ஹாய் ஆல்!
கதையை ஒருவழியா முடிச்சிட்டு முடிவுரைக்கு வந்தாச்சு.
கதை முடியும்போது சொல்லியிருந்தேன் மறக்காம முடிவுரை படிச்சிடுங்கன்னு. நிறைய பேர் அப்ப இன்னும் கதை இருக்கானு கேட்டிங்க. கதை அவ்வளவுதான் மக்களே. ஆனா, முடிவுரை எதுக்கு மறக்காம படிக்க சொன்னேன்னா, நிறைய பேரோட கேள்விளுக்கு பதில் சொல்லவும் கதையின் பயணத்தைப் பற்றியும் சொல்லவும் தான்.
முதல் கேள்வி
1)கதை ஸ்டார்ட் பண்ணதுக்கான ரீசன் கேட்டிருந்தீங்க
இரண்டாம் கேள்வி
2)அந்த ரேப் கேஸ் மட்டும் எடுத்து திவ்யபாரதியை சதீஷோட தங்கையா மட்டும் வச்சு, கதையை ஈசியா கொண்டு போயிருக்கலாமே
மூன்றாவது கேள்வி
3)ஏன் ப்ளாஷ் பேக் ரொம்ப அழுத்தமா குடுத்தீங்க
இந்தக் கேள்விளுக்கு மட்டும் இல்லாம நானே எல்லாத்தையும், அதாவது கதையோட journeyயா சொல்றேன்.
Actually இந்தக் கதை நான் என்னோட மூன்றாவது கதையா எழுத வேண்டியது. சரி, வேணா அழுத்தமா இருக்கும் நாலாவது கதையா எழுதலாம்னு தள்ளிவச்சு, again சரி ஐந்தாவது நாவலா எழுதலாம்னு ஆகிடுச்சு. இதை நான் அல்ரெடி சொல்லியிருந்தேன் முன்னுரைல.
இந்தக் கதையை நான், எழுத ஸ்டார்ட் பண்ணதுக்கான ரீசன் பத்தி பாக்கலாம்.
இப்ப இருக்க நிறைய ரிலேஷன்ஷிப்ஸ் பார்க்கும்போது ரொம்ப பாஸ்ட்டா போகுது. எடுத்தோம் கவுத்தோம்னு லவ் பண்றாங்க.
இங்க எழுபது பர்சன்ட் ரிலேஷன்ஷிப் நானும் கமிடட், நானும் லவ் பண்றேன் அப்படின்னு தங்களோட சர்கில்ஸுக்கு நடுவுல பெருமையா பேசறுக்குத் தான் தேவைப்படுது.
அதுக்குன்னு உண்மை லவ் இப்ப இல்லியான்னு கேக்காதீங்க. இருக்காங்க. நான் சொல்றது அரைவேக்காடுகளைப் பத்தி.
லவ் பண்ணிட்டு கொஞ்ச நாள்ல mutual breakup பண்ணிக்கறாங்க. இதை இரண்டு பேரும் ஈசியா கடந்துட்டா பிரச்சனை இல்லதான். ஆனா, இதுல பையனா இருந்தாலும் சரி பொண்ணா இருந்தாலும் சரி, யாராவது ஒருத்தராவது ரொம்ப emotionalஆ அட்டாச் ஆகியிருந்தாங்கன்னா,அது சனியனுக்கு கால் போட்டு வரவச்ச மாதிரிதான்.
லவ் பண்ணும்போதும் சிலருக்கு அவசரம். போதை மருந்து மாதிரி ஆகி வீட்டை மறந்திடறாங்க. அவ்வளவு மண்டக்கோளாறு ஆகிடுது. நம்ம திவ்யபாரதி மாதிரி எதையும் யோசிக்காம குருட்டு நம்பிக்கை வைக்கிற மாதிரி இருக்காங்க.
நான் straightஆ சொல்றேன். ஒரு சில படங்கள்ள வர்றதை பார்த்துட்டு இப்ப எல்லாம் தைரியம் அதிகம் ஆகிடுச்சு. மறச்சு மறச்சு செஞ்சதை இப்ப தைரியமா வெளிப்படையா செய்யறாங்க. கேட்டா நாங்க லவ் பண்றோம்னு பதில் வேற.
ஹீரோ, ஹீரோயின் லவ் பண்ணிட்டு லிவ்விங் மாதிரி இருந்துட்டு, வீட்டுல மாட்டி வேற ஒருத்தரை ஹீரோயினுக்கு கட்டாயக் கல்யாணம் பண்ணி வச்சிடறாங்க. அப்புறம் அந்த டாக்டர் ஹீரோ ட்ரக்ஸ், ட்ரிக்ன்ஸ், பொண்ணுங்கன்னு சுத்துவாறு. அப்புறம் ஹீரோயினை லாஸ்ட்ல வயித்துல குழந்தையோட பார்க்ல வச்சு கை பிடிச்சிடறாரு. (ஆமா அந்தப் படம் தான்). (கதைன்னு பார்த்தா நல்லா தான் இருக்கும். ஆனா, ரியாலிட்டி 0% இது).
மொத்தத்துல ஒரு பையன்படற கஷ்டத்தை மட்டும் தான் அந்தப் படத்துல காட்டியிருக்காங்க. அந்த பொண்ணுபடற கஷ்டத்தையும் காட்டியிருந்தா சிலருக்கு அந்த தைரியம் வராதோ எண்ணமோ.
இதெல்லாம் கூட இருக்கவங்களுக்கு இப்ப எப்படி ஆகிடுச்சுனா (நான் என்னையும் சேர்த்தி தான் சொல்றேன்). "அது அவங்க பெர்சனல் நாம தலையிடக் கூடாது" அப்படின்னு நாம கடந்து போறோம். ஆனா, உட்கார்ந்து யோசிச்சு பார்த்தா எத்தனை பொய், ஏமாற்றம் பெத்தவங்களுக்கு அவங்க தர்றாங்கன்னு புரியும்.
அதுனால தான் திவ்யபாரதி, வெற்றி ப்ளேஷ் பேக் அந்த மாதிரி வச்சேன். என்ன நான் அவங்களை சேர்த்தி வச்சேன். ஆனா, ரியாலிட்டில அப்படி நடக்குமா அப்படின்னு கேட்டா 0.1% தான் இருக்கும்.
அதுனால தான் அந்த பார்ட் ரொம்ப அழுத்தமாக் குடுத்தேன். சொல்லப்போனா 20வது அத்தியாயம் எழுதும்போது, எனக்கு தெரிஞ்ச பொண்ணுகிட்ட funny videos கேட்டு வாங்கி பார்த்துட்டு இருந்தேன். ஏன்னா அந்த அளவுக்கு எனக்கும் அந்த பார்ட் எழுதும்போது stress ஆகிடுச்சு.
திவ்யபாரதி பட்ட கஷ்டம் பாதிதான் எழுதுனேன். நான் ஒரு சைக்காட்ரி டாக்டர்கிட்ட இதைப்பத்தி கேட்டப்ப, இதைவிட நிறைய பேஸ் பண்ணுவாங்க அந்த விஷயத்தைத் தாண்டி வந்தவங்கன்னு சொன்னாங்க. சரி ரொம்ப இதை விளக்க வேண்டாம்னு தான் அதை மேலோட்டமா மட்டும் எழுதுனேன்.
அப்புறம் இந்தக் கதை சூஸ் பண்ணதுக்கு காரணம், அட்லீஸ்ட் கதையிலாவது குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தரலாம்னு ஒரு பேராசை.
இங்க இரண்டுங்கெட்டான் வயசுலையே வயசுக்கு மீறின விஷயத்தை அரைகுறையா தெரிஞ்சிட்டு நிறைய சுத்துதுக. நிறைய பெற்றோருக்கு இதை கவனிக்க நேரமில்லை. (தன் மேல் பழி வராமல் இருக்க அவங்களே சொல்லிக்கிறது... இது ஒரு சாக்கு).
டெய்லியும் அந்த அந்த வயசுல பேச வேண்டியதை சின்ன வயசுல இருந்து குழந்தைகளுக்கு முறையா சொல்லிட்டு வந்தா இங்க தப்புக்கள் குறையும்.
உங்ககிட்ட வந்து ஒரு விஷயத்தை தைரியமா சொல்ற அளவுக்கு ஃப்ரீடம் தாங்க. அதே மாதிரி ஒரு கண்ணும் வச்சுக்கங்க. ஆனா, அது சந்தேகக் கண்ணோட்டமா இல்லாம எச்சரிக்கைக் கண்ணோட்டமா இருக்கணும்.
(மைன்ட் வாய்ஸ் : ரொம்ப சொல்றமோ... சொல்லுவோம் என்ன ஆகிடப்போகுது)
மகா கேரக்டர் பத்தி சொல்லிடறேன். இங்க பெண்ணுக்குப் பெண் தான் எதிரி. இந்தக் கூற்றை யாராலையும் மாத்த முடியாது. உள்ளுக்குள் வெந்துட்டு நம்மகிட்ட தேன் மாதிரி பேசறவங்க இருக்காங்க. நமக்காக சந்தோஷப்படற மாதிரி நடிப்பாங்க. அப்படி பேசறவங்க கிட்ட நீங்களும் அதே மாதிரி பேசிட்டு சீக்கிரம் அவங்களை எல்லாம் கட் பண்ணிவிடப் பாருங்க. (முக்கியமா அதுங்க கிட்ட டோன்ட் எவர் ஷேர் குட் நியூஸ்).
கடைசி அத்தியாயத்துல ஒண்ணு சொல்லியிருந்தேன். டெலிகிராமில் பணத்திற்காக யாரென்றே தெரியாத பெண்களின் புகைப்படத்தை விற்கிறார்கள் என்று. அது உண்மையான செய்தி. இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக்ல எல்லாம் ஃபோட்டோஸ் எடுத்து, கண்டபடி சில விஷக்கிருமிக அதை ஷேர் பண்ணிட்டு இருக்காங்க. ஸோ இன்ஸ்டாகிராம்ல இருக்கவங்க உங்க ப்ரொபைல்ல பரைவேட் போட்ருங்க. ஃபேஸ்புக்ல இருக்கவங்க லாக் பண்ணி வைங்க. இங்க கேவலமான கண்ணோட்டத்துல பாக்கிறவனுக்கு வயசும் முக்கியமில்ல, ட்ரெஸும் முக்கியமில்ல. ரொம்ப கவனமா இருங்க எல்லாரும்.
டூ ரீடர்ஸ் :
என்னை ஒவ்வொரு முறையும் கதை முடியும்போது மகிழ்ச்சிக் கடலில் தள்ளி தத்தளிக்க வைக்கும் உங்க எல்லாருக்கும் thank you so so much.
ஒவ்வொரு கமெண்ட்ஸும் ஒவ்வொரு மாதிரி ஹாப்பிநஸ் தருது எப்பவுமே. மீம் எல்லாம் சிலர் அனுப்பிச்சிங்க. A bigger thanks to those who spent time with me and my story characters.
அடுத்த கதை :
கதை மைன்ட்ல ரெடியா இருக்கு மக்களே. ஆனா, எக்ஸாம் வேற சைடுல வந்து என்னை பாஸ் பண்ணிட்டு, நீ அடுத்த வேலையை பாருன்னு சொல்லிடுச்சு.
ஸோ இப்போதைக்கு கதை இல்ல.
நவம்பர் மாதம் தான் அடுத்த ஸ்டோரி. வழக்கம்போல எதாவது குதர்க்கமான நாயகன் நாயகியைக் கூட்டிட்டு வர்றேன்.
Tata.
See you all in next story.
(மூன்றாவது அலை வருதுன்னு வேற சொல்றாங்க. ரொம்ப கவனமா இருங்க. வீட்டை விட்டு வெளியே போக வேணாம். போர் அடிச்சா நம்ம எஸ்எம் சைட் வந்திடுங்க. நாங்க இருக்கோம்)
ஹாப்பி சண்டே!
[என்னுடைய ஐந்து கதைகள்
1) சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
2) மறையாதே என் கனவே
3) மெல்ல யாழ் மீட்டுதே
4) கிட்காட் கஸாட்டா
5) அற்றைத் திங்கள் மழைத்துளி ]
கதையை ஒருவழியா முடிச்சிட்டு முடிவுரைக்கு வந்தாச்சு.
கதை முடியும்போது சொல்லியிருந்தேன் மறக்காம முடிவுரை படிச்சிடுங்கன்னு. நிறைய பேர் அப்ப இன்னும் கதை இருக்கானு கேட்டிங்க. கதை அவ்வளவுதான் மக்களே. ஆனா, முடிவுரை எதுக்கு மறக்காம படிக்க சொன்னேன்னா, நிறைய பேரோட கேள்விளுக்கு பதில் சொல்லவும் கதையின் பயணத்தைப் பற்றியும் சொல்லவும் தான்.
முதல் கேள்வி
1)கதை ஸ்டார்ட் பண்ணதுக்கான ரீசன் கேட்டிருந்தீங்க
இரண்டாம் கேள்வி
2)அந்த ரேப் கேஸ் மட்டும் எடுத்து திவ்யபாரதியை சதீஷோட தங்கையா மட்டும் வச்சு, கதையை ஈசியா கொண்டு போயிருக்கலாமே
மூன்றாவது கேள்வி
3)ஏன் ப்ளாஷ் பேக் ரொம்ப அழுத்தமா குடுத்தீங்க
இந்தக் கேள்விளுக்கு மட்டும் இல்லாம நானே எல்லாத்தையும், அதாவது கதையோட journeyயா சொல்றேன்.
Actually இந்தக் கதை நான் என்னோட மூன்றாவது கதையா எழுத வேண்டியது. சரி, வேணா அழுத்தமா இருக்கும் நாலாவது கதையா எழுதலாம்னு தள்ளிவச்சு, again சரி ஐந்தாவது நாவலா எழுதலாம்னு ஆகிடுச்சு. இதை நான் அல்ரெடி சொல்லியிருந்தேன் முன்னுரைல.
இந்தக் கதையை நான், எழுத ஸ்டார்ட் பண்ணதுக்கான ரீசன் பத்தி பாக்கலாம்.
இப்ப இருக்க நிறைய ரிலேஷன்ஷிப்ஸ் பார்க்கும்போது ரொம்ப பாஸ்ட்டா போகுது. எடுத்தோம் கவுத்தோம்னு லவ் பண்றாங்க.
இங்க எழுபது பர்சன்ட் ரிலேஷன்ஷிப் நானும் கமிடட், நானும் லவ் பண்றேன் அப்படின்னு தங்களோட சர்கில்ஸுக்கு நடுவுல பெருமையா பேசறுக்குத் தான் தேவைப்படுது.
அதுக்குன்னு உண்மை லவ் இப்ப இல்லியான்னு கேக்காதீங்க. இருக்காங்க. நான் சொல்றது அரைவேக்காடுகளைப் பத்தி.
லவ் பண்ணிட்டு கொஞ்ச நாள்ல mutual breakup பண்ணிக்கறாங்க. இதை இரண்டு பேரும் ஈசியா கடந்துட்டா பிரச்சனை இல்லதான். ஆனா, இதுல பையனா இருந்தாலும் சரி பொண்ணா இருந்தாலும் சரி, யாராவது ஒருத்தராவது ரொம்ப emotionalஆ அட்டாச் ஆகியிருந்தாங்கன்னா,அது சனியனுக்கு கால் போட்டு வரவச்ச மாதிரிதான்.
லவ் பண்ணும்போதும் சிலருக்கு அவசரம். போதை மருந்து மாதிரி ஆகி வீட்டை மறந்திடறாங்க. அவ்வளவு மண்டக்கோளாறு ஆகிடுது. நம்ம திவ்யபாரதி மாதிரி எதையும் யோசிக்காம குருட்டு நம்பிக்கை வைக்கிற மாதிரி இருக்காங்க.
நான் straightஆ சொல்றேன். ஒரு சில படங்கள்ள வர்றதை பார்த்துட்டு இப்ப எல்லாம் தைரியம் அதிகம் ஆகிடுச்சு. மறச்சு மறச்சு செஞ்சதை இப்ப தைரியமா வெளிப்படையா செய்யறாங்க. கேட்டா நாங்க லவ் பண்றோம்னு பதில் வேற.
ஹீரோ, ஹீரோயின் லவ் பண்ணிட்டு லிவ்விங் மாதிரி இருந்துட்டு, வீட்டுல மாட்டி வேற ஒருத்தரை ஹீரோயினுக்கு கட்டாயக் கல்யாணம் பண்ணி வச்சிடறாங்க. அப்புறம் அந்த டாக்டர் ஹீரோ ட்ரக்ஸ், ட்ரிக்ன்ஸ், பொண்ணுங்கன்னு சுத்துவாறு. அப்புறம் ஹீரோயினை லாஸ்ட்ல வயித்துல குழந்தையோட பார்க்ல வச்சு கை பிடிச்சிடறாரு. (ஆமா அந்தப் படம் தான்). (கதைன்னு பார்த்தா நல்லா தான் இருக்கும். ஆனா, ரியாலிட்டி 0% இது).
மொத்தத்துல ஒரு பையன்படற கஷ்டத்தை மட்டும் தான் அந்தப் படத்துல காட்டியிருக்காங்க. அந்த பொண்ணுபடற கஷ்டத்தையும் காட்டியிருந்தா சிலருக்கு அந்த தைரியம் வராதோ எண்ணமோ.
இதெல்லாம் கூட இருக்கவங்களுக்கு இப்ப எப்படி ஆகிடுச்சுனா (நான் என்னையும் சேர்த்தி தான் சொல்றேன்). "அது அவங்க பெர்சனல் நாம தலையிடக் கூடாது" அப்படின்னு நாம கடந்து போறோம். ஆனா, உட்கார்ந்து யோசிச்சு பார்த்தா எத்தனை பொய், ஏமாற்றம் பெத்தவங்களுக்கு அவங்க தர்றாங்கன்னு புரியும்.
அதுனால தான் திவ்யபாரதி, வெற்றி ப்ளேஷ் பேக் அந்த மாதிரி வச்சேன். என்ன நான் அவங்களை சேர்த்தி வச்சேன். ஆனா, ரியாலிட்டில அப்படி நடக்குமா அப்படின்னு கேட்டா 0.1% தான் இருக்கும்.
அதுனால தான் அந்த பார்ட் ரொம்ப அழுத்தமாக் குடுத்தேன். சொல்லப்போனா 20வது அத்தியாயம் எழுதும்போது, எனக்கு தெரிஞ்ச பொண்ணுகிட்ட funny videos கேட்டு வாங்கி பார்த்துட்டு இருந்தேன். ஏன்னா அந்த அளவுக்கு எனக்கும் அந்த பார்ட் எழுதும்போது stress ஆகிடுச்சு.
திவ்யபாரதி பட்ட கஷ்டம் பாதிதான் எழுதுனேன். நான் ஒரு சைக்காட்ரி டாக்டர்கிட்ட இதைப்பத்தி கேட்டப்ப, இதைவிட நிறைய பேஸ் பண்ணுவாங்க அந்த விஷயத்தைத் தாண்டி வந்தவங்கன்னு சொன்னாங்க. சரி ரொம்ப இதை விளக்க வேண்டாம்னு தான் அதை மேலோட்டமா மட்டும் எழுதுனேன்.
அப்புறம் இந்தக் கதை சூஸ் பண்ணதுக்கு காரணம், அட்லீஸ்ட் கதையிலாவது குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தரலாம்னு ஒரு பேராசை.
இங்க இரண்டுங்கெட்டான் வயசுலையே வயசுக்கு மீறின விஷயத்தை அரைகுறையா தெரிஞ்சிட்டு நிறைய சுத்துதுக. நிறைய பெற்றோருக்கு இதை கவனிக்க நேரமில்லை. (தன் மேல் பழி வராமல் இருக்க அவங்களே சொல்லிக்கிறது... இது ஒரு சாக்கு).
டெய்லியும் அந்த அந்த வயசுல பேச வேண்டியதை சின்ன வயசுல இருந்து குழந்தைகளுக்கு முறையா சொல்லிட்டு வந்தா இங்க தப்புக்கள் குறையும்.
உங்ககிட்ட வந்து ஒரு விஷயத்தை தைரியமா சொல்ற அளவுக்கு ஃப்ரீடம் தாங்க. அதே மாதிரி ஒரு கண்ணும் வச்சுக்கங்க. ஆனா, அது சந்தேகக் கண்ணோட்டமா இல்லாம எச்சரிக்கைக் கண்ணோட்டமா இருக்கணும்.
(மைன்ட் வாய்ஸ் : ரொம்ப சொல்றமோ... சொல்லுவோம் என்ன ஆகிடப்போகுது)
மகா கேரக்டர் பத்தி சொல்லிடறேன். இங்க பெண்ணுக்குப் பெண் தான் எதிரி. இந்தக் கூற்றை யாராலையும் மாத்த முடியாது. உள்ளுக்குள் வெந்துட்டு நம்மகிட்ட தேன் மாதிரி பேசறவங்க இருக்காங்க. நமக்காக சந்தோஷப்படற மாதிரி நடிப்பாங்க. அப்படி பேசறவங்க கிட்ட நீங்களும் அதே மாதிரி பேசிட்டு சீக்கிரம் அவங்களை எல்லாம் கட் பண்ணிவிடப் பாருங்க. (முக்கியமா அதுங்க கிட்ட டோன்ட் எவர் ஷேர் குட் நியூஸ்).
கடைசி அத்தியாயத்துல ஒண்ணு சொல்லியிருந்தேன். டெலிகிராமில் பணத்திற்காக யாரென்றே தெரியாத பெண்களின் புகைப்படத்தை விற்கிறார்கள் என்று. அது உண்மையான செய்தி. இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக்ல எல்லாம் ஃபோட்டோஸ் எடுத்து, கண்டபடி சில விஷக்கிருமிக அதை ஷேர் பண்ணிட்டு இருக்காங்க. ஸோ இன்ஸ்டாகிராம்ல இருக்கவங்க உங்க ப்ரொபைல்ல பரைவேட் போட்ருங்க. ஃபேஸ்புக்ல இருக்கவங்க லாக் பண்ணி வைங்க. இங்க கேவலமான கண்ணோட்டத்துல பாக்கிறவனுக்கு வயசும் முக்கியமில்ல, ட்ரெஸும் முக்கியமில்ல. ரொம்ப கவனமா இருங்க எல்லாரும்.
டூ ரீடர்ஸ் :
என்னை ஒவ்வொரு முறையும் கதை முடியும்போது மகிழ்ச்சிக் கடலில் தள்ளி தத்தளிக்க வைக்கும் உங்க எல்லாருக்கும் thank you so so much.
ஒவ்வொரு கமெண்ட்ஸும் ஒவ்வொரு மாதிரி ஹாப்பிநஸ் தருது எப்பவுமே. மீம் எல்லாம் சிலர் அனுப்பிச்சிங்க. A bigger thanks to those who spent time with me and my story characters.
அடுத்த கதை :
கதை மைன்ட்ல ரெடியா இருக்கு மக்களே. ஆனா, எக்ஸாம் வேற சைடுல வந்து என்னை பாஸ் பண்ணிட்டு, நீ அடுத்த வேலையை பாருன்னு சொல்லிடுச்சு.
ஸோ இப்போதைக்கு கதை இல்ல.
நவம்பர் மாதம் தான் அடுத்த ஸ்டோரி. வழக்கம்போல எதாவது குதர்க்கமான நாயகன் நாயகியைக் கூட்டிட்டு வர்றேன்.
Tata.
See you all in next story.
(மூன்றாவது அலை வருதுன்னு வேற சொல்றாங்க. ரொம்ப கவனமா இருங்க. வீட்டை விட்டு வெளியே போக வேணாம். போர் அடிச்சா நம்ம எஸ்எம் சைட் வந்திடுங்க. நாங்க இருக்கோம்)
ஹாப்பி சண்டே!
[என்னுடைய ஐந்து கதைகள்
1) சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
2) மறையாதே என் கனவே
3) மெல்ல யாழ் மீட்டுதே
4) கிட்காட் கஸாட்டா
5) அற்றைத் திங்கள் மழைத்துளி ]