- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
நான் ஆர்தர் ஃபோர்டிடம் 'சாத்தான்' என்ற கருத்தை விளக்குமாறு கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்: "மனிதனுக்கு ஆரம்பத்திலிருந்தே தெரிந்ததும் ஆனால் உலக விருப்பு வெறுப்புகளால் நாம் மறந்து போனதுமான ஞானமானது எமக்கு இங்கே போதிக்கப்படும். அது ஆதியிலிருந்தே இருக்கும் ஞானமாகும். இந்த உலகுக்குரிய ஆசை அபிலாஷைகள், வெறுப்புகள், காமம் போன்றவற்றைத் தள்ளி வைப்பதன் மூலம் பூதவுடலுக்குரிய வரையறைகளை உயிரோடு இருக்கையிலேயே மீறலாம் என்பதை நாம் அறிவோம்.
இந்த உலக மாயையில் நாம் ஆழ்ந்து போவதற்குக் காரணம் நம் உள்ளத்தே தூண்டுவிக்கப்படும் ஆசை அபிலாஷைகளே. அப்படித் தூண்டுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆசை அபிலாஷைகளை வெற்றி கொள்வதே உயர்நிலையை எய்துவதற்குரிய விரைவான வழியாகும். முடிவற்ற வாழ்வின் ஒரு மின்னலான கணமே இப்பூவுலக வாழ்வென்பதைப் புரிந்து கொண்டால் மனத்தின் இச்சலனங்களை வெற்றி கொள்வது இலகுவாகும்.
அந்த மின்னலான கணப்பொழுதில் (பூவுலகில்) தூண்டுவிக்கப்படும் ஆசைகளுக்காக ஏன் ஒருவரின் முன்னேற்றங்களைத் தடுக்க வேண்டும்? இந்தச் சிந்தனையை என்றும் மனதில் வைத்திருக்க வேண்டும். மனிதனைச் சூழ்ந்து நின்று ஆசை வேட்கைகளால் அவன் தன்னைப் படைத்தவனையே மறக்கும்படி செய்யும் இந்தத் தீய சக்திகளை வெல்வது மிக மிக முக்கியமானது.
"இந்தத் தீயசக்திகளானவை சில மத போதகர்களால் சொல்லப்படுவது போல சைத்தானின் வேலையல்ல. ஆனால் கெட்ட எண்ணங்களைச் சிலர் எண்ணுவதால் சூழலில் நிலையாக ஏற்படுத்தப்படும் தீயஅலைகளாகும். நிலையான கறைகளாகும். 'நிலையான' என்று சொல்வது சிலவேளை உண்மை இல்லாமலும் இருக்கலாம்.
ஏனெனில் பலர் நல்ல எண்ணங்களை எண்ணுவதால் உண்டாக்கப்படும் நல்ல அலைகள் இந்தத் தீய அலைகளின் சக்திகளை நிர்மூலமாக்கும். அதற்குப் போதுமான அளவு நல்ல அலைகளானது உருவாக்கப்படல் வேண்டும். சைத்தான் என்ற ஒன்று உள்ளது. ஆனால் அது நாம் நினைப்பது போல இல்லை.
மனிதனானவன் இப்பூவுலகில் கால் வைத்ததில் இருந்து சேகரிக்கப்பட்டிருக்கும் தீயசக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்ததே இந்தச் சைத்தான் ஆகும். அது தீமைகளின் விளைவேயாகும். மனிதனால் கர்த்தர் போல இருக்க இயலாததால் ஒவ்வொரு தலைமுறையும் அதனது தீயசெயல்களால் இந்தத் தீயசக்திக்கு உரம் போட்டு அதன் மூலம் உருவான அந்தத் தீயசக்தியே சைத்தானென நாம் எண்ணுவதாகும்.
சைத்தான் என்பது ஒரு நபரல்ல. எவ்வாறு ஒவ்வொரு கருணையான, நன்மையான செய்கையாலும் நல்ல சக்தியானது பிரகாசிக்கிறதோ அவ்வாறே இந்தத் தீயசக்தி ஒவ்வொரு தீயசெய்கையாலும் உரமூட்டப்பட்டு மிகச்சக்தி வாய்ந்த விசையாக உள்ளது. அதுதான் சைத்தான். ஆரம்பத்தில் ஒரு சொல் இருந்தது. அது நல்ல சொல்லாக இருந்தது.
நிச்சயமாக அது 'கடவுள்' என்னும் சொல்லாகும். ஆத்மாக்களுக்காக இவ்வுலகினைப் படைத்த தந்தையானவன் தீயசக்திகளைக் கலக்கவில்லை. ஆனால் வழிதவறிய ஆத்மாக்கள் பௌதீக உடலெடுத்துத் தங்களது சொந்த முக்கியத்துவத்தை உயர்த்துவதற்காகப் பேராசைப்பட்டுச் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு அதனால் உருவாக்கப்பட்ட தீயசக்திகளின் மொத்த உருவை அவர்கள் சைத்தானென அழைக்கத் தொடங்கினர். சைத்தானைக் இறைவன் படைக்கவில்லை.
மனிதன் தான் படைத்தான். அது ஒரு கெட்ட ஆத்மாவல்ல. ஆனால் மனிதனின் தீய குணங்களினால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு படைப்பு. அதற்கு எமது கீழான எண்ணங்களினாலும் செயல்களினாலும் உயிரூட்டிக் கொண்டிருக்கிறோம். எண்ணங்களும் செயல்களே என்பதனை நாம் உணரவேண்டும்.
ஒவ்வொரு கெட்ட சிந்தனையும் செயலும் அன்பான, கருணையான சிந்தனையாலும் செயலாலும் இடமாற்றப்பட்டால் சைத்தானின் வடிவம் சிறியதாகிக் கொண்டே வரும். சைத்தானை அழிக்க வேண்டுமெனில் நாம் இதனை உணரவேண்டும். எனவே நாம் எல்லோராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த இரண்டாயிரமாம் ஆண்டை அண்மிக்கையில், பூவுலகில் வாழும் அனைவரது இதயங்களிலும் கெட்ட எண்ணங்களுக்குப் பதிலாக நல்ல எண்ணங்களே நிறைந்திருக்கும். பூவுலகில் மட்டுமல்ல நாம் இப்போ செய்வது போல ஆத்ம உலகிலும் நல்லனவே நிறைந்திருக்கும்."
விலங்குகளுக்கும் கூட இறப்பில்லையா என அறியவிரும்பினேன். அதற்கு ஆர்தர் பின்வருமாறு பதிலளித்தார்: "இங்கே நேரம் என்பதற்கு அர்த்தமில்லை. எங்களுக்கு வயதாவதில்லை. நாம் ஆரம்பத்திலிருந்தே இருந்து கொண்டிருக்கிறோம். எமக்கு முடிவில்லை. நாம் இங்கே இருப்பதே நேரம் என்பதை விளக்கப் போதுமானது. இந்த உண்மையைச் சரிவரப் புரிந்து கொள்வோமெனில் ஏன் தேவையற்ற விஷயமென்று ஒன்றுமில்லை எனப் புரிந்து கொள்ளமுடியும்.
ஒன்றுமே இறப்பதில்லை. மீண்டும் அதனை அழுத்திச் சொல்கிறேன். ஒன்றுமே இறப்பதில்லை. இறப்பு என்று ஒன்றுமே இல்லை. படைப்பின் ஆரம்பத்திலிருந்தே எல்லாம் இருந்து கொண்டே இருக்கின்றன. எவையும் அழிவதில்லை. ஆனால் அவைகளின் நிலைகள் மாறுதலடையும். ஒரு கூட்டுப்புழு வண்ணாத்திப் பூச்சியாய் மாறிப் பின் அதன் ஆத்மா வேறொரு நிலைக்கு மாறியவுடன் அதனுடல் மீண்டும் அதனது மூலப்பொருள்களுக்குத் திரும்பும்.
ஆத்மா என்றும் மாறாது. அநாதியானது. ஆனால் அதன் நிலைகள் மாறுதலடையும். பௌதீக உலகில் எமது கையால் அடிபடும் ஈயானது வேறொரு உலகில் நிலை மாற்றமடையும். ஆனால் ஈயான அதனது தன்மையானது மாறாது. காரில் அடிபட்டு இறக்கும் நாயின் நிலையும் இதேதான். அதனது பூதவுடல் பூமிக்குச் சென்றடையும். அதனது ஆத்மா ஏனைய ஆத்மாக்களைப் போலவே அழிவற்றதாகையால் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும்.
இது ஒரு மாறாத நியதியாகும்.
நாம் ஆரம்பத்தில் இருந்தது போலவே என்றும் இருப்போம். ஆனால் ஆத்மீக வழிகளில் முன்னேறிக்கொண்டு இருப்போம். சில நேரங்களில் ஒரு உண்மையான செல்லப்பிராணி (நாய்போல) பூவுலகில் மிக மிக முன்னேறினால் அது மீண்டும் பூவுலகிற்குத் திரும்ப வேண்டியிருக்காது. ஆனால் மேலுலகிலும் அது நாயாகவே இருக்கும். தனது முழு வாழ்க்கையையும் மற்றவருக்கு உதவக்கூடியதாகவும் அவர்களைக் காப்பாற்றக் கூடியதாகவும் முழுமையாக அர்ப்பணிக்கக் கூடியதான ஒரு அன்பான ஆத்மாவாக இருப்பதிலும் பார்க்க உயர்வான நிலை தான் வேறு என்ன?
தன்னலம் கருதாது எப்போதும் எஜமானனின் நலனை முன்னே வைத்ததனால் அந்த நாயானது கடவுளின் பார்வையில் பூரணமாகிவிட்டது. எங்கள் எல்லோருக்கும் எவ்வளவு சிறந்ததொரு உதாரணமென்று பார்த்தாயா? நாமும் எப்பொழுதும் எம்முடைய நலனைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிராமல் ஏனையோரின் நலனைப் பற்றியும் கருத்தில் கொண்டோமாயின் பூரணமானவர்கள் ஆவோம். நாம் எந்த விதமான பிறவி எடுத்திருந்தாலும் எங்கள் நலனிலும் பார்க்க மற்றையோரின் நலனைக் கருத்தில் கொண்டால் முன்னேறலாம்."
அவர் தொடர்ந்து எழுதுகையில், "நாய்களோ, பூனைகளோ அல்லது வேறு எந்த வகையான செல்லப் பிராணிகளோ சில மாறுபட்ட குணாதிசயங்களைக் காட்டும். சில விரும்பத்தக்கதாக இருக்கலாம், சில விரும்பத்தகாததாகவும் இருக்கலாம். விலங்குகள், தாவரங்கள், கனிமங்கள், பறவைகள் போன்றவற்றின் ஆத்மாவானது மனிதர்களின் ஆத்மாவிலும் பார்க்க வித்தியாசமான இறைசக்தியாகும்.
ஒரு அணுவானது உடைந்து சிற்றணுக்களாக மாறுவதைப் போல் அவை ஆத்மாவின் பகுதிகளாகப் பிரிந்து முழுமையில்லாத பகுதி ஆத்மாக்களாக, சிற்சில விடயங்களை மட்டும் நிறைவேற்றும். முழுமையான மனித ஆத்மாவாக மாறக்கூடிய வல்லமையை இழந்தவைகளாகச் செயற்படும். இந்த மரங்கள், பறவைகள், பாறைகள், மிருகங்கள், காட்டுவிலங்குகள், மண் போன்ற எல்லாவகையான உயிரினங்களுக்கும் ஒரு தனித்தன்மையும் ஆத்மாவும் உள்ளன.
ஆனால் அவை பூவுலகில் வாழும் மனிதனின் ஆத்மாவைவிட முற்றிலும் வேறுபட்டவை. இவையும் சுவாசிக்கும், உயிர்வாழும் பிறவிகளாகும். இவையும் கடவுளின் ஒரு பகுதியேயாகும். அவை பூவுலகில் வாழும் மனிதனின் ஆத்மாவைப் போல் மிக முன்னேற்றம் அடையாவிடினும் எம்மைப் படைத்தவனையே என்றும் பிரதிபலிப்பனவாகும். அதாவது மனிதர்களாகிய நாம் எப்படி அன்புக்குக் கட்டுப்படுகிறோமோ அவையும் அதே போலவே கட்டுப்படும்.
அவற்றுக்கு வேறுபட்ட விருப்பு வெறுப்புகளிருக்கும். அவற்றின் விளையாட்டுத் தனங்களும் கோபதாபங்களும் வேறுபட்டவை. அவை தங்களுக்கென அமைந்த செயற்பாடுகைச் செய்து ஒன்றில் நல்லவையாகவோ, கேட்டவையாகவோ அவைகளுக்கென்று அமைந்த தனிப்பட்ட குணநலன்களின் படி வரும். அந்தத் தனிப்பட்ட தன்மைகள் ஆத்மாவின் தன்மைகளாகும்.
அதனால் தான் சில வளரும் தாவரங்கள் பிரார்த்தனைக்குப் பதிலளிப்பதாகத் தெரியும்; சில என்னதான் அன்புடன் பராமரித்தாலும் ஒத்துழைக்கமாட்டா. சில மனிதர்களும் அவ்வாறே நடப்பதைக் கண்டிருப்பாயென நினைக்கிறேன். சிலர் சற்றும் ஏனையவர்களைப் பற்றிச் சிந்திக்காமல், கடமைகளை மறந்து திரிவார்கள். சிலர் மற்றையவர்களின் நிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவுவார்கள். மற்றையவர்களை மகிழ்ச்சிப்படுத்துவார்கள்.
"இங்கே ஞானாலயத்தில் ஒவ்வொரு உயிரினத்துக்காகவும் செய்யப்படும் பிரார்த்தனைகளின் பலன்களைப் பற்றி அறிகிறோம். அவை உடல் உபாதைகளைப் போக்கும் சிகிச்சையாகவும் இருக்கலாம் அல்லது ஆத்மீக முன்னேற்றத்துக்குரிய முயற்சிகளாயும் இருக்கலாம். தாவரங்கள், பிராணிகள், கற்பாறைகள், பூச்சிபுழுக்கள் போன்ற எம்மால் பார்க்கக்கூடிய, கேட்கக்கூடிய, உணரக்கூடிய, சுவைக்கக்கூடிய எல்லாப்பொருட்களும் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிக்கக் கூடியன என நாமறிகிறோம்.
எல்லாம் வல்ல இறைவன் தனது படைப்புகளில் நிறைந்திருப்பதோடு அவைகளின் முன்னேற்றத்துக்கான உண்மையான பிரார்த்தனைகளுக்குச் செவி சாய்க்கிறான். மரங்களிடையே உலவும் காற்றின் குரலும் பறவைகளின் ஒலியும் பூச்சியினங்களின் ஒலியும் மனிதனின் கூக்குரலும் இறைவனுக்கு ஒரே விதமாகவே கேட்கின்றன. ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு விதமாக இறைவனுடன் தொடர்பு கொள்ளும். இறைவன் எல்லா விதமான முனகல், ரீங்காரம், கூக்குரல் போன்ற எல்லாவற்றுக்கும் (அது இறைவனுக்கு விடும் அழைப்போ அல்லது ஒன்றுடனொன்று தொடர்பு கொள்ளும் ஒலியோ) செவி சாய்ப்பார்.
இதை ஒரு கற்பனைக் கதையென்று எண்ணிவிடாதே. இவையெல்லாம் உண்மையே ருத். நாம் எல்லா உயிரினங்களுடனும் (ஆத்ம வடிவிலோ அல்லது பௌதீக வடிவிலோ) தொடர்பு கொள்ளக்கூடியதாக வரும் வரையும் நாம் இறைவனுடன் இரண்டறக் கலக்கக்கூடிய நிலையை அடையமாட்டோம். உனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதனை எண்ணிப்பார். பாறைகள், மரங்கள், கற்கள் போன்றவற்றின் குரல்களையும் பூச்சியினங்களினது ரீங்காரங்களையும் அதேபோல எல்லாவகையான உயிர்வகையினதும் ஒலிகளையும் கவனிக்கக் கற்றுக்கொள்.
எம் எல்லோரையும் ஒன்றிணைக்கும், எம் ஒவ்வொருவரையும் இறைவனின் வடிவங்களாக்கும் அந்த இணைப்பின் மூலம் அவற்றுடன் தொடர்பு கொண்டு அவற்றின் ரகசியங்களை அறி. நாம் சடப்பொருட்களென்று எண்ணுபவை எல்லாம் எம்மைப் போன்றவையே. ஒவ்வொன்றுக்கும் அதனதன் வழியில் உயிர் வாழ்க்கைகள் உள்ளன. கற்பாறைகளும் பறவைகள், வண்டினங்கள், மனிதர்கள் போலவே இறைவனின் மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதியே. ஒவ்வொரு உயிரினத்துக்கும் இறைவனின் மாபெரும் திட்டத்தில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய குழப்பத்துடன் நான் "எமக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சியினங்களை அழிக்கலாமா" எனக்கேட்டேன். அதற்கு அவர், "பூச்சி புழுக்களானவை தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து விலகி வந்தால் அவை மனிதனால் அழிக்கப்படுவார்கள். எல்லா உயிரினத்துக்கும் இப்பூவுலகில் இடம் வேண்டும். டைனசோர் வகையைச் சேர்ந்த பிரம்மாண்டமான விலங்குகள் ஏனைய விலங்குகள், பறவைகள், மனிதரின் இடங்களை அபகரிக்கப் பார்த்ததனால் பூமியின் பரப்பிலிருந்து மறைந்து விட்டன.
இது மனிதனுக்கு ஒரு பாடமாக அமையட்டும். மனிதனும் பல்கிப்பெருகி, அழிவுப்பாதையில் சென்று ஏனைய உயிரினங்களின் அழிவுக்கும் காரணமானான் எனில் மனிதகுலமும் அழிவை சந்திக்க வேண்டிவரும். நீ குறிப்பிட்ட இந்தப் பூச்சியினங்களும் பல்கிப்பெருகி மனிதனுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்தால் அவையும் அழிய வேண்டியவையே.
இப்பூவுலகில் எமக்கென உள்ள இடத்தை மீறி நாம் அமைதியைக் குலைப்போமாயின் நாம் இங்கிருந்து அகற்றப்படுவோம். ஆனால் ஆன்மீக ரீதியில் உண்மையில் ஒன்றுமே எப்போதும் அழிவதில்லை.
பூச்சிபுழுக்களையும் டைனசோர்களையும் மனிதனுடன் ஒப்பிட்டதனை எண்ணி நான் வியந்தேன்: மனிதன் இந்தப் பிரபஞ்சத்தையே குப்பை மேடாக்குபவனே. இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மனிதன் நீரோடை, ஏரி, குளங்களை அசுத்தமாக்குகிறான்.
தூய்மையாக இருந்த காற்றை அசுத்தப்படுத்திவிட்டான். கனிப்பொருள் நிறைந்த மண்ணை ஆயிரக்கணக்கான ஏக்கர்களாகக் காங்கிரீட்டைப் பாவி மூடிவிட்டான். காடுகளை அழிக்கின்றான். இவற்றின் மூலம் பழைய அழிந்துபோன விலங்குகள் போல் நாமும் எமது அழிவை எழுதிச்செல்கிறோமா?
இந்த உலக மாயையில் நாம் ஆழ்ந்து போவதற்குக் காரணம் நம் உள்ளத்தே தூண்டுவிக்கப்படும் ஆசை அபிலாஷைகளே. அப்படித் தூண்டுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆசை அபிலாஷைகளை வெற்றி கொள்வதே உயர்நிலையை எய்துவதற்குரிய விரைவான வழியாகும். முடிவற்ற வாழ்வின் ஒரு மின்னலான கணமே இப்பூவுலக வாழ்வென்பதைப் புரிந்து கொண்டால் மனத்தின் இச்சலனங்களை வெற்றி கொள்வது இலகுவாகும்.
அந்த மின்னலான கணப்பொழுதில் (பூவுலகில்) தூண்டுவிக்கப்படும் ஆசைகளுக்காக ஏன் ஒருவரின் முன்னேற்றங்களைத் தடுக்க வேண்டும்? இந்தச் சிந்தனையை என்றும் மனதில் வைத்திருக்க வேண்டும். மனிதனைச் சூழ்ந்து நின்று ஆசை வேட்கைகளால் அவன் தன்னைப் படைத்தவனையே மறக்கும்படி செய்யும் இந்தத் தீய சக்திகளை வெல்வது மிக மிக முக்கியமானது.
"இந்தத் தீயசக்திகளானவை சில மத போதகர்களால் சொல்லப்படுவது போல சைத்தானின் வேலையல்ல. ஆனால் கெட்ட எண்ணங்களைச் சிலர் எண்ணுவதால் சூழலில் நிலையாக ஏற்படுத்தப்படும் தீயஅலைகளாகும். நிலையான கறைகளாகும். 'நிலையான' என்று சொல்வது சிலவேளை உண்மை இல்லாமலும் இருக்கலாம்.
ஏனெனில் பலர் நல்ல எண்ணங்களை எண்ணுவதால் உண்டாக்கப்படும் நல்ல அலைகள் இந்தத் தீய அலைகளின் சக்திகளை நிர்மூலமாக்கும். அதற்குப் போதுமான அளவு நல்ல அலைகளானது உருவாக்கப்படல் வேண்டும். சைத்தான் என்ற ஒன்று உள்ளது. ஆனால் அது நாம் நினைப்பது போல இல்லை.
மனிதனானவன் இப்பூவுலகில் கால் வைத்ததில் இருந்து சேகரிக்கப்பட்டிருக்கும் தீயசக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்ததே இந்தச் சைத்தான் ஆகும். அது தீமைகளின் விளைவேயாகும். மனிதனால் கர்த்தர் போல இருக்க இயலாததால் ஒவ்வொரு தலைமுறையும் அதனது தீயசெயல்களால் இந்தத் தீயசக்திக்கு உரம் போட்டு அதன் மூலம் உருவான அந்தத் தீயசக்தியே சைத்தானென நாம் எண்ணுவதாகும்.
சைத்தான் என்பது ஒரு நபரல்ல. எவ்வாறு ஒவ்வொரு கருணையான, நன்மையான செய்கையாலும் நல்ல சக்தியானது பிரகாசிக்கிறதோ அவ்வாறே இந்தத் தீயசக்தி ஒவ்வொரு தீயசெய்கையாலும் உரமூட்டப்பட்டு மிகச்சக்தி வாய்ந்த விசையாக உள்ளது. அதுதான் சைத்தான். ஆரம்பத்தில் ஒரு சொல் இருந்தது. அது நல்ல சொல்லாக இருந்தது.
நிச்சயமாக அது 'கடவுள்' என்னும் சொல்லாகும். ஆத்மாக்களுக்காக இவ்வுலகினைப் படைத்த தந்தையானவன் தீயசக்திகளைக் கலக்கவில்லை. ஆனால் வழிதவறிய ஆத்மாக்கள் பௌதீக உடலெடுத்துத் தங்களது சொந்த முக்கியத்துவத்தை உயர்த்துவதற்காகப் பேராசைப்பட்டுச் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு அதனால் உருவாக்கப்பட்ட தீயசக்திகளின் மொத்த உருவை அவர்கள் சைத்தானென அழைக்கத் தொடங்கினர். சைத்தானைக் இறைவன் படைக்கவில்லை.
மனிதன் தான் படைத்தான். அது ஒரு கெட்ட ஆத்மாவல்ல. ஆனால் மனிதனின் தீய குணங்களினால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு படைப்பு. அதற்கு எமது கீழான எண்ணங்களினாலும் செயல்களினாலும் உயிரூட்டிக் கொண்டிருக்கிறோம். எண்ணங்களும் செயல்களே என்பதனை நாம் உணரவேண்டும்.
ஒவ்வொரு கெட்ட சிந்தனையும் செயலும் அன்பான, கருணையான சிந்தனையாலும் செயலாலும் இடமாற்றப்பட்டால் சைத்தானின் வடிவம் சிறியதாகிக் கொண்டே வரும். சைத்தானை அழிக்க வேண்டுமெனில் நாம் இதனை உணரவேண்டும். எனவே நாம் எல்லோராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த இரண்டாயிரமாம் ஆண்டை அண்மிக்கையில், பூவுலகில் வாழும் அனைவரது இதயங்களிலும் கெட்ட எண்ணங்களுக்குப் பதிலாக நல்ல எண்ணங்களே நிறைந்திருக்கும். பூவுலகில் மட்டுமல்ல நாம் இப்போ செய்வது போல ஆத்ம உலகிலும் நல்லனவே நிறைந்திருக்கும்."
விலங்குகளுக்கும் கூட இறப்பில்லையா என அறியவிரும்பினேன். அதற்கு ஆர்தர் பின்வருமாறு பதிலளித்தார்: "இங்கே நேரம் என்பதற்கு அர்த்தமில்லை. எங்களுக்கு வயதாவதில்லை. நாம் ஆரம்பத்திலிருந்தே இருந்து கொண்டிருக்கிறோம். எமக்கு முடிவில்லை. நாம் இங்கே இருப்பதே நேரம் என்பதை விளக்கப் போதுமானது. இந்த உண்மையைச் சரிவரப் புரிந்து கொள்வோமெனில் ஏன் தேவையற்ற விஷயமென்று ஒன்றுமில்லை எனப் புரிந்து கொள்ளமுடியும்.
ஒன்றுமே இறப்பதில்லை. மீண்டும் அதனை அழுத்திச் சொல்கிறேன். ஒன்றுமே இறப்பதில்லை. இறப்பு என்று ஒன்றுமே இல்லை. படைப்பின் ஆரம்பத்திலிருந்தே எல்லாம் இருந்து கொண்டே இருக்கின்றன. எவையும் அழிவதில்லை. ஆனால் அவைகளின் நிலைகள் மாறுதலடையும். ஒரு கூட்டுப்புழு வண்ணாத்திப் பூச்சியாய் மாறிப் பின் அதன் ஆத்மா வேறொரு நிலைக்கு மாறியவுடன் அதனுடல் மீண்டும் அதனது மூலப்பொருள்களுக்குத் திரும்பும்.
ஆத்மா என்றும் மாறாது. அநாதியானது. ஆனால் அதன் நிலைகள் மாறுதலடையும். பௌதீக உலகில் எமது கையால் அடிபடும் ஈயானது வேறொரு உலகில் நிலை மாற்றமடையும். ஆனால் ஈயான அதனது தன்மையானது மாறாது. காரில் அடிபட்டு இறக்கும் நாயின் நிலையும் இதேதான். அதனது பூதவுடல் பூமிக்குச் சென்றடையும். அதனது ஆத்மா ஏனைய ஆத்மாக்களைப் போலவே அழிவற்றதாகையால் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும்.
இது ஒரு மாறாத நியதியாகும்.
நாம் ஆரம்பத்தில் இருந்தது போலவே என்றும் இருப்போம். ஆனால் ஆத்மீக வழிகளில் முன்னேறிக்கொண்டு இருப்போம். சில நேரங்களில் ஒரு உண்மையான செல்லப்பிராணி (நாய்போல) பூவுலகில் மிக மிக முன்னேறினால் அது மீண்டும் பூவுலகிற்குத் திரும்ப வேண்டியிருக்காது. ஆனால் மேலுலகிலும் அது நாயாகவே இருக்கும். தனது முழு வாழ்க்கையையும் மற்றவருக்கு உதவக்கூடியதாகவும் அவர்களைக் காப்பாற்றக் கூடியதாகவும் முழுமையாக அர்ப்பணிக்கக் கூடியதான ஒரு அன்பான ஆத்மாவாக இருப்பதிலும் பார்க்க உயர்வான நிலை தான் வேறு என்ன?
தன்னலம் கருதாது எப்போதும் எஜமானனின் நலனை முன்னே வைத்ததனால் அந்த நாயானது கடவுளின் பார்வையில் பூரணமாகிவிட்டது. எங்கள் எல்லோருக்கும் எவ்வளவு சிறந்ததொரு உதாரணமென்று பார்த்தாயா? நாமும் எப்பொழுதும் எம்முடைய நலனைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிராமல் ஏனையோரின் நலனைப் பற்றியும் கருத்தில் கொண்டோமாயின் பூரணமானவர்கள் ஆவோம். நாம் எந்த விதமான பிறவி எடுத்திருந்தாலும் எங்கள் நலனிலும் பார்க்க மற்றையோரின் நலனைக் கருத்தில் கொண்டால் முன்னேறலாம்."
அவர் தொடர்ந்து எழுதுகையில், "நாய்களோ, பூனைகளோ அல்லது வேறு எந்த வகையான செல்லப் பிராணிகளோ சில மாறுபட்ட குணாதிசயங்களைக் காட்டும். சில விரும்பத்தக்கதாக இருக்கலாம், சில விரும்பத்தகாததாகவும் இருக்கலாம். விலங்குகள், தாவரங்கள், கனிமங்கள், பறவைகள் போன்றவற்றின் ஆத்மாவானது மனிதர்களின் ஆத்மாவிலும் பார்க்க வித்தியாசமான இறைசக்தியாகும்.
ஒரு அணுவானது உடைந்து சிற்றணுக்களாக மாறுவதைப் போல் அவை ஆத்மாவின் பகுதிகளாகப் பிரிந்து முழுமையில்லாத பகுதி ஆத்மாக்களாக, சிற்சில விடயங்களை மட்டும் நிறைவேற்றும். முழுமையான மனித ஆத்மாவாக மாறக்கூடிய வல்லமையை இழந்தவைகளாகச் செயற்படும். இந்த மரங்கள், பறவைகள், பாறைகள், மிருகங்கள், காட்டுவிலங்குகள், மண் போன்ற எல்லாவகையான உயிரினங்களுக்கும் ஒரு தனித்தன்மையும் ஆத்மாவும் உள்ளன.
ஆனால் அவை பூவுலகில் வாழும் மனிதனின் ஆத்மாவைவிட முற்றிலும் வேறுபட்டவை. இவையும் சுவாசிக்கும், உயிர்வாழும் பிறவிகளாகும். இவையும் கடவுளின் ஒரு பகுதியேயாகும். அவை பூவுலகில் வாழும் மனிதனின் ஆத்மாவைப் போல் மிக முன்னேற்றம் அடையாவிடினும் எம்மைப் படைத்தவனையே என்றும் பிரதிபலிப்பனவாகும். அதாவது மனிதர்களாகிய நாம் எப்படி அன்புக்குக் கட்டுப்படுகிறோமோ அவையும் அதே போலவே கட்டுப்படும்.
அவற்றுக்கு வேறுபட்ட விருப்பு வெறுப்புகளிருக்கும். அவற்றின் விளையாட்டுத் தனங்களும் கோபதாபங்களும் வேறுபட்டவை. அவை தங்களுக்கென அமைந்த செயற்பாடுகைச் செய்து ஒன்றில் நல்லவையாகவோ, கேட்டவையாகவோ அவைகளுக்கென்று அமைந்த தனிப்பட்ட குணநலன்களின் படி வரும். அந்தத் தனிப்பட்ட தன்மைகள் ஆத்மாவின் தன்மைகளாகும்.
அதனால் தான் சில வளரும் தாவரங்கள் பிரார்த்தனைக்குப் பதிலளிப்பதாகத் தெரியும்; சில என்னதான் அன்புடன் பராமரித்தாலும் ஒத்துழைக்கமாட்டா. சில மனிதர்களும் அவ்வாறே நடப்பதைக் கண்டிருப்பாயென நினைக்கிறேன். சிலர் சற்றும் ஏனையவர்களைப் பற்றிச் சிந்திக்காமல், கடமைகளை மறந்து திரிவார்கள். சிலர் மற்றையவர்களின் நிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவுவார்கள். மற்றையவர்களை மகிழ்ச்சிப்படுத்துவார்கள்.
"இங்கே ஞானாலயத்தில் ஒவ்வொரு உயிரினத்துக்காகவும் செய்யப்படும் பிரார்த்தனைகளின் பலன்களைப் பற்றி அறிகிறோம். அவை உடல் உபாதைகளைப் போக்கும் சிகிச்சையாகவும் இருக்கலாம் அல்லது ஆத்மீக முன்னேற்றத்துக்குரிய முயற்சிகளாயும் இருக்கலாம். தாவரங்கள், பிராணிகள், கற்பாறைகள், பூச்சிபுழுக்கள் போன்ற எம்மால் பார்க்கக்கூடிய, கேட்கக்கூடிய, உணரக்கூடிய, சுவைக்கக்கூடிய எல்லாப்பொருட்களும் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிக்கக் கூடியன என நாமறிகிறோம்.
எல்லாம் வல்ல இறைவன் தனது படைப்புகளில் நிறைந்திருப்பதோடு அவைகளின் முன்னேற்றத்துக்கான உண்மையான பிரார்த்தனைகளுக்குச் செவி சாய்க்கிறான். மரங்களிடையே உலவும் காற்றின் குரலும் பறவைகளின் ஒலியும் பூச்சியினங்களின் ஒலியும் மனிதனின் கூக்குரலும் இறைவனுக்கு ஒரே விதமாகவே கேட்கின்றன. ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு விதமாக இறைவனுடன் தொடர்பு கொள்ளும். இறைவன் எல்லா விதமான முனகல், ரீங்காரம், கூக்குரல் போன்ற எல்லாவற்றுக்கும் (அது இறைவனுக்கு விடும் அழைப்போ அல்லது ஒன்றுடனொன்று தொடர்பு கொள்ளும் ஒலியோ) செவி சாய்ப்பார்.
இதை ஒரு கற்பனைக் கதையென்று எண்ணிவிடாதே. இவையெல்லாம் உண்மையே ருத். நாம் எல்லா உயிரினங்களுடனும் (ஆத்ம வடிவிலோ அல்லது பௌதீக வடிவிலோ) தொடர்பு கொள்ளக்கூடியதாக வரும் வரையும் நாம் இறைவனுடன் இரண்டறக் கலக்கக்கூடிய நிலையை அடையமாட்டோம். உனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதனை எண்ணிப்பார். பாறைகள், மரங்கள், கற்கள் போன்றவற்றின் குரல்களையும் பூச்சியினங்களினது ரீங்காரங்களையும் அதேபோல எல்லாவகையான உயிர்வகையினதும் ஒலிகளையும் கவனிக்கக் கற்றுக்கொள்.
எம் எல்லோரையும் ஒன்றிணைக்கும், எம் ஒவ்வொருவரையும் இறைவனின் வடிவங்களாக்கும் அந்த இணைப்பின் மூலம் அவற்றுடன் தொடர்பு கொண்டு அவற்றின் ரகசியங்களை அறி. நாம் சடப்பொருட்களென்று எண்ணுபவை எல்லாம் எம்மைப் போன்றவையே. ஒவ்வொன்றுக்கும் அதனதன் வழியில் உயிர் வாழ்க்கைகள் உள்ளன. கற்பாறைகளும் பறவைகள், வண்டினங்கள், மனிதர்கள் போலவே இறைவனின் மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதியே. ஒவ்வொரு உயிரினத்துக்கும் இறைவனின் மாபெரும் திட்டத்தில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய குழப்பத்துடன் நான் "எமக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சியினங்களை அழிக்கலாமா" எனக்கேட்டேன். அதற்கு அவர், "பூச்சி புழுக்களானவை தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து விலகி வந்தால் அவை மனிதனால் அழிக்கப்படுவார்கள். எல்லா உயிரினத்துக்கும் இப்பூவுலகில் இடம் வேண்டும். டைனசோர் வகையைச் சேர்ந்த பிரம்மாண்டமான விலங்குகள் ஏனைய விலங்குகள், பறவைகள், மனிதரின் இடங்களை அபகரிக்கப் பார்த்ததனால் பூமியின் பரப்பிலிருந்து மறைந்து விட்டன.
இது மனிதனுக்கு ஒரு பாடமாக அமையட்டும். மனிதனும் பல்கிப்பெருகி, அழிவுப்பாதையில் சென்று ஏனைய உயிரினங்களின் அழிவுக்கும் காரணமானான் எனில் மனிதகுலமும் அழிவை சந்திக்க வேண்டிவரும். நீ குறிப்பிட்ட இந்தப் பூச்சியினங்களும் பல்கிப்பெருகி மனிதனுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்தால் அவையும் அழிய வேண்டியவையே.
இப்பூவுலகில் எமக்கென உள்ள இடத்தை மீறி நாம் அமைதியைக் குலைப்போமாயின் நாம் இங்கிருந்து அகற்றப்படுவோம். ஆனால் ஆன்மீக ரீதியில் உண்மையில் ஒன்றுமே எப்போதும் அழிவதில்லை.
பூச்சிபுழுக்களையும் டைனசோர்களையும் மனிதனுடன் ஒப்பிட்டதனை எண்ணி நான் வியந்தேன்: மனிதன் இந்தப் பிரபஞ்சத்தையே குப்பை மேடாக்குபவனே. இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மனிதன் நீரோடை, ஏரி, குளங்களை அசுத்தமாக்குகிறான்.
தூய்மையாக இருந்த காற்றை அசுத்தப்படுத்திவிட்டான். கனிப்பொருள் நிறைந்த மண்ணை ஆயிரக்கணக்கான ஏக்கர்களாகக் காங்கிரீட்டைப் பாவி மூடிவிட்டான். காடுகளை அழிக்கின்றான். இவற்றின் மூலம் பழைய அழிந்துபோன விலங்குகள் போல் நாமும் எமது அழிவை எழுதிச்செல்கிறோமா?