• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரண்டாம் உலகின் இதய ராணி - 03

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika51

நாட்டாமை
Author
Joined
Nov 5, 2021
Messages
47
Reaction score
57
Location
Sri Lanka
இதயம் 💓- 03


என் கவிதையின்
முதல் அர்த்தம்
நீ தான்
என் காதலின்
முழு அர்த்தமும்

நீ தான்.

💓..............
யாருக்கும் காத்திராமல் அடுத்த நாள் காலைப் பொழுது புலர்ந்தது, வானமோ மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

"பாட்டி,, போதும் போதும்..... நேரமாச்சி என்றபடி கைகளை கழுவிக் கொண்டு தனது பேக்குடன் போய்ட்டு வாரன் பாட்டி. அப்பா பாய், என்றபடி வெளியேற,,, இருமா பஸ்டாப்ல விடுறன் என்றபடி தனது தந்தையுடன் வெளியேறினாள் ,அம்மு....


மாடியிலிருந்து இறங்கி வரும் மகனை கண்குளிரக் கண்டவர் கண்ணா,"சாப்பிடு போபா", சாப்பாடு ரெடி ஆகிடு, என சொல்ல,அவனும் சாப்பாடு மேசையில் வந்து அமர்ந்ததும், அவனுக்கு உணவினை பரிமாறிக்கொண்டு கணவனை, பார்க்க அவரோ பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார்.

கண்ணா, ஃபேஷன் டிசைனர் "தேஜாவா தெரியும் தானே",அவனும்....ம்ம் என சொல்ல அவளுக்கு மாப்பிள்ளை பார்க்காங்களாம்.கங்காதரன் கேட்டாரு, நல்ல சம்மந்தம் நம்மை ஸ்டேட்டஸ்ல எந்த குறையும் இல்லை என சொல்லிக் கொண்டு இருக்கும் போது,அம்மா டைம் ஆச்சு மா என்றபடி வந்தமர்ந்தான் மது.

அவனுக்கு உணவு பரிமாறிய படி என்னப்பா சொல்ற கேட்க அன்னையை நிமிர்ந்து பார்க்க அவரோ முகத்தில் தோன்றிய எதிர்பார்ப்பில் கொஞ்சம் டைம் வேணும்மா என சொல்ல!!!! வெடிங் பற்றி எந்த ஐடியாவும் இல்லாமா!!!! என சொல்ல அவரின் முகமோ ஏமாற்றத்தையே காட்டியது.

கண்ணா, "போட்டோ வாட்ஸ்அப் பண்ணுறேன் பாரு" என்று சொல்ல அவனும் அவரை மேலும் வருத்தாது ,ம்ம்.....என்றபடி அலுவலகத்தை நோக்கி சென்றான்.

மதுவோ வாவ்!!!!! இவனுக்கு முடிஞ்சா தான் நம்ம லைன் கிளியராகும்!!!! செல்ல குட்டி எங்க இருக்க நீ ????மாமா வெயிட்டிங்??? என மனதில் சொல்லிக் கொண்டு இருக்க மதுக்கண்ணா!!!ஆதிக்கு லவ் பெய்லியர் ஏதுமா இருக்குமோ??? எனக் கேட்க சாப்பிடுக் கொண்டிருந்த மதுவுக்கு புரையேறத் தொடங்கியது....!!! அவனின் தலையை தட்ட தண்ணீர் குடித்து விட்டு கைகளை கழுவிக் கொண்டு,,,,

ஏன்மா!!!!? இவன பாத்தா லவ் பெயிலியர் போலவா இருக்கு.இப்பிடி உர்ருனு திரிஞ்சா யார்மா லவ் பண்ணுவா???? என சொல்ல!!!!!!!

அட போட என் பையனுக்கு என்ன குறைச்சல் இப்ப கூட பாரு நிறைய இடம் வருது இவன் தான் ஒன்னும் சொல்ல மாட்டேங்குறான்..போன வாட்டி கேட்டப்போ பார்க்கலாம் என்டான்.திடீருனு சிங்கப்பூர் போய்டான் என தனது ஆதங்கத்தை இளைய பையனிடம் சொல்ல!!!!

ஏன்மா உனக்கு ஒரு பையன் தானா???வேணும்னா இளைய பையனுக்கு பொண்ணு பாரேன்...அவன்கிட்ட நான் பேசிக்கிறன் என சொல்ல மதுதுது........என அவர் சத்தமிட அவர் கண்ணத்தில் அழுத்த முத்தமிட்டபடி கூல் மம்மி என்றபடி தனது பைகில் கல்லூரி நோக்கிச் சென்றான்.(இவருக்கு ஈவினிங் வந்ததும் தான் ஆப்பிருக்கு)


கிச்சனில் வேலை செய்யும் தேவியிடம் சுத்தப்படுத்த சொல்லி விட்டு.... கணவனி அருகில் அமர்ந்த ராஜேஸ்வரி ஏங்க, கல்யாணத்துக்கு ஒன்னும் சொல்லாம போறாங்க வயசு போயிடு இருக்கு அவனுக்கு, என கவலையாக சொல்ல...... தேவேந்திரன் மனைவியை பார்த்து, ராஜு,ஆதிட மனதில ஏதோ, தேடல் இருக்கு,அது சரியானா அவனும் சரியாவான். நீ வேணாப் பாரு அவனே சொல்லுவான் கல்யாணம் செய்துக்க, என சொல்ல ஏதோ நல்லதா நடந்தா சரிதாங்க,,,,,, என்றபடி கணவனின் தோளில் சாய்ந்து கொண்டார்.

தேவேந்திரன் ராஜேஸ்வரி காதல் திருமணம் செய்தவர்கள் பல வருடம் குழந்தை இல்லாத இருந்தவர்கள் கிடைத்த பொக்கிஷம் தான் ஆதித்யன். ஆதித்தனின் மீது மிகவும் பாசம் கொண்டவர்கள்.


அலுவலகத்தில் நெருங்கியதும் தனக்கான இடத்தில் காரை பார்க் செய்துவிட்டு அலுவலகத்தினுள் நுழைந்தான்.ஆதித்யன். தாய் தந்தையிடம் இலகுவாக பேசக்கூடியவன் மதுவிடமும் சற்றுக் கடுமை கொண்டவன். அலுவலகத்தை நெருங்கியதும் அவனது கம்பீரம் மீண்டது போல அழுத்தமாக உள்ளே சென்றான்.

ரிஷப்ஷனை நெருங்கும், போது கலகல..... என சிரிப்பு சத்தம் கேட்க திரும்பி பார்த்துவிட்டு தனது அழுத்தமான வேகநடையுடன், ரிசப்ஷனைக் கடந்து செல்லும் வழியில் ரிஷப்ஷனில் இந்த இரு பெண்களும் ஆதியின் கம்பீரத்தையும் கவர்ச்சியிலும் வீழ்ந்துதான் போயினர்.

குட்மார்னிங் சார் என அவர்கள் சொல்ல அவன் ஒரு சிறு தலையசைப்பு கூட செய்யாது லிஃப்டை நோக்கிச் சென்றான்.

அங்கு சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தது வேறு யாரும் அல்ல நம்ம அமுல்யாவே தான். பேசி முடிந்ததும் லிப்டை நோக்கி செல்ல இவள் வருவதைக் கண்டதும் கிரி லிஃப்ட் கதவினை மூடாது காத்திருந்தான் உள்ளே வந்ததும் கதவு மூடிக்கொண்டது.

ஹாய் ஹாய்........ என்றபடி உள்ளே வந்தவள் ஜானிடம், ஜான் வந்திருக்கிற நியூ பாஸ் பூவா??? புயலா??? அத விட பெரிய பூகம்பமா!!!! என கேட்டு கண்சிமிட்ட அவர்களுடன் லிஃப்டில் இருந்த ஆதியும் இவளையே பார்க்க, கிரிதரனோ கண்களால் சைகை செய்ய கிரி ஐல!!! என்னாச்சு? என இவள் கேட்க...... கிரியோ தலையில் அடித்தபடி இருக்க லிஃப்ட் கதவு திறந்ததும் ஆதி. கன நேர பார்வையை அவளிடம் செலுத்தி விட்டு வெளியேறினான்.

அவன் சென்றதும் கதவு மூட
யார்? டா இந்த "நெட்டக் கொக்கு" என ஆதியைப் பற்றிக் கேட்க.....ஐயோ அவர் தாண்டி புதுசா வந்திருக்குற தேய்வேந்திரன் சாரோட மகன்........

என்னாது இவரா!!!!!! ????என அதிர்ச்சியாக கேட்க ஆமா என ஜான் மற்றும் கிரிதர் கோரஸாக சொல்ல.ஓபன் ஆச்சு டோர் விலகி இருந்து அதிர்ச்சி ஆகிக்கோ என்றபடி தங்களது தளத்திற்கு வந்தனர்.

ஹேய் என்டி ஒருமாதிரி இருக்கிற எனக் கேட்க....ம்ம்
அம்மணி ஆதி சார
" பூவா? புயலா? இல்ல பூகம்பமா"? எண்டு கேட்டா பக்கத்தில சார் நின்னுடு இருந்தார்.. என சொல்ல, சஞ்சுவும் சிரித்தபடி அதானா அம்மு என்றபடி பேசிக் கொண்டு இருக்கும் போது, ரோகித் உள்ளே நுழைந்தான்.


குட் மார்னிங் ஹாய்ஸ் புது ஆடர் ஒன்னு வந்திருக்கு தீம் கலர்கு ஏற்ற போலான் செய்யனும் ஐ திங் ரெட் அன்ட் கோல்ட். இந்த பைலில் டீடெய்ல்ஸ் இருக்கு, நீங்க பண்ற டிசைன் வச்சி தான் மெட்டீரியல்ஸ் டிசைட் பண்ணனும்...சோ ஆல் த பெஸ்ட் ஹாய்ஸ் என்றபடி வெளியேறினான்.



சஞ்சு அம்மு ஜான் கிரிதரன் மற்றும் 5 பேர் கொண்ட டீம் தான் இது. இதைத் தள்ளி இவர்கள் அமைக்கும் டிசைன்களை நகைகளாக மாற்றுவதற்கான நான்காவது மாடி முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தரைத்தளத்திலும்,முதல் தளத்திலும், ஆடைகள் தயாரிக்கப்படுகிறது. அதிலும் திருமண ஆடைகளே பிரபல்யம் இவ் இடைகளுக்கு பொருத்தமான் கவரிங்கில் இருந்து தங்கம்,விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களும் இங்கேயே தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்தும் ஆர்.ஜே.கோல்ட கவுஸ் என்னும் பெயரிலும்,ஆர்.ஜே வெடிங் கலைக்சன்ஸ் எனும் பெயரிலும் பல கிளைகள் கொண்டு விற்பனை செய்யப்படுகிறது... அத்தோடு ஆடைகள் மேலத்தேய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.



இதற்கென ஐந்நூறிற்கும் மேற்பட்டவர்கள் இங்கு வேலை செய்கின்றனர். இவை அனைத்து கிளைகளுக்கும் ஹெட் ஆபீஸ் சென்னை அலுவலகமே. அனைத்தனையும் சென்னை அலுவலகத்தில் இருந்தே நிர்வகித்துக் கொண்டு இருக்கினறான் ஆதித்யன்

அன்றைய தினம்
புதிதாக கிடைத்த ஆடரில் கவனம் செலுத்த தொடங்கினர்.அம்மு என்ட் கோ டிம்.பின்னர் இன்று மதிய உணவு இடைவேளையின் பின் டிசைனிங் சைட்டில் வேலை செய்பவர்களுக்கான மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அவ்வளவு நேரமும் வேலையில் கவனம் செலுத்தி அம்மு மீட்டிங்கில் ஆதி சாரை சந்திக்க வேண்டி ஏற்படும் என எண்ணி சற்று கலக்கம் கொண்டாள்.
சஞ்சு........ மதிய உணவினை சாப்பிட்டுக் கொண்டிருந்த சஞ்சுவை அழைக்க .....என்னடி ......, பாஸ் ஏதும் சொல்வாராடி.......எனக் கேட்க.

ஆமா!!பூவா?புயலா??மற்றது என்ன அஅஅஅ.பூகம்பமானு சொல்லுவார்.என சஞ்சு சொல்ல.. போடி.....என அம்மு சொல்ல

ஹேய் அம்மு அவர் ரொம்ப ஸ்டிக்ட்டாம்..மிச்சம் கோபம் வருமாம்.தப்பு பண்னா!!!!யார் எவர்னு இல்ல வாங்கு வாங்குனு வாங்கிருவாறாம் என சொல்ல..ஆமா ,"கோட்சில்லா" என இரண்டாவது நாமத்தினை நமது ஆதிக்கு சூட்டினாள் அம்மு..அடி,...... யாருக்கும் கேட்டுடப் போறாங்க விரைவா சாப்பிடு வாடி, "மீடிங் போவம் என சஞ்சு சொல்ல"...இருவரும் சாப்பிடு முடிந்ததும்.மீடிங் ஹால் நோக்கி சென்றனர்......




அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் சகோஸ்........

இவள் ✍
அனாமிகா 51


ஹாய் சகோஸ்....
"மனதில் தோன்றும் கற்பனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்கிறேன்"....
மூன்றாவது அத்தியாயம் பதித்து விட்டேன்.உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.ஏதும் எழுத்து பிழைகள் இருப்பின் பெரிது படுத்தாது மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்க. மறக்காமல் உங்கள் கருத்துக்களை சொல்லுங்க. குறைகள் இருப்பின் சரி செய்து கொள்கிறேன்........
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top