Happy Reading.......
Please share ur likessssss and commentsssss.....
Epi17
காலைக்கதிரவன் உலகுக்கு ஒளிகொடுக்க அவ்வொளி விஜயின் அறையை நிரப்ப,
நேற்று இரவு நேரம் சென்று உறங்கினாலும் இன்று செய்ய இருக்கும் வேலைகளுக்கான லிஸ்ட் நீண்டதாகவே இருக்க இன்று மாலை ஜெர்மனி செல்வதற்கான அவனது பயணப்பொதிகளை பேக் செய்தவன் அதனை எடுத்து வைத்து விட்டு குளித்து வந்தவன் இடுப்பில் சுற்றி இருந்த டவலுடனேயே அவனது அறை மினி கிச்சேனில் அவனுக்கான தேநீரை தயாரித்து பருக. அவனது மனமோ "இன்றைய இந்த ஒருவனுக்கான தேநீர் அடுத்த முறை தயாரிக்கும் போதும் ஸ்ரீ குட்டி உனக்காகவும் இருக்கும்...."மனதில் கூறிய படி ஆபிஸ் செல்ல தயாராகி வந்தான்..
எதோ மனதில் ஓர் பாரம்... ஒரு வார்த்தை வீட்டினருக்கு என் கூட பேசுவவதற்கு என்ன....
அவள் உயிர் பிரிந்திருந்தால் இன்றைய இந்த வீட்டின் நிலை. என் நிலை. நினைக்கவே தாங்க முடியவில்லை அவனால். வீட்டில் இருப்பவர்களுக்கும் அப்படித்தானே இருக்கும்... தன் மனத்தை சமாதானப்படுத்தியவன் படிகளில் கீழிறங்கி வர அவனைவரும் காலை உணவை உண்டுக் கொண்டிருந்தனர்.
ஸ்ரீப்பா... என ஹரிணியின் குரலில் அவன் வருவதை உணர்ந்தவர்கள் எவரும் நிமிர்த்தும் பார்க்கவில்லை. நேற்று ஹாஸ்பிடலில் பார்த்தது இப்போது தான் பார்க்கின்றனர்..
திவ்யா ஹரிணியை இருக்கி விட அவனிடம் ஓடியவள், அவனை தூக்குமாறு கை நீட்ட அவளை தூக்கி கன்னங்களை தன் மீசைக்கொண்டு உரச குத்துது ஸ்ரீ ப்பா.. என அவன் முகத்தை தன் பிஞ்சு விரல் கொண்டு தடவி" இது வேணாம்" எனக்கூற ஓஹ் வேணாமா அப்போ கட் பன்னிரவா என கேட்க அவள் வேகமாக தலையசைத்தாள்... ஹனி பாப்பா போய் அம்மாகூட சாப்பிடுவீங்களாம். ஸ்ரீ ப்பா ஆபிஸ் போறேன் என அவள் கன்னங்களில் இதழ் பதித்து இறக்கி விட,'மம்மா சாப்பிடல? ஓஹ் டூ விட்டுடீங்களா?' நேற்று அவன் கூறியதை ஞாபகம் வைத்து கேட்க, மெலிதாக அவளுடன் சிரித்தவன் ஹ்ம்ம் என பாவமாக முகத்தை வைத்து கூற அதுவும் உண்மை என நம்பி அவள் அன்னையிடம் சென்றாள்.
மேசையின் அருகே தன் அப்பாவிடம் வந்தவன், "ப்பா உங்க கூட கம்பனி விஷமா கொஞ்சம் பேசணும், ஆபிசில் வெய்ட் பண்றேன் "என்றவன் தனது தாயை பார்த்தவன் அவன் உணவுக்காக மேசையில் அமறுவான் என எதிர் பார்த்து இருக்க அப்படியே கிளம்பிவிட்டான்.கண் கலங்க தன் மாமியாரை பார்க்க அவரும் அருணாவைதான் பார்த்தார்.தினமும் ஆபிஸ் செல்ல முன் ஹனி குட்டிக்கு வழங்கிய இதழ் ஒற்றல்கள் அவனது அன்னைக்கும் பாட்டிக்கும் தினம் கிடைக்கும்.
யாரும் பேசாதது வேறெவரோ ஒருவர் வீட்டில் இருக்கும் நினைப்பு தோன்ற, இதுவே தொடர்ந்தால் அனைவரையும் வெறுத்திடுவேன். கோபத்தால் அவர்களை நோகச் செய்திடுவேன். நான் எடுத்த முடிவே சரி. அவர்கள் சகஜமாக மாறவும் நான் இதை விட்டு வரவும் பிரிவு நல்ல வழியாக அமையும் என்று நினைத்தவன் ஆபிஸ் நோக்கி வண்டியை விட்டான்..
ரமேஷுக்கு கோள் செய்தவன், மீட்டிங் ஒன்று அரேன்ஜ் பண்ணுமாறு கூறி அதற்கான வேளைகளைகளையும் கூறி அப்பா வந்ததும் மீட்டிங் ஆரம்பமாகும் என்று கூறச்சொன்னான்.
அப்பாவிடம் தனியாக பேசினால் ஒரு போதும் சம்மதிக்க மாட்டார். பொறுப்புகளை மீண்டும் அவருக்கு சுமையாக கொடுக்க கூடாது.
இப்போது தான் சற்று ரிலாக்ஸாக இருக்கிறார். எனது பொறுப்பை நான் வரும் வரை இன்னொருவர் பொறுப்பில். அவ்வளவே..
அனைவர் முன்னிலையில் என் முடிவுகளுக்கு அப்பாவினால் மறுப்பு சொல்ல முடியாது. தந்தையை நன்கு அறிந்தவனாக மீட்டிங் அரேன்ஜ் செய்தான்..
விஜய் அவனது அறையில் அமர்ந்திருக்க உள்ளே வந்த ரமேஷ் "சார் ! அப்பா வந்துட்டாங்க" எனவும். ஓகே ரமேஷ் இதோ வரேன் என்றவன் அவனை பார்க்க என்ன ரமேஷ் யோசனை. ஒன்னும் இல்ல சார். 'அப்டின்னா சரிதான் வாங்க போகலாம். ' என விஜய் முன்னே நடக்க அவனை ரமேஷ் தொடர்ந்து மீட்டிங் ஹாலுக்கு வந்தனர். அவனது தந்தை, நிவியின் அப்பா, ஹரி,மற்றும் கம்பெனியின் முக்கிய பதவியில் இருப்போர் என அனைவரும் கூடியிருக்க அனைவருக்கும் தன் காலை வணக்கத்தினை கூறியவன்,
"அனைவரும் இந்த திடீர் மீட்டிங் எதற்கு என்று யோசித்திருப்பீர்கள்...என்னுடைய பர்சனல் காரணத்திற்க்காக சில காலம் நான் வெளிநாடு செல்லவிருப்பதனால் நான் இந்த கம்பனிக்கு வந்தது முதல் செய்துகொண்டிருக்கும் வேலைகள் நான் இங்கு இல்லாவிட்டாலும் எவ்வித தடையும் இன்றி செய்யப்பட வேண்டும் என்பதற்க்காக என்னுடைய வேலையினை என் தலைமையில் ஒருவர் பொறுப்பில் விட்டுச்செல்ல முடிவெடுத்துள்ளேன்... "
அவ்விடம் பெரும் அமைதி. வீட்டினருக்கு அதிர்ச்சி தகவல்...
"இனி இந்த கம்பெனியில் என் பொறுப்பில் இருந்த வேலைகள் என் தலைமையின் கீழ் Mr.ரமேஷ் பொறுப்பில் நடைபெறும்.....
நான் திரும்பி வந்ததும் பொறுப்புகள் எனக்கு கீழ் கொண்டுவரும் வரையில் அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு ஆறுமாதம் சென்ற பிறகு Mr.ரமேஷ்க்கு துணையாக மேலதிக வேலைகள் செய்வதற்கு அவருக்கு உதவியாக வேலையாட்கள் அமர்த்தப்படும்.அதுவரையில் அவ்வப்போது எனது உதவியுடன் இதனை தனியாக கொண்டுசெல்ல வேண்டும்.இது அவருக்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்று நினைக்கிறேன் நன்றி. "
அவனது உரை ஆங்கிலத்தில் தெளிவாகவும் இடையில் எவரும் கேள்வி கேட்க முடியாத வகையிலும் பேசிவிட்டு அவனது சீட்டில் அமர்ந்தான்..
'ப்ளீஸ், இனி உங்கள் வேளைகளில் ஈடுபடலாம் எனவும் அவ்விடம் வீட்டினர் தவிர்த்து அனைவரும் விடைப்பெற விஜயின் தந்தை ராஜின் பார்வை முழுதும் அவன் முகம் நோக்கியே.. அமர்ந்தவன் ஒரு முறை அவரை நிமிர்ந்து பார்த்தவன் அதன் பின்னர் அவர் பக்கம் திரும்ப வில்லை...
யாரும் கேட்கும் கேள்விகளுக்கு விடை சொல்லும் மனநிலை அவனிடம் இருக்க வில்லை... அவனருகே வந்த ஹரி 'இப்போ என்ன நடந்ததுன்னு இப்படியெல்லாம் பண்ற ஸ்ரீ '
நத்திங்... யாரும் என்னால நோக வேணாம்னு இருக்கேன்ண்ணா..
'யாரும் இப்போ உனக்கு என்ன சொல்லிட்டாங்க... ' ஹரி அவனை வினவ
'யாரும் ஒன்னும் சொல்லல்ல. அது தான் எனக்கு கஷ்டமா இருக்கு ' என்றான்..
'சாரி. உன் பொறுப்பில் விடலாம்னு தான் இருந்தேன். ஷோ ரூம் வேறு பார்த்துக்கணும்.. உன் மேல இன்னும் வேலைகளை தரமுடியாதுன்னு தான்..
விஜய் கூற 'அதுண்ணா ஓகே தான் என்னால எப்படியும் தலைக்கு பாரமான விஷயங்களை ஹேண்டில் பண்ண முடியாது டா.. 'அப்பப்ப கொஞ்சம் பார்த்துக்க.. என விஜய் கூற அவன் தோள்களில் தட்டியவன் பார்த்துக்கலாம் விடு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அப்புறம் மீட் பண்ணலாம்.வரேன் என்றவன் வெளியே செல்ல
அதுவரையுமே ராஜோ. ஹரியின்
அப்பாவோ எதுவும் பேசாது எழுந்துக்கொள்ள. தந்தை ஏசவாவது செய்வார் என பார்த்தவனுக்கு மனதுக்கு கஷ்டமாகி போனது.
ரஜோ அவன் இன்றே செல்லவிருப்பது தெரியாமல். மெதுவாக அவனுடன் பேச நினைத்திருக்க
தோல் மேல் கைபோட்டு பேசும் தந்தை இல்லை என்றாலும் தூர நிறுத்தி பேசும் தந்தையும் இல்லை.. என்னடா!!!! என இப்போதே அதட்டி பேசியிருந்தால் அவன் இங்கயே இருந்து விடும் நிலை தான் ஆனால்?????
விஜய் தனது கெபினுக்கு வர நேரம் பத்தை தாண்டியிருந்தது..
Please share ur likessssss and commentsssss.....
Epi17
காலைக்கதிரவன் உலகுக்கு ஒளிகொடுக்க அவ்வொளி விஜயின் அறையை நிரப்ப,
நேற்று இரவு நேரம் சென்று உறங்கினாலும் இன்று செய்ய இருக்கும் வேலைகளுக்கான லிஸ்ட் நீண்டதாகவே இருக்க இன்று மாலை ஜெர்மனி செல்வதற்கான அவனது பயணப்பொதிகளை பேக் செய்தவன் அதனை எடுத்து வைத்து விட்டு குளித்து வந்தவன் இடுப்பில் சுற்றி இருந்த டவலுடனேயே அவனது அறை மினி கிச்சேனில் அவனுக்கான தேநீரை தயாரித்து பருக. அவனது மனமோ "இன்றைய இந்த ஒருவனுக்கான தேநீர் அடுத்த முறை தயாரிக்கும் போதும் ஸ்ரீ குட்டி உனக்காகவும் இருக்கும்...."மனதில் கூறிய படி ஆபிஸ் செல்ல தயாராகி வந்தான்..
எதோ மனதில் ஓர் பாரம்... ஒரு வார்த்தை வீட்டினருக்கு என் கூட பேசுவவதற்கு என்ன....
அவள் உயிர் பிரிந்திருந்தால் இன்றைய இந்த வீட்டின் நிலை. என் நிலை. நினைக்கவே தாங்க முடியவில்லை அவனால். வீட்டில் இருப்பவர்களுக்கும் அப்படித்தானே இருக்கும்... தன் மனத்தை சமாதானப்படுத்தியவன் படிகளில் கீழிறங்கி வர அவனைவரும் காலை உணவை உண்டுக் கொண்டிருந்தனர்.
ஸ்ரீப்பா... என ஹரிணியின் குரலில் அவன் வருவதை உணர்ந்தவர்கள் எவரும் நிமிர்த்தும் பார்க்கவில்லை. நேற்று ஹாஸ்பிடலில் பார்த்தது இப்போது தான் பார்க்கின்றனர்..
திவ்யா ஹரிணியை இருக்கி விட அவனிடம் ஓடியவள், அவனை தூக்குமாறு கை நீட்ட அவளை தூக்கி கன்னங்களை தன் மீசைக்கொண்டு உரச குத்துது ஸ்ரீ ப்பா.. என அவன் முகத்தை தன் பிஞ்சு விரல் கொண்டு தடவி" இது வேணாம்" எனக்கூற ஓஹ் வேணாமா அப்போ கட் பன்னிரவா என கேட்க அவள் வேகமாக தலையசைத்தாள்... ஹனி பாப்பா போய் அம்மாகூட சாப்பிடுவீங்களாம். ஸ்ரீ ப்பா ஆபிஸ் போறேன் என அவள் கன்னங்களில் இதழ் பதித்து இறக்கி விட,'மம்மா சாப்பிடல? ஓஹ் டூ விட்டுடீங்களா?' நேற்று அவன் கூறியதை ஞாபகம் வைத்து கேட்க, மெலிதாக அவளுடன் சிரித்தவன் ஹ்ம்ம் என பாவமாக முகத்தை வைத்து கூற அதுவும் உண்மை என நம்பி அவள் அன்னையிடம் சென்றாள்.
மேசையின் அருகே தன் அப்பாவிடம் வந்தவன், "ப்பா உங்க கூட கம்பனி விஷமா கொஞ்சம் பேசணும், ஆபிசில் வெய்ட் பண்றேன் "என்றவன் தனது தாயை பார்த்தவன் அவன் உணவுக்காக மேசையில் அமறுவான் என எதிர் பார்த்து இருக்க அப்படியே கிளம்பிவிட்டான்.கண் கலங்க தன் மாமியாரை பார்க்க அவரும் அருணாவைதான் பார்த்தார்.தினமும் ஆபிஸ் செல்ல முன் ஹனி குட்டிக்கு வழங்கிய இதழ் ஒற்றல்கள் அவனது அன்னைக்கும் பாட்டிக்கும் தினம் கிடைக்கும்.
யாரும் பேசாதது வேறெவரோ ஒருவர் வீட்டில் இருக்கும் நினைப்பு தோன்ற, இதுவே தொடர்ந்தால் அனைவரையும் வெறுத்திடுவேன். கோபத்தால் அவர்களை நோகச் செய்திடுவேன். நான் எடுத்த முடிவே சரி. அவர்கள் சகஜமாக மாறவும் நான் இதை விட்டு வரவும் பிரிவு நல்ல வழியாக அமையும் என்று நினைத்தவன் ஆபிஸ் நோக்கி வண்டியை விட்டான்..
ரமேஷுக்கு கோள் செய்தவன், மீட்டிங் ஒன்று அரேன்ஜ் பண்ணுமாறு கூறி அதற்கான வேளைகளைகளையும் கூறி அப்பா வந்ததும் மீட்டிங் ஆரம்பமாகும் என்று கூறச்சொன்னான்.
அப்பாவிடம் தனியாக பேசினால் ஒரு போதும் சம்மதிக்க மாட்டார். பொறுப்புகளை மீண்டும் அவருக்கு சுமையாக கொடுக்க கூடாது.
இப்போது தான் சற்று ரிலாக்ஸாக இருக்கிறார். எனது பொறுப்பை நான் வரும் வரை இன்னொருவர் பொறுப்பில். அவ்வளவே..
அனைவர் முன்னிலையில் என் முடிவுகளுக்கு அப்பாவினால் மறுப்பு சொல்ல முடியாது. தந்தையை நன்கு அறிந்தவனாக மீட்டிங் அரேன்ஜ் செய்தான்..
விஜய் அவனது அறையில் அமர்ந்திருக்க உள்ளே வந்த ரமேஷ் "சார் ! அப்பா வந்துட்டாங்க" எனவும். ஓகே ரமேஷ் இதோ வரேன் என்றவன் அவனை பார்க்க என்ன ரமேஷ் யோசனை. ஒன்னும் இல்ல சார். 'அப்டின்னா சரிதான் வாங்க போகலாம். ' என விஜய் முன்னே நடக்க அவனை ரமேஷ் தொடர்ந்து மீட்டிங் ஹாலுக்கு வந்தனர். அவனது தந்தை, நிவியின் அப்பா, ஹரி,மற்றும் கம்பெனியின் முக்கிய பதவியில் இருப்போர் என அனைவரும் கூடியிருக்க அனைவருக்கும் தன் காலை வணக்கத்தினை கூறியவன்,
"அனைவரும் இந்த திடீர் மீட்டிங் எதற்கு என்று யோசித்திருப்பீர்கள்...என்னுடைய பர்சனல் காரணத்திற்க்காக சில காலம் நான் வெளிநாடு செல்லவிருப்பதனால் நான் இந்த கம்பனிக்கு வந்தது முதல் செய்துகொண்டிருக்கும் வேலைகள் நான் இங்கு இல்லாவிட்டாலும் எவ்வித தடையும் இன்றி செய்யப்பட வேண்டும் என்பதற்க்காக என்னுடைய வேலையினை என் தலைமையில் ஒருவர் பொறுப்பில் விட்டுச்செல்ல முடிவெடுத்துள்ளேன்... "
அவ்விடம் பெரும் அமைதி. வீட்டினருக்கு அதிர்ச்சி தகவல்...
"இனி இந்த கம்பெனியில் என் பொறுப்பில் இருந்த வேலைகள் என் தலைமையின் கீழ் Mr.ரமேஷ் பொறுப்பில் நடைபெறும்.....
நான் திரும்பி வந்ததும் பொறுப்புகள் எனக்கு கீழ் கொண்டுவரும் வரையில் அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு ஆறுமாதம் சென்ற பிறகு Mr.ரமேஷ்க்கு துணையாக மேலதிக வேலைகள் செய்வதற்கு அவருக்கு உதவியாக வேலையாட்கள் அமர்த்தப்படும்.அதுவரையில் அவ்வப்போது எனது உதவியுடன் இதனை தனியாக கொண்டுசெல்ல வேண்டும்.இது அவருக்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்று நினைக்கிறேன் நன்றி. "
அவனது உரை ஆங்கிலத்தில் தெளிவாகவும் இடையில் எவரும் கேள்வி கேட்க முடியாத வகையிலும் பேசிவிட்டு அவனது சீட்டில் அமர்ந்தான்..
'ப்ளீஸ், இனி உங்கள் வேளைகளில் ஈடுபடலாம் எனவும் அவ்விடம் வீட்டினர் தவிர்த்து அனைவரும் விடைப்பெற விஜயின் தந்தை ராஜின் பார்வை முழுதும் அவன் முகம் நோக்கியே.. அமர்ந்தவன் ஒரு முறை அவரை நிமிர்ந்து பார்த்தவன் அதன் பின்னர் அவர் பக்கம் திரும்ப வில்லை...
யாரும் கேட்கும் கேள்விகளுக்கு விடை சொல்லும் மனநிலை அவனிடம் இருக்க வில்லை... அவனருகே வந்த ஹரி 'இப்போ என்ன நடந்ததுன்னு இப்படியெல்லாம் பண்ற ஸ்ரீ '
நத்திங்... யாரும் என்னால நோக வேணாம்னு இருக்கேன்ண்ணா..
'யாரும் இப்போ உனக்கு என்ன சொல்லிட்டாங்க... ' ஹரி அவனை வினவ
'யாரும் ஒன்னும் சொல்லல்ல. அது தான் எனக்கு கஷ்டமா இருக்கு ' என்றான்..
'சாரி. உன் பொறுப்பில் விடலாம்னு தான் இருந்தேன். ஷோ ரூம் வேறு பார்த்துக்கணும்.. உன் மேல இன்னும் வேலைகளை தரமுடியாதுன்னு தான்..
விஜய் கூற 'அதுண்ணா ஓகே தான் என்னால எப்படியும் தலைக்கு பாரமான விஷயங்களை ஹேண்டில் பண்ண முடியாது டா.. 'அப்பப்ப கொஞ்சம் பார்த்துக்க.. என விஜய் கூற அவன் தோள்களில் தட்டியவன் பார்த்துக்கலாம் விடு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அப்புறம் மீட் பண்ணலாம்.வரேன் என்றவன் வெளியே செல்ல
அதுவரையுமே ராஜோ. ஹரியின்
அப்பாவோ எதுவும் பேசாது எழுந்துக்கொள்ள. தந்தை ஏசவாவது செய்வார் என பார்த்தவனுக்கு மனதுக்கு கஷ்டமாகி போனது.
ரஜோ அவன் இன்றே செல்லவிருப்பது தெரியாமல். மெதுவாக அவனுடன் பேச நினைத்திருக்க
தோல் மேல் கைபோட்டு பேசும் தந்தை இல்லை என்றாலும் தூர நிறுத்தி பேசும் தந்தையும் இல்லை.. என்னடா!!!! என இப்போதே அதட்டி பேசியிருந்தால் அவன் இங்கயே இருந்து விடும் நிலை தான் ஆனால்?????
விஜய் தனது கெபினுக்கு வர நேரம் பத்தை தாண்டியிருந்தது..
Last edited: