ஹாய் மக்களே வணக்கம்...
ஆழி சூழ் நித்திலமே நாவலின் 7வது பதிவோடு வந்திருக்கிறேன் நண்பர்களே... படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...
சென்ற பதிவுக்கு தங்களது விருப்பத்தையும் கருத்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி...
ஆழி
மீன்கள் நிறைந்த வலை...
மீனவர்கள் பற்றிய சில தகவல்கள் :
தமிழகத்தில் 1,076 கிமீ நீள கடற்கரை பகுதியில் 609 மீனவ கிராமங்கள் உள்ளன.
அவற்றில் 11 லட்சம் மீனவர்கள் வசித்து வருகின்றனர்.
வடசென்னையில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் உள்ளனர்.
இங்குள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட இயந்திரப் படகுகள் மற்றும் ஆயிரக்கணக்கான மோட்டார் பொருத்தப்பட்ட பைபர் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் இயக்கப்படுகின்றன.
அதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இடப்பற்றாக்குறை நிலவுகிறது.
இந்நிலையில் திருவொற்றியூர் குப்பம் பகுதியில் சூரை மீன்பிடி துறைமுகம் அமைக்க மீன்வளத் துறை திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் காசிமேடு மீன்பிடி துறைமுக மீன்பிடி பணிகளை எளிதாக்க முடியும்.
மாதந்தோறும் 1000 டன் சூரை மீன்கள் காசிமேட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன.
இதனால் சூரை மீன்களுக்கு வெளிநாடுகளில் உள்ள சந்தை வாய்ப்புகளை பயன்படுத்தும் வகையில் இந்த புதிய மீன்பிடி துறைமுகம் அமைகிறது.
ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் சூரை மீன் விரும்பி உண்ணப்படுகிறது.
ஆனால், அங்கு இந்த வகை மீன்கள் கிடைப்பதில்லை. அதேநேரம் சென்னையில் சூரை மீன் அதிக அளவில் கிடைக்கிறது.
அதனால் சூரை மீனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் காசிமேடு துறைமுகத்தில் நிலவும் இட நெருக்கடிக்கு தீர்வு காணவும் இந்த சூரை மீன்பிடி துறைமுகம் திருவொற்றியூரில் அமைய உள்ளது.
இதன் நீர் பரப்பு 30.87 ஹெக்டேர் அளவிலும் நிலப்பரப்பில் 15.63 ஹெக்டேர் பரப்பிலும் ரூ.242 கோடி செலவிலும் அமைய உள்ளது.
மீன்களை கையாளுதல் மற்றும் ஏலம் விடும் கூடம், மீன்களை பதப்படுத்தும் கூடம், மீனவர் நிர்வாக அலுவலகம், மீன்பிடி உபகரணங்கள் கூடம், எரிபொருள் நிரப்பும் நிலையம், வலை பின்னும் கூடம், மீனவர் ஓய்வு கூடம், படகு பழுது பார்க்கும் நிலையம், உணவகம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவை அமைய உள்ளன.
இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் மீன்வளத் துறை விண்ணப்பித்துள்ளது.
ஆழி சூழ் நித்திலமே நாவலின் 7வது பதிவோடு வந்திருக்கிறேன் நண்பர்களே... படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...
சென்ற பதிவுக்கு தங்களது விருப்பத்தையும் கருத்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி...
ஆழி
மீன்கள் நிறைந்த வலை...
மீனவர்கள் பற்றிய சில தகவல்கள் :
தமிழகத்தில் 1,076 கிமீ நீள கடற்கரை பகுதியில் 609 மீனவ கிராமங்கள் உள்ளன.
அவற்றில் 11 லட்சம் மீனவர்கள் வசித்து வருகின்றனர்.
வடசென்னையில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் உள்ளனர்.
இங்குள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட இயந்திரப் படகுகள் மற்றும் ஆயிரக்கணக்கான மோட்டார் பொருத்தப்பட்ட பைபர் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் இயக்கப்படுகின்றன.
அதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இடப்பற்றாக்குறை நிலவுகிறது.
இந்நிலையில் திருவொற்றியூர் குப்பம் பகுதியில் சூரை மீன்பிடி துறைமுகம் அமைக்க மீன்வளத் துறை திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் காசிமேடு மீன்பிடி துறைமுக மீன்பிடி பணிகளை எளிதாக்க முடியும்.
மாதந்தோறும் 1000 டன் சூரை மீன்கள் காசிமேட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன.
இதனால் சூரை மீன்களுக்கு வெளிநாடுகளில் உள்ள சந்தை வாய்ப்புகளை பயன்படுத்தும் வகையில் இந்த புதிய மீன்பிடி துறைமுகம் அமைகிறது.
ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் சூரை மீன் விரும்பி உண்ணப்படுகிறது.
ஆனால், அங்கு இந்த வகை மீன்கள் கிடைப்பதில்லை. அதேநேரம் சென்னையில் சூரை மீன் அதிக அளவில் கிடைக்கிறது.
அதனால் சூரை மீனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் காசிமேடு துறைமுகத்தில் நிலவும் இட நெருக்கடிக்கு தீர்வு காணவும் இந்த சூரை மீன்பிடி துறைமுகம் திருவொற்றியூரில் அமைய உள்ளது.
இதன் நீர் பரப்பு 30.87 ஹெக்டேர் அளவிலும் நிலப்பரப்பில் 15.63 ஹெக்டேர் பரப்பிலும் ரூ.242 கோடி செலவிலும் அமைய உள்ளது.
மீன்களை கையாளுதல் மற்றும் ஏலம் விடும் கூடம், மீன்களை பதப்படுத்தும் கூடம், மீனவர் நிர்வாக அலுவலகம், மீன்பிடி உபகரணங்கள் கூடம், எரிபொருள் நிரப்பும் நிலையம், வலை பின்னும் கூடம், மீனவர் ஓய்வு கூடம், படகு பழுது பார்க்கும் நிலையம், உணவகம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவை அமைய உள்ளன.
இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் மீன்வளத் துறை விண்ணப்பித்துள்ளது.