- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
இப்புராணம் பற்றி…
இலிங்கம் என்பது ஒரு குறியீடாகும். பிரபஞ்சத் தோற்றத்திற்கு ஒரு விதையாகும். பரப்பிரம்மம், அலிங்கம் என்று சொல்லப்படும் நாமம், ரூபம் கடந்த பொருளாகும். நிர்குணமானதாகும். முக்குணங்களின் வடிவமாகிய பிரகிருதியுடன், நிர்குணப் பிரம்மம் தொடர்பு கொள்ளும் பொழுது, வடிவமற்றதாகிய இப்பிரகிருதி வடிவுடைய இப்பிரபஞ்சமாகத் தோற்றுவிக்கப்படுகிறது. இப்பிரபஞ்சத் தோற்றத்திற்கு மூலமாகிய பிரகிருதி மகாதேவனுடன் தொடர்பு கொண்டு தோற்றுவிக்கப்படுகிறது.
“பரப்பிரம்மம் நிர்குனமானதாய், லிங்க வடிவையும் தாண்டி இருப்பினும், அந்தப் பரப்பிரம்மமே லிங்கம், பிரகிருதி ஆகிய அனைத்திற்கும் மூலமாய் அமைந் துள்ளது. அலிங்கம் என்பது சிவனையே குறிக்கும். அந்த அலிங்கமே சிவனோடு தொடர்புடைய லிங்கமாகி அந்த லிங்கத்தோடு தொடர்புடையது சைவம் எனப்படும்.” (லிங்கபுராணம் 1-3-)
“லிங்கம் என்ற சொல்லுக்கு தன்னைத்தானே தோற்றுவித்துக்கொண்டு, தனித்து பிரபஞ்சத்தையும் தன்னுள் அடக்கி இருப்பது என்பது பொருளாகும். மகாதேவியே மாபெரும் பெண் தெய்வமாவாள். பிரகிருதியே பிரபஞ்சத்தின் விதைகளைத் தாங்கி நிற்பவள் லிங்கபுராணம் 1-19-16)
இப்புராணம் இரண்டு பெரும் பகுதிகளைக் கொண்டது. சிவ வழிபாட்டுக்காரர்களுக்கு இப்புராணம் ஒரு கையேடாகும். இப்புராணம் சிவமூர்த்தத்தை வழிபடுவதற்குரிய வழிகளைச் சொல்வதுடன் சிவனுடைய ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் என்ற ஐந்து வடிவங்களையும் உள்ளடக்கியதாகும். பிரபஞ்சங்களின் உற்பத்தி அழிவு மறுஉற்பத்தி ஆகிய நேரங்களில் சிவம் இந்த ஐந்து வடிவங்களில் தேவையானதை மேற்கொண்டு பிரம்மனுக்கு ஆணையிட்டுப் படைப்பைத் தொடங்குமாறு ஏவுகிறது. இது விஷ்ணுவை, சிவனுக்குக் கீழ் பணிபுரிபவராகக் காட்டுகிறது. இன்று 11,000 பாடல்களுடன் காணப்படும் மூலமாக இருந்த பழைய லிங்க புராணம் இழக்கப்பட்டதை ஈடுசெய்யும் முறையில் அமைந்துள்ளதாகும். மூல புராணத்தில் காணப்படாத பல தாந்திரீக வித்தைகள் இப்புராணத்தில் கூறப்பட்டுள்ளன.
பல நூல்களில் லிங்கபுராணத்தில் இருந்து இன்றுள்ள லிங்க புராணத்தில் காணப்படவில்லை. ஆதலால்தான் மூல லிங்க புராணம் இழக்கப்பெற்ற நிலையில் அந்த இடத்தை நிரப்ப இந்தப் புதிய லிங்க புராணம் இயற்றப்பட்டுள்ளது. இப்புராணங்களைப் படிக்கப் போகும் நாம், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் வணங்கிவிட்டுத்தான் புராணங்களைப் படிக்க வேண்டும். ஒருமுறை நைமிசாரண்ய வனத்தில் முனிவர்கள் அனைவரும் கூடியிருந்தனர். அப்பொழுது சுதா ஜாதியைச் (சத்திரியத் தகப்பனுக்கும், பிராமணத் தாய்க்கும் பிறந்தவர்) சேர்ந்த லோமஹர்ஷனர் அங்கே வந்தார். பல தீர்த்தங்களில் நீராடிவிட்டு உலகைச் சுற்றி வரும் நாரதரும் எதிர்பாராதவிதமாக அங்கே வந்தார். முனிவர்கள் லோமஹர்ஷனரைப் பார்த்து, இப்புராணங்களை எல்லாம் இயற்றிய வேதவியாசரிடம் நேரடியாகப் பாடங் கேட்கும் பாக்கியம் செய்தவர் நீங்கள். ஆகவே நாரதரும் இங்கிருக்கும் நேரத்தில் இலிங்க புராணத்தை எங்கட்குச் சொல்ல வேண்டும் என்று கேட்க, லோமஹர்ஷனர் சொல்ல ஆரம்பித்தார்:
பிரபஞ்சம்
ஆதியில் பரப்பிரம்மம் ஒற்றையாக இருந்தது. எங்கும் எதுவும் இல்லை. அது தன்னைத்தானே மூன்றாகப் பிரித்துக் கொண்டு பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று வடிவெடுத்தது. இதை அடுத்து எங்கும் நிறைந்த நீர் அதில் தோன்றி முட்டை, பிரம்மன் படைப்பைத் துவங்குதல், காலப்பிரமாணம், யுகங்களின் அளவு ஆகியவை ஏனைய புராணங்களைப் போலவே இங்கும் உள்ளன. இதில் புதிதாகக் கண்டுள்ள செய்தி வருமாறு உற்பத்தி துவங்கு முன்னர் தனது வேலைப் பளு மிகுதியாக இருப்பதால் தனக்கு உதவி செய்யுமாறு பிரம்மன் சிவனை வேண்டிக்கொண்டார். சரி என்று ஒப்புக்கொண்ட சிவன் தன்னைப் போலவே பதினோரு பேரைப் படைத்தார். இவர் என்ன செய்கிறார் என்பதை அறிந்த பிரம்மன் அதிர்ச்சி அடைந்து, நிறுத்துங்கள், உம்மைப் போல அழிவில்லாத சிரஞ்சீவிகளைப் படைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ளவில்லை. நான் கேட்டது அழிகின்ற உடம்போடு கூடிய ஜீவராசிகளே ஆகும்’ என்று பிரம்மா சொல்ல, சிவன் படைப்புத் தொழிலில் உதவி செய்வதை நிறுத்திக் கொண்டார். என்றாலும் இவர் ஏற்கெனவே படைத்துவிட்ட பதினோரு சிரஞ்சீவிகளும் ஏகாதச ருத்திரர்கள் என்ற பெயரில் நிலைத்து விட்டனர்.
இதனை அடுத்து பிரம்மன் சனகன், சனந்தா, சனாதன ஆகிய மூன்று மகன்களையும் பெற்றார் என்று இப்புராணம் கூறுகிறது. (சனத்குமாரன் என்ற நான்காவது பிள்ளையையும் பெற்றான் என்பதை மற்ற புராணங்கள் சொல்லுகின்றன) இதன் பிறகு ஒன்பது முனிவர்கள், சுயம்பு மனு ஆகியவரின் தோற்றம் பற்றி ஏனைய புராணங்கள் போலவே இலிங்க புராணமும் பேசுகிறது.
