Suvitha
அமைச்சர்
“மயங்காதே மனமே” இப்போது கிண்டிலிலும்(Kindle) என்று முக நூலில் அழகியின் அறிவிப்பைக் கண்டவுடன், நம் தோழியின் கதை கிண்டிலிலா? என்ற சந்தோஷம் பனிச்சாரலாய் மனதில் தூவ, முதல் வேலையாக முழுநாவலாக கிண்டிலில் படித்து முடித்தேன் (ஏற்கனவே ஆன்கோயிங்லயும் படிச்சு முடிச்சது தான்.) கதையை படித்து முடித்ததும் எனக்குள் வந்த சந்தேகம் இதுதான். கதையில் எதைப்பார்த்து மயங்காதே மனமே என்று நம்மிடம் கூறினார் அழகி!
மெல்லிய மயிலிறகால் நம்மை தீண்டியது போல மென்மையான காதல் கதையைக் கொடுத்து அதைப்பார்த்து மயங்காதே மனமே என்கிறாரா? இல்லை கதை முழுவதும் நம் உயிரை உருக்குவது போல அங்கங்கே உரையாடல்களை வஞ்சமின்றி தூவியிருப்பாரே அதைப்பார்த்து மயங்காதே மனமே என்று சொல்லியிருப்பாரோ?
இல்லையில்லை, நான் பெரிய அப்பாடக்கர், என் வாழ்க்கை துணை பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து தான் வரவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்த அபி முதல் பார்வையிலேயே தன்னையறியாமல் கீத்தாஞ்சலி என்ற டீச்சரிடம் காதலில் விழுந்து கரையேறமுடியாமல் தவித்தானே அதைப்பார்த்து தான் மயங்காதே மனமே என்று சொல்லியிருப்பாரோ?
அந்த அப்பாடக்கரின் காதலை அந்த ஆசிரியை நிலவைக்காட்டி உனக்கும் எனக்கும் எட்டாத தூரம் என்று மறுப்பாளே அதைப்பார்த்து மயங்காதே என்றிருப்பாரா? இல்லை அதே நிலவைக்காட்டி பெண்ணவளிடம் காதலை ஒத்துக்கொள்ள வைப்பானே அபி, அந்த அழகில் நம்மை பார்த்து மயங்காதே மனமே என்று சொல்லியிருப்பாரோ? அழகி!
அதோடு விட்டாரா அம்மணி. ‘ஆன்டி ஹீரோ’ மித்ரனை தன் மாயாஜால எழுத்தால் ஹீரோக்கு ஒருபடி உயரத்தில் கொண்டு போய் நம் மனதில் நிறுத்தினாரே அதைக்கண்டு தான் மயங்காதே மனமே என்று சொன்னாரா? எதைக்கண்டு மயங்காதே மனமே என்று சொன்னாய் அழகி..
ஒருவேளை கீத்துவிற்கான அபியின் ‘அம்மாடி’ என்ற அழைப்பில் மயங்காதே மனமே என்று சொல்லியிருப்பாரோ?
இல்லை அபியின் காதல்பேச்சுக்கு சப்ஸ்டிடுயூட் ஆன செல்பேசியின் காதல் கதையைக் கண்டு மயங்காதே மனமே என்றாரோ? இல்லை தாமதமாக வந்தாலும் மித்ரனின் நெஞ்சில் பக்குவமாக பதிந்து போன தாமரையைக் கண்டு மயங்காதே மனமே என்றாரோ? எதைக்கண்டு மயங்காதே மனமே என்று சொன்னாய் அழகி...
ஓ...அழகி கதையின் சூப்பர் ஹீரோவான ப்ளாக் ஆடியின் உலாவைக் கண்டு மயங்காதே மனமே என்று சொன்னாரோ? சிந்தித்து பார்த்தால் எதுவுமே சிந்தையில் சிக்கவில்லை தோழி. ஏனெனில் முழுக்கதையிலும் மயங்கி போனால் எதில் மயங்கினேன் என்று சொல்ல எப்படி இயலும்?
இப்படி ‘மயங்காதே மனமே’ என்று சொல்லி “மோகனப் புன்னகை “ சிந்தினால் மயங்குவதை நிறுத்தி விடுவோம் என்று மட்டும் எண்ணாதே தோழி...எழுத்துலகில் நீ இருக்கும் வரை எங்கள் மயக்கமும் தொடரும்...
@அழகி
மெல்லிய மயிலிறகால் நம்மை தீண்டியது போல மென்மையான காதல் கதையைக் கொடுத்து அதைப்பார்த்து மயங்காதே மனமே என்கிறாரா? இல்லை கதை முழுவதும் நம் உயிரை உருக்குவது போல அங்கங்கே உரையாடல்களை வஞ்சமின்றி தூவியிருப்பாரே அதைப்பார்த்து மயங்காதே மனமே என்று சொல்லியிருப்பாரோ?
இல்லையில்லை, நான் பெரிய அப்பாடக்கர், என் வாழ்க்கை துணை பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து தான் வரவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்த அபி முதல் பார்வையிலேயே தன்னையறியாமல் கீத்தாஞ்சலி என்ற டீச்சரிடம் காதலில் விழுந்து கரையேறமுடியாமல் தவித்தானே அதைப்பார்த்து தான் மயங்காதே மனமே என்று சொல்லியிருப்பாரோ?
அந்த அப்பாடக்கரின் காதலை அந்த ஆசிரியை நிலவைக்காட்டி உனக்கும் எனக்கும் எட்டாத தூரம் என்று மறுப்பாளே அதைப்பார்த்து மயங்காதே என்றிருப்பாரா? இல்லை அதே நிலவைக்காட்டி பெண்ணவளிடம் காதலை ஒத்துக்கொள்ள வைப்பானே அபி, அந்த அழகில் நம்மை பார்த்து மயங்காதே மனமே என்று சொல்லியிருப்பாரோ? அழகி!
அதோடு விட்டாரா அம்மணி. ‘ஆன்டி ஹீரோ’ மித்ரனை தன் மாயாஜால எழுத்தால் ஹீரோக்கு ஒருபடி உயரத்தில் கொண்டு போய் நம் மனதில் நிறுத்தினாரே அதைக்கண்டு தான் மயங்காதே மனமே என்று சொன்னாரா? எதைக்கண்டு மயங்காதே மனமே என்று சொன்னாய் அழகி..
ஒருவேளை கீத்துவிற்கான அபியின் ‘அம்மாடி’ என்ற அழைப்பில் மயங்காதே மனமே என்று சொல்லியிருப்பாரோ?
இல்லை அபியின் காதல்பேச்சுக்கு சப்ஸ்டிடுயூட் ஆன செல்பேசியின் காதல் கதையைக் கண்டு மயங்காதே மனமே என்றாரோ? இல்லை தாமதமாக வந்தாலும் மித்ரனின் நெஞ்சில் பக்குவமாக பதிந்து போன தாமரையைக் கண்டு மயங்காதே மனமே என்றாரோ? எதைக்கண்டு மயங்காதே மனமே என்று சொன்னாய் அழகி...
ஓ...அழகி கதையின் சூப்பர் ஹீரோவான ப்ளாக் ஆடியின் உலாவைக் கண்டு மயங்காதே மனமே என்று சொன்னாரோ? சிந்தித்து பார்த்தால் எதுவுமே சிந்தையில் சிக்கவில்லை தோழி. ஏனெனில் முழுக்கதையிலும் மயங்கி போனால் எதில் மயங்கினேன் என்று சொல்ல எப்படி இயலும்?
இப்படி ‘மயங்காதே மனமே’ என்று சொல்லி “மோகனப் புன்னகை “ சிந்தினால் மயங்குவதை நிறுத்தி விடுவோம் என்று மட்டும் எண்ணாதே தோழி...எழுத்துலகில் நீ இருக்கும் வரை எங்கள் மயக்கமும் தொடரும்...
@அழகி
Last edited: