உணர்ந்து கவியை எழுதி இருக்கிறிர்கள்(?)வேம்பூவின் தேனாய் - என்
கடுங்கோபத்திலும்
காதல்கள்
கண்டறியும்
வித்தையறிந்தவள்...
படர்ந்து விரிந்த
பஞ்சு மெத்தையிலும்
பாசமாய் - என்னை
பற்றியே
படுத்திருப்பவள்..
உலக உணவே
உண்டாலும் - நான்
ஊட்டுவிடும் ஒரு
உருண்டைக்கு
ஒப்பாகாது...
சட்டென சமரசம்
செய்வதெப்படி - என்று
பாரில் நடக்கும்
போருக்கெல்லாம்
பாடம் எடுப்போம்...
அவளில்லா - என்
நாட்கள்
பாரதி இல்லா தமிழைப்
போன்று - தத்தளித்து
வெறுமை காணும்...
என் மகளை நான் எனது தாயகவே பார்க்கிறேன்,
எல்லோரும் தான் மட்டுமே பேச ஆரம்பிப்பார்கள்
என் மகள் அம்மா எனும் போது
அதுவரை சிரிப்பை மட்டுமே தன் மொழியென கொண்டிருந்த அவள் அண்ணனையும் அம்மா என்றழைக்க வைத்தவள், என் வாழ்வின் வரமாய் வந்தவள்.