Soundarya Krish
முதலமைச்சர்
அவர்களின் பந்தயத்தைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்தான் விதுரன். அனைவரும் அவனை ஒருமாதிரி பார்க்க,"சாரி ட்யூட்ஸ்! யூ ஜஸ்ட் கேரி ஆன்!" என்று சமாதானம் சொல்லிவிட்டுச் சிரிப்பை அடக்கியவாறே ராஜாவைப் பார்க்க, மீண்டும் வெடித்து வந்தது சிரிப்பு.
ராஜாவோ அவனைப் பரிதாபமாகப் பார்த்தான். அவன் பார்வையில் தன்னை அடக்கிய விது,"சாரி மச்சான்! நான் உன்னை அந்த கெட்டப்பில் நினைத்து பார்த்துட்டேன்!"என்றான் பாவம் போல் முகத்தை வைத்து.
அவன் பாவனையில் ராஜாவிற்கே சிரிப்பு வந்தது, அதை மறைத்தவாறு,"மச்சான்!" என்று அரவிந்தையும் அவன் கையிலிருந்த ரேஸரையும் கண்களால் காட்டினான் விதுரனிடம். அதை உணர்ந்த விதுரனும் தான் பார்த்துக்கொள்வதாகச் சமிக்ஞை செய்தான் கண்ணை மூடி.
இவர்கள் கூத்தைக் கவனித்த அரவிந்தோ,'இது வேலைக்காகாது!' என்றெண்ணி மீண்டும் ரேசருடன் ராஜாவை நெருங்கி அவன் மீசையில் வைத்த நேரம், நான்கு ஷார்ட் கிளாஸ்கள் பறந்து வந்து அவன் கைகளிலேயே விழுந்தது. அனைவரும் திரும்பிப் பார்த்து அதிர்ந்தனர்.
விதுரன் தான் அந்த நான்கு ஷாட் கிளாஸையும் குடித்துவிட்டு எறிந்திருந்தான். பக்கத்தில் அவர்களுடன் பணியாற்றும் முகேஷ் என்பவன் பாவமாக அழுவது போல் அமர்ந்திருந்தான். ஆம் முகேஷ் ஆசையாக 'பட்டியாலா ஷாட்' அடிக்க வைத்திருந்த வோட்கா கலந்த காக்டெய்லை தான் நம் விதுரன் எடுத்துக் குடித்து வீசினான்.
"டேய்! மாப்ள என்னடா இப்படி பண்ணிட்ட?!!"
ராஜாவின் கேள்வியில் திகைத்த விதுரன்,"உனக்காகத் தான் மாப்ள குடிச்சேன்!"
"டேய் விது பெட்டே பீர்க்கு தான். நீ ஏன்டா விஸ்கி கலந்த காக்டெய்லைப் போய் குடிச்ச!" என்று தலையில் கை வைத்தான்.
"டேய் ராஜா அது வோட்கா மிக்ஸிங் டா!! எனக்கு விஸ்கி பிடிக்காதுடா.." என்று புலம்பினான் காக்டெய்லை பறிகொடுத்த முகேஷ்.
"நாட்டுக்கு ரொம்பத் தேவை!!! பேசாமல் இருடா பேல்பூரிவாயா!" என்று ராஜா முகேஷை அடக்கும் போது சத்தமாக சிரித்தான் விது.
"ஓ அப்போ நீ மாறு கால்.. மாறு கை.. மாதிரி மாறு மீசை.. மாறு தாடி...யோட தான் திரியனுமா?"என்று சிரித்தான்.
"ஏன்டா உனக்கு இந்த நல்லெண்ணம்? நீ தான் சரக்கடிச்சு பெட்ல வின் பண்ணிட்டியே அப்புறம் எதுக்கு நான் அப்படி திரியனும்? நீ தான் இனிமே புலம்பிட்டு திரியப்போற!"
"நா..னா.. என்னத்துக்கு யுவர் ஆனர்? காய்லான் கடை ஸ்பானர்? டோன்ட் யு ஹாவ் மேனர்? இனிமே உன் மீசைக்கும் தாடிக்கும் நான்தான் ஓனர்!!!" என்று கூறி வெடிச் சிரிப்புடன்,"மச்சான் ஹவ் இஸ் மை கவிதை?"என்று கேட்டான் ராஜாவிடம்.
