• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரும்புக்கோர் பூ இதயம்-3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
Hiiiiiii.... dearssssss.......
Happy Reading....

Epi3

அன்று சனிக்கிழமை காலை கதிரவன் ஒளி பரப்ப, விஜய்,அவனது வீட்டிலிருந்து வரவழைத்த கருப்பு நிற (land crusier200) இல் தருண், பிரபா மற்றும் நிவி அவளது இரு தோழிகளுடன் ஏற ஊர் நோக்கி அவர்களது பயணம் தொடங்கியது.நிவி வழியில் ஏதாவது வாங்க வேண்டுமென்றால்,இப்போதே வாங்கி விடுவோம், ஊருக்கு போன பிறகு நான் திரும்ப காரில் கை வைக்க மாட்டேன் என விஜய் கூறினான்.
இல்ல அத்து எல்லாம் எடுத்துட்டேன்.
பின்னால கம்போட்டப்லா இருக்கா என கேற்கவும் ஓகே அத்தான் வீ செட்டில்ட். பீல் கம்போடபில் அத்து என்றாள்.

நிவியின் நண்பிகளான மது, வர்ஷினி தருணிடம் அண்ணா ஊர்ல ஆறெல்லாம் இருக்கா என கேட்க, பிரபா தருணை முந்திக்கொண்டு ;எதுக்கு ஆற நாசம் பண்ணவா? சுத்தசமான குடிநீரை நீ குளிச்சு கூவ நீரா மாற்றவா என கேட்டான்.
அவனை முறைத்தவர்கள் பின்னாலிருந்த பையினால் அவனை ஒரு வழி பண்ணி விட்டனர். விஜேயுடன் தருண் முன்னாள் அமர்ந்திருக்க பின் இருக்கையில் பிரபா மட்டுமே வர அதற்கு பின்னே அமர்ந்திருந்த தோழிகளுக்கு வசதியாய் போனது.
டேய் இவள்களுடன் என்னை கோர்த்து விட்டு நீ எல்லாம் நண்பனாட? பேச்சுக்கு ஒன்னு சொன்னா கொலை பண்ண பாக்குறாளுக.
என்னை இறக்கி விடு நா பஸ்ல வரேன்,அய்யோ அப்பா !வலி தாங்க முடியலடா.எதுக்கு பக்கி அப்பாவை வரசொல்ர என நிவி கேக்க.

நிவி அவனை எதுக்கு எப்போ பாரு கிண்டல் பண்ணுற இதோ என்கூட வரானே இவனுக்கு ஏதாச்சும் சொல்றது விஜே அதில் தருணையும் இழுத்து விட யேன்டா உனக்கு இந்த வேண்டாத வேல தருண் விஜயை முறைக்க, ஹையோ முகத்தை பார்த்து பேசிட்டாலும் முத்து பல்லெல்லாம் சிதறிரும் என முனங்கியவள். போ அத்து இவன் என்ன பண்ணாலும் தாங்குகிறான் நண்பேன்டா என பின்னாலிருந்து நிவி பிரபாவின் கழுத்தை இறுக்கிக்கொள்ள ஐயோ காப்பாத்துங்க என்னை கொலை பண்ணுறா என கத்திக்கொண்டே அவளது தலையில் குட்ட டேய் பக்கி கூட்டாதடா வலிக்குது எனவும், அப்போ எனக்கு மட்டும் சுகமா இருக்கா, எனக்கும் தான் வலிக்குது டி ராட்சசி என இருவரும் மாரி மாரி மாற்றவர்களை ஒரு வழிப்படுத்தி கலகலப்பாக, இடையில் காலை உணவையும் எடுத்துக்கொண்டு அவர்கள் ஊருக்கு வந்தனர்.

தாரா அவளுடைய பெற்றோருடன் தங்கள் தோட்ட வீட்டுக்கு நேற்று இரவே வந்ததனால் காலையே
எழுந்த தாரா அனிதாவையும் எழுப்பி குளித்து கிளம்பினர்.மத்தியானம் சமையலுக்கு ஏற்பாடுகள் எல்லாம் வேலையால் உதவியுடன் மாதவி சமையலில் ஈடுபட்டிருக்க, ம்மா அண்ணா எத்தனை மணிக்கு வருவாங்க ? தாரா கேட்கவும் 10மணிக்கெல்லாம் வந்துருவாங்கடா குட்டி என மாதவி கூறினாள்.

இப்போவே மணி 9 ஆச்சு, நீ நம்ம ரோஜா தோட்டம் பக்கமா அப்பா போனாங்க அனிதாவை கூட்டிக்கொண்டு அங்கே போய் வாங்க என்று கூறினார்.

புதிதாக ரோஜா தோட்டம் அமைக்க வாங்கிய நிலப்பகுதியில் ரோஜாச்செடிகளை நட்டு மூன்று மாதங்களே. மொட்டுக்கள் நிறைந்து பூக்கள் மலர இன்னும் ஒரு 3, 4 நாட்கள் எனும் நிலை.

தாரா எதையோ தேடிக்கொண்டு இருப்பதை கண்டு என்ன வேணும் குட்டி என, ம்மா மட்குடம் ஒன்னு இருந்தது அது வேணும்மா.

இதோ இங்கே உள்ளதுடா என அதனை எடுத்து குடுத்தார். அப்பாட சொல்லி தண்ணி எடுங்க குட்டி நீ கிணற்றுல அல்ல வேணாம் என சொல்லியே அனுப்பினாள்.

தோட்டத்தோடு ஓரமாக மூன்று பக்கமாக சுவர் கட்டி படிகளில் இறங்கி சென்று அள்ளி குளிக்கும் வகையில் நிலத்தோடு அமைந்த கிணறு ஒன்று உள்ளது.தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச மோட்டார் போட்டும், குளிப்பதற்கு வசதியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

அனிதாவுடன் இருவரும் ஓவ்வொரு கூடைகள் கையில் எடுத்துக்கொண்டு வழி முழுதும் உள்ள பல வித பூக்களை பறித்து போட்ட வண்ணம் குமாரை தேடி சென்றனர்.
தூரத்திலே தாராவை கண்டவர் என்றும் போல மகளின் அழகிய முகம் கண்டு நெகிழ்தவர், ஸ்ரீ அப்பா இங்க இருக்கேன் என கூப்பிட்டார்.இருவரும் அவரிடம் சென்று சிறிது நேரம் அவருடன் செல்லம் கொஞ்சி விட்டு

ஓரு ஓரமாக மா மரம் ஒன்றின் கீழ் இளைப்பாற வென அமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துக்கொண்டு பறித்த பூக்களை தொடுத்து கழுத்துக்கு, கைக்க்கு, தலைக்கு கிரீடம் என பூக்களால் செய்து தாரா அணிந்துகொண்டாள்.
இது எப்போதும் இங்கு வந்தால் தாராவின் வளமை.
அனிதாவுக்கு வரைவதில் ஆர்வம் அவள் கொண்டு வந்த அவளது புத்தகத்தில் வரைந்ததுக்கொண்டு இருந்தாள்.

நீல வண்ண பாவாடை, சட்டையும் வெள்ளை வண்ண நிற தாவணியும் அணிந்து பூக்கள் பலவண்ணத்தில் சூடி குட்டி தேவதையாக இருந்தாள்.

அனி நல்லாயிருக்கா? ஹேய் சூப்பரா இருக்குடி, இரு அப்பாகிட்ட போன் வாங்கி போட்டோ எடுக்கலாம்.
இரு எடுத்துட்டு வரேன் என புனிதா குமாரிடம் போன் வாங்கி வந்து இருவரும் பூ மாலைகளை போட்டு போட்டோ எடுத்து கொண்டனர்.

பின்னர் அனி கிணத்துல இந்த குடத்துக்கு தண்ணி எடுக்கலாம்டி எனக்கு தூக்கி இடுப்புல வெச்சுகிட்டு நடக்க ஆசையா இருக்குடி, ஒரே ஒரு வாட்டி வாயேன் டி. அச்சோ வேணாம்டி .
அம்மா திட்டும் அப்பாகிட்ட சொல்லு அள்ளி தருவாங்க,

ஹையோ அனி அப்பா தூக்க விட மாட்டாங்கடீ. ப்ளீஸ் போலாமே,
புனிதா முடியாது எனவும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு உட்க்கார்ந்து இருந்தாள்.

ஹையோ கோவிக்காதடீ . விழுந்துட்டேன்னா என்ன பண்றதுனு தானே வேணான்றேன்.
அவள் முகம் பார்த்த அனிதா, சரி நா இங்க இருந்து அப்பா வாரங்களான்னு பார்த்துக்கொள்கிறேன் நீ சீக்கிரமா எடுத்துட்டு வா ஓகேயா?

ஓகே ஓகே என துள்ளிய தாரா செல்ல பார்க்கவும் தாரா கொஞ்சமா அள்ளிகோ பாரமா இருக்கும்டி என்றாள் அடி இது பெரியவங்க தூக்கு குடம் இல்லடி சின்னது,என்னால முடியும்.

ஆசையா இருக்குடி அப்பா அதுல குளிக்கவும் விட மாட்டாங்க தண்ணியாவது அள்ளி பார்க்கிறேன். ஹ்ம் ஓகே போ சீக்கிரம் வந்துரு.தாரா குடத்தை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு கிணற்றை நோக்கி போனாள்.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top