ஹாய் மக்களே வணக்கம்...
ஆழி சூழ் நித்திலமே நாவலின் 11வது பதிவுடன் வந்திருக்கிறேன் நண்பர்களே... படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...
கதையில் வரும் சம்பவங்கள் கற்பனையே...
ஆழி(அ)
ஆழி (ஆ)
மீனவர்கள் பற்றிய சில தகவல்கள் :
கடலுக்குள் மழைக் காடுகள்
• சுனாமி வந்த போது ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி வரை உள்ள பகுதிகளில் எந்த பாதிப்பும் இல்லை. அதற்குக் காரணம் அந்தப் பகுதியில் 21 தீவுகளும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பவளப் பாறைகள்.
• பவளப்பாறைகள் மீனவர்களுக்கு மறைமுகமாகப் பயனளிக்கின்றன.
• அலைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் மீன் குஞ்சுகள் பொறிப்பதற்கான வாழ்விடமாக இருக்கும் பவளப் பாறைகள், பருவநிலை மாற்றம் காரணமாக கடல் வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் படிப்படியாக அழிந்து வருகின்றன. இதனால், இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
• ஒரு நாட்டின் கடல் வளம் பவளப் பாறைகளைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. உலகம் முழுவதும் பவளப் பாறைகள் அழிவின் விளிம்பில் உள்ளதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதற்கு மன்னார் வளைகுடாவும் விலக்கு இல்லை.
• “பருவநிலை மாற்றம் மற்றும் முறையற்ற மீன்பிடி தொழில் முறைகள் காரணமாக 2030-ம் ஆண்டில் உலகில் உள்ள பவளப் பாறைகளில் பாதி அளவு பவளப் பாறைகள் பிளீச்சிங் எனப்படும் வெளுப்பாகி பாதிப்புக்கு ஆளாகும்” என்று வோல்டு ரிசோர்சஸ் இன்ஸ்டிட்யூட் எச்சரித்துள்ளது.
• பவளப் பாறைகள் (coral reefs) என்றதும் ஏதோ ஒரு வகை பாறையோ அல்லது தாவரமோ என்று கருதிவிட வேண்டாம். குழிமெல்லுடலிகள் (Coral polyps) என்ற வகையைச் சேர்ந்த இந்த உயிரினங்கள், கடலில் ஆழமில்லாத பகுதிகளில் அதிகம் காணப்படும்.
• இதன் இளம் பருவத்தில பிளானுலா எனப்படும் கட்டியான பாறை போன்ற இடங்களில் ஒட்டி வாழ்ந்து வளர்ந்து பாலிப் என்ற பருவத்தை அடைந்த பிறகு, கால்சியம் கார்பனேட்டால் ஆன ஒரு குடுவை போன்ற கூட்டிற்குள் பாலிப் இருக்கும். வாய் வழியாக உண்டு வாய் வழியாக கழிவை வெளியேற்றும் தன்மை கொண்ட, பாலிப், கடலில் உள்ள நுண்ணுயிர்களை உண்டு வாழ்கின்றன.
• பாலிப்ஸ் உயிரிழந்து விட்டால் பவளப் பாறைகளும் உயிரிழந்து பவளப் பாறைத் திட்டுக்களாக மாறி விடுகின்றன. ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி வரை உள்ள பகுதியை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன.
• எனவே, இந்த உயிரினங்கள் வாழும் பகுதியை மாநில அரசு 1986-ல் கடல்வாழ் உயிரின தேசியப் பூங்காவாக அறிவித்து, 1989-ல் இதனை உயிர் கோள பகுதியாக (Biosphere Reserve) மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை யுனெஸ்கோவும் அங்கீரித்துள்ளது.
• “பவளப்பாறைகள் கடலில் உள்ள மழைக்காடுகள் போன்றவை. வெப்பநிலையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட பவளப்பாறைகளை எளிதாகப் பாதித்து விடும்
• . கடலின் நீரின் வெப்பநிலை அதிகரித்தால் பவளப்பாறைகள் வெளுப்பாகிவிடும். வெப்பநிலை உயர்வு காரணமாக கடல் பாசிகளின் வளர்ச்சி குறையும். அல்லது அந்த கடல் பாசிகள் அழிந்து விடும்.
• வெளுப்புக்கு ஆளாகும் பவளப்பாறைகள் வெப்பநிலை குறைந்ததால், அது அடுத்த இரண்டு மாதங்களில் அது புத்துயிர் பெற்று விடும். சில நேரங்களில், வெளுப்புக்கு ஆளாகும் பவளப்பாறைகளின் உயிர்பை மீட்க முடியாமலும் போய் விடலாம் .
• பவளப்பாறைகள் குறைந்தால் கடலோரப் பகுதிகளில் அலைகளின் வேகம் அதிகரிக்கும். கடல் அரிப்பும் அதிகமாகும். பவளப் பாறைகள் அழிக்கப்படுவதால் புயல் பாதிப்புகளும் தீவிரமாகி விடும்.
• பவளப்பாறைகளைத் தோண்டி எடுத்தல் போன்ற முறையற்ற செயல்பாடுகள், தொழிற்சாலைகளின் கழிவுகள் நேரடியாக கடலுக்குள் விடப்படுதல், அதனால் கடல் அமிலத் தன்மை அடைதல் போன்றவை பவளப்பாறைகளின் அழிவுக்குக் காரணமாக இருக்கின்றன, இதனால், கடல் பவளப்பாறைகளை வாழ்வாதாரமாகக் கொண்டு கடலில் வாழும் ஏராளமான நுண்ணுயிர்களும் இதனால் அழிந்து விடும் அபாயம் உள்ளது.