இதில் நொந்துபோன ராஜா மனதினுள்,'என்னது கவிதையா!! போச்சு இன்னும் எந்த ஏழறையையெல்லாம் கூட்டப் போறானோ!'
"என்னடா இன்னும் இவன் எந்த முக்கால் டெகேட்ட (decade) கூட்டப் போறானோன்னு மனசுக்குள்ள புலம்புறியா! கவலைப் படாத நானெல்லாம் கணக்கில் புலி கரெக்ட்டா கூட்டுவேன்!" என்று ராஜாவின் தோளில் சென்று சாய்ந்தான்.
'டேய் ராஜா! இவன் நம்மள உடைச்சி ஊத்தி பெப்பர் தூவி ஆம்லெட் போடுறதுக்குள்ள நாம இவனை உரிய இடத்துல டெலிவர் பண்ணிரனும்!' என்று முடிவு செய்த ராஜா,"மச்சான் வாடா வீட்டுக்கு போவோம்! சிஸ்டர் தேடுவாங்க!" என்று விதுவைக் கிளப்பினான்.
"மச்சான் உன் சிஸ்டர் என்னை எதுக்கு டா தேடுவாங்க? உனக்கு சிஸ்டர்னா எனக்கும் சிஸ்டர் மச்சான்! அதுவுமில்லாம எனக்கு ஒரு அழகான பொண்டாட்டி வேற இருக்கா தயவு செஞ்சு உன் சிஸ்டர் மனசை மாத்திரு!"
"டேய் உன் அழகானப் பொண்டாட்டியைத்தான் டா நான் தங்கச்சி சொன்னேன் சாவடிக்காம வாடா!" என்று பப்பின் வாயிலை அடைந்தான் விதுவை இழுத்துக் கொண்டு.
"டேய் மச்சான்! சூட்டிங் நடக்குது போல விளம்பரம் எடுக்காங்க டா வாடா போய் பார்ப்போம்!"
"ஷூட்டிங் பெரிய இதாடா நீ பார்த்ததே இல்லையா என்ன? பேசாமா வாடா!"
"மச்சான் ப்ளீஸ்டா! சின்ன பிள்ளைல இருந்தே இந்த விளம்பரம் ரொம்ப பிடிக்கும் டா! இதுக்காகவே ஒனிடா டீவி புதுசா வாங்குனேன்டா! ப்ளீஸ்டா!"
விதுரனின் கெஞ்சலில் இளகிய ராஜா,"சரி வா!" என்று அவன் காட்டிய திசையில் திரும்பினான். அங்குக் கண்ட காட்சியில் அதிர்ந்து நின்றான்.
"அடப்பாவி டேய்! ஷூட்டிங் இன்னிக்கு நடக்குதோ இல்லையோ நீ பார்க்குற வேலைக்கு நாளைக்கு நமக்கு ஆஃபிஸ்ல ஷூட்டிங் ஆர்டர் கன்பார்ம். உன் நொல்ல கண்ணை வச்சு நல்லா பாரு ஷூட்டிங் எங்கடா நடக்கு அது நம்ம பாஸ் ப்ளே க்ரௌண்ட் மண்டையன் டா! ஒனிடா மண்டையன் வேற டா வா போவோம்."
இருவரும் சென்று கார் நிறுத்துமிடத்தை அடைந்தனர். ராஜா ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து விதுவை திரும்பிப் பார்த்து அதிர்ந்தான். விதுவோ இருக்கை பிடித்து இழுத்துக் கொண்டே,"அண்டா... கா.. கசம்! அபூ.. கா.. கசம்! திறந்திடு சீசே!! சீ...சே! ஒழுங்கா... திறந்திடு சீ...சே!" என்று மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான்.
இருக்கையிலிருந்து எழுந்த ராஜா விதுவின் அருகில் சென்று, "என்னடா பண்ணுற?" என்று வினவினான்.
"டேய் பக்கி பார்த்தா தெரியல! கதவை திறக்குறேன் லாக் ஆகிருச்சு போல! டிஸ்டர்ப் பண்ணாம ஓடிரு!" என்று தன் வேலையைத் தொடர்ந்தான்.
"மாப்ள! கதவு அல்ரெடி நான் திறந்துட்டேன் டா! நீ சீட்டைதான் பிடிச்சு இழுக்குற! டார்ச்சர் பண்ணாம உள்ள போய் உட்காரு டா!"
அவன் கெஞ்சலை புரியாத பார்வை பார்த்த விதுவோ எதுவும் சொல்லாமல் உள்ளே அமர்ந்து கதவடைத்தான். நிம்மதி பெருமைச்சுடன் ராஜா மறுபுறம் சென்று கதவை திறந்தான். திறக்க முடியவில்லை.
"அச்சச்சோ லாக் ஆயிருச்சு போலையே!" என்றவாறே விதுவை பார்த்தான். அவனோ இருக்கையை பின்னுக்குத் தள்ளிக் கண்மூடி சாய்ந்திருந்தான். 'போச்சு இன்னைக்கு வீட்டுக்கு போன மாதிரிதான்' என்று புலம்பியவாறே தனது பாக்கெட்டில் பர்ஸை தேடினான். காரினுள்ளேயே பர்சை வைத்துவிட்டு வந்த தன் மடத்தனத்தை எண்ணி நொந்தான்.
"டேய் மாப்ள! விதுரா! மச்சான்! மாமா! அட ராமா! மட்டையாயிட்டானா?" என்று புலம்பிவிட்டு விதுவை எழ வைக்க பிரம்ம பிரயத்தனம் செய்து பல முயற்சிகள் மேற்கொண்டான். பரிதாபமென்னவென்றால் அனைத்தும் தோல்வியைத் தழுவின. திடீரென்று,
'பாசம் வெக்க நேசம் வெக்க
தோழன் உண்டு வாழவைக்க
அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே'
"வாழவைக்கிறானோ இல்லியோ நல்லா புலம்பவிடுறான்"
'உள்ளமட்டும் நானே
என் உசிரக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்'
"இவன் எங்க சார் பெர்மிஷன்லாம் கேக்குறான்? அவனாவே என் உயிர வாங்கிட்டு தான் இருக்கான்."
'என் நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன் பாரு
நட்பைக் கூடக் கற்பைப் போல எண்ணுவேன்'
"சோறு போடுறான் இல்லீங்கல ஆனால் பிரச்சனைகளையும் அனுகுண்டு மாதிரி தூக்கி தலையில போடுறானே! அது சரி இப்ப யாரு இந்த சிச்சுவேசன் சாங்குக்கு டீஜே?"என்றவாறு சுற்றிச் சுற்றித் தேடினான். பின் தனது கைப்பேசி தான் அந்த டீஜே என்பதைக் கண்டுகொண்டான். செல்பேசியை எடுத்துப் பார்த்தவன் அதிர்ந்தான். 'தளபதி' காலிங் எனக் காட்டியது.
'இவன் தான் மட்டையாயிட்டானே அப்புறம் யாரு காலிங் அதுவும் இவன் நம்பர்ல இருந்து...' என நினைத்தவன் தன்னை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த விதுரனைப் பார்த்தவுடன் முறைத்தான்.
சிரித்துக்கொண்டே அழைப்பை ஏற்குமாறு சைகை செய்தான். ராஜா அழைப்பை ஏற்றதும்,"நான் தண்ணியடிச்சேன்னு மாதுகுட்டிட்ட சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணாத்தான் லாக்க ரிலீஸ் பண்ணுவேன்!" என்று பேரம் பேசினான் விதுரன்.
இப்போது விழுந்து விழுந்து சிரிப்பது ராஜாவின் முறையானது. சத்தமாகச் சிரித்தவாறே," சத்தியம் தான பண்ணிட்டாப் போச்சு! சத்தியமா மேன்மை பொருந்திய உன் பொண்டாட்டி மாதங்கியிடம் நீ சரக்கடிச்சத பத்தி நான் சொல்லவே மாட்டேன்!!" என்று வெளியில் கூறி,'ஆனால் அவளாகவே கண்டுபிடிச்சுருவா!' என்று மனதிலும் சொல்லிக்கொண்டே கதவைத் திறக்க முயன்றான். லாக் ரிலிஸ் ஆகியிருந்தது. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வண்டியை முடுக்கினான்.
ராஜாவோ அவனைப் பரிதாபமாகப் பார்த்தான். அவன் பார்வையில் தன்னை அடக்கிய விது,"சாரி மச்சான்! நான் உன்னை அந்த கெட்டப்பில் நினைத்து பார்த்துட்டேன்!"என்றான் பாவம் போல் முகத்தை வைத்து.
அவன் பாவனையில் ராஜாவிற்கே சிரிப்பு வந்தது, அதை மறைத்தவாறு,"மச்சான்!" என்று அரவிந்தையும் அவன் கையிலிருந்த ரேஸரையும் கண்களால் காட்டினான் விதுரனிடம். அதை உணர்ந்த விதுரனும் தான் பார்த்துக்கொள்வதாகச் சமிக்ஞை செய்தான் கண்ணை மூடி.
இவர்கள் கூத்தைக் கவனித்த அரவிந்தோ,'இது வேலைக்காகாது!' என்றெண்ணி மீண்டும் ரேசருடன் ராஜாவை நெருங்கி அவன் மீசையில் வைத்த நேரம், நான்கு ஷார்ட் கிளாஸ்கள் பறந்து வந்து அவன் கைகளிலேயே விழுந்தது. அனைவரும் திரும்பிப் பார்த்து அதிர்ந்தனர்.
விதுரன் தான் அந்த நான்கு ஷாட் கிளாஸையும் குடித்துவிட்டு எறிந்திருந்தான். பக்கத்தில் அவர்களுடன் பணியாற்றும் முகேஷ் என்பவன் பாவமாக அழுவது போல் அமர்ந்திருந்தான். ஆம் முகேஷ் ஆசையாக 'பட்டியாலா ஷாட்' அடிக்க வைத்திருந்த வோட்கா கலந்த காக்டெய்லை தான் நம் விதுரன் எடுத்துக் குடித்து வீசினான்.
"டேய்! மாப்ள என்னடா இப்படி பண்ணிட்ட?!!"
ராஜாவின் கேள்வியில் திகைத்த விதுரன்,"உனக்காகத் தான் மாப்ள குடிச்சேன்!"
"டேய் விது பெட்டே பீர்க்கு தான். நீ ஏன்டா விஸ்கி கலந்த காக்டெய்லைப் போய் குடிச்ச!" என்று தலையில் கை வைத்தான்.
"டேய் ராஜா அது வோட்கா மிக்ஸிங் டா!! எனக்கு விஸ்கி பிடிக்காதுடா.." என்று புலம்பினான் காக்டெய்லை பறிகொடுத்த முகேஷ்.
"நாட்டுக்கு ரொம்பத் தேவை!!! பேசாமல் இருடா பேல்பூரிவாயா!" என்று ராஜா முகேஷை அடக்கும் போது சத்தமாக சிரித்தான் விது.
"ஓ அப்போ நீ மாறு கால்.. மாறு கை.. மாதிரி மாறு மீசை.. மாறு தாடி...யோட தான் திரியனுமா?"என்று சிரித்தான்.
"ஏன்டா உனக்கு இந்த நல்லெண்ணம்? நீ தான் சரக்கடிச்சு பெட்ல வின் பண்ணிட்டியே அப்புறம் எதுக்கு நான் அப்படி திரியனும்? நீ தான் இனிமே புலம்பிட்டு திரியப்போற!"
"நா..னா.. என்னத்துக்கு யுவர் ஆனர்? காய்லான் கடை ஸ்பானர்? டோன்ட் யு ஹாவ் மேனர்? இனிமே உன் மீசைக்கும் தாடிக்கும் நான்தான் ஓனர்!!!" என்று கூறி வெடிச் சிரிப்புடன்,"மச்சான் ஹவ் இஸ் மை கவிதை?"என்று கேட்டான் ராஜாவிடம்.
இதில் நொந்துபோன ராஜா மனதினுள்,'என்னது கவிதையா!! போச்சு இன்னும் எந்த ஏழறையையெல்லாம் கூட்டப் போறானோ!'
"என்னடா இன்னும் இவன் எந்த முக்கால் டெகேட்ட (decade) கூட்டப் போறானோன்னு மனசுக்குள்ள புலம்புறியா! கவலைப் படாத நானெல்லாம் கணக்கில் புலி கரெக்ட்டா கூட்டுவேன்!" என்று ராஜாவின் தோளில் சென்று சாய்ந்தான்.
'டேய் ராஜா! இவன் நம்மள உடைச்சி ஊத்தி பெப்பர் தூவி ஆம்லெட் போடுறதுக்குள்ள நாம இவனை உரிய இடத்துல டெலிவர் பண்ணிரனும்!' என்று முடிவு செய்த ராஜா,"மச்சான் வாடா வீட்டுக்கு போவோம்! சிஸ்டர் தேடுவாங்க!" என்று விதுவைக் கிளப்பினான்.
"மச்சான் உன் சிஸ்டர் என்னை எதுக்கு டா தேடுவாங்க? உனக்கு சிஸ்டர்னா எனக்கும் சிஸ்டர் மச்சான்! அதுவுமில்லாம எனக்கு ஒரு அழகான பொண்டாட்டி வேற இருக்கா தயவு செஞ்சு உன் சிஸ்டர் மனசை மாத்திரு!"
"டேய் உன் அழகானப் பொண்டாட்டியைத்தான் டா நான் தங்கச்சி சொன்னேன் சாவடிக்காம வாடா!" என்று பப்பின் வாயிலை அடைந்தான் விதுவை இழுத்துக் கொண்டு.
"டேய் மச்சான்! சூட்டிங் நடக்குது போல விளம்பரம் எடுக்காங்க டா வாடா போய் பார்ப்போம்!"
"ஷூட்டிங் பெரிய இதாடா நீ பார்த்ததே இல்லையா என்ன? பேசாமா வாடா!"
"மச்சான் ப்ளீஸ்டா! சின்ன பிள்ளைல இருந்தே இந்த விளம்பரம் ரொம்ப பிடிக்கும் டா! இதுக்காகவே ஒனிடா டீவி புதுசா வாங்குனேன்டா! ப்ளீஸ்டா!"
விதுரனின் கெஞ்சலில் இளகிய ராஜா,"சரி வா!" என்று அவன் காட்டிய திசையில் திரும்பினான். அங்குக் கண்ட காட்சியில் அதிர்ந்து நின்றான்.
"அடப்பாவி டேய்! ஷூட்டிங் இன்னிக்கு நடக்குதோ இல்லையோ நீ பார்க்குற வேலைக்கு நாளைக்கு நமக்கு ஆஃபிஸ்ல ஷூட்டிங் ஆர்டர் கன்பார்ம். உன் நொல்ல கண்ணை வச்சு நல்லா பாரு ஷூட்டிங் எங்கடா நடக்கு அது நம்ம பாஸ் ப்ளே க்ரௌண்ட் மண்டையன் டா! ஒனிடா மண்டையன் வேற டா வா போவோம்."
இருவரும் சென்று கார் நிறுத்துமிடத்தை அடைந்தனர். ராஜா ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து விதுவை திரும்பிப் பார்த்து அதிர்ந்தான். விதுவோ இருக்கை பிடித்து இழுத்துக் கொண்டே,"அண்டா... கா.. கசம்! அபூ.. கா.. கசம்! திறந்திடு சீசே!! சீ...சே! ஒழுங்கா... திறந்திடு சீ...சே!" என்று மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான்.
இருக்கையிலிருந்து எழுந்த ராஜா விதுவின் அருகில் சென்று, "என்னடா பண்ணுற?" என்று வினவினான்.
"டேய் பக்கி பார்த்தா தெரியல! கதவை திறக்குறேன் லாக் ஆகிருச்சு போல! டிஸ்டர்ப் பண்ணாம ஓடிரு!" என்று தன் வேலையைத் தொடர்ந்தான்.
"மாப்ள! கதவு அல்ரெடி நான் திறந்துட்டேன் டா! நீ சீட்டைதான் பிடிச்சு இழுக்குற! டார்ச்சர் பண்ணாம உள்ள போய் உட்காரு டா!"
அவன் கெஞ்சலை புரியாத பார்வை பார்த்த விதுவோ எதுவும் சொல்லாமல் உள்ளே அமர்ந்து கதவடைத்தான். நிம்மதி பெருமைச்சுடன் ராஜா மறுபுறம் சென்று கதவை திறந்தான். திறக்க முடியவில்லை.
"அச்சச்சோ லாக் ஆயிருச்சு போலையே!" என்றவாறே விதுவை பார்த்தான். அவனோ இருக்கையை பின்னுக்குத் தள்ளிக் கண்மூடி சாய்ந்திருந்தான். 'போச்சு இன்னைக்கு வீட்டுக்கு போன மாதிரிதான்' என்று புலம்பியவாறே தனது பாக்கெட்டில் பர்ஸை தேடினான். காரினுள்ளேயே பர்சை வைத்துவிட்டு வந்த தன் மடத்தனத்தை எண்ணி நொந்தான்.
"டேய் மாப்ள! விதுரா! மச்சான்! மாமா! அட ராமா! மட்டையாயிட்டானா?" என்று புலம்பிவிட்டு விதுவை எழ வைக்க பிரம்ம பிரயத்தனம் செய்து பல முயற்சிகள் மேற்கொண்டான். பரிதாபமென்னவென்றால் அனைத்தும் தோல்வியைத் தழுவின. திடீரென்று,
'பாசம் வெக்க நேசம் வெக்க
தோழன் உண்டு வாழவைக்க
அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே'
"வாழவைக்கிறானோ இல்லியோ நல்லா புலம்பவிடுறான்"
'உள்ளமட்டும் நானே
என் உசிரக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்'
"இவன் எங்க சார் பெர்மிஷன்லாம் கேக்குறான்? அவனாவே என் உயிர வாங்கிட்டு தான் இருக்கான்."
'என் நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன் பாரு
நட்பைக் கூடக் கற்பைப் போல எண்ணுவேன்'
"சோறு போடுறான் இல்லீங்கல ஆனால் பிரச்சனைகளையும் அனுகுண்டு மாதிரி தூக்கி தலையில போடுறானே! அது சரி இப்ப யாரு இந்த சிச்சுவேசன் சாங்குக்கு டீஜே?"என்றவாறு சுற்றிச் சுற்றித் தேடினான். பின் தனது கைப்பேசி தான் அந்த டீஜே என்பதைக் கண்டுகொண்டான். செல்பேசியை எடுத்துப் பார்த்தவன் அதிர்ந்தான். 'தளபதி' காலிங் எனக் காட்டியது.
'இவன் தான் மட்டையாயிட்டானே அப்புறம் யாரு காலிங் அதுவும் இவன் நம்பர்ல இருந்து...' என நினைத்தவன் தன்னை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த விதுரனைப் பார்த்தவுடன் முறைத்தான்.
சிரித்துக்கொண்டே அழைப்பை ஏற்குமாறு சைகை செய்தான். ராஜா அழைப்பை ஏற்றதும்,"நான் தண்ணியடிச்சேன்னு மாதுகுட்டிட்ட சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணாத்தான் லாக்க ரிலீஸ் பண்ணுவேன்!" என்று பேரம் பேசினான் விதுரன்.
இப்போது விழுந்து விழுந்து சிரிப்பது ராஜாவின் முறையானது. சத்தமாகச் சிரித்தவாறே," சத்தியம் தான பண்ணிட்டாப் போச்சு! சத்தியமா மேன்மை பொருந்திய உன் பொண்டாட்டி மாதங்கியிடம் நீ சரக்கடிச்சத பத்தி நான் சொல்லவே மாட்டேன்!!" என்று வெளியில் கூறி,'ஆனால் அவளாகவே கண்டுபிடிச்சுருவா!' என்று மனதிலும் சொல்லிக்கொண்டே கதவைத் திறக்க முயன்றான். லாக் ரிலிஸ் ஆகியிருந்தது. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வண்டியை முடுக்கினான்.