ஹாய் டியர்ஸ்,
"இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்." இதோ இரும்பு இதயம் உருகாதோ - இறுதிப் பதிவுடன் உங்களை எல்லாம் சந்திக்க வந்துவிட்டேன். இவ்வளவு சீக்கிரம் கதையை முடிக்க வாசகர்களாகிய நீங்கதான் முதல் காரணம்.
எத்தனையோ வேலைகளுக்கு நடுவே உங்களோட கமெண்ட்என்னால் ரிப்ளே பண்ண முடியல. முடிந்தவரை இன்னும் சில தினங்களில் பதில் தருகிறேன். இந்த பதிவைப் படித்து உங்களுடைய நிறைக்குறைகளை மறக்காமல் பகிருங்கள். எபிலாக் நாளை மறுநாள் தர முயற்சிக்கிறேன்.
அத்தியாயம் – 28
அவன் சொன்ன வார்த்தைகள் அவளின் இதயத்தைக் காயப்படுத்திட, அதன் வெளிப்பட்டாக கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. தற்போது அவளுக்கு ஆறுதல் தேவை என்றுணர்ந்து, “ஷ்.. அழுகாதே மிருணா” என்றவன் முதுகை வருடிவிட, கொஞ்சநேரத்தில் இயல்பிற்கு திருப்பினாள்.
அதுவரை அழுததால் தொண்டை வறண்டு போயிருக்க சட்டென்று கணவனைவிட்டு விலகியவள் சமயலறைக்கு சென்று தண்ணீரை எடுத்துக் குடித்தாள். அதில் கொஞ்சம் மனம் அமைதியடைய, மெல்ல மூளை வேலை செய்ய தொடங்கியது.
அவளின் பின்னோடு சமையலறைக்குச் சென்ற விஷ்ணுவும், “எனக்கும் வேணும்” என்று சொல்லி, தண்ணீரை வாங்கிப் பருகினான். தன்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்த கணவனை நினைத்து மனம் துள்ளியது.
ஆனால் இன்றைய சந்தோசம் நாளைய எதிர்காலத்தை அழிக்கக் கூடாது என்ற முடிவிற்கு வந்தவளின் முகத்தில் தோன்றி மறைந்த உணர்வுகளை உன்னிப்பாக படித்த விஷ்ணு, ‘இந்தமுறை இவளைவிட்டு போகக்கூடாது’ என்று நினைத்தான்.
இருவரும் அறையைவிட்டு வெளியே வந்து ஒருவரைப் பார்த்தபடி மற்றொருவர் என்று எதிரெதிரே அமர்ந்தனர். சிறிதுநேரம் இருவருக்கும் இடையே மௌனம் நிலவிட, அவனிடம் பேச வேண்டிய வார்த்தைகளைத் தேடிக் கோர்த்தாள்.
அவனைக் காயப்படுத்த மனமில்லாமல், ‘என்னை அவர் மறந்து, வேறொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணனும்’ என்று நினைத்து, “கருவில் சுமக்காத குழந்தையை சுமப்பதாக சொன்னதுக்குதான், கடைசிவரை எனக்கு குழந்தை பிறக்கல. இனியும் ஒரு பொய்யை அஸ்திவாரமாக வைத்து, உங்களோடு வாழ விரும்பல” என்று சொன்னவள் இடைவெளிவிட, அந்த வார்த்தைகள் அவனது தவறின் அளவையும், அவளின் பயத்தையும் புரிய வைத்தது.
தன் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்த்திவிடும் வேகத்தில், “என் நிலையில் இருந்து யோசித்துப் பாருங்க. அப்பாவிற்கான நியாயம் கிடைத்தாலும், என்னையே உலகமாகப் பார்க்கும் உங்களைக் காயப்படுத்தியது தவறுதானே! அதுதான் எனக்கு நானே தண்டனை கொடுத்துகிட்டேன்” என்ற மனைவியின் மனம் புரிந்தபோதும், அவள் பேசட்டும் என்று அமைதியாக இருந்தான்.
