என் செல்லகுட்டிகாக (என் கணவர்)
பால்கோவாவில் மயங்கி எனக்கு ஓகே சொன்ன கள்வனே
உன் ரகசிய பேச்சில் என்னை வெட்கம் கொள்ள வைத்த காதலனே
உன் முத்தத்தில் மயங்கிய என்னை தோள் சேர்த்து அணைத்த என் தலைவனே
என் கண்ணீரை கண்டு என்னை மடி தாங்கி அணைத்த என் தாயுமானவனே
நம் காதலின் அடையாளமாக எனக்கு உயிர் கொடுத்த என் ஜீவனே
வாழ்வின் எல்லை வரை உன்னோடு வாழ கடவுள் எனக்கு கொடுத்த பொக்கிஷமே
உன்னை இறுதி வரை காதல் செய்து என்னுள் சிறை பிடித்து வைப்பேன் என் செல்லகுட்டியே ???