அத்தியாயம் – 24
தன்னுடைய தங்கை திருமணத்தின் ஏற்பாடுகளை மும்பரமாக செய்தபோதும், அவனின் பார்வை மிருணாளினியை மட்டுமே வட்டமிட்டது. கீதாஞ்சலிக்கு பட்டுப்புடவை வீட்டினர் தேர்வு செய்ய, “என்னோட மருமகளுக்கு இந்த கலர் நல்லா இருக்கும்” என்று இளஞ்சிவப்பு நிறத்தில் பட்டுப்புடவை தேர்ந்தெடுத்தார் மனோகரி.
“இல்ல இந்த பச்சை நிறம் இன்னும் நல்லா இருக்கும்” மற்றொரு பக்கம் காதம்பரி மகளுக்கு புடவை தேர்வு செய்ய, இரண்டு பேருக்கும் நடுவே மாட்டிகொண்டு முழிக்கும் தங்கையைப் பார்த்து மற்றவர்களுக்கு சிரிப்பு வந்தது.
இந்த எதிலும் கலந்துகொள்ளாமல் சமையலில் ஈடுபட்டிருந்த மிருணாளினி சிந்தனைகள் வேறு எங்கோ சென்றது. சிலநொடிகள் அவளை இமைக்காமல் நோக்கிய விஷ்ணு, தன் மனைவிக்கு என்று ஒரு புடவையைத் தேர்வு செய்தான்.
“இந்த புடவை மிருணாவிற்கு அழகாக இருக்கும் இல்லம்மா” என்று காதம்பரியிடம் கேட்க, “அவளுக்கு புடவை எடுக்க போவது நீ, அதை கட்ட போவது உன் மனைவி. அப்புறம் எதுக்குடா என்னிடம் கேட்குற” என்று அவர் சத்தமின்றி நழுவப் பார்க்க, கணவனின் செயலைக் கண்டு அவள் மனதினுள் மெல்லிய தடுமாற்றம் தோன்றியது.
சகாதேவன் – கஜேந்திரன் இருவரும் தொழில் விஷயமாக பேசிக் கொண்டிருக்க, மற்றவர்கள் முன்னால் தன்னை உதாசீனம் செய்வாளோ என்ற தயக்கத்துடன் மனைவியை ஏறிட்டான் விஷ்ணு.
அவனது பார்வைக்கான அர்த்தம் புரிந்து, “ரொம்ப அழகாக புடவை தேர்வு செய்யறீங்க? என்ன சாரே அனுபவமா?” என்றவள் கேலியாக கேட்க, அவன் உதட்டைக் கடித்து மௌனமானான்.
அவளிடம் புடவை கொடுக்கும் சாக்கில் நெருங்கிய விஷ்ணுவோ, “ஒரு துணிக்கடைக் காரனுக்கு பொண்டாட்டிக்கு புடவை எடுக்க தெரியாதா? என்னை நீ ரொம்ப தவறாக நினைக்கிற மிரு” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
அவனது விருப்பத்திற்கு தடை சொல்லாமல் அவளும் அமைதியாக வலம்வர, மறுநாள் திருமணம் என்ற நிலையில் அனைத்து வேலையும் முடித்துவிட்டு களைப்புடன் அறைக்குள் நுழைந்த மனையாளை அணைத்துக்கொண்டு, “என்னை மன்னிச்சிட்டியா?” என்று கேட்க, அதுக்கு பதில் சொல்லாமல் மெளனமாக இருந்தாள்.
சட்டென்று அவளின் முகம் நோக்கிய விஷ்ணு, “சரியான பிடிவாதக்காரி. உன் வாயால் சொன்னால் என்ன முத்தா உதிரும். ஆனால் நீ ஒவ்வொரு முறை உன்னோட செயலால் அன்பை உணர்த்திட்டு தான் இருக்கிற” என்றவன் பார்வை அவளின் இதழில் நிலைத்தது.
அவனது பார்வை உணர்ந்து அவள் விலகிச்செல்ல நினைக்க, “ஒரே ஒரு முத்தம் மட்டும்” என்று சொல்லி அவளின் இதழோடு தன் இதழைப் பொருத்தினான்.
அந்த சமயத்தில் அவளுக்கும் அந்த முத்தம் தேவையான ஒன்றாக இருந்ததால் மெளனமாக இருந்தாள். மறுநாள் அபியுக்தன் – கீதாஞ்சலி திருமணம் சுற்றம் நட்பும் சூழ, இரண்டு வீட்டுப் பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் நடந்து முடிந்தது.
அனைவரின் சம்மத்துடன் தன் காதலியைக் கரம்பிடித்த அபியுக்தன் பார்வையால் மிருனாளினிக்கு நன்றியைத் தெரிவிக்க, அவள் அப்போதும் புன்னகையை மட்டுமே பதிலாக தந்தாள்.
சக்ரபாணி – கஸ்தூரி இருவரும் திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை. கஜேந்திரன் – மனோகரி என்று அழைத்ததற்காக மண்டபத்திற்கு வந்துவிட்டு, அவர் வாசலோடு கிளம்புவதைப் பார்க்கும்போது அவள் வேதனை அதிகரித்தது.
புகுந்த வீட்டிற்கு சந்தோசமாக சென்ற கீதாஞ்சலி இரண்டே நாளில் கண்ணீரோடு வீடு வந்தவள், “கார்த்தி நீ வந்து அவரைக் கேள்வி கேளுடா. எனக்கு முன்னாடியே ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, இப்போ என்னை இரண்டாம் தாரமாக மேரேஜ் பண்ணிகிட்ட உண்மையை சர்வ சாதாரணமாக சொல்றாருடா” என்று தமையனிடம் கூற, அங்கிருந்த மற்றவர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
அதுவரை அமைதியாக இருந்த விஷ்ணுவிற்கு கோபம் சுர்ரென்று தலைக்கேற, “என்ன சொல்ற? நீ வா அவனிடம் நான் நியாயம் கேட்கிறேன்” என்று சொல்ல, எந்தவிதமான சலனமும் இன்றி வந்து நின்றாள் மிருணாளினி.
சகாதேவன் அதிர்ச்சியில் சிலையாகி நின்றிருக்க, காதம்பரி மகளின் வாழ்க்கை இப்படியானதை நினைத்து கண்ணீர் விட்டார்.
சட்டென்று அண்ணனின் கையை உதறிய கீதாஞ்சலி, “அவரை நியாயம் கேட்க உனக்கு தகுதி இல்லண்ணா. அவருக்குப் பார்த்த பெண்ணைத் தான் நீ சதிபண்ணி கட்டிகிட்ட, அதுமட்டும் இல்லாமல் அவங்களை என்னவெல்லாம் டார்ச்சர் பண்ணின. நீ வந்து கேட்டால் கண்டிப்பா அதுக்கு சரியான பதில் வராது” என்றவுடன் விஷ்ணு பதில் சொல்ல முடியாமல் அமைதியானான்.
அடுத்த நொடியே தந்தையின் நினைவு வர, “நம்ம அப்பாவைக் கூட்டிட்டுப் போ கீதா” என்று கூற, “அவருக்கு மட்டும் என்னங்க தகுதி இருக்கு. அபியுக்தன் மாதிரி அவரும் இரண்டு பொண்டாட்டி கட்டியவர் தானே?! உங்கப்பா செய்தால் அது சரி, அடுத்தவங்க செய்தால் தப்பா” என்று வாழைப்பழத்தில் ஊசி ஏறுவதுபோல பட்டென்று கேட்டாள்.
அதுவரை அமைதியாக இருந்த காதம்பரிக்கு கோபம் அதிகரிக்க, “எங்க கதையே வேற மிருணா” என்று மருமகளை அடக்க நினைக்க, சகாதேவன் – விஷ்ணுவரதன், கார்த்திகேயன் மற்றும் கீதாஞ்சலி நால்வரின் கவனமும் அவளின் பக்கம் திரும்பியது.
