Rakshika Ravi
மண்டலாதிபதி
அத்தியாயம் 16
அவள் உள்ளே சென்றதும் விஷ்வஜித்தை நெருங்கிய ஜனார்த்தனம் அவனை முறைத்துவிட்டு மாதவியின் அறைக்குள் உள்நுழைய தோளைக் குலுக்கிய விஷ்வஜித் பத்ராவை நோக்கி "பத்ரா! பிரகாசத்தோட கம்பனிக்கு ஆடிட்டிங் அரேஞ்ச்பண்ணு. பிரகாசத்தோட கேஸை ஸ்ட்ரோங்க் பண்ண நம்ம சைட்ல ஒரு லாயரை அப்பாயின்ட் பண்ணு. கேஸ்மிருணாளினுக்கு எதிரா திரும்ப சான்ஸ் இருக்கு. பிகாஸ் இந்த இல்லீகல் பிஸ்னஸ் நடந்தப்போ ஷேர்ஸ் இருந்ததுமிருணாளினியோட நேம் ல. அவளுக்கு இந்த கேஸால எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது. அன்ட்.. இவங்க பாதுகாப்பை உறுதிப்படுத்த நம்ம ஆட்களை செட்பண்ணிட்டு வா பத்ரா. கம்பனி மீட்டிங்க் இருக்கு" என்று கூறி கூலர்ஸை அணிந்தவாறுவெளியேறச் செல்ல
மிருணாளினியைப் பாதுகாக்க நினைக்கும் அவனது எண்ணம் ஆச்சர்யம் அளித்தாலும் அதைப் பற்றி எதுவும் கிளறாமல் "பாஸ்! மாதவியைப் பார்க்கலயா?"
"இன்னும் எனக்கு அவங்க மேல இருக்கிற கோவம் போகல பத்ரா. எனக்குள்ள எரிஞ்சுக்கிட்டு இருக்கிற நெருப்புஅணையட்டும். நானே போய்ப் பேசுறேன்"
"ம்ம்" என்றவன் விஷ்வஜித்தை அனுப்பிவிட்டு வெளியில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
"அம்மா!" நீண்ட நாட்களின் பின்னர் கேட்ட மகளின் குரலில் மாதவியின் விழிகள் பட்டெனத் திறந்து கொண்டது. அங்கேமிருணாளினியைக் கண்டதும் "மிரு!" என்றபடி எழுந்தவரை வெயினில் இணைக்கப்பட்டு இருந்த குளுக்கோஸ் போத்தலின் இணைப்பு தடுக்க அதை பிய்த்து எறியப்போனவரை விரைந்து சென்று தடுத்துவிட்டு அவரை அணைத்துக் கொண்டாள்.
அவளை அணைத்தவர் அழுகையில் கேவவும் அவரை விலக்கி கன்னத்தை அழுந்தத் துடைத்தவள் "எதுக்குமா இந்த அழுகை?" என்று அமைதியாகவே கேட்டாள்.
"மிரு! மிரு உன்னைக் காணாம இவ்வளவு நாள்.." என்று மீண்டும் அழத்தொடங்க கலங்கிய விழிகளை சிமிட்டி விழிநீர்வழியாமல் அடக்கிய மிரு
"அது தான் இப்போ வந்துட்டேனே மா?! இன்னும் இந்த அழுகை எதுக்கு?" என்றவளின் ஒரு கை ஆராதனாவின் கரத்தைஇறுகப் பற்றிக் கொண்டு இருந்தது.
அவள் எவ்வளவு கூறியும் தாயின் தவிப்பு அடங்கவில்லை போலும். நடுங்கும் கரங்களால் அவளது முகத்தைத் தடவிய மாதவி
"எப்படி இருக்கிற மிரு?" என்று கேட்க தடவிய கரங்களைப் பற்றி முத்தமிட்டவள்
"எப்படிப் போனேனோ அப்படித்தான் இருக்கேன்மா. என்ன உங்களைப் பார்க்காம தான்" என்று சற்று நிறுத்தியவள் வலியப்புன்னகைத்து "அது தான் நான் வந்துட்டேனே" என்று கேட்டாள். அவளின் நிதானத்தை ஆச்சர்யத்துடன் மௌனமாகவேநோக்கிக் கொண்டு இருந்தார் ஜனார்த்தனம். மீண்டும் பிரகாசத்தின் கைது நினைவு வரவும் அழத்தொடங்கிய மாதவி
"உன்னோட அப்பாவைக் கைது பண்ணிட்டாங்கமா"
"தெரியும்!" அமர்த்தலாகவே பதிலளித்தாள்.
"என்ன?!" என்று அதிர்ந்தவர் "எப்படி மிரு நம்ம சமாளிக்கப் போறோம்? ஜெயிலுக்கு போனவனோட பொண்ணு என்ற பெயரோட எப்பிடி உனக்கு ஒரு எதிர்காலம் வரும்??" என்று கேட்க விரக்தியாக புன்னகைத்தவள்
"என்னைப் பணத்துக்காக ஒரு பொறுக்கிக்குக் கல்யாணம் பேசுனவர் தானே அவர்? இவ்வளவு நாள் நான் ஒருத்தனோடவீட்டுல சூழ்நிலைக்கைதியா இருந்தேன் மா. உன்னையும் ஆராதனாவையும் அடைச்சு வைச்சு இருந்தாங்க. அப்போலாம் உன்புருசன் நம்மள பாதுகாத்துக் கிழிச்சிட்டாரா? சரி அது கூட வேணாம். பொண்ணைக் காணோம் என்று ஒரு பொலிஸ்கம்ப்ளைன்ட் சரி குடுத்து இருப்பாரா? இவ்வளவுக்கும் எனக்கு பார்த்த மாப்பிள்ளையோட அப்பா ஒரு அமைச்சர். "
"மிரு!" அவளின் கோவத்தில் அதிர்ந்தவரை இரக்கமே இல்லாமல் பார்த்தவள்
"இதெல்லாம் ஏன் நடக்குது என்று எனக்குத் தெரியாது. இவங்க செய்றதுலாம் சரியா என்றும் தெரியாது. ஆனா, நியாயம் நம்மபக்கம் இல்லை என்று மட்டும் தெரியும்" என்று கூறியவள் ஒரு நொடி நிறுத்தி "அந்த ஆள் என் அப்பாவா இருக்கிறதை விடஇல்லாம இருக்கிறதே பெட்டர்" என்று கோவத்துடன் கூறியவளின் பேச்சு ஜனார்த்தனம் மாதவிக்கு அப்படியே தமயந்தியைநினைவூட்டியது.
அவள் உள்ளே சென்றதும் விஷ்வஜித்தை நெருங்கிய ஜனார்த்தனம் அவனை முறைத்துவிட்டு மாதவியின் அறைக்குள் உள்நுழைய தோளைக் குலுக்கிய விஷ்வஜித் பத்ராவை நோக்கி "பத்ரா! பிரகாசத்தோட கம்பனிக்கு ஆடிட்டிங் அரேஞ்ச்பண்ணு. பிரகாசத்தோட கேஸை ஸ்ட்ரோங்க் பண்ண நம்ம சைட்ல ஒரு லாயரை அப்பாயின்ட் பண்ணு. கேஸ்மிருணாளினுக்கு எதிரா திரும்ப சான்ஸ் இருக்கு. பிகாஸ் இந்த இல்லீகல் பிஸ்னஸ் நடந்தப்போ ஷேர்ஸ் இருந்ததுமிருணாளினியோட நேம் ல. அவளுக்கு இந்த கேஸால எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது. அன்ட்.. இவங்க பாதுகாப்பை உறுதிப்படுத்த நம்ம ஆட்களை செட்பண்ணிட்டு வா பத்ரா. கம்பனி மீட்டிங்க் இருக்கு" என்று கூறி கூலர்ஸை அணிந்தவாறுவெளியேறச் செல்ல
மிருணாளினியைப் பாதுகாக்க நினைக்கும் அவனது எண்ணம் ஆச்சர்யம் அளித்தாலும் அதைப் பற்றி எதுவும் கிளறாமல் "பாஸ்! மாதவியைப் பார்க்கலயா?"
"இன்னும் எனக்கு அவங்க மேல இருக்கிற கோவம் போகல பத்ரா. எனக்குள்ள எரிஞ்சுக்கிட்டு இருக்கிற நெருப்புஅணையட்டும். நானே போய்ப் பேசுறேன்"
"ம்ம்" என்றவன் விஷ்வஜித்தை அனுப்பிவிட்டு வெளியில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
"அம்மா!" நீண்ட நாட்களின் பின்னர் கேட்ட மகளின் குரலில் மாதவியின் விழிகள் பட்டெனத் திறந்து கொண்டது. அங்கேமிருணாளினியைக் கண்டதும் "மிரு!" என்றபடி எழுந்தவரை வெயினில் இணைக்கப்பட்டு இருந்த குளுக்கோஸ் போத்தலின் இணைப்பு தடுக்க அதை பிய்த்து எறியப்போனவரை விரைந்து சென்று தடுத்துவிட்டு அவரை அணைத்துக் கொண்டாள்.
அவளை அணைத்தவர் அழுகையில் கேவவும் அவரை விலக்கி கன்னத்தை அழுந்தத் துடைத்தவள் "எதுக்குமா இந்த அழுகை?" என்று அமைதியாகவே கேட்டாள்.
"மிரு! மிரு உன்னைக் காணாம இவ்வளவு நாள்.." என்று மீண்டும் அழத்தொடங்க கலங்கிய விழிகளை சிமிட்டி விழிநீர்வழியாமல் அடக்கிய மிரு
"அது தான் இப்போ வந்துட்டேனே மா?! இன்னும் இந்த அழுகை எதுக்கு?" என்றவளின் ஒரு கை ஆராதனாவின் கரத்தைஇறுகப் பற்றிக் கொண்டு இருந்தது.
அவள் எவ்வளவு கூறியும் தாயின் தவிப்பு அடங்கவில்லை போலும். நடுங்கும் கரங்களால் அவளது முகத்தைத் தடவிய மாதவி
"எப்படி இருக்கிற மிரு?" என்று கேட்க தடவிய கரங்களைப் பற்றி முத்தமிட்டவள்
"எப்படிப் போனேனோ அப்படித்தான் இருக்கேன்மா. என்ன உங்களைப் பார்க்காம தான்" என்று சற்று நிறுத்தியவள் வலியப்புன்னகைத்து "அது தான் நான் வந்துட்டேனே" என்று கேட்டாள். அவளின் நிதானத்தை ஆச்சர்யத்துடன் மௌனமாகவேநோக்கிக் கொண்டு இருந்தார் ஜனார்த்தனம். மீண்டும் பிரகாசத்தின் கைது நினைவு வரவும் அழத்தொடங்கிய மாதவி
"உன்னோட அப்பாவைக் கைது பண்ணிட்டாங்கமா"
"தெரியும்!" அமர்த்தலாகவே பதிலளித்தாள்.
"என்ன?!" என்று அதிர்ந்தவர் "எப்படி மிரு நம்ம சமாளிக்கப் போறோம்? ஜெயிலுக்கு போனவனோட பொண்ணு என்ற பெயரோட எப்பிடி உனக்கு ஒரு எதிர்காலம் வரும்??" என்று கேட்க விரக்தியாக புன்னகைத்தவள்
"என்னைப் பணத்துக்காக ஒரு பொறுக்கிக்குக் கல்யாணம் பேசுனவர் தானே அவர்? இவ்வளவு நாள் நான் ஒருத்தனோடவீட்டுல சூழ்நிலைக்கைதியா இருந்தேன் மா. உன்னையும் ஆராதனாவையும் அடைச்சு வைச்சு இருந்தாங்க. அப்போலாம் உன்புருசன் நம்மள பாதுகாத்துக் கிழிச்சிட்டாரா? சரி அது கூட வேணாம். பொண்ணைக் காணோம் என்று ஒரு பொலிஸ்கம்ப்ளைன்ட் சரி குடுத்து இருப்பாரா? இவ்வளவுக்கும் எனக்கு பார்த்த மாப்பிள்ளையோட அப்பா ஒரு அமைச்சர். "
"மிரு!" அவளின் கோவத்தில் அதிர்ந்தவரை இரக்கமே இல்லாமல் பார்த்தவள்
"இதெல்லாம் ஏன் நடக்குது என்று எனக்குத் தெரியாது. இவங்க செய்றதுலாம் சரியா என்றும் தெரியாது. ஆனா, நியாயம் நம்மபக்கம் இல்லை என்று மட்டும் தெரியும்" என்று கூறியவள் ஒரு நொடி நிறுத்தி "அந்த ஆள் என் அப்பாவா இருக்கிறதை விடஇல்லாம இருக்கிறதே பெட்டர்" என்று கோவத்துடன் கூறியவளின் பேச்சு ஜனார்த்தனம் மாதவிக்கு அப்படியே தமயந்தியைநினைவூட்டியது.