யோகம்
யோகத்தின் இயல்பு, அதன் இலக்கணம், பயிற்சி முறை ஆகியவற்றை ஏனைய புராணங்களைப் போலவே இலிங்க புராணமும் கூறுகிறது. சிவனுக்குப் பசுபதி என்ற பெயர் உண்டு என்பதும், சிவன் கற்பித்த முறையில் யோகத்தைப் பயில்வது பாசுபத யோகம் எனப்படும். ஒவ்வொரு கல்பத்திலும் இந்த யோகத்தைக் கற்பிப்பதற்காக சிவன் யோகேஸ்வரன் என்ற பெயரில் வடிவெடுக்கிறார். இதுவரை நடை பெற்ற 28 கல்பங்களில் ஒவ்வொரு கல்பத்திற்கும் சுவேதா யோகேஸ்வரா, சுதார யோகேஸ்வரா, மதன யோகேஸ்வரா என்ற வெவ்வேறு பெயர்களுடன் சிவன் வடிவெடுக் கிறார். ஒவ்வொரு முறை இவர் வடிவெடுக்கும் பொழுதும் இவருக்கு நான்கு சீடர்கள் உள்ளனர். ஒவ்வொரு கல்பத்தின் தொடக்கத்தில் உள்ள துவாபரயுகத்தில் வேத வியாசர் என்ற பெயருடன் சிவன் வடிவெடுக்கிறார். 28 வேத வியாசர்களுள் சில பெயர்கள் வருமாறு:- சத்யா, பார்கவா, கிராது, அங்கீரா, வசிஷ்டா, அருணி ஆகியவை ஆகும்.
இலிங்கம்
லோமஹர்ஷனர் மற்ற முனிவர்களுக்குக் கூறிய இலிங்கம் பற்றிய கதை பிரம்மா, விஷ்ணு இருவரும் இலிங்கத்தின் அடி முடி தேடிய கதை முன்னரே சிவ புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கு சொல்லப்பட்டுள்ள புதிய பகுதி வருமாறு: இலிங்கத்தின் இடையே தோன்றிய சிவன் படைக்கும் தெய்வ மாகிய பிரம்மனும் காக்கும் தெய்வமாகிய விஷ்ணுவும், அழிக்கும் தெய்வமாகிய நானும் ஒரே பரப்பிரம்மத்தில் இருந்து தோன்றியவர்கள் ஆவோம். நமக்குள் சண்டை போட்டுக் கொள்ளுதல் தேவை இல்லை. இலிங்கத்தில் இருந்துதான் அனாதியான முட்டை தோன்றிற்று' என்று கூறிவிட்டு, இலிங்கத்தில் தோன்றிய சிவன் பிரம்மா, விஷ்ணு ஆகிய இருவருக்கும் சிவகாயத்திரி உபதேசம் செய்தார்.
பிரம்மனும், விஷ்ணுவும் நைமிசாரண்ய வனத்தில் முனிவர்கள் லோமஹர்ஷனரைப் பார்த்து படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்கள் செய்யும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் பிரம்மாவை மட்டும் விஷ்ணுவின் பிள்ளை கூறுகிறார்களே, அது ஏனென்று கேட்க, லோம ஹர்ஷனர் கூற ஆரம்பித்தார்.
'முன்னொரு காலத்தில், பிரபஞ்ச உற்பத்திக்கு முன்னர் எங்கும் நீரே நிறைந்திருந்தது. தண்ணின் மேல் படுத்திருந்த நாராயணன் பொழுது போகாமல் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தம்முடைய கொப்பூழைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு மாபெரும் தாமரைப் பூ கொப்பூழினின்று வெளிப்பட்டது. அந்த இதழ்களின் நடுவே பிரம்மன் கம்பீரமாக அமர்ந்திருந்தார். சிலகாலம் கழித்து அந்தத்
தாமரையினின்று இறங்கி வந்து விஷ்ணுவைப் பார்த்து ஆச்சரியத்தோடு நின்றார். விஷ்ணு அவரைப் பார்த்து, நீ யார் என்று எனக்கு தெரியவில்லை, தெரிவி என்றார். அப்பொழுது பிரம்மன் நான்தான் சர்வ வல்லமை உள்ள பிரம்மன். இவ்வுலகம் முழுவதையும் படைக்கிறவன் என்று சொல்லிவிட்டு நீங்கள் யார் என்று கேட்டான். உடனே விஷ்ணு என் பெயர் விஷ்ணு. உன்னை உட்பட அனைத்தையும் படைப்பவன் நான்தான். நீ எனக்கு மகன் முறை ஆவாய் என்றார். அதைக் கேட்ட பிரம்மன், கோபம் கொண்டு நானே அனைத்துமாய் இருக்கும் பொழுது நீ எப்படி எனக்குத் தந்தையாக முடியும். வேண்டுமானால் என்னுள் புகுந்து பாருங்கள் என்றார். உடனே விஷ்ணு, பிரம்மன் வாய் வழியாகப் புகுந்து உள்ளே சென்றபொழுது, பல்வேறு உலகங்கள், உலகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் பிரம்மன் வயிற்றுக்குள் இருப்பதைக் கண்டான். அதைச் சுற்றிப் பார்க்க விஷ்ணுவுக்கு ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டன. ஒருவாறு யாவற்றையும் பார்த்து முடித்து, மறுபடியும் வாய்வழியே விஷ்ணு வெளியே வந்துவிட்டார். பிரம்மனைப் பார்த்து, நீ என் வயிற்றுக்குள் சென்று பார்த்து வா என்றான். அப்படியே பிரம்மன் விஷ்ணுவின் வாய்வழியே புகுந்து உள்ளே சென்றான். அங்கே தான் படைத்ததைப் போன்று பல உலகங்கள் இருந்ததைக் கண்டார். முழுவதும் சுற்றிப் பார்க்க பிரம்மனுக்கு ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டன. முடிவில் அவர் வெளியே வர நினைத்தபொழுது, வெளியே வரக்கூடிய வாயில்கள் அனைத்தையும் விஷ்ணு மூடி விட்டான். அந்நிலையில் வேறு வழியில்லாமல் விஷ்ணுவின் கொப்பூழ் வழியாக வெளியே வந்த பிரம்மனுக்கும், விஷ்ணு வுக்கும் பெரும் சண்டை மூண்டது. இவர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அவர்கள் இருவரும் அதிர்ச்சியுறும்படியாக அதிர்வுகள் தோன்ற இருவரும் நின்ற நிலையில் ஆட்டம் கண்டனர். பிரம்மனுக்கு இது புதிய அனுபவம் ஆதலால், ஏன் இப்படிக் கொப்பூழை ஆட்டி எனக்குத் துன்பம் தருகிறாய் என்று விஷ்ணுவிடம் கேட்டார். உடனே விஷ்ணு ஆட்ட வில்லை. சிவபெருமான் வருகிறார் என்று தெரிகிறது. அவர் வருவதால் ஏற்படுகின்ற அலைஅலையான அதிர்வுகள் நம் இருவரையும் நிலைகொள்ளாமல் ஆட்டி வந்தது என்றார். இந்த அதிர்ச்சி தாங்காத பிரம்மா, சிவன் யார் எனக் கேட்க விஷ்ணு, நாம் இருவரும் சிவனைத் தியானம் செய்வோம் என்று கூறி தியானத்தில் ஈடுபட்டபோது, சிவன் அவர்கள் எதிரே தோன்றினார். உங்களுக்கு என்ன வரம் வேண்டும்? என்று சிவன் கேட்க, விஷ்ணு தங்களிடத்தில் நீங்காத பக்தி வேண்டும் என்று விடை கூறினார். தந்தேன் என்று கூறிய சிவன், பிரம்மனைப் பார்த்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, பிரம்மன் "தாங்கள் எனக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டான். இவ்வரத்தைக் கேட்டுக் கொண்ட சிவனும், அவ்வாறே ஆகுக' என ஒப்புக்கொண்டார்.
பிரம்மன் படைப்புத் தொழிலைத் துவங்கியவுடன், அவனால் படைக்கப்பட்ட பொருள்கள் அவன் விரும்பியபடி இல்லை. படைப்பு தன் விருப்பப்படி இல்லை என்பதை அறிந்தவுடன் பிரம்மனுக்கு எல்லையில்லாத துயரம் உண்டாயிற்று. அத்துயரத்தின் வெளிப்பாடே ருத்திரன் ஆவான்.
தேவதாரு: தேவதாரு மரம் என்பது மரங்களில் சிறப்பான ஒன்று. முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் தேவதாரு மரங்கள் நிறைய வளர்ந்திருந்தன. அக்காட்டில் முனிவர்கள் பலர் தத்தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிவபெருமானைக் குறித்துக் கடுந்தவம் புரிந்து வந்தனர். இவர்களின் தியானத்தில் மனம் மகிழ்ந்த சிவபெருமான், அம்முனிவர்களைப் பரீட்சை செய்ய விரும்பினார். அதனால் அழகற்ற உருவம் ஒன்றினைப் பெற்று, கரிய நிறத்துடனும் கொடிய கண்களுடனும் அவர்கள் முன் தோன்றினார். முனிவர்களின் மனைவிமார்கள் அனைவரும் சிவ பெருமானைத் தொடர்ந்து செல்லலாயினர். ஆனால் முனிவர்களோ அவ்வுருவத்தை ஏளனமாகவும், கடுமையான சொற்கள் கூறியும் விரட்ட, சிவபெருமானும் அவ்விடத்தி னின்று மறைந்தார். முனிவர்கள் உடனே பிரம்மனிடம் சென்று நடந்ததைக் கூற, பிரம்மா வெகுண்டு “முட்டாள்களே! நீங்கள் என்ன தவறு செய்திருக்கிறீர்கள் என்பதை
உணரவில்லையா? வந்தது வேறு யாருமல்லர், சிவபெருமானேதான். உங்களை சோதனை செய்யவே அப்படி ஒரு வடிவம் எடுத்து உங்கள் விருந்தினனாக வந்தார். விருந்துண்ண வந்தவர்களை அன்புடன் உணவிட வேண்டுமே தவிர, அவர்கள் அழகான வர்களா இல்லையா என்று பார்த்து உபசரிக்கக் கூடாது. உங்களுக்குச் சுதர்சனனின் கதை தெரியுமா? அதை இப் பொழுது கூறுகிறேன்” என்று சொல்லிவிட்டு, முனிவர்களுக்குக் கதை சொல்லத் துவங்கினார்.
சுதர்சன முனிவர் என்று ஒருவர் இருந்தார். அவர் தம் மனைவியிடம், வரும் விருந்தினர்களை எவ்வாறு அன்புடன் உபசரிக்க வேண்டும் என்றும், விருந்தினர்களை உதாசீனப் படுத்துவது சிவபெருமானை அவமானப்படுத்துவது போலாகும் என்றும், விருந்துண்ண வருபவர் ஒவ்வொருவரும் சிவபெருமான் என்றே எண்ண வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். ஒரு சமயம், தர்ம தேவதை சுதர்சன முனிவரையும் அவர் மனைவியையும் பரீட்சை செய்து பார்க்க விரும்பினார் பிராமண வடிவம் கொண்டு, அவர்கள் வீட்டிற்கு வந்தார் முனிவர் வீட்டில் இல்லாத பொழுதும், அவர் மனைவி தர்ம தேவதையினை நன்கு உபசரித்து அன்புடன் உணவு படைத்தார். மிகவும் மனம் மகிழ்ந்த தர்ம தேவதை அவ்விருவரும் சொர்க்கம் செல்ல ஆசி வழங்கினார்.
இக்கதையினை பிரம்மன் கூறக்கேட்ட முனிவர்கள், தாம் சிவபெருமானை அவமதித்ததை நினைத்து வருந்தி, அவர் மனம் மகிழ என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, பிரம்மனும் சுவேதாவின் கதையைக் கூறத் தொடங்கினார்.
சுவேதா முனிவரின் கதை: முன்னொரு காலத்தில் சுவேதா என்ற முனிவர் சிவபெருமான் மீது பெரிதும் பக்தி கொண்டிருந்தார். எந்நேரமும் சிவபெருமானையே வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவர் இவ்வுலக வாழ்க்கையைவிட்டுச் செல்ல வேண்டிய நேரம் வந்தது. யமதேவன் சுவேதா முனிவர் முன் தோன்றினான். யமனைக் கண்டு சுவேதா முனிவர் சிறிதும் மனம் கலங்கவில்லை. சிவபெருமானை வணங்கினால், இறப்பினால் எத்துன்பமும் ஏற்படாது என்று நினைத்து, சிவனை வழிபடத் துவங்கினார். யமதேவன் சுவேதா முனிவரைப் பார்த்து, "உன்னுடைய நேரம் இப்பூமியில் முடிந்து விட்டது. இனி நீ எனக்குக் கீழ்ப்படிய வேண்டும், சிவனை வணங்குவதால் எப்பயனும் இல்லை, வா. சீக்கிரம் போக வேண்டும்” என்றான். அவரைக் கெகாண்டு செல்வதற்காக எல்லா ஆயத்தங்களும் செய்யும் பொழுது, சிவபெருமான் பார்வதி, நந்தி மற்றும் சிவகணங்களுடன் அங்கு வந்தார். சிவனுடைய பார்வை பெற்றவுடன் யமதேவன் மயக்கமுற்று வீழ்ந்து மரணமடைந்தான். சுவேத முனிவர் காப்பாற்றப் பெற்றார்.