ஆழி சூழ் நித்திலமே நாவலின் 11வது பதிவுடன் வந்திருக்கிறேன் நண்பர்களே... படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...
கதையில் வரும் சம்பவங்கள் கற்பனையே...
ஆழி(அ)
ஆழி (ஆ)
மீனவர்கள் பற்றிய சில தகவல்கள் :
கடலுக்குள் மழைக் காடுகள்
• சுனாமி வந்த போது ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி வரை உள்ள பகுதிகளில் எந்த பாதிப்பும் இல்லை. அதற்குக் காரணம் அந்தப் பகுதியில் 21 தீவுகளும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பவளப் பாறைகள்.
• பவளப்பாறைகள் மீனவர்களுக்கு மறைமுகமாகப் பயனளிக்கின்றன.
• அலைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் மீன் குஞ்சுகள் பொறிப்பதற்கான வாழ்விடமாக இருக்கும் பவளப் பாறைகள், பருவநிலை மாற்றம் காரணமாக கடல் வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் படிப்படியாக அழிந்து வருகின்றன. இதனால், இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
• ஒரு நாட்டின் கடல் வளம் பவளப் பாறைகளைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. உலகம் முழுவதும் பவளப் பாறைகள் அழிவின் விளிம்பில் உள்ளதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதற்கு மன்னார் வளைகுடாவும் விலக்கு இல்லை.
• “பருவநிலை மாற்றம் மற்றும் முறையற்ற மீன்பிடி தொழில் முறைகள் காரணமாக 2030-ம் ஆண்டில் உலகில் உள்ள பவளப் பாறைகளில் பாதி அளவு பவளப் பாறைகள் பிளீச்சிங் எனப்படும் வெளுப்பாகி பாதிப்புக்கு ஆளாகும்” என்று வோல்டு ரிசோர்சஸ் இன்ஸ்டிட்யூட் எச்சரித்துள்ளது.
• பவளப் பாறைகள் (coral reefs) என்றதும் ஏதோ ஒரு வகை பாறையோ அல்லது தாவரமோ என்று கருதிவிட வேண்டாம். குழிமெல்லுடலிகள் (Coral polyps) என்ற வகையைச் சேர்ந்த இந்த உயிரினங்கள், கடலில் ஆழமில்லாத பகுதிகளில் அதிகம் காணப்படும்.
• இதன் இளம் பருவத்தில பிளானுலா எனப்படும் கட்டியான பாறை போன்ற இடங்களில் ஒட்டி வாழ்ந்து வளர்ந்து பாலிப் என்ற பருவத்தை அடைந்த பிறகு, கால்சியம் கார்பனேட்டால் ஆன ஒரு குடுவை போன்ற கூட்டிற்குள் பாலிப் இருக்கும். வாய் வழியாக உண்டு வாய் வழியாக கழிவை வெளியேற்றும் தன்மை கொண்ட, பாலிப், கடலில் உள்ள நுண்ணுயிர்களை உண்டு வாழ்கின்றன.
• பாலிப்ஸ் உயிரிழந்து விட்டால் பவளப் பாறைகளும் உயிரிழந்து பவளப் பாறைத் திட்டுக்களாக மாறி விடுகின்றன. ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி வரை உள்ள பகுதியை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன.
• எனவே, இந்த உயிரினங்கள் வாழும் பகுதியை மாநில அரசு 1986-ல் கடல்வாழ் உயிரின தேசியப் பூங்காவாக அறிவித்து, 1989-ல் இதனை உயிர் கோள பகுதியாக (Biosphere Reserve) மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை யுனெஸ்கோவும் அங்கீரித்துள்ளது.
• “பவளப்பாறைகள் கடலில் உள்ள மழைக்காடுகள் போன்றவை. வெப்பநிலையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட பவளப்பாறைகளை எளிதாகப் பாதித்து விடும்
• . கடலின் நீரின் வெப்பநிலை அதிகரித்தால் பவளப்பாறைகள் வெளுப்பாகிவிடும். வெப்பநிலை உயர்வு காரணமாக கடல் பாசிகளின் வளர்ச்சி குறையும். அல்லது அந்த கடல் பாசிகள் அழிந்து விடும்.
• வெளுப்புக்கு ஆளாகும் பவளப்பாறைகள் வெப்பநிலை குறைந்ததால், அது அடுத்த இரண்டு மாதங்களில் அது புத்துயிர் பெற்று விடும். சில நேரங்களில், வெளுப்புக்கு ஆளாகும் பவளப்பாறைகளின் உயிர்பை மீட்க முடியாமலும் போய் விடலாம் .
• பவளப்பாறைகள் குறைந்தால் கடலோரப் பகுதிகளில் அலைகளின் வேகம் அதிகரிக்கும். கடல் அரிப்பும் அதிகமாகும். பவளப் பாறைகள் அழிக்கப்படுவதால் புயல் பாதிப்புகளும் தீவிரமாகி விடும்.
• பவளப்பாறைகளைத் தோண்டி எடுத்தல் போன்ற முறையற்ற செயல்பாடுகள், தொழிற்சாலைகளின் கழிவுகள் நேரடியாக கடலுக்குள் விடப்படுதல், அதனால் கடல் அமிலத் தன்மை அடைதல் போன்றவை பவளப்பாறைகளின் அழிவுக்குக் காரணமாக இருக்கின்றன, இதனால், கடல் பவளப்பாறைகளை வாழ்வாதாரமாகக் கொண்டு கடலில் வாழும் ஏராளமான நுண்ணுயிர்களும் இதனால் அழிந்து விடும் அபாயம் உள்ளது.