அழகியின் அழகனுக்கு,
வாசகியின் வணக்கங்கள். இலங்கையை சேர்ந்தவரென்றும், ஆன்டி ஹீரோ என்றும் ,அழகி அவர்கள் உங்களை அறிமுகம் செய்ததால், ராவணனைப் போன்றவர் நீங்கள் என நான் உருவகம் செய்து கொண்டேன்.
காதல் வாழ்க்கையின் கனவுகளை, நீங்கள் கேப்டனிடம் சொல்லும் போது "அடடே இவர் ராமன்" என்று என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.
தந்தையின் கனவை நிறைவேற்ற, மயூரியை நீங்கள் சிறையெடுத்ததும்,
ராமனையும் ராவணனையும் சரிவிகிதத்தில் கலந்த கலவை நீர் என முடிவே செய்து விட்டேன்.
கொண்ட கொள்கையால் ராமனானீர்.
தந்தையின் கனவை, தப்பாமல்
நிறைவேற்றும் மைந்தனானீர்.
குகனோடு ஐவரான,
தசரத ராமனைப் போல்,
சரவணனோடு நட்பானீர். சிறையெடுத்ததால் ராவணனானீர்.
அத்தானெனும் ஒற்றை
அழைப்பிலே மையலானீர்.
கனவைக் கைக்கொள்ள,
காரிகையை துறக்கலானீர்.
தமிழன்னை வளா்ப்பினால்,
வாய்ப்பிருந்தும் தனித்தே நின்றீர்.
மழலையின் மொழி கேட்டு,
மயங்கிய தகப்பனானீர்.
இணையாளை புரிந்துகொண்டு,
இல்லறத்தில் ஐக்கியமானீர்.
அழகியின் அழகனாய், எம்
அடிமனதில் நீந்தலானீர்.
அம்மா, மாமி, குட்டி, பொடுசு, பொடியனோடு மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடர வாழ்த்துக்கள் வருணரே!!!
அன்புடன்,
தமிழ்வாசகி.
வாசகியின் வணக்கங்கள். இலங்கையை சேர்ந்தவரென்றும், ஆன்டி ஹீரோ என்றும் ,அழகி அவர்கள் உங்களை அறிமுகம் செய்ததால், ராவணனைப் போன்றவர் நீங்கள் என நான் உருவகம் செய்து கொண்டேன்.
காதல் வாழ்க்கையின் கனவுகளை, நீங்கள் கேப்டனிடம் சொல்லும் போது "அடடே இவர் ராமன்" என்று என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.
தந்தையின் கனவை நிறைவேற்ற, மயூரியை நீங்கள் சிறையெடுத்ததும்,
ராமனையும் ராவணனையும் சரிவிகிதத்தில் கலந்த கலவை நீர் என முடிவே செய்து விட்டேன்.
கொண்ட கொள்கையால் ராமனானீர்.
தந்தையின் கனவை, தப்பாமல்
நிறைவேற்றும் மைந்தனானீர்.
குகனோடு ஐவரான,
தசரத ராமனைப் போல்,
சரவணனோடு நட்பானீர். சிறையெடுத்ததால் ராவணனானீர்.
அத்தானெனும் ஒற்றை
அழைப்பிலே மையலானீர்.
கனவைக் கைக்கொள்ள,
காரிகையை துறக்கலானீர்.
தமிழன்னை வளா்ப்பினால்,
வாய்ப்பிருந்தும் தனித்தே நின்றீர்.
மழலையின் மொழி கேட்டு,
மயங்கிய தகப்பனானீர்.
இணையாளை புரிந்துகொண்டு,
இல்லறத்தில் ஐக்கியமானீர்.
அழகியின் அழகனாய், எம்
அடிமனதில் நீந்தலானீர்.
அம்மா, மாமி, குட்டி, பொடுசு, பொடியனோடு மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடர வாழ்த்துக்கள் வருணரே!!!
அன்புடன்,
தமிழ்வாசகி.