தோழிகளுக்கு வணக்கம்,
கொரோனா லாக்டவுனில் வீட்டில் அடைப்பட்டிருக்கையில் தோன்றிய எண்ணமே இந்த கதை.
'நம்மால் பல நாட்கள் வீட்டில் அடைப்பட்டு இருக்க முடியும் என்றால், கதை முழுவதும் அப்படி இருந்தால் எப்படி இருக்கும்?' என்ற எண்ணம் தோன்றவே, "இதயம் நனைகிறதே..." உங்கள் அனைவரின் இதயத்தையும் நனைக்கும் என்ற எதிர்பார்ப்போடு புது முயற்சியில் இறங்கினேன்.
குறைந்த கதாபாத்திரங்கள். கதாநாயகன், நாயகிக்கு சமமாக குட்டி கதாநாயகன், குட்டி நாயகி. 'உங்களின் வரவேற்பு எப்படி இருக்குமோ?' என்ற அச்சம் என்னுள் இருக்கத்தான் செய்தது.
'எல்லா புது முயற்சிக்கும் பேராதரவு கொடுப்போம்' என்று மீம்ஸ், லைக்ஸ், கருத்து பரிமாற்றம் மற்றும் மிக பெரிய கமெண்ட்ஸ் என உங்கள் அன்பு மழையில் என்னை நனைய வைத்துவிட்டீர்கள். நன்றி... நன்றி... நன்றி....
இதயம் நனைகிறதே... நிறைவு பகுதியை பதிவிடுகிறேன்.
இதயம் நனைகிறதே... - Episode 29 (Final Episode)
உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்து நான்.
அன்புடன்,
அகிலா கண்ணன்