அறிமுகத் தருணமிது ....!!!
அன்பு நட்’பூ’ககளே…வணக்கம்..
நான் தேவா.. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவன்
இது இயற்பெயர் அல்ல தான்.. புனைந்த பெயரே..
எழுத்துலகில் பழையதை மறைத்து (கவனிக்கவும்.. மறைத்தே தவிர மறந்தல்ல!) புதிதாய் பிறப்பெடுத்த உத்வேகத்துடன் எழுத வைத்துக் கொண்ட பெயரே அன்றி எதையும் மறைக்கும் உத்தேசமில்லை....
எழுத்தில் வெறும் முக நூல் அனுபவம் மட்டுமே உள்ள நான் இவ்வளவு பெரிய காரியத்தில் இறங்கக் காரணம் என் வாசகர் வட்டமே.... முக நூல் என்ற குறுகிய வட்டத்தில் உன் எழுத்து முடங்கி விடக் கூடாதென வற்புறுத்தி என்னை இதில் நுழைத்தவர்கள் அவர்களே...
இதில் எனக்கேதாவது பெருமையும் புகழும் கிட்டுமானால் அது அவரகளுக்கு உரியது.. சிறுமையும் தோல்வியும் பெறின் அது என் சிறுமதியால் என்பது சர்வ நிச்சயம்..
“காதல் நீலாம்பரி”
என் நாவலின் தலைப்பு ....
மனம் கவர்ந்த ஓர் முரடன் மீது உண்டான காதல் ...
ஒரு மெல்லியலாள் காதலின் காரணமாய் பூம் புயலாய் மாறின கதை..
இப்படிப் பிடிவாதமாய் ஒரு பெண்ணால் காதல் கொண்டாடப்படுமா?
இக்கதையின் நாயகி அவ்வாறு பிரமிக்க வைப்பாள்...
சன்னமாய் உள்ள ஒரு நூல் பிரியைக் கொண்டு வலுவான ஒரு கயிறைத் திரிக்கும் காலத்தின் கட்டாயத்தில் நான் உள்ளதால்… தயவு செய்து எனக்கு மூன்று நாள் தவணை கொடுங்கள்..
ஞாயிறன்று நாவலின் முதல் அத்தியாயத்தோடு உங்களைச் சந்திக்கிறேன் என விண்ணப்பித்துக் கொள்வதுடன் உங்களின் அன்பார்ந்த ஆதரவையும் வேண்டுகிறேன்..
இனி என் கதை உங்களுடன் பேசட்டும்..
போட்டி அறிவித்து ...நாவல் திருவிழா நடத்தும்
sm tamil novels team ...அவர்களுக்கு என் வாழ்த்துகளுடன் நன்றியும்....
நன்றி !! வணக்கம் !!
அன்பு நட்’பூ’ககளே…வணக்கம்..
நான் தேவா.. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவன்
இது இயற்பெயர் அல்ல தான்.. புனைந்த பெயரே..
எழுத்துலகில் பழையதை மறைத்து (கவனிக்கவும்.. மறைத்தே தவிர மறந்தல்ல!) புதிதாய் பிறப்பெடுத்த உத்வேகத்துடன் எழுத வைத்துக் கொண்ட பெயரே அன்றி எதையும் மறைக்கும் உத்தேசமில்லை....
எழுத்தில் வெறும் முக நூல் அனுபவம் மட்டுமே உள்ள நான் இவ்வளவு பெரிய காரியத்தில் இறங்கக் காரணம் என் வாசகர் வட்டமே.... முக நூல் என்ற குறுகிய வட்டத்தில் உன் எழுத்து முடங்கி விடக் கூடாதென வற்புறுத்தி என்னை இதில் நுழைத்தவர்கள் அவர்களே...
இதில் எனக்கேதாவது பெருமையும் புகழும் கிட்டுமானால் அது அவரகளுக்கு உரியது.. சிறுமையும் தோல்வியும் பெறின் அது என் சிறுமதியால் என்பது சர்வ நிச்சயம்..
“காதல் நீலாம்பரி”
என் நாவலின் தலைப்பு ....
மனம் கவர்ந்த ஓர் முரடன் மீது உண்டான காதல் ...
ஒரு மெல்லியலாள் காதலின் காரணமாய் பூம் புயலாய் மாறின கதை..
இப்படிப் பிடிவாதமாய் ஒரு பெண்ணால் காதல் கொண்டாடப்படுமா?
இக்கதையின் நாயகி அவ்வாறு பிரமிக்க வைப்பாள்...
சன்னமாய் உள்ள ஒரு நூல் பிரியைக் கொண்டு வலுவான ஒரு கயிறைத் திரிக்கும் காலத்தின் கட்டாயத்தில் நான் உள்ளதால்… தயவு செய்து எனக்கு மூன்று நாள் தவணை கொடுங்கள்..
ஞாயிறன்று நாவலின் முதல் அத்தியாயத்தோடு உங்களைச் சந்திக்கிறேன் என விண்ணப்பித்துக் கொள்வதுடன் உங்களின் அன்பார்ந்த ஆதரவையும் வேண்டுகிறேன்..
இனி என் கதை உங்களுடன் பேசட்டும்..
போட்டி அறிவித்து ...நாவல் திருவிழா நடத்தும்
sm tamil novels team ...அவர்களுக்கு என் வாழ்த்துகளுடன் நன்றியும்....
நன்றி !! வணக்கம் !!