அருமையான பதிவு சந்தியா???.இத்தனை நாட்களாக ராசியில்லாதவன்,இவன் தொட்டது துலங்காது
என்னும் பேச்சையே கேட்டவனுக்கு, இன்னைக்கு நான் வெற்றிகரமாக தொழில் தொடங்க நீங்களும் ஒரு காரணம் என செவ்வந்தி கூறியது எத்தனை மகிழ்ச்சியை கொடுத்திருக்கும்????.
இரண்டு முறை பார்த்தவனிடம் கல்யாணம் செய்து கொள்ளலாமா என செவ்வந்தி கேட்பாள் என்று நினைக்கவில்லை???.தந்தையின் பணத்திற்காக இல்லாமல்,தன்னை தனக்காக விரும்பும் அவளை பிடித்திருந்தாலும்,ஜனனியை காதலிப்பதால் மறுக்கும் நிலை???.செவ்வந்தியின் பேச்சால் வெற்றியின் மனதில் சலனம் ஏற்பட்டு விட்டது....
தனியாக இருக்கும் பெண் நல்ல குணம் கொண்டவளாக இருந்தாலும்,ஒரு பையனுடன் வண்டியில் வந்து இறங்குவதை கண்டால் பார்ப்பவர்களின் மனதில் தவறான எண்ணம் தோன்றச் செய்கிறது?????.