- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
1
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்நிருந் நாள் திருவோணம்.. ஓஹோ ஓஹோ
சுந்நரன் நீயும் சுந்நரி ஞானும்
சேர்ந்நிருந் நாள் திருவோணம்
ஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ
ஆ ஆ ஆஆஆ ஆஆஆஆஆ
அழகான இனிமையான பாடல் இசைத்துக் கொண்டிருக்க, அந்த பாடலுடன் சேர்ந்து இரண்டு கட்டைக் குரல்கள் ‘ஆ..ஆ..ஆ..ஆ..’ என்று ராகம் பாடிக் கொண்டிருக்க, ‘களுக்’ என்று ஒரு பெண் சிரிக்கும் சத்தம் கேட்டது.
அந்த சத்தத்தைக் கேட்டதும், காய்கறிகளை அடுக்கிக் கொண்டிருந்தவன், “எவடா அவ என் பாட்டைக் கேட்டு சிரிக்கிறவ?” என்றபடி நிமிர்ந்துப் பார்க்க, அங்கு தேவதை போல ஒரு பெண் நிற்கவும், அவனது கண்களை நம்ப முடியாமல் இமைத்தட்டி விழித்துப் பார்த்தான். பளிங்கினால் செய்த சிற்பம் போல, காலைப் பனியில் கன்னங்கள் சிவந்து, நின்றிருந்தவளைப் பார்த்தவனின் கண்கள் சாசர் போல விரிந்தது.
அந்தக் குரலுக்கு சொந்தக்காரியைப் பார்த்ததும், அவனுக்கு பின்னால் இருந்த ஒரு பெண்ணும் முன்னால் வந்து அவளை வேடிக்கைப் பார்க்க, அந்தப் பெண் இன்னமும் அந்தப் பாடலைக் கேட்டு குறும்பாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சில நொடிகள் பார்வையிலேயே கடக்க, அருகில் இருந்தவன் கடைக்காரனைத் தட்டவும், தலையை உலுக்கிக் கொண்டவன், “என்ன அம்மணி வேணும்? தக்காளி பிரெஷா இருக்கு.. இதை வாங்கி சாப்பிட்டேன்னு வையேன்.. உன்னோட பளபள கன்னம் கூட இன்னும் பளபளக்கும்.. இதோ வெண்டைக்காய் பிரெஷா இருக்கு பாரு.. இதை வாங்கிச் சாப்பிட்டா உன்னோட விரல் எல்லாம் வெண்டைக்காய்க்கு போட்டியா இருக்கும்.. இதோ பாரு காரட்டு.. இதை சாப்பிட்டா உனக்கு கண்ணு இன்னும் பளபளன்னு இருக்கும்.. ஏற்கனவே உன் கண்ணு பளபளக்குது தான்.. இன்னும் பளபளக்கும்.. நீ அந்த பியூட்டி பார்லருக்கு எல்லாம் போகவே வேண்டாம்.. உண்மையா.. இது எல்லாம் எங்க கடைல ஸ்பெஷலா கிடைக்கிற காய்கறி அம்மணி.. சொல்லு.. என்ன என்ன எவ்வளவு கிலோ வேணும்?” அந்தக் கடைக்காரன் விடாமல் பேசி வியாபாரத்தைப் பார்க்க,
“எனக்கு வீடு வாடகைக்கு வேணும்..” அவளது பதிலைக் கேட்டவன், ‘ஹான்..’ என்று பார்க்க, அவனுக்கு பின்னால் இருந்த பெண்ணோ, கடுப்புடன் அவளைப் பார்த்தாள்.
“என்னம்மா கண்ணு.. எங்களைப் பார்த்தா உனக்கு கேலி செய்யத் தோணுதா? நாங்க இங்க காய்கறி தான் வியாபாரம் செய்யறோம்.. வீடு எல்லாம் கட்டி விக்கற மாதிரி இருந்தா நாங்க ஏன் இங்க இருக்கப் போறோம்? போம்மா.. காலையிலேயே விளையாட ஆள் கிடைக்கலையோ?” என்று சத்தமிட, அந்தப் பெண் அங்கு தொங்க விடப்பட்டிருந்த போர்டைப் பார்த்தாள்.
அவளது அழகான மான் விழிகள் சென்ற திசையைப் பார்த்த அந்த கடையில் இருந்த வாலிபன், அங்கு அவளது பார்வை சென்ற திசையைப் பார்த்து, தலையில் அடித்துக் கொண்டு நெளிந்தான்.
அவனது அந்த நெளியலைப் பார்த்தவளுக்கு மேலும் சிரிப்பு பொங்க, உதட்டைக் கடித்து அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டிருக்க, அந்த போர்டை அவன் வேகமாக பிய்த்து எடுத்தான்.. அதே வெட்க முறுவலுடன், “இதோ இந்த மாமா தான் எழுதிச்சு.. நான் இல்ல.. எனக்கு எழுத படிக்க நல்லாவே தெரியும்..” அழகான பெண்ணின் முன்னால் தனது மானம் காற்றில் பறக்கவும், அருகில் இருந்த தாசை முறைத்துக் கொண்டே அவன் சொல்ல, அந்தப் பெண்ணவளின் புன்னகை மேலும் விரிந்தது..
அவளது புன்னகையைப் பார்த்தவன், அவளது அழகான ஆராஞ்சு போன்ற உதடுகளைப் பார்த்துவிட்டு, “இதை எப்படிங்க படிச்சீங்க?” என்று கேட்டு மீண்டும் அந்த போர்டைப் பார்க்க, அந்தப் பெண்ணோ அழகாக தோளைக் குலுக்கி, உதட்டைப் பிதுக்கிப் புன்னகைத்தாள்.
‘விட வடகக்கு..’ என்று எழுதி இருந்த அந்த போர்டைப் பார்த்தவன், அதை எடுத்து வைத்து விட்டு, அந்தப் பெண்ணைப் பார்க்க, அந்தப் பெண் கேள்வியாக அவனைப் பார்த்தாள்..
“எனக்கு ஒரு வீடு வாடகைக்கு வேணும்..” அவள் கேட்க, அவளையும் அந்த இடத்தையும் அந்த வாலிபன் ஒரு பார்வை பார்த்தான்.. மார்க்கெட் போன்ற அமைப்பில் இருந்த அந்த சிறிய குறுகலான சந்தில் இருந்தது அந்தக் காய்கறிக் கடை.. அருகில் இருக்கும் ஏரியாக்களில் காய் கனிகளை வாங்க மக்கள் இங்கு வருவது வழக்கம்.. அந்த மார்க்கெட்டின் முடிவில், இருந்த தெருக்களில் சிறிது சிறிதாக குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும், சிறிய அளவிலான கான்க்ரீட் வீடுகள் மட்டுமே நிரம்பி இருந்த இடம் அது.. பொதுவாக அந்த இடத்தில் கடை வைத்திருந்தவர்களும், அருகில் இருக்கும் ஏரியாக்களிலும், பெரிய கடைகளுக்கும் வேலைக்குச் செல்பவர்கள் தான் அங்கு வசித்து வந்தனர்.. தெருவில் ஆங்காங்கு குப்பைக் கூளங்களும், காய்கறிக் கழிவுகள், மாமிசங்களின் கழிவுமாக, இருந்த அந்த இடத்தில் வீடு கேட்டு வந்திருக்கும் அந்தப் பெண்ணை அவன் அதிசயமாக பார்க்காமல் போனால் தானே அதிசயம்..
“இருக்கும்மா.. ஆனா.. அது நீங்க தங்கறது போல இருக்காதே.. ரொம்ப சின்ன வீடு.. பெட்ரூம் கூட இருக்காதே.. ஒரு ரூம் ஒரு சமையல் ரூம் தான் இருக்கும்..” அவளைத் தலை முதல் கால் வரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் சொல்ல, அந்தப் பெண் அவனை நிராசையாகப் பார்த்தாள்.
“சின்னதா இருந்தாலும் பரவால்ல.. நான் மட்டும் தானே..” அவள் முகம் சுண்டக் கேட்க,
“அது உங்களுக்கு சரிப்படாதுங்க.. உங்களைப் பார்த்தாலே பெரிய இடத்து பொண்ணு போல இருக்கீங்க.. அந்த வீடு உங்களுக்கு வசதி போதாது..” அந்த வாலிபன் மறுத்துக் கூறினான்.
அவன் மறுக்கவும், அந்தப் பெண் நகரப் போக, “டேய்.. கொஞ்சம் பேசாம இரு..” அந்தக் கடைக்காரனிடம் நின்றிருந்த பெண் அவனை அடக்கிவிட்டு,
“ஏம்மா.. நில்லும்மா.. வீடு இருக்கு.. ஆனா.. அவன் சொன்னது போல சின்னதா தான் இருக்கு.. உனக்கு உட்கார சேர்.. டேபிள் எல்லாம் இருக்கு.. வாடகை ரெண்டாயிரம்.. அட்வான்ஸ் பத்தாயிரம்.. வீட்டுக்கு உள்ளேயே பாத்ரூம் எல்லாம் இருக்கு..” அந்தப் பெண் ராணி சொல்ல, வாடகைக்கு கேட்ட பெண்ணோ எல்லாவற்றிற்கும் சரி என்று தலையசைத்தாள்..
“எனக்கு எல்லாமே ஓகே.. வீடு எங்க இருக்கு?” அவள் கேட்க,
“யக்கா.. வேணாம்க்கா.. அந்தப் பொண்ணைப் பார்த்தா பெரிய இடம் போல இருக்கு.. அந்த வீடு எல்லாம் செட் ஆகாது.. ஒரே ஒரு ரூம் கூட ஒரு சமையல் ரூம்.. அது எப்படி இவங்களுக்கு சரிபடும்?” அந்த வாலிபன் கேட்க, ராணி அவனை முறைத்தாள்.
“இப்படியே நீ சொல்லிக்கிட்டு இருந்தா யாருமே வாடகைக்கு வர மாட்டாங்க.. இப்போப் பாரு எல்லாத்துக்கும் இந்த பொண்ணு சரின்னு சொல்லுது.. பேசாம வாடகைக்கு விடுவியா.. அந்தப் பொண்ணுக்கு என்ன சவுகரியம் வேணுமோ அதை நாம செஞ்சித் தரலாம்..” அவளை எப்படியாவது அங்கு வாடகைக்கு அமர்த்திவிடுவது என்ற முடிவுடன் ராணி பேச, அந்த வாலிபன் இந்திரன் அவளைப் பார்த்தான்..
அவள் உடுத்தி இருந்த சுடிதாரும், அவள் கையில் இருந்த கடிகாரமும், அவளது விரல் நகங்களை வளர்த்திருந்த நேர்த்தியும், அதன் மேல் தீட்டப்பட்டிருந்த நெயில் பாலிஷும், அவள் காலில் அணிந்திருந்த காலனி, அவள் காதுகளில் மின்னிக் கொண்டிருந்த சிறிய அளவிலான வைர காதணி வேறு அவன் கண்ணில் பட, அவனுக்கு சர்வ நிச்சயமாகத் தெரிந்தது அவள் பெரிய இடத்துப் பெண் என்று..
ராணி அவனது முகத்தையேப் பார்க்க, இந்திரனின் மனதினில் பலவேறு எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது.. அவள் இது போல ஒரு இடத்தில் வந்து வீடு கேட்பதற்கு ஏதாவது காரணம் இருக்குமோ என்று அவனது உள்ளம் எண்ணத் துவங்கியது.. சினிமாவில் காட்டுவது போல, ஏதேனும் முறைப் பையன் இருந்து.. தாய் தந்தை இல்லாத பெண்ணை கொடுமைப்படுத்தி கட்டாயத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருக்க, அது பிடிக்காமல் ஓடி வந்து இங்கு ஒளிந்து கொள்ள நினைக்கிறாளோ? ஒருவேளை அவளுக்கு வீட்டில் பிடிக்காத திருமணம் செய்ய எண்ணுகிறார்களோ? இல்லை அவளது உயிருக்கு ஆபத்தோ?” என்றெல்லாம் நினைத்துக் கொண்டவன்,
“சரி.. வாங்க வீட்டை காட்டறேன்.. ஆமா.. உங்க பேர் என்ன? எந்த ஊர்?” அவன் கேட்க,
“என் பேர் சுந்தரி.. ஊர் எல்லாம் வேண்டாமே.. ஹான்.. அப்பறம் ரொம்ப தேங்க்ஸ்.. வீடு வாடகைக்கு தர ஓகே சொன்னதுக்கு..” என்றவள்,
“எனக்கு இன்னொரு ஹெல்ப் வேணுமே..” அவள் கேட்க, அவன் கேள்வியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே,
“எனக்கு வீட்டுக்கு தேவையான திங்க்ஸ் எல்லாமே வாங்கணும். கொஞ்சம் எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா? இங்க எனக்கு யாரையுமே தெரியாது.. என்ன என்ன வாங்கணும்ன்னு கூடத் தெரியாது..” அவள் கேட்கவும் பட்டென்று இந்திரன் நிற்க, சுந்தரி நின்று அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“எதை நம்பிம்மா இப்படி வந்திருக்க? ஏதோ கடவுள் அருள் என்கிட்ட வீடு கேட்ட.. இல்ல வேற மாதிரி ஆளுன்னா என்ன ஆகி இருக்கும்?” திகைப்புடன் அவன் கேட்க, சுந்தரி புன்னகைத்தாள்..
“காலைல அஞ்சு மணிக்கு நீங்க கடை திறந்ததுல இருந்து, ஓரமா நின்னு உங்களை நான் பார்த்துட்டு இருந்தேனே.. நீங்க பாட்டுக்கு நீங்க உண்டு உங்க வேலை உண்டுன்னு இருந்தீங்க.. அதனால தான் உங்களை வந்து கேட்டேன். எத்தனை லேடீஸ் வந்து போனாங்க.. ஒருத்தரையும் நீங்க தப்பான பார்வை பார்க்கலையே” என்றவள், அவன் திகைப்புடன் பார்க்கவும்,
“பணம் எல்லாம் இருக்கு.. ஏமாத்த மாட்டேன்..” வாக்கு போல சொல்ல, இந்திரன் மறுப்பாக தலையசைத்தான்..
“இல்லம்மா.. நான் அதுக்காக பார்க்கல.. உன்னைப் பார்த்தா பெரிய இடத்து பொண்ணு போல இருக்கு.. உனக்கு எதுக்கு இந்த இடத்துல வாழ்க்கைன்னு யோசிச்சேன்.. அது தான்.” என்றவன்,
“சரி வா.. உனக்குத் தேவையானது எல்லாம் வாங்கித் தரேன்..” என்று அவளை நேராக அழைத்துக் கொண்டு ஒரு பாத்திரக்கடைக்கு சென்றான். அங்கு தேவனையான சில பாத்திரங்களை வாங்கிக் கொண்டு, அவளை அழைத்துக் கொண்டு அவனுடைய வீட்டிற்குச் சென்றான்..
சிறிது சிறிதாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தது போல இருந்த, அந்த லைன் வீடுகள் இருந்த இடத்தில், இரண்டு வீடுகள் ஒரே போலவே இருக்க, அதைச் சுற்றி சிறு மதில் சுவர் இருந்தது.. அங்கிருந்த வீடுகளில் அந்த வீடு கொஞ்சம் பார்க்கவும், சுத்தமாகவும் இருக்க, சுந்தரி உள்ளுக்குள் ஆஸ்வாசமாக மூச்சை விட்டுக் கொண்டாள். வீடு கேட்டு இங்கு வந்து விட்டாலும், எப்படி இப்படி ஒரு இடத்தில் வசிக்கப் போகிறோம் என்று அவளுக்கு சிறிது மலைப்பாகவே இருந்தது..
“இது தான் என்னோட வீடு.. இந்த இந்திரனோட மாளிகை.. சொர்க்க லோகம்.. என்ன பிடிச்சிருக்கா? உனக்கு இந்த வீட்டை தான் வாடகைக்கு விடப் போறேன்..” என்றபடி ஒரு சிறிய கேட்டைத் திறந்து அவன் உள்ளே செல்ல, அங்கு இருந்த இடத்தில் சிறிது சிறிதாக பூந்தொட்டிகள் அடுக்கப்பட்டு இருக்க, அதை அதிசயமாக பார்த்துக் கொண்டே சுந்தரி அவனைப் பின்தொடர்ந்தாள்.
“ஆமா.. சுந்தரி.. மனசு ஆறாம கேட்கறேன்.. உனக்கு அப்படி என்ன பிரச்சனை இந்த மாதிரி ஒரு இடத்துல வந்து தங்க ரெடியா இருக்க? சொன்னா என்னால முடிஞ்சது செய்வேன் இல்ல..” இந்திரன் கேட்க, அவள் மெல்ல மறுப்பாக தலையசைத்து அந்த வீட்டிச் சுற்றிப் பார்த்தாள்..
வீட்டிற்கு வாங்கிக் கொண்டு வந்த சாமான்களை அவன் முன்னே இருந்த இடத்தில் வைத்து விட்டு, வெளியில் இருந்த துடப்பத்தை எடுத்து வீட்டை சுத்தம் செய்யத் துவங்க, அவளோ அவனுக்கு உதவி செய்யும் எண்ணமே இல்லாமல், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கால் மீது காலைப் போட, அந்த சேர் நொடித்துக் கொண்டு சரிந்தது..
“அம்மா..” என்ற அலறல் கேட்கவும், இந்திரன் அவசரமாக திரும்பிப் பார்க்க, கீழே சரிந்துக் கிடந்தவளோ, வலியில் முனகிக் கொண்டிருந்தாள்..
அவளை கைக் கொடுத்து எழுப்பி விட்டவன், “பார்த்து உட்காரலாம்ல.. அது பழைய காலத்து சேர்.. எப்படி உடைஞ்சு போச்சு பாரு..” உச்சுக் கொட்டிக் கொண்டு அதை வருத்தமாக பார்த்துக் கொண்டே கேட்ட அவனது கேள்வியில் அவனை முறைத்தவள்,
“ஹான்.. எனக்கு வேண்டுதல்.. உங்க வீட்டுக்கு வந்த உடனே உங்க பொக்கிஷ சேரை உடைக்கணும்ன்னு.. என்னோட இடுப்பு தான் உடைஞ்சு போச்சு.. அதைப் பத்தி கவலைப்படாம.. இந்த இத்துப் போன சேரைப் பத்தி கவலைப்படற? உனக்கு ரொம்ப கொழுப்பு தான்..” கோபமாக அவனிடம் கேட்டவள், அந்த சேரை எட்டி உதைக்க, அது அவளது காலைப் பதம் பார்த்தது..
‘ஆ..அ.. அம்மா..’ காலை பிடித்துக் கொண்டு அவள் அலற, அதைப் பார்த்து சிரித்த இந்திரன், “உன் டான்ஸ் ரொம்ப நல்லா இருக்கே.. இப்படியே நீ ஆடினா ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து பார்க்கலாம் போல இருக்கே..” அவளை கேலி செய்தவன்,
அவள் முறைத்து, “யோவ்.. என் காலு வலிக்குதுய்யா.. நீ சிரிச்சிட்டு இருக்க?” கோபமாக அவள் கேட்க,
“உனக்கு ஒரு உண்மை தெரியுமா? அது ஆவி வந்த சேர்.. அதோ அங்க இருக்கற டேபிள் கூட அது தான்.. எங்க அம்மாவோட அம்மா ஆசையா வாங்கிப் போட்டது.. அதை நானும் எங்க அக்காவும் எத்தனையோ கட்டு கட்டி ஒட்டி வச்சிருந்தோம்.. அதைப் போய் உடைச்சிட்டு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இப்படி பேசினா... பார்த்தியா? அதைத் திட்டினதும் உன்னை எப்படி பழி வாங்கிருச்சு பாரு..” கேலியுடன் அதை எடுத்து வெளியில் போட்டவன்,
“எங்க அக்கா பார்த்தா கண்ணீர் விட்டு அழும்.. அதை எப்படி சமாளிக்க போறேன்னு தெரியல..” சோகமாக சொல்ல, அவனது முகத்தைப் பார்த்தவள் சிரிக்கத் துவங்கினாள்.
அவள் சிரிக்கவும், அவனுக்கும் தான் சொன்னதை நினைத்து சிரிப்பு தோன்ற, “நீ வேணா சாயந்திரம் எங்க அக்கா கொடுக்கற பில்ட்டப்பை பாரு.. நான் சொன்னது எவ்வளவு உண்மைன்னு..” என்று சொல்லிக் கொண்டே, வேகமாக வீட்டை சுத்தம் செய்தவன், சாமான்களை அடுப்படியில் கொண்டு வைத்தான்.
“சரி.. அட்வான்ஸ் கொடு..” அவன் கேட்க, தனது பையில் இருந்த ஒரு பர்சில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டு,
“அப்படியே எனக்கு பார்னிச்சர் சிலது எல்லாம் வாங்கணும்.. கொஞ்சம் அதுக்கும் ஹெல்ப் பண்ணுங்களேன்..” கண்களைச் சுருக்கி கெஞ்சலாகக் கேட்க, இந்திரன் அந்த அழகில் ஒரு நிமிடம் சிலையானான்.
“இந்தர்..” சுந்தரி அவன் முகத்தின் முன் சொடக்கிட்டு அவள் அழைக்க,
தலையை உலுக்கி தன்னை சுதாரித்தவன், “என்ன வாங்கணும்?” என்று கேட்க,
“டிவி.. பிரிட்ஜ்.. ஏசி.. கட்டில்.. வாக்வம் கிளீனர்.. ஓவன்.. அப்பறம் சிமினி.. ஃபேன்.. பாத்ரூம்க்கு ஹீட்டர்.. வாஷிங் மெஷின்...” அவளது பட்டியல் நீண்டுக் கொண்டே போக, அவளது பட்டியலைக் கேட்டவன் தலையில் கை வைத்து அமர்ந்தான்..
“ஏன்? வை யு ஆர் சிட்டிங் லைக் திஸ்?” அவள் கேட்க, அவளைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டவன்,
“அம்மாடி தாயே.. வந்த உடனே எங்க வீட்டு ஆவி வந்த சேரை உடைச்ச.. இப்போ ஏசி எல்லாம் போட்டு வீட்டையே உடைக்கப் பார்க்கறியே இது நியாயமா? சரி.. நீ சொல்ற பொருளை எல்லாம் கொண்டு வந்து வச்சிட்டு நீ எங்க புழங்கப் போற? நடக்க இடம் வேண்டாமா?” அவன் கேட்கவும், சுற்றி பார்வையை ஒட்டிவளுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது..
தனது கண்ணீரை மறைக்க அவள் தலையை குனிந்துக் கொள்ளவும், “பிரிட்ஜ் வேண்டாம்.. தினமும் நான் காலையில புது காய்கறிங்க மூட்டை வந்த உடனே கொடுத்து விடறேன்.. அப்பறம் பால் கூட அப்படி தான்.. காலையில புது பால் வந்த உடனே கொண்டு வந்து தரேன்.. எக்ஸ்ட்ரா பால் எங்க வீட்டு ப்ரிட்ஜ்ல இருக்கும்.. தேவைன்னா அதை உபயோகப்படுத்திக்கோ.. எங்க வீட்ல மாவைத் தவிர அதுல எதுவும் இருக்காது.. அதனால உனக்கு அது தேவைப்படாது.. வேற உனக்கு கீழ படுத்து பழக்கம் இல்ல போல.. அதனால ஒரே ஒரு சின்ன கட்டில் வாங்கலாம்.. அது தான் அடுப்பு இருக்கே.. அப்பறம் எதுக்கு உனக்கு ஓவன்.. இதை வச்சு சமாளி.. என்ன?” அவள் கண்கள் கலங்கவும், அவன் குழந்தைக்கு சொல்வது போல சொல்ல, சுந்தரி மண்டையை உருட்டினாள்.
“குளிச்சிட்டியா? இல்ல எங்க வீட்ல குளி.. நாம போயிட்டு வருவோம்.. அதுக்குள்ள நான் இந்த வீட்ல இருக்கற பாத்ரூம சுத்தம் செய்து வைக்கிறேன்” அவன் சொல்ல,
“இல்ல.. நான் வீட்டுல இருந்து வரும்போதே குளிச்சிட்டு வந்துட்டேன்.. நாம போகலாம்..” என்றவள், தனது துணிப்பையை அங்கிருந்த அலமாரியில் வைத்து விட்டு தயாராக,
“ஒரு முடிவோட தான் வந்திருக்க?” என்று உதட்டைப் பிதுக்கியவன், பாத்ரூமை அவசரமாக சுத்தம் செய்துவிட்டு வர, சுந்தரி அவனைப் பார்த்து முகம் சுளித்து அசையாமல் நிற்க,
“என்ன போக வேண்டாமா?” அவன் புரியாமல் கேட்டான்.
“பாத்ரூம் எல்லாம் கிளீன் பண்ணிட்டு அப்படியே கிளம்பறீங்க? போய் குளிச்சிட்டு வாங்க.. அப்போ தான் நான் உங்க கூட வருவேன்..” அடமாக நிற்க, இந்திரன் அவளைப் பார்த்து முறைத்தான்.
“என்னது? நான் குளிக்கணுமா? நான் எல்லாம் ஒரு தடவ குளிக்கிறதே பெரிய விஷயம்.. இதுல இப்படி எல்லாம் பேசினா.. நான் பாட்டுக்கு போயிடுவேன்.. நீயாச்சு உன் வேலையாச்சு..” என்றவன், அங்கிருந்து நகரப் போக, அந்த வீட்டில் மிஞ்சி இருந்த ஒட்டுப் போட்ட டேபிளின் மீது அவள் ஏறி அமர, அவள் என்ன செய்கிறாள் என்று எட்டிப் பார்த்த இந்திரன், அவசரமாக அவள் அருகில் ஓடி வந்தான்.
“சுந்தரி.. சுந்தரி.. உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்.. கீழ இறங்கிடு தாயே.. அதுவும் உடைஞ்சா நான் என்ன ஆகறது?” அவன் கெஞ்ச, சுந்தரி அசையாமல் அமர்ந்திருக்க,
“இப்போ என்ன நான் குளிக்கணும்.. அவ்வளவு தானே.. இறங்கு.. நான் வரேன்..” என்றவன், அவசரமாக குளித்துவிட்டு வர, சுந்தரி தனது பையுடன் தயாராக நின்றாள்.
அவள் அவ்வாறு நிற்கவும், கடுப்பானவன், “இங்கப் பாரு சுந்தரி.. ஏதோ பெரிய இடத்து பிள்ள நீ.. என்ன சூழ்நிலையோ சந்தர்ப்பமோ இப்படி வந்து இங்க இருக்கறியேன்னு இறங்கிப் போறேன்.. வேற யாராவது இப்படி செஞ்சிருந்தாங்கன்னு வையு.. அடிக்கிற அடில செவுலு பேந்திரும்.. இதோட இதை நிறுத்திக்கோ.. ஜாக்கிரதை..” அவளை மிரட்டிவிட்டு முன்னால் நடக்க, சுந்தரி அவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.
அவள் சொன்னது போலவே, ஒரு கட்டில், சேர், ஃபேன், வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை வாங்கி, கையேடு ஒரு வண்டியைப் பிடித்து எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தனர்..
வரும் வழியிலேயே அவளுக்கான உணவை அவள் வாங்கிக் கொள்ள, இந்திரன் அவளைப் புதிதாய் பார்த்துக் கொண்டே மீண்டும் அவளை வீட்டிற்கு கொண்டு விட்டான்..
“ரொம்ப தேங்க்ஸ் இந்தர்.. ஐ வில் மேனேஜ்..” அவள் புன்னகைக்க, இந்திரன் அவளைப் பார்த்து புன்னகைத்து,
“சரி சுந்தரி.. நான் கடைக்கு போயிட்டு வரேன்.. இன்னைக்கு எனக்கு பாதி பொழுது உன்னோட போச்சு.. மீதி வேலையைப் பார்க்கணும்.. அக்கா சாயந்திரம் வரும்.. ஏதாவது வேணும்ன்னா அதுகிட்ட கேட்டுக்கோ..” என்று கூறிவிட்டு, அவன் கடைக்குக் கிளம்ப, அந்த கட்டிலில் விழுந்தவள், தன்னையும் மறந்து நன்றாக உறங்கத் துவங்கினாள்.
மாலையில் டீ போட்டு எடுத்துக் கொண்டு செல்வதற்காக வந்த ராணி, வீட்டின் கதவு திறந்திருக்கவும், உள்ளே மெல்ல தலையை மட்டும் நீட்டிப் பார்க்க, ஹாலில் இருந்த கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்தவள், ஒரு பெருமூச்சுடன், கதவை அடைத்துவிட்டு, டீயை எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்றாள்.
டீயை கப்பில் ஊற்றி இந்திரனிடம் நீட்டிக் கொண்டே, “ஏண்டா தம்பி.. அந்தப் பொண்ணு ரொம்ப வசதியான வீட்டு பொண்ணு மாதிரி தெரியுது.. வீட்டைக் கூட பூட்டிக்காம படுத்து தூங்குது.. அது கூட செஞ்சுப் பழக்கம் இல்லையோ?” சந்தேகமாகக் கேட்க,
“எனக்கு தெரிஞ்சு அவங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா இருக்கும்.. வீட்டுக்கு என்ன சாமான் வேணும்ன்னு கூடத் தெரியல.. அதை விட இன்னும் மளிகை சாமான் எதுவும் வாங்கல.. அது வாங்கணும்ன்னு கூடத் தெரியுமான்னு எனக்குத் தெரியல.. நல்ல சுகமா வளர்ந்தி இருப்பாங்களா இருக்கும்.. என்ன பிரச்சனையோ.. நம்ம ஏரியால வந்து தங்கி இருக்கா.. நான் பதமா கேட்டுக் கூடப் பார்த்துட்டேன்.. ஒண்ணும் சொல்ல மாட்டேங்குது.. ஆனா.. நல்ல பொண்ணு..” இந்திரன் சொல்லவும், ராணி அவனை சந்தேகமாகப் பார்த்தாள்.
“என்ன? என்ன பார்வை?” அவன் கேட்க, ராணி ஒன்றும் இல்லை என்பது போல தலையசைக்க,
“அக்கா.. ஒண்ணு தெரியுமா? நம்ம இடத்துல காய் வாங்கவே பெரிய வீட்ல எல்லாம் டிரைவரைத் தான் அனுப்புவாங்க.. அந்தப் பொண்ணு இந்த இடத்துல வந்து இருக்கறேன்னு சொன்னதே நிஜமா பெரிய விஷயம் தானே.. அதுவும் நம்ம வீட்டை எல்லாம் பார்த்து அவங்க முகத்தைக் கூட சுளிக்கல தெரியுமா? கொஞ்சம் அந்தப் பொண்ணை பார்த்துக்கோக்கா.. சமைக்க எல்லாம் தெரிஞ்சு இருக்காதுன்னு நினைக்கிறேன்.. அவங்க மேல ஒரு கண்ணு வச்சிக்கோ.. நாளைக்கு ஏதாவதுன்னா நாம தான் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.. நீ பாட்டுக்கு வாடகைக்கு வீட்டை விட ஒத்துக்கிட்ட..” என்றவன், தனது வேலையை கவனிக்கத் துவங்கினான்.
“என்ன அந்தப் பொண்ணு மேல பாசம் எல்லாம் ரொம்ப பொங்குது?” ராணி கேலியாகக் கேட்க,
“அவளோட நிலைமை என்னவோ அப்படி வளர்ந்துட்டு இருங்க வந்து இருக்கா.. நம்மளைப் போல சேத்துல வளர்ந்திருந்தா நான் கவனிச்சு இருக்க மாட்டேன்.. நகத்துல தூசித் தும்பு கூட பாடாம வளர்ந்திருக்கும் போல.. என்ன கஷ்டமோ என்னவோ போ.. இந்த இடத்துல வந்து இருக்கு.. அதுக்குத் தான் சொன்னேன்.. நீயா கற்பனை கோட்டை எல்லாம் கட்டிக்காதே..” என்றவன், காய்களை எடுத்து அடுக்கத் துவங்கினான்.
“ராணி.. அவனைப் பத்தி உனக்குத் தெரியாதா? அவன் சைட் தான் அடிப்பான்.. இப்படி எல்லாம் எந்தப் பொண்ணைப் பத்தியாவது புகழ்ந்து பேசி இருக்கானா? என்னவோ வேலைப் பொழப்பு இல்லாம.. போ.. போய் வேலையைப் பாரு.” தாஸ் தனது மனைவியிடம் சொல்லவும், நொடித்துக் கொண்டவள், மளிகைக் கடையை கவனிக்கத் துவங்கினாள்..
தேவேந்திரன் என்கிற இந்திரன்.. உழைப்பும், தன்னம்பிக்கையும் மிக்க இளைஞன்.. அவனது அன்னை சிறிய அளவில் பார்த்துக் கொண்டிருந்த காய்கறிக் கடையை அவனது உழைப்பிலும், பேச்சுத் திறனிலும் நல்லமுறையில் விரிவுப்படுத்தி, இன்று அந்த இடத்திலேயே பெரிய கடையாக அவன் உருவாக்கி வைத்திருந்தான். அதோடு மட்டுமின்றி இளநிலை பட்டப்படிப்பையும் அவன் முடித்திருந்தான்..
வாடகைக்கு இருந்த கடையை சொந்த இடமாகவும் அவன் மாற்றிக் கொண்டு அவன் விரிவுப்படுத்தி இருந்தான். அதோடு மட்டும் இல்லாமல் சிறுகச் சிறுக பணம் சேர்த்து அந்த இரண்டு வீடுகளையும் வாங்கியவன், மேலும் தனக்கு சொந்தமாக, அருகில் இருந்த ஏரியாவில் ஒரு வீடு மனையையும் வாங்கிப் போட்டிருந்தான். தனக்கு ஒரே துணையான தனது உடன் பிறந்தவளிடம் மிகுந்த பாசம் வைத்திருந்தவன், அவனது கடையில் வேலை செய்துக் கொண்டிருந்த தாசையே அவர்கள் விரும்புவது தெரிந்து, நல்ல முறையில் திருமணம் செய்து தன்னுடன் வைத்துக் கொண்டான்..
மிகுந்த அன்பானவன்.. அதே நேரம் அவனது கண்டிப்பும் அந்த இடத்தில் இருந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.. கடனை அறவே வெறுப்பவன்.. அவனும் கடன் வாங்க மாட்டான்.. அந்த இடத்தில் வசிப்பவர்கள் அவனிடம் வைத்திருக்கும் கடனையும் சொன்ன தேதியில் கறாராக வசூல் செய்தும் விடுவான்.. சிறிய அளவில் அந்த இடத்தில் வசிக்கும் மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தான்.. இப்படியாக அவனது வரவுகள் இருக்க, செலவுகளை மிகுந்த சிக்கனமாக பார்த்துக் கொண்டான்.
மாலை வேளையில் கூட்டம் நெரிக்க, காய் விற்பனை அமோகமாக நடந்தேறியது.. இரவு கடையை அடைத்துவிட்டு, மிச்சம் இருக்கும், மறுநாள் வரை தாங்காது என்பது போல இருந்த காய்களை எடுத்துக் கொண்டு மூவரும் வீட்டிற்கு கிளம்ப, “அந்தப் பொண்ணு சமைச்சு சாப்பிட்டு தூங்கி இருக்கும் இல்ல தம்பி.. இவ்வளவு நேரம் எல்லாம் முழிச்சு அதுக்கு பழக்கமே இருக்காது இல்ல..” வீட்டிற்கு கிளம்பவும், ராணிக்கு சுந்தரியின் நினைவு வந்தது..
இந்திரன் திரும்பி அவளை அமைதியாகப் பார்க்க, “இருக்கும்.. இருக்கும்.. ஆமா.. நைட்டுக்கு என்ன சாப்பிடுச்சோ தெரியல.. நீ வேற மளிகை சாமான் எதுவும் இல்லன்னு சொன்னியே..” ராணி கவலையாகக் கேட்க, இந்திரனும் அதே யோசனையுடன் வீட்டிற்கு வந்தான்..
அவளைப் பற்றி நினைத்துக் கொண்டே வீட்டை நெருங்க, வீட்டின் முன்பு பலர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, இந்திரனும், ராணியும் அவசரமாக வீட்டிற்கு ஓடி வந்தனர்...
அங்கு அவர்கள் கண்ட காட்சியில் இந்திரன் கண்கள் விரிய நிற்க, ராணி அவசரமாக ஒரு துவாலையை எடுத்து சுந்தரியின் மேல் போட்டுவிட்டு, அங்கிருந்தவர்களை நோக்கித் திரும்பியவள், “ஹே.. இங்க என்ன கும்பல் கூடிக் கிட்டு நிக்கறீங்க? போங்கடி.. போய் வீட்ல பொழப்பு இருந்தா பாருங்க.. வந்துட்டாளுங்க பொம்மையை வேடிக்கைப் பார்க்கற மாதிரி பார்க்க.. யோவ்.. அங்க எவன்டா அவன் மறைஞ்சு நின்னு வேடிக்கைப் பார்க்கறது.. இங்க என்ன பத்து மணிக் காட்சியா காட்டிக்கிட்டு இருக்காங்க.. போங்கடா..” ராணியின் சத்தத்தில் சுந்தரி கண்களை சிமிட்டிக் கொண்டு புரியாமல் நிற்க, இந்திரனோ அவளை பார்வையாலேயே விழுங்கிக் கொண்டிருந்தான்..
“போங்கடா.. போங்கன்னு சொல்றேன் இல்ல.. நல்லா பளிச்சுன்னு ஒரு பொண்னை பார்த்துடக் கூடாதே.. உடனே நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு வந்துடுவீங்களே.. போங்க.. போங்க.. இனிமே எவனையாவது இந்த வீட்டு முன்னால பார்த்தேன்.. அவ்வளவு தான் சொல்லிட்டேன்..” அவள் சத்தமிட,
“ஏய் ராணி.. இப்போ என்னாத்துக்கு இந்த சிலுப்பு சிலுப்பற.. யார் இந்தப் பொண்ணு? நம்ம இந்திரனை கட்டிக்கப் போற பொண்ணா? அப்படியே சினிமாக்காரி மாதிரி இல்ல இருக்கா..” இந்திரனை பல நாட்களாக தனது வலையில் விழ வைப்பதற்காக பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண் கேட்க,
“ஆமான்னா என்னடி செய்யப் போற? போவியா.. போங்கடி.. போய் வேலையைப் பாருங்க..” ராணி பதிலுக்கு சத்தமிடவும், அவர்கள் மெல்ல கலைந்துச் செல்ல, ‘வாந்துட்டாளுங்க..’ என்று முணுமுணுத்தபடி திரும்பிய ராணி, சிலையென நிற்கும் இந்திரனைப் பார்த்து, அவனது மண்டையில் தட்டினாள்.
“ஹான்.. ஹான்.. நான் எங்க இருக்கேன்..” அவனது கேள்வியில் தலையில் அடித்துக் கொண்டவள்,
“போடா.. போய் குளிச்சிட்டு சாப்பிட வா..” அவனை விரட்ட,
“திரும்பவும் குளிக்கனுமா?” என்றவனைப் பார்த்து சுந்தரி சிரிக்க, அவளைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றான். சுந்தரியின் அருகில் வந்து நின்ற ராணி மேலிருந்து கீழாக அவளைப் பார்த்தாள்.
அவள் அப்படி பார்க்கவும், “என்னக்கா எதுக்கு என்னை அப்படி பார்க்கறீங்க?” சுந்தரி கேட்க,
“இல்ல.. நீ என்ன வெளிநாட்டுலயா இருக்க இப்படி ஒரு உடுப்பை போட்டுட்டு இருக்க? கையும் இல்லாம.. காலும் முழுசா மறைக்காம.. உன்னோட வாழைத்தண்டு காலைக் காட்டிக்கிட்டு, சினிமாக்காரி மாதிரி இந்த கவுனைப் போட்டுக்கிட்டு நின்னா கும்பல் தான் கூடும்..” அவள் சொல்லி முடிப்பதற்குள்,
“இது நைட்டி..” அவளது பதிலில், கொடியில் தொங்கிக் கொண்டிருந்த தனது நைட்டியை எடுத்து அவளிடம் காட்டியவள்,
“இதுக்குப் பேரு தான் நைட்டி..” ராணி காட்டவும், அதை கண்களை விரித்துப் பார்த்தவள், தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.
“இனிமே இது போல ட்ரெஸ் எல்லாம் போடாதே தாயி.. உன்னை எங்களால காவல் காக்க முடியாது.. எவன் எப்போ பாய்வானுங்கன்னு யாருக்குமே தெரியாது.. போ.. போய் தூங்கற வேலையைப் பாரு..” ராணி அவளையும் விரட்ட, சுந்தரி வீட்டின் உள்ளே செல்லத் திரும்பினாள்.
“ஏய் புள்ள நில்லு.. சாப்பிட்டியா?” ராணியின் கேள்வியில் நின்றவள், ‘இல்லை’ என்று தலையசைக்க, ராணி அவளை முறைத்துக் கொண்டு நின்றாள்.
இதயம் தொடுவான்
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்நிருந் நாள் திருவோணம்.. ஓஹோ ஓஹோ
சுந்நரன் நீயும் சுந்நரி ஞானும்
சேர்ந்நிருந் நாள் திருவோணம்
ஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ
ஆ ஆ ஆஆஆ ஆஆஆஆஆ
அழகான இனிமையான பாடல் இசைத்துக் கொண்டிருக்க, அந்த பாடலுடன் சேர்ந்து இரண்டு கட்டைக் குரல்கள் ‘ஆ..ஆ..ஆ..ஆ..’ என்று ராகம் பாடிக் கொண்டிருக்க, ‘களுக்’ என்று ஒரு பெண் சிரிக்கும் சத்தம் கேட்டது.
அந்த சத்தத்தைக் கேட்டதும், காய்கறிகளை அடுக்கிக் கொண்டிருந்தவன், “எவடா அவ என் பாட்டைக் கேட்டு சிரிக்கிறவ?” என்றபடி நிமிர்ந்துப் பார்க்க, அங்கு தேவதை போல ஒரு பெண் நிற்கவும், அவனது கண்களை நம்ப முடியாமல் இமைத்தட்டி விழித்துப் பார்த்தான். பளிங்கினால் செய்த சிற்பம் போல, காலைப் பனியில் கன்னங்கள் சிவந்து, நின்றிருந்தவளைப் பார்த்தவனின் கண்கள் சாசர் போல விரிந்தது.
அந்தக் குரலுக்கு சொந்தக்காரியைப் பார்த்ததும், அவனுக்கு பின்னால் இருந்த ஒரு பெண்ணும் முன்னால் வந்து அவளை வேடிக்கைப் பார்க்க, அந்தப் பெண் இன்னமும் அந்தப் பாடலைக் கேட்டு குறும்பாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சில நொடிகள் பார்வையிலேயே கடக்க, அருகில் இருந்தவன் கடைக்காரனைத் தட்டவும், தலையை உலுக்கிக் கொண்டவன், “என்ன அம்மணி வேணும்? தக்காளி பிரெஷா இருக்கு.. இதை வாங்கி சாப்பிட்டேன்னு வையேன்.. உன்னோட பளபள கன்னம் கூட இன்னும் பளபளக்கும்.. இதோ வெண்டைக்காய் பிரெஷா இருக்கு பாரு.. இதை வாங்கிச் சாப்பிட்டா உன்னோட விரல் எல்லாம் வெண்டைக்காய்க்கு போட்டியா இருக்கும்.. இதோ பாரு காரட்டு.. இதை சாப்பிட்டா உனக்கு கண்ணு இன்னும் பளபளன்னு இருக்கும்.. ஏற்கனவே உன் கண்ணு பளபளக்குது தான்.. இன்னும் பளபளக்கும்.. நீ அந்த பியூட்டி பார்லருக்கு எல்லாம் போகவே வேண்டாம்.. உண்மையா.. இது எல்லாம் எங்க கடைல ஸ்பெஷலா கிடைக்கிற காய்கறி அம்மணி.. சொல்லு.. என்ன என்ன எவ்வளவு கிலோ வேணும்?” அந்தக் கடைக்காரன் விடாமல் பேசி வியாபாரத்தைப் பார்க்க,
“எனக்கு வீடு வாடகைக்கு வேணும்..” அவளது பதிலைக் கேட்டவன், ‘ஹான்..’ என்று பார்க்க, அவனுக்கு பின்னால் இருந்த பெண்ணோ, கடுப்புடன் அவளைப் பார்த்தாள்.
“என்னம்மா கண்ணு.. எங்களைப் பார்த்தா உனக்கு கேலி செய்யத் தோணுதா? நாங்க இங்க காய்கறி தான் வியாபாரம் செய்யறோம்.. வீடு எல்லாம் கட்டி விக்கற மாதிரி இருந்தா நாங்க ஏன் இங்க இருக்கப் போறோம்? போம்மா.. காலையிலேயே விளையாட ஆள் கிடைக்கலையோ?” என்று சத்தமிட, அந்தப் பெண் அங்கு தொங்க விடப்பட்டிருந்த போர்டைப் பார்த்தாள்.
அவளது அழகான மான் விழிகள் சென்ற திசையைப் பார்த்த அந்த கடையில் இருந்த வாலிபன், அங்கு அவளது பார்வை சென்ற திசையைப் பார்த்து, தலையில் அடித்துக் கொண்டு நெளிந்தான்.
அவனது அந்த நெளியலைப் பார்த்தவளுக்கு மேலும் சிரிப்பு பொங்க, உதட்டைக் கடித்து அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டிருக்க, அந்த போர்டை அவன் வேகமாக பிய்த்து எடுத்தான்.. அதே வெட்க முறுவலுடன், “இதோ இந்த மாமா தான் எழுதிச்சு.. நான் இல்ல.. எனக்கு எழுத படிக்க நல்லாவே தெரியும்..” அழகான பெண்ணின் முன்னால் தனது மானம் காற்றில் பறக்கவும், அருகில் இருந்த தாசை முறைத்துக் கொண்டே அவன் சொல்ல, அந்தப் பெண்ணவளின் புன்னகை மேலும் விரிந்தது..
அவளது புன்னகையைப் பார்த்தவன், அவளது அழகான ஆராஞ்சு போன்ற உதடுகளைப் பார்த்துவிட்டு, “இதை எப்படிங்க படிச்சீங்க?” என்று கேட்டு மீண்டும் அந்த போர்டைப் பார்க்க, அந்தப் பெண்ணோ அழகாக தோளைக் குலுக்கி, உதட்டைப் பிதுக்கிப் புன்னகைத்தாள்.
‘விட வடகக்கு..’ என்று எழுதி இருந்த அந்த போர்டைப் பார்த்தவன், அதை எடுத்து வைத்து விட்டு, அந்தப் பெண்ணைப் பார்க்க, அந்தப் பெண் கேள்வியாக அவனைப் பார்த்தாள்..
“எனக்கு ஒரு வீடு வாடகைக்கு வேணும்..” அவள் கேட்க, அவளையும் அந்த இடத்தையும் அந்த வாலிபன் ஒரு பார்வை பார்த்தான்.. மார்க்கெட் போன்ற அமைப்பில் இருந்த அந்த சிறிய குறுகலான சந்தில் இருந்தது அந்தக் காய்கறிக் கடை.. அருகில் இருக்கும் ஏரியாக்களில் காய் கனிகளை வாங்க மக்கள் இங்கு வருவது வழக்கம்.. அந்த மார்க்கெட்டின் முடிவில், இருந்த தெருக்களில் சிறிது சிறிதாக குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும், சிறிய அளவிலான கான்க்ரீட் வீடுகள் மட்டுமே நிரம்பி இருந்த இடம் அது.. பொதுவாக அந்த இடத்தில் கடை வைத்திருந்தவர்களும், அருகில் இருக்கும் ஏரியாக்களிலும், பெரிய கடைகளுக்கும் வேலைக்குச் செல்பவர்கள் தான் அங்கு வசித்து வந்தனர்.. தெருவில் ஆங்காங்கு குப்பைக் கூளங்களும், காய்கறிக் கழிவுகள், மாமிசங்களின் கழிவுமாக, இருந்த அந்த இடத்தில் வீடு கேட்டு வந்திருக்கும் அந்தப் பெண்ணை அவன் அதிசயமாக பார்க்காமல் போனால் தானே அதிசயம்..
“இருக்கும்மா.. ஆனா.. அது நீங்க தங்கறது போல இருக்காதே.. ரொம்ப சின்ன வீடு.. பெட்ரூம் கூட இருக்காதே.. ஒரு ரூம் ஒரு சமையல் ரூம் தான் இருக்கும்..” அவளைத் தலை முதல் கால் வரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் சொல்ல, அந்தப் பெண் அவனை நிராசையாகப் பார்த்தாள்.
“சின்னதா இருந்தாலும் பரவால்ல.. நான் மட்டும் தானே..” அவள் முகம் சுண்டக் கேட்க,
“அது உங்களுக்கு சரிப்படாதுங்க.. உங்களைப் பார்த்தாலே பெரிய இடத்து பொண்ணு போல இருக்கீங்க.. அந்த வீடு உங்களுக்கு வசதி போதாது..” அந்த வாலிபன் மறுத்துக் கூறினான்.
அவன் மறுக்கவும், அந்தப் பெண் நகரப் போக, “டேய்.. கொஞ்சம் பேசாம இரு..” அந்தக் கடைக்காரனிடம் நின்றிருந்த பெண் அவனை அடக்கிவிட்டு,
“ஏம்மா.. நில்லும்மா.. வீடு இருக்கு.. ஆனா.. அவன் சொன்னது போல சின்னதா தான் இருக்கு.. உனக்கு உட்கார சேர்.. டேபிள் எல்லாம் இருக்கு.. வாடகை ரெண்டாயிரம்.. அட்வான்ஸ் பத்தாயிரம்.. வீட்டுக்கு உள்ளேயே பாத்ரூம் எல்லாம் இருக்கு..” அந்தப் பெண் ராணி சொல்ல, வாடகைக்கு கேட்ட பெண்ணோ எல்லாவற்றிற்கும் சரி என்று தலையசைத்தாள்..
“எனக்கு எல்லாமே ஓகே.. வீடு எங்க இருக்கு?” அவள் கேட்க,
“யக்கா.. வேணாம்க்கா.. அந்தப் பொண்ணைப் பார்த்தா பெரிய இடம் போல இருக்கு.. அந்த வீடு எல்லாம் செட் ஆகாது.. ஒரே ஒரு ரூம் கூட ஒரு சமையல் ரூம்.. அது எப்படி இவங்களுக்கு சரிபடும்?” அந்த வாலிபன் கேட்க, ராணி அவனை முறைத்தாள்.
“இப்படியே நீ சொல்லிக்கிட்டு இருந்தா யாருமே வாடகைக்கு வர மாட்டாங்க.. இப்போப் பாரு எல்லாத்துக்கும் இந்த பொண்ணு சரின்னு சொல்லுது.. பேசாம வாடகைக்கு விடுவியா.. அந்தப் பொண்ணுக்கு என்ன சவுகரியம் வேணுமோ அதை நாம செஞ்சித் தரலாம்..” அவளை எப்படியாவது அங்கு வாடகைக்கு அமர்த்திவிடுவது என்ற முடிவுடன் ராணி பேச, அந்த வாலிபன் இந்திரன் அவளைப் பார்த்தான்..
அவள் உடுத்தி இருந்த சுடிதாரும், அவள் கையில் இருந்த கடிகாரமும், அவளது விரல் நகங்களை வளர்த்திருந்த நேர்த்தியும், அதன் மேல் தீட்டப்பட்டிருந்த நெயில் பாலிஷும், அவள் காலில் அணிந்திருந்த காலனி, அவள் காதுகளில் மின்னிக் கொண்டிருந்த சிறிய அளவிலான வைர காதணி வேறு அவன் கண்ணில் பட, அவனுக்கு சர்வ நிச்சயமாகத் தெரிந்தது அவள் பெரிய இடத்துப் பெண் என்று..
ராணி அவனது முகத்தையேப் பார்க்க, இந்திரனின் மனதினில் பலவேறு எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது.. அவள் இது போல ஒரு இடத்தில் வந்து வீடு கேட்பதற்கு ஏதாவது காரணம் இருக்குமோ என்று அவனது உள்ளம் எண்ணத் துவங்கியது.. சினிமாவில் காட்டுவது போல, ஏதேனும் முறைப் பையன் இருந்து.. தாய் தந்தை இல்லாத பெண்ணை கொடுமைப்படுத்தி கட்டாயத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருக்க, அது பிடிக்காமல் ஓடி வந்து இங்கு ஒளிந்து கொள்ள நினைக்கிறாளோ? ஒருவேளை அவளுக்கு வீட்டில் பிடிக்காத திருமணம் செய்ய எண்ணுகிறார்களோ? இல்லை அவளது உயிருக்கு ஆபத்தோ?” என்றெல்லாம் நினைத்துக் கொண்டவன்,
“சரி.. வாங்க வீட்டை காட்டறேன்.. ஆமா.. உங்க பேர் என்ன? எந்த ஊர்?” அவன் கேட்க,
“என் பேர் சுந்தரி.. ஊர் எல்லாம் வேண்டாமே.. ஹான்.. அப்பறம் ரொம்ப தேங்க்ஸ்.. வீடு வாடகைக்கு தர ஓகே சொன்னதுக்கு..” என்றவள்,
“எனக்கு இன்னொரு ஹெல்ப் வேணுமே..” அவள் கேட்க, அவன் கேள்வியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே,
“எனக்கு வீட்டுக்கு தேவையான திங்க்ஸ் எல்லாமே வாங்கணும். கொஞ்சம் எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா? இங்க எனக்கு யாரையுமே தெரியாது.. என்ன என்ன வாங்கணும்ன்னு கூடத் தெரியாது..” அவள் கேட்கவும் பட்டென்று இந்திரன் நிற்க, சுந்தரி நின்று அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“எதை நம்பிம்மா இப்படி வந்திருக்க? ஏதோ கடவுள் அருள் என்கிட்ட வீடு கேட்ட.. இல்ல வேற மாதிரி ஆளுன்னா என்ன ஆகி இருக்கும்?” திகைப்புடன் அவன் கேட்க, சுந்தரி புன்னகைத்தாள்..
“காலைல அஞ்சு மணிக்கு நீங்க கடை திறந்ததுல இருந்து, ஓரமா நின்னு உங்களை நான் பார்த்துட்டு இருந்தேனே.. நீங்க பாட்டுக்கு நீங்க உண்டு உங்க வேலை உண்டுன்னு இருந்தீங்க.. அதனால தான் உங்களை வந்து கேட்டேன். எத்தனை லேடீஸ் வந்து போனாங்க.. ஒருத்தரையும் நீங்க தப்பான பார்வை பார்க்கலையே” என்றவள், அவன் திகைப்புடன் பார்க்கவும்,
“பணம் எல்லாம் இருக்கு.. ஏமாத்த மாட்டேன்..” வாக்கு போல சொல்ல, இந்திரன் மறுப்பாக தலையசைத்தான்..
“இல்லம்மா.. நான் அதுக்காக பார்க்கல.. உன்னைப் பார்த்தா பெரிய இடத்து பொண்ணு போல இருக்கு.. உனக்கு எதுக்கு இந்த இடத்துல வாழ்க்கைன்னு யோசிச்சேன்.. அது தான்.” என்றவன்,
“சரி வா.. உனக்குத் தேவையானது எல்லாம் வாங்கித் தரேன்..” என்று அவளை நேராக அழைத்துக் கொண்டு ஒரு பாத்திரக்கடைக்கு சென்றான். அங்கு தேவனையான சில பாத்திரங்களை வாங்கிக் கொண்டு, அவளை அழைத்துக் கொண்டு அவனுடைய வீட்டிற்குச் சென்றான்..
சிறிது சிறிதாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தது போல இருந்த, அந்த லைன் வீடுகள் இருந்த இடத்தில், இரண்டு வீடுகள் ஒரே போலவே இருக்க, அதைச் சுற்றி சிறு மதில் சுவர் இருந்தது.. அங்கிருந்த வீடுகளில் அந்த வீடு கொஞ்சம் பார்க்கவும், சுத்தமாகவும் இருக்க, சுந்தரி உள்ளுக்குள் ஆஸ்வாசமாக மூச்சை விட்டுக் கொண்டாள். வீடு கேட்டு இங்கு வந்து விட்டாலும், எப்படி இப்படி ஒரு இடத்தில் வசிக்கப் போகிறோம் என்று அவளுக்கு சிறிது மலைப்பாகவே இருந்தது..
“இது தான் என்னோட வீடு.. இந்த இந்திரனோட மாளிகை.. சொர்க்க லோகம்.. என்ன பிடிச்சிருக்கா? உனக்கு இந்த வீட்டை தான் வாடகைக்கு விடப் போறேன்..” என்றபடி ஒரு சிறிய கேட்டைத் திறந்து அவன் உள்ளே செல்ல, அங்கு இருந்த இடத்தில் சிறிது சிறிதாக பூந்தொட்டிகள் அடுக்கப்பட்டு இருக்க, அதை அதிசயமாக பார்த்துக் கொண்டே சுந்தரி அவனைப் பின்தொடர்ந்தாள்.
“ஆமா.. சுந்தரி.. மனசு ஆறாம கேட்கறேன்.. உனக்கு அப்படி என்ன பிரச்சனை இந்த மாதிரி ஒரு இடத்துல வந்து தங்க ரெடியா இருக்க? சொன்னா என்னால முடிஞ்சது செய்வேன் இல்ல..” இந்திரன் கேட்க, அவள் மெல்ல மறுப்பாக தலையசைத்து அந்த வீட்டிச் சுற்றிப் பார்த்தாள்..
வீட்டிற்கு வாங்கிக் கொண்டு வந்த சாமான்களை அவன் முன்னே இருந்த இடத்தில் வைத்து விட்டு, வெளியில் இருந்த துடப்பத்தை எடுத்து வீட்டை சுத்தம் செய்யத் துவங்க, அவளோ அவனுக்கு உதவி செய்யும் எண்ணமே இல்லாமல், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கால் மீது காலைப் போட, அந்த சேர் நொடித்துக் கொண்டு சரிந்தது..
“அம்மா..” என்ற அலறல் கேட்கவும், இந்திரன் அவசரமாக திரும்பிப் பார்க்க, கீழே சரிந்துக் கிடந்தவளோ, வலியில் முனகிக் கொண்டிருந்தாள்..
அவளை கைக் கொடுத்து எழுப்பி விட்டவன், “பார்த்து உட்காரலாம்ல.. அது பழைய காலத்து சேர்.. எப்படி உடைஞ்சு போச்சு பாரு..” உச்சுக் கொட்டிக் கொண்டு அதை வருத்தமாக பார்த்துக் கொண்டே கேட்ட அவனது கேள்வியில் அவனை முறைத்தவள்,
“ஹான்.. எனக்கு வேண்டுதல்.. உங்க வீட்டுக்கு வந்த உடனே உங்க பொக்கிஷ சேரை உடைக்கணும்ன்னு.. என்னோட இடுப்பு தான் உடைஞ்சு போச்சு.. அதைப் பத்தி கவலைப்படாம.. இந்த இத்துப் போன சேரைப் பத்தி கவலைப்படற? உனக்கு ரொம்ப கொழுப்பு தான்..” கோபமாக அவனிடம் கேட்டவள், அந்த சேரை எட்டி உதைக்க, அது அவளது காலைப் பதம் பார்த்தது..
‘ஆ..அ.. அம்மா..’ காலை பிடித்துக் கொண்டு அவள் அலற, அதைப் பார்த்து சிரித்த இந்திரன், “உன் டான்ஸ் ரொம்ப நல்லா இருக்கே.. இப்படியே நீ ஆடினா ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து பார்க்கலாம் போல இருக்கே..” அவளை கேலி செய்தவன்,
அவள் முறைத்து, “யோவ்.. என் காலு வலிக்குதுய்யா.. நீ சிரிச்சிட்டு இருக்க?” கோபமாக அவள் கேட்க,
“உனக்கு ஒரு உண்மை தெரியுமா? அது ஆவி வந்த சேர்.. அதோ அங்க இருக்கற டேபிள் கூட அது தான்.. எங்க அம்மாவோட அம்மா ஆசையா வாங்கிப் போட்டது.. அதை நானும் எங்க அக்காவும் எத்தனையோ கட்டு கட்டி ஒட்டி வச்சிருந்தோம்.. அதைப் போய் உடைச்சிட்டு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இப்படி பேசினா... பார்த்தியா? அதைத் திட்டினதும் உன்னை எப்படி பழி வாங்கிருச்சு பாரு..” கேலியுடன் அதை எடுத்து வெளியில் போட்டவன்,
“எங்க அக்கா பார்த்தா கண்ணீர் விட்டு அழும்.. அதை எப்படி சமாளிக்க போறேன்னு தெரியல..” சோகமாக சொல்ல, அவனது முகத்தைப் பார்த்தவள் சிரிக்கத் துவங்கினாள்.
அவள் சிரிக்கவும், அவனுக்கும் தான் சொன்னதை நினைத்து சிரிப்பு தோன்ற, “நீ வேணா சாயந்திரம் எங்க அக்கா கொடுக்கற பில்ட்டப்பை பாரு.. நான் சொன்னது எவ்வளவு உண்மைன்னு..” என்று சொல்லிக் கொண்டே, வேகமாக வீட்டை சுத்தம் செய்தவன், சாமான்களை அடுப்படியில் கொண்டு வைத்தான்.
“சரி.. அட்வான்ஸ் கொடு..” அவன் கேட்க, தனது பையில் இருந்த ஒரு பர்சில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டு,
“அப்படியே எனக்கு பார்னிச்சர் சிலது எல்லாம் வாங்கணும்.. கொஞ்சம் அதுக்கும் ஹெல்ப் பண்ணுங்களேன்..” கண்களைச் சுருக்கி கெஞ்சலாகக் கேட்க, இந்திரன் அந்த அழகில் ஒரு நிமிடம் சிலையானான்.
“இந்தர்..” சுந்தரி அவன் முகத்தின் முன் சொடக்கிட்டு அவள் அழைக்க,
தலையை உலுக்கி தன்னை சுதாரித்தவன், “என்ன வாங்கணும்?” என்று கேட்க,
“டிவி.. பிரிட்ஜ்.. ஏசி.. கட்டில்.. வாக்வம் கிளீனர்.. ஓவன்.. அப்பறம் சிமினி.. ஃபேன்.. பாத்ரூம்க்கு ஹீட்டர்.. வாஷிங் மெஷின்...” அவளது பட்டியல் நீண்டுக் கொண்டே போக, அவளது பட்டியலைக் கேட்டவன் தலையில் கை வைத்து அமர்ந்தான்..
“ஏன்? வை யு ஆர் சிட்டிங் லைக் திஸ்?” அவள் கேட்க, அவளைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டவன்,
“அம்மாடி தாயே.. வந்த உடனே எங்க வீட்டு ஆவி வந்த சேரை உடைச்ச.. இப்போ ஏசி எல்லாம் போட்டு வீட்டையே உடைக்கப் பார்க்கறியே இது நியாயமா? சரி.. நீ சொல்ற பொருளை எல்லாம் கொண்டு வந்து வச்சிட்டு நீ எங்க புழங்கப் போற? நடக்க இடம் வேண்டாமா?” அவன் கேட்கவும், சுற்றி பார்வையை ஒட்டிவளுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது..
தனது கண்ணீரை மறைக்க அவள் தலையை குனிந்துக் கொள்ளவும், “பிரிட்ஜ் வேண்டாம்.. தினமும் நான் காலையில புது காய்கறிங்க மூட்டை வந்த உடனே கொடுத்து விடறேன்.. அப்பறம் பால் கூட அப்படி தான்.. காலையில புது பால் வந்த உடனே கொண்டு வந்து தரேன்.. எக்ஸ்ட்ரா பால் எங்க வீட்டு ப்ரிட்ஜ்ல இருக்கும்.. தேவைன்னா அதை உபயோகப்படுத்திக்கோ.. எங்க வீட்ல மாவைத் தவிர அதுல எதுவும் இருக்காது.. அதனால உனக்கு அது தேவைப்படாது.. வேற உனக்கு கீழ படுத்து பழக்கம் இல்ல போல.. அதனால ஒரே ஒரு சின்ன கட்டில் வாங்கலாம்.. அது தான் அடுப்பு இருக்கே.. அப்பறம் எதுக்கு உனக்கு ஓவன்.. இதை வச்சு சமாளி.. என்ன?” அவள் கண்கள் கலங்கவும், அவன் குழந்தைக்கு சொல்வது போல சொல்ல, சுந்தரி மண்டையை உருட்டினாள்.
“குளிச்சிட்டியா? இல்ல எங்க வீட்ல குளி.. நாம போயிட்டு வருவோம்.. அதுக்குள்ள நான் இந்த வீட்ல இருக்கற பாத்ரூம சுத்தம் செய்து வைக்கிறேன்” அவன் சொல்ல,
“இல்ல.. நான் வீட்டுல இருந்து வரும்போதே குளிச்சிட்டு வந்துட்டேன்.. நாம போகலாம்..” என்றவள், தனது துணிப்பையை அங்கிருந்த அலமாரியில் வைத்து விட்டு தயாராக,
“ஒரு முடிவோட தான் வந்திருக்க?” என்று உதட்டைப் பிதுக்கியவன், பாத்ரூமை அவசரமாக சுத்தம் செய்துவிட்டு வர, சுந்தரி அவனைப் பார்த்து முகம் சுளித்து அசையாமல் நிற்க,
“என்ன போக வேண்டாமா?” அவன் புரியாமல் கேட்டான்.
“பாத்ரூம் எல்லாம் கிளீன் பண்ணிட்டு அப்படியே கிளம்பறீங்க? போய் குளிச்சிட்டு வாங்க.. அப்போ தான் நான் உங்க கூட வருவேன்..” அடமாக நிற்க, இந்திரன் அவளைப் பார்த்து முறைத்தான்.
“என்னது? நான் குளிக்கணுமா? நான் எல்லாம் ஒரு தடவ குளிக்கிறதே பெரிய விஷயம்.. இதுல இப்படி எல்லாம் பேசினா.. நான் பாட்டுக்கு போயிடுவேன்.. நீயாச்சு உன் வேலையாச்சு..” என்றவன், அங்கிருந்து நகரப் போக, அந்த வீட்டில் மிஞ்சி இருந்த ஒட்டுப் போட்ட டேபிளின் மீது அவள் ஏறி அமர, அவள் என்ன செய்கிறாள் என்று எட்டிப் பார்த்த இந்திரன், அவசரமாக அவள் அருகில் ஓடி வந்தான்.
“சுந்தரி.. சுந்தரி.. உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்.. கீழ இறங்கிடு தாயே.. அதுவும் உடைஞ்சா நான் என்ன ஆகறது?” அவன் கெஞ்ச, சுந்தரி அசையாமல் அமர்ந்திருக்க,
“இப்போ என்ன நான் குளிக்கணும்.. அவ்வளவு தானே.. இறங்கு.. நான் வரேன்..” என்றவன், அவசரமாக குளித்துவிட்டு வர, சுந்தரி தனது பையுடன் தயாராக நின்றாள்.
அவள் அவ்வாறு நிற்கவும், கடுப்பானவன், “இங்கப் பாரு சுந்தரி.. ஏதோ பெரிய இடத்து பிள்ள நீ.. என்ன சூழ்நிலையோ சந்தர்ப்பமோ இப்படி வந்து இங்க இருக்கறியேன்னு இறங்கிப் போறேன்.. வேற யாராவது இப்படி செஞ்சிருந்தாங்கன்னு வையு.. அடிக்கிற அடில செவுலு பேந்திரும்.. இதோட இதை நிறுத்திக்கோ.. ஜாக்கிரதை..” அவளை மிரட்டிவிட்டு முன்னால் நடக்க, சுந்தரி அவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.
அவள் சொன்னது போலவே, ஒரு கட்டில், சேர், ஃபேன், வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை வாங்கி, கையேடு ஒரு வண்டியைப் பிடித்து எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தனர்..
வரும் வழியிலேயே அவளுக்கான உணவை அவள் வாங்கிக் கொள்ள, இந்திரன் அவளைப் புதிதாய் பார்த்துக் கொண்டே மீண்டும் அவளை வீட்டிற்கு கொண்டு விட்டான்..
“ரொம்ப தேங்க்ஸ் இந்தர்.. ஐ வில் மேனேஜ்..” அவள் புன்னகைக்க, இந்திரன் அவளைப் பார்த்து புன்னகைத்து,
“சரி சுந்தரி.. நான் கடைக்கு போயிட்டு வரேன்.. இன்னைக்கு எனக்கு பாதி பொழுது உன்னோட போச்சு.. மீதி வேலையைப் பார்க்கணும்.. அக்கா சாயந்திரம் வரும்.. ஏதாவது வேணும்ன்னா அதுகிட்ட கேட்டுக்கோ..” என்று கூறிவிட்டு, அவன் கடைக்குக் கிளம்ப, அந்த கட்டிலில் விழுந்தவள், தன்னையும் மறந்து நன்றாக உறங்கத் துவங்கினாள்.
மாலையில் டீ போட்டு எடுத்துக் கொண்டு செல்வதற்காக வந்த ராணி, வீட்டின் கதவு திறந்திருக்கவும், உள்ளே மெல்ல தலையை மட்டும் நீட்டிப் பார்க்க, ஹாலில் இருந்த கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்தவள், ஒரு பெருமூச்சுடன், கதவை அடைத்துவிட்டு, டீயை எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்றாள்.
டீயை கப்பில் ஊற்றி இந்திரனிடம் நீட்டிக் கொண்டே, “ஏண்டா தம்பி.. அந்தப் பொண்ணு ரொம்ப வசதியான வீட்டு பொண்ணு மாதிரி தெரியுது.. வீட்டைக் கூட பூட்டிக்காம படுத்து தூங்குது.. அது கூட செஞ்சுப் பழக்கம் இல்லையோ?” சந்தேகமாகக் கேட்க,
“எனக்கு தெரிஞ்சு அவங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா இருக்கும்.. வீட்டுக்கு என்ன சாமான் வேணும்ன்னு கூடத் தெரியல.. அதை விட இன்னும் மளிகை சாமான் எதுவும் வாங்கல.. அது வாங்கணும்ன்னு கூடத் தெரியுமான்னு எனக்குத் தெரியல.. நல்ல சுகமா வளர்ந்தி இருப்பாங்களா இருக்கும்.. என்ன பிரச்சனையோ.. நம்ம ஏரியால வந்து தங்கி இருக்கா.. நான் பதமா கேட்டுக் கூடப் பார்த்துட்டேன்.. ஒண்ணும் சொல்ல மாட்டேங்குது.. ஆனா.. நல்ல பொண்ணு..” இந்திரன் சொல்லவும், ராணி அவனை சந்தேகமாகப் பார்த்தாள்.
“என்ன? என்ன பார்வை?” அவன் கேட்க, ராணி ஒன்றும் இல்லை என்பது போல தலையசைக்க,
“அக்கா.. ஒண்ணு தெரியுமா? நம்ம இடத்துல காய் வாங்கவே பெரிய வீட்ல எல்லாம் டிரைவரைத் தான் அனுப்புவாங்க.. அந்தப் பொண்ணு இந்த இடத்துல வந்து இருக்கறேன்னு சொன்னதே நிஜமா பெரிய விஷயம் தானே.. அதுவும் நம்ம வீட்டை எல்லாம் பார்த்து அவங்க முகத்தைக் கூட சுளிக்கல தெரியுமா? கொஞ்சம் அந்தப் பொண்ணை பார்த்துக்கோக்கா.. சமைக்க எல்லாம் தெரிஞ்சு இருக்காதுன்னு நினைக்கிறேன்.. அவங்க மேல ஒரு கண்ணு வச்சிக்கோ.. நாளைக்கு ஏதாவதுன்னா நாம தான் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.. நீ பாட்டுக்கு வாடகைக்கு வீட்டை விட ஒத்துக்கிட்ட..” என்றவன், தனது வேலையை கவனிக்கத் துவங்கினான்.
“என்ன அந்தப் பொண்ணு மேல பாசம் எல்லாம் ரொம்ப பொங்குது?” ராணி கேலியாகக் கேட்க,
“அவளோட நிலைமை என்னவோ அப்படி வளர்ந்துட்டு இருங்க வந்து இருக்கா.. நம்மளைப் போல சேத்துல வளர்ந்திருந்தா நான் கவனிச்சு இருக்க மாட்டேன்.. நகத்துல தூசித் தும்பு கூட பாடாம வளர்ந்திருக்கும் போல.. என்ன கஷ்டமோ என்னவோ போ.. இந்த இடத்துல வந்து இருக்கு.. அதுக்குத் தான் சொன்னேன்.. நீயா கற்பனை கோட்டை எல்லாம் கட்டிக்காதே..” என்றவன், காய்களை எடுத்து அடுக்கத் துவங்கினான்.
“ராணி.. அவனைப் பத்தி உனக்குத் தெரியாதா? அவன் சைட் தான் அடிப்பான்.. இப்படி எல்லாம் எந்தப் பொண்ணைப் பத்தியாவது புகழ்ந்து பேசி இருக்கானா? என்னவோ வேலைப் பொழப்பு இல்லாம.. போ.. போய் வேலையைப் பாரு.” தாஸ் தனது மனைவியிடம் சொல்லவும், நொடித்துக் கொண்டவள், மளிகைக் கடையை கவனிக்கத் துவங்கினாள்..
தேவேந்திரன் என்கிற இந்திரன்.. உழைப்பும், தன்னம்பிக்கையும் மிக்க இளைஞன்.. அவனது அன்னை சிறிய அளவில் பார்த்துக் கொண்டிருந்த காய்கறிக் கடையை அவனது உழைப்பிலும், பேச்சுத் திறனிலும் நல்லமுறையில் விரிவுப்படுத்தி, இன்று அந்த இடத்திலேயே பெரிய கடையாக அவன் உருவாக்கி வைத்திருந்தான். அதோடு மட்டுமின்றி இளநிலை பட்டப்படிப்பையும் அவன் முடித்திருந்தான்..
வாடகைக்கு இருந்த கடையை சொந்த இடமாகவும் அவன் மாற்றிக் கொண்டு அவன் விரிவுப்படுத்தி இருந்தான். அதோடு மட்டும் இல்லாமல் சிறுகச் சிறுக பணம் சேர்த்து அந்த இரண்டு வீடுகளையும் வாங்கியவன், மேலும் தனக்கு சொந்தமாக, அருகில் இருந்த ஏரியாவில் ஒரு வீடு மனையையும் வாங்கிப் போட்டிருந்தான். தனக்கு ஒரே துணையான தனது உடன் பிறந்தவளிடம் மிகுந்த பாசம் வைத்திருந்தவன், அவனது கடையில் வேலை செய்துக் கொண்டிருந்த தாசையே அவர்கள் விரும்புவது தெரிந்து, நல்ல முறையில் திருமணம் செய்து தன்னுடன் வைத்துக் கொண்டான்..
மிகுந்த அன்பானவன்.. அதே நேரம் அவனது கண்டிப்பும் அந்த இடத்தில் இருந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.. கடனை அறவே வெறுப்பவன்.. அவனும் கடன் வாங்க மாட்டான்.. அந்த இடத்தில் வசிப்பவர்கள் அவனிடம் வைத்திருக்கும் கடனையும் சொன்ன தேதியில் கறாராக வசூல் செய்தும் விடுவான்.. சிறிய அளவில் அந்த இடத்தில் வசிக்கும் மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தான்.. இப்படியாக அவனது வரவுகள் இருக்க, செலவுகளை மிகுந்த சிக்கனமாக பார்த்துக் கொண்டான்.
மாலை வேளையில் கூட்டம் நெரிக்க, காய் விற்பனை அமோகமாக நடந்தேறியது.. இரவு கடையை அடைத்துவிட்டு, மிச்சம் இருக்கும், மறுநாள் வரை தாங்காது என்பது போல இருந்த காய்களை எடுத்துக் கொண்டு மூவரும் வீட்டிற்கு கிளம்ப, “அந்தப் பொண்ணு சமைச்சு சாப்பிட்டு தூங்கி இருக்கும் இல்ல தம்பி.. இவ்வளவு நேரம் எல்லாம் முழிச்சு அதுக்கு பழக்கமே இருக்காது இல்ல..” வீட்டிற்கு கிளம்பவும், ராணிக்கு சுந்தரியின் நினைவு வந்தது..
இந்திரன் திரும்பி அவளை அமைதியாகப் பார்க்க, “இருக்கும்.. இருக்கும்.. ஆமா.. நைட்டுக்கு என்ன சாப்பிடுச்சோ தெரியல.. நீ வேற மளிகை சாமான் எதுவும் இல்லன்னு சொன்னியே..” ராணி கவலையாகக் கேட்க, இந்திரனும் அதே யோசனையுடன் வீட்டிற்கு வந்தான்..
அவளைப் பற்றி நினைத்துக் கொண்டே வீட்டை நெருங்க, வீட்டின் முன்பு பலர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, இந்திரனும், ராணியும் அவசரமாக வீட்டிற்கு ஓடி வந்தனர்...
அங்கு அவர்கள் கண்ட காட்சியில் இந்திரன் கண்கள் விரிய நிற்க, ராணி அவசரமாக ஒரு துவாலையை எடுத்து சுந்தரியின் மேல் போட்டுவிட்டு, அங்கிருந்தவர்களை நோக்கித் திரும்பியவள், “ஹே.. இங்க என்ன கும்பல் கூடிக் கிட்டு நிக்கறீங்க? போங்கடி.. போய் வீட்ல பொழப்பு இருந்தா பாருங்க.. வந்துட்டாளுங்க பொம்மையை வேடிக்கைப் பார்க்கற மாதிரி பார்க்க.. யோவ்.. அங்க எவன்டா அவன் மறைஞ்சு நின்னு வேடிக்கைப் பார்க்கறது.. இங்க என்ன பத்து மணிக் காட்சியா காட்டிக்கிட்டு இருக்காங்க.. போங்கடா..” ராணியின் சத்தத்தில் சுந்தரி கண்களை சிமிட்டிக் கொண்டு புரியாமல் நிற்க, இந்திரனோ அவளை பார்வையாலேயே விழுங்கிக் கொண்டிருந்தான்..
“போங்கடா.. போங்கன்னு சொல்றேன் இல்ல.. நல்லா பளிச்சுன்னு ஒரு பொண்னை பார்த்துடக் கூடாதே.. உடனே நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு வந்துடுவீங்களே.. போங்க.. போங்க.. இனிமே எவனையாவது இந்த வீட்டு முன்னால பார்த்தேன்.. அவ்வளவு தான் சொல்லிட்டேன்..” அவள் சத்தமிட,
“ஏய் ராணி.. இப்போ என்னாத்துக்கு இந்த சிலுப்பு சிலுப்பற.. யார் இந்தப் பொண்ணு? நம்ம இந்திரனை கட்டிக்கப் போற பொண்ணா? அப்படியே சினிமாக்காரி மாதிரி இல்ல இருக்கா..” இந்திரனை பல நாட்களாக தனது வலையில் விழ வைப்பதற்காக பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண் கேட்க,
“ஆமான்னா என்னடி செய்யப் போற? போவியா.. போங்கடி.. போய் வேலையைப் பாருங்க..” ராணி பதிலுக்கு சத்தமிடவும், அவர்கள் மெல்ல கலைந்துச் செல்ல, ‘வாந்துட்டாளுங்க..’ என்று முணுமுணுத்தபடி திரும்பிய ராணி, சிலையென நிற்கும் இந்திரனைப் பார்த்து, அவனது மண்டையில் தட்டினாள்.
“ஹான்.. ஹான்.. நான் எங்க இருக்கேன்..” அவனது கேள்வியில் தலையில் அடித்துக் கொண்டவள்,
“போடா.. போய் குளிச்சிட்டு சாப்பிட வா..” அவனை விரட்ட,
“திரும்பவும் குளிக்கனுமா?” என்றவனைப் பார்த்து சுந்தரி சிரிக்க, அவளைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றான். சுந்தரியின் அருகில் வந்து நின்ற ராணி மேலிருந்து கீழாக அவளைப் பார்த்தாள்.
அவள் அப்படி பார்க்கவும், “என்னக்கா எதுக்கு என்னை அப்படி பார்க்கறீங்க?” சுந்தரி கேட்க,
“இல்ல.. நீ என்ன வெளிநாட்டுலயா இருக்க இப்படி ஒரு உடுப்பை போட்டுட்டு இருக்க? கையும் இல்லாம.. காலும் முழுசா மறைக்காம.. உன்னோட வாழைத்தண்டு காலைக் காட்டிக்கிட்டு, சினிமாக்காரி மாதிரி இந்த கவுனைப் போட்டுக்கிட்டு நின்னா கும்பல் தான் கூடும்..” அவள் சொல்லி முடிப்பதற்குள்,
“இது நைட்டி..” அவளது பதிலில், கொடியில் தொங்கிக் கொண்டிருந்த தனது நைட்டியை எடுத்து அவளிடம் காட்டியவள்,
“இதுக்குப் பேரு தான் நைட்டி..” ராணி காட்டவும், அதை கண்களை விரித்துப் பார்த்தவள், தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.
“இனிமே இது போல ட்ரெஸ் எல்லாம் போடாதே தாயி.. உன்னை எங்களால காவல் காக்க முடியாது.. எவன் எப்போ பாய்வானுங்கன்னு யாருக்குமே தெரியாது.. போ.. போய் தூங்கற வேலையைப் பாரு..” ராணி அவளையும் விரட்ட, சுந்தரி வீட்டின் உள்ளே செல்லத் திரும்பினாள்.
“ஏய் புள்ள நில்லு.. சாப்பிட்டியா?” ராணியின் கேள்வியில் நின்றவள், ‘இல்லை’ என்று தலையசைக்க, ராணி அவளை முறைத்துக் கொண்டு நின்றாள்.
இதயம் தொடுவான்