• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அன்பென்ற குழந்தை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Lakshmi2309

புதிய முகம்
Joined
Nov 9, 2021
Messages
10
Reaction score
16
Location
Tirunelveli
அழகாய் ஓர் குழந்தை
உள்ளேயே வளர்த்தாள்!!
அசைவையும், நெளிவையும்
தனக்குள்ளே ரசித்தாள்!!

உடையவனிடம் காண்பிக்க
ஓர்நாள் ஆசை கொண்டாள்!!
உள்ளே ஓர் பதட்டத்தோடு
உண்மை உரைத்திட்டாள் அவனிடம்!!

அதிர்ச்சியோடு ஆசைமிகவும்
அள்ளியெடுத்தான் அக்குழந்தையை!!
ஆனால் உள்ளத்தில் உரிமை
ஊறவில்லை அவனுக்கு யாரோ
ஓர் குழந்தை என்ற எண்ணமே!!!

புரியாத பேதையோ களிப்போடு
திரிந்தாள்!! பிள்ளையின் அழுகையும்
ரீங்காரமாம் அவளுக்கு!!!
அவனுக்கோ
அது நாராசமாய் தோன்றிற்று!!
அதன் சிரிப்பில் மனம் லயிக்கவில்லை
சிணுங்கலில் உள்ளம் தொலைக்கவில்லை!!
உடையவன் என்ற உரிமையுமில்லை!!!

உண்மை உணர்ந்தாள் பெண்!!!
அழுகையில் மாரில் அமுதூறுமே எனக்கு
அன்பூறவில்லையா உனக்கு!!!

இனி தங்களால் தொல்லை வேண்டாமென
தூரம் செல்ல முடிவு செய்தாள்!!!
பார்த்து வளர்த்த குழந்தையை
தூக்கி எறிய மனமின்றி தன்னோடே
கொண்டு சென்றாள்!!!

உடையவனே வேண்டாமென்றாலும்
உரிமையற்று பிறந்திருந்தாலும்
காலம் முழுதும் தன்னோடு சுமக்க
முடிவு செய்தாள் பெண்!!!

அன்பென்ற அக்குழந்தை
என்றுமே அநாதையில்லை!!!!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top