ஹாய் டியர்ஸ்,
இரும்பு இதயம் உருகாதோ?! - 9பதிவுடன் உங்களை சந்திக்க வந்திருப்பது நான் உங்கள் அனாமிகா 12. இந்த பதிவிற்கும் மறக்காமல் கமெண்ட் பண்ணுங்கள். உங்க கருத்துகள் தான் என்னை உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் எழுத வைக்கும்.
அத்தியாயம் – 9
மாலை வீடு திரும்பிய பிள்ளைகளிடம் விசாரணையில் இறங்கிய மகனை விநோதமாக பார்த்தபடி ஹாலுக்கு வந்தாள் காதம்பரி. தன்னுடைய அண்ணனிடம் கையும் களவுமாக மாட்டிய பயமின்றி நின்றவளைப் பார்த்து, ‘என்ன தில்லாலங்கடி வேலை பார்த்து வச்சே’ என்று பார்வையில் வினாவினான் கார்த்தி.
“உன்னோட அறையில் தான் ரூம் கீயை வைத்தேன், நீங்க அதைப் பார்க்கவே இல்லையா?” என்று கேள்வியாக புருவம் உயர்த்திய கீதாவைப் பார்த்து, ‘அடிப்பாவி!’ என்றான் கார்த்திகேயன்.
விஷ்ணுவின் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாமல் நின்ற காதம்பரி, “இங்கே என்ன நடக்குது?” என்று பொதுவாகக் கேட்க, காலை தான் செய்த செயலை ஒன்றுவிடாமல் தாயிடம் ஒப்பித்தாள் மகள்.
“அடிப்பாவி ஒரு பெண்ணை உள்ளே வைத்து பூட்டிட்டு காலேஜ் போயிட்டு வந்து இருக்கிறாயே? உனக்கு எல்லாம் என்ன நெஞ்சழுத்தம்!” என்று மகளைத் திட்டியபடியே மாடியேறிய தாயின் பின்னோடு சென்றான் கார்த்திகேயன்.
எந்தவிதமான உணர்வையும் வெளிபடுத்தாமல் நின்றிருந்த அண்ணனைப் பார்த்தவளிடம், “நீ வைத்த இடத்தில் தானே சாவி இருக்கும், அதை எடுத்து அம்மாவின் கையில் கொடு” என்றவனின் உதடுகளில் புன்னகை அரும்பிட, அவனின் சிரிப்பிற்கு பின்னால் இருக்கும் வன்மம் என்னவாக இருக்கும் என்று யோசித்தபடி வேகமாக படியேறிச் சென்றாள் கீதா.
விஷ்ணுவின் படுக்கையறைக்குள் நுழைந்த கீதா தலையணைக்கு அடியில் சாவியைத் தேட, ‘நான் உன்னோட அண்ணன்!’ என்ற துண்டுச்சீட்டைக் கண்டு அதிர்ந்தாள்.
“அம்மா சாவியை இங்கேதான் வைத்தேன்” என்றவளின் கண்களில் கண்ணீர் அரும்பியது.
“இங்கேதான் என்றால் எங்கே?” என்ற கார்த்திகேயன் அங்கிருந்த மற்ற இடங்களில் அவசரமாக தேட, தன்னுடைய மகளைத் திட்டித்தீர்க்க தொடங்கினார் காதம்பரி.
“நான் வேணும்னு எதுவும் பண்ணலம்மா” என்றவளின் கண்களில் கண்ணீர் பெருக்கியது. இங்கே இவ்வளவு கலவரம் நடந்து கொண்டிருக்க, தன்னுடைய பைக் சாவியை எடுத்துகொண்டு வெளியே கிளம்பிச் சென்றான் விஷ்ணு.
ஒரு அமைதியான இடத்தில் வண்டியை நிறுத்தி இறங்கியவன், ‘எனக்கு பின்னே பிறந்தது எல்லாம் இந்தளவுக்கு யோசிக்குது!’ என்றவன் மதியம் நடந்ததை நினைத்தான். கீதாவின் அறைக்கதவு பூட்டி இருப்பது கண்டு ஆரம்பத்தில் கோபபட்டாலும், தன்னுடைய தங்கைக்கு தன்மீது இருக்கும் பயம் உணர்ந்தான்.
‘கீதா இப்படி செய்யும் ஆளில்லையே’ என்றவனின் கண்ணில் அந்த துண்டுச்சீட்டு விழுந்தது.
அதை எடுத்துப் பார்க்க, ‘உன்னிடமிருந்து இப்படியொரு செயலை எதிர்பார்க்கல அண்ணா. என் அறையின் சாவி உன் தலையணை கீழே இருக்கு’ என்ற தகவலையும் எழுதியிருந்தாள்.
அவள் சொன்ன இடத்தில் சாவியிருக்க, அதை எடுத்துகொண்டு கீதாவின் அறைக்குச் சென்றான். விஷ்ணு கதவைத் திறந்து உள்ளே நுழைய, மிருணாளினி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
தன்னுடைய தங்கையின் மனதில் தவறான எண்ணத்தை விதைத்துவிட்டு, எந்தவிதமான கவலையுமின்றி உறங்கும் மனைவியைப் பார்த்து அவனது கோபம் அதிகரித்தது. மெல்ல அவளை நெருங்கியவன் தோளைத் தொட, அவளது உடல் நெருப்பாகக் கொதிப்பதை உணர்ந்தான்.
‘இவளை இப்படியே விட்டால் நாளை என்மேல் பயமின்றி போய்விடும்’ என்ற எண்ணத்துடன் திரும்பியவனின் கண்ணில் ஏசி ரிமோட் விழுந்தது. உடனே அதை கையில் எடுத்தவன் ஏசியின் அளவினை அதிகரித்து கதவைப் பூட்டிவிட்டு வெளியேறினான்.
திடீரென்று கேட்ட ஹாரன் சத்தத்தில் தன்னிலைக்கு மீண்ட விஷ்ணு, தன்னுடைய கை கடிகாரத்தில் மணியைப் பார்த்துவிட்டு வீடு நோக்கி பயணித்தான். நொடிகள் நிமிடங்களாக கரைந்து செல்ல அந்த சாவியை மூவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
சட்டென்று சுதாரித்த கார்த்திகேயன், ‘அண்ணா சாவியை எடுத்துப்போய் இருப்பானோ?’ என்ற எண்ணத்தில் செல்லை எடுத்து விஷ்ணுவிற்கு அழைத்தான்.
அவன் அலைபேசி சிணுங்கும் ஓசைக் காதில் விழ,’இவன் இதைக்கூட எடுத்துட்டுப் போகல’ என்றவனின் நெஞ்சினில் அந்த சிந்தனை உருவானது.
“இனிமேலும் நேரம் கடத்த முடியாதும்மா. அண்ணிக்கு ஏதாவது ஆகிவிட்டால் ரொம்ப டேஞ்சர். அந்த அறையின் கதவோட டூப்ளிகேட் சாவியும் நம்மகிட்ட இல்லாததால், இப்போ கதவை உடைப்பதைத் தவிர வேற ஆப்ஷனே இல்ல” கார்த்திகேயன் வேகமாக சிந்தித்து அந்த பிரச்சனைக்கான தீர்வை கூறினான்.
தன்னுடைய சின்ன மகனை டூல்ஸ் எடுத்துவர சொல்லி கீழே அனுப்பிவிட்டு திரும்ப, இவை அனைத்தும் தன்னால்தான் என்ற எண்ணத்தில் கீதாஞ்சலி வாய்விட்டு கதறிய மகளுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று அவருக்கு சத்தியமாக புரியவில்லை.
மெல்ல மகளின் தலையை வருடிய காதம்பரியின் இடையை இரு கரங்களால் வளைத்து வயிற்றில் முகம் புதைத்தவள், “நேற்று இரவு அண்ணா அண்ணியை ரொம்பவே துன்புறித்து இருந்தான். அவங்க உதடுகள் கிழிந்து அப்புறம் உடம்புகளில் ஒரு இடமில்லாமல் நகக்காயம் பதிந்து இருந்தது” என்றவள் சொன்ன விஷயத்தை நம்ப முடியாமல் திகைத்தார்.
தன்னுடைய மகன் இந்த செயலை நினைத்து மனம் பதறிட, “விஷ்ணு அண்ணாவிற்கு தெரிந்தால் அடித்துவிடும் என்று சாவியை இங்கே வச்சிட்டு போனேன்” என்றவள் உண்மையைக் கூறும்போது தான், தன்னுடைய முயற்சியில் அறையின் பூட்டை உடைத்துவிட்டான் கார்த்திகேயன்.
மூவரும் பதட்டத்துடன் அறைக்குள் நுழைய, அந்த அறையினுள் ஏசி அதிகமாக வைக்கபட்டிருந்தது. சட்டென்று ரிமோட்டைத் தேடி எடுத்து அதை ஆப் செய்த கீதா, “அண்ணி” என்ற அழைப்புடன் மிருணாளினியைத் தொட சென்றாள்.
ஏற்கனவே ஜுரம் வந்திருந்த பெண்ணிற்கு குளிர் சேராததால் உடம்பு படுக்கையில் தூக்கிப்போட்டது. அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க, “இப்பவே அண்ணியை ஹாஸ்பிட்டலில் கொண்டுபோய் சேர்ப்பதுதான் நல்லது” என்றவன் வேகமாக கீழே சென்றனர்.
தாயும் – மகளும் ஒன்றிணைந்து மிருணாவைத் தூக்கிக்கொண்டு வெளியே செல்ல திரும்பியபோது, “பரவால்ல சாவியை எதிர்ப்பார்க்காமல் பூட்டையே உடைச்சிட்டீங்க” என்ற விஷ்ணுவின் குரல்.
“படுபாவி கட்டிட்டு வந்த மறுநாளே அந்த பெண்ணைக் கொல்லும் அளவிற்கு சென்றிருக்கிற? நீயெல்லாம் மனுஷனா?” என்றவர் அவனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து இரண்டு கன்னங்களிலும் மாறிமாறி அறைந்தார்.
அதற்குள் அங்கே வந்த கார்த்திகேயன், “அம்மா அண்ணாவை அப்புறம் வந்து அடிக்கலாம்! இப்போ நமக்கு அண்ணியோட உயிர்தான் முக்கியம்” என்றவன் மிருனாவைத் தூக்கிச் செல்ல நினைக்க, அவனின் கன்னத்தில் பளாரென்று அறைந்தான் விஷ்ணு.
தன்னுடைய அண்ணனிடம் அரை வாங்கியவனின் கண்கள் கலங்கிச் சிவக்க, “அவளை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகக்கூடாது” என்றான் முடிவாக.
அவனது விழிகளில் தெரிந்த வன்மம் கண்ட காதம்பரி, “ஐயோ! இதயம் இருக்கும் இடத்தில் உனக்கு இருதயத்தை வைத்து படைத்து விட்டானா அந்த ஆண்டவன்” என்றவர் விழியிரண்டும் கலங்கிட, கார்த்திகேயன் – கீதாஞ்சலி இருவரும் தவிப்புடன் அண்ணனின் முகத்தை ஏறிட்டனர்.
“இன்னொரு முறை அவளுக்கு யாராவது உதவி பண்ணினால், இந்த மாதிரி பாவம் பார்த்து விடமாட்டேன். இந்த வீட்டில் எனக்கு எதிராக ஏதாவது செய்யணும்னு நினைத்தால், மிருணாவை கொல்லவும் தயங்க மாட்டேன்” என்றவன் தங்கையின் தோளில் சாய்ந்திருந்த மனைவித் தூக்கிக்கொண்டு, தன்னுடைய அறைக்குச் சென்றான்.
இரும்பு இதயம் உருகாதோ?! - 9பதிவுடன் உங்களை சந்திக்க வந்திருப்பது நான் உங்கள் அனாமிகா 12. இந்த பதிவிற்கும் மறக்காமல் கமெண்ட் பண்ணுங்கள். உங்க கருத்துகள் தான் என்னை உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் எழுத வைக்கும்.
அத்தியாயம் – 9
மாலை வீடு திரும்பிய பிள்ளைகளிடம் விசாரணையில் இறங்கிய மகனை விநோதமாக பார்த்தபடி ஹாலுக்கு வந்தாள் காதம்பரி. தன்னுடைய அண்ணனிடம் கையும் களவுமாக மாட்டிய பயமின்றி நின்றவளைப் பார்த்து, ‘என்ன தில்லாலங்கடி வேலை பார்த்து வச்சே’ என்று பார்வையில் வினாவினான் கார்த்தி.
“உன்னோட அறையில் தான் ரூம் கீயை வைத்தேன், நீங்க அதைப் பார்க்கவே இல்லையா?” என்று கேள்வியாக புருவம் உயர்த்திய கீதாவைப் பார்த்து, ‘அடிப்பாவி!’ என்றான் கார்த்திகேயன்.
விஷ்ணுவின் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாமல் நின்ற காதம்பரி, “இங்கே என்ன நடக்குது?” என்று பொதுவாகக் கேட்க, காலை தான் செய்த செயலை ஒன்றுவிடாமல் தாயிடம் ஒப்பித்தாள் மகள்.
“அடிப்பாவி ஒரு பெண்ணை உள்ளே வைத்து பூட்டிட்டு காலேஜ் போயிட்டு வந்து இருக்கிறாயே? உனக்கு எல்லாம் என்ன நெஞ்சழுத்தம்!” என்று மகளைத் திட்டியபடியே மாடியேறிய தாயின் பின்னோடு சென்றான் கார்த்திகேயன்.
எந்தவிதமான உணர்வையும் வெளிபடுத்தாமல் நின்றிருந்த அண்ணனைப் பார்த்தவளிடம், “நீ வைத்த இடத்தில் தானே சாவி இருக்கும், அதை எடுத்து அம்மாவின் கையில் கொடு” என்றவனின் உதடுகளில் புன்னகை அரும்பிட, அவனின் சிரிப்பிற்கு பின்னால் இருக்கும் வன்மம் என்னவாக இருக்கும் என்று யோசித்தபடி வேகமாக படியேறிச் சென்றாள் கீதா.
விஷ்ணுவின் படுக்கையறைக்குள் நுழைந்த கீதா தலையணைக்கு அடியில் சாவியைத் தேட, ‘நான் உன்னோட அண்ணன்!’ என்ற துண்டுச்சீட்டைக் கண்டு அதிர்ந்தாள்.
“அம்மா சாவியை இங்கேதான் வைத்தேன்” என்றவளின் கண்களில் கண்ணீர் அரும்பியது.
“இங்கேதான் என்றால் எங்கே?” என்ற கார்த்திகேயன் அங்கிருந்த மற்ற இடங்களில் அவசரமாக தேட, தன்னுடைய மகளைத் திட்டித்தீர்க்க தொடங்கினார் காதம்பரி.
“நான் வேணும்னு எதுவும் பண்ணலம்மா” என்றவளின் கண்களில் கண்ணீர் பெருக்கியது. இங்கே இவ்வளவு கலவரம் நடந்து கொண்டிருக்க, தன்னுடைய பைக் சாவியை எடுத்துகொண்டு வெளியே கிளம்பிச் சென்றான் விஷ்ணு.
ஒரு அமைதியான இடத்தில் வண்டியை நிறுத்தி இறங்கியவன், ‘எனக்கு பின்னே பிறந்தது எல்லாம் இந்தளவுக்கு யோசிக்குது!’ என்றவன் மதியம் நடந்ததை நினைத்தான். கீதாவின் அறைக்கதவு பூட்டி இருப்பது கண்டு ஆரம்பத்தில் கோபபட்டாலும், தன்னுடைய தங்கைக்கு தன்மீது இருக்கும் பயம் உணர்ந்தான்.
‘கீதா இப்படி செய்யும் ஆளில்லையே’ என்றவனின் கண்ணில் அந்த துண்டுச்சீட்டு விழுந்தது.
அதை எடுத்துப் பார்க்க, ‘உன்னிடமிருந்து இப்படியொரு செயலை எதிர்பார்க்கல அண்ணா. என் அறையின் சாவி உன் தலையணை கீழே இருக்கு’ என்ற தகவலையும் எழுதியிருந்தாள்.
அவள் சொன்ன இடத்தில் சாவியிருக்க, அதை எடுத்துகொண்டு கீதாவின் அறைக்குச் சென்றான். விஷ்ணு கதவைத் திறந்து உள்ளே நுழைய, மிருணாளினி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
தன்னுடைய தங்கையின் மனதில் தவறான எண்ணத்தை விதைத்துவிட்டு, எந்தவிதமான கவலையுமின்றி உறங்கும் மனைவியைப் பார்த்து அவனது கோபம் அதிகரித்தது. மெல்ல அவளை நெருங்கியவன் தோளைத் தொட, அவளது உடல் நெருப்பாகக் கொதிப்பதை உணர்ந்தான்.
‘இவளை இப்படியே விட்டால் நாளை என்மேல் பயமின்றி போய்விடும்’ என்ற எண்ணத்துடன் திரும்பியவனின் கண்ணில் ஏசி ரிமோட் விழுந்தது. உடனே அதை கையில் எடுத்தவன் ஏசியின் அளவினை அதிகரித்து கதவைப் பூட்டிவிட்டு வெளியேறினான்.
திடீரென்று கேட்ட ஹாரன் சத்தத்தில் தன்னிலைக்கு மீண்ட விஷ்ணு, தன்னுடைய கை கடிகாரத்தில் மணியைப் பார்த்துவிட்டு வீடு நோக்கி பயணித்தான். நொடிகள் நிமிடங்களாக கரைந்து செல்ல அந்த சாவியை மூவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
சட்டென்று சுதாரித்த கார்த்திகேயன், ‘அண்ணா சாவியை எடுத்துப்போய் இருப்பானோ?’ என்ற எண்ணத்தில் செல்லை எடுத்து விஷ்ணுவிற்கு அழைத்தான்.
அவன் அலைபேசி சிணுங்கும் ஓசைக் காதில் விழ,’இவன் இதைக்கூட எடுத்துட்டுப் போகல’ என்றவனின் நெஞ்சினில் அந்த சிந்தனை உருவானது.
“இனிமேலும் நேரம் கடத்த முடியாதும்மா. அண்ணிக்கு ஏதாவது ஆகிவிட்டால் ரொம்ப டேஞ்சர். அந்த அறையின் கதவோட டூப்ளிகேட் சாவியும் நம்மகிட்ட இல்லாததால், இப்போ கதவை உடைப்பதைத் தவிர வேற ஆப்ஷனே இல்ல” கார்த்திகேயன் வேகமாக சிந்தித்து அந்த பிரச்சனைக்கான தீர்வை கூறினான்.
தன்னுடைய சின்ன மகனை டூல்ஸ் எடுத்துவர சொல்லி கீழே அனுப்பிவிட்டு திரும்ப, இவை அனைத்தும் தன்னால்தான் என்ற எண்ணத்தில் கீதாஞ்சலி வாய்விட்டு கதறிய மகளுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று அவருக்கு சத்தியமாக புரியவில்லை.
