அன்புக்கு அடிமை
ஆகினும்...
போதைக்கு அடிமையாகினும்...
இரண்டும் ஒன்றே...
வீழ்ந்திட எத்தனை எளிதோ மீண்டிட அதனைக் கடினம்...
மயக்கும் மதியை...
மிதிக்கும் மனதை...
கிழிக்கும் வலிக்க...
அதுவே தைக்கும் மிகைக்க...
அன்பங்கே மனதை,
கல்லாயினும் கரைக்கும்...
பெரும் பாறையாகினும் தகர்க்கும்...
அன்பங்கே
மனமது மென்னாகிட,
வருடியே வதைக்கும்...
மொட்டோடு கிள்ளி கயிற்றில் தினிக்கும்...
வண்டென்று அதுவும்
தெரியாது உறிஞ்சியே மிச்சமில்லாது உயிர் குடிக்கும்...
அன்பென்பது,
அடிமையாக்கிடல்
அல்லவே...
அடிமையாகிடல்
என்பேன்...
கொடுப்பதை கண்டு
கொடுக்கப்படுவதில்
கொள்வாய் பக்குவம் நீயும்...
அங்கே,
நிலைக்கும்
நின் அன்பும்
நிலையாய்
நிரந்தரமாய்...
ஆகினும்...
போதைக்கு அடிமையாகினும்...
இரண்டும் ஒன்றே...
வீழ்ந்திட எத்தனை எளிதோ மீண்டிட அதனைக் கடினம்...
மயக்கும் மதியை...
மிதிக்கும் மனதை...
கிழிக்கும் வலிக்க...
அதுவே தைக்கும் மிகைக்க...
அன்பங்கே மனதை,
கல்லாயினும் கரைக்கும்...
பெரும் பாறையாகினும் தகர்க்கும்...
அன்பங்கே
மனமது மென்னாகிட,
வருடியே வதைக்கும்...
மொட்டோடு கிள்ளி கயிற்றில் தினிக்கும்...
வண்டென்று அதுவும்
தெரியாது உறிஞ்சியே மிச்சமில்லாது உயிர் குடிக்கும்...
அன்பென்பது,
அடிமையாக்கிடல்
அல்லவே...
அடிமையாகிடல்
என்பேன்...
கொடுப்பதை கண்டு
கொடுக்கப்படுவதில்
கொள்வாய் பக்குவம் நீயும்...
அங்கே,
நிலைக்கும்
நின் அன்பும்
நிலையாய்
நிரந்தரமாய்...