தகுதி அறிந்து
பகிரப்படவேண்டும்
அன்பை...
அன்பை கொடுத்திட,
பெரும் உள்ளம் அதற்கு
தகுதி கொண்டதா?
அன்புக்கும்
தகுதி தராதரம்
பார்க்கவேண்டுமா...?
வேண்டும்தானே...
எத்தனை நேசமிருக்க
கொடுக்கிறோம் அங்கே
அன்பை...
எல்லோராலும்
எப்போதும்
எங்கும்
கொடுக்க முடியாத
ஒன்றல்லவா?
தேவைக்காய்
சந்தர்ப்பதிற்கு
அப்போதைய பொழுது கடத்திட
என்றே பல இடம்
பகிரப்படும்
இதே அன்பு...
ஆக,
தகுதி பார்ப்பதில்
தவறிருக்குமா...?
ஏங்கி
யாசகம் கேட்கும்
உள்ளங்கள் இங்கே
எத்தனை?
அன்பென்ற ஒன்றே
அங்கு பிரதானமாய்...
எத்தனை
பெருங் கடலாகினும்
துளி விஷம் சேர்த்திட
அக்கடலின்
பெயரென்னவோ
விஷம் கலந்த கடல்
தானே...
அன்பங்கே
கொடுக்க முன்னே
எதிர்பார்ப்பை
உம் மனதில் தகர்த்து
பின்னே பகிர்ந்தளி...
பலன் கேட்டு
பலனில்லை...
கொடுக்கும் அன்பில்
வஞ்சம் வேண்டாம்...
கொடுக்க
பிடிக்காது போக
விட்டு விடேன்...
நீயும் வருந்தி
வருத்திக்கொண்டு
கொடுக்கும் அன்பில்
என்ன நலன்...
அன்பை
கருணைக்காய்
வேண்டாம்...
நேசத்தின்
நோக்கத்தில்
கொடுத்திடு...
மகிழ்ந்து
போகட்டும்...
//அன்பென்பது இதுதானே...//
அன்பை
கொடுத்தும்
பெற்ற இடமும்
அன்பின் உயர் இடம்,
எவரும் பெறா
அகிலம் போற்றி
வியக்கும் இடம்...
அதிலே,
அன்புக்கு நீயும்
தகுதி இல்லை
என்றே,
உணர்த்தி
உணரச் செய்திட,
அன்பென்பதை
உணர்ந்து
விலகிடலும்
அன்புதானே...
இமையி...
பகிரப்படவேண்டும்
அன்பை...
அன்பை கொடுத்திட,
பெரும் உள்ளம் அதற்கு
தகுதி கொண்டதா?
அன்புக்கும்
தகுதி தராதரம்
பார்க்கவேண்டுமா...?
வேண்டும்தானே...
எத்தனை நேசமிருக்க
கொடுக்கிறோம் அங்கே
அன்பை...
எல்லோராலும்
எப்போதும்
எங்கும்
கொடுக்க முடியாத
ஒன்றல்லவா?
தேவைக்காய்
சந்தர்ப்பதிற்கு
அப்போதைய பொழுது கடத்திட
என்றே பல இடம்
பகிரப்படும்
இதே அன்பு...
ஆக,
தகுதி பார்ப்பதில்
தவறிருக்குமா...?
ஏங்கி
யாசகம் கேட்கும்
உள்ளங்கள் இங்கே
எத்தனை?
அன்பென்ற ஒன்றே
அங்கு பிரதானமாய்...
எத்தனை
பெருங் கடலாகினும்
துளி விஷம் சேர்த்திட
அக்கடலின்
பெயரென்னவோ
விஷம் கலந்த கடல்
தானே...
அன்பங்கே
கொடுக்க முன்னே
எதிர்பார்ப்பை
உம் மனதில் தகர்த்து
பின்னே பகிர்ந்தளி...
பலன் கேட்டு
பலனில்லை...
கொடுக்கும் அன்பில்
வஞ்சம் வேண்டாம்...
கொடுக்க
பிடிக்காது போக
விட்டு விடேன்...
நீயும் வருந்தி
வருத்திக்கொண்டு
கொடுக்கும் அன்பில்
என்ன நலன்...
அன்பை
கருணைக்காய்
வேண்டாம்...
நேசத்தின்
நோக்கத்தில்
கொடுத்திடு...
மகிழ்ந்து
போகட்டும்...
//அன்பென்பது இதுதானே...//
அன்பை
கொடுத்தும்
பெற்ற இடமும்
அன்பின் உயர் இடம்,
எவரும் பெறா
அகிலம் போற்றி
வியக்கும் இடம்...
அதிலே,
அன்புக்கு நீயும்
தகுதி இல்லை
என்றே,
உணர்த்தி
உணரச் செய்திட,
அன்பென்பதை
உணர்ந்து
விலகிடலும்
அன்புதானே...
இமையி...