?????????????????
?????????????????
வெகு சில பேருக்கு தான் டாலி ??ஹாப்பி டா ??தாய்க்கு பின் தாரம் என்பது போல் தந்தைக்கு பின் கணவனும் இருக்குறார் darly......
Beautiful lyrics.....????darly.
?????Semmmaaa kaaa
அந்த வெகு சிலரில் நானும் ஒருத்தி....darly.?????????வெகு சில பேருக்கு தான் டாலி ??ஹாப்பி டா ??
செம்ம டார்லிங் god bless?????அந்த வெகு சிலரில் நானும் ஒருத்தி....darly.?????????
enna irunthalum appavoda idatha yaaralum nirappa mudiyathu dearதாய்க்கு பின் தாரம் என்பது போல் தந்தைக்கு பின் கணவனும் இருக்குறார் darly......
Beautiful lyrics.....????darly.
????????அந்த வெகு சிலரில் நானும் ஒருத்தி....darly.?????????
No words dearஎழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்?
தந்தைக்கு மகள் எழுதும் கடிதம்
??????????????
View attachment 11631
I
முதல் அடி தடுமாறும் போது உன் காலடி கொடுத்தாய்.....
என் கண்ணில் நீர் வழிந்தால் உன் இதயம் துடிக்கும் துடிப்பையே அன்பாய் மாற்றி கொடுத்தாய்....
உண்டு உறங்கியும் நம்பாது அரவணைத்து உணவு கொடுத்தாய்.....
தாயிடம் அடி விழும் பொழுது உன் தோள் அடி கொடுத்தாய்.....
அர்த்த ராத்திரி பணி முடித்து வந்தாலும் பசியும் ஒதுக்கி உறங்கும் அழகையும் ரசித்து அரவணைத்து அன்பு முத்தம் கொடுத்தாய்.....
வெளியிடம் செல்ல பயந்து வெறித்திடும் போது உன் கைகளை கவசமாய் கொடுத்தாய்.....
தோல்வி வந்து துவண்டு நின்ற பொழுது உன் மடியில் அமர்த்தி தைரியமும் சேர்த்து கொடுத்தாய்.....
முடிவுகள் எடுக்க தடுமாறும் பொழுது முடிச்சுகள் கலைய கற்று கொடுத்தாய்.....
ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கை சிறக்க உறக்கம் உணவை மறந்து உன் உடல் உழைப்பை கொடுத்தாய்.....
மூன்று முடிச்சு போட ஒருவன் கையில் கொடுத்த பொழுது நெஞ்சில் ஆயிரம் ஆயிரம் முடிச்சுகளோடு நெஞ்சடைக்க கொடுத்தாய்.....
என் பிரிவில் உடல் மெலிந்துதாலும் நான் சீரும் சிறப்புமாய் வாழ என் மனதில் தைரியம் கொடுத்தாய்....
நான் வாழ நீ உன் வாழ்க்கை முழுவதும்
என்னக்காய் வாழ்ந்தாய் கொடுத்தாய்.....
போதும் நீ எனக்காய் வாழ்ந்தது இனிஉன்னை என்னோடு என் குழந்தையாய்
பார்த்து கொள்ள நினைத்த போது ஏன் என்னை விட்டு மறைந்தாய்.....
எனக்காகவே வாழ்ந்து எனக்காகவே உன் கடைசி மூச்சையும் கொடுத்தாய்.....
ஒவ்வொரு அணுவிலும் செயலிலும் தாய்க்கும் மேல் தாயாய் தாயுமானவராய் இருந்தாய்.....
இனி எங்கு போய் உன்னை தேடுவேன் உன்னிடத்தில் எதைக் கொண்டு நிரப்புவேன் தந்தையே......
இன்னும் ஒரு ஜென்மம் ஒன்று இருந்தாலும் நீ சேயாய் நான் உன் தாயாக பிறக்க வேண்டுகிறேன்.....
என் ஜென்மம் முழுவதும் உனக்கு சேவை செய்தாலும் நீ செய்தது போல் ஆகுமா....
உன் ஒரு துளிஅன்புக்கு ஈடாகுமா
தந்தை என்னும் உன் இடத்தை
எதைக்கொண்டும் நிரப்ப இயலாது........
தாய்க்குப்பின் தாரம் வந்து அந்த இடத்தை நிரப்பலாம்.....
தந்தையின் இடத்தை யாராலும் எந்த உறவாலும் நிரப்ப முடியுமா.....
தெய்வத்தை விட மேலாக போற்ற படவேண்டிய தந்தையே.....
பெற்ற மகளையே தெய்வ திருமகளாய் காக்கும் உனக்கு நிகர் நீயே.....
உன் பிரிவால் உன் மகள் உனக்கு எழுதும் கடிதம்.....
ஒவ்வொரு தந்தைக்கும் இந்த மகளின் கடிதம் சமர்ப்பணம்.....
இருக்கும் போது அதன் அருமை நமக்கு தெரிவது யில்லை.....
தெரியும் போது எதுவும் நம்மிடம் இருப்பது இல்லை....
இருக்கும் போதே போற்றி காத்திடுவோமே....
மறுபடியும் அதே தந்தைக்கு மகளாய் மகனாய் பிறக்க இயலாது
தன்னுடைய வயோதிக காலத்தில் ஒவ்வொரு செயலிலும் குழந்தையாக மாறும் பெற்றோரை நம் மகளாய் மகனாய் பார்க்கலாமே......
( இது என் அப்பாகாக எழுதியது என்னவோ ஷேர் பண்ணனும் தோணியது? )
View attachment 11633
View attachment 11632