ஹாய் மக்களே வணக்கம்...
ஆழி சூழ் நித்திலமே நாவலின் 13வது எபியோடு வந்திருக்கிறேன் நண்பர்களே... படிச்சுப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்...
சென்ற பதிவுக்கு தங்களது விருப்பத்தையும் கருத்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி...
ஆழி (அ)
ஆழி(ஆ)
மீனவர்கள் பற்றிய சில தகவல்கள்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு வகையான மீன்பிடித்தல் முறைகள் நடைமுறையில் உள்ளன.
இதில் நாட்டுப்படகு, விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலில் வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தல், தூண்டில் மூலம் மீன்பிடித்தல், கரைவலை மூலம் மீன்பிடித்தல் உள்ளிட்ட முறைகளில் மீன் பிடிக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் தனுஸ்கோடி கடற்கரை பகுதியில் உள்ள பாரம்பரிய மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி முறையான கரைவலையை பயன்படுத்தி நூறு ஆண்டுகளுக்கு மேலாக மீன்பிடித்து வருகின்றனர்.
இந்த மீன்பிடித்தலில் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் சேர்ந்து குடும்பத்தோடு மீன்பிடிக்கின்றனர்.
கடந்த 1964ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ந் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட ஆழிபேரலை காரணமாக தனுஷ்கோடி நகரம் அழிந்து போனது.
ஆனால், இன்றும் தனுஷ்கோடியை சுற்றியுள்ள மீனவக் கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட பாரம்பரிய மீனவக் குடும்பங்கள் ஓலைக் குடிசைகளில் வசித்து வருகின்றன.
இந்த மீனவக் குடும்பங்களின் பிரதான தொழில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய முறையான கரைவலை மீன்பிடிப்பில் மீன் பிடித்து வாழ்ந்து வருகின்றனர்.
கரைவலை மீன்பிடிப்பு என்றால் என்ன?
முதலில் கடற்கரையிலிருந்து கடலில் குறிப்பிட்ட தொலைவுக்கு சிறிய படகில் (எஞ்சின் பொருத்தப்படாத) சென்று ஆங்கில 'யு' வடிவில் கரை வலையை அமைப்பார்கள்.
பின்னர் வலையின் இரு புறமும் கயிறு கட்டி இரண்டு குழுக்களாக கரையில் நின்று ஆண்கள், பெண்கள் என இருவரும் இணைந்து இழுப்பார்கள். பின்னர் பிடிக்கின்ற மீன்களை மீனவர்கள் மூன்று பங்காக பிரித்து கொள்வார்கள்.
அதாவது, வலைக்கும், படகுக்கும் ஒரு பங்கு. மற்ற இரண்டு பங்குகளை எத்தனை பேர் கரை வலையை இழுக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சம பங்குகளாக பிரித்து கொள்வார்கள்.
வருடத்தில் 6 மாதங்கள் தனுஷ்கோடிக்கு வடக்கு கடல் பகுதியான பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிப்பார்கள்,அதே போல் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தெற்கு கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்கள் கரைவலை முறையை பயன்படுத்தி மீன் பிடிப்பார்கள்.
இவ்வாறு மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.
கடல் வாழ் உயிரினங்களில் எதை மீனவர்கள் கடலில் பிடிக்க கூடாது என்பது குறித்து மீனவ பெண் முத்துக்காளி கூறுகையில்
எங்களது வலைகளில் அரிய வகையான கடல் ஆமை,கடல்அட்டை,கடல் பல்லி, கடல் குதிரை ஆகியவைகள் வந்தால் கடலில் விட்டு விடுவோம் எங்களுக்கு தேவைப்படும் மீன்களை மட்டும்மே நாங்கள் கடலில் இருந்து எடுத்து கொள்வோம் என்றனர்…
ஆழி சூழ் நித்திலமே நாவலின் 13வது எபியோடு வந்திருக்கிறேன் நண்பர்களே... படிச்சுப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்...
சென்ற பதிவுக்கு தங்களது விருப்பத்தையும் கருத்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி...
ஆழி (அ)
ஆழி(ஆ)
மீனவர்கள் பற்றிய சில தகவல்கள்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு வகையான மீன்பிடித்தல் முறைகள் நடைமுறையில் உள்ளன.
இதில் நாட்டுப்படகு, விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலில் வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தல், தூண்டில் மூலம் மீன்பிடித்தல், கரைவலை மூலம் மீன்பிடித்தல் உள்ளிட்ட முறைகளில் மீன் பிடிக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் தனுஸ்கோடி கடற்கரை பகுதியில் உள்ள பாரம்பரிய மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி முறையான கரைவலையை பயன்படுத்தி நூறு ஆண்டுகளுக்கு மேலாக மீன்பிடித்து வருகின்றனர்.
இந்த மீன்பிடித்தலில் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் சேர்ந்து குடும்பத்தோடு மீன்பிடிக்கின்றனர்.
கடந்த 1964ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ந் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட ஆழிபேரலை காரணமாக தனுஷ்கோடி நகரம் அழிந்து போனது.
ஆனால், இன்றும் தனுஷ்கோடியை சுற்றியுள்ள மீனவக் கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட பாரம்பரிய மீனவக் குடும்பங்கள் ஓலைக் குடிசைகளில் வசித்து வருகின்றன.
இந்த மீனவக் குடும்பங்களின் பிரதான தொழில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய முறையான கரைவலை மீன்பிடிப்பில் மீன் பிடித்து வாழ்ந்து வருகின்றனர்.
கரைவலை மீன்பிடிப்பு என்றால் என்ன?
முதலில் கடற்கரையிலிருந்து கடலில் குறிப்பிட்ட தொலைவுக்கு சிறிய படகில் (எஞ்சின் பொருத்தப்படாத) சென்று ஆங்கில 'யு' வடிவில் கரை வலையை அமைப்பார்கள்.
பின்னர் வலையின் இரு புறமும் கயிறு கட்டி இரண்டு குழுக்களாக கரையில் நின்று ஆண்கள், பெண்கள் என இருவரும் இணைந்து இழுப்பார்கள். பின்னர் பிடிக்கின்ற மீன்களை மீனவர்கள் மூன்று பங்காக பிரித்து கொள்வார்கள்.
அதாவது, வலைக்கும், படகுக்கும் ஒரு பங்கு. மற்ற இரண்டு பங்குகளை எத்தனை பேர் கரை வலையை இழுக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சம பங்குகளாக பிரித்து கொள்வார்கள்.
வருடத்தில் 6 மாதங்கள் தனுஷ்கோடிக்கு வடக்கு கடல் பகுதியான பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிப்பார்கள்,அதே போல் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தெற்கு கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்கள் கரைவலை முறையை பயன்படுத்தி மீன் பிடிப்பார்கள்.
இவ்வாறு மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.
கடல் வாழ் உயிரினங்களில் எதை மீனவர்கள் கடலில் பிடிக்க கூடாது என்பது குறித்து மீனவ பெண் முத்துக்காளி கூறுகையில்
எங்களது வலைகளில் அரிய வகையான கடல் ஆமை,கடல்அட்டை,கடல் பல்லி, கடல் குதிரை ஆகியவைகள் வந்தால் கடலில் விட்டு விடுவோம் எங்களுக்கு தேவைப்படும் மீன்களை மட்டும்மே நாங்கள் கடலில் இருந்து எடுத்து கொள்வோம் என்றனர்…