Miru apdi kekumodhu mattum avaruku valikudho....?கொஞ்சம் நேரத்திற்கு முன்னால் பேசிய வார்த்தைகளை மனதில் கொண்டு வந்து, “என்னைத் தவிர வேறொருப் பெண்ணை தீண்ட மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க. அப்போதான் உங்க எண்ணம் நிறைவேறும்” என்றாள் உறுதியாக!
அவளின் முகம் கோவைப்பழம் போல சிவந்திருக்க, தலை கலந்து கிடக்க, விழிகளில் இருந்த மை கரைந்து கண்ணுக்கு கீழே கருவளையம் உருவாக்கிட, அத்தனையும் அவளின் அழகை அதிகரித்துக் காட்டியது.
மெல்ல படுக்கையில் அவளைக் கிடத்திவிட்டு, “உன்னிடம் சத்தியம் பண்ணிக்கொடுத்துட்டு, வெளியூர் போறேன் என்ற பெயரில் பெண்களோடு கூத்தடித்தால் என்ன செய்வே” என்றவனின் பார்வையே, நான் சொன்னதை செய்வேன் என்று அவளுக்கு உணர்த்தியது.
விஷ்ணுவைத் தடுக்க வழி தெரியாமல் போக, “நீங்க இன்னொரு பெண்ணைத் தீண்டியது தெரிந்தால், நான் என்னையே கொஞ்சம் கொஞ்சமாக அழிச்சுக்குவேன். நல்ல சிவப்பு விளக்கு ஏரியாவாக பார்த்து நானும் போயிடுவேன். நீங்க எத்தனை பெண்களைத் தொடுறீங்களோ, அதைவிட அதிகமாக எண்ணிக்கையில் என்னைப் பலர் ஆம்பளைங்க தொடுவாங்க பரவால்லையா” என்று வார்த்தைகளை சிதரவிட, அதைகேட்டு அவன் விழியிரண்டும் கோபத்தில் சிவக்க, தன்னையும் அறியாமல் அவளை அடித்திருந்தான்.
அவன் அறைந்த வேகத்தில் படுக்கையிலிருந்து உருண்டு விழுந்தவள், கட்டிலைப் பிடித்து எழுந்து நின்றவளின் பார்வை அவன் மீது படிந்தது. தீ என்று சொன்னால் வாய் வெந்துவிடாது என்ற முடிவிற்கு வந்தவள், தான் சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாகக் கூறினாள்.
“நான் உங்களுக்கு மட்டும் மனைவியாக இருக்கணுமா? இல்ல பலரோட ஆசையைத் தீர்க்கும் வேசியாகனுமான்னு நீங்கதான் சொல்லணும்” என்றவள் உச்சரித்த வார்த்தைகள், அவனை சம்பட்டியால் தாக்கியது.
“நளினி” என்று வீடே அதிரும்படி கத்தியவன், இரண்டே எட்டில் அவளை நெருங்கினான். அவளது கூந்தலைக் கொத்தாகப் பிடித்து இரண்டு இரண்டு கன்னங்களிலும் மாறிமாறி அறைந்தான். அவன் கைகள் வலிக்க அடிப்பதை நிறுத்திவிட்ட கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் உச்சரித்த வலுவான வார்த்தைகள் அவன் இதயத்தை சுக்குநூறாக உடைத்திருக்க, “நீ பொண்ணு மாதிரியா பேசற?” என்றவன் மீண்டும் அடிக்க கையோங்கினான். அவனது முகம் செந்தணல்போல காட்சியளிக்க, அதைக் கண்டு மிரளாமல் நின்றாள்.
“நீங்க சொன்ன எந்த கண்டிஷனையும் மீற மாட்டேன். இந்த வீட்டைவிட்டுப் போனாலும், உங்களுக்கு விருப்பம் இல்லாத இடத்திற்கு போக மாட்டேன்” என்று சத்தமாக கூறியவளின் பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்தான் விஷ்ணு.
அவளது விழிகள் எப்போதும் ஒருவிதமான பயத்தை சுமந்திருக்கும். இன்று அவளின் விழிகளில் அவன் கண்டது கனல். அந்தளவுக்கு உக்கரமான மிருணா அவனது விழிகளை நேருக்கு நேராக சந்தித்து, “அதே மாதிரி நீங்களும் என்னைத் தவிர வேறொரு பெண்ணைத் தொடக்கூடாது” என்றாள் உறுதியுடன்.
தன்னுடைய நிலையிலேயே நின்ற கணவனை கண்ணீரோடு ஏறிட்டு, “நான் உன்னை மட்டுமே நம்பி வந்தவள், என்னோட பிடிவாதத்தை நீ சாதாரணமாக நினைக்காதே!” என்ற எச்சரிக்கையுடன் கணவனை நெருங்கிய மிருணா, இரு கரங்களால் அவன் முகத்தைத் தாங்கி விழி மூடினாள்.
அவளது மூடிய விழிகளுக்குள் தன் உயிர் மணாளன் வேறொரு பெண்ணுடன் சரசத்தில் ஈடுபடுவதைப் போல கற்பனை செய்து பார்த்தவள், “மாமா” என்றபடி வேதனையுடன் நின்றவளை இமைக்காமல் நோக்கினான்.
அடுத்து அவனின் இதழ்நோக்கி குனிந்தவளைப் பார்த்து, “ஏய் என்னடி பண்ற?” என்று பதறியபடி அவளைப் படுக்கையில் பிடித்து தள்ளிய வேகத்தில் அறையைவிட்டு வெளியேறினான்.
கொஞ்ச நேரத்தில் அலுவலகம் கிளம்பிச் சென்ற மகனை விநோதமாகப் பார்த்த தாயிடம், “உங்க மகனுக்கு நினைத்து நடக்கல என்ற கோபம். அதுதான் சார் இவ்வளவு வேகமாக போறாரு” என்று சொல்லிவிட்டு டிவியைப் போட்டு அமர்ந்தாள்.
தன்னுடைய மகளின் கணிப்பு சரிதான் என்ற எண்ணம் தோன்ற, “ம்ம்” என்றபடி துவைத்த துணிகளை மடிக்க அறைக்குச் சென்றார். சகாதேவன் வெளியே எங்கோ சென்றிருக்க, கார்த்திகேயன் தன்னுடைய அறையில் அமர்ந்து கிரிகெட் பார்த்துக் கொண்டிருந்தான்.
வீட்டிலிருந்து கிளம்பிய விஷ்ணு நேராக சென்றது அவர்களின் கடைக்குத்தான். அவன் கடைக்குள் நுழைவதைக் கண்ட பணியாளர்கள் வேகமாக தங்களுடைய வேலையைக் கவனிக்க, நேராக தன்னுடைய கேபினுக்குச் சென்று அமர்ந்தான்.
ஒருவரின் பார்வையை வைத்தே அவர்களின் மனதை எடைபோடும் விஷ்ணுவினால், மிருணாளினி மனத்தைக் கணிக்க முடியவில்லை. பல நேரங்களில் அவனின் கட்டளைக்குப் பயந்து பணிந்து போகும் பெண், சில நேரங்களில் மட்டும் சாதூர்யமான பேச்சினில் அவனைத் தோற்கடித்தாள்.
அந்த சிந்தனையில் உளன்ற விஷ்ணுவின் காதில், “சார் மே ஐ கமின்” என்ற குரல்கேட்டு தன்னிலைக்கு மீண்டவன், “எஸ் கமின்” என்றான்.
நேராக உள்ளே வந்த பி. ஏ. ராஜ்குமார், “இன்னைக்கு நைட் ஒரு பார்ட்டி இருக்கு சார். அதில் நீங்களும், உங்க மனைவியும் ஜோடியாகக் கலந்துக்கணும்னு சொன்னார்” என்று அவனிடம் கூற, அவனது மூளை வேகமாக செயல்பட தொடங்கியது.
“நீ மாற்ற வேலையைக் கவனி” அவனுக்கு கட்டளையிட்ட விஷ்ணு, வீட்டிற்கு அழைத்து விவரத்தைக் கூறி, அவளை அதற்கு ஏற்றார்போல தயார் செய்ய சொன்னான்.
அவன் பேசிவிட்டு போனை வைத்ததும், “இந்த அண்ணன் காரணமில்லாமல் ஒரு விஷயத்தை செய்ய மாட்டானே?” என்று தீவிரமான சிந்தனையுடன் கார்த்திகேயனின் அறைக்குச் சென்றாள்.
தங்கையின் முகம் பார்த்து டிவியின் வால்யூமை குறைத்தவன், “நீ எக்ஸாம் எழுதும்போது கூட இவ்வளவு யோசிக்க மாட்டீயே? ஆமா என்ன விஷயம்?” என்றவன் விசாரிக்க, விஷ்ணு கூறியதை பெரியவனிடம் ஒப்பித்தாள் கீதா.
அவள் சொல்லி முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்ட கார்த்தி, “நீ சொல்வதைப் பார்த்தால், அண்ணன் மனசில் ஏதோ திட்டம் இருக்கும்னு மட்டும் கன்பார்ம் ஆகுது. இப்போ அதை முறியடிக்க எதுவும் நம்மால் செய்ய முடியாது” என்றான் தீர்மானமாக.
அவன் சொன்னதைக் காதில் வாங்காமல், “நம்ம முதலில் அண்ணியைத் தயார் பண்ணலாம். அப்புறம் இது பற்றி யோசிக்கலாம்” என்றவள் நேராக மேலே சென்று மிருணாவைத் தயாராகச் சொன்னாள். அவள் தேர்வு செய்த சேலையைத் தன்மீது வைத்துப் பார்த்தவள், “பெரிய ஆளுங்க இருக்கும் இடத்திற்கு சேலை கட்டிட்டு போகணும். ஆனால் இந்த உடை ரொம்ப ரிச்சாக இருக்கு” என்றாள் கவலையுடன்.
“அதெல்லாம் அப்படிதான் இருக்கணும் அண்ணி. அப்போதான் நீங்க பட்டிக்காடு இல்லன்னு அவங்களுக்குத் தெரியும்” என்றவளின் நம்பிக்கையான வார்த்தைகளைக் கேட்டு, மறுப்பு சொல்லாமல் அதையை அணிந்துகொண்டு வந்தாள்.
உயர்ரக வைல்ட் கலர் சேலை என்றாலும், அவளது அழகை இன்னும் அதிகரித்துக் காட்டியது. அங்கிருந்த ட்ரசிங் டேபிள் முன்பு அவளை அமர வைத்து, அந்த உடைக்கு தேவையான மேக்கைப்பை செய்துவிட்டாள்.
தன்னுடைய அண்ணியை ஒரு முறை பார்த்த கீதாஞ்சலி, “இதுக்கு மேச்சாக என்னிடம் ஒரு பர்ஸ் இருக்கு” என்றவள் வேகமாக வெளியே செல்ல, விஷ்ணுவரதன் சிந்தனையுடன் வேகமாகப் படியேறினான்.
“அண்ணி ரெடி அண்ணா” என்றவள் அவனைக் கடந்து செல்ல, உடனே மேலே சென்றவன் பதுமைபோல நின்றிருந்த மனைவியைப் பார்த்துவிட்டு குளியலறைக்குள் சென்று மறைந்தான்.
கொஞ்சநேரத்தில் தயாரான விஷ்ணு காரை எடுக்கச் செல்ல, அவனின் பின்னோடு சென்ற மிருணாளினியின் கையில் பர்ஸைக் கொடுத்தாள்.
கீதாஞ்சலி கொடுத்த பர்ஸைப் பார்த்து, “மாமாதான் கூட வராங்க இல்ல. அப்புறம் எதுக்காக இதை எடுத்துட்டுப் போக சொல்றே” என்றவள் புரியாமல் கேட்ட, அண்ணியின் தலையில் நறுக்கென்று கொட்டினாள்.
அவள் ஆவென்று அலறும் முன்பே தன் கையால் அவளின் வாயைப் பொத்தி, “அண்ணி அண்ணனை நல்லவன்னு நம்பாதே! இதில் என்னவோ வில்லங்கம் இருக்கு. ஒருவேளை அண்ணா ஏதாவது தில்லு முல்லு செய்தால், இந்த பர்ஸ் உங்களை காப்பாற்றும்” என்றாள்.
இருவரும் ஜோடியாக வெளியே செல்வதைக் கண்டு பூரித்தபடி காதம்பரி நின்றிருக்க, “பாய்” என்று கையசைத்து அவர்களை வழியனுப்பி வைத்தனர் கார்த்திகேயனும்,கீதாஞ்சலியும்!
விஷ்ணுவரதன் மிருணாவை அழிக்கும் பிரம்மாஸ்திரமாக இருந்தால், அவனது உடன்பிறப்புகள் அண்ணியைக் காப்பாற்ற கேடயமாக மாறினார்.
Ivar enena la sonnaru....?
Apo avangaluku epd irundhurukum....?
Over ah poraru....
Atleast Geethu um Karthi um avangaluku support panrangale....