இக்கதையைக் கூறி முடித்த பிரம்மா, முனிவர்களைப் பார்த்து, சிவபெருமானை வணங்குவதால் ஏற்படும் பயனைத் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? உடனே சென்று சிவ பெருமானை வழிபட ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார். முனிவர்களும் சிவனை நோக்கித் தவம் செய்ய ஆரம்பித்தனர். ஒரு வருடம் கடுமையான தவத்திற்குப் பிறகு அவர்கள் முன் சிவபெருமான் தோன்றினார். கடுமையான விழிகளும், சாம்பலை உடல் மீது பூசிக்கொண்டு, அழகற்ற உருவத்துடன் தேவதாரு மரங்கள் நிறைந்த காட்டில் இங்கும் அங்கும் உலாவினார். முனிவர்களும் இம்முறை சிவபெருமானைத் தெரிந்து கொண்டு தம் மனைவியருடன் மலர்களால் அர்ச்சித்தனர். சிவபெருமான் மனமகிழ்ந்து அம்முனிவர்களுக்கு நல்ல அறிவுரைகள் கூறினார். அவற்றுள், சாம்பல் பற்றியும், அதன் சிறப்புப் பற்றியும் அவர்கட்கு அறிவுரை கூறினர்.
ததீசி கதை: ததீசி என்ற பிராமணனும், கபா என்ற அரசனும் நண்பர்களாய் இருந்தனர். கபா சத்திரியனாகவும், ததீசி பிராமணனாகவும் பிறந்திருந்தாலும், இருவரும் இணையற்ற அன்பு பூண்டு வாழ்ந்து வந்தனர். ஒருமுறை பிராமணன் உயர்ந்தவனா, சத்திரியன் உயர்ந்தவனா என்ற வாதம் இவர்களுக்குள் தோன்றி அந்த வாய்ச்சண்டை கைச்சண்டையாக மாறிவிட்டது. ததீசி என்ற பிராமணன் தான் பிராமணன் என்ற கர்வம் கொண்டு, தான் யாரை வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தான். கபாவைப் பொறுத்தமட்டில், முன்னொரு காலத்தில் தேவாசுர யுத்தத்தில் தேவர்களுக்கு உதவி செய்த காரணத்தினால் இந்திரனிடத்து இருந்த வஜ்ராயுதம் கபாவுக்குப் பரிசாகக் கிடைத்தது. அந்த ஆயுதத்தைக் கொண்டு எதிரே இருந்த பிராமணன் மண்டையில் அரசன் அடித்தான். பிராமணன் உடம்பு இரண்டாகப் பிளந்தது. ஆனால் அவன் சாவதற்கு முன் தன்னைக் காப்பாற்றும்படி சுக்ராச்சாரியாரை வேண்டிக் கொண்டு இறந்தான். இறந்தவர்களை எழுப்பும், மிருத்த சஞ்சீவினி என்ற மந்திரம் சுக்ராச்சாரியார் ஒருவருக்கே தெரியும். பிராமணன் சாகுமுன், சுக்ராச்சாரியாரை வேண்டிக் கொண்டபடியால் அங்கு தோன்றிய அசுரகுரு இரண்டாகப் பிளந்து கிடந்த பிராமணன் உடம்பை ஒன்றாக ஆக்கி அதற்கு உயிரும் கொடுத்தார். அம்மட்டோடு இல்லாமல், பிராமணரே! மிருத்த சஞ்சீவினி மந்திரத்தை சிவனிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன். நீயும் சிவனை நோக்கித் தவம் செய்து இம்மந்திரத்தைக் கற்றுக் கொள்வாயாக’ என்று கூறினான். சுக்ராச்சாரியாரின் அறிவுரையைக் கேட்ட ததீசி சிவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். சிவன் எதிர்ப்பட்டவுடன், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க மூன்று வரங்கள் பெற்றுக் கொண்டான். அவையாவன: முதல் வரத்தின்படி ததீசா பெரும் செல்வனாக ஆயினான், இரண்டாவது வரத்தின்படி ததீசாவின் எலும்புகள் வஜ்ராயுதத்தின் வலிமை பெற்றன. மூன்றாவது வரத்தின்படி யாரும் தன்னைக் கொல்ல முடியாத சக்தியையும் பெற்றான்.
இவ்வரங்களைப் பெற்ற ததீசி கபாவிடம் சென்று அவனை எட்டி உதைத்தான். உடனே கபா தன் கையிலிருந்த வஜ்ராயுதத்தை ததீசியின் மார்பை நோக்கி அடித்தார். ஆனால் என்ன அதிசயம்! வஜ்ராயுதம் இரும்பில் பட்டுத் தெறித்தது போல், கணிரென்ற சப்தத்துடன் கீழே விழக் கண்டான். ததீசியிடம் தன் கைவரிசை செல்லாது என்பதை அறிந்த கபா, விஷ்ணுவை நோக்கிப் பிரார்த்தனை செய்தான். விஷ்ணு தோன்றியவுடன், ததீசியை வெல்வதற்குரிய ஆயுதம் ஒன்று வேண்டும் என்று கபா கேட்டவுடன், விஷ்ணு ததீசி சிவனிடம் பெற்ற வரங்கள் காரணமாக அவனை ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே நான் ஏழை பிராமண வடிவத்தில் சென்று ததீசியிடம் ஏதாவது செய்து பார்க்கிறேன் என்று கூறிவிட்டுப் பிச்சை ஏற்கப் போகும் பிராமண வடிவத்தில் ததீசியிடம் வந்தான் விஷ்ணு. இவருடைய சூழ்ச்சியை எளிதாக அறிந்து கொண்ட ததீசி, “பிராமண வடிவத்தில் வருகின்ற விஷ்ணுவே வருக உம்மையும் உம்முடைய வேஷத்தையும் என்னால் கண்டு கொள்ள முடியாதென நினைத்தீரா? அல்லது பிராமண வடிவத்தில் வரும் தாம் எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவேன் என்று நினைத்தீரா.”
“விஷ்ணுவே! உம்முடைய உண்மையான வடிவத்தை எடுத்துக் கொண்டு என்ன வேண்டுமெனக் கோரும், பார்க்கலாம் என்றான். உடனே விஷ்ணு, ததீசி, நான் கடாவைக் கூட்டிக் கொண்டு இங்கு வருகிறேன். அவனைக் கண்டவுடன், எனக்கு பயமாக இருக்கிறது என்று சொல் என்று சொல்லி விட்டுப் போன விஷ்ணு, உடனடியாக கடாவை அழைத்துக் கொண்டு ததீசியின் முன் வந்து நின்றான். ததீசி கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் நான் ஒரு சிவபக்தன், என்னை யாராலும், எந்த ஆயுதத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றான். இதைக் கேட்ட விஷ்ணு கோபம் அடைந்து சுதர்சன சக்ரத்தை விட அது ததீசியை ஒன்றும் செய்யாமல் பூமியில் விழுந்தது. இந்த நிலையில் ததீசி 'விஷ்ணுவே! ஏன் சும்மர் இருக்கிறீர். உம்முடைய பிரம்மாஸ்திரம் விட்டுப் பாரும். விஷ்ணு பிரம்மாஸ்திரம் விட அதுவும் ஒன்றும் செய்யவில்லை. இப்பொழுது மற்ற தேவர்கள் எல்லாம் துணைக்கு வந்து, ததீசியின் மேல் பல்வேறு ஆயுதங்களைப் பிரயோகித்தனர். அவை அனைத்தும் ததீசியை ஒன்றும் செய்ய முடியவில்லை. கடைசியாகச் சலித்துப் போன ததீசி கீழே கிடந்த ஒரு துரும்பை எடுத்து தேவர்கள் மேல் விட்டான். அந்தத் துரும்பு சிவனின் பல திரிசூலங்களாக மாறி, தேவர்களை விரட்டத் துவங்கியது.
இலிங்கம் என்பது ஒரு குறியீடாகும். பிரபஞ்சத் தோற்றத்திற்கு ஒரு விதையாகும். பரப்பிரம்மம், அலிங்கம் என்று சொல்லப்படும் நாமம், ரூபம் கடந்த பொருளாகும். நிர்குணமானதாகும். முக்குணங்களின் வடிவமாகிய பிரகிருதியுடன், நிர்குணப் பிரம்மம் தொடர்பு கொள்ளும் பொழுது, வடிவமற்றதாகிய இப்பிரகிருதி வடிவுடைய இப்பிரபஞ்சமாகத் தோற்றுவிக்கப்படுகிறது. இப்பிரபஞ்சத் தோற்றத்திற்கு மூலமாகிய பிரகிருதி மகாதேவனுடன் தொடர்பு கொண்டு தோற்றுவிக்கப்படுகிறது.
“பரப்பிரம்மம் நிர்குனமானதாய், லிங்க வடிவையும் தாண்டி இருப்பினும், அந்தப் பரப்பிரம்மமே லிங்கம், பிரகிருதி ஆகிய அனைத்திற்கும் மூலமாய் அமைந் துள்ளது. அலிங்கம் என்பது சிவனையே குறிக்கும். அந்த அலிங்கமே சிவனோடு தொடர்புடைய லிங்கமாகி அந்த லிங்கத்தோடு தொடர்புடையது சைவம் எனப்படும்.” (லிங்கபுராணம் 1-3-)
“லிங்கம் என்ற சொல்லுக்கு தன்னைத்தானே தோற்றுவித்துக்கொண்டு, தனித்து பிரபஞ்சத்தையும் தன்னுள் அடக்கி இருப்பது என்பது பொருளாகும். மகாதேவியே மாபெரும் பெண் தெய்வமாவாள். பிரகிருதியே பிரபஞ்சத்தின் விதைகளைத் தாங்கி நிற்பவள் லிங்கபுராணம் 1-19-16)
இப்புராணம் இரண்டு பெரும் பகுதிகளைக் கொண்டது. சிவ வழிபாட்டுக்காரர்களுக்கு இப்புராணம் ஒரு கையேடாகும். இப்புராணம் சிவமூர்த்தத்தை வழிபடுவதற்குரிய வழிகளைச் சொல்வதுடன் சிவனுடைய ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் என்ற ஐந்து வடிவங்களையும் உள்ளடக்கியதாகும். பிரபஞ்சங்களின் உற்பத்தி அழிவு மறுஉற்பத்தி ஆகிய நேரங்களில் சிவம் இந்த ஐந்து வடிவங்களில் தேவையானதை மேற்கொண்டு பிரம்மனுக்கு ஆணையிட்டுப் படைப்பைத் தொடங்குமாறு ஏவுகிறது. இது விஷ்ணுவை, சிவனுக்குக் கீழ் பணிபுரிபவராகக் காட்டுகிறது. இன்று 11,000 பாடல்களுடன் காணப்படும் மூலமாக இருந்த பழைய லிங்க புராணம் இழக்கப்பட்டதை ஈடுசெய்யும் முறையில் அமைந்துள்ளதாகும். மூல புராணத்தில் காணப்படாத பல தாந்திரீக வித்தைகள் இப்புராணத்தில் கூறப்பட்டுள்ளன.
பல நூல்களில் லிங்கபுராணத்தில் இருந்து இன்றுள்ள லிங்க புராணத்தில் காணப்படவில்லை. ஆதலால்தான் மூல லிங்க புராணம் இழக்கப்பெற்ற நிலையில் அந்த இடத்தை நிரப்ப இந்தப் புதிய லிங்க புராணம் இயற்றப்பட்டுள்ளது. இப்புராணங்களைப் படிக்கப் போகும் நாம், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் வணங்கிவிட்டுத்தான் புராணங்களைப் படிக்க வேண்டும். ஒருமுறை நைமிசாரண்ய வனத்தில் முனிவர்கள் அனைவரும் கூடியிருந்தனர். அப்பொழுது சுதா ஜாதியைச் (சத்திரியத் தகப்பனுக்கும், பிராமணத் தாய்க்கும் பிறந்தவர்) சேர்ந்த லோமஹர்ஷனர் அங்கே வந்தார். பல தீர்த்தங்களில் நீராடிவிட்டு உலகைச் சுற்றி வரும் நாரதரும் எதிர்பாராதவிதமாக அங்கே வந்தார். முனிவர்கள் லோமஹர்ஷனரைப் பார்த்து, இப்புராணங்களை எல்லாம் இயற்றிய வேதவியாசரிடம் நேரடியாகப் பாடங் கேட்கும் பாக்கியம் செய்தவர் நீங்கள். ஆகவே நாரதரும் இங்கிருக்கும் நேரத்தில் இலிங்க புராணத்தை எங்கட்குச் சொல்ல வேண்டும் என்று கேட்க, லோமஹர்ஷனர் சொல்ல ஆரம்பித்தார்:
பிரபஞ்சம்
ஆதியில் பரப்பிரம்மம் ஒற்றையாக இருந்தது. எங்கும் எதுவும் இல்லை. அது தன்னைத்தானே மூன்றாகப் பிரித்துக் கொண்டு பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று வடிவெடுத்தது. இதை அடுத்து எங்கும் நிறைந்த நீர் அதில் தோன்றி முட்டை, பிரம்மன் படைப்பைத் துவங்குதல், காலப்பிரமாணம், யுகங்களின் அளவு ஆகியவை ஏனைய புராணங்களைப் போலவே இங்கும் உள்ளன. இதில் புதிதாகக் கண்டுள்ள செய்தி வருமாறு உற்பத்தி துவங்கு முன்னர் தனது வேலைப் பளு மிகுதியாக இருப்பதால் தனக்கு உதவி செய்யுமாறு பிரம்மன் சிவனை வேண்டிக்கொண்டார். சரி என்று ஒப்புக்கொண்ட சிவன் தன்னைப் போலவே பதினோரு பேரைப் படைத்தார். இவர் என்ன செய்கிறார் என்பதை அறிந்த பிரம்மன் அதிர்ச்சி அடைந்து, நிறுத்துங்கள், உம்மைப் போல அழிவில்லாத சிரஞ்சீவிகளைப் படைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ளவில்லை. நான் கேட்டது அழிகின்ற உடம்போடு கூடிய ஜீவராசிகளே ஆகும்’ என்று பிரம்மா சொல்ல, சிவன் படைப்புத் தொழிலில் உதவி செய்வதை நிறுத்திக் கொண்டார். என்றாலும் இவர் ஏற்கெனவே படைத்துவிட்ட பதினோரு சிரஞ்சீவிகளும் ஏகாதச ருத்திரர்கள் என்ற பெயரில் நிலைத்து விட்டனர்.
இதனை அடுத்து பிரம்மன் சனகன், சனந்தா, சனாதன ஆகிய மூன்று மகன்களையும் பெற்றார் என்று இப்புராணம் கூறுகிறது. (சனத்குமாரன் என்ற நான்காவது பிள்ளையையும் பெற்றான் என்பதை மற்ற புராணங்கள் சொல்லுகின்றன) இதன் பிறகு ஒன்பது முனிவர்கள், சுயம்பு மனு ஆகியவரின் தோற்றம் பற்றி ஏனைய புராணங்கள் போலவே இலிங்க புராணமும் பேசுகிறது.
யோகம்
யோகத்தின் இயல்பு, அதன் இலக்கணம், பயிற்சி முறை ஆகியவற்றை ஏனைய புராணங்களைப் போலவே இலிங்க புராணமும் கூறுகிறது. சிவனுக்குப் பசுபதி என்ற பெயர் உண்டு என்பதும், சிவன் கற்பித்த முறையில் யோகத்தைப் பயில்வது பாசுபத யோகம் எனப்படும். ஒவ்வொரு கல்பத்திலும் இந்த யோகத்தைக் கற்பிப்பதற்காக சிவன் யோகேஸ்வரன் என்ற பெயரில் வடிவெடுக்கிறார். இதுவரை நடை பெற்ற 28 கல்பங்களில் ஒவ்வொரு கல்பத்திற்கும் சுவேதா யோகேஸ்வரா, சுதார யோகேஸ்வரா, மதன யோகேஸ்வரா என்ற வெவ்வேறு பெயர்களுடன் சிவன் வடிவெடுக் கிறார். ஒவ்வொரு முறை இவர் வடிவெடுக்கும் பொழுதும் இவருக்கு நான்கு சீடர்கள் உள்ளனர். ஒவ்வொரு கல்பத்தின் தொடக்கத்தில் உள்ள துவாபரயுகத்தில் வேத வியாசர் என்ற பெயருடன் சிவன் வடிவெடுக்கிறார். 28 வேத வியாசர்களுள் சில பெயர்கள் வருமாறு:- சத்யா, பார்கவா, கிராது, அங்கீரா, வசிஷ்டா, அருணி ஆகியவை ஆகும்.
இலிங்கம்
லோமஹர்ஷனர் மற்ற முனிவர்களுக்குக் கூறிய இலிங்கம் பற்றிய கதை பிரம்மா, விஷ்ணு இருவரும் இலிங்கத்தின் அடி முடி தேடிய கதை முன்னரே சிவ புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கு சொல்லப்பட்டுள்ள புதிய பகுதி வருமாறு: இலிங்கத்தின் இடையே தோன்றிய சிவன் படைக்கும் தெய்வ மாகிய பிரம்மனும் காக்கும் தெய்வமாகிய விஷ்ணுவும், அழிக்கும் தெய்வமாகிய நானும் ஒரே பரப்பிரம்மத்தில் இருந்து தோன்றியவர்கள் ஆவோம். நமக்குள் சண்டை போட்டுக் கொள்ளுதல் தேவை இல்லை. இலிங்கத்தில் இருந்துதான் அனாதியான முட்டை தோன்றிற்று' என்று கூறிவிட்டு, இலிங்கத்தில் தோன்றிய சிவன் பிரம்மா, விஷ்ணு ஆகிய இருவருக்கும் சிவகாயத்திரி உபதேசம் செய்தார்.
பிரம்மனும், விஷ்ணுவும் நைமிசாரண்ய வனத்தில் முனிவர்கள் லோமஹர்ஷனரைப் பார்த்து படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்கள் செய்யும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் பிரம்மாவை மட்டும் விஷ்ணுவின் பிள்ளை கூறுகிறார்களே, அது ஏனென்று கேட்க, லோம ஹர்ஷனர் கூற ஆரம்பித்தார்.
'முன்னொரு காலத்தில், பிரபஞ்ச உற்பத்திக்கு முன்னர் எங்கும் நீரே நிறைந்திருந்தது. தண்ணின் மேல் படுத்திருந்த நாராயணன் பொழுது போகாமல் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தம்முடைய கொப்பூழைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு மாபெரும் தாமரைப் பூ கொப்பூழினின்று வெளிப்பட்டது. அந்த இதழ்களின் நடுவே பிரம்மன் கம்பீரமாக அமர்ந்திருந்தார். சிலகாலம் கழித்து அந்தத்
தாமரையினின்று இறங்கி வந்து விஷ்ணுவைப் பார்த்து ஆச்சரியத்தோடு நின்றார். விஷ்ணு அவரைப் பார்த்து, நீ யார் என்று எனக்கு தெரியவில்லை, தெரிவி என்றார். அப்பொழுது பிரம்மன் நான்தான் சர்வ வல்லமை உள்ள பிரம்மன். இவ்வுலகம் முழுவதையும் படைக்கிறவன் என்று சொல்லிவிட்டு நீங்கள் யார் என்று கேட்டான். உடனே விஷ்ணு என் பெயர் விஷ்ணு. உன்னை உட்பட அனைத்தையும் படைப்பவன் நான்தான். நீ எனக்கு மகன் முறை ஆவாய் என்றார். அதைக் கேட்ட பிரம்மன், கோபம் கொண்டு நானே அனைத்துமாய் இருக்கும் பொழுது நீ எப்படி எனக்குத் தந்தையாக முடியும். வேண்டுமானால் என்னுள் புகுந்து பாருங்கள் என்றார். உடனே விஷ்ணு, பிரம்மன் வாய் வழியாகப் புகுந்து உள்ளே சென்றபொழுது, பல்வேறு உலகங்கள், உலகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் பிரம்மன் வயிற்றுக்குள் இருப்பதைக் கண்டான். அதைச் சுற்றிப் பார்க்க விஷ்ணுவுக்கு ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டன. ஒருவாறு யாவற்றையும் பார்த்து முடித்து, மறுபடியும் வாய்வழியே விஷ்ணு வெளியே வந்துவிட்டார். பிரம்மனைப் பார்த்து, நீ என் வயிற்றுக்குள் சென்று பார்த்து வா என்றான். அப்படியே பிரம்மன் விஷ்ணுவின் வாய்வழியே புகுந்து உள்ளே சென்றான். அங்கே தான் படைத்ததைப் போன்று பல உலகங்கள் இருந்ததைக் கண்டார். முழுவதும் சுற்றிப் பார்க்க பிரம்மனுக்கு ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டன. முடிவில் அவர் வெளியே வர நினைத்தபொழுது, வெளியே வரக்கூடிய வாயில்கள் அனைத்தையும் விஷ்ணு மூடி விட்டான். அந்நிலையில் வேறு வழியில்லாமல் விஷ்ணுவின் கொப்பூழ் வழியாக வெளியே வந்த பிரம்மனுக்கும், விஷ்ணு வுக்கும் பெரும் சண்டை மூண்டது. இவர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அவர்கள் இருவரும் அதிர்ச்சியுறும்படியாக அதிர்வுகள் தோன்ற இருவரும் நின்ற நிலையில் ஆட்டம் கண்டனர். பிரம்மனுக்கு இது புதிய அனுபவம் ஆதலால், ஏன் இப்படிக் கொப்பூழை ஆட்டி எனக்குத் துன்பம் தருகிறாய் என்று விஷ்ணுவிடம் கேட்டார். உடனே விஷ்ணு ஆட்ட வில்லை. சிவபெருமான் வருகிறார் என்று தெரிகிறது. அவர் வருவதால் ஏற்படுகின்ற அலைஅலையான அதிர்வுகள் நம் இருவரையும் நிலைகொள்ளாமல் ஆட்டி வந்தது என்றார். இந்த அதிர்ச்சி தாங்காத பிரம்மா, சிவன் யார் எனக் கேட்க விஷ்ணு, நாம் இருவரும் சிவனைத் தியானம் செய்வோம் என்று கூறி தியானத்தில் ஈடுபட்டபோது, சிவன் அவர்கள் எதிரே தோன்றினார். உங்களுக்கு என்ன வரம் வேண்டும்? என்று சிவன் கேட்க, விஷ்ணு தங்களிடத்தில் நீங்காத பக்தி வேண்டும் என்று விடை கூறினார். தந்தேன் என்று கூறிய சிவன், பிரம்மனைப் பார்த்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, பிரம்மன் "தாங்கள் எனக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டான். இவ்வரத்தைக் கேட்டுக் கொண்ட சிவனும், அவ்வாறே ஆகுக' என ஒப்புக்கொண்டார்.
பிரம்மன் படைப்புத் தொழிலைத் துவங்கியவுடன், அவனால் படைக்கப்பட்ட பொருள்கள் அவன் விரும்பியபடி இல்லை. படைப்பு தன் விருப்பப்படி இல்லை என்பதை அறிந்தவுடன் பிரம்மனுக்கு எல்லையில்லாத துயரம் உண்டாயிற்று. அத்துயரத்தின் வெளிப்பாடே ருத்திரன் ஆவான்.
தேவதாரு: தேவதாரு மரம் என்பது மரங்களில் சிறப்பான ஒன்று. முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் தேவதாரு மரங்கள் நிறைய வளர்ந்திருந்தன. அக்காட்டில் முனிவர்கள் பலர் தத்தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிவபெருமானைக் குறித்துக் கடுந்தவம் புரிந்து வந்தனர். இவர்களின் தியானத்தில் மனம் மகிழ்ந்த சிவபெருமான், அம்முனிவர்களைப் பரீட்சை செய்ய விரும்பினார். அதனால் அழகற்ற உருவம் ஒன்றினைப் பெற்று, கரிய நிறத்துடனும் கொடிய கண்களுடனும் அவர்கள் முன் தோன்றினார். முனிவர்களின் மனைவிமார்கள் அனைவரும் சிவ பெருமானைத் தொடர்ந்து செல்லலாயினர். ஆனால் முனிவர்களோ அவ்வுருவத்தை ஏளனமாகவும், கடுமையான சொற்கள் கூறியும் விரட்ட, சிவபெருமானும் அவ்விடத்தி னின்று மறைந்தார். முனிவர்கள் உடனே பிரம்மனிடம் சென்று நடந்ததைக் கூற, பிரம்மா வெகுண்டு “முட்டாள்களே! நீங்கள் என்ன தவறு செய்திருக்கிறீர்கள் என்பதை
உணரவில்லையா? வந்தது வேறு யாருமல்லர், சிவபெருமானேதான். உங்களை சோதனை செய்யவே அப்படி ஒரு வடிவம் எடுத்து உங்கள் விருந்தினனாக வந்தார். விருந்துண்ண வந்தவர்களை அன்புடன் உணவிட வேண்டுமே தவிர, அவர்கள் அழகான வர்களா இல்லையா என்று பார்த்து உபசரிக்கக் கூடாது. உங்களுக்குச் சுதர்சனனின் கதை தெரியுமா? அதை இப் பொழுது கூறுகிறேன்” என்று சொல்லிவிட்டு, முனிவர்களுக்குக் கதை சொல்லத் துவங்கினார்.
சுதர்சன முனிவர் என்று ஒருவர் இருந்தார். அவர் தம் மனைவியிடம், வரும் விருந்தினர்களை எவ்வாறு அன்புடன் உபசரிக்க வேண்டும் என்றும், விருந்தினர்களை உதாசீனப் படுத்துவது சிவபெருமானை அவமானப்படுத்துவது போலாகும் என்றும், விருந்துண்ண வருபவர் ஒவ்வொருவரும் சிவபெருமான் என்றே எண்ண வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். ஒரு சமயம், தர்ம தேவதை சுதர்சன முனிவரையும் அவர் மனைவியையும் பரீட்சை செய்து பார்க்க விரும்பினார் பிராமண வடிவம் கொண்டு, அவர்கள் வீட்டிற்கு வந்தார் முனிவர் வீட்டில் இல்லாத பொழுதும், அவர் மனைவி தர்ம தேவதையினை நன்கு உபசரித்து அன்புடன் உணவு படைத்தார். மிகவும் மனம் மகிழ்ந்த தர்ம தேவதை அவ்விருவரும் சொர்க்கம் செல்ல ஆசி வழங்கினார்.
இக்கதையினை பிரம்மன் கூறக்கேட்ட முனிவர்கள், தாம் சிவபெருமானை அவமதித்ததை நினைத்து வருந்தி, அவர் மனம் மகிழ என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, பிரம்மனும் சுவேதாவின் கதையைக் கூறத் தொடங்கினார்.
சுவேதா முனிவரின் கதை: முன்னொரு காலத்தில் சுவேதா என்ற முனிவர் சிவபெருமான் மீது பெரிதும் பக்தி கொண்டிருந்தார். எந்நேரமும் சிவபெருமானையே வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவர் இவ்வுலக வாழ்க்கையைவிட்டுச் செல்ல வேண்டிய நேரம் வந்தது. யமதேவன் சுவேதா முனிவர் முன் தோன்றினான். யமனைக் கண்டு சுவேதா முனிவர் சிறிதும் மனம் கலங்கவில்லை. சிவபெருமானை வணங்கினால், இறப்பினால் எத்துன்பமும் ஏற்படாது என்று நினைத்து, சிவனை வழிபடத் துவங்கினார். யமதேவன் சுவேதா முனிவரைப் பார்த்து, "உன்னுடைய நேரம் இப்பூமியில் முடிந்து விட்டது. இனி நீ எனக்குக் கீழ்ப்படிய வேண்டும், சிவனை வணங்குவதால் எப்பயனும் இல்லை, வா. சீக்கிரம் போக வேண்டும்” என்றான். அவரைக் கெகாண்டு செல்வதற்காக எல்லா ஆயத்தங்களும் செய்யும் பொழுது, சிவபெருமான் பார்வதி, நந்தி மற்றும் சிவகணங்களுடன் அங்கு வந்தார். சிவனுடைய பார்வை பெற்றவுடன் யமதேவன் மயக்கமுற்று வீழ்ந்து மரணமடைந்தான். சுவேத முனிவர் காப்பாற்றப் பெற்றார்.
இக்கதையைக் கூறி முடித்த பிரம்மா, முனிவர்களைப் பார்த்து, சிவபெருமானை வணங்குவதால் ஏற்படும் பயனைத் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? உடனே சென்று சிவ பெருமானை வழிபட ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார். முனிவர்களும் சிவனை நோக்கித் தவம் செய்ய ஆரம்பித்தனர். ஒரு வருடம் கடுமையான தவத்திற்குப் பிறகு அவர்கள் முன் சிவபெருமான் தோன்றினார். கடுமையான விழிகளும், சாம்பலை உடல் மீது பூசிக்கொண்டு, அழகற்ற உருவத்துடன் தேவதாரு மரங்கள் நிறைந்த காட்டில் இங்கும் அங்கும் உலாவினார். முனிவர்களும் இம்முறை சிவபெருமானைத் தெரிந்து கொண்டு தம் மனைவியருடன் மலர்களால் அர்ச்சித்தனர். சிவபெருமான் மனமகிழ்ந்து அம்முனிவர்களுக்கு நல்ல அறிவுரைகள் கூறினார். அவற்றுள், சாம்பல் பற்றியும், அதன் சிறப்புப் பற்றியும் அவர்கட்கு அறிவுரை கூறினர்.
ததீசி கதை: ததீசி என்ற பிராமணனும், கபா என்ற அரசனும் நண்பர்களாய் இருந்தனர். கபா சத்திரியனாகவும், ததீசி பிராமணனாகவும் பிறந்திருந்தாலும், இருவரும் இணையற்ற அன்பு பூண்டு வாழ்ந்து வந்தனர். ஒருமுறை பிராமணன் உயர்ந்தவனா, சத்திரியன் உயர்ந்தவனா என்ற வாதம் இவர்களுக்குள் தோன்றி அந்த வாய்ச்சண்டை கைச்சண்டையாக மாறிவிட்டது. ததீசி என்ற பிராமணன் தான் பிராமணன் என்ற கர்வம் கொண்டு, தான் யாரை வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தான். கபாவைப் பொறுத்தமட்டில், முன்னொரு காலத்தில் தேவாசுர யுத்தத்தில் தேவர்களுக்கு உதவி செய்த காரணத்தினால் இந்திரனிடத்து இருந்த வஜ்ராயுதம் கபாவுக்குப் பரிசாகக் கிடைத்தது. அந்த ஆயுதத்தைக் கொண்டு எதிரே இருந்த பிராமணன் மண்டையில் அரசன் அடித்தான். பிராமணன் உடம்பு இரண்டாகப் பிளந்தது. ஆனால் அவன் சாவதற்கு முன் தன்னைக் காப்பாற்றும்படி சுக்ராச்சாரியாரை வேண்டிக் கொண்டு இறந்தான். இறந்தவர்களை எழுப்பும், மிருத்த சஞ்சீவினி என்ற மந்திரம் சுக்ராச்சாரியார் ஒருவருக்கே தெரியும். பிராமணன் சாகுமுன், சுக்ராச்சாரியாரை வேண்டிக் கொண்டபடியால் அங்கு தோன்றிய அசுரகுரு இரண்டாகப் பிளந்து கிடந்த பிராமணன் உடம்பை ஒன்றாக ஆக்கி அதற்கு உயிரும் கொடுத்தார். அம்மட்டோடு இல்லாமல், பிராமணரே! மிருத்த சஞ்சீவினி மந்திரத்தை சிவனிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன். நீயும் சிவனை நோக்கித் தவம் செய்து இம்மந்திரத்தைக் கற்றுக் கொள்வாயாக’ என்று கூறினான். சுக்ராச்சாரியாரின் அறிவுரையைக் கேட்ட ததீசி சிவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். சிவன் எதிர்ப்பட்டவுடன், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க மூன்று வரங்கள் பெற்றுக் கொண்டான். அவையாவன: முதல் வரத்தின்படி ததீசா பெரும் செல்வனாக ஆயினான், இரண்டாவது வரத்தின்படி ததீசாவின் எலும்புகள் வஜ்ராயுதத்தின் வலிமை பெற்றன. மூன்றாவது வரத்தின்படி யாரும் தன்னைக் கொல்ல முடியாத சக்தியையும் பெற்றான்.
இவ்வரங்களைப் பெற்ற ததீசி கபாவிடம் சென்று அவனை எட்டி உதைத்தான். உடனே கபா தன் கையிலிருந்த வஜ்ராயுதத்தை ததீசியின் மார்பை நோக்கி அடித்தார். ஆனால் என்ன அதிசயம்! வஜ்ராயுதம் இரும்பில் பட்டுத் தெறித்தது போல், கணிரென்ற சப்தத்துடன் கீழே விழக் கண்டான். ததீசியிடம் தன் கைவரிசை செல்லாது என்பதை அறிந்த கபா, விஷ்ணுவை நோக்கிப் பிரார்த்தனை செய்தான். விஷ்ணு தோன்றியவுடன், ததீசியை வெல்வதற்குரிய ஆயுதம் ஒன்று வேண்டும் என்று கபா கேட்டவுடன், விஷ்ணு ததீசி சிவனிடம் பெற்ற வரங்கள் காரணமாக அவனை ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே நான் ஏழை பிராமண வடிவத்தில் சென்று ததீசியிடம் ஏதாவது செய்து பார்க்கிறேன் என்று கூறிவிட்டுப் பிச்சை ஏற்கப் போகும் பிராமண வடிவத்தில் ததீசியிடம் வந்தான் விஷ்ணு. இவருடைய சூழ்ச்சியை எளிதாக அறிந்து கொண்ட ததீசி, “பிராமண வடிவத்தில் வருகின்ற விஷ்ணுவே வருக உம்மையும் உம்முடைய வேஷத்தையும் என்னால் கண்டு கொள்ள முடியாதென நினைத்தீரா? அல்லது பிராமண வடிவத்தில் வரும் தாம் எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவேன் என்று நினைத்தீரா.”
“விஷ்ணுவே! உம்முடைய உண்மையான வடிவத்தை எடுத்துக் கொண்டு என்ன வேண்டுமெனக் கோரும், பார்க்கலாம் என்றான். உடனே விஷ்ணு, ததீசி, நான் கடாவைக் கூட்டிக் கொண்டு இங்கு வருகிறேன். அவனைக் கண்டவுடன், எனக்கு பயமாக இருக்கிறது என்று சொல் என்று சொல்லி விட்டுப் போன விஷ்ணு, உடனடியாக கடாவை அழைத்துக் கொண்டு ததீசியின் முன் வந்து நின்றான். ததீசி கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் நான் ஒரு சிவபக்தன், என்னை யாராலும், எந்த ஆயுதத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றான். இதைக் கேட்ட விஷ்ணு கோபம் அடைந்து சுதர்சன சக்ரத்தை விட அது ததீசியை ஒன்றும் செய்யாமல் பூமியில் விழுந்தது. இந்த நிலையில் ததீசி 'விஷ்ணுவே! ஏன் சும்மர் இருக்கிறீர். உம்முடைய பிரம்மாஸ்திரம் விட்டுப் பாரும். விஷ்ணு பிரம்மாஸ்திரம் விட அதுவும் ஒன்றும் செய்யவில்லை. இப்பொழுது மற்ற தேவர்கள் எல்லாம் துணைக்கு வந்து, ததீசியின் மேல் பல்வேறு ஆயுதங்களைப் பிரயோகித்தனர். அவை அனைத்தும் ததீசியை ஒன்றும் செய்ய முடியவில்லை. கடைசியாகச் சலித்துப் போன ததீசி கீழே கிடந்த ஒரு துரும்பை எடுத்து தேவர்கள் மேல் விட்டான். அந்தத் துரும்பு சிவனின் பல திரிசூலங்களாக மாறி, தேவர்களை விரட்டத் துவங்கியது.