Sanjanarishi
முதலமைச்சர்
வெட்ட வெளியில்
மொட்டை மாடியில்
அற்றை திங்களை
ஒற்றை நாற்காலியில்
நீயும் நானும்
காதலாய் கதைகள் பல பேசி
காற்றையும் இருவர் இடையே அண்ட விடாது
அண்ட சராசரத்தையும்
அர்த்த ராத்திரியில்
ஆரலின் ஒளிச் சாரலினூடே
ஒருவரை ஒருவர் நேத்திரங்களில்
நிரப்பிக் கொண்டு
மூரல் மின்ன புன்னகை பூக்கள் உதிர்த்து
இசை மழை தனில் நனைந்து
இன்பம் துய்ப்போமே
இறுதி வரை இதயக் கூட்டில்
இருவர் ஒருவராய்
வாழ்ந்திடுவோமே...
மொட்டை மாடியில்
அற்றை திங்களை
ஒற்றை நாற்காலியில்
நீயும் நானும்
காதலாய் கதைகள் பல பேசி
காற்றையும் இருவர் இடையே அண்ட விடாது
அண்ட சராசரத்தையும்
அர்த்த ராத்திரியில்
ஆரலின் ஒளிச் சாரலினூடே
ஒருவரை ஒருவர் நேத்திரங்களில்
நிரப்பிக் கொண்டு
மூரல் மின்ன புன்னகை பூக்கள் உதிர்த்து
இசை மழை தனில் நனைந்து
இன்பம் துய்ப்போமே
இறுதி வரை இதயக் கூட்டில்
இருவர் ஒருவராய்
வாழ்ந்திடுவோமே...