அவள் ஏதோ பிரச்சனையைச் செய்ய தயாராக இருப்பதை உணர்ந்த விஷ்ணு, “இங்கே பாரு அவன் எத்தனைப் பொண்டாட்டி கட்டி இருந்தாலும், எனக்கு என் தங்கச்சி வாழ்க்கைதான் முக்கியம். அபியுடன் கீதாவை வாழ வைக்க நான் என்னவேண்டும் என்றாலும் செய்வேன்” என்றான் ஒருவிதமான வேகத்துடன்.
“சபாஷ்! உங்க தங்கையை வாழ வைக்க என்ன வேண்டுமானாலும் செய்வீங்க இல்ல. இதே வாக்கியத்தை சொன்னதுக்காக உங்கப்பா இன்னைக்கு வரைக்கும் எங்கப்பா மீது வன்மத்தை வச்சிட்டு சுத்திட்டு இருக்காரே! அதைப்பற்றி எல்லாம் கேட்க மாட்டீங்க. உங்களுக்கு மட்டும் ஒரு நியாயம், மத்தவங்களுக்கு ஒரு நியாயமா?இது நல்லா கதையாக இருக்கே” என்று இரண்டு கரங்களையும் தட்டி ஆர்பரித்தவள் முகத்தில் மருந்துக்கும் சந்தோசம் இல்லை.
அவளது கேள்வியில் மற்றவர்கள் ஆடிப்போய் நின்றிருக்க, “அவருக்கும் அறிவே இல்லங்க. தன்னுடைய தங்கையைக் கட்டிகொடுத்து அனுபவித்தது பத்தாதுன்னு, என்னையும் கட்டிக் கொடுத்த புண்ணியவானுக்கு பொறுமை ரொம்ப அதிகம்” அவள் வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுக்க, சகாதேவன் மருமகளை நேரடியாக முறைத்தார்.
தன்னுடைய தங்கை திருமணத்தின் ஏற்பாடுகளை மும்பரமாக செய்தபோதும், அவனின் பார்வை மிருணாளினியை மட்டுமே வட்டமிட்டது. கீதாஞ்சலிக்கு பட்டுப்புடவை வீட்டினர் தேர்வு செய்ய, “என்னோட மருமகளுக்கு இந்த கலர் நல்லா இருக்கும்” என்று இளஞ்சிவப்பு நிறத்தில் பட்டுப்புடவை தேர்ந்தெடுத்தார் மனோகரி.
“இல்ல இந்த பச்சை நிறம் இன்னும் நல்லா இருக்கும்” மற்றொரு பக்கம் காதம்பரி மகளுக்கு புடவை தேர்வு செய்ய, இரண்டு பேருக்கும் நடுவே மாட்டிகொண்டு முழிக்கும் தங்கையைப் பார்த்து மற்றவர்களுக்கு சிரிப்பு வந்தது.
இந்த எதிலும் கலந்துகொள்ளாமல் சமையலில் ஈடுபட்டிருந்த மிருணாளினி சிந்தனைகள் வேறு எங்கோ சென்றது. சிலநொடிகள் அவளை இமைக்காமல் நோக்கிய விஷ்ணு, தன் மனைவிக்கு என்று ஒரு புடவையைத் தேர்வு செய்தான்.
“இந்த புடவை மிருணாவிற்கு அழகாக இருக்கும் இல்லம்மா” என்று காதம்பரியிடம் கேட்க, “அவளுக்கு புடவை எடுக்க போவது நீ, அதை கட்ட போவது உன் மனைவி. அப்புறம் எதுக்குடா என்னிடம் கேட்குற” என்று அவர் சத்தமின்றி நழுவப் பார்க்க, கணவனின் செயலைக் கண்டு அவள் மனதினுள் மெல்லிய தடுமாற்றம் தோன்றியது.
சகாதேவன் – கஜேந்திரன் இருவரும் தொழில் விஷயமாக பேசிக் கொண்டிருக்க, மற்றவர்கள் முன்னால் தன்னை உதாசீனம் செய்வாளோ என்ற தயக்கத்துடன் மனைவியை ஏறிட்டான் விஷ்ணு.
அவனது பார்வைக்கான அர்த்தம் புரிந்து, “ரொம்ப அழகாக புடவை தேர்வு செய்யறீங்க? என்ன சாரே அனுபவமா?” என்றவள் கேலியாக கேட்க, அவன் உதட்டைக் கடித்து மௌனமானான்.
அவளிடம் புடவை கொடுக்கும் சாக்கில் நெருங்கிய விஷ்ணுவோ, “ஒரு துணிக்கடைக் காரனுக்கு பொண்டாட்டிக்கு புடவை எடுக்க தெரியாதா? என்னை நீ ரொம்ப தவறாக நினைக்கிற மிரு” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
அவனது விருப்பத்திற்கு தடை சொல்லாமல் அவளும் அமைதியாக வலம்வர, மறுநாள் திருமணம் என்ற நிலையில் அனைத்து வேலையும் முடித்துவிட்டு களைப்புடன் அறைக்குள் நுழைந்த மனையாளை அணைத்துக்கொண்டு, “என்னை மன்னிச்சிட்டியா?” என்று கேட்க, அதுக்கு பதில் சொல்லாமல் மெளனமாக இருந்தாள்.
சட்டென்று அவளின் முகம் நோக்கிய விஷ்ணு, “சரியான பிடிவாதக்காரி. உன் வாயால் சொன்னால் என்ன முத்தா உதிரும். ஆனால் நீ ஒவ்வொரு முறை உன்னோட செயலால் அன்பை உணர்த்திட்டு தான் இருக்கிற” என்றவன் பார்வை அவளின் இதழில் நிலைத்தது.
அவனது பார்வை உணர்ந்து அவள் விலகிச்செல்ல நினைக்க, “ஒரே ஒரு முத்தம் மட்டும்” என்று சொல்லி அவளின் இதழோடு தன் இதழைப் பொருத்தினான்.
அந்த சமயத்தில் அவளுக்கும் அந்த முத்தம் தேவையான ஒன்றாக இருந்ததால் மெளனமாக இருந்தாள். மறுநாள் அபியுக்தன் – கீதாஞ்சலி திருமணம் சுற்றம் நட்பும் சூழ, இரண்டு வீட்டுப் பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் நடந்து முடிந்தது.
அனைவரின் சம்மத்துடன் தன் காதலியைக் கரம்பிடித்த அபியுக்தன் பார்வையால் மிருனாளினிக்கு நன்றியைத் தெரிவிக்க, அவள் அப்போதும் புன்னகையை மட்டுமே பதிலாக தந்தாள்.
சக்ரபாணி – கஸ்தூரி இருவரும் திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை. கஜேந்திரன் – மனோகரி என்று அழைத்ததற்காக மண்டபத்திற்கு வந்துவிட்டு, அவர் வாசலோடு கிளம்புவதைப் பார்க்கும்போது அவள் வேதனை அதிகரித்தது.
புகுந்த வீட்டிற்கு சந்தோசமாக சென்ற கீதாஞ்சலி இரண்டே நாளில் கண்ணீரோடு வீடு வந்தவள், “கார்த்தி நீ வந்து அவரைக் கேள்வி கேளுடா. எனக்கு முன்னாடியே ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, இப்போ என்னை இரண்டாம் தாரமாக மேரேஜ் பண்ணிகிட்ட உண்மையை சர்வ சாதாரணமாக சொல்றாருடா” என்று தமையனிடம் கூற, அங்கிருந்த மற்றவர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
அதுவரை அமைதியாக இருந்த விஷ்ணுவிற்கு கோபம் சுர்ரென்று தலைக்கேற, “என்ன சொல்ற? நீ வா அவனிடம் நான் நியாயம் கேட்கிறேன்” என்று சொல்ல, எந்தவிதமான சலனமும் இன்றி வந்து நின்றாள் மிருணாளினி.
சகாதேவன் அதிர்ச்சியில் சிலையாகி நின்றிருக்க, காதம்பரி மகளின் வாழ்க்கை இப்படியானதை நினைத்து கண்ணீர் விட்டார்.
சட்டென்று அண்ணனின் கையை உதறிய கீதாஞ்சலி, “அவரை நியாயம் கேட்க உனக்கு தகுதி இல்லண்ணா. அவருக்குப் பார்த்த பெண்ணைத் தான் நீ சதிபண்ணி கட்டிகிட்ட, அதுமட்டும் இல்லாமல் அவங்களை என்னவெல்லாம் டார்ச்சர் பண்ணின. நீ வந்து கேட்டால் கண்டிப்பா அதுக்கு சரியான பதில் வராது” என்றவுடன் விஷ்ணு பதில் சொல்ல முடியாமல் அமைதியானான்.
அடுத்த நொடியே தந்தையின் நினைவு வர, “நம்ம அப்பாவைக் கூட்டிட்டுப் போ கீதா” என்று கூற, “அவருக்கு மட்டும் என்னங்க தகுதி இருக்கு. அபியுக்தன் மாதிரி அவரும் இரண்டு பொண்டாட்டி கட்டியவர் தானே?! உங்கப்பா செய்தால் அது சரி, அடுத்தவங்க செய்தால் தப்பா” என்று வாழைப்பழத்தில் ஊசி ஏறுவதுபோல பட்டென்று கேட்டாள்.
அதுவரை அமைதியாக இருந்த காதம்பரிக்கு கோபம் அதிகரிக்க, “எங்க கதையே வேற மிருணா” என்று மருமகளை அடக்க நினைக்க, சகாதேவன் – விஷ்ணுவரதன், கார்த்திகேயன் மற்றும் கீதாஞ்சலி நால்வரின் கவனமும் அவளின் பக்கம் திரும்பியது.
அவள் ஏதோ பிரச்சனையைச் செய்ய தயாராக இருப்பதை உணர்ந்த விஷ்ணு, “இங்கே பாரு அவன் எத்தனைப் பொண்டாட்டி கட்டி இருந்தாலும், எனக்கு என் தங்கச்சி வாழ்க்கைதான் முக்கியம். அபியுடன் கீதாவை வாழ வைக்க நான் என்னவேண்டும் என்றாலும் செய்வேன்” என்றான் ஒருவிதமான வேகத்துடன்.
“சபாஷ்! உங்க தங்கையை வாழ வைக்க என்ன வேண்டுமானாலும் செய்வீங்க இல்ல. இதே வாக்கியத்தை சொன்னதுக்காக உங்கப்பா இன்னைக்கு வரைக்கும் எங்கப்பா மீது வன்மத்தை வச்சிட்டு சுத்திட்டு இருக்காரே! அதைப்பற்றி எல்லாம் கேட்க மாட்டீங்க. உங்களுக்கு மட்டும் ஒரு நியாயம், மத்தவங்களுக்கு ஒரு நியாயமா?இது நல்லா கதையாக இருக்கே” என்று இரண்டு கரங்களையும் தட்டி ஆர்பரித்தவள் முகத்தில் மருந்துக்கும் சந்தோசம் இல்லை.
அவளது கேள்வியில் மற்றவர்கள் ஆடிப்போய் நின்றிருக்க, “அவருக்கும் அறிவே இல்லங்க. தன்னுடைய தங்கையைக் கட்டிகொடுத்து அனுபவித்தது பத்தாதுன்னு, என்னையும் கட்டிக் கொடுத்த புண்ணியவானுக்கு பொறுமை ரொம்ப அதிகம்” அவள் வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுக்க, சகாதேவன் மருமகளை நேரடியாக முறைத்தார்.