மெல்ல மகளின் தலையை வருடிய காதம்பரியின் இடையை இரு கரங்களால் வளைத்து வயிற்றில் முகம் புதைத்தவள், “நேற்று இரவு அண்ணா அண்ணியை ரொம்பவே துன்புறித்து இருந்தான். அவங்க உதடுகள் கிழிந்து அப்புறம் உடம்புகளில் ஒரு இடமில்லாமல் நகக்காயம் பதிந்து இருந்தது” என்றவள் சொன்ன விஷயத்தை நம்ப முடியாமல் திகைத்தார்.
தன்னுடைய மகன் இந்த செயலை நினைத்து மனம் பதறிட, “விஷ்ணு அண்ணாவிற்கு தெரிந்தால் அடித்துவிடும் என்று சாவியை இங்கே வச்சிட்டு போனேன்” என்றவள் உண்மையைக் கூறும்போது தான், தன்னுடைய முயற்சியில் அறையின் பூட்டை உடைத்துவிட்டான் கார்த்திகேயன்.
மூவரும் பதட்டத்துடன் அறைக்குள் நுழைய, அந்த அறையினுள் ஏசி அதிகமாக வைக்கபட்டிருந்தது. சட்டென்று ரிமோட்டைத் தேடி எடுத்து அதை ஆப் செய்த கீதா, “அண்ணி” என்ற அழைப்புடன் மிருணாளினியைத் தொட சென்றாள்.
ஏற்கனவே ஜுரம் வந்திருந்த பெண்ணிற்கு குளிர் சேராததால் உடம்பு படுக்கையில் தூக்கிப்போட்டது. அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க, “இப்பவே அண்ணியை ஹாஸ்பிட்டலில் கொண்டுபோய் சேர்ப்பதுதான் நல்லது” என்றவன் வேகமாக கீழே சென்றனர்.
தாயும் – மகளும் ஒன்றிணைந்து மிருணாவைத் தூக்கிக்கொண்டு வெளியே செல்ல திரும்பியபோது, “பரவால்ல சாவியை எதிர்ப்பார்க்காமல் பூட்டையே உடைச்சிட்டீங்க” என்ற விஷ்ணுவின் குரல்.
“படுபாவி கட்டிட்டு வந்த மறுநாளே அந்த பெண்ணைக் கொல்லும் அளவிற்கு சென்றிருக்கிற? நீயெல்லாம் மனுஷனா?” என்றவர் அவனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து இரண்டு கன்னங்களிலும் மாறிமாறி அறைந்தார்.
அதற்குள் அங்கே வந்த கார்த்திகேயன், “அம்மா அண்ணாவை அப்புறம் வந்து அடிக்கலாம்! இப்போ நமக்கு அண்ணியோட உயிர்தான் முக்கியம்” என்றவன் மிருனாவைத் தூக்கிச் செல்ல நினைக்க, அவனின் கன்னத்தில் பளாரென்று அறைந்தான் விஷ்ணு.
தன்னுடைய அண்ணனிடம் அரை வாங்கியவனின் கண்கள் கலங்கிச் சிவக்க, “அவளை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகக்கூடாது” என்றான் முடிவாக.
அவனது விழிகளில் தெரிந்த வன்மம் கண்ட காதம்பரி, “ஐயோ! இதயம் இருக்கும் இடத்தில் உனக்கு இருதயத்தை வைத்து படைத்து விட்டானா அந்த ஆண்டவன்” என்றவர் விழியிரண்டும் கலங்கிட, கார்த்திகேயன் – கீதாஞ்சலி இருவரும் தவிப்புடன் அண்ணனின் முகத்தை ஏறிட்டனர்.
“இன்னொரு முறை அவளுக்கு யாராவது உதவி பண்ணினால், இந்த மாதிரி பாவம் பார்த்து விடமாட்டேன். இந்த வீட்டில் எனக்கு எதிராக ஏதாவது செய்யணும்னு நினைத்தால், மிருணாவை கொல்லவும் தயங்க மாட்டேன்” என்றவன் தங்கையின் தோளில் சாய்ந்திருந்த மனைவித் தூக்கிக்கொண்டு, தன்னுடைய அறைக்குச் சென்றான்.
Last edited by a moderator: