• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அழகுக்கு அழகு சேர்க்க- தொடர்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
கண்களை அழகாக காட்ட

நம் உடலில் சென்சிடிவான பாகம் கண் ஆகும். தூக்கமின்மை, கடின உழைப்பு, சத்துக்குறைவு, கண்களுக்கு அதிக வேலை.... இவற்றால் கருவளையம் வந்து கண் அதன் ஜீவனையே இழந்துவிடும். கண்களுக்கு நிறைய ஓய்வு கொடுங்கள். குறைபாடுகள் இருந்தால் உடனே பரிசோதித்து உரிய சிகிச்சை பெறுங்கள்.

பார்வை பாதித்தால் வயதான தோற்றம் தருமே என்று கண்ணாடி போடாமல் இருக்காதீர்கள். கண்ணாடியும் அழகுதான். வட்ட முகத்துக்கு மெல்லிய சிறிய சதுர வடிவ கண்ணாடி பொருத்தமாக இருக்கும். ஓவல் முகத்துக்கு சற்று அகலமான சதுர கண்ணாடி பொருந்தும். நீள முகத்துக்கு வட்ட கண்ணாடி பொருந்தும்.

கண்களை சிறிதாகவும் பெரிதாகவும் மாற்றிக் காட்ட ஐலைனர் பயன்படுத்துங்கள்.

பெரிய கண் உள்ளவர்கள் மெல்லிய கோடாகவும், சிறு கண் உடையவர்கள் அழுத்தமாகவும் ஐலைனர் போடவேண்டும்.

விழி துருத்திக் கொண்டு இருப்பது போல் தோற்றம் உள்ளவர்கள் பழுப்பு நிற ஐஷேடோ பயன்படுத்தலாம்.

கருமையான விழி உடையவர்கள் புருவத்துக்கும், இமைக்கும் நடுவில் சாக்லெட், நீலம், பச்சை நிற ஐஷேடோ பயன்படுத்தலாம்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
லிப்ஸ்டிக் நீண்ட நேரம் கலையாமல் இருக்க வேண்டுமா?
பெண்கள் உபயோகிக்கும் அழகுப் பொருட்களில் முதன்மையானது தான் லிப்ஸ்டிக்.

லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கவும், லிப்ஸ்டிக் போடும் போது நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்களையும் பார்க்கலாம்...

• லிப்ஸ்டிக் போடும் முன், சிறிது பெட்ரோலியம் ஜெல்லைத் உதட்டில் தடவிய பின் லிப்ஸ்டிக் போட்டால், லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கும்.

• நீண்ட நேரம் லிப்ஸ்டிக் இருக்க வேண்டுமானால், இரவில் படுக்கும் முன், லிப்ஸ்டிக்கை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு தூங்க வேண்டும். பின் காலையில் எழுந்து அந்த லிப்ஸ்டிக்கை போட்டால், அது நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.

• லிப்ஸ்டிக் போட்ட பின் பார்க்க சூப்பராகவும், அதிக நேரம் அது நிலைத்து இருக்கவும், உதடுகளுக்கு சிறிது பவுடர் போட்டு, பின்னர் லிப்ஸ்டிக் போட வேண்டும். இதனால் லிப்ஸ்டிக் காபி குடித்தால் கூட போகாமல் அப்படியே இருக்கும்.

• தற்போது வயதானவர்களும் லிப்ஸ்டிக் போட ஆரம்பிப்பதால், அவர்கள் நல்ல அடர்ந்த நிறமுள்ள லிப்ஸ்டிக்கை தேர்ந்தெடுத்து போடாமல், வெளிர் நிறங்களை தேர்ந்தெடுத்து போட்டால், பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

• எப்போதும் லிப்ஸ்டிக் போடும் போது, இரண்டு வகையான நிறங்களை ஒன்றாக போடக்கூடாது. இதனால், அவை சில நேரங்களில் அலர்ஜியை ஏற்படுத்தி, உதடுகளின் அழகையே கெடுத்துவிடும்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்வதால் கூந்தலுக்கு ஏற்படும் பாதிப்புகள்

தோற்றம் அழகாக அமைவதற்கு கூந்தல் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தல் சரியாக அமையாவிட்டால் பார்ப்பதற்கு பொலிவில்லாமல், களையிழந்து காணப்படும். அதனால் இன்றைய காலகட்டத்தில் பல பெண்கள் தலைமுடியை ஸ்ட்ரெய்ட்டெனிங், பெர்மிங் போன்ற தலைமுடி சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.

அழகை அதிகரிக்க விலை உயர்ந்த சிகிச்சைகளான இவைகளை மேற்கொண்டால், கூந்தலின் அமைப்புத் தரம் அதிகரிக்கப்போவது உண்மை தான். ஆனால் காலப்போக்கில் கூந்தலின் வேர்கள் பாதிப்படையும். கூந்தலை நிரந்தரமாக நேராக்க விரும்பும் பெண்கள் பார்லர் போய் அமரும் முன் பல ஆயிரம் முறை யோசித்துக் கொள்ளுங்கள்.

ஒரு முறை கூந்தலை நேராகி விட்டால், அதன் பின்னால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும் நிரந்த பாதிப்புகள் சிலவற்றை அது ஏற்படுத்திவிடும். ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்வதால் கூந்தலுக்கு ஏற்பட போகும் பாதிப்புகளை பார்க்கலாம்.

• கூந்தலை ஸ்ட்ரெய்ட்டெனிங் பின் அதிகளவிலான முடி உதிர்தலை அனுபவிக்க நேரிடும். இது நிரந்தரமாக முடியை நேராக்குவதால் ஏற்பட போகும் பெரிய பிரச்சனை. அதனால் முடியை நேராக்கல் செய்யக்கூடாத காரணங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது.

• கூந்தலை ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்தால், கூந்தலின் வேர்கள் உடனடியாக பாதிக்கப்பட்டுவிடும். கூந்தலின் வேர்கள் பாதிக்கப்பட்டால் புதிதாக வளரும் முடிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும். ஆகவே முடியின் வேர்களை பாதுகாக்க கண்டிப்பாக ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்வதை தவிர்ப்பது நல்லது.

• கூந்தலை ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்தால் காலப்போக்கில் கூந்தல் கரடு முரடாக மாறிவிடும். ஏனெனில் கூந்தலை நேராக்க பயன்படுத்தும் ஜெல், கூந்தலின் அமைப்புத் தரத்திற்கு நல்லதல்ல. மேலும் அந்த ஜெல் நாட்கள் போக போக கூந்தலை சொரசொரப்பாக மாற்றி விடும். கூந்தலின் அமைப்புத் தரம் கரடு முரடாக மாறுவதால், முடியின் நுனிகள் பிரியத் தொடங்கும். இது ஒன்றோடு நிற்காமல் ஆயிரக்கணக்கில் பிரியத் தொடங்கும்.

• கூந்தலில் உள்ள ஜொலிப்பு நின்று போனால், பார்ப்பதற்கு வறண்டு களையிழந்து காட்சி அளிக்கும். முடியை ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்தால், கூந்தலின் ஜொலிப்பை அது எடுத்துவிடும். அதனால் கூந்தல் களையிழந்து காட்சி அளிக்கும். ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்தால் இந்த இயற்கையான ஜொலிப்பு மற்றும் மென்மையை கூந்தல் இழந்து விடுவதால், அதனை தவிர்ப்பது நல்லது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
உடலை அழகு படுத்த உபயோகப் படுத்தும் சில இயற்கை மூலிகைகள்

1. நெல்லிக்காய் எண்ணெய்
நெல்லிக்காயில் பெருமளவு வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமினால் நீளமான அடர்ந்த கூந்தலை பெற முடியும். இதை கொண்டு பொடுகு மற்றும் இதர முடி சம்மந்த பிரச்சனைகளை நீக்க முடியும். இந்த வகை எண்ணெயை வாங்கி பயன்படுத்தும்போது தலைமுடிகளில் சிறந்த மாற்றங்களை காண முடியும்.

2. கடலை மாவு
முகத்தில் உள்ள இறந்த திசுக்களை உரித்து எடுக்க இந்திய பெண்கள் பயன்படுத்தும் மிகப் பிரபலமான பொருளாகும். இதை பல நடிகைகளும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஸ்கிரப் முடியில் உள்ள எண்ணெயை எடுக்கவும் உபயோகப்படுகின்றது. இதை பால் அல்லது கிரீம் ஆகியவற்றில் கலந்து சோப் போல் பயன்படுத்தலாம். இந்த பால் மற்றும் கிரீம் சருமத்தை ஈரப்பதமூட்டி மென்மையாக்குகின்றது. இதில் தேன் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.

3. மஞ்சள்
இந்திய மசாலாக்களில் மிகச் சிறந்த மசாலா வாசனைப் பொருள் மஞ்சள். இது பல ஆண்டுகாலமாக மக்கள் பயன்படுத்தி வரும் கிருமி நாசினிகளில் ஒன்றாகும். சரும படை, தேமல், தொற்று மற்றும் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த மஞ்சளை பயன்படுத்துவார்கள். சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்குவதற்கும் இதை பயன்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல் முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்கும் மஞ்சளை தினசரி பயன்படுத்தலாம்.

4. குங்குமப்பூ

இந்திய மசாலா வகைகளில் குங்குமப்பூவும் ஒன்றாகும். இது காஷ்மீரில் அதிகளவு விளைகிறது. இதை வறண்ட சருமம் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் சரும நிறத்தை மேம்படுத்தி நல்ல வெளிர் நிறத்திற்கு தோலை கொண்டு வரவும் உதவுகின்றது.

5. ரோஸ் வாட்டர்
புதிதாக மலர்ந்த ரோஜா இதழ்களை கொண்டு உருவாக்கப்பட்ட ரோஸ் தண்ணீரை கரு வளையங்களை போக்கவும், அமைதிப்படுத்தவும் மற்றும் டோனராகவும் பயன்படுத்தலாம். இதை பல பெண்கள் அழுக்கு மற்றும் எண்ணெய் பசையை முகத்திலிருந்து நீக்க பயன்படுத்துகிறார்கள்.

6. சந்தனம்
இந்திய கலாசாரத்தில் கடவுளின் சன்னிதானத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சந்தனம். இவை அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல், மருத்துவ மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் உள்ளன. சந்தன பசை மற்றும் சந்தன எண்ணெய் ஆகியவை இந்திய பெண்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. அது சருமப் பராமரிப்பு, எரிச்சல், படை மற்றும் பிளாக்ஹெட்ஸ்களையும் நீக்க உதவுகின்றது.

7. சீகைக்காய்
இதை முடியின் பழம் என்றும் ஆயர்வேதத்தில் கூறுவார்கள். இவை தலையில் உள்ள பொடுகை நீக்குவதிலும் தளர்ந்த வேர்களை வலுவூட்டவும் இது வல்லமை பெற்றது.

8. தயிர்
இது உண்ணும் பொருள் மட்டுமில்லாமல் இதில் உள்ள அழகு ரகசியங்கள் ஏராளம். இதை பல ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பதில் பயன்படுத்தினால் முகம் பொலிவுறும். தயிர் வெளிப்புற பயனை காட்டிலும் தினசரி சாப்பிட்டால் வயிறு சம்மந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
நண்பர்களே இத்துடன் இந்த தொடர் முடிவு பெறுகிறது. எனது உபயோகத்துக்காக வலைதளங்களில் நான் திரட்டிய செய்திகளை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். படித்து செயல்படுத்தி பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை சொல்லுங்கள். அதோடு எனது குறிப்புகளில் ஏதாவது பிழை இருந்தாலும் சொல்லுங்கள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top