• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரும்புக்கோர் பூ இதயம் -4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
Hiiiiii
Happy Reading....
Epi4

ஹே ஸ்ரீ குட்டி வந்ததுமே என்ன ரொம்ப டென்ஷன் பண்ணிட்ட என அவள் தலையை கலைத்துவிட்டான்.உட்கார்ந்த வாரே அண்ணனின் கால்களை கட்டிக்கொண்டவள் அப்படியே விஜயை நோக்க அவனும் இவளைத்தான் பார்த்திருந்தான்.மனதில் எவ்வித எண்ணங்களும் இன்றி அழகிய ஓவியத்தினை ரசிக்கும் பார்வை அது..
தன்னை யாரும் பிழையாக எண்ணி விடுவார்களோ என பயந்துவிட்டான். அவனருகே வந்த நிவி, விஜய் முழிப்பதை பார்த்து நத்திங் டு வொர்ரி அத்து, ஷி ஹாவிங் ஹர் பீரியட்ஸ் ஏற்கனவே உன்ன பாத்து பயந்துட்டா போல. அதான் மயங்கிட்டா, பாவம் டி சின்ன பொண்ணு, நல்லா சின்ன பொண்ணுதான் அத்து அவளுக்கு 17 வயசாகுதாம்,பார்க்கத்தான் பத்து வயது போல இருக்கா.ஆமா அத்து பொண்ணு உன்ன பாத்ததுமே மயங்கிட்டா என்ன பண்ண என அவனை கிண்டல் பண்ண, அவளை அடிக்க வரவும் அத்து கிட்ட வர முடியல நாற்றம் ஊருக்கே அடிக்குது இப்பயாவது குளி என்றவாறு தருண் வீட்டினுள் புகுந்து விட்டாள். அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று இவனும் குளித்து உடை மாற்றிக்கொண்டான்.நிவி மற்றும் அவளது நண்பிகள் தாராவின் அறையில் இருந்தனர்
வீட்டுக்கு அழைத்து வரப்பட்டவள் குளித்து உடை மாற்றி இருக்க அவளை உட்கார வைத்து தலை துவட்டியவாறே புனிதா கூட விளாடிண்டு தானே இருந்தே குட்டி கிணற்று பக்கம் எதுக்கு போன எனவும், தலையை தூக்கி தாயை பாவமாக பார்த்த வாரு குடத்துக்கு தண்ணி அல்ல போனேனா நேற்றிலிருந்து கொஞ்சமா வயிறு வலிச்சுக்கிட்டே இருந்தது.சொன்னா அப்பா இங்க வரமாட்டாங்களோன்னு சொல்லல்ல.குடத்துல தண்ணி அள்ளி தூக்கும் போது வலி தாங்க முடியல அப்டியே குடமும் விழுந்தது.புனிதாவை கூப்பிட்டேன் அவ வரவே இல்ல.ஆமா நீ கத்தினா உனக்கே கேக்காது இதுல எங்க எனக்கு கேக்கும் என புனிதா கூற

அப்போ தான் அவங்க வந்தாங்க. அங்க போ வேண்டாம்னு உன்ன சொன்னேன் தானேடா குட்டி. நல்ல நேரம் தம்பி வந்தார்.கிணத்துல மயங்கி விழுந்திருந்தால் கடவுளே நினைக்கவே நெஞ்சு படபடங்குது.சரிடா குட்டி நீ புனிதாகூட இரு அம்மா அவங்களுக்கு சாப்பாடு குடுத்துவிட்டு வருகிறேன்.என்று அவளை அறையில் விட்டு சென்றார்.
விஜய் பிரபா அப்பாவுடன் வெளியில் அரட்டை அடித்துக்கொண்டிருக்க அங்கே வந்த தருண் வாங்கடா சாப்பிடலாம் உள்ள எல்லாம் அம்மா வெச்சுட்டாங்க.
ஆமாண்டா பசி தாங்கமுடியலை என பிரபா கூறிக்கொண்டே உள்ளே சென்றான்.அவர்கள் சாப்பிட்டதும் நாங்க சாப்பிட்றோம் ஆன்ட்டி என்ற நிவி தாராவின் அறைக்கு செல்ல திரும்பியவள் அத்து உன் ஹாண்ட் செயின் எங்க காணும் என கேட்டாள். அப்போது தான் அதை கவனித்தவன் அது என யோசித்தவன் பின்,டவல்ல மாற்றியிருந்தது நிவி அதுலதான் இருக்கும் கொஞ்சம் பாரு நானும் கவனிக்கல எனவும்,என்னடா பிறந்ததில் இருந்து போடற மிஸ் பண்ணினது கூட விளங்கல்லையா உனக்கு,வெயிட் பன்னு உள்ள பாக்குறேன் என்றவள் தாராவிடம் உள்ளே சென்று டவல் எங்கே அதில் விஜயின் செயின் சிக்கி இருந்ததாம் என கேட்டாள்.அது அம்மா வோஷ் பண்ண போட்டாங்கக்கா எனவும் அதுல ஒன்னும் இருக்கல்லயே மா நான் பார்த்துதான் போட்டேன்.ஐயோ அது பிளாடினம் செயின் ஆன்ட்டி அவன் ரொம்ப ஆசையா சின்னத்தில் இருந்து வெச்சிருப்பான் எனவும். ஐயோ கிணத்துக்கிட்ட விழுந்திச்சோ தெரில பசங்கள பார்க்க சொல்லலாம் என்றவர் தருணிடம் விஜய் செயின காணாமா மேப்பா.சாப்பிட்ட பிறகு தோட்ட பக்கம் போய் பாருங்க, நம்மள தவிர யாரும் அந்த பக்கம் போமாட்டாங்க.அயோ இருக்கட்டும் ஆன்ட்டி நா அப்புறமா பாக்குறேன் அது பிரச்சினை இல்ல என சாப்பிட அமர்ந்தனர்.

அறைக்குள் இருந்தவளது மனமோ பந்தய குதிரையின் வேகத்துக்கு ஓட ஆரம்பித்து இருந்தது.ஐயோ கண்டு பிடித்து விடுவார்களோ, மனம் படபடத்தது.இவளை பார்த்துக்கொண்டிருந்த புனிதா, என்ன தாரா இப்டி முழிக்கிற, கண்ணு ரெண்டும் இப்டி அடிச்சுக்குது
இல்லையே அப்டில்லாம் ஒன்னும் இல்ல.அந்த அண்ணாவோட செயின் தொலஞ்சி போச்சுன்னு அதைத்தான் யோசிக்கிறியா? ஆமா என தலையை ஆட்டி வைத்தாள். நிவி அறைக்குள் வந்து இவர்கள் இருவரையும் அவர்களுடன் சாப்பிட அழைக்க தாராவை பார்த்து என்னாச்சு இன்னும் உட்கார்ந்த இடத்தை விட்டு எலாம இருக்க , இல்லக்கா அண்ணாவோட செயின் காணோம்னு வொர்ரி பன்றா அதான்.ஆஹ் அதுவா அவனுக்கே அது கணக்கில்லலையாம்.நீ வொரி பண்ணிக்காத, வா ஒன்னா எல்லாம் சாப்பிடலாம்.. என்று சாப்பிட சென்றனர்.

தாரா மயங்கி விழும் போது விஜய் அவளை தாங்க ஒரு கையை முதுகுக்கும் ஒருகையால் அவளது மற்றைய கையை மணிக்கட்டோடும் பிடித்திருந்தான்.அவளது கையில் இருந்த செயினில் அவனதும் மாட்டிக்கொள்ள அத்தோடு டவலிலும் சிக்கி கொள்ள விஜயின் கையிலிருந்து கலண்டுவிட்டிருந்தது.
விஜய்க்கு அவனுக்கு சிறு வயதில் அவனது இடுப்பிற்கு போட்டு விட்டது. அவனுக்கு மிகவும் பிடித்தமானது. எனவே பெரிதானதும் அதனை கையில் இரண்டு சுற்று சுற்றி போட்டுக்கொண்டான்.
வீட்டிற்கு வந்து குளிக்கும் போதே இதை தாரா கவனித்தாள்.யாருடையது என யோசித்தவள் ஓஹ் ஹீரோ சார் தூக்கிவிடும் போது மாட்டிக்கிச்சா என பார்த்தவள்,குண்டுமணிகள் போன்று அழகாக விட்டு விட்டு கோர்த்த செயின் அது.மணிகளுக்கு இடையே வெண்கற்கள் பதித்து இருந்தது. அப்போது அது வெறும் வெள்ளியாக இருக்கும் என்றே நினைத்தாள்.அதை திருப்பி கொடுக்கவேண்டும் எனும் எண்ணம் யேனோ தாராவிற்கு வரவில்லை. அது அதன் அழகினாலோ. அல்லது விஜய்யினது என்பதாலோ அவளே அறியாள்.
நிவிதா அது பிளாட்டினம், ஆசையாக பல வருடங்களாக வைத்திருந்தது எனவும், குடுத்து விட நினைத்தவள் ரொம்ப வருஷமா அவங்க போட்டது தானே இனி நான் போட்டுக்குறேன் என மனதுக்குள் கூறிக்கொண்டாள்.அதுவும் யேனோ !
பகல் உணவை சாப்பிட்டவர்கள் தோட்டத்தை சுற்றி பார்ப்பதாக கூறிக்கொண்டு அவ் ஊரை ஒரு வழி பண்ணினர்,மாலை நிவியும் அவளது நண்பிகளும் தோட்டத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து அரட்டையில் இருக்க மற்ற மூவரும் கிணற்றில் குளித்தனர்.மாலதி இவர்களுக்கான தேநீர். சிற்றுண்டிகளை வேலையாளிடம் அனுப்பிவிட்டிருந்தார்.குளித்து வந்தவர்களும் இவர்களுடன் இணைந்து தேநீர் அருந்த, நிவி அத்தான் செயின் இருந்ததா தேடிபார்த்தியா எனவும் பார்த்தேன் நிவி, ஒரு சமயம் கிணத்துல விழுந்திருக்கும்,விடு அம்மாட்ட சொல்லி அதே போல ஒன்னு பண்ணிக்கலாம், பட் ஐ மிஸ்ஸிங் இட் வெரி மச், பிறந்தது முதல் என்கூட இருந்தது என கையை நீவி விட்டுக்கொண்டான்.ஏன் பிரபா பிரண்டுக்காக இதுகூட பண்ணலேன்னா எப்படி, நீங்ககெல்லாம் எதுக்கு பிரென்ஸ்ன்னு இருக்கீங்க? இப்போ நீ என்ன சொல்ல வர, இவ்வளவு வொரி பன்ராங்க அத்தான், கொஞ்சம் கிணத்துல குதிச்சு தேடலாமில்ல.சொல்லுவடி யேன் சொல்லமாட்ட இவ்வளவு அத்தான் கழுத்துல தொங்குறவ நீ பாய வேண்டியது தானே என்னை கொலை பண்ணப்பாக்குற, நா தேடறேனு தான் சொன்னேன் அத்தான் தான் விடல.நா வேணும்னா கிணத்துல குதிச்சு தேடட்டா அத்தான் .
வேணாண் டா நிவி விடு அந்த கதையை,
இல்ல அத்து பிரபா கிணத்துல இறங்கி தேடவான்னு கேக்குறாங்க, அவனை பார்த்த விஜய் முடியுமாடா என கேற்க நல்லா வருவீங்கடா ஒரு செயினுக்காக சாக சொல்றியா எனவும், விஜயும் தருணும் பக்கென்று சிரித்து விட்டனர். சும்மாடா என அவனை களாய்த்தவர்கள்,
ஓகே கைஸ் நைட் என்ன பண்ணலாம் என கேட்டவர்கள், இந்த இடமே ஓகேப்பா வீட்லன்னா அவர்களுக்கும் டிஸ்ட்டபா இருக்குமே எனவும் இந்த இடம் சூப்பரா இருக்க இந்த இடத்திலே அவர்களது ஓபன் நைட் கிளப்பாக மாற்ற முடிவெடுத்தனர்.
ஒரு பக்கம் மியூசிக், இன்னொரு பக்கம் பிபி கியூ போட தேவையான ஆயத்தங்கள்.டின்னெர் மாத்திரம் மாதவி செய்து தருவதாக கூறவும் ஓகே என்றனர்.வீட்டிற்கு சென்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு வருவோம் என வீட்டிற்கு சென்றனர்.

Ff
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top