மிகவும் அருமையான பதிவு சந்தியா???.ஜமுனா, வெற்றி தன் முதல் மாத சம்பளத்தில் வாங்கிய பட்டுப்புடவையை செவ்வந்திக்கு கல்யாண புடவையாக கொடுத்து அசத்திட்டா???.
கல்யாணம் நல்லபடியா நடந்துருச்சு????.
செவ்வந்தியை பார்த்ததும் அவங்க அண்ணனை போல தோனுது விமலாவுக்கு???.இத்தனை நாளாக கணவன் பேச்சை கேட்டு ஆடியவரின் தீடிர் மாற்றத்தை ஜமுனாவால் நம்ப முடியவில்லை????.
விமலா திடீர்னு பாசம் காட்டினா அதை வேஷம்னு தான் நினைப்பாங்க,அவள் மாற்றம் உண்மை என்றால் அவர்கள் கோபம் தீரும் வரை காத்திருக்கட்டும்
.
ஜமுனா செய்த கைவினைப் பொருட்களை கண்ட செவ்வந்தி பிரமித்து போவதும்,அதை எப்படி மக்களுக்கு அறிமுகப்டுத்த வேண்டும் என இப்போதே திட்டம் தீட்ட ஆரம்பித்து விட்டாள்????.
ஜமுனாவை அவள் வாழ்க்கையின் உயரத்தில் கொண்டு செல்வாள் என்பது நிச்சயம்????.