட்டுவிட்டு இன்னிங்கை சரிச் செய்து, கண்ணாடியில் தன் கோர முடியை சீப்பால் சீவி பின் தன் கைகளால் ஒரு தடவை நீவும் போது தான் முகத்தை கவனித்தான் , அதில் சிரிப்பு என்பதன் அறிகுறியே இல்லாமல் இருக்க,
அதை பற்றி அவனுக்கு யோசிக்க நேரமில்லை..
சட்டென்று தன் அறையில் இருந்து கிளம்பி , தன் கூலிங் கிளாஸை மாட்டிக் கொண்டு மாடிப் படிகளில் விறு விறு வென , இறங்கி வர அவன் உயரத்திற்கு
அந்த வேகம் ஆளுமையின் திறமையை எடுத்துரைத்தது..
ஆம் அவன் ஆளுயரத்தை விட , தான்
எதையும் செய்யும் துணிவுள்ளவன் என்ற கர்வம் கலந்த திறமை அதிகமாக இருக்க,
காலை உணவு உண்ண டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான் ,
" அணன் மித்ரன் "
நம் கதையின் நாயகன் அன்பு, காதல் , உறவு , என்றால் என்ன என்று அறிய கூட விரும்பாதவன். முகம் ஒரே பாவனையில் இருக்கும் கோபக்காரன்.. பின் ஒரு நாள் இதே அன்பில் திளைத்து காதலில் மூழ்கி
உறவிற்காக ஏங்கப் போகிறான் அணன்மித்ரன்.
" அண்ணி , அண்ணா சாப்பிட வந்தாச்சு"
என்று குரல் கொடுத்தாள் அகல்யா..
" இதோ வந்துட்டேன் என்று கூறிக் கொண்டே காலை உணவை எடுத்து வந்தாள் " நறுமுகை...
நறுமுகை உணவை எடுத்து வைக்க ,
அதை சாப்பிட்டு , கட கட வென கையை
கழுவிக் கொண்டு , போனை பார்த்தவாறு காரை எடுப்பதற்கு அணன் சென்று விட்டான்.. அதுவரை அவன் நறுமுகையை பார்த்தானா என்று கூட தெரியாது..
நறுமுகை சிரித்தப்படி " அணன் ஒரு நாள் நீங்களும் மாறி என்னிடம் வந்து தான் ஆக வேண்டும் " என்று மனதில் நினைக்க..
நறுமுகை அப்பா விசுவநாதன் "என்னம்மா , மாப்பிள்ளை என்ன சொல்றார் " என்று கேட்டுக் கொண்டே டேபிளில் அமர , " என்ன , வழக்கம் போல் தான் " என்றாள்..
விசு ஏதோ சொல்ல வந்து , அகல்யாவைப்
பார்த்து விட்டு " என்னம்மா காலேஜ் கிளம்பிட்டியா " என்றார்.. " ம்ம்ம் ஆமா மாமா , லேட் ஆகிட்டு இதோ கிளம்பனும் " என்று அவசரமாக சாப்பிட்டாள்..
விசு " மாப்பிள்ளை உன் காலேஜ் தானே போறார் , நீயும் சேர்ந்து போக வேண்டியது தானே " என்க.. " அய்யோ வேணாம் மாமா அண்ணா கூடவா , நான் எப்போதும் போல் போறேன் ,அண்ணி வரேன் " என்று கிளம்பி விட்டாள்..
விசு " நறுமுகை , மாப்பிள்ளை இன்னும்
அப்பிடியே தான் இருக்காரா " என்று கேட்க. " விடுங்கப்பா , எங்கே போக போறார் " என்றாள் மெதுவாக..
" நறுமுகை இங்க வாம்மா " என்று அணன் அம்மா நாயகிம்மா அழைக்க , " இதோ வரேன் அத்தை " என்று அவர் அறைக்குச் சென்றார்..
காலையில் இது என்ன கொடுமை என போனை பிடித்தவாறு சோபாவில்
அமர்ந்து இருந்தார் இளங்கோ..
" ஒரு காலை பின்புறம் நீட்டி , மற்றொரு காலை தரையில் ஊன்றி , இரு கைகளையும் முன்புறம் நீட்டியவாறு ஒரு பெண் செய்ய , அந்த போனில் ஓடிய வீடியோவை பார்த்தப் படி செய்துக் கொண்டு இருந்த தன் பெண்ணை பார்த்த வண்ணம் " அமர்ந்து இருந்தார்..
அவளோ கால்களை மாற்றி மாற்றி ஊன்றுவதும் , கைகளை மடக்கி நீட்டுவதுமாய் நடனம் ஆடிக் கொண்டு இருக்க. " நான் பாலை ப்ரிஜில் இருந்து
எடுத்து தர சொன்னத்துக்கு வேலை இருக்குனு வந்தீங்க , ஒரு மணி நேரமாக இதை தான் பன்றீங்களா " என்று நக்கல் அடித்தப்படி வந்தார் அவளின் அம்மா செல்வி ..
இளங்கோ செல்வியைப் பாத்து முறைக்க
போன் ஆடியது , " அய்யோ அப்பா ஒழுங்கா பிடிங்க " என்றாள்.. செல்வி சிரிக்க , " இன்னும் முடியலயாம்மா" என்றார்..
" இருங்க அப்பா " என்று அவள் நடனத்தை தொடர , அய்யோ அது யோகா ??????மாத்தி சொல்லிட்டேன்.. " ஏய்
என்ன பன்ற காலேஜ்கு கிளம்பாம "
என்றப்படி யோக நந்தன் வர ..
" குட் மார்னிங் ப்ரோ " அவள் ஆரம்பிக்க ,
அவனோ " உன் கிட்ட எத்தனை தடவை சொல்றது ஒழுங்கா அண்ணானு கூப்பிடு , ப்ரோ பீரோ சொல்லிகிட்டு "
என்று நிறுத்த.
" சரி சாரி ப்ரோ ஸ்ஸ்ஸ்ஸ் ????? யோகன் அண்ணா , நேற்று இந்த வீடியோவை பார்த்தேன் , இதில் உள்ள யோகா வகைகளை காலையில் எழுந்து செய்தால் புத்துணர்ச்சி , ஆரோக்கியம் , அப்புறம் கொஞ்சுண்டு உடல் அழகும் கிடைக்குமாம் அண்ணா அதான் ட்ரை பன்னினேன்???" என்று ஈஈஈஈ என்று சிரித்தாள்.
யோகன் " நீ சொல்வதும் எல்லாம் சரிதான் , ஆனா அதை காலையில் ஐந்து அல்லது ஆறு மணிக்கு எழுந்து செய்யனும் , இப்பிடி எட்டு மணிக்கு எழுந்து ஒன்பது மணி வரை செய்ய கூடாது, ஒன்பதரை மணிக்கு காலேஜ் நினைவு இருக்கா " என்றான்.
" ஓ மை காட் , இவங்க ரெண்டு பேரும் சரி இல்லண்ணா , பாருங்க ஒன்பது மணி ஆச்சுனு சொல்லனும்ல " என்று பெற்றோரை வாரி விட்டு , அண்ணா நின்னுங்க நானும் வரேன் என்க..
" நீ வரப்படி வா , இன்று நம்ம காலேஜ்
கரஸ்பாண்டன்ட் வராரு , நீ ஸ்டுடென்ட் நான் புரொப்ஸர்மா தாயே , லேட் ஆகிடும் கிளம்புறேன் " என்று நகர..
" அண்ணா அண்ணி எப்பிடி இருக்காங்க " என்றாள். " அண்ணியா " என்று பெற்றோர் முழிக்க, யோகன் ஷாக் ஆக ,
" இன்னும் அண்ணி தேடி முடிக்கலயா , சோ பேட் எதும் மாட்டிகிட்டானு டெஸ்ட் பன்னினேன்" என்று சொல்ல , யோகன் அடிக்க துறத்த ஓடிவிட்டாள் காலேஜ் கிளம்ப ,
" இயலினியா "
நம் கதையின் நாயகி , அன்பு , காதல் , உறவு இவற்றின் மொழியானவள் இவளே..
அவனவள் மொழிகள் அடுத்து..
( ஹாய் பிரண்ட்ஸ், ஏதோ உங்கள நம்பி ஆரம்பிச்சுட்டென் , நீங்க தான் படிச்சுட்டு எப்பிடி இருக்குனு சொல்லனும் ..
விமர்சனத்தை பொறுத்து இக்கதை நகர ஆரம்பிக்கும் நண்பர்களே ???????)..