கடைசியாக, “நம்ம பிரிவதுதான் எல்லோருக்கும் நல்லது. நீங்க வேறொரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு சந்தோசமாக இருங்க” என்று அவள் மீண்டும் சொன்னதையே சொல்ல, அவன் பொறுமை காற்றில் பறந்தது.
“உன்னோட பைத்தியகாரத்தனமான பேச்சை நிறுத்துடி, நானும் சின்னப்பொண்ணு விட்டுப் பிடிப்போம்னு அமைதியாக போனால், நீ ரொம்ப பேசற” என்று அதட்டல் போட, அவள் அதிர்ச்சியுடன் கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“ஆமா நான் சொன்ன பொய்யால் தான் நம்ம உறவின் தொடக்கம். அதே அளவு உன்னை எனக்கு பிடிச்சிருந்தது. கோவிலில் பார்த்த முதல்நாளே, அப்பாவைப் பற்றி பேசியதும் என்னை கொட்டிவிட்டு சென்ற அந்த விளையாட்டு பெண்ணிடம் மனசைப் பறிகொடுத்தது தான் உண்மை” என்று அவன் எரிச்சலோடு கூற, இம்முறை கணவனைத் திகைப்புடன் நோக்கினாள்.
அவளது பார்வையை உணராத விஷ்ணு, இதுவரை மனதோடு மறைத்த உண்மைகளை அவளிடம் பகிர்ந்திட நினைத்தான். இதுக்குமேல் மறைத்தால் எங்கே அவள் தன்னைவிட்டு நிரந்தமாக புரிந்து சென்றுவிடுவாளோ என்ற பயம் அவனை ஆக்கிரமித்தது. அதனால் முடிந்தவரை இன்றே அனைத்தையும் பேசிவிட முடிவெடுத்தான்.
“யாழினியுடன் திருமணம் நின்றதுதான், நான் மனதளவில் வாங்கிய முதல் அடி! அத்தனைப் பேர் முன்னால் அவமானப்பட்டு நின்றது, இன்னைக்கு நினைத்தாலும் வெறுப்பாக இருக்கு” என்று சொல்லும்போது அவன் விழிகள் லேசாக சிவந்தது.
“அந்த சம்பவத்தால் நிறையப்பேர் முன்னால் கேலிப்பொருளாக மாறினேன். அந்த நினைவுகளை மறக்க குடிக்க தொடங்கினேன், அது என்னை பெண்களோடும் தவறாக பழக வைத்தது. ஆனால் யாரிடமும் எல்லை மீறியது இல்ல” என்றவன் மனக்கண்ணில் சக்ரபாணி அடித்தது நினைவிற்கு வந்தது.
அவன் முகம் கசங்கிட கண்டு, “விடுங்க” என்றவளை நிமிர்ந்து பார்த்தவன், “இன்னைக்கு பேசணும் மிருணா, இன்னொரு முறை உன் பிரிவைத் தாங்கும் சக்தி சத்தியமாக எனக்கு இல்ல” ஒரு கசந்த புன்னகையுடன் மீண்டும் தொடர்ந்தான்.
“ஒரு பெண்ணுடன் ஹோட்டலில் ரூம் போட்ட அன்னைக்கு தான் மாமாவை முதல் முறையாக சந்தித்தேன், அவரிடம் உன்னை அதே படுக்கையில்” என்றவன் சொல்ல முடியாமல் நிறுத்திட, அந்த வார்த்தைகள் அவள் மனதை வலிக்க செய்தது.
அவள் கண்களில் கண்ணீர் தேங்குவதை கண்டு, “அதுக்குபிறகு நம்ம முதல் சந்திப்பில், நீதான் அவரோட பொண்ணு என்று தெரிய வந்தது. உன்னை ஏதாவது செய்யணும் என்று நினைத்த சமயத்தில் அபி உன்னைப் பெண்பார்க்க வந்தான்” என்றவனை அவள் அடிபட்ட பார்வை பார்த்தாள்.
அவளது வருத்தம் உணர்ந்து பார்வையால் அவளுக்கு சமாதானம் சொன்னவன், “உன்னை அவனுக்கு விட்டுத்தர முடியாமல் தான் அவனைப்பற்றித் தவறாக சொல்லி உன் கழுத்தில் தாலி கட்டினேன். முதலிரவுக்கு மறுநாள் நீ கீதா அறையில் போய் தூங்கியதற்காக அடித்தது, பார்ட்டிக்கு போலாம்னு சொல்லி உன்னை நடுத்தெருவில் விட்டுட்டு வந்தது, இதுக்கெல்லாம் சிகரம் வைப்பதுபோல உன்னை கொல்ல நினைத்தது” கடைசி வாக்கியத்தை சொல்லும்போது அவனுக்கு வலித்தது.
“இதுவெல்லாம் மனிதத்தன்மை இழந்த ஒரு மிருகத்தின் செயல்தான். அதற்கு உன்னிடம் விளக்கம் சொல்லி, என்னை நானே நியாயப்படுத்த விரும்பல. ஆனால் இதுக்கு நடுவே நமக்குள் வாக்குவாதம் ஏற்படும்போது நீ பேசிய வார்த்தைகள் என்னை ரொம்ப காயப்படுத்தி இருக்கு” என்று சொல்லும்போது, அவள் முகம் மெல்ல தெளிவடைய தொடங்கியது.
“ஆனால் அன்னைக்கு குடிபோதையில் நான் கலந்த விஷத்தால், உன் உயிர் போயிருந்தால் கண்டிப்பா நானும் இறந்திருப்பேன்” என்று சொன்ன கணவனின் வார்த்தைகள் மனதைப் பாதிக்க, “மாமா” என்று அதட்டினாள் மிருணாளினி.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, மாமா என்ற அழைப்பைக் கேட்டு மனம் லேசாக, “அப்பா சொன்னதை நம்பிட்டு உன்னைக் காயப்படுத்துல, அதை விசாரிக்க சொன்னபோதுதான் நீ என்னைவிட்டு விலகிச் செல்ல தொடங்கின. நான் அனாதை என்ற உண்மை தெரிந்தபோது, என் மனசு உன்னைத் தான் தேடுச்சு. உன் மடியில் படுத்து அழுகணும்னு வந்தேன்” என்று அவன் உண்மையைப் போட்டு உடைக்க, அது அவள் தலையில் இடியாக இறங்கியது.
அன்று அவனை எவ்வளவு தூரம் உதாசீனம் செய்தோம் என்று நினைத்தவளின் விழிகளில் கண்ணீர் பெருகிட, “அதுக்குப்பிறகு நடந்தது உனக்கே தெரியும். அன்னைக்கு உங்க அப்பா முகத்தைப் பார்க்க பிடிக்காமல் போக சொல்லல, என் மாமனார் தேவையில்லாமல் அவமானப்பட வேண்டாம்னு தான் அவரைப் பார்க்க முடியாதுன்னு சொன்னேன்” என்று கோபத்தில் கூறிய விஷ்ணுவை இமைக்காமல் நோக்கினாள்.
அவள் அதிர்ச்சியில் சிலையாகி நின்றிருப்பதைக் கண்டு, “நீ இப்படியொரு பிரச்சனை பண்ண போறே என்று எனக்கு முன்னாடியே தெரியும். அதனால் தான் அன்னைக்கு நீ பேசும்போது, நான் அமைதியாக நின்னுட்டு இருந்தேன். என்னைக் காயப்படுத்திவிட்டதாக நினைச்சிட்டு ஏதாவது பேசின மகளே அவ்வளவுதான்” என கோபத்தில் மிரட்டிய விஷ்ணுவின் செல்போன் சிணுங்கிட, அதை எடுத்து பேச தொடங்கினான்.
"இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்." இதோ இரும்பு இதயம் உருகாதோ - இறுதிப் பதிவுடன் உங்களை எல்லாம் சந்திக்க வந்துவிட்டேன். இவ்வளவு சீக்கிரம் கதையை முடிக்க வாசகர்களாகிய நீங்கதான் முதல் காரணம்.
எத்தனையோ வேலைகளுக்கு நடுவே உங்களோட கமெண்ட்என்னால் ரிப்ளே பண்ண முடியல. முடிந்தவரை இன்னும் சில தினங்களில் பதில் தருகிறேன். இந்த பதிவைப் படித்து உங்களுடைய நிறைக்குறைகளை மறக்காமல் பகிருங்கள். எபிலாக் நாளை மறுநாள் தர முயற்சிக்கிறேன்.
அத்தியாயம் – 28
அவன் சொன்ன வார்த்தைகள் அவளின் இதயத்தைக் காயப்படுத்திட, அதன் வெளிப்பட்டாக கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. தற்போது அவளுக்கு ஆறுதல் தேவை என்றுணர்ந்து, “ஷ்.. அழுகாதே மிருணா” என்றவன் முதுகை வருடிவிட, கொஞ்சநேரத்தில் இயல்பிற்கு திருப்பினாள்.
அதுவரை அழுததால் தொண்டை வறண்டு போயிருக்க சட்டென்று கணவனைவிட்டு விலகியவள் சமயலறைக்கு சென்று தண்ணீரை எடுத்துக் குடித்தாள். அதில் கொஞ்சம் மனம் அமைதியடைய, மெல்ல மூளை வேலை செய்ய தொடங்கியது.
அவளின் பின்னோடு சமையலறைக்குச் சென்ற விஷ்ணுவும், “எனக்கும் வேணும்” என்று சொல்லி, தண்ணீரை வாங்கிப் பருகினான். தன்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்த கணவனை நினைத்து மனம் துள்ளியது.
ஆனால் இன்றைய சந்தோசம் நாளைய எதிர்காலத்தை அழிக்கக் கூடாது என்ற முடிவிற்கு வந்தவளின் முகத்தில் தோன்றி மறைந்த உணர்வுகளை உன்னிப்பாக படித்த விஷ்ணு, ‘இந்தமுறை இவளைவிட்டு போகக்கூடாது’ என்று நினைத்தான்.
இருவரும் அறையைவிட்டு வெளியே வந்து ஒருவரைப் பார்த்தபடி மற்றொருவர் என்று எதிரெதிரே அமர்ந்தனர். சிறிதுநேரம் இருவருக்கும் இடையே மௌனம் நிலவிட, அவனிடம் பேச வேண்டிய வார்த்தைகளைத் தேடிக் கோர்த்தாள்.
அவனைக் காயப்படுத்த மனமில்லாமல், ‘என்னை அவர் மறந்து, வேறொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணனும்’ என்று நினைத்து, “கருவில் சுமக்காத குழந்தையை சுமப்பதாக சொன்னதுக்குதான், கடைசிவரை எனக்கு குழந்தை பிறக்கல. இனியும் ஒரு பொய்யை அஸ்திவாரமாக வைத்து, உங்களோடு வாழ விரும்பல” என்று சொன்னவள் இடைவெளிவிட, அந்த வார்த்தைகள் அவனது தவறின் அளவையும், அவளின் பயத்தையும் புரிய வைத்தது.
தன் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்த்திவிடும் வேகத்தில், “என் நிலையில் இருந்து யோசித்துப் பாருங்க. அப்பாவிற்கான நியாயம் கிடைத்தாலும், என்னையே உலகமாகப் பார்க்கும் உங்களைக் காயப்படுத்தியது தவறுதானே! அதுதான் எனக்கு நானே தண்டனை கொடுத்துகிட்டேன்” என்ற மனைவியின் மனம் புரிந்தபோதும், அவள் பேசட்டும் என்று அமைதியாக இருந்தான்.
கடைசியாக, “நம்ம பிரிவதுதான் எல்லோருக்கும் நல்லது. நீங்க வேறொரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு சந்தோசமாக இருங்க” என்று அவள் மீண்டும் சொன்னதையே சொல்ல, அவன் பொறுமை காற்றில் பறந்தது.
“உன்னோட பைத்தியகாரத்தனமான பேச்சை நிறுத்துடி, நானும் சின்னப்பொண்ணு விட்டுப் பிடிப்போம்னு அமைதியாக போனால், நீ ரொம்ப பேசற” என்று அதட்டல் போட, அவள் அதிர்ச்சியுடன் கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“ஆமா நான் சொன்ன பொய்யால் தான் நம்ம உறவின் தொடக்கம். அதே அளவு உன்னை எனக்கு பிடிச்சிருந்தது. கோவிலில் பார்த்த முதல்நாளே, அப்பாவைப் பற்றி பேசியதும் என்னை கொட்டிவிட்டு சென்ற அந்த விளையாட்டு பெண்ணிடம் மனசைப் பறிகொடுத்தது தான் உண்மை” என்று அவன் எரிச்சலோடு கூற, இம்முறை கணவனைத் திகைப்புடன் நோக்கினாள்.
அவளது பார்வையை உணராத விஷ்ணு, இதுவரை மனதோடு மறைத்த உண்மைகளை அவளிடம் பகிர்ந்திட நினைத்தான். இதுக்குமேல் மறைத்தால் எங்கே அவள் தன்னைவிட்டு நிரந்தமாக புரிந்து சென்றுவிடுவாளோ என்ற பயம் அவனை ஆக்கிரமித்தது. அதனால் முடிந்தவரை இன்றே அனைத்தையும் பேசிவிட முடிவெடுத்தான்.
“யாழினியுடன் திருமணம் நின்றதுதான், நான் மனதளவில் வாங்கிய முதல் அடி! அத்தனைப் பேர் முன்னால் அவமானப்பட்டு நின்றது, இன்னைக்கு நினைத்தாலும் வெறுப்பாக இருக்கு” என்று சொல்லும்போது அவன் விழிகள் லேசாக சிவந்தது.
“அந்த சம்பவத்தால் நிறையப்பேர் முன்னால் கேலிப்பொருளாக மாறினேன். அந்த நினைவுகளை மறக்க குடிக்க தொடங்கினேன், அது என்னை பெண்களோடும் தவறாக பழக வைத்தது. ஆனால் யாரிடமும் எல்லை மீறியது இல்ல” என்றவன் மனக்கண்ணில் சக்ரபாணி அடித்தது நினைவிற்கு வந்தது.
அவன் முகம் கசங்கிட கண்டு, “விடுங்க” என்றவளை நிமிர்ந்து பார்த்தவன், “இன்னைக்கு பேசணும் மிருணா, இன்னொரு முறை உன் பிரிவைத் தாங்கும் சக்தி சத்தியமாக எனக்கு இல்ல” ஒரு கசந்த புன்னகையுடன் மீண்டும் தொடர்ந்தான்.
“ஒரு பெண்ணுடன் ஹோட்டலில் ரூம் போட்ட அன்னைக்கு தான் மாமாவை முதல் முறையாக சந்தித்தேன், அவரிடம் உன்னை அதே படுக்கையில்” என்றவன் சொல்ல முடியாமல் நிறுத்திட, அந்த வார்த்தைகள் அவள் மனதை வலிக்க செய்தது.
அவள் கண்களில் கண்ணீர் தேங்குவதை கண்டு, “அதுக்குபிறகு நம்ம முதல் சந்திப்பில், நீதான் அவரோட பொண்ணு என்று தெரிய வந்தது. உன்னை ஏதாவது செய்யணும் என்று நினைத்த சமயத்தில் அபி உன்னைப் பெண்பார்க்க வந்தான்” என்றவனை அவள் அடிபட்ட பார்வை பார்த்தாள்.
அவளது வருத்தம் உணர்ந்து பார்வையால் அவளுக்கு சமாதானம் சொன்னவன், “உன்னை அவனுக்கு விட்டுத்தர முடியாமல் தான் அவனைப்பற்றித் தவறாக சொல்லி உன் கழுத்தில் தாலி கட்டினேன். முதலிரவுக்கு மறுநாள் நீ கீதா அறையில் போய் தூங்கியதற்காக அடித்தது, பார்ட்டிக்கு போலாம்னு சொல்லி உன்னை நடுத்தெருவில் விட்டுட்டு வந்தது, இதுக்கெல்லாம் சிகரம் வைப்பதுபோல உன்னை கொல்ல நினைத்தது” கடைசி வாக்கியத்தை சொல்லும்போது அவனுக்கு வலித்தது.
“இதுவெல்லாம் மனிதத்தன்மை இழந்த ஒரு மிருகத்தின் செயல்தான். அதற்கு உன்னிடம் விளக்கம் சொல்லி, என்னை நானே நியாயப்படுத்த விரும்பல. ஆனால் இதுக்கு நடுவே நமக்குள் வாக்குவாதம் ஏற்படும்போது நீ பேசிய வார்த்தைகள் என்னை ரொம்ப காயப்படுத்தி இருக்கு” என்று சொல்லும்போது, அவள் முகம் மெல்ல தெளிவடைய தொடங்கியது.
“ஆனால் அன்னைக்கு குடிபோதையில் நான் கலந்த விஷத்தால், உன் உயிர் போயிருந்தால் கண்டிப்பா நானும் இறந்திருப்பேன்” என்று சொன்ன கணவனின் வார்த்தைகள் மனதைப் பாதிக்க, “மாமா” என்று அதட்டினாள் மிருணாளினி.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, மாமா என்ற அழைப்பைக் கேட்டு மனம் லேசாக, “அப்பா சொன்னதை நம்பிட்டு உன்னைக் காயப்படுத்துல, அதை விசாரிக்க சொன்னபோதுதான் நீ என்னைவிட்டு விலகிச் செல்ல தொடங்கின. நான் அனாதை என்ற உண்மை தெரிந்தபோது, என் மனசு உன்னைத் தான் தேடுச்சு. உன் மடியில் படுத்து அழுகணும்னு வந்தேன்” என்று அவன் உண்மையைப் போட்டு உடைக்க, அது அவள் தலையில் இடியாக இறங்கியது.
அன்று அவனை எவ்வளவு தூரம் உதாசீனம் செய்தோம் என்று நினைத்தவளின் விழிகளில் கண்ணீர் பெருகிட, “அதுக்குப்பிறகு நடந்தது உனக்கே தெரியும். அன்னைக்கு உங்க அப்பா முகத்தைப் பார்க்க பிடிக்காமல் போக சொல்லல, என் மாமனார் தேவையில்லாமல் அவமானப்பட வேண்டாம்னு தான் அவரைப் பார்க்க முடியாதுன்னு சொன்னேன்” என்று கோபத்தில் கூறிய விஷ்ணுவை இமைக்காமல் நோக்கினாள்.
அவள் அதிர்ச்சியில் சிலையாகி நின்றிருப்பதைக் கண்டு, “நீ இப்படியொரு பிரச்சனை பண்ண போறே என்று எனக்கு முன்னாடியே தெரியும். அதனால் தான் அன்னைக்கு நீ பேசும்போது, நான் அமைதியாக நின்னுட்டு இருந்தேன். என்னைக் காயப்படுத்திவிட்டதாக நினைச்சிட்டு ஏதாவது பேசின மகளே அவ்வளவுதான்” என கோபத்தில் மிரட்டிய விஷ்ணுவின் செல்போன் சிணுங்கிட, அதை எடுத்து பேச தொடங்கினான்.
Last edited by a moderator: