Rajeswari.d
புதிய முகம்
நான் சின்ன வயதில் இருக்கும் போது நடந்தது. தலை இல்லாத முண்டம் வண்டியில் ஊருக்குள் வர்றதா ஒரே பேச்சு..ஊரே பயத்தில் என்ன பண்ணறது தெரியாம எல்லோரோட வீட்டுக்கு வாசலிலும் வேப்பிலைசொருகி வச்சி..அப்போது இருந்த வயது பசங்கல கையில் கம்பு கொடுத்து ஊருக்குள் காவல் இருக்க வச்சாங்க..நிறைய பேர் விடிய விடிய காவலும் இருந்தாங்க.. இந்த புரளி அடங்க பத்து நாளைக்கு மேல ஆச்சு..நடந்தது அந்த டைம்ல ஒரு அக்ஸிடெண்ட் இரும்பு தகரம் ஷிட் ஏற்றின லாரிக்கு பின்னாடி போன டூ விலர் காரன்மேல ஷிட் வில்லை தலை தணியா போயிடுச்சு வண்டி கையில் பிடிச்சு இருந்ததால வண்டி பின்னாடி போய் இருக்கு நம்ம மக்கள் கண்ணு,காது வச்சி புரளியை கிளப்பிட்டாங்க...கிராமம் இல்லையா..வேகமாக பரவிடுச்சு..ஒரு வாரம் வரைக்கும் காவல் இருந்துபார்த்துவிட்டு நார்மல் ஆச்சு..பயந்ததுன்னா அப்போது தான். அப்போ நிறைய வீடுகளுக்கு கரண்ட் இருக்காது..எட்டுமணிக்கே எல்லோரும் தூங்க போயிடுவாங்க.. இப்ப நினைச்சா சிரிப்பு தான் வரும். எந்த அளவுக்கு பயந்து இருக்கறோம்ன